புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:57 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:48 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:36 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:19 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:10 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:20 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
by heezulia Today at 1:57 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:48 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:36 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:19 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:10 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:20 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
prajai | ||||
Jenila | ||||
Baarushree | ||||
viyasan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீர் மேலாண்மையைத் தேடி ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
Page 1 of 1 •
நீர் மேலாண்மையைத் தேடி ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
#1190700நீர் மேலாண்மையைத் தேடி !
நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை !
thirugeetha@gmail.com
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
தமிழர் ஆய்வு மையம், 1/825-4, அய்யப்பன் நகர், கிருஷ்ணா நகர்,
மதுரை – 625 014. விலை : ரூ. 50.
*****
நூலின் அட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு யாவும் மிகவும் நேர்த்தியாக உள்ளன. பதிப்பித்த தமிழர் ஆய்வு மையத்திற்கு பாராட்டுக்கள். அருளானந்தர் கல்லூரி முன்னை பேராசிரியர் முனைவர் இ. தேவசகாயம் அவர்களின் அணிந்துரை நன்று. தமிழ் ஆய்வு மையத்தின் தலைவர் சி.சே. இராசன் அவர்களின் பதிப்புரை நன்று.
நூலின் தலைப்பே சிந்திக்க வைக்கின்றது. சிறப்பான தலைப்பை வைத்த நூலாசிரியர் மூத்த பத்திரிகையாளர்
ப. திருமலை அவர்களுக்கு பாராட்டுக்கள்.
நீர் மேலாண்மையை நாம் கடைபிடிக்காததன் காரணமாகவே சென்னையில் பெருமழையில் பெரும் இழப்புகள் நேர்ந்தன. இனியாவது நீர் மேலாண்மையை நிர்வகிக்க முன்வர வேண்டும் என்ற சிந்தனையை விதைக்கும் நல்ல நூல்.
நீர் மேலாண்மையில் 550 தமிழ் மன்னர்கள் என்ற தலைப்பில் கி.பி. 739, கி.பி. 1221, கி.பி. 1251, கி.பி. 1283, கி.பி. 1286 வருடங்களில் மன்னர்கள் உருவாக்கிய ஏரி, மதகு, கால்வாய் பற்றி மிக நுட்பமாக குறிப்பிட்டுள்ளார்.
நூலாசிரியர் வழக்கறிஞர் என்ற போதும் தமிழ் இலக்கியங்களும் நன்கு படித்து உள்ளார் என்பதற்கு எடுத்துக்காட்டு புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டி உள்ளார்.
நிலன் நெளிமருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோ ரம்ம இவண் தட்டோரே
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே !
என்றும் புலவர் குடபுலவியனார் பாண்டியன் நெடுஞ்செழியனிடம் பகர்கிறார். இதன் பொருள், “நிலம் எங்கெங்கு பள்ளமாக இருக்கிறதோ அங்கெல்லாம் நீர்நிலைகள் அமையும்படி கரை அமைத்த மன்னர்களே இவ்வுலகில் என்றென்றும் அழியாப் புகழ் பெற்று விளங்குவர்” என்பதாகும்.
இன்றைக்கு ஆள்வோர் புதிதாக ஏரி, குளம், கண்மாய் வெட்டாவிட்டாலும் இருக்கின்ற நீர் நிலைகளை அழியாமல் காத்தாலே பேருதவியாக இருக்கும்.
நீர்ச் சிக்கனம் குறித்தும் விரிவாக எழுதி உள்ளார். இன்றைய தேவை, நவீன கழிவறைகளில் நீர் விரையமாகி வருகின்றது. இதுகுறித்தும் சிந்திக்க வைத்தது நூல்.
நீர் சேமிப்பு குறித்தும் எழுதி உள்ளார். மழைநீர் சேமிப்பு என்பது உடனடியாக சட்டம் இயற்றி கட்டாயமாக்கி எல்லா கட்டிடங்களிலும் ஏற்படுத்திட வேண்டும். நூல் படிக்கப் படிக்க நீர் குறித்த பல சிந்தனைகள் மனதில் ஓட ஆரம்பித்தது. இது நூலாசிரியர் மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை அவர்களின் வெற்றி.
நீர் பற்றிய விழிப்புணர்வை விதைக்கும் நூல். அன்றே குளங்களில் மீன் பிடிக்கும் உரிமையை ஆண்டுதோறும் ஏலத்தில் விட்டது. வந்த பணத்தில் பாதியை புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தா மலையின் குளத்தை ஆழப்படுத்துவதற்கு செலவிட்ட வரலாற்றையும் பதிவு செய்துள்ளார்.
நீர் நிலை பழுது பார்த்தல் என்ற பராமரிப்புப் பணி நடந்ததை பதினெண் கீழ்கணக்கு நூல்களுள் ஒன்றான திரிகடுகத்தில் வரும் பாடலோடு விளக்கி உள்ளார்.
தமிழ்ப்பேராசிரியர் போல, நூலாசிரியர் நீர் மேலாண்மை தொடர்பான சங்கப்பாடல்கள் பல மேற்கோள் காட்டி எழுதி உள்ளார். பழங்காலத்தில் தமிழ் மன்னர்கள் எவ்வாறு திட்டமிட்டு நீர் மேலாண்மையை நிர்வகித்து வந்தார்கள் என்பதை அறிய பெருமையாகவும், பிரமிப்பாகவும் இருந்தது. தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா என்ற நாமக்கல் கவிஞரின் வைர வரிகளும் நினைவிற்கு வந்தன.
"1991இல் வளைகுடா போர் நடந்த போது அணைகள் மீது, அமெரிக்கர் குண்டு வீசி, குடிக்கக் கூட நீர் கிடைக்காமல் செய்தது. இராக் போரின் போதும் பாக்தாதின் நீர் அளிப்பு திட்டங்கள் தாம் முதலில் தகர்க்கப்பட்டன. 1999ஆம் ஆண்டு நேட்டோ நாடுகள் மீது குண்டு வீசி யூக்கோஸ்லோக்கியாவின் நீர் மாசுபடுத்தப்பட்டது."
மக்களை அழிக்க நாட்டை அழிக்க முதலில் திட்டமிட்டு நீர் நிலைகளை அழித்த கொடூரங்களையும் நூலில் பட்டியலிட்டு உள்ளார். அன்றைய மனிதன் நீர் நிலைகள் காத்தான். ஆனால், நவீன மனிதனோ, நீர் நிலைகளை அழிக்கின்றான். எண்ணிப்பார்க்க வேதனையாக இருந்தது.
நீர்நிலைகளின் பெயர்கள் படித்த போதே பிரமிப்பாக இருந்தது. அகழி, அருவி, ஆழிக்கிணறு, ஆறு, உறைகிணறு, இலஞ்சி, ஊருணி, ஊற்று, ஏரி, ஓடை, கட்டுங்கிணக் கிணறு, மறுகால், கண்மாய், வலயம், கால், கால்வாய், குட்டம், குண்டம், குண்டு, குமிழி, குமிழி ஊற்று, குளம், கூவம், கூவல், வாளி, கேணி, சிறை, சுனை, சேங்கை ஒவ்வொன்றுக்கும் விளக்கமும் எழுதி உள்ளார்.
வேறு எந்த மொழியிலும் நீர் தொடர்பாக இவ்வளவு சொற்கள் இருக்கவே இருக்காது என்று உறுதி கூறலாம். தமிழில் உள்ள ஒவ்வொரு சொற்களும் காரணப் பெயராகவே இருக்கும். பொருளின்றி ஒரு சொல்லும் இருக்காது.
நீர் மேலாண்மை யார் பொறுப்பு? அரசின் கடமைகள் என்ன? என்பதை பட்டியலிட்டு உள்ளார். ஆள்வோர் பின்பற்றினால் நாடு நலம் பெறும்.
இந்த நூலில் இவர் குறிப்பிட்டுள்ளவைகளை நடைமுறைப்படுத்தினால் சென்னையில் ஏற்பட்ட மழைவெள்ளம் பாதிப்பு இனிமேல் வராமல் தடுக்கலாம்.
ஏரிகள், குளங்கள் அழிக்கப்படும் போது மக்கள் பொங்கி எழ வேண்டும் என்ற விழிப்புணர்வை விதைத்து உள்ளார்.
எத்தனையோ ஏரிகளும், குளங்களும் காணாமல் போய் விட்டன. இப்போது இருக்கின்ற நீர் நிலைகளையாவது தூர் வாரி பழுது நீக்கி பராமரித்து காத்து வர வேண்டிய கடமை, அரசுக்கும், மக்களுக்கும் உள்ளது என்பதை நூலில் நன்கு கட்டி உள்ளார்.
நூலாசிரியர் மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை அவர்கள் எந்த ஒரு கட்டுரையையும் மேம்போக்காக எழுத மாட்டார். கட்டுரைக்கு வலு சேர்க்கும் நூல்களைப் படித்து ஆய்வு செய்து புள்ளிவிபரங்கள் சேகரித்து நன்மை, தீமை ஆராய்ந்து எழுதுவார்.
இந்த நூலும் ஆய்வின் வெளிப்பாடே. இந்த நூலிற்கு உதவிய நூல்கள் என்று 18 நூல்களையும் பட்டியலிட்டு உள்ளார். சமுதாயத்திற்க்கு பயன்படும் விதத்தில் தனது எழுத்தை பயன்படுத்தி வரும் செம்மையான எழுத்தாளர் ப. திருமலை. வாழ்க பல்லாண்டு.
தூக்குத் தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று குரல் தந்த மனிதஉரிமை மாண்பாளர் ,நீதியரசர் கிருஷ்ணய்யர் விருது நூல் ஆசிரியருக்கு வழங்கிய செய்தி கண்டு மகிழ்ந்தேன் .பொருத்தமான மனிதருக்கு பொருத்தமான விருது வழங்கி உள்ளனர். பாராட்டுக்கள். தொடர்ந்து மண் பயனுற மக்கள் பயனுற எழுதுங்கள் இன்னும் உயர்ந்த விருதுகள் உங்களை வந்து அடையும் .
--
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
https://www.facebook.com/rravi.ravi
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.eegarai.net/sta/eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை !
thirugeetha@gmail.com
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
தமிழர் ஆய்வு மையம், 1/825-4, அய்யப்பன் நகர், கிருஷ்ணா நகர்,
மதுரை – 625 014. விலை : ரூ. 50.
*****
நூலின் அட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு யாவும் மிகவும் நேர்த்தியாக உள்ளன. பதிப்பித்த தமிழர் ஆய்வு மையத்திற்கு பாராட்டுக்கள். அருளானந்தர் கல்லூரி முன்னை பேராசிரியர் முனைவர் இ. தேவசகாயம் அவர்களின் அணிந்துரை நன்று. தமிழ் ஆய்வு மையத்தின் தலைவர் சி.சே. இராசன் அவர்களின் பதிப்புரை நன்று.
நூலின் தலைப்பே சிந்திக்க வைக்கின்றது. சிறப்பான தலைப்பை வைத்த நூலாசிரியர் மூத்த பத்திரிகையாளர்
ப. திருமலை அவர்களுக்கு பாராட்டுக்கள்.
நீர் மேலாண்மையை நாம் கடைபிடிக்காததன் காரணமாகவே சென்னையில் பெருமழையில் பெரும் இழப்புகள் நேர்ந்தன. இனியாவது நீர் மேலாண்மையை நிர்வகிக்க முன்வர வேண்டும் என்ற சிந்தனையை விதைக்கும் நல்ல நூல்.
நீர் மேலாண்மையில் 550 தமிழ் மன்னர்கள் என்ற தலைப்பில் கி.பி. 739, கி.பி. 1221, கி.பி. 1251, கி.பி. 1283, கி.பி. 1286 வருடங்களில் மன்னர்கள் உருவாக்கிய ஏரி, மதகு, கால்வாய் பற்றி மிக நுட்பமாக குறிப்பிட்டுள்ளார்.
நூலாசிரியர் வழக்கறிஞர் என்ற போதும் தமிழ் இலக்கியங்களும் நன்கு படித்து உள்ளார் என்பதற்கு எடுத்துக்காட்டு புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டி உள்ளார்.
நிலன் நெளிமருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோ ரம்ம இவண் தட்டோரே
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே !
என்றும் புலவர் குடபுலவியனார் பாண்டியன் நெடுஞ்செழியனிடம் பகர்கிறார். இதன் பொருள், “நிலம் எங்கெங்கு பள்ளமாக இருக்கிறதோ அங்கெல்லாம் நீர்நிலைகள் அமையும்படி கரை அமைத்த மன்னர்களே இவ்வுலகில் என்றென்றும் அழியாப் புகழ் பெற்று விளங்குவர்” என்பதாகும்.
இன்றைக்கு ஆள்வோர் புதிதாக ஏரி, குளம், கண்மாய் வெட்டாவிட்டாலும் இருக்கின்ற நீர் நிலைகளை அழியாமல் காத்தாலே பேருதவியாக இருக்கும்.
நீர்ச் சிக்கனம் குறித்தும் விரிவாக எழுதி உள்ளார். இன்றைய தேவை, நவீன கழிவறைகளில் நீர் விரையமாகி வருகின்றது. இதுகுறித்தும் சிந்திக்க வைத்தது நூல்.
நீர் சேமிப்பு குறித்தும் எழுதி உள்ளார். மழைநீர் சேமிப்பு என்பது உடனடியாக சட்டம் இயற்றி கட்டாயமாக்கி எல்லா கட்டிடங்களிலும் ஏற்படுத்திட வேண்டும். நூல் படிக்கப் படிக்க நீர் குறித்த பல சிந்தனைகள் மனதில் ஓட ஆரம்பித்தது. இது நூலாசிரியர் மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை அவர்களின் வெற்றி.
நீர் பற்றிய விழிப்புணர்வை விதைக்கும் நூல். அன்றே குளங்களில் மீன் பிடிக்கும் உரிமையை ஆண்டுதோறும் ஏலத்தில் விட்டது. வந்த பணத்தில் பாதியை புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தா மலையின் குளத்தை ஆழப்படுத்துவதற்கு செலவிட்ட வரலாற்றையும் பதிவு செய்துள்ளார்.
நீர் நிலை பழுது பார்த்தல் என்ற பராமரிப்புப் பணி நடந்ததை பதினெண் கீழ்கணக்கு நூல்களுள் ஒன்றான திரிகடுகத்தில் வரும் பாடலோடு விளக்கி உள்ளார்.
தமிழ்ப்பேராசிரியர் போல, நூலாசிரியர் நீர் மேலாண்மை தொடர்பான சங்கப்பாடல்கள் பல மேற்கோள் காட்டி எழுதி உள்ளார். பழங்காலத்தில் தமிழ் மன்னர்கள் எவ்வாறு திட்டமிட்டு நீர் மேலாண்மையை நிர்வகித்து வந்தார்கள் என்பதை அறிய பெருமையாகவும், பிரமிப்பாகவும் இருந்தது. தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா என்ற நாமக்கல் கவிஞரின் வைர வரிகளும் நினைவிற்கு வந்தன.
"1991இல் வளைகுடா போர் நடந்த போது அணைகள் மீது, அமெரிக்கர் குண்டு வீசி, குடிக்கக் கூட நீர் கிடைக்காமல் செய்தது. இராக் போரின் போதும் பாக்தாதின் நீர் அளிப்பு திட்டங்கள் தாம் முதலில் தகர்க்கப்பட்டன. 1999ஆம் ஆண்டு நேட்டோ நாடுகள் மீது குண்டு வீசி யூக்கோஸ்லோக்கியாவின் நீர் மாசுபடுத்தப்பட்டது."
மக்களை அழிக்க நாட்டை அழிக்க முதலில் திட்டமிட்டு நீர் நிலைகளை அழித்த கொடூரங்களையும் நூலில் பட்டியலிட்டு உள்ளார். அன்றைய மனிதன் நீர் நிலைகள் காத்தான். ஆனால், நவீன மனிதனோ, நீர் நிலைகளை அழிக்கின்றான். எண்ணிப்பார்க்க வேதனையாக இருந்தது.
நீர்நிலைகளின் பெயர்கள் படித்த போதே பிரமிப்பாக இருந்தது. அகழி, அருவி, ஆழிக்கிணறு, ஆறு, உறைகிணறு, இலஞ்சி, ஊருணி, ஊற்று, ஏரி, ஓடை, கட்டுங்கிணக் கிணறு, மறுகால், கண்மாய், வலயம், கால், கால்வாய், குட்டம், குண்டம், குண்டு, குமிழி, குமிழி ஊற்று, குளம், கூவம், கூவல், வாளி, கேணி, சிறை, சுனை, சேங்கை ஒவ்வொன்றுக்கும் விளக்கமும் எழுதி உள்ளார்.
வேறு எந்த மொழியிலும் நீர் தொடர்பாக இவ்வளவு சொற்கள் இருக்கவே இருக்காது என்று உறுதி கூறலாம். தமிழில் உள்ள ஒவ்வொரு சொற்களும் காரணப் பெயராகவே இருக்கும். பொருளின்றி ஒரு சொல்லும் இருக்காது.
நீர் மேலாண்மை யார் பொறுப்பு? அரசின் கடமைகள் என்ன? என்பதை பட்டியலிட்டு உள்ளார். ஆள்வோர் பின்பற்றினால் நாடு நலம் பெறும்.
இந்த நூலில் இவர் குறிப்பிட்டுள்ளவைகளை நடைமுறைப்படுத்தினால் சென்னையில் ஏற்பட்ட மழைவெள்ளம் பாதிப்பு இனிமேல் வராமல் தடுக்கலாம்.
ஏரிகள், குளங்கள் அழிக்கப்படும் போது மக்கள் பொங்கி எழ வேண்டும் என்ற விழிப்புணர்வை விதைத்து உள்ளார்.
எத்தனையோ ஏரிகளும், குளங்களும் காணாமல் போய் விட்டன. இப்போது இருக்கின்ற நீர் நிலைகளையாவது தூர் வாரி பழுது நீக்கி பராமரித்து காத்து வர வேண்டிய கடமை, அரசுக்கும், மக்களுக்கும் உள்ளது என்பதை நூலில் நன்கு கட்டி உள்ளார்.
நூலாசிரியர் மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை அவர்கள் எந்த ஒரு கட்டுரையையும் மேம்போக்காக எழுத மாட்டார். கட்டுரைக்கு வலு சேர்க்கும் நூல்களைப் படித்து ஆய்வு செய்து புள்ளிவிபரங்கள் சேகரித்து நன்மை, தீமை ஆராய்ந்து எழுதுவார்.
இந்த நூலும் ஆய்வின் வெளிப்பாடே. இந்த நூலிற்கு உதவிய நூல்கள் என்று 18 நூல்களையும் பட்டியலிட்டு உள்ளார். சமுதாயத்திற்க்கு பயன்படும் விதத்தில் தனது எழுத்தை பயன்படுத்தி வரும் செம்மையான எழுத்தாளர் ப. திருமலை. வாழ்க பல்லாண்டு.
தூக்குத் தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று குரல் தந்த மனிதஉரிமை மாண்பாளர் ,நீதியரசர் கிருஷ்ணய்யர் விருது நூல் ஆசிரியருக்கு வழங்கிய செய்தி கண்டு மகிழ்ந்தேன் .பொருத்தமான மனிதருக்கு பொருத்தமான விருது வழங்கி உள்ளனர். பாராட்டுக்கள். தொடர்ந்து மண் பயனுற மக்கள் பயனுற எழுதுங்கள் இன்னும் உயர்ந்த விருதுகள் உங்களை வந்து அடையும் .
--
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
https://www.facebook.com/rravi.ravi
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.eegarai.net/sta/eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
Similar topics
» குற்றங்களே நடைமுறைகளாய் ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மனித நேயத்துக்கு வயது நூறு ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் திரு. ப. திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» உயிரைத் தேடி ! கிராமம் நோக்கி ஒரு பயணம் ! நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மனித நேயத்துக்கு வயது நூறு ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் திரு. ப. திருமலை ! மின்னஞ்சல் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நீயென உறுதி செய் ! (சாதனைப் பெண்களின் நிகழ்காலப் பேராற்றல்) நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் திரு. ப. திருமலை ! . நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» மனித நேயத்துக்கு வயது நூறு ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் திரு. ப. திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» உயிரைத் தேடி ! கிராமம் நோக்கி ஒரு பயணம் ! நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மனித நேயத்துக்கு வயது நூறு ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் திரு. ப. திருமலை ! மின்னஞ்சல் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நீயென உறுதி செய் ! (சாதனைப் பெண்களின் நிகழ்காலப் பேராற்றல்) நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் திரு. ப. திருமலை ! . நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|