புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செய்தியும் கதையும்  Poll_c10செய்தியும் கதையும்  Poll_m10செய்தியும் கதையும்  Poll_c10 
68 Posts - 53%
heezulia
செய்தியும் கதையும்  Poll_c10செய்தியும் கதையும்  Poll_m10செய்தியும் கதையும்  Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
செய்தியும் கதையும்  Poll_c10செய்தியும் கதையும்  Poll_m10செய்தியும் கதையும்  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
செய்தியும் கதையும்  Poll_c10செய்தியும் கதையும்  Poll_m10செய்தியும் கதையும்  Poll_c10 
3 Posts - 2%
PriyadharsiniP
செய்தியும் கதையும்  Poll_c10செய்தியும் கதையும்  Poll_m10செய்தியும் கதையும்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
செய்தியும் கதையும்  Poll_c10செய்தியும் கதையும்  Poll_m10செய்தியும் கதையும்  Poll_c10 
1 Post - 1%
Shivanya
செய்தியும் கதையும்  Poll_c10செய்தியும் கதையும்  Poll_m10செய்தியும் கதையும்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
செய்தியும் கதையும்  Poll_c10செய்தியும் கதையும்  Poll_m10செய்தியும் கதையும்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செய்தியும் கதையும்  Poll_c10செய்தியும் கதையும்  Poll_m10செய்தியும் கதையும்  Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
செய்தியும் கதையும்  Poll_c10செய்தியும் கதையும்  Poll_m10செய்தியும் கதையும்  Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
செய்தியும் கதையும்  Poll_c10செய்தியும் கதையும்  Poll_m10செய்தியும் கதையும்  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
செய்தியும் கதையும்  Poll_c10செய்தியும் கதையும்  Poll_m10செய்தியும் கதையும்  Poll_c10 
15 Posts - 3%
prajai
செய்தியும் கதையும்  Poll_c10செய்தியும் கதையும்  Poll_m10செய்தியும் கதையும்  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
செய்தியும் கதையும்  Poll_c10செய்தியும் கதையும்  Poll_m10செய்தியும் கதையும்  Poll_c10 
9 Posts - 2%
jairam
செய்தியும் கதையும்  Poll_c10செய்தியும் கதையும்  Poll_m10செய்தியும் கதையும்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
செய்தியும் கதையும்  Poll_c10செய்தியும் கதையும்  Poll_m10செய்தியும் கதையும்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
செய்தியும் கதையும்  Poll_c10செய்தியும் கதையும்  Poll_m10செய்தியும் கதையும்  Poll_c10 
4 Posts - 1%
Rutu
செய்தியும் கதையும்  Poll_c10செய்தியும் கதையும்  Poll_m10செய்தியும் கதையும்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செய்தியும் கதையும்


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Mar 10, 2016 11:22 am

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியம் கொட்டையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பழனிசாமி என்பவர் பணியாற்றி வந்தார். 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பாடம் நடத்தினார். இந்நிலையில், தமிழ் ஆசிரியர் பற்றாக்குறையால் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பாடம் நடத்த பரிந்துரைக்கப்பட்டார். அப்போது, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இது குறித்து பெற்றோரிடம் எடுத்துரைத்து பாதிக்கப்பட்ட மாணவிகள் கூறி அழுதுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் கிராம மக்கள் ஒருங்கிணைந்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை நேற்று காலை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள், ‘தமிழ் பாடம் நடத்திய ஆசிரியர் பழனிசாமி கொடுத்த பாலியல் தொந்தரவு காரணமாக 18 மாணவிகள் பாதிக் கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். பழனிசாமி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். மேலும் அவர்கள், பழனிசாமிக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர்.
இதையடுத்து, தொடக்கக் கல்வித் துறை அதிகாரிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் இந்திராதேவி தகவல் தெரிவித்தார். அதன்பேரில், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராஜேந்திரன், உதவி தொடக்க கல்வி அலுவ லர் ராஜகோபால் மற்றும் காவல் துறையினர் கொட்டையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு விரைந்தனர்.
அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் மற்றும் பெற்றோரிடம் தொடக்கக் கல்வித் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், ‘உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுதி அளித்தனர். அதன்பேரில் போராட்டம் முடிவுக்கு வந்தது. போராட்டம் காரணமாக, நேற்றைய வகுப்புகள் பாதிக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து, பாலியல் தொந்தரவுக்கு ஆளான 18 மாணவிகளிடம் தி.மலை உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பவானி விசாரணை நடத்தினார். அதில், ஆசிரியர் பழனிசாமிக்கு எதிராக மாணவிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதற்கிடையில், ஆசிரியர் பழனிசாமியிடம் விசாரணை நடத்த மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் மற்றும் காவல்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டனர்.
ஆனால், அவர் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது, ‘ஸ்விட்ச் ஆப்’ செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.
மாணவிகள் தெரிவித்த தகவலின் அடிப்படையில், ஆசிரியர் பழனிசாமியை தற்காலிகப் பணிநீக்கம் செய்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்

இதுபோன்ற செய்திகள் ஊடகங்களில் அடிக்கடி நாம் காணலாம் . வேலியே பயிரை மேய்ந்த கதையாக , நல்லொழுக்கத்தைப் போதிக்கவேண்டிய ஆசிரியர்களே , ஒழுக்கக் கேடர்களாக  மாறி வருகின்றனர் . பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளைத் தன் மகளாக நினைக்கவேண்டும் . அடுத்தவன் வீட்டுக் குழந்தைதானே என்று எண்ணக்கூடாது . " பிறவும் தமபோற் செயின் " என்ற நீதி வணிகர்களுக்கு மட்டுமல்ல ; நம் அனைவருக்கும்தான் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் .

இந்த செய்தியை அடிப்படையாக வைத்து ஒரு சிறுகதையை இங்கு தருகிறேன் . தங்கள் கருத்துக்களைத் தெரியப்படுத்தவும் .

அது ஆண்,பெண் இருபாலரும் படிக்கும் பள்ளி.பத்தாம் வகுப்புக்குத் தமிழாசிரியர் பெயர்  வில்லாளன். அர்ச்சுனன் என்ற தனது பெயரைத் தமிழ்ப் பற்றின் காரணமாக " வில்லாளன் " என்று மாற்றி வைத்துக் கொண்டார் . மாணவர்கள் அனைவரும் அவரை "வில்லு வாத்தியார்" என்று அழைப்பார்கள்.

வில்லு வாத்தியார் மாணவர்களை விட, மாணவிகளிடம் தனி அக்கறை காட்டுவார். பாடம் நடத்தும்போது கூட மாணவிகளைப் பார்த்தே பாடம் நடத்துவார். மாணவிகள் யாராவது தாமதமாக வகுப்புக்கு வந்தால் கூட, "போம்மா, போய் உட்காரு" என்று சொல்லுவார். அதே சமயத்தில் மாணவன் யாராவது தாமதமாக வந்தால்,"தண்ட சோறு! ஏண்டா லேட்டு? எங்க ஊரை சுத்திட்டு வர்றே?"என்று கோபிப்பார். மாணவிகள்எத்தனைமுறைசந்தேகம்கேட்டாலும்சளைக்காமல்பதில்சொல்லுவார்.ஆனால் மாணவர்கள் கேட்டால்," மரமண்டையில் ஒரு தடவை சொன்னால் ஏறாதோ?" என்று எரிந்து விழுவார்.விடைத்தாள் திருத்தும்போது கூட மாணவிகளுக்கு அதிக மதிப்பெண்கள் கொடுப்பார். பருப்பு உசிலி செய்வது எப்படி? வாழைப்பூ உருண்டை செய்வது எப்படி?விதவிதமான கோலங்கள் போடுவது எப்படி?என்றெல்லாம் மாணவிகளுக்குப் பிடித்தமான விஷயங்களையே அதிகம் பேசுவார்.. இதனால் அவருடைய "வில்லு வாத்தியார்" என்ற பெயர் நாளடைவில் மறைந்து மாணவர்கள் அவரை,"ஜொள்ளு வாத்தியார்" என்று அழைக்கத்தொடங்கினர்.

ஒருநாள் இரண்டாம் பாடவேளை ஜொள்ளு வாத்தியார் பத்தாம் வகுப்பில்  பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அன்று மிகவும் சிரத்தையாகப் பாடம் நடத்திக் கொண்டு இருந்தார். எப்போதும் மாணவிகளைப் பார்த்துப் பாடம் நடத்தும் அவர் அன்றைய தினம் மாணவர்களைப் பார்த்தும் பாடம் நடத்தினார். தாமதமாக வந்த மாணவர்களையும் கடிந்து கொள்ளவில்லை. மாணவர்கள் கேட்ட வினாக்களுக்கும் பொறுமையாகப் பதில் சொன்னார். மாணவிகளுக்குப் பிடிக்கும் என்பதற்காகப் பாடத்துக்குப் புறம்பான விஷயங்களைப் பேசும் வழக்கமுடைய அவர் அன்றைதினம் பாடத்துக்குப் புறம்பாக எதுவும் பேசவில்லை. சுமார் முக்கால் மணி நேரம் பாடம் நடத்தியும் அன்றையதினம் அவருடைய வாயிலிருந்து ஒரு சொட்டு ஜொள்ளு கூட ஒழுகவில்லை.மாணவர்கள் மிகுந்த வியப்படைந்தனர்.காரணம் தெரியாமல் விழித்தனர்.

கடைசி பாடவேளை முடிந்து மணி அடித்தது.மாணவர்கள் வீட்டிற்குச் செல்லத் தொடங்கினர்.ஜொள்ளு வாத்தியார் பத்தாம் வகுப்புக்கு முன்புறமாக நின்றுகொண்டு,"மணிமேகலை!"என்று அழைத்தார்."இதோ வந்துட்டேன் அப்பா!" என்று சொல்லிக்கொண்டே ஒரு மாணவி வெளியில் ஓடிவந்தாள்.மணிமேகலை அன்றுதான் பத்தாம் வகுப்பில் சேர்ந்து இருந்தாள்.அவள் ஜொள்ளு வாத்தியாரின் மகள் என்ற விஷயம் அப்போதுதான் மாணவர்களுக்குத் தெரிந்தது.அன்றையதினம் ஜொள்ளு வாத்தியாருக்கு ஜொள்ளு ஒழுகாத காரணத்தையும் மாணவர்கள் தெரிந்து கொண்டனர்.





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக