புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:21 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:03 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயில் எழுதி விட்டீர்களா? Poll_c10உயில் எழுதி விட்டீர்களா? Poll_m10உயில் எழுதி விட்டீர்களா? Poll_c10 
44 Posts - 58%
heezulia
உயில் எழுதி விட்டீர்களா? Poll_c10உயில் எழுதி விட்டீர்களா? Poll_m10உயில் எழுதி விட்டீர்களா? Poll_c10 
24 Posts - 32%
mohamed nizamudeen
உயில் எழுதி விட்டீர்களா? Poll_c10உயில் எழுதி விட்டீர்களா? Poll_m10உயில் எழுதி விட்டீர்களா? Poll_c10 
2 Posts - 3%
prajai
உயில் எழுதி விட்டீர்களா? Poll_c10உயில் எழுதி விட்டீர்களா? Poll_m10உயில் எழுதி விட்டீர்களா? Poll_c10 
2 Posts - 3%
Geethmuru
உயில் எழுதி விட்டீர்களா? Poll_c10உயில் எழுதி விட்டீர்களா? Poll_m10உயில் எழுதி விட்டீர்களா? Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
உயில் எழுதி விட்டீர்களா? Poll_c10உயில் எழுதி விட்டீர்களா? Poll_m10உயில் எழுதி விட்டீர்களா? Poll_c10 
1 Post - 1%
Barushree
உயில் எழுதி விட்டீர்களா? Poll_c10உயில் எழுதி விட்டீர்களா? Poll_m10உயில் எழுதி விட்டீர்களா? Poll_c10 
1 Post - 1%
cordiac
உயில் எழுதி விட்டீர்களா? Poll_c10உயில் எழுதி விட்டீர்களா? Poll_m10உயில் எழுதி விட்டீர்களா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயில் எழுதி விட்டீர்களா? Poll_c10உயில் எழுதி விட்டீர்களா? Poll_m10உயில் எழுதி விட்டீர்களா? Poll_c10 
171 Posts - 55%
heezulia
உயில் எழுதி விட்டீர்களா? Poll_c10உயில் எழுதி விட்டீர்களா? Poll_m10உயில் எழுதி விட்டீர்களா? Poll_c10 
107 Posts - 35%
T.N.Balasubramanian
உயில் எழுதி விட்டீர்களா? Poll_c10உயில் எழுதி விட்டீர்களா? Poll_m10உயில் எழுதி விட்டீர்களா? Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
உயில் எழுதி விட்டீர்களா? Poll_c10உயில் எழுதி விட்டீர்களா? Poll_m10உயில் எழுதி விட்டீர்களா? Poll_c10 
11 Posts - 4%
prajai
உயில் எழுதி விட்டீர்களா? Poll_c10உயில் எழுதி விட்டீர்களா? Poll_m10உயில் எழுதி விட்டீர்களா? Poll_c10 
4 Posts - 1%
Srinivasan23
உயில் எழுதி விட்டீர்களா? Poll_c10உயில் எழுதி விட்டீர்களா? Poll_m10உயில் எழுதி விட்டீர்களா? Poll_c10 
2 Posts - 1%
cordiac
உயில் எழுதி விட்டீர்களா? Poll_c10உயில் எழுதி விட்டீர்களா? Poll_m10உயில் எழுதி விட்டீர்களா? Poll_c10 
1 Post - 0%
JGNANASEHAR
உயில் எழுதி விட்டீர்களா? Poll_c10உயில் எழுதி விட்டீர்களா? Poll_m10உயில் எழுதி விட்டீர்களா? Poll_c10 
1 Post - 0%
Geethmuru
உயில் எழுதி விட்டீர்களா? Poll_c10உயில் எழுதி விட்டீர்களா? Poll_m10உயில் எழுதி விட்டீர்களா? Poll_c10 
1 Post - 0%
Barushree
உயில் எழுதி விட்டீர்களா? Poll_c10உயில் எழுதி விட்டீர்களா? Poll_m10உயில் எழுதி விட்டீர்களா? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயில் எழுதி விட்டீர்களா?


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 01, 2016 11:58 am

மனிதனின் பிறப்பு, வாழ்வு மற்றும் முடிவு எல்லாமே அரிது. பிறப்பு எப்படியோ அப்படியே முடிவும். எதுவும் மனிதனின் கையில் இல்லை. வாழும் காலத்தில், கஷ்டப்பட்டுச் சம்பாதிக்கும் சொத்துக்களைப் போகும்போது (எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும்) தன்னோடு எடுத்துக் கொண்டு போக முடியாது என்பது யாவரும் அறிந்த உண்மை.

வாழ்நாளுக்குப் பிறகு தமது மனைவி, குழந்தைகள் சுகமாக வாழ, நாம் சேர்த்த சொத்துக்கள் உதவ வேண்டும் என்று எல்லோரும் நினைப்பார்கள். இதில் தவறு ஏதும் இல்லை. அப்படித்தான் நினைக்கவும் வேண்டும். அதற்குத் தேவையானவற்றைத் தனது வாழ்நாளிலேயே செய்து முடிப்பவன் புத்திசாலி. அதற்கு உதவும் ஒரு சாதனம் தான் உயில்.

படித்துப் பெரிய வேலையில் இருப்பவர்கள் மற்றும் கோடிக்கணக்கில் வியாபாரத்தில் புரட்டுபவர்கள் கூட உரிய சமயத்தில் உயில் எழுதாமல் போய்விடுகிறார்கள். இதனால் அவர்களது காலத்துக்குப் பின்பு அவரது வாரிசுகள் சொத்துக்காக அடித்துக் கொண்ட நிகழ்ச்சிகளும் அரங்கேறி வருகின்றன.

உயில் எழுதுவது தேர்வு எழுதுவது போல ஒன்று கடினமானது அல்ல. குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால் அதற்கும் மேலே. எக்ஸாமில் எதை வேண்டுமானாலும் எழுதி பாஸ் ஆகலாம். ஆனால், உயில் எழுதும் முன்பு சரியாகச் சிந்திக்க வேண்டும்.

உயில் எழுதுவது மிகவும் சுலபம். தேவையானவை பேப்பர், பேனா மட்டுமே. கம்ப்யூட்டர் உதவி கொண்டும் உயில் எழுதலாம். மேலும் உயில் எழுதுபவர் சுயநினைவோடு எழுதுகிறாரா அல்லது யாராவது கட்டாயத்திற்கு உட்பட்டு எழுதுகிறாரா என்பதும் அவசியம்.

உயில் எழுதுவதற்கு முன்னால், உயில் எழுதுபவர் அவரது மனைவி அல்லது கணவரைக் கலந்து ஆலோசிப்பது சாலச்சிறந்தது. சொத்து விவரங்கள் பற்றி (அசையும் மற்றும் அசையா) ஒரு விரிவான ஜபிதா (லி்ஸ்ட்) தயாரித்துச் சரிபார்த்துக் கொண்டால், விடுபடுவதைத் தவிர்க்கலாம்.

கூடியமட்டும் சொத்து எழுதுபவர் தமது காலத்திற்குப் பிறகு தமது மனைவி சொத்துக்களை ஆள உரிமை கொடுத்து உயில் எழுதுவது, அவர் மனைவிக்குக் காட்டும் மரியாதை மட்டும் இல்லாமல், தமது காலத்திற்குப் பிறகு மனைவிக்ப் பாதுகாப்பு அரணாகவும் இருக்க உதவும். பலவகை நாட்டு நடப்புக்களைக் கேட்கும்போது இந்த முறையே சரியானது.

தமது மற்றும் தமது மனைவியின் காலம் முடிந்ததும், உயிலில் குறிப்பிட்டபடி யார் யாருக்கு, எந்த எந்தச் சொத்துக்கள் சேரவேண்டும் என்பதை தெளிவாக எழுதி வைத்தால், பிற்காலத்தில் குழப்பம் இல்லாமல் சொத்துக்களை அவரது (உயில் எழுதுபவரின்) வாரிசுகள் பிரித்துக் கொள்ள வழி ஏற்படும்.

உயில் எழுதுபவர் தம் சுயநினைவோடு எழுதுகிறார் என்பதை உயிலில் மறக்காமல் குறிப்பிட்டு எழுத வேண்டும். யாருடைய கட்டாயத்தின் பேரிலும் எழுதவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும். உயில் மிகத் தெளிவாக இருப்பது அவசியம். குடும்பத்தில் யார், யாருக்கு எந்தச் சொத்து என்பதையும், அவற்றின் விவரங்களையும் சரியாக எழுத வேண்டும்.

பலர் வங்கிகள் மற்றும் போஸ்ட் ஆபிஸ் போன்றவற்றில் கணக்கு வைத்து இருப்பார்கள். அங்கு அவர்களது கணக்குகள் மற்றும் டிபாசிட் போன்றவற்றிற்கு நாமிநேஷன் செய்து இருந்தால், உயிலில் அந்தக் குறிப்பிட்ட நபருக்குச் சேர வேண்டும் என்று எழுதினால் நலம். பிற்காலத்தில் அனாவசிய குழப்பங்களைத் தவிர்க்கலாம்.

வங்கிகளில் பணம் போடும் போது யாரை நாமினியாகக் குறிப்பிடுகிறோமோ, கணக்குதாரர் இறந்த பிறகு அந்த நாமினிக்கே கணக்கில் உள்ள பணத்தை வங்கிகள் பட்டுவாடா செய்யும்.

தான் சுயமாகச் சம்பாதித்த சொத்துக்களை, தமது விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் உயிலில் எழுதி வைக்கலாம். உதாரணத்திற்கு உயில் எழுதுபவர் குறிப்பிட்ட சொத்தையோ அல்லது பணத்தையோ அநாதை இல்லம், முதியோர் இல்லம், குழந்தைகள் படிப்பிற்குக் கொடுக்கும்படி உயிலில் குறிப்பிட்டு எழுதலாம்.

உயில் எழுதினால், அதை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் கிடையாது. செய்தால் நலம். ஒருவர் எவ்வளவு முறை வேண்டுமானாலும் திருத்தி உயில் எழுதலாம். ஆனால் கடைசியாக எழுதிய உயிலே செல்லும்.

எழுதிய உயிலை ஒருமுறைக்கு மேல் சரிபார்த்து விட்டு கையெழுத்து இடவும். கட்டாயமாக உயிலுக்கு இரண்டு நபர்கள் சாட்சிக் கையெழுத்துப் போட வேண்டும். அவர்களது பெயர், விலாசத்தையும் குறிப்பிட வேண்டும். உயில் எழுதிய விவரம் குறித்து நம்பகமான ஒருவரிடம் தெரிவித்து வைப்பது நல்லது.

வாசுதேவன், நவிமும்பை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 01, 2016 12:01 pm

ம்ம்.... எதுவும் நேரத்தில் செய்யப் பட வேண்டும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jun 01, 2016 12:27 pm

ஒன்றிக்கு மேற்பட்ட குழந்தைகளை வைத்திருப்பவர்கள் அவசியம் எழுதவேண்டியது தான். ஆனால் வாழும் காலத்திலேயே தனக்கு தேவையானதை வைத்துக்கொண்டு மற்றதை பிரிதுகொடுத்துவிடுவது தான் புத்திசாலித்தனம்.



உயில் எழுதி விட்டீர்களா? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉயில் எழுதி விட்டீர்களா? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உயில் எழுதி விட்டீர்களா? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 01, 2016 12:39 pm

விமந்தனி wrote:ஒன்றிக்கு மேற்பட்ட குழந்தைகளை வைத்திருப்பவர்கள் அவசியம் எழுதவேண்டியது தான். ஆனால் வாழும் காலத்திலேயே தனக்கு தேவையானதை வைத்துக்கொண்டு மற்றதை பிரிதுகொடுத்துவிடுவது தான் புத்திசாலித்தனம்.
மேற்கோள் செய்த பதிவு: 1209483

ஆமாம் , கொஞ்சம் தனக்கு வைத்துக்கொண்டு தான் பிரித்துத் தரணும்  விமந்தனி....அப்படி இல்லாமல் மொத்தமும் எழுதிக் கொடுத்துவிட்டு நடு ரோட்டில் நின்றவர்கள் நிறைய பேர் சோகம் ......தன் தலைமாட்டில் எதாவது ரொக்கமோ செக் புக் ஒ இருக்கணும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jun 01, 2016 2:50 pm

சாவதற்கு சிலநாட்கள் முன்புதான் உயில் எழுதவேண்டும் . கடைசிவரையில் நம்மிடம் பசை இருந்தால்தான் நம்மை மதிப்பார்கள் . இல்லையென்றால் ஹோட்டலுக்குச் சென்று ஒரு காபி சாப்பிடக் கூட , மகனிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்படும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82481
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 01, 2016 6:27 pm

உயில் எழுதி விட்டீர்களா? 103459460
-
முதலில் உயில் எழுதும் அளவுக்கு கொஞ்சமாவது
சொத்து சேர்ப்பதும் அவசியம்...!
-

ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 01, 2016 9:31 pm

M.Jagadeesan wrote:சாவதற்கு சிலநாட்கள் முன்புதான் உயில் எழுதவேண்டும் . கடைசிவரையில் நம்மிடம் பசை இருந்தால்தான் நம்மை மதிப்பார்கள் . இல்லையென்றால் ஹோட்டலுக்குச் சென்று ஒரு காபி சாப்பிடக் கூட , மகனிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்படும் .
மேற்கோள் செய்த பதிவு: 1209499

சாகும் தினம்தான் யாருக்குமே தெரியாதே ! சாகும் தினம் வரும்போது கையும் ஓடாது காலும் ஓடாது .வாயும் உருளாது .
உயிலில் நாம் எழுதுவது நாம் இறந்த பிறகே அமுலுக்கு வரும் . அதுவரை சொத்து பணம் எல்லாம் நம் வசமே

உயில் எழுதுவதற்கும் மரணத்திற்கும் சம்பந்தம் இல்லை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 01, 2016 11:16 pm

M.Jagadeesan wrote:சாவதற்கு சிலநாட்கள் முன்புதான் உயில் எழுதவேண்டும் . கடைசிவரையில் நம்மிடம் பசை இருந்தால்தான் நம்மை மதிப்பார்கள் . இல்லையென்றால் ஹோட்டலுக்குச் சென்று ஒரு காபி சாப்பிடக் கூட , மகனிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்படும் .
மேற்கோள் செய்த பதிவு: 1209499

ஹா...ஹா...ஹா... நம் மேல் எக்ஸ்பயரி டேட்  எழுதி இருக்காங்களா என்ன ஐயா?.............புன்னகை
.
.
.
மேலும்,அது தெரிந்து விட்டால் நம்மால் வாழவே முடியாதே? ...............புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 01, 2016 11:18 pm

ayyasamy ram wrote:உயில் எழுதி விட்டீர்களா? 103459460
-
முதலில் உயில் எழுதும் அளவுக்கு கொஞ்சமாவது
சொத்து சேர்ப்பதும் அவசியம்...!
-

நிஜம் ராம் அண்ணா சூப்பருங்க புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 01, 2016 11:18 pm

T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote:சாவதற்கு சிலநாட்கள் முன்புதான் உயில் எழுதவேண்டும் . கடைசிவரையில் நம்மிடம் பசை இருந்தால்தான் நம்மை மதிப்பார்கள் . இல்லையென்றால் ஹோட்டலுக்குச் சென்று ஒரு காபி சாப்பிடக் கூட , மகனிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்படும் .
மேற்கோள் செய்த பதிவு: 1209499

சாகும் தினம்தான் யாருக்குமே தெரியாதே ! சாகும் தினம் வரும்போது கையும் ஓடாது காலும் ஓடாது .வாயும் உருளாது .
உயிலில் நாம் எழுதுவது நாம் இறந்த பிறகே அமுலுக்கு வரும் . அதுவரை சொத்து பணம் எல்லாம் நம் வசமே

உயில் எழுதுவதற்கும் மரணத்திற்கும் சம்பந்தம் இல்லை

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1209535

ரொம்ப சரியா சொன்னீங்க ஐயா ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக