புதிய பதிவுகள்
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீடு விற்பனைக்கு… Poll_c10வீடு விற்பனைக்கு… Poll_m10வீடு விற்பனைக்கு… Poll_c10 
64 Posts - 58%
heezulia
வீடு விற்பனைக்கு… Poll_c10வீடு விற்பனைக்கு… Poll_m10வீடு விற்பனைக்கு… Poll_c10 
41 Posts - 37%
mohamed nizamudeen
வீடு விற்பனைக்கு… Poll_c10வீடு விற்பனைக்கு… Poll_m10வீடு விற்பனைக்கு… Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
வீடு விற்பனைக்கு… Poll_c10வீடு விற்பனைக்கு… Poll_m10வீடு விற்பனைக்கு… Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீடு விற்பனைக்கு… Poll_c10வீடு விற்பனைக்கு… Poll_m10வீடு விற்பனைக்கு… Poll_c10 
106 Posts - 60%
heezulia
வீடு விற்பனைக்கு… Poll_c10வீடு விற்பனைக்கு… Poll_m10வீடு விற்பனைக்கு… Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
வீடு விற்பனைக்கு… Poll_c10வீடு விற்பனைக்கு… Poll_m10வீடு விற்பனைக்கு… Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
வீடு விற்பனைக்கு… Poll_c10வீடு விற்பனைக்கு… Poll_m10வீடு விற்பனைக்கு… Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீடு விற்பனைக்கு…


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82415
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 02, 2016 6:33 pm

வீடு விற்பனைக்கு… 8cPzppwGSSyNegWay3IF+E_1469772137(1)
-
பணி ஓய்வு பெற்ற பின், செய்தித்தாளை வரி விடாமல்
படித்து முடிப்பதே, பரமசிவத்தின் பொழுதுபோக்கு!

அப்படித்தான் ஒருநாள், செய்தித்தாளுடன் அளிக்கப்பட்ட,
வீட்டு வசதி பற்றிய இணைப்பில் வந்த ரியல் எஸ்டேட்
விளம்பரத்தை பார்த்தார். அத்துடன், சீரியல் மற்றும் சினிமா
கதாநாயகிகள், ‘டிவி’ சேனல்களில் தோன்றி, ‘முந்துங்கள்…
சொர்க்கத்தின் சொந்தக்காரராக, ஓர் அரிய வாய்ப்பு.
நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் அமைந்துள்ள,
அரசு தொழிற்பேட்டைக்கு மிக அருகில் உள்ளது, வில்லா.

‘விரைவில் வரவிருக்கும் விமான நிலையத்திலிருந்து,
5 கி.மீ., தொலைவிலும், அரசின் பரிசீலனையில் உள்ள, அகல
ரயில் பாதை அமையவிருக்கும் வழித்தடத்தின் அருகிலும்,
தேசிய நெடுஞ்சாலையிலிருந்து திரும்பி, தார் சாலையில் பொடி
நடையாக நடந்தாலே அடையக்கூடிய, அருமையான ஐந்து ஏக்கர்
நிலப்பரப்பில் அமைந்துள்ள, ‘வில்லா’ நிலம் ரொம்ப மலிவாக
தருகிறோம்.

‘இன்னும் சில மனைகள் மட்டுமே உள்ளன.
உடனே வாங்கினால், பத்திரப்பதிவு, பட்டா மற்றும் தங்க
நாணயம் இலவசம். ஐந்தே ஆண்டுகளில், பல மடங்கு விலை
உயரும் உன்னத வாய்ப்பு…’ என்று, வேப்பிலை அடித்ததில்,
ஆளரவமற்ற அத்துவானத்தில், ஒரு கிரவுண்டு நிலம் வாங்கி,
கான்டாராக்டர் மூலம் வீடு கட்டிய தன் அவசர குடுக்கை
தனத்துக்காக, தன்னையே நொந்து கொண்டார் பரமசிவம்.

‘நல்ல வாடகை வரும்… சில ஆண்டுகளில் விற்றால், நல்ல லாபம்
கிடைக்கும்…’ என்ற தப்புக் கணக்கில், ஓய்வு கால ரொக்கங்களையும்,
இதர சேமிப்பையும் கொட்டி, 30 லட்சம் ரூபாயில் தன் மனைவி பேரில்
வீடு கட்டினார்.

ஆனால், முதல் அதிர்ச்சியாக, வாடகைக்கு குடி வர ஆளில்லை;
காரணம், அடிக்கடி போய் விடும் மின்சாரம், போக்குவரத்து
வசதியின்மை, கல்விக்கூடம், மருத்துவமனை மற்றும் கடை என்று
எந்த வசதியும் இல்லை. ஆள் அரவமற்ற இடம்; பகலிலாவது சிறிது
பரவாயில்லை; இரவில் கும்மிருட்டு; பயமாக இருந்தது.

போதாக்குறைக்கு அப்பகுதியில் இருந்த தொழிற்சாலைகளில்,
தொழிலாளர் பிரச்னை, மின் பற்றாக்குறை, உலக பொருளாதார
சீர்கேடு போன்றவற்றால் ஒவ்வொரு கம்பெனியும் மூடு விழா
நடத்த, தொழிற்பேட்டை காலியாக ஆரம்பித்தது. ‘வாடகைக்கு
யாராவது வரலாம்…’ என்று இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும்
பரமசிவத்திற்கு போய் விட்டது.

நாளுக்கு நாள் ஏறி வரும் விலை வாசியால், பட்ஜெட்டில்
பற்றாக்குறை விழ, சமாளிக்க முடியாமல் திணறினார். அத்துவான
இடத்தில் தான் கட்டியிருக்கும் வீட்டிற்கு இந்த வயதில் குடி
பெயர்வதும் இயலாத காரியம். வீட்டை நஷ்டமில்லாமல் விற்றாலே
பெரிய காரியம் என்ற நிலையில், பத்திரிகை மற்றும் இணயத்தில்
விளம்பரம் செய்ததுடன், ஏரியா புரோக்கர்களிடமும் சொல்லி
வைத்தார், பரமசிவம்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82415
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 02, 2016 6:33 pm

சில மாதங்கள் கழித்து, புரோக்கரிடமிருந்து போன்.

”சார்… ஒரு அருமையான பார்ட்டி சிக்கிடுச்சு. பேரு, ரங்கநாதன்
‘பாத்து பாத்து கட்டின வீடு; ஐஞ்சு வருஷத்துல நிலம் மட்டுமே
ஒரு கோடி ரூபாய்க்கு போகும். வீட்டுக்காரர் அமெரிக்காவில்
செட்டில் ஆகப் போறதால, மனசில்லாம வீட்டை விக்கிறாருன்னு
சொல்லியிருக்கேன். அவர் ரொம்ப, ‘இம்ப்ரெஸ்’ ஆயிட்டாரு.
நீங்களும் அதையே சொல்லிடுங்க.

”இன்னொரு விஷயம். அவரு கொஞ்சம் சென்டிமென்ட் பார்ட்டி.
அதுக்கேத்த மாதிரி நாம நடந்துகிட்டா, மொத்தமா பணத்தை
செட்டில் செய்துடுவாரு; வீடு பிடிச்சுதுன்னா, முன்தொகையா,
10 லட்ச ரூபா தர்றாராம்… அதனால, நான் ரெண்டு நாளைக்கு
முன்னாடியே போயி, வீட்டை சுத்தம் செய்து, வெளியில ஒரு,
‘கோட்’ பெயின்ட் அடிச்சு, வாசல்ல கோலம் போட்டு, பசு மாடு,
கன்னுக்குட்டியை நிக்க வச்சுடுறேன்.

அதுக்கு, 10,000 ரூபாய் செலவாகும். நீங்க, ஞாயிற்றுக்கிழமை
காலையில, 10:00 மணிக்கு, ‘சைட்’டுக்கு வந்துடுங்க,” என்றார்
புரோக்கர்.

‘அப்பாடா… விடிவு காலம் வந்துடுச்சு; ஒரு வழியாக வீட்டை
தள்ளிடலாம். அப்படியே, மொத்த காசையும் பேங்க்ல போட்டுட்டா,
வட்டி வரும். முதலிலேயே இதை செய்துருக்கலாம். புத்தி கெட்டு
போயி, அனாவசிய டென்ஷன்…’ என்று நினைத்து, மகிழ்ச்சியில்
திளைத்தார், பரமசிவம்.

ஞாயிற்றுக்கிழமை –
பரமசிவம் கிளம்பும் போது, ”ஏங்க… வீடு என் பெயர்ல
நானும் வரட்டுமா…” என்றாள், அவருடைய மனைவி.
”எதுக்கு வெயில்ல அவ்வளவு தூரம்… இது வெறும் அக்ரிமென்ட் தானே…
நான் போனால் போதும், ” என்றவர், கையெழுத்துப் போட மேஜை
மேல் இருந்த ஒரு பேனாவை எடுத்து பாக்கெட்டில் சொருகியபடி
அவசரமாக கிளம்பினார்.

தன் மனைவியுடன், ‘டாண்’ என்று ஆஜரானார், ரங்நாதன்.
புரோக்கரும், சொன்னபடி எல்லா ஏற்பாடும் செய்திருந்தார்.
”கிழக்கு பார்த்த வீடு குட்… அடிக்கு அடி வாஸ்து பிரகாரம்
கட்டியிருக்கீங்க. தோட்டத்துக்கு போதுமான இடம், போர்ட்டிகோன்னு
எல்லாமே அருமை. கிணத்து தண்ணி கொஞ்சம் உப்பு கரிச்சாலும்,
கை விட்டு எடுக்குறாப்புல ரொம்ப கிட்டத்துல இருக்கு.

எனக்கும், என் மனைவிக்கும் வீடு ரொம்ப பிடிச்சுருக்கு. வீட்டு வாசல்ல,
தற்செயலா பசுவும், கன்றும்… ஆகா, இன்னைக்கு நிறைஞ்ச முகூர்த்த
நாள்… ‘அக்ரிமென்ட்’ போட்டுடலாம். அடுத்த அமாவாசை அன்னிக்கு,
‘ரிஜிஸ்டிரேஷன்’ ஓகேவா…” என்றவர், கடவுளை வணங்கி, கிழக்கு
பக்கம் பார்த்தபடி, புரோக்கர் நீட்டிய, ‘அக்ரிமென்ட்’டில் கையெழுத்து
போட்டு, ”நீங்க போடுங்க,” என்று பரமசிவத்திடம் நீட்டினார்.

அவரும் கையெழுத்து போட்டு திருப்பித் தர, ரங்கநாதன் முகம்
மாறியது.
”சாரி சார்… சென்டிமென்ட்படி, ஆரம்பமே கொஞ்சம் சரியில்ல.
வீடு உங்க மனைவி பெயர்ல இருக்கு. அதனால, நீங்க தம்பதி சமேதரா
வந்திருந்தா, நல்லா இருந்திருக்கும். ஆனா, நீங்க ஒத்தை ஆளா வந்தது,
கொஞ்சம் உறுத்தலா இருந்தது. சரி போகுதுன்னு பாத்தால், உங்களுக்கு
இடது கை பழக்கம் போல…
அதோடு, கறுப்பு இங்க் பேனாவுல கையெழுத்து போட்டிருக்கீங்க.

”இடது கையால செய்யற எந்த காரியமும் சரியா வராதுங்கறது என்
நம்பிக்கை. தவிர, கறுப்பு நிறம் துக்கத்தை குறிக்கும்; சுப காரியத்துக்கு
சரிப்படாது என்பதும் என் அபிப்ராயம். கூட்டி கழிச்சு பாத்தால், எனக்கு
வீடு வாங்கற கொடுப்பினை இல்லன்னு தோணுது,” என்று சொன்னவர்,
பரமசிவம் சொன்ன சமாதானத்தை காதில் வாங்காமல், காரில் ஏறி
சென்று விட்டார்.

‘மனைவியை வர வேணாம்ன்னு சொல்லியிருக்க வேண்டாமோ…
அவள் வந்திருந்தால், வலது கையால் கையெழுத்து போட்டிருப்பாளே…
அதோடு, வழக்கமா எழுதுற பேனாவை தேட சோம்பேறித்தனப்பட்டு,
ஏதோ ஒரு பேனாவ எடுத்து வந்தது தப்பா போச்சே…
சின்ன விஷயங்கள் தான் என்றாலும், சென்டிமென்ட் பார்ட்டி எனும்
போது, கொஞ்சம் ஜாக்கிரதையாக கையாண்டிருக்கலாம்.
நம் அலட்சியப் போக்கால், கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டாமல்
போயிருச்சே…

அதோட, 10,000 ரூபாய் வீண் செலவு வேறு…’ என்று நொந்து, புலம்பினார்,
பரமசிவம்.

————————————–
ஆர்.ரகோத்தமன்
வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக