புதிய பதிவுகள்
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்! - 9/4/2017 Poll_c10மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்! - 9/4/2017 Poll_m10மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்! - 9/4/2017 Poll_c10 
73 Posts - 46%
heezulia
மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்! - 9/4/2017 Poll_c10மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்! - 9/4/2017 Poll_m10மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்! - 9/4/2017 Poll_c10 
70 Posts - 44%
mohamed nizamudeen
மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்! - 9/4/2017 Poll_c10மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்! - 9/4/2017 Poll_m10மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்! - 9/4/2017 Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்! - 9/4/2017 Poll_c10மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்! - 9/4/2017 Poll_m10மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்! - 9/4/2017 Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்! - 9/4/2017 Poll_c10மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்! - 9/4/2017 Poll_m10மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்! - 9/4/2017 Poll_c10 
1 Post - 1%
Kavithas
மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்! - 9/4/2017 Poll_c10மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்! - 9/4/2017 Poll_m10மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்! - 9/4/2017 Poll_c10 
1 Post - 1%
சிவா
மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்! - 9/4/2017 Poll_c10மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்! - 9/4/2017 Poll_m10மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்! - 9/4/2017 Poll_c10 
1 Post - 1%
bala_t
மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்! - 9/4/2017 Poll_c10மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்! - 9/4/2017 Poll_m10மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்! - 9/4/2017 Poll_c10 
1 Post - 1%
prajai
மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்! - 9/4/2017 Poll_c10மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்! - 9/4/2017 Poll_m10மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்! - 9/4/2017 Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்! - 9/4/2017 Poll_c10மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்! - 9/4/2017 Poll_m10மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்! - 9/4/2017 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்! - 9/4/2017 Poll_c10மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்! - 9/4/2017 Poll_m10மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்! - 9/4/2017 Poll_c10 
304 Posts - 43%
heezulia
மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்! - 9/4/2017 Poll_c10மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்! - 9/4/2017 Poll_m10மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்! - 9/4/2017 Poll_c10 
287 Posts - 40%
Dr.S.Soundarapandian
மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்! - 9/4/2017 Poll_c10மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்! - 9/4/2017 Poll_m10மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்! - 9/4/2017 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்! - 9/4/2017 Poll_c10மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்! - 9/4/2017 Poll_m10மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்! - 9/4/2017 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்! - 9/4/2017 Poll_c10மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்! - 9/4/2017 Poll_m10மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்! - 9/4/2017 Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்! - 9/4/2017 Poll_c10மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்! - 9/4/2017 Poll_m10மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்! - 9/4/2017 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்! - 9/4/2017 Poll_c10மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்! - 9/4/2017 Poll_m10மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்! - 9/4/2017 Poll_c10 
6 Posts - 1%
prajai
மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்! - 9/4/2017 Poll_c10மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்! - 9/4/2017 Poll_m10மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்! - 9/4/2017 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்! - 9/4/2017 Poll_c10மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்! - 9/4/2017 Poll_m10மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்! - 9/4/2017 Poll_c10 
4 Posts - 1%
manikavi
மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்! - 9/4/2017 Poll_c10மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்! - 9/4/2017 Poll_m10மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்! - 9/4/2017 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்! - 9/4/2017


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 05, 2017 11:53 am

மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்!

மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்! - 9/4/2017 LsvTGCa3RRm50BRocWSk+p13a

பன்னிரெண்டாவது மாதமான பங்குனியும், பன்னிரெண்டாவது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புண்ணிய திருநாள் பங்குனி உத்திரம். தெய்வத் திருமணங்கள் அதிகம் நடைபெற்ற மாதம் பங்குனி என்கின்றன புராணங்கள்.

முருகப் பெருமான்- தெய்வானை திருமணம் நடந்த நாள். வள்ளி அவதரித்த தினம். பார்வதி தேவியை பரமேஸ்வரன் கரம்பிடித்த நாள் இது. மேலும் மதுரையில் மீனாட்சிதேவி- சுந்தரேசர் திருக்கல்யாண வைபவம் பங்குனி உத்திரத்தன்று நடைபெறும். தேவேந்திரன்- இந்திராணி திருமணம் நடைபெற்ற நாள். ராமபிரான்- சீதாதேவி, பரதன்- மாண்டவி, லட்சுமணன்- ஊர்மிளை, சத்ருக்னன்- ச்ருத கீர்த்தி ஆகியோருக்கு திருமணம் நடந்த தினம்.ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் - ரங்க மன்னார் திருக்கல்யாண வைபவம் நிகழ்ந்த திருநாளும் பங்குனி உத்திரமே.

பங்குனி உத்திர விரத மகிமையால், அழகு மிக்க 27 கன்னியரை சந்திரன் மனைவியாகக் கொண்டதாகச் சொல்வர். இந்த நாளில் விரதம் மேற்கொண்ட மகா லட்சுமி, விஷ்ணுவின் திருமார்பில் வீற்றிருக்கும் பேறு பெற்றாள்.

தனது தவத்தைக் கலைத்த மன்மதனை, சிவபெருமான் நெற்றிக் கண்ணால் எரித்து சாம்பலாக்கினார். பின்னர், தன்னை வணங்கி மன்றாடிய ரதிதேவியின் வேண்டுகோளுக்கு இரங்கி, மன்மதனை மீண்டும் சிவனார் உயிர்ப்பித்தது பங்குனி உத்திரம் திருநாளில்தான்.

சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மணக்கோலத்தில் பரமன் காட்சி தந்தது இந்த நாளில்தான். பிரம்மன் தன் நாவில் சரஸ்வதியை வைத்த தினம், பங்குனி உத்திரம் என்பர். சாஸ்தா அவதரித்தது பங்குனி உத்திர திருநாளில். அர்ஜுனன் அவதரித்தது இந்த நாளில்தான். காரைக்கால் அம்மையார் பங்குனி மாதத்தில்தான் முக்தி பெற்றார்.

வடநாட்டில், ஹோலிப் பண்டிகை கொண்டாடுவது, வசந்தகாலம் துவங்குவது என்று பங்குனி உத்திரத்துக்கு பல பெருமைகள் உண்டு.

காஞ்சியில், பௌர்ணமி திதி கூடிய பங்குனி உத்திரத்தன்று, காமாட்சி- ஏகாம்பரேஸ்வரர் திருமணம் நடக்கும். அப்போது அதே மண்டபத்தில் ஏராளமானோர் திருமணம் செய்து கொள்வர். இந்த நாளில் காஞ்சி வரதராஜர் கோயில்- பெருந்தேவி தாயார் சந்நிதியில், தேவி-பூதேவி, மலையாள நாச்சியார், ஆண்டாள் மற்றும் பெருந்தேவி தாயார் சகிதம் காட்சி தருகிறார் வரதராஜ பெருமாள்.

மேல்கோட்டை என்ற திரு நாராயணபுரத்தில்- பங்குனி மாதத்தில் வைரமுடி சேவை விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்தத் தலம் ‘தென்னக பத்ரிகாஸ்ரமம்’ எனப்படும். வடபத்ரிகாஸ்ரமம் செல்ல இயலாதவர்கள் இங்கு வந்து, நாராயண பெருமாளை தரிசித்தால், பத்ரி போய் வந்த புண்ணியம் உண்டு என்பது ஐதீகம்.

திருவையாறு அருகே உள்ள நவக்கிரக (சந்திரன்) சேத்திரம், திங்களூர். இங்குள்ள சிவாலயத்தில், ஆண்டுதோறும் பங்குனி உத்திர நன்னாளில், காலையில் 6 மணிக்கு சூரியக் கதிர்களும், மறு நாள் மாலை 6.00 மணிக்கு சந்திரனின் ஒளியும் சிவலிங்கத்தின் மீது விழுகின்றன. அப்போது, இங்கு சூரிய- சந்திர பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. இந்த பூஜையை தரிசித்தால் எல்லா வளமும் பெறலாம் என்பது பக்தர்களது நம்பிக்கை.

திருவையாறு அருகிலுள்ள புண்ணிய திருத்தலம் திருமழபாடியில், பங்குனி மாதத்தில் நடைபெறும் நந்திதேவரின் திருமண வைபவம் வெகு பிரசித்தி. திருமண தோஷம் உள்ளவர்கள், திருமழப்பாடி சென்று இந்த வைபவத்தை தரிசித்தால், விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.

‘நந்தி கல்யாணம் பார்த்தால் முந்தி கல்யாணம் நடக்கும்’ என்று பழமொழியே உண்டு.

பங்குனி உத்திர நாள் அன்று பிறந்ததால், அர்ஜுனன் ‘பல்குநன்’ என்ற பெயர் பெற்றான்.

சில பகுதிகளில் பங்குனி உத்திரம், ஐயனாரின் அவதார தினமாகக் கருதப்படுகிறது. சிவகங்கை மாவட்டம்- புதுக்குடி கிராமம், காடய்யனார் கோயி லில், ஐயனார் சிலை குப்புறக் கவிழ்ந்த கோலத்தில் உள்ளது. அந்த நிலையிலேயே பக்தர்கள் அபிஷேகம், ஆராதனை செய்து ஐயனாரை வழிபடுகின்றனர்.

நெல்லை மாவட்டம், கருங்குளத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில், பங்குனி உத்திர விழாவன்று ஆண்கள் தங்கள் வாயில் துணியைக் கட்டிக் கொண்டு, 63 கிலோ பச்சரிசியை உரலில் இடித்து, அந்த மாவால் ஒரே கொழுக்கட்டை தயாரித்து, ஐயப்பனுக்குப் படைக்கிறார்கள்.

புதுக்கோட்டை மாவட்டம்- வடக்கு புதுக்குடி கிராமத்தில் உள்ள சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், பங்குனி உத்திரத்தன்று மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட படகில் தெப்பம் உருவாக்குகின்றனர். அதில் வள்ளி- தெய் வானை சமேதராக ஸ்ரீசிவசுப்பிரமணியர், சுமார் ஐந்து கி.மீ. தூரம் வரை கடலில் பவனி வருகிறார். மற்றொரு படகில், மங்கள இசை முழங்க இசைக் கலைஞர்களுடன் பக்தர்களும் செல்கிறார்கள்.

ஸ்ரீ ரங்கம் கோவிலில் பங்குனி உத்திரத்தன்றுக்கு 'சேர்த்தி உத்ஸவம்' நடைபெறும்....பெருமாளும் தாயாரும் சேர்ந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள்.

தி ருவாரூர் - திருத்துறைப்பூண்டி பாதையில் திருவாரூரில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் வரும் கிராமம் பொன்னிறை. இங்குள்ள அகஸ்தீஸ்வரர் கோயிலில், அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கத் துக்கு பங்குனி உத்திரத்தன்று, நெல்லிக் கனிப் பொடி மற்றும் அரிசி மாவால் அபி ஷேகம் செய்கிறார்கள். இதனால் சகல நோய்களும் தீரும் என்பது ஐதீகம்.

நாகை மாவட்டம் திருப்புகலூரில் உள்ள அருள்மிகு அக்னீஸ்வர சுவாமி திருக்கோயிலின் மூலவர் சுயம்பு மூர்த்தி. இறைவி: அருள்மிகு கறுத்தார் குழலி. ஒரு முறை சுந்தரமூர்த்தி நாயனார், பங்குனி உத்திரத் திருவிழாவுக்கு நிதி வேண்டி திருப்புகலூர் வந்தார். இரவில் அவர், ஆலய வளாகத்தில் செங்கற்கள் சில வற்றை தலைக்கு வைத்துத் தூங்கினார். மறு நாள் காலை அவர் எழுந்து பார்த்தபோது அந்த கற்கள் பொன்னாக மாறியிருந்தது. அதனால் இன்றும் புது வீடு கட்டுவோர், செங்கல்லை இங்கு கொண்டு வந்து பூஜித்து, மனை முகூர்த்தம் செய்கின்றனர். இதனால் வீட்டில் செல்வம் கொழிக்கும் என்பது ஐதீகம்.

இணையத்தில் படித்தவைகளின்  தொகுப்பு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81972
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 07, 2017 6:01 am

மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்! - 9/4/2017 EURerg5Q9Wg9ywW0WXZz+panguni_3151199f
-

சோழிங்கநல்லூர், சோழ மன்னர்கள் காலத்தில் சோழன் கண்ட
நல்லூராக இருந்தது. சோழப் பேரரசின் போர்த் தளவாடங்கள்
பராமரிக்கும் பகுதியாக இருந்த சோழன்கண்ட நல்லூரின்
தளபதியாக கங்கன் என்பவன் இருந்தான்.

சிவபக்தனான கங்கன் சிவபெருமானுக்காக ஆலயம் ஒன்றை
எழுப்பி அங்கே சிவலிங்க பிரதிஷ்டை செய்ய முயற்சி எடுத்தான்.
ஆனால், முயற்சிகள் பல செய்தும் அவனால் அதை உடனடியாகச்
செய்துமுடிக்க முடியவில்லை.

கனவில் வந்த சிவன்

இதனால், மன சஞ்சலம் கொண்டவன், தனது மனைவி
யாழினியிடம் தனது மனக்குறையைச் சொல்லி வருந்தினான்.
கணவனின் துயர்துடைக்க எண்ணிய யாழினி, சடைமுடியானை
வேண்டினாள்.

அன்றிரவே, கங்கனின் கனவில் காட்சிகொடுத்த ஈசன்,
“கானகத்தில் உனது புரவிப் படைகள் மேய்ச்சலுக்குச் செல்லும்
பனைமரச் சோலையின் வடகிழக்கு மூலையில் புற்று ஒன்று
இருக்கும். நீயும் உன் மனைவியும் சென்று அந்தப் புற்றை
வணங்கினால் அதிலிருந்து ஒரு நாகம் வெளிப்பட்டு உங்களுக்கு
வழிகாட்டும்.

அது போகும் திசையிலேயே இருவரும் பயணித்தால் சுயம்புவாய்
நான் இருக்கும் இடத்தை உங்களுக்கு அது காட்டும்.
அவ்விடத்தில் எனக்கு ஆலயம் எழுப்பி வழிபடு; நீயும் உன்
குடிமக்களும் சுபீட்சம் பெருவீர்கள்’’ என்று சொல்லி மறைந்தார்.

-
----------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81972
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 07, 2017 6:05 am

மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்! - 9/4/2017 JokG96YqRKqBBpojhZE9+panguni_2_3151200a
-

-
----------------------------

கங்கன் எழுப்பிய ஆலயம்

-
மறுநாள் காலையில் தனது மனைவி யாழினியை அழைத்துக்
கொண்டு பனைமரச் சோலைக்குச் சென்றான் கங்கன்.

அங்கே, ஈசன் கனவில் சொன்னது போலவே புற்று ஒன்றை
இருவரும் கண்டனர். அந்தப் புற்றை பயபக்தியுடன் இருவரும்
வணங்க, அதனுள் இருந்து வெளிப்பட்ட நாகம், இருவரையும்
கானகத்தில் வழிநடத்திச் சென்றது.

குறிப்பிட்ட இடம் சென்றதும் தனது தலையை மூன்றுமுறை
தரையில் மோதிவிட்டு மறைந்தது நாகம்.

நாகம் மோதிவிட்டுச் சென்ற இடத்தில் வட்டவடிவப் பள்ளம்
இருந்தது. கங்கனின் படைவீரர்கள் அந்த இடத்தை சற்றே
ஆழமாகத் தோண்டினார்கள். அப்போது அதனுள்ளே இருந்து
பிரகாசமான ஒளியுடன் சுயம்புவாய்த் தோன்றியது சிவலிங்கம்.

பக்திப் பரவசம் கொண்ட கங்கன், அப்போதே அவ்விடத்தில்
கோயில் கட்டும் பணியைத் தொடங்கினான். ஒன்பது நிலைகள்
கொண்ட ராஜகோபுரத்துடன், சிவாலயத்தை எழுப்பி முடித்து
அதனுள்ளே சுயம்புலிங்கத்தை பிரதிஷ்டை செய்தவன்,
விசாக நட்சத்திர நாளில் குடமுழுக்கும் நடத்தி முடித்தான்.
-
வணங்கிய தளபதிகள்
-

சைவத்தையும் வைணவத்தையும் சமமாகப் பாவித்த கங்கன்
அதே இடத்தில் பெருமாளுக்கும் சன்னதி அமைத்தான்.
இந்த ஆலயம் எழுப்பப்பட்ட பிறகு கங்கனின் படைத் தளபதிகள்
போருக்குப் புறப்படும் முன்னதாக இங்கு வந்து சிவனுக்கும்
பெருமாளுக்கும் வெள்ளை, சிவப்பு மலர்கள் சாற்றி வணங்கிச்
செல்வதை வழக்கமாகக் கொண்டார்கள்.

இப்படிச் சென்றால் வெற்றிகளைக் குவிக்க முடியும் என்று
அவர்கள் நம்பினார்கள்.

இவ்வளவு சிறப்புடன் விளங்கிய இத்திருத்தலம் சோழர்கள்
வீழ்ச்சி கண்டு நாயக்க மன்னர்கள் தலைதூக்கிய காலத்தில்
கொள்ளையடிக்கப்பட்டு இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.

ஆண்டுகள் பல கடந்த பிறகு மீண்டும் இத்திருத்தலத்தில்
சங்கர நாரயணரும் வரதராஜ பெருமாளும் சுயம்புவாய்
முளைத்தார்கள். உழவுக்காலில் பட்டு இந்தச் சிலைகள்
இரண்டும் மீண்டும் வெளியில் வந்தன. மீண்டும் இங்கே
ஆலயம் எழுப்பப்பட்டது.
-
----------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81972
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 07, 2017 6:05 am



திருமேனியில் வளையல் தடம்

-
இங்குள்ள சங்கர நாராயணனின் திருமேனியில் வளையல்
அழுத்திய தடத்தை இப்போதும் பார்க்க முடியும். ஒருசமயம்
போருக்குச் சென்ற கங்கன், நீண்ட நாட்களாகியும்
போர்க்களத்திலிருந்து திரும்பவில்லை. தனது கணவன்
வெற்றியோடு திரும்பிவர வேண்டும் என சங்கரனிடம் போய்
வேண்டினாள் யாழினி.

அப்போது, கங்கன் போர்க்களத்தில் இறந்துவிட்டதாகச் செய்தி
வருகிறது. இதைக் கேட்டுத் துடித்த யாழினி, ஈசனை கட்டிப்
பிடித்துக்கொண்டு கதறினாள். அப்போது அவள் கையில்
அணிந்திருந்த வளையல் இறைவனின் திருமேனியில் பட்டு
அழுந்தி வடுவை ஏற்படுத்தியதாகயும் இந்த நிகழ்வுக்குப் பிறகு,
போர்க்களத்திலிருந்து கங்கன் வெற்றிமாலையுடன் திரும்பி
வந்ததாகவும் செய்தி.

சிவபெருமானும் திருமாலும் ஒருங்கே கோயில் கொண்டிருக்கும்
இந்த சங்கர நாராயணர் - வரதராஜ பெருமாள் திருத்தலம் ஒரு
பரிகாரத் தலமாகும். தாலிபாக்கியம் நிலைத்திட வேண்டுவோர்
இங்கு வந்து 48 நாட்கள் விளக்கேற்றி நிறைவு நாளில் வெண்
பொங்கல் படையல் வைத்து மூவகை பூக்களுடன் இறைவனை
வழிபட்டால் மாங்கல்யம் நிலைக்கும் என்பது நம்பிக்கை.
-
---------------------------------------
குள.சண்முகசுந்தரம்
தி இந்து


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 07, 2017 4:01 pm

ஏற்கனவே உள்ள கட்டுரையுடன் இதையும் இணைத்து விடுகிறேன் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக