புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun 19 May 2024 - 15:25

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:51

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:50

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:45

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:43

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:41

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அரவம் தீண்டாத ஊர் -  நாகமுகுந்தன்குடி. - Poll_c10அரவம் தீண்டாத ஊர் -  நாகமுகுந்தன்குடி. - Poll_m10அரவம் தீண்டாத ஊர் -  நாகமுகுந்தன்குடி. - Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
அரவம் தீண்டாத ஊர் -  நாகமுகுந்தன்குடி. - Poll_c10அரவம் தீண்டாத ஊர் -  நாகமுகுந்தன்குடி. - Poll_m10அரவம் தீண்டாத ஊர் -  நாகமுகுந்தன்குடி. - Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
அரவம் தீண்டாத ஊர் -  நாகமுகுந்தன்குடி. - Poll_c10அரவம் தீண்டாத ஊர் -  நாகமுகுந்தன்குடி. - Poll_m10அரவம் தீண்டாத ஊர் -  நாகமுகுந்தன்குடி. - Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
அரவம் தீண்டாத ஊர் -  நாகமுகுந்தன்குடி. - Poll_c10அரவம் தீண்டாத ஊர் -  நாகமுகுந்தன்குடி. - Poll_m10அரவம் தீண்டாத ஊர் -  நாகமுகுந்தன்குடி. - Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
அரவம் தீண்டாத ஊர் -  நாகமுகுந்தன்குடி. - Poll_c10அரவம் தீண்டாத ஊர் -  நாகமுகுந்தன்குடி. - Poll_m10அரவம் தீண்டாத ஊர் -  நாகமுகுந்தன்குடி. - Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
அரவம் தீண்டாத ஊர் -  நாகமுகுந்தன்குடி. - Poll_c10அரவம் தீண்டாத ஊர் -  நாகமுகுந்தன்குடி. - Poll_m10அரவம் தீண்டாத ஊர் -  நாகமுகுந்தன்குடி. - Poll_c10 
1 Post - 1%
Guna.D
அரவம் தீண்டாத ஊர் -  நாகமுகுந்தன்குடி. - Poll_c10அரவம் தீண்டாத ஊர் -  நாகமுகுந்தன்குடி. - Poll_m10அரவம் தீண்டாத ஊர் -  நாகமுகுந்தன்குடி. - Poll_c10 
1 Post - 1%
Shivanya
அரவம் தீண்டாத ஊர் -  நாகமுகுந்தன்குடி. - Poll_c10அரவம் தீண்டாத ஊர் -  நாகமுகுந்தன்குடி. - Poll_m10அரவம் தீண்டாத ஊர் -  நாகமுகுந்தன்குடி. - Poll_c10 
1 Post - 1%
prajai
அரவம் தீண்டாத ஊர் -  நாகமுகுந்தன்குடி. - Poll_c10அரவம் தீண்டாத ஊர் -  நாகமுகுந்தன்குடி. - Poll_m10அரவம் தீண்டாத ஊர் -  நாகமுகுந்தன்குடி. - Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரவம் தீண்டாத ஊர் -  நாகமுகுந்தன்குடி. - Poll_c10அரவம் தீண்டாத ஊர் -  நாகமுகுந்தன்குடி. - Poll_m10அரவம் தீண்டாத ஊர் -  நாகமுகுந்தன்குடி. - Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
அரவம் தீண்டாத ஊர் -  நாகமுகுந்தன்குடி. - Poll_c10அரவம் தீண்டாத ஊர் -  நாகமுகுந்தன்குடி. - Poll_m10அரவம் தீண்டாத ஊர் -  நாகமுகுந்தன்குடி. - Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
அரவம் தீண்டாத ஊர் -  நாகமுகுந்தன்குடி. - Poll_c10அரவம் தீண்டாத ஊர் -  நாகமுகுந்தன்குடி. - Poll_m10அரவம் தீண்டாத ஊர் -  நாகமுகுந்தன்குடி. - Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
அரவம் தீண்டாத ஊர் -  நாகமுகுந்தன்குடி. - Poll_c10அரவம் தீண்டாத ஊர் -  நாகமுகுந்தன்குடி. - Poll_m10அரவம் தீண்டாத ஊர் -  நாகமுகுந்தன்குடி. - Poll_c10 
12 Posts - 2%
prajai
அரவம் தீண்டாத ஊர் -  நாகமுகுந்தன்குடி. - Poll_c10அரவம் தீண்டாத ஊர் -  நாகமுகுந்தன்குடி. - Poll_m10அரவம் தீண்டாத ஊர் -  நாகமுகுந்தன்குடி. - Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அரவம் தீண்டாத ஊர் -  நாகமுகுந்தன்குடி. - Poll_c10அரவம் தீண்டாத ஊர் -  நாகமுகுந்தன்குடி. - Poll_m10அரவம் தீண்டாத ஊர் -  நாகமுகுந்தன்குடி. - Poll_c10 
9 Posts - 2%
jairam
அரவம் தீண்டாத ஊர் -  நாகமுகுந்தன்குடி. - Poll_c10அரவம் தீண்டாத ஊர் -  நாகமுகுந்தன்குடி. - Poll_m10அரவம் தீண்டாத ஊர் -  நாகமுகுந்தன்குடி. - Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அரவம் தீண்டாத ஊர் -  நாகமுகுந்தன்குடி. - Poll_c10அரவம் தீண்டாத ஊர் -  நாகமுகுந்தன்குடி. - Poll_m10அரவம் தீண்டாத ஊர் -  நாகமுகுந்தன்குடி. - Poll_c10 
4 Posts - 1%
Jenila
அரவம் தீண்டாத ஊர் -  நாகமுகுந்தன்குடி. - Poll_c10அரவம் தீண்டாத ஊர் -  நாகமுகுந்தன்குடி. - Poll_m10அரவம் தீண்டாத ஊர் -  நாகமுகுந்தன்குடி. - Poll_c10 
4 Posts - 1%
Rutu
அரவம் தீண்டாத ஊர் -  நாகமுகுந்தன்குடி. - Poll_c10அரவம் தீண்டாத ஊர் -  நாகமுகுந்தன்குடி. - Poll_m10அரவம் தீண்டாத ஊர் -  நாகமுகுந்தன்குடி. - Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரவம் தீண்டாத ஊர் - நாகமுகுந்தன்குடி. -


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 4 May 2017 - 6:54

அரனின் அணிகலனாக விளங்கும் அரவம்,
தனக்கு வந்த இடரை நீக்கியதற்கு நன்றிக் கடனாக
ஓர் ஊரில் எவரையும் தீண்டமாட்டேன் என்று வாக்குக்
கொடுத்து, அதை இன்றளவும் நிறைவேற்றி வருகிறது.
இந்தத் தலம், நாகமுகுந்தன்குடி.
-
அக்காலத்தில் வில்வவன க்ஷேத்திரமாகத் திகழ்ந்திருந்த
இந்த வனப்பகுதியில் பல்வேறு உயிரினங்கள் வாழ்ந்து
வந்தன. ஒருநாள் அங்கு வந்த வேடன் ஒருவன் வானரம்
ஒன்றைப் பிடிக்க எண்ணினான்.
-
ஆனால் அது வேகமாகத் தாவிச் சென்று ஒரு வில்வ
மரத்தின் உச்சியில் போய் உட்கார்ந்து கொண்டது. அதை
எப்படியாவது பிடித்துச் செல்ல வேண்டும் என்ற
நோக்கத்தில் மரத்தின் கீழ் காத்திருந்த வேடன், களைப்பின்
மிகுதியால் கண்ணயர்ந்தான்.
-
இருந்தாலும் அவன் மேல் கொண்ட அச்சத்தால் வானரம்
மரத்தை விட்டு கீழே இறங்காமல் வில்வ இலைகளை
ஒவவொன்றாய்க் கீழே போட்டபடியே இருந்தது.
-
பொழுது விடிந்தவுடன் வேடன் அங்கிருந்து வெளியேறினான்.
பின்னர் கீழே இறங்கி வந்த வானரம், கீழே கிடந்த வில்வ
இலைகளுக்கு மத்தியில் அற்புத ஒளியுடன் லிங்கம் ஒன்று
இருப்பதைக் கண்டு அதை வழிபட, அங்கே இறைவன் தோன்றி,
என்னை பூஜித்ததன் பலனாய் நீ மறுபிறவியில்
முசுகுந்த சக்கரவர்த்தியாய் நாட்டை ஆள்வாய் என்று கூறி
மறைந்தார்.
-
--------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 4 May 2017 - 6:55


-
வானரம், முசுகுந்த சக்கரவர்த்தியாய் அவதரிக்கக் காரணமாக
விளங்கிய தலம் முசுகுந்தன்குடி என அழைக்கப்பட்டு,
பின்னர் நாக முகுந்தன் குடி என்றானது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய முப்பெருமை கொண்ட
இவ்வூரில் அருள்பாலிக்கும் இறைவன் நாகநாதர் என
அழைக்கப்படுகிறார். சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு
இக்கோயிலில் நடந்ததாக ஓர் அற்புத சம்பவம் சொல்லப்
படுகிறது.

அப்போது தினமும் கோயில் வளாகத்திற்கு பெரிய நாகம்
ஒன்று சர்வ சாதாரணமாக வருவதும் போவதுமாக இருந்து
வந்தது. திடீரென சில நாட்கள் அந்த நாகம் யாருடைய
கண்ணிலும் தென்படவில்லை. நாட்கள் நகர்ந்தன.

ஒருநாள் அந்தக் கோயில் அர்ச்சகர் கனவில் நாகம் தோன்றி,
உடலெங்கும் இலந்தை முள் குத்தி நகர முடியாமல் கோயில்
அருகேயுள்ள புதருக்குள் சுருண்டு கிடக்கிறேன்.

இரைதேடி அலையவும் முடியவில்லை. என்னை இந்த
இக்கட்டிலிருந்து மீட்டுவிட்டால், இனி எக்காலத்திலும்
உங்கள் ஊரில் யாரையும் அரவம் தீண்டாது இது சத்தியம்
என்று சொல்லி மறைந்ததாம்.

மறுநாள் குறிப்பிட்ட அந்த புதரை அர்ச்சகர் விலக்கிப்
பார்க்கும்போது, உள்ளே சோர்வாக நாகம் சுருண்டுக்
கிடப்பதைக் கண்டார். உடனே அதன் உடலில் தைத்திருந்த
முட்களை எடுத்துவிட, மீண்டும் அது சுதந்திரமாக
அங்கிருந்து நகர்ந்து போனதாம்.

அன்று நாகம் கொடுத்த சத்தியப்படி இன்றுவரை
நாகமுகுந்தன்குடியில் அரவம் எவரையும் தீண்டியது
இல்லையாம்.
-
------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 4 May 2017 - 6:55


நாகத்தின் அற்புதம் குறித்துச் சொல்லப்படும் மற்றொரு
சம்பவமும் உள்ளத. ஒரு சமயம் இரவு நேரத்தில் இந்தக்
கோயிலுக்குள் நுழைந்த திருடர்கள் பூஜை சாமான்களை
எடுத்துக் கொண்டு போய்விட்டார்களாம். மறுநாள் காலையில்
பூஜை சாமான்கள் திருடுபோய் விட்டதைக் கண்டு
அதிர்ச்சியடைந்த அர்ச்சகர், ஊர்ப் பெரியவரிடம் முறையிட்டார்.

பலரிடம் விசாரித்தும் இது குறித்த எந்தவொரு தடயமும்
கிடைக்கவில்லை. இந்நிலையில் சில நாட்களுக்குப் பிறகு
ஒரு நாள் கோயிலைத் திறந்த அர்ச்சகருக்கு ஓர் ஆச்சர்யம்
காத்திருந்தது.

ஆம்! திருடு போன பொருட்கள் எல்லாம் பத்திரமாக அங்கே
திரும்பக் கொண்டு வந்து வைக்கப்பட்டிருந்தன. கூடவே
ஒரு கடிதமும்இருந்தது.

'நாகநாதர் கோயில் சாமான்களை களவாடிப் போன நாள்
முதல் எங்கள் வீட்டில் நிம்மதி இல்லை. இரவில் தூங்க
ஆரம்பித்ததும் வீடு பூராவும் பாம்புகள் படையெடுத்து வந்து
அங்கும் இங்கும் ஓட ஆரம்பித்து விடுவது போன்ற கனவுகள்
வருகின்றன. சிவன் சொத்தை திருடிக் கொண்டு வந்ததால்
தான் இந்த நிலை என்பதை நாங்கள் பரிபூரணமாக உணர்ந்து
கொண்டோம்.

ஆகவே, கோயில் சாமான்களை பத்திரமாக திரும்பக்
கொண்டு வந்து ஒப்படைத்து விட்டுச் செல்கிறோம்' என
அக்கடிதத்தில் குறிப்பிடப் பட்டிருந்தது.
-
---------------------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 4 May 2017 - 6:55



ஊருக்கு வடகிழக்கே ஊருணிக் கரையில் மேற்குப் பார்த்த
வண்ணம் உயரமான மதிற்சுவருடன் கோயில் அமைந்துள்ளது.
பிரதான வாசல் தாண்டியதும் விஸ்தாரமான பிராகாரச் சுற்று
காணப்படுகிறது. பலிபீடம், நந்தியைத் தொடர்ந்து மகா
மண்டபத்தின் முகப்பில் சாளக்கோபுரமும் அர்த்த மண்டபம்,
கருவறை ஆகியவையும் அற்புதமான வேலைப்பாடுடன்
உருவாக்கப் பட்டுள்ளதைக் காணலாம்.

அர்த்த மண்டப வாசல் வடபுறம் உள்ள தூணில் ஆதியில்
வில்வ வனத்தில் எழுந்தருளி காட்சி தந்த லிங்கேஸ்வர
மூர்த்தியை முசுகுந்தன் வானரவடிவில் பூஜை செய்து
கொண்டிருக்கும் நிகழ்ச்சி புடைப்புச் சிற்பமாக வடிக்கப்
பட்டுள்ளது.

கருவறை மூலவராக நாகநாதர் லிங்க வடிவில்
எழுநதருளியுள்ளார். பெயரில் நாகம் இருப்பதால் இவரை
வணங்கினால் நாகதோஜம் நீங்கும் என்பது நம்பிக்கை
சுவாமி சந்நதியின் வடபுறம் தீர்த்தக் கிணறு உள்ளது.
தலவிருட்சமான மாவிலங்கை பிராகாரச் சுற்றில்
செழித்தோங்கி நிற்கிறது.

சௌந்தர நாயகி அம்பாள் தனிசந்நதியில், பெயருக்கு
ஏற்றவாறு அழகு ரூபிணியாக தரிசனம் தருகிறாள்.
மகா மண்டபம் அர்த்த மண்டபம் கருவறை என அம்பாள்
சந்நதி கலைநயத்துடன் விளங்குகிறது.

பிராகாரச் சுற்றில் கன்னி மூலை கணபதி, சுப்பிரமணியர்,
சண்டிகேஸ்வரர், பைரவர், சூரியன் சந்நதிகள் அமைந்துள்ளன.

ஆலயம் பிற்காலப் பாண்டிய மன்னர்கள் ஆட்சிக் காலத்தில்,
அதாவது கி.பி. பதிமூன்றாம் நூற்றாண்டு காலகட்டத்தைச்
சேர்ந்ததாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. ஆனால்
இதுகுறித்து முழுமையான தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

சித்திரை தமிழ் வருடப் பிறப்பு, வைகாசி விசாகம், ஆடி
வௌ்ளிக் கிழமைகளில் அம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம் குத்து
விளக்கு வழிபாடு, நவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம்,
திருக்கார்த்திகை, தனுர்மாத சிறப்பு பூஜை, தைப்பொங்கல்,
சிவராத்திரி, பங்குனி உத்திரம், சித்திரை வருடப் பிறப்பு,
பிரதோஷம் ஆகியவை இங்கு விமர்சையாகக் கொண்டடப்
படுகிறது.

நாகதோஷம் உள்ளவர்கள் மட்டுமன்றி வாழ்வில் சந்தோஷம்
நிலவவேண்டும் என விரும்பும் எல்லோருமே ஒருமுறை
நாகமுகுந்தன்குடி சென்று நாகநாதரை வழிபட்டு வரலாமே!

எங்கே இருக்கு: சிவகங்கை - இளையான்குடி நெடுஞ்சாலையில்,
புதுக்குளம் பஸ் ஸ்டாப்பில் இறங்கி 1 கி.மீ. தூரம் நடந்து
சென்றால் நாகமுகுந்தன் குடியை அடையலாம்.
-

தரிசன நேரம்: காலை 8.30 - 12.30 மாலை 4.30 - 8.00
-
-------------------------------------

- வெ. கணேசன்
நன்றி- குமுதம் பக்தி


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக