புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆடியில் கூழ் ஊற்றுவது ஏன்? Poll_c10ஆடியில் கூழ் ஊற்றுவது ஏன்? Poll_m10ஆடியில் கூழ் ஊற்றுவது ஏன்? Poll_c10 
32 Posts - 56%
heezulia
ஆடியில் கூழ் ஊற்றுவது ஏன்? Poll_c10ஆடியில் கூழ் ஊற்றுவது ஏன்? Poll_m10ஆடியில் கூழ் ஊற்றுவது ஏன்? Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
ஆடியில் கூழ் ஊற்றுவது ஏன்? Poll_c10ஆடியில் கூழ் ஊற்றுவது ஏன்? Poll_m10ஆடியில் கூழ் ஊற்றுவது ஏன்? Poll_c10 
1 Post - 2%
rajuselvam
ஆடியில் கூழ் ஊற்றுவது ஏன்? Poll_c10ஆடியில் கூழ் ஊற்றுவது ஏன்? Poll_m10ஆடியில் கூழ் ஊற்றுவது ஏன்? Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஆடியில் கூழ் ஊற்றுவது ஏன்? Poll_c10ஆடியில் கூழ் ஊற்றுவது ஏன்? Poll_m10ஆடியில் கூழ் ஊற்றுவது ஏன்? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆடியில் கூழ் ஊற்றுவது ஏன்? Poll_c10ஆடியில் கூழ் ஊற்றுவது ஏன்? Poll_m10ஆடியில் கூழ் ஊற்றுவது ஏன்? Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
ஆடியில் கூழ் ஊற்றுவது ஏன்? Poll_c10ஆடியில் கூழ் ஊற்றுவது ஏன்? Poll_m10ஆடியில் கூழ் ஊற்றுவது ஏன்? Poll_c10 
294 Posts - 44%
mohamed nizamudeen
ஆடியில் கூழ் ஊற்றுவது ஏன்? Poll_c10ஆடியில் கூழ் ஊற்றுவது ஏன்? Poll_m10ஆடியில் கூழ் ஊற்றுவது ஏன்? Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
ஆடியில் கூழ் ஊற்றுவது ஏன்? Poll_c10ஆடியில் கூழ் ஊற்றுவது ஏன்? Poll_m10ஆடியில் கூழ் ஊற்றுவது ஏன்? Poll_c10 
17 Posts - 3%
prajai
ஆடியில் கூழ் ஊற்றுவது ஏன்? Poll_c10ஆடியில் கூழ் ஊற்றுவது ஏன்? Poll_m10ஆடியில் கூழ் ஊற்றுவது ஏன்? Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
ஆடியில் கூழ் ஊற்றுவது ஏன்? Poll_c10ஆடியில் கூழ் ஊற்றுவது ஏன்? Poll_m10ஆடியில் கூழ் ஊற்றுவது ஏன்? Poll_c10 
9 Posts - 1%
jairam
ஆடியில் கூழ் ஊற்றுவது ஏன்? Poll_c10ஆடியில் கூழ் ஊற்றுவது ஏன்? Poll_m10ஆடியில் கூழ் ஊற்றுவது ஏன்? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆடியில் கூழ் ஊற்றுவது ஏன்? Poll_c10ஆடியில் கூழ் ஊற்றுவது ஏன்? Poll_m10ஆடியில் கூழ் ஊற்றுவது ஏன்? Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆடியில் கூழ் ஊற்றுவது ஏன்? Poll_c10ஆடியில் கூழ் ஊற்றுவது ஏன்? Poll_m10ஆடியில் கூழ் ஊற்றுவது ஏன்? Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ஆடியில் கூழ் ஊற்றுவது ஏன்? Poll_c10ஆடியில் கூழ் ஊற்றுவது ஏன்? Poll_m10ஆடியில் கூழ் ஊற்றுவது ஏன்? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆடியில் கூழ் ஊற்றுவது ஏன்?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82281
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 06, 2017 4:24 am

ஆடி மாதம் பூமாதேவி அவதரித்த மாதமாகவும் 
கூறப்படுகிறது.

கிராம தெய்வங்களுக்கு ஆடி மாதத்தில் சிறப்பு 
வழிபாடுகள் நடத்துவதும், கோயில்களில் கூழ் 
ஊற்றுவதும் வழக்கம்.

சூரியன் தன் கதிர்வீச்சு திசையை ஆறு மாதங்களுக்கு 
ஒருமுறை மாற்றுகிறது.அதன்படி ஆடி மாதத்தில் 
சூரிய கதிர்கள் திசை மாறுகிறது. 

இந்தியாவைப் பொறுத்தவரை உஷ்ணம் நிறைந்த 
கோடைக் காலம் ஈரப்பதம் நிறைந்த குளிர்காலமாக 
மாறுகிறது. இத்தருணத்தில் வைரஸ் போன்ற 
கிருமிகளால் ஏற்படும் நோய்கள் அதிக அளவில் 
பரவும் என்பது அறிவியல் சொல்லும் செய்தி.

அதன்படி ஆடி மாதத்தில் சின்ன அம்மை தட்டம்மை 
அதிக அளவில் பரவும் அப்படி வரக்கூடிய கிருமிகளுக்கு 
நோய் எதிர்ப்புச் சக்தியை கொடுப்பதற்கே கேழ்வரகு 
கூழ் ஊற்றும் வழக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்தக் கூழ் உடலை குளிர்விக்கும் இரும்பு, கால்சியம் 
மற்றும் நார்ச்சத்து கொண்டது. அம்மைகளில் இருந்து 
காக்கும் மாரியம்மனை வணங்கி கூழ் ஊற்றுவதன்
 மூலம் உஷ்ணத்தில் இருந்து உடம்பை காக்கலாம்.

 மேலும் கூழ் பானையைச் சுற்றி மஞ்சளும் 
வேப்பிலையும் வைப்பார்கள் வேப்பிலையும், மஞ்சளும் 
கிருமி நாசினி. நோய் பரவாமல் தடுக்கும் நம் 
முன்னோரின் பழக்கங்கள் கண்மூடித்தனமானவை 
அல்ல. 
அர்த்தமுள்ளவை என்பதை இதன் மூலம் அறியலாம்.

ஆடி மாதத்தில் 18ம் நாள் ஆடிப்பெருக்கு 
கொண்டாடப்படுவதற்கும் ஓர் ஐதிகம் உண்டு.

ஆடி மாதத்தில் காவிரி ஆறு பிரவாகமாக காட்சி தரும். 
காவிரி அம்மன் மசக்கை கொண்டிருப்பதான ஐதிகப்படி 
ஆடி பதினெட்டம்நாள் சித்ரான்னங்கள் தயாரித்து
 நிவேதனம் செய்யப்படும். 

அன்றைய தினம் காவேரி அன்னைக்கு கருகமணி, 
காதோலை, மஞ்சள், குங்குமம், விளக்கு ஆகியவற்றை 
சமர்ப்பித்தால் வாழ்க்கை ஆரோக்கியமாகவும், செல்வ 
செழிப்போடும் அமையும் என்பது நம்பிக்கை.
-
--------------------------------------

- வி. திவாகரன், திருவாரூர்
 குமுதம் பக்தி செய்திகள்:

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 06, 2017 6:54 am

பொன்னியின் செல்வன் புதினத்தில் , முதல் அத்தியாயம் " புதுவெள்ளம் " அதில் ஆடிப் பதினெட்டாம் பெருக்கைக் கல்கி கீழ்கண்டவாறு வருணிக்கிறார் .


ஆடிப் பதினெட்டாம் பெருக்கன்று சோழநாட்டு நதிகளிலெல்லாம் வெள்ளம் இருகரையும்தொட்டுக் கொண்டு ஓடுவது வழக்கம். அந்த நதிகளிலிருந்து தண்ணீர் பெறும் ஏரிகளும் பூரணமாக நிரம்பிக் கரையின் உச்சியைத் தொட்டுக் கொண்டு அலைமோதிக் கொண்டிருப்பது வழக்கம். வட காவேரி என்று பக்தர்களாலும் கொள்ளிடம் என்று பொது மக்களாலும் வழங்கப்பட்ட நதியிலிருந்து வடவாற்றின் வழியாகத் தண்ணீர் வந்து வீர நாராயண ஏரியில் பாய்ந்து அதை ஒரு பொங்கும் கடலாக ஆக்கியிருந்தது. அந்த ஏரியின் எழுபத்து நான்கு கணவாய்களின் வழியாகவும் தண்ணீர் குமுகுமுவென்று பாய்ந்து சுற்றுப் பக்கத்தில் நெடுந்தூரத்துக்கு நீர்வளத்தை அளித்துக் கொண்டிருந்தது. அந்த ஏரித் தண்ணீரைக் கொண்டு கண்ணுக்கெட்டிய தூரம் கழனிகளில் உழவும் விரை தௌியும் நடவும் நடந்து கொண்டிருந்தன. உழுது கொண்டிருந்த குடியானவர்களும் நடவு நட்டுக் கொண்டிருந்த குடியானப் பெண்களும் இனிய இசைகளில் குதூகலமாக அங்கங்கே பாடிக் கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் கேட்டுக் கொண்டு வந்தியத்தேவன் களைத்திருந்த குதிரையை விரட்டாமல் மெதுவாகவே போய்க் கொண்டிருந்தான். ஏரிக்கரை மீது ஏறியதிலிருந்து அந்த ஏரிக்கு எழுபத்துநாலு கணவாய்கள் உண்டு என்று சொல்லப்படுவது உண்மைதானா என்று அறிந்து கொள்ளும் நோக்கத்துடன் அவன் கணவாய்களை எண்ணிக் கொண்டே வந்தான்.ஏறக்குறைய ஒன்றரைக் காத தூரம் அவன் அந்த மாபெரும் ஏரிக்கரையோடு வந்த பிறகு எழுபது கணவாய்களை எண்ணியிருந்தான்.



அன்று பதினெட்டாம் பெருக்குத் திருநாள் அல்லவா? பக்கத்துக் கிராமங்களிலிருந்து, தந்த நிறத் தென்னங்குருத்துகளால் சப்பரங்கள் கட்டி இழுத்துக் கொண்டு கும்பல் கும்பலாக மக்கள் அங்கே வந்து கொண்டிருந்தார்கள். ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் சில வயோதிகர்களும் கூடப் புதிய ஆடைகள் அணிந்து விதவிதமான அலங்காரங்கள் செய்து கொண்டு வந்திருந்தார்கள். பெண்களின் கூந்தல்களைத் தாழம்பூ, செவந்திப்பூ, மல்லிகை, முல்லை, இருவாட்சி, செண்பகம் முதலிய மலர்கள் கொத்துக் கொத்தாய் அலங்கரித்தன. கூட்டாஞ்சோறும், சித்திரான்னமும் எடுத்துக் கொண்டு பலர் குடும்பம் குடும்பமாக வந்திருந்தார்கள். சிலர் ஏரிக்கரையில் தண்ணீர் ஓரமாக நின்று கொண்டு, சித்திரான்னம் முதலியவற்றைக் கமுகு மட்டைகளில் போட்டுக் கொண்டு உண்டார்கள். இன்னும் சில தைரியசாலிகள் சிறிது தூரம் தண்ணீரில் நடந்து சென்று வடவாற்றங்கரையை அடைந்து அங்கு நின்றபடி சாப்பிட்டார்கள். குழந்தைகள் சிலர் சாப்பிட்ட கமுகு மட்டைகளைக் கணவாய்களின் ஓரமாய் எறிய, அந்த மட்டைகள் கணவாய்களின் வழியாக ஏரிக்கரைக்கு வெளியே விழுந்தடித்து ஓடி வருவதைக் கண்டு கைகொட்டிச் சிரித்தார்கள். ஆடவர்களில் சில வம்புக்காரர்கள் தங்கள் காதலிகளின் கூந்தல்களில் சூடியிருந்த மலர்களை அவர்கள் அறியாமல் எடுத்துக் கணவாய் ஓரத்தில் விட்டு ஏரிக்கரைக்கு மறு பக்கத்தில் அவை ஓடி வருவதைக் கண்டு மகிழ்ந்தார்கள். இதையெல்லாம் பார்த்துக் கொண்டு சிறிது நேரம் வல்லவரையன் அங்கேயே நின்று கொண்டிருந்தான். அங்கு நின்ற பெண்களில் இனிய குரலையுடைய சிலர் பாடுவதையும் காது கொடுத்துக் கேட்டான். அவர்கள் ஓடப்பாட்டும், வெள்ளப் பாட்டும், கும்மியும், சிந்தும் பாடினார்கள்.


இந்த ஆண்டு பதினெட்டாம் பெருக்கன்று காவிரியில் சொட்டுத் தண்ணீர் இல்லை . கேன் தண்ணீரைக் கொண்டு மக்கள் பதினெட்டாம் பெருக்கைக் கொண்டாடியதாக செய்திகள் வந்தன .

" எப்படி இருந்த நான் , இப்படி ஆயிட்டேன் "  என்று காவிரி புலம்புவது நம் காதில் விழத்தான் செய்கிறது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Aug 06, 2017 6:47 pm

ஆடியில் கூழ் ஊற்றுவது ஏன்? 1571444738 மீண்டும் சந்திப்போம்
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக