புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யானைகளின் வருகை 76: நாடி, நரம்பு, புத்தி, ரத்தம், சதை, எலும்பு!  Poll_c10யானைகளின் வருகை 76: நாடி, நரம்பு, புத்தி, ரத்தம், சதை, எலும்பு!  Poll_m10யானைகளின் வருகை 76: நாடி, நரம்பு, புத்தி, ரத்தம், சதை, எலும்பு!  Poll_c10 
31 Posts - 53%
heezulia
யானைகளின் வருகை 76: நாடி, நரம்பு, புத்தி, ரத்தம், சதை, எலும்பு!  Poll_c10யானைகளின் வருகை 76: நாடி, நரம்பு, புத்தி, ரத்தம், சதை, எலும்பு!  Poll_m10யானைகளின் வருகை 76: நாடி, நரம்பு, புத்தி, ரத்தம், சதை, எலும்பு!  Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
யானைகளின் வருகை 76: நாடி, நரம்பு, புத்தி, ரத்தம், சதை, எலும்பு!  Poll_c10யானைகளின் வருகை 76: நாடி, நரம்பு, புத்தி, ரத்தம், சதை, எலும்பு!  Poll_m10யானைகளின் வருகை 76: நாடி, நரம்பு, புத்தி, ரத்தம், சதை, எலும்பு!  Poll_c10 
2 Posts - 3%
Manimegala
யானைகளின் வருகை 76: நாடி, நரம்பு, புத்தி, ரத்தம், சதை, எலும்பு!  Poll_c10யானைகளின் வருகை 76: நாடி, நரம்பு, புத்தி, ரத்தம், சதை, எலும்பு!  Poll_m10யானைகளின் வருகை 76: நாடி, நரம்பு, புத்தி, ரத்தம், சதை, எலும்பு!  Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
யானைகளின் வருகை 76: நாடி, நரம்பு, புத்தி, ரத்தம், சதை, எலும்பு!  Poll_c10யானைகளின் வருகை 76: நாடி, நரம்பு, புத்தி, ரத்தம், சதை, எலும்பு!  Poll_m10யானைகளின் வருகை 76: நாடி, நரம்பு, புத்தி, ரத்தம், சதை, எலும்பு!  Poll_c10 
1 Post - 2%
jairam
யானைகளின் வருகை 76: நாடி, நரம்பு, புத்தி, ரத்தம், சதை, எலும்பு!  Poll_c10யானைகளின் வருகை 76: நாடி, நரம்பு, புத்தி, ரத்தம், சதை, எலும்பு!  Poll_m10யானைகளின் வருகை 76: நாடி, நரம்பு, புத்தி, ரத்தம், சதை, எலும்பு!  Poll_c10 
1 Post - 2%
சிவா
யானைகளின் வருகை 76: நாடி, நரம்பு, புத்தி, ரத்தம், சதை, எலும்பு!  Poll_c10யானைகளின் வருகை 76: நாடி, நரம்பு, புத்தி, ரத்தம், சதை, எலும்பு!  Poll_m10யானைகளின் வருகை 76: நாடி, நரம்பு, புத்தி, ரத்தம், சதை, எலும்பு!  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யானைகளின் வருகை 76: நாடி, நரம்பு, புத்தி, ரத்தம், சதை, எலும்பு!  Poll_c10யானைகளின் வருகை 76: நாடி, நரம்பு, புத்தி, ரத்தம், சதை, எலும்பு!  Poll_m10யானைகளின் வருகை 76: நாடி, நரம்பு, புத்தி, ரத்தம், சதை, எலும்பு!  Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
யானைகளின் வருகை 76: நாடி, நரம்பு, புத்தி, ரத்தம், சதை, எலும்பு!  Poll_c10யானைகளின் வருகை 76: நாடி, நரம்பு, புத்தி, ரத்தம், சதை, எலும்பு!  Poll_m10யானைகளின் வருகை 76: நாடி, நரம்பு, புத்தி, ரத்தம், சதை, எலும்பு!  Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
யானைகளின் வருகை 76: நாடி, நரம்பு, புத்தி, ரத்தம், சதை, எலும்பு!  Poll_c10யானைகளின் வருகை 76: நாடி, நரம்பு, புத்தி, ரத்தம், சதை, எலும்பு!  Poll_m10யானைகளின் வருகை 76: நாடி, நரம்பு, புத்தி, ரத்தம், சதை, எலும்பு!  Poll_c10 
13 Posts - 4%
prajai
யானைகளின் வருகை 76: நாடி, நரம்பு, புத்தி, ரத்தம், சதை, எலும்பு!  Poll_c10யானைகளின் வருகை 76: நாடி, நரம்பு, புத்தி, ரத்தம், சதை, எலும்பு!  Poll_m10யானைகளின் வருகை 76: நாடி, நரம்பு, புத்தி, ரத்தம், சதை, எலும்பு!  Poll_c10 
9 Posts - 3%
Jenila
யானைகளின் வருகை 76: நாடி, நரம்பு, புத்தி, ரத்தம், சதை, எலும்பு!  Poll_c10யானைகளின் வருகை 76: நாடி, நரம்பு, புத்தி, ரத்தம், சதை, எலும்பு!  Poll_m10யானைகளின் வருகை 76: நாடி, நரம்பு, புத்தி, ரத்தம், சதை, எலும்பு!  Poll_c10 
4 Posts - 1%
Rutu
யானைகளின் வருகை 76: நாடி, நரம்பு, புத்தி, ரத்தம், சதை, எலும்பு!  Poll_c10யானைகளின் வருகை 76: நாடி, நரம்பு, புத்தி, ரத்தம், சதை, எலும்பு!  Poll_m10யானைகளின் வருகை 76: நாடி, நரம்பு, புத்தி, ரத்தம், சதை, எலும்பு!  Poll_c10 
3 Posts - 1%
jairam
யானைகளின் வருகை 76: நாடி, நரம்பு, புத்தி, ரத்தம், சதை, எலும்பு!  Poll_c10யானைகளின் வருகை 76: நாடி, நரம்பு, புத்தி, ரத்தம், சதை, எலும்பு!  Poll_m10யானைகளின் வருகை 76: நாடி, நரம்பு, புத்தி, ரத்தம், சதை, எலும்பு!  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
யானைகளின் வருகை 76: நாடி, நரம்பு, புத்தி, ரத்தம், சதை, எலும்பு!  Poll_c10யானைகளின் வருகை 76: நாடி, நரம்பு, புத்தி, ரத்தம், சதை, எலும்பு!  Poll_m10யானைகளின் வருகை 76: நாடி, நரம்பு, புத்தி, ரத்தம், சதை, எலும்பு!  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
யானைகளின் வருகை 76: நாடி, நரம்பு, புத்தி, ரத்தம், சதை, எலும்பு!  Poll_c10யானைகளின் வருகை 76: நாடி, நரம்பு, புத்தி, ரத்தம், சதை, எலும்பு!  Poll_m10யானைகளின் வருகை 76: நாடி, நரம்பு, புத்தி, ரத்தம், சதை, எலும்பு!  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
யானைகளின் வருகை 76: நாடி, நரம்பு, புத்தி, ரத்தம், சதை, எலும்பு!  Poll_c10யானைகளின் வருகை 76: நாடி, நரம்பு, புத்தி, ரத்தம், சதை, எலும்பு!  Poll_m10யானைகளின் வருகை 76: நாடி, நரம்பு, புத்தி, ரத்தம், சதை, எலும்பு!  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யானைகளின் வருகை 76: நாடி, நரம்பு, புத்தி, ரத்தம், சதை, எலும்பு!


   
   

Page 1 of 2 1, 2  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 14, 2017 6:30 am

யானைகளின் வருகை 76: நாடி, நரம்பு, புத்தி, ரத்தம், சதை, எலும்பு!  5n2MixLvROqomL9ei1n6+76y1jpg
ஒரு விஷயம் நடப்பதை சுட்டிக்காட்டுவதை விட, அந்த விஷயத்தை சரிசெய்வதற்கான தீர்வை இங்கு சொல்வதில்தான் நிறைய சிக்கல்கள் உள்ளன. ஏனென்றால் நேற்று பிறந்த வளர்ந்து நிற்கும் சிறு குழந்தையும் கூட ஆலோசனை என்பது அட்வைஸ் (புத்திபுகட்டுதல்) போலவே எடுத்துக் கொள்கிறது.

இந்த சமூகத்தில் யாருக்கும் அட்வைஸ் என்பது பிடிக்காத விஷயம். ஏறத்தாழ தீர்வுகளும் கூட அப்படியே! இதை பெரிசா சொல்றானே, இவனுக்கு இதைப்பத்தி என்ன தெரியும்? ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் போய் டாக்டர் பட்டம் வாங்கி வந்தானா? என்பது போல கேட்பது இயல்பானதாக இருக்கிறது.
இங்கே நாம் நிறைய அனுபவங்களை சேகரித்து வைத்துக் கொண்டு, அதில் சிறு அளவில் சாறாக குறிப்பிட்ட ஒரு விஷயத்தில் தீர்வு மட்டும் சொல்லிவிட்டால், அந்தத் தீர்வு கொச்சைப்படுத்தப்பட்டு, கிடைத்த அனுபவ அறிவையும் சாகடிக்க முயற்சிகள் நடக்கிறது.
நன்றி
தி இந்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 14, 2017 6:31 am

உதாரணமாக இங்கே யானைகள் சம்பந்தப்பட்ட ஓரிரு சம்பவங்களை மட்டும் எடுத்துக்கொண்டு தீர்வுகளுக்குள் நுழைவோம். மேட்டுப்பாளையம் வனம் சார்ந்த நெல்லித்துறை கிராமத்தில் ஒரு ஆண் யானை உயர் அழுத்த மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவத்தை அத்தியாயம் 69-ல் சொல்லியிருந்தோம்.

ஒரு காட்டு யானை அங்குள்ள தோட்டங்களில் புகுந்து அழிச்சாட்டியம் செய்கிறது. அதை ஓரிரு வாரகாலம் விரட்டி காட்டுக்குள் விடுகிறார்கள் மக்கள். அதையும் மீறி ஒருநாள் ஒரு பாக்குத்தோப்புக்குள் புகுந்து, பாக்கு மரங்களை முட்டுகிறது. அதில் ஒரு பாக்கு மரம் உயரத்தில் செல்லும் மின்கம்பியில் பட்டு மின்சாரத்தை பாய்ச்சுகிறது. அதில் கீழிருந்த யானை உடல் கருகி உயிரை விடுகிறது. இவ்வளவுதான் நடந்த சம்பவம்.

ஆனால் இதற்கு முன்பே 50 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் பில்லூர் அணை கட்டப்பட்டிருக்கிறது. அதற்கு மேலே மலை முகடுகளில் பல அணைகள் கட்டப்பட்டுள்ளன. அதில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அசுர நகர வளர்ச்சிக்கேற்ப இப்பகுதியில் ஓடும் பவானியிலிருந்து குடிநீர் திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. அதன் ராட்சஷ குழாய்கள் காடுகளில் பயணிக்கின்றன.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 14, 2017 6:31 am

அதேபோல் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தைக் கொண்டு போகவும், உயர் அழுத்த மின் கம்பிகள், உயர் மின்கோபுரங்கள், மின் கம்பங்கள் மூலம் காடுகளுக்குள் கொண்டு செல்லப்படுவதும் விவரிக்கப்பட்டுள்ளது. இதுவெல்லாம் மனித தேவைக்கான மாற்றம். விஞ்ஞானத்தின் வளர்ச்சி. இதனூடே மின் கம்பிகள் வரும் பகுதியில் யானைகள் வரக்கூடாது என்று உத்தரவு போட முடியாது.

ஆனால் மனிதனுக்கு போட முடியும். அப்படி உருவானவைதான் மின் சட்டங்கள், விதிமுறைகள் எல்லாமே. உயர் அழுத்த மின்சாரம் கொண்டு செல்லும் மின் கம்பிகள் உள்ள பாதைகளில் இருமருங்கும் குறிப்பிட்ட இடைவெளியில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளக்கூடாது, தென்னை, பனை, பாக்கு போன்ற மரங்கள் வளர்க்கக்கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 14, 2017 6:33 am

அதிலும் பாக்கு மரங்கள் என்பது இயல்பாகவே வளைந்து கொடுப்பவை. ஒரு மரத்தில் காய் பறிப்பில் ஈடுபடுபவர்கள் இதில் அடுத்த மரத்திற்கு தாவும் போது கூட கிளையை அப்படியே ஸ்பிரிங் மாதிரி வளைத்தே பக்கத்தில் உள்ள மரத்திற்கு தாவுவதை, இந்த விவசாயத்தில் ஈடுபடுபவர்கள் அறிந்திருப்பர். அப்படிப்பட்ட பாக்கு மரத்தை மின் உற்பத்தி செய்யப்படும் மின் நிலையத்தின் பகுதியில், அந்த மின்சாரம் கொண்டு செல்லப்படும் பகுதியில் வைத்தால் என்ன ஆகும்?

சாதாரணமாக மழைநீர் அந்த கம்பியில் சொட்டினாலும், காற்றில் ஈரப்பதம் மிகுந்திருந்து, அதில் மின் கம்பியில் நீர் படிந்து கீழே விழும்போது அதில் கடத்தப்படும் மின்சாரம், சுற்றுப்புற ஈரப்பதத்தில் பாய்ந்து எப்படிப்பட்டவர்க்கும், மின் அதிர்வலைகளை ஏற்படுத்திவிடும். அந்த இடத்தில் பாக்கு மரம் இருந்து, அதில் யானை முட்டினால் அது என்ன கதிக்கு ஆளாகும்?
யானைகளின் வருகை 76: நாடி, நரம்பு, புத்தி, ரத்தம், சதை, எலும்பு!  FtNyhfkGRaGI6spYYpzE+76y2jpg

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 14, 2017 6:33 am

இது யானை செய்த தவறா? பாக்குமரங்கள் செய்த தவறா? இயற்கையின் சீற்றமா? மின்சாரத்தை கண்டுபிடித்த மனிதன். அதை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு போக அறிந்த மனிதன். அந்த மின்சாரத்தின் மூலம் தன் வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்ட மனிதகுலம், அதன் எதிர்வினை குறித்த அறிவும், அதை நடைமுறைப்படுத்தும் சிந்தனையும், நேர்மையும் கொண்டிருக்க வேண்டாமா? எனக்கு விதிமுறை தெரியாது; சட்டம் தெரியாது என்று சம்பந்தப்பட்டவர்கள் சொல்வார்களேயானால், பாக்கு மரத்தை அங்கே வளர்த்து, அதில் கிடைக்கும் லாப நட்டக்கணக்கை போடுவதற்கு மட்டும் எங்கிருந்து அறிவு கிடைத்தது?

சரி, அவருக்குத்தான் அறிவில்லை. இந்த மின்வடக்கம்பி செல்லும் வழியில் மரங்கள் இடிக்கிறதா? கம்பங்கள் பழுதாகியுள்ளதா? கம்பிகள் அறுந்து தொங்குகிறதா? வேறு வகையில் வழியில் மின்சாரக் கசிவு இருக்கிறதா? குறிப்பிட்ட மின்கம்பிகள் செல்லும் பாதையில் விதிமுறைப்படி இடைவெளியில் விவசாயம் செய்யப்படுகிறதா? கட்டுமானங்கள் இடைவெளி விட்டு நடக்கிறதா? என்றெல்லாம் கண்காணிக்கத்தானே மாதத்திற்கு ஒரு முறை மின்விநியோகத்தை பராமரிப்பு நாள் என்று நிறுத்துகிறார்கள்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 14, 2017 6:34 am

அந்த நாளில் அதை சரிபார்த்து சோதனை செய்ய வேண்டிய மின் ஊழியர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள். முழுமையாக சோதனை செய்ய ஊழியர் பற்றாக்குறை என்றால் அதை நியமிக்க வேண்டியவர்கள் யார்? அந்த அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அந்த அதிகாரிகள் ஆட்சியாளர்களுக்கு வேறு பணிவிடைகள் செய்து கொண்டிருந்தார்கள் என்றால், அந்த ஆட்சியாளர்களை தட்டிக் கேட்பவர்கள் யார்? அவர்களை தேர்ந்தெடுப்பவர்கள்தானே? சரி, இது வெறும் மின்துறை சம்பந்தப்பட்ட விஷயமா? என்றால் அதுவும் இல்லை.

இதே மின்கம்பி செல்லும் பாதையோரம் வனத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வனத்துறையினர் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களும் ரோந்து சென்று பார்க்க வேண்டியவர்கள்தானே? இப்படி பாக்கு மரங்கள் இருப்பதால் உயர் அழுத்த மின்கம்பியில் பட்டால் வனவிலங்குகளுக்கு சேதமாகும் என்பதை தன் துறை அதிகாரிகளுக்கு தெரிவித்து, அவர்கள் மாற்றுத்துறையான மின்வாரியத்துறைக்கு அறிவித்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டியதுதானே?

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 14, 2017 6:35 am

குறிப்பிட்ட விவசாயிகள் விதிமுறை மீறி பாக்குமரங்களை அந்த இடத்தில் வைத்திருப்பதை அறிந்து அவர்கள் மீது ஓரிரு முறையாவது காவல்துறை நடவடிக்கை எடுத்திருந்தால் அதைப் பார்த்தாவது மற்ற விவசாயிகள் சுதாரித்து, தன் பாதையை சரிசெய்திருப்பார்கள்தானே? சரி, இப்படியொரு விதிமுறையோ, சட்டதிட்டமோ இல்லையென்றாலும் கூட புதிய சட்டங்களை, சட்டத் திருத்தங்களை உருவாக்கிட வேண்டியதும் ஆட்சியாளர்களின் தலையாயப் பணிதானே?

இந்த ஒரு யானை இறந்த சம்பவத்திற்கே இத்தனை கேள்விகள், இத்தனை வியாக்கியான, தீர்வு வழிமுறைகள் என்றால் நாம் இதுவரை 75 அத்தியாயங்கள் வரை எத்தனை மனிதர்கள் யானைகள் மிதித்து இறந்ததையும், எத்தனை யானைகள் மனிதத் தவறுகளால் இறந்திருக்கின்றன என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளோம். அதற்கெல்லாம் எத்தனை வழிமுறைகள், எத்தனை தீர்வுகள், கருத்தோட்டங்களை சொல்லுவது? சொல்ல முடியும்?

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 14, 2017 6:36 am

இப்போது கோவை வனத்துறையை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த வனக்கோட்டத்தில் நடந்து வரும் யானை மனித மோதலை தடுக்கும் பொருட்டு களிறு என்றொரு திட்டத்தை கடந்த ஓரு வருட காலமாக செயல்படுத்தி வருகின்றனர் அதிகாரிகள். இதற்காக ரூ.1.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதன் மூலம் வனத்தை ஒட்டியுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் விவசாயிகள், வனத்துறை, உள்ளாட்சி மன்றங்களை பிணைத்து, இயற்கை மற்றும் சூழலியாளர்களை வைத்து கூட்டம் போடும் நிகழ்ச்சியை செய்கிறார்கள்.

யானைகள் மற்றும் வனவிலங்குகளின் அருமையை, தேவையை, அது வனத்தை காக்கும் விஷயங்களை விரிவாக எடுத்துச் சொல்லி, அந்த வனத்திற்கும், நம் வளத்திற்குமான தொடர்பை நம் மக்களுக்கு விழிப்புணர்வூட்டி, வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் எதை பயிரிடலாம். எதை பயிரிடக்கூடாது, எதைச் செய்தால் காட்டு விலங்குகளிடமிருந்து தப்பிக்கலாம். எதை செய்தததனால் அவை நம் ஊருக்குள் வருகின்றன போன்ற விஷயங்கள் வலியுறுத்தப்படுகின்றன. அந்தக் கூட்டத்திற்கு வருபவர்கள் அவரவர் வாழ்நிலையில் நின்றே பெரும்பாலும் பேசுகிறார்கள். தீர்வும் சொல்கிறார்கள்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 14, 2017 6:37 am

இப்படியான நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஊர், ஊராக நடக்கும்போது மனித-யானை மோதல் மெல்ல, மெல்ல தவிர்க்கப்பட்டு, தடுக்கப்பட்டுவிடும் என நம்புகிறார்கள். அது எப்படி சாத்தியமாகும்? இங்கே பாக்கு மரத்தில் முட்டி உயர் அழுத்த மின்சாரம் தாக்கி இறந்த யானையின் கதையை எந்த அளவுக்கு உயிரோட்டமாக, உணர்வுகள் ததும்ப எடுத்து சொல்கிறார்கள். அப்படியே சொன்னாலும் விவசாயிகளின் இடத்தில் நின்று, அதை புரியும்படி சொல்கிறார்களா? என்றெல்லாம் கேள்விகள் எழுகிறது.

மாறாக, ஒரு விவசாயி தன் தோட்டத்தில் ஒரு நாளில் நான்கைந்து கூலியாட்களை வைத்து, குடும்பத்தோடு இணைந்தும் ஆயிரம் தென்னை மர நாற்றுகளை நட்டுவிட்டார். இரவில் புகுந்த நூற்றுக்கணக்கான பன்றிக்கூட்டம் அதை ஒரே வேகத்தில் தோண்டியெடுத்து, நாற்றின் கீழுள்ள கிழங்குப்பகுதியை கடித்து குதறி விடுகிறது. அல்லது அந்த நாற்று சிறிது பெரிதாகி குருத்து விட்டு மினுக்கும்போது ஒரு யானைக்கூட்டம் வந்து பிடுங்கி குருத்தை மட்டும் சாப்பிட்டும், சாப்பிடாமல் அழித்துவிட்டு போனால் நிலைமை என்ன ஆகும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 14, 2017 6:38 am

யானைகளின் வருகை 76: நாடி, நரம்பு, புத்தி, ரத்தம், சதை, எலும்பு!  QuVGA5PoRyiqsW74l4TM+76y4jpg
அதுவே இரண்டுமே அனுபவப்பூர்வமான அறிவாக இருந்தால், அதுவும் ஒரே தளத்தில் (விவசாயி தளத்தில், சூழலியாளர்கள் தளத்தில், அதிகாரிகள் தளத்தில், ஆட்சியாளர்கள் தளத்தில் என பல தளங்கள்) இருந்தால் மட்டுமே இரண்டு ரக அனுபவ உணர்வுகள் சங்கமித்து தீர்க்கமான அறிவு செயலாற்றும்.

இந்தத் தொடரை வாசிக்கும் வாசகர்கள் ஒரு விஷயத்தை மற்ற வாசிப்பிலிருந்து உணர்ந்திருப்பார்கள் என்பதை நம்புகிறன். இத்தொடர் படிக்கும்போது மெல்ல, மெல்ல அது வாசிப்பு சுகத்தை தாண்டி, அவர்களின் அனுபவிப்பாகவே மாறிக் கொண்டிருக்கும் என்பதே அது.

அந்த அனுபவிப்பு ஒரு கட்டத்தில் அவர்கள் அனுபவித்ததாகவே உணர்ந்து, அதுவாகவே மாறிவிடும் சக்தி மிக்கதாகவும் மாறும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. அப்படியான மாற்றம் ஒவ்வொரு வாசகர்களுக்கும் முழுமையாக எட்டிய பின்புதான், இதற்கான தீர்வுகளை ஒவ்வொன்றாக சொல்லும்போது, அதுவும் அவரவர்களின் அனுபவிப்பாகவே உணர்வார்க

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக