புதிய பதிவுகள்
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
யாருக்கு வேண்டும் உண்மைகள்? Poll_c10யாருக்கு வேண்டும் உண்மைகள்? Poll_m10யாருக்கு வேண்டும் உண்மைகள்? Poll_c10 
54 Posts - 46%
ayyasamy ram
யாருக்கு வேண்டும் உண்மைகள்? Poll_c10யாருக்கு வேண்டும் உண்மைகள்? Poll_m10யாருக்கு வேண்டும் உண்மைகள்? Poll_c10 
48 Posts - 41%
prajai
யாருக்கு வேண்டும் உண்மைகள்? Poll_c10யாருக்கு வேண்டும் உண்மைகள்? Poll_m10யாருக்கு வேண்டும் உண்மைகள்? Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
யாருக்கு வேண்டும் உண்மைகள்? Poll_c10யாருக்கு வேண்டும் உண்மைகள்? Poll_m10யாருக்கு வேண்டும் உண்மைகள்? Poll_c10 
4 Posts - 3%
Jenila
யாருக்கு வேண்டும் உண்மைகள்? Poll_c10யாருக்கு வேண்டும் உண்மைகள்? Poll_m10யாருக்கு வேண்டும் உண்மைகள்? Poll_c10 
2 Posts - 2%
kargan86
யாருக்கு வேண்டும் உண்மைகள்? Poll_c10யாருக்கு வேண்டும் உண்மைகள்? Poll_m10யாருக்கு வேண்டும் உண்மைகள்? Poll_c10 
1 Post - 1%
jairam
யாருக்கு வேண்டும் உண்மைகள்? Poll_c10யாருக்கு வேண்டும் உண்மைகள்? Poll_m10யாருக்கு வேண்டும் உண்மைகள்? Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
யாருக்கு வேண்டும் உண்மைகள்? Poll_c10யாருக்கு வேண்டும் உண்மைகள்? Poll_m10யாருக்கு வேண்டும் உண்மைகள்? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
யாருக்கு வேண்டும் உண்மைகள்? Poll_c10யாருக்கு வேண்டும் உண்மைகள்? Poll_m10யாருக்கு வேண்டும் உண்மைகள்? Poll_c10 
1 Post - 1%
M. Priya
யாருக்கு வேண்டும் உண்மைகள்? Poll_c10யாருக்கு வேண்டும் உண்மைகள்? Poll_m10யாருக்கு வேண்டும் உண்மைகள்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யாருக்கு வேண்டும் உண்மைகள்? Poll_c10யாருக்கு வேண்டும் உண்மைகள்? Poll_m10யாருக்கு வேண்டும் உண்மைகள்? Poll_c10 
97 Posts - 56%
ayyasamy ram
யாருக்கு வேண்டும் உண்மைகள்? Poll_c10யாருக்கு வேண்டும் உண்மைகள்? Poll_m10யாருக்கு வேண்டும் உண்மைகள்? Poll_c10 
48 Posts - 28%
mohamed nizamudeen
யாருக்கு வேண்டும் உண்மைகள்? Poll_c10யாருக்கு வேண்டும் உண்மைகள்? Poll_m10யாருக்கு வேண்டும் உண்மைகள்? Poll_c10 
8 Posts - 5%
prajai
யாருக்கு வேண்டும் உண்மைகள்? Poll_c10யாருக்கு வேண்டும் உண்மைகள்? Poll_m10யாருக்கு வேண்டும் உண்மைகள்? Poll_c10 
6 Posts - 3%
Jenila
யாருக்கு வேண்டும் உண்மைகள்? Poll_c10யாருக்கு வேண்டும் உண்மைகள்? Poll_m10யாருக்கு வேண்டும் உண்மைகள்? Poll_c10 
4 Posts - 2%
Rutu
யாருக்கு வேண்டும் உண்மைகள்? Poll_c10யாருக்கு வேண்டும் உண்மைகள்? Poll_m10யாருக்கு வேண்டும் உண்மைகள்? Poll_c10 
3 Posts - 2%
Baarushree
யாருக்கு வேண்டும் உண்மைகள்? Poll_c10யாருக்கு வேண்டும் உண்மைகள்? Poll_m10யாருக்கு வேண்டும் உண்மைகள்? Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
யாருக்கு வேண்டும் உண்மைகள்? Poll_c10யாருக்கு வேண்டும் உண்மைகள்? Poll_m10யாருக்கு வேண்டும் உண்மைகள்? Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
யாருக்கு வேண்டும் உண்மைகள்? Poll_c10யாருக்கு வேண்டும் உண்மைகள்? Poll_m10யாருக்கு வேண்டும் உண்மைகள்? Poll_c10 
1 Post - 1%
jairam
யாருக்கு வேண்டும் உண்மைகள்? Poll_c10யாருக்கு வேண்டும் உண்மைகள்? Poll_m10யாருக்கு வேண்டும் உண்மைகள்? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாருக்கு வேண்டும் உண்மைகள்?


   
   
aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Postaeroboy2000 Thu Dec 21, 2017 6:21 pm

யாருக்கு வேண்டும் உண்மைகள்?



குஜராத் சட்ட மன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடியின் மிகையுணர்ச்சி ததும்பும் ஆவேச உரையைக் கண்டு மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள் என்பதுதான் இந்தத் தேர்தலில் மிகுந்த ஆச்சரியத்துக்குரிய விஷயம்! தேர்தல் பிரச்சாரத்தில் மக்களின் உணர்ச்சியைத் தூண்டும் வகையிலேயே மோடி பேசினார். அவர் கையாண்ட பிரதானமான உத்தி இந்து - முஸ்லிம் பிரிவினைவாதம். “காங்கிரஸின் உயர் மட்டத் தலைவர்கள் மோடியைத் தோற்கடிக்க பாகிஸ்தானுடன் சேர்ந்து சதி செய்கிறார்கள்” என்று பாஜக பரப்பிய பிரச்சாரம் அவற்றின் உச்சம். ஆனால், இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? மோடியின் அனல் பறக்கும் பிரச்சார உரைகள் எப்போதுமே தரக்குறைவானவையாகவே இருக்கின்றன! முஸ்லிம்களை வெளியாட்களாகக் காட்டுவதுதான் பாஜகவின் முக்கிய நோக்கம் என்பதையே காட்டுகின்றன!

சரி, பாஜகவைத் தோற்கடிப்பதற்காக பாகிஸ்தானுடன் சேர்ந்துகொண்டு காங்கிரஸ் தலைவர்கள் நிஜமாகவே சதி செய்கிறார்களா? இதற்கான பதில்: உண்மை என்பது இங்கே ஒரு பொருட்டே அல்ல!

இன்றைய நவீன காலத்தில் பிரகாசமாகிக்கொண்டிருக்கிற ‘உண்மைகளெல்லாம் ஒரு பொருட்டே அல்ல’ எனும் உண்மையைப் புரிந்துகொள்ள 1922-ல் வெளியான ஒரு புத்தகத்தைப் பற்றி நாம் பேசுவோம்.

அமெரிக்கப் பத்திரிகையாளர் வால்டர் லிப்மேன் 1922-ல் எழுதிய புத்தகம் ‘பப்ளிக் ஒபீனியன்’. இதில் அவர் சொல்கிறார்: “ உலகம் தொடர்பாக நாம் அனைவரும் அவரவர் மனதில் ஒரு சித்திரத்தைக் கொண்டிருக்கிறோம். ஆனால், நமது மனதில் இருக்கும் உலகமானது நிஜ உலகத்தை ஒத்திருக்கும் ஒன்றுதான். அதன் அசலான சித்திரம் அல்ல!”

அதாவது, “நமது பார்வையின் அடிப்படையில் ஒரு உலகத்தை நமது சிந்தனையில் உருவாக்கிக்கொள்கிறோம்; அதையே உரமிட்டு வளர்க்கிறோம். அதை மாற்றிக்கொள்வது என்றால் மிக அதிகமான முயற்சி தேவைப்படும். நாம் உருவாக்கியிருக்கும் பார்வை யில் உண்மைகள் குறுக்கிட்டால், அந்த உண்மைகளைப் புறக்கணித்துவிடுகிறோம். நமது உலகப் பார்வைக்கு இணக்கமான விஷயங்களை மட்டுமே ஏற்றுக்கொள்கிறோம்; ஜனநாயகத்துக்கு இது ஒரு சவால்” என்கிறார் லிப்மேன்.

நீங்கள் படிக்க வேண்டிய இன்னொரு புத்தகம் உண்டு: 1997-ல் தைமூர் குரான் எனும் துருக்கிய - அமெரிக்கப் பேராசிரியர் எழுதிய ‘பிரைவேட் ட்ரூத்ஸ், பப்ளிக் லைஸ்’. அதில் ‘பிரஃபரன்ஸ் ஃபால்சிஃபிகேஷன்’ எனும் பதத்தை அவர் உருவாக்கியிருக்கிறார். பல விஷயங்கள் குறித்த கருத்துகள், நம்பிக்கைகள் நம்மிடம் உண்டு. ஆனால், பொதுவெளியில் அவை ஏற்றுக்கொள்ளப்படுமா இல்லையா என்று பயந்து அவற்றை வெளிப்படுத்துவதில்லை. ஆனால், அதே கருத்தை மற்றவர்கள் வெளிப்படுத்துகிறார்கள் என்று தெரிந்தால், அந்தக் கருத்தை வெளிப்படுத்தத் துணிவு பெறுகிறோம். அதாவது, இது ஒரு ‘முன்னுரிமைகளின் அடுக்கு’க்கு வித்திடுகிறது. இதற்குப் பொருத்தமான நவீன உதாரணமாக, எல்லாப் பகுதிகளிலும் நிகழ்ந்துவரும் வலதுசாரி வெகுஜன எழுச்சியைச் சொல்லலாம்.

உண்மையில், நம்மில் பலர் நமது சிந்தனையில் மதவெறியர்களாக, பெண் வெறுப்பாளர்களாக, இனவெறியர்களாக இருக்கிறோம் என்றே நான் நம்புகிறேன். நாம் எப்போதும் இப்படித்தான் இருக்கிறோம். ஆனால், ஊடகங்களைத் தாராளவாத மேல்தட்டு வர்க்கத்தினர் நடத்துகிறார்கள் என்பதாலும், தாராளவாதக் கருத்துகள் வியாபித்திருப்பதாலும் நமது உணர்வுகளை நாம் வெளிப்படுத்துவதில்லை.

இப்போது சமூக வலைதளங்கள், நாம் தனியாக இல்லை என்று நமக்குக் காட்டிவிட்ட நிலையில், நம்மை நாம் வெளிப்படுத்திக்கொள்ளும் துணிச்சலைக் கூடுதலாகப் பெறுகிறோம். ட்ரம்ப் வந்தது அங்கிருந்துதான். மோடி வந்தது அங்கிருந்துதான். இப்படியான கருத்துகளைக் கொண்டவர்களின் மனதில் இருக்கும் உலகங்களுக்கு உரம் சேர்க்கும் கருத்தாக்கத்தையே ட்ரம்பும் மோடியும் வழங்குகின்றனர். “மெக்ஸிகோகாரர்கள் பாலியல் பலாத்காரம் செய்பவர்கள், வெளிநாட்டினர் கெட்டவர்கள், முஸ்லிம்கள் நமது பெண்களைக் கவர்ந்துசெல்கிறார்கள், பசு மூத்திரம் புற்றுநோயைக் குணப்படும்…” இப்படிப் பல. கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் ‘உண்மைகள் - ஒரு பொருட்டே அல்ல!’

நமது அரசியல் சட்டத்தை எழுதியவர்களில் பெரும்பான்மையினர் மக்களுடன் தொடர்புகொண்டிராத மேல்தட்டு வர்க்கத்தினர் என்ற உண்மையின் பின்னணியில் இதை ஒப்பிட்டுப்பாருங்கள். அரசியல் சட்டத்தில் அவர்கள் உருவாக்கியிருக்கும் விழுமியங் கள் நாட்டின் பெரும்பாலானோரால் ஏற்றுக்கொள்ளப்பட்டவை அல்ல! உதாரணமாக, நமது அரசியல் சட்டம் தனிநபர் உரிமைகளைப் பாதுகாக்கப் போதுமான விஷயங்களைச் செய்யவில்லை என்பதால், அதில் ஆழமான குறைபாடு உள்ளது என்றே ஒரு தாராளவாதியாக நான் கருதுகிறேன். ஆனால், தனிநபர் உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசியல் சட்டம் அதிகப்படியாகவே செய்திருக்கிறது என்பதுதான் நமது சமூகத்தின் பொதுக் கருத்தாக இருக்கும்!

1986-ல் அமெரிக்கத் தத்துவவியலாளர் ஹாரி ஜி. ஃப்ராங்க்பர்ட் ‘ஆன் புல்ஷிட்’ எனும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார். 2005-ல் அந்தக் கட்டுரை ஒரு புத்தகமாக வெளியாகி நன்றாக விற்பனையானது. உளறுதல் தொடர்பான ஒரு ‘கோட்பாட்டுப் புரிதலை’ ஏற்படுத்த முயற்சிசெய்யும் புத்தகம் அது. அதில் பொய் சொல்லிகளுக்கும் உளறுவாயர்களுக்கும் இடையிலான வித்தியாசத்தைப் பற்றி ஃப்ராங்க்பர்ட் சொல்கிறார். அதாவது, பொய் சொல்லிகளுக்கு உண்மை தெரியும்; ஆனால் ஏமாற்றும் நோக்கம் கொண்டவராக இருப்பார்கள். உளறுவாயர்களோ உண்மையைப் பற்றிக் கவலைப்படவே மாட்டார்கள். ஃப்ராங்க்பர்ட்டின் வார்த்தைகளில் சொல்வதானால் ஒரு உளறுவாயர் ‘சரி’யின் பக்கமும் நிற்க மாட்டார்; ‘தவ’றின் பக்கமும் நிற்க மாட்டார்.

இன்றைய அரசியலில் வெளிப்படும் அசுத்தங்கள் ஜனநாயகத்தின் வக்கிரம் அல்ல; அதன் வெளிப்பாடு. இதனால் கவலைக்குள்ளாகியிருக்கும் என்னைப் போன்ற தாராளவாதிகள் உள்ளிட்ட அனைவரும் இதற்கெல்லாம் நாம்தான் பொறுப்பு என்று வருந்துவதை விட்டுவிட்டு, பணியாற்றத் தொடங்க வேண்டும்!

- அமித் வர்மா,

‘பிரகதி’ இணையதள இதழின் ஆசிரியர்.

©️ ‘தி இந்து’ ஆங்கிலம்,

தமிழில் சுருக்கமாக:

வெ.சந்திரமோகன்



நண்பர்களே இந்த கட்டுரையில் குறிப்பிடப் படும் புத்தகங்கள் இருந்தால் புத்தகங்கள் பகுதியில் பகிரவும்...
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 21, 2017 8:02 pm

ம்ம்... நல்ல பகிர்வு !  அருமையிருக்கு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Dec 22, 2017 3:55 pm

அருமையான பதிவு



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக