புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும் Poll_c10மைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும் Poll_m10மைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும் Poll_c10 
21 Posts - 64%
ayyasamy ram
மைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும் Poll_c10மைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும் Poll_m10மைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும் Poll_c10 
10 Posts - 30%
Ammu Swarnalatha
மைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும் Poll_c10மைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும் Poll_m10மைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும் Poll_c10 
1 Post - 3%
M. Priya
மைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும் Poll_c10மைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும் Poll_m10மைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும் Poll_c10மைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும் Poll_m10மைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும் Poll_c10 
64 Posts - 70%
ayyasamy ram
மைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும் Poll_c10மைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும் Poll_m10மைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும் Poll_c10 
10 Posts - 11%
mohamed nizamudeen
மைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும் Poll_c10மைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும் Poll_m10மைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும் Poll_c10 
4 Posts - 4%
Rutu
மைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும் Poll_c10மைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும் Poll_m10மைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும் Poll_c10 
3 Posts - 3%
prajai
மைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும் Poll_c10மைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும் Poll_m10மைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும் Poll_c10 
2 Posts - 2%
Jenila
மைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும் Poll_c10மைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும் Poll_m10மைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும் Poll_c10 
2 Posts - 2%
Baarushree
மைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும் Poll_c10மைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும் Poll_m10மைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும் Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
மைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும் Poll_c10மைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும் Poll_m10மைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும் Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
மைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும் Poll_c10மைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும் Poll_m10மைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும் Poll_c10 
1 Post - 1%
manikavi
மைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும் Poll_c10மைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும் Poll_m10மைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 29, 2018 3:03 am


விளையாட்டு என்பதனைப் படிப்பை கெடுக்கக்கூடிய விஷயமாகவும், பொழுதுபோக்குக்கான அடையாளமுமாகவே பலரும் நினைக்கிறார்கள். ஆனால், விளையாட்டு என்பது மிகப்பெரிய உடற்பயிற்சி.

அதுவும் எண்ணற்ற பலன்களைக் கொண்ட மனமகிழ்ச்சி தரும் உடற்பயிற்சி’’ என்கிறார் உடற்பயிற்சி மருத்துவ நிபுணரான கண்ணன் புகழேந்தி. உடற்பயிற்சியின் பலன்களையும், அவசியத்தையும் தொடர்ந்து விளக்குகிறார்.

உடல்நலன் மற்றும் மனநலன் விளையாட்டு என்பது மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று புதிய சாதனை படைத்தல், பதக்கங்கள் வெல்வதன் மூலமாக இலக்கை அடைதல் ஆகியவற்றுக்கானது மட்டுமே அல்ல.

அதேபோல் பலத்த காயங்கள் ஏற்படல், கவனச்சிதறல் போன்றவற்றால் கல்வி தடைபடுவதாக பெற்றோர் கருதுகின்றனர். இது முற்றிலும் தவறான முடிவு. விளையாட்டால் அனைத்து உடல் உறுப்புகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, உடல் மற்றும் மனநலன் பேணப்படுகிறது.

நோய்களைத் தடுக்கும் காரணி தனி நபர் விளையாட்டு, குழு விளையாட்டு ஆகியவற்றில் கலந்து கொள்ளல், ஜிம், யோகாசனம் முதலான பயிற்சிகளில் தொடர்ந்து ஈடுபடல் என எதுவாக இருந்தாலும் நம்முடைய உடல் தகுதிக்கு ஏற்ப, பாதிப்புகள் வராமலும், விரைவில் நோய்கள் ஏற்படாமலும் தவிர்ப்பதற்கான முதல் காரணிதான் விளையாட்டுகளும், பயிற்சிகளும் என்பதை அனைவரும் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டிய அடிப்படையான விஷயம்.

நமது நாட்டில் பெரும்பாலானோர் விளையாட்டுக்களில் பங்கேற்றால் காயங்கள் உண்டாகும் என்ற மனநிலையில்தான் காணப்படுகின்றனர். ஆனால், எல்லா நாடுகளிலும், போட்டிகள் அதிகம் உள்ள, காயங்கள் ஏற்படுவதற்கான விளையாட்டுக்களில் கலந்து கொள்பவர்கள் 5 அல்லது 10 சதவீதம்தான் இருப்பார்கள் என புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கிறது.

ஓடி விளையாடு பாப்பா

20, 25 வருடங்களுக்கு முன்னர், ஓய்வு நேரம் என்றால் வீட்டிலுள்ள பெரியவர்கள் மகாகவி பாரதியாரின், ‘ஓடி விளையாடு பாப்பா’ என்ற அறிவுரைக்கு ஏற்ப சிறுவர், சிறுமியரை ‘வெளியே சென்று விளையாடுங்கள்’ என்று அனுப்புவது வழக்கமாக இருந்தது. இன்றைய
தலைமுறையினரிடம், ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தும் விதம் மாறிவிட்டது.

விளையாடுவதால் உடல் நலம் பேணப்படுவதோடு, அறிவாற்றல் வளர வழிவகுக்கும்; அது மட்டுமில்லாமல் கை, கால்கள், கண், காது போன்ற உறுப்புக்களை ஒருங்கிணைக்கவும் விளையாட்டுகள் மற்றும் பயிற்சிகள் உதவுகின்றன. இயற்கையோடு இணைந்த விளையாட்டுக்கள் மற்றும் பயிற்சிகள் இல்லையென்றால் நம்முடைய மூளை வளர்ச்சி மெல்லமெல்ல பாதிப்புக்கு உள்ளாகும்.

வாழ்க்கைப் பாடத்தையும் கற்றுக் கொள்ளலாம்ப்ளே-கிரவுண்டில் ஓடிக்கொண்டிருக்கும் நாம் பந்து எந்த திசையில் வந்து கொண்டிருக்கிறது அதற்கும் நமக்கும் எவ்வளவு தூரம் உள்ளது, எவ்வளவு விரைவாக ஓட வேண்டும், அதை கையால் பிடிக்க வேண்டுமா அல்லது காலால் தடுக்க வேண்டுமா அல்லது எகிறி தடுக்க வேண்டுமா, பால் போகும் திசை, அதை பிடிக்க வேண்டுமா, வேண்டாமா என்பதையெல்லாம் கண் சிமிட்டும் நேரத்திலோ, இதயம் துடிக்கும் பொழுதினிலோ(Split Second)-டில் முடிவு பண்ண கற்றுக் கொண்டுவிடுவோம்.

எதிரணியினர் பந்தை உதைத்தவுடன், கோல் கீப்பர் இம்மி பிசகாமல் துல்லியமாக பந்தைப் பிடிப்பார். இதுபோன்ற விளையாட்டுப் பயிற்சிகள் எல்லாம் நடைமுறை வாழ்க்கையிலும் நமக்கு உதவி செய்யும்.

விளையாட்டில் மூளையின் பல பகுதிகளையும் பயன்படுத்தும் தேவை இருக்கிறது. இதனால் அறிவுத்திறன் வளர்ச்சி அடையும். அவற்றைப் பயன்படுத்த தெரிந்தவர்கள் எதிர்பாராதவிதமாக ஏற்படுகிற விபத்துக்களில் இருந்தும் தங்களைப் பாதுகாத்து கொள்ள கூடிய வாய்ப்புக்களைத் தானாகவே உருவாக்கிக் கொள்ள முடியும் என்பதில் துளியும் ஐயம் வேண்டாம்.

சமயோசித புத்தி

Presence of mind என்று சொல்லப்படுகிற இதனைப் பாடப்புத்தகத்தில் கற்றுக் கொள்ள முடியாது. ஆனால், விளையாடும்போது தானாகவே கற்றுக் கொள்ளலாம். தொடர்ந்து விளையாடுவதன் மூலமாக அதைப் பழக்கத்திற்குக் கொண்டு வர முடியும்.

விளையாட்டில் தங்களை நோக்கி வருகிற பந்து அல்லது பேட்டைக் கண்டு தலையை விலக்கி கொள்வோம். போட்டியில் இவ்வாறு நடைபெறுவது சகஜம். இதை தொடர்ந்து பயிற்சி செய்தவர்கள் நிஜ வாழ்க்கையில் தங்களை நோக்கி வரக்கூடிய ஆயுதங்களில் இருந்தும் ஒரு நொடியில் யோசிக்காமல் தங்களைக் காப்பாற்றி கொள்ள முடியும். இதை Reflex Action எனக் குறிப்பிடுவோம். விளையாடாமல் ஒருவர் Reflex Action-ஐ பழக்கத்திற்குக் கொண்டு வர முடியாது. இதில் தசைகளும் வலுவடையும், எலும்புகள் உறுதியாவதற்கும் விளையாட்டு பயிற்சிகள் அவசியம்.

காலமாற்றத்தின் கட்டாயத் தேவை நாம் காட்டில் வாழ்ந்தபோது விலங்கு களைத் துரத்த வேண்டி இருந்தது. அவை நம்மைத் தாக்கும்போது, அவற்றிடம் இருந்து தப்பிக்க வேண்டி இருந்தது. இவை இரண்டும் கட்டாய தேவை. கால மாற்றத்தில் காடுகளை அழித்து, நாட்டை உருவாக்கியபோது உடல் உழைப்பு குறைந்து சுகமாக வாழ வேண்டும் என நினைத்தோம். அதற்கேற்றவாறு மிக்சி, கிரைண்டர், வாஷிங் மெஷின், கம்ப்யூட்டர் என நவீன சாதனங்கள் வந்துவிட்டன.

நினைத்த இடங்களுக்கு நினைத்த நேரத்தில் செல்ல வாகன வசதிகள் வந்துவிட்டது. இதன் காரணமாக, நம்முடைய தசைகள் விரிந்து, சுருங்கி வேலை செய்வதைக் குறைத்ததுதான் இன்றைக்குப் பல நோய்கள் வருவதற்கு காரணமாகி விட்டது.கல்வித்திறன் அதிகரிக்கும் விளையாட்டு என்பது உடல் நலம் மட்டுமில்லாமல், மன நலமும் சார்ந்தது.

விளையாடுதல் காரணமாக, மாணவ, மாணவியரின் உள்வாங்கிக் கொள்ளும் திறன் அதிகரிக்கும். விளையாடிய பின்னர் படிக்கும் மாணவ, மாணவியர் 3 மணி நேரத்தில் படிப்பதை அரை மணிநேரத்தில் படித்துவிடுவார்கள். மன அழுத்தத்தைக் குறைத்து ரிலாக்ஸ்சேஷனைத் தருவதால் எல்லோருக்கும் விளையாட்டு அவசியம்.
மைதானங்களே இன்று தேவைஉலக சுகாதார மையம்(World Health Organisation) நடத்திய ஓர் ஆய்வின் முடிவில், 2010-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த குழந்தைகள் உடல் நலக் குறைபாட்டால் பெற்றோருக்கு முன்னர் இறப்பார்கள் எனக் கண்டறியப்பட்டது அதிர்ச்சி தந்தது. இதைத் தவிர்க்க, மருத்துவமனைகள் தேவையில்லை.
விளையாட்டு மைதானங்கள்தான் இன்றைய முக்கிய தேவையாக உள்ளது. அதிலும், குறிப்பாக, உள்ளரங்கு விளையாட்டுத் திடல்கள்தான் அதிகளவில் தேவைப்படுகின்றன. ஏனென்றால், நகரங்கள் மட்டும் இல்லாமல், கிராமப்புறங்களிலும் காற்று மாசு அதிகரித்து வருகிறது.

2020-ம் ஆண்டுக்குள் உலகளவில் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களில், 60% இந்தியாவில் இருப்பார்கள்; சர்க்கரை நோயாளிகள் 50% இருப்பார்கள் என ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. இது மெத்தனப்போக்கால் ஏற்பட்ட மிகப் பெரிய பேரழிவு. இதைக் குறைக்காவிட்டால் சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு மற்றும் உடல் பருமன் போன்றவை அதிகரிக்கும்.

இந்நிலை நீடித்தால் தற்போது உள்ள மருத்துவமனைகள் கண்டிப்பாக போதாது. இந்த நோய்கள் எல்லாம் போதிய உடல் உழைப்பு இல்லாத காரணத்தால், நாமே வரவழைத்துக்கொண்ட நோய்கள். இந்த ஆபத்தான அவல நிலையை நம்மால் நிச்சயம் தவிர்க்க முடியும்.

பெற்றோரே கவனியுங்கள்


‘பள்ளிக்குச் செல்லுங்கள்: டியூஷனுக்குப் போங்கள்’ எனக் குழந்தைகளை அறிவுறுத்துவதுபோல், ‘மாலை நேரங்களில் விளையாட செல்லுங்கள்’ எனவும் சொல்லித் தர வேண்டும். இன்றைய தலைமுறையினர், ஆடம்பரமான சொகுசு வாழ்க்கை வாழ்ந்தால் போதும் எனக் கருதுகின்றனர். இது கொஞ்ச நேரம்தான் நீடிக்கும். இந்த நிலை மாறாவிட்டால், மருத்துவமனைகளில் நாமும் ஓர் அங்கமாக மாறிவிடுவோம்.

வாழ்க்கை முறை மாற்றங்களால், நமது உணவுப்பழக்கம் முற்றிலும் மாறிவிட்டது. கார்போஹைட்ரேட், சர்க்கரை அதிகம் உள்ள அரிசி வகை உணவுகளைத்தான் அதிகளவில் உண்கிறோம். அதைத் தவிர்த்து குதிரை வாலி, கம்பு, கேழ்வரகு ஆகிய சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வது பயன் தரும். பசித்த பின் சாப்பிட வேண்டும். இவ்விடத்தில், வள்ளலாரின் ‘பசித்திரு’ என்பதைக்
கவனத்தில் கொள்ள வேண்டும்.

விவேகானந்தர் சொன்னது…

‘தோட்டத்தில் மண்வெட்டி, கடப்பாரைக் கொண்டு வேலை செய்பவர்களைவிட கால்பந்தாட்டம் ஆடுபவர்கள் நேரடியாக சொர்க்கம் அடைவார்கள்!’ – என்பது சுவாமி விவேகானந்தரின் வாக்கு; இதன்மூலம், ஆன்மிகமும் விளையாட்டுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறது என்பதை உணரலாம்.

நோய்கள் வராமல் தடுக்க ஃபிட்னெஸ் என்ற மெடிசின் அவசியம். இதை பின்பற்றாத இடத்தில் உலகப்போரில் உயிரிழந்தவர்களைவிட, அதிகமாக உயிரிழக்க நேரிடும்; இது அனைவருக்கும் மிகப்பெரிய சவால். நோய்கள் வந்த பின்னர், பார்த்து கொள்ளலாம் என்பது அறிவீனம்.

குழு மனப்பான்மை வளரும்ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் அவரவர் கையில்தான் உள்ளது. அதாவது, நோய் வராமல் தடுத்து, ஆரோக்கியமாய் வாழ்வதற்கு பிறரின் உதவி தேவையில்லை. உடலுக்குத் தேவையான உழைப்பு; மனதுக்குத் தேவையான அமைதி என ஆரோக்கியத்துக்கு இன்றியமையாத எல்லா மருந்துகளும் நமது உடலில் உள்ளன.

விளையாட்டின் மூலம் குழு மனப்பான்மையும் வளரும். கிரிக்கெட்டோ, ஷட்டில்காக் நமக்குத் தெரிந்த, நமக்குப் பிடித்த ஏதேனும் ஒரு விளையாட்டு விளையாடுவதை வழக்கமாகக் கொண்டால் ஆரோக்கியமான வாழ்வு நிச்சயம்!



மைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Aug 29, 2018 11:18 am

முன்பெல்லாம் 
கிரிக்கெட்
முதுகு பஞ்சர் 
7 ஸ்டோன்ஸ் 
அடித்து விளையாடும் அனைத்து விளையாட்டுக்களும் 
இப்போது காணவில்லை 

இப்போதெல்லாம் வீடியோ கேம் தான்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக