புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:37 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 7:59 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 7:36 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:05 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 4:53 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 12:13 pm

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:59 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:48 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:43 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:25 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:04 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:58 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:48 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 9:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 9:32 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 9:30 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 6:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 4:33 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 4:12 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 4:03 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 3:59 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 3:51 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 2:20 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 1:27 pm

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 1:00 pm

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாகப் பிரிவினை - 31/10/1959 - ஒரு அலசல் ! Poll_c10பாகப் பிரிவினை - 31/10/1959 - ஒரு அலசல் ! Poll_m10பாகப் பிரிவினை - 31/10/1959 - ஒரு அலசல் ! Poll_c10 
68 Posts - 49%
heezulia
பாகப் பிரிவினை - 31/10/1959 - ஒரு அலசல் ! Poll_c10பாகப் பிரிவினை - 31/10/1959 - ஒரு அலசல் ! Poll_m10பாகப் பிரிவினை - 31/10/1959 - ஒரு அலசல் ! Poll_c10 
54 Posts - 39%
T.N.Balasubramanian
பாகப் பிரிவினை - 31/10/1959 - ஒரு அலசல் ! Poll_c10பாகப் பிரிவினை - 31/10/1959 - ஒரு அலசல் ! Poll_m10பாகப் பிரிவினை - 31/10/1959 - ஒரு அலசல் ! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பாகப் பிரிவினை - 31/10/1959 - ஒரு அலசல் ! Poll_c10பாகப் பிரிவினை - 31/10/1959 - ஒரு அலசல் ! Poll_m10பாகப் பிரிவினை - 31/10/1959 - ஒரு அலசல் ! Poll_c10 
3 Posts - 2%
Shivanya
பாகப் பிரிவினை - 31/10/1959 - ஒரு அலசல் ! Poll_c10பாகப் பிரிவினை - 31/10/1959 - ஒரு அலசல் ! Poll_m10பாகப் பிரிவினை - 31/10/1959 - ஒரு அலசல் ! Poll_c10 
1 Post - 1%
prajai
பாகப் பிரிவினை - 31/10/1959 - ஒரு அலசல் ! Poll_c10பாகப் பிரிவினை - 31/10/1959 - ஒரு அலசல் ! Poll_m10பாகப் பிரிவினை - 31/10/1959 - ஒரு அலசல் ! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பாகப் பிரிவினை - 31/10/1959 - ஒரு அலசல் ! Poll_c10பாகப் பிரிவினை - 31/10/1959 - ஒரு அலசல் ! Poll_m10பாகப் பிரிவினை - 31/10/1959 - ஒரு அலசல் ! Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
பாகப் பிரிவினை - 31/10/1959 - ஒரு அலசல் ! Poll_c10பாகப் பிரிவினை - 31/10/1959 - ஒரு அலசல் ! Poll_m10பாகப் பிரிவினை - 31/10/1959 - ஒரு அலசல் ! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
பாகப் பிரிவினை - 31/10/1959 - ஒரு அலசல் ! Poll_c10பாகப் பிரிவினை - 31/10/1959 - ஒரு அலசல் ! Poll_m10பாகப் பிரிவினை - 31/10/1959 - ஒரு அலசல் ! Poll_c10 
1 Post - 1%
Guna.D
பாகப் பிரிவினை - 31/10/1959 - ஒரு அலசல் ! Poll_c10பாகப் பிரிவினை - 31/10/1959 - ஒரு அலசல் ! Poll_m10பாகப் பிரிவினை - 31/10/1959 - ஒரு அலசல் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாகப் பிரிவினை - 31/10/1959 - ஒரு அலசல் ! Poll_c10பாகப் பிரிவினை - 31/10/1959 - ஒரு அலசல் ! Poll_m10பாகப் பிரிவினை - 31/10/1959 - ஒரு அலசல் ! Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
பாகப் பிரிவினை - 31/10/1959 - ஒரு அலசல் ! Poll_c10பாகப் பிரிவினை - 31/10/1959 - ஒரு அலசல் ! Poll_m10பாகப் பிரிவினை - 31/10/1959 - ஒரு அலசல் ! Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
பாகப் பிரிவினை - 31/10/1959 - ஒரு அலசல் ! Poll_c10பாகப் பிரிவினை - 31/10/1959 - ஒரு அலசல் ! Poll_m10பாகப் பிரிவினை - 31/10/1959 - ஒரு அலசல் ! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
பாகப் பிரிவினை - 31/10/1959 - ஒரு அலசல் ! Poll_c10பாகப் பிரிவினை - 31/10/1959 - ஒரு அலசல் ! Poll_m10பாகப் பிரிவினை - 31/10/1959 - ஒரு அலசல் ! Poll_c10 
15 Posts - 3%
prajai
பாகப் பிரிவினை - 31/10/1959 - ஒரு அலசல் ! Poll_c10பாகப் பிரிவினை - 31/10/1959 - ஒரு அலசல் ! Poll_m10பாகப் பிரிவினை - 31/10/1959 - ஒரு அலசல் ! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பாகப் பிரிவினை - 31/10/1959 - ஒரு அலசல் ! Poll_c10பாகப் பிரிவினை - 31/10/1959 - ஒரு அலசல் ! Poll_m10பாகப் பிரிவினை - 31/10/1959 - ஒரு அலசல் ! Poll_c10 
9 Posts - 2%
Jenila
பாகப் பிரிவினை - 31/10/1959 - ஒரு அலசல் ! Poll_c10பாகப் பிரிவினை - 31/10/1959 - ஒரு அலசல் ! Poll_m10பாகப் பிரிவினை - 31/10/1959 - ஒரு அலசல் ! Poll_c10 
4 Posts - 1%
jairam
பாகப் பிரிவினை - 31/10/1959 - ஒரு அலசல் ! Poll_c10பாகப் பிரிவினை - 31/10/1959 - ஒரு அலசல் ! Poll_m10பாகப் பிரிவினை - 31/10/1959 - ஒரு அலசல் ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பாகப் பிரிவினை - 31/10/1959 - ஒரு அலசல் ! Poll_c10பாகப் பிரிவினை - 31/10/1959 - ஒரு அலசல் ! Poll_m10பாகப் பிரிவினை - 31/10/1959 - ஒரு அலசல் ! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பாகப் பிரிவினை - 31/10/1959 - ஒரு அலசல் ! Poll_c10பாகப் பிரிவினை - 31/10/1959 - ஒரு அலசல் ! Poll_m10பாகப் பிரிவினை - 31/10/1959 - ஒரு அலசல் ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாகப் பிரிவினை - 31/10/1959 - ஒரு அலசல் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 07, 2019 9:04 pm

என் நாற்பது ஆண்டு கால நண்பரும் நடிகர் திலகத்தின் பக்தருமான ஒருவரின் இந்த படம் பற்றிய விவரிப்பு.

பாகப் பிரிவினை - 31/10/1959

பாகப் பிரிவினை - 31/10/1959 - ஒரு அலசல் ! 5v1H2yrETzWu58NE793E+images

இந்த படத்தை நான் பார்த்தது 1969 ஆண்டுதான். அப்பொழுது பத்தே வயதான என்னையும் இப்படம் எதோ ஒரு வகையில் ஈர்த்தாலும்,அதை நான் மறந்தே போனேன்.

பிறகு சுமார் 8 ஆண்டுகளுக்குப்பிறகு 16 வயதினிலே என்ற படத்திற்கு புக் செய்து ,நாங்கள் 20 பேர் நண்பர்கள் சென்று பார்த்தோம். படம் அசர வைத்தது. ஈர்ப்பு கொண்டு மீண்டும் பார்க்க தூண்டியது.
பத்திரிகைகள் கொண்டாட ஆரம்பித்தன. நல்ல படம் என்பதில் எனக்கு உடன்பாடுதான். நடிகர்களின் பங்களிப்பு,இசை ,வெளிப்புற படப் பிடிப்பு,திரைக் கதை எல்லாமே பிடித்தே இருந்தது.

ஆனால் பத்திரிகைகள் வழக்கம் போல மிகை படுத்தி , இதுதான் ரியலிச நடிப்பு, தமிழ் பட உலகின் திருப்பு முனை, அசல் கிராமம்,அசல் மக்கள், ரியலிச படம் என்று போட்டு தாக்கி ,மூளை சலவை செய்ய எனக்கோ ஒரு எண்ணம். என் நண்பர்களிடம் சொல்லி , மாதமொரு திரையீட்டில் பாக பிரிவினை போட செய்தேன்

எங்கள் ஆடிடோரியத்தில் . பார்த்த மாணவர்களுக்கு ஷாக். 1959 லேயே இப்படியொரு படம் ,இப்படியொரு நடிப்பா? கமல் ,இதை பிரதியெடுத்து நடிக்க முயன்றும் பாதியளவு கூட செய்யவில்லையே? இந்த பட கதையமைப்பில் இருந்த இயல்பு தன்மை,பாத்திர வார்ப்புகளில் இருந்த அசலான கிராம மணம்,எடுத்து கொண்ட கருவில் சமூக அக்கறை துளி கூட பதினாறு வயதினிலே படத்தில் இல்லையே ,ஏன் ,ரஜினி கூட எம்.ஆர்.ராதாவின் அருகே வர முடியவில்லையே என்று என் அத்தனை நண்பர்களும் அதிசயித்தனர். once more கேட்டு திரும்ப திரும்ப பார்த்து மகிழ்ந்தோம்.

பிறகுதான் பாக பிரிவினை அருமை முழுதும் துலங்க ஆலம்பித்தது.(அப்போது வீ.சி.ஆர் கூட வராத காலம்) சந்தர்ப்பம் அமையும் போதெல்லாம் தேடி தேடி பார்த்தேன். எனக்கு பீம்சிங்-சோலைமலை, பீம்சிங்-கே.எஸ்.ஜி இணைவு அவ்வளவு பிடிக்கும். (ஆரூர் தாஸ் இணைந்தது ஒரு விபத்தே)இப்போது பாகபிரிவினை படத்தை விரிவாக அலசுவோம்.
பாகப் பிரிவினை ரொம்ப சாதாரண கதை போல மேலுக்கு தெரிந்தாலும் ஒரு நிலவுடமை சமூகத்தின் அடிப்படை தகர்ப்பை,நகரிய நாகரிகம் தன போக்கில் செல்லாமல் ,அதனை சிதைக்க முயல்வதோடு ,பொன் முட்டையிடும் வாத்தை அறுத்து ,பலன் காணும் போக்கையும், அதை எதிர்கொள்ளும் அப்பாவி மனங்களையும், அற்புதமாக பேசுகிறது.

வாரிசில்லாத பெரியப்பா -பெரியம்மா , இரு ஆண் வாரிசுகள் கொண்ட அப்பா அம்மா ஒரே கூரையில் . ஒரு ஆண் வாரிசு சிறு வயது விபத்தில் கை கால் ஊனமுற்று ,ரொம்ப படிப்பறிவின்றி வீட்டை சார்ந்து வாழ்பவன். மற்ற வாரிசு பட்டணத்தில் படித்து சிறிதே நாகரிக சுகம் கண்டவன். பெரியம்மாவின் செல்லம். பெரியம்மாவின் கள்ள மனம் கொண்ட உறவினன் தன் தங்கையுடன் வீடு புகுந்து ,குடும்பத்தை பிளவு படுத்தி, நம்பியவர்களையும் நட்டாற்றில் விட, குடும்பம் மீண்டும் இணைவதை கூறும் படம்.

இந்த படத்தின் மிக பெரிய பலம் தெளிவான திரைக்கதை, அசலான பாத்திர வார்ப்புக்கள், நூல் கோர்த்தார்ப்போல் ரேசர் ஷார்ப் வசனங்கள் ,பாத்திரங்களின் இணை-முரண்களில் இழையும் இயல்புத்தன்மை ,கதையோடு ஓடும் நகைச்சுவை, எல்லோருடைய நடிப்பில் பங்களிப்பு (முக்கியமாக சிவாஜி,எம்.ஆர்.ராதா,சரோஜாதேவி),அற்புதமான கிராமிய இசை ,வெளிப்புற காட்சிகள் (அவ்வப்போது studio set பல்லிளித்தாலும்) என்று கூறி கொண்டே போகலாம்.

தொடரும்.....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 07, 2019 9:06 pm

பாகப் பிரிவினை - 31/10/1959 - ஒரு அலசல் ! 0QK8E1X7SLiB1xWMIrGN+images(1)

முக்கியமாக அழகுணர்ச்சியுடன் கூடிய நம்பக தன்மை. ஆரம்ப காட்சிகளில் பாத்திர அறிமுகங்களுடன் அவர்களின் குணாதிசயங்கள் துருத்தாத நகைச்சுவையுடன் கோடி காட்ட படும். சுரு சுருப்பான கலாட்டா டீசிங் பாடல்கள்.கதாநாயகன் கண்ணையன் ஊனமானவனாக இருப்பதால்,சக வயது ஆண்களால் உதாசீனம், சக வயது பெண்களால் கேலி என்று இருப்பதால் ,உதாசீனத்தை விட கேலியே மேல் என்று பெண் நண்பிகளை தேர்ந்தெடுப்பது ஒரு தேர்ந்த திரைக் கதை உத்தி. பிறகு பட்டண திமிருடன் விருந்தாளியாக வரும் எம்.ஆர்.ராதா ,சிவாஜி மோதல்கள் அவ்வளவு இயல்பான நகைச்சுவை மிளிரும் சுவாரஸ்யங்கள். கதையை வலுவாக நகர்த்தும்.

சகோதரன் மணியின் இயல்பு மாற்றம் (பெண்ணை முன்னிறுத்தி) அவ்வளவு நயமாக வில்லத்தனம் துருத்தாமல் சொல்ல படும்.பொன்னி-கண்ணையன் திருமணம் அவர்களது வாழ்க்கை, மன முறிவுகளில் பாக பிரிவினை (பசுவும்-கன்றும் பங்கு போட படும் சோகம்), பெரியப்பாவின் இருதலை கொள்ளி நிலை, பிறகு எம்.ஆர்.ராதாவின் (சிங்காரம்) சூழ்ச்சி போக்கு , மணி மற்றும் மணி மனைவி அபாயம் உணர்வது ஆனாலும் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவிப்பது ,கண்ணையனின் வைத்தியம் சார்ந்த பட்டண விஜயம் என்று எங்கும் குறி தவறாது. சில பாடல்கள் (ஆட்டத்திலே) நம்மை சோதித்தாலும் சிறிய நகரங்களில் வரவேற்பு பெற்றதாய் கேள்வி.

பாக பிரிவினை படத்தை பொறுத்த வரை ஒரு நடிகனின் உச்ச பட்ச சாதனை ஐம்பதுகளில். இன்று போல கேமரா, கட் shots ,வெளிநாட்டு ஒப்பனையாளர் , இரண்டு வருடமாக ஒரே படம் என்பதெல்லாம் இல்லாத போது கைகால் ஊனமுற்ற பாத்திரம்.அதிலும் கதாநாயகன் என்றால் ஒளி வட்டம் இருந்த காலங்களில் இமேஜ் வட்டத்தில் இல்லாமல் , அறிமுகமாகும் போதே எருமை குட்டை தண்ணீரில் விழுந்து எழுந்திருக்க முடியாமல் தத்தளிப்பது, எருமை மாட்டின் முதுகில் சவாரி செய்வதும் என நடிப்புக்காக வேள்வி வளர்ப்பார்.

வெற்று பொழுதுபோக்கு படங்கள் வெள்ளிவிழா காணுவது சாதனையே அல்ல. அதனை ரவிசந்திரன் கூட செய்வார். இந்த மாதிரி வெகு ஜன ஈர்ப்புக்கு வாய்ப்பு குறைந்த படங்களை பிளாக் பஸ்ட்டர் ஆக்குவதற்கு வெள்ளி விழா காண வைப்பதற்கு ,நமது நடிகர்திலகத்தை விட்டால் யார்?

தொடரும்...........



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 07, 2019 9:08 pm

பாகப் பிரிவினை - 31/10/1959 - ஒரு அலசல் ! UMBqQtpDSSufONZNzlgb+images(3)

கண்ணையன் பாத்திரத்தை வெறும் அப்பாவி போல நடித்து விட்டு கடக்க முடியாது. இந்த படத்தில் கண்ணையன் உலகம் குறுகியது அவனின் முடக்கமான நிலையால். அவன் எதிர்கொள்வதோ வீட்டில் அன்புள்ளங்களை மட்டுமே. இந்த நிலையில் சிறிதே தாழ்வு மனப்பான்மை, அன்பு நிறை உள்ளம், நிறைய விஷயங்களில் தேர்ச்சி குறைவு இவற்றால் அவன் அப்பாவி போல தோற்றம் தர வேண்டும். கை கால் அசைவுகள் அவர் ஊன நிலைக்கு தக்க இயங்க வேண்டும். (படிக்காத மேதை அப்பாவித்தனமும்,சாப்பாட்டு ராமனின் வெட்டி அரட்டை அப்பாவித்தனமும் இதிலிருந்து எவ்வளவு மாறும்? மேதையின் அப்பாவி பாத்திரங்களை ஒப்பிட்டு ஆராய்ச்சி நடத்தலாம்.)

இந்த பாத்திரத்தை நடிகர்திலகம் கையாளும் லாவகம் இருக்கிறதே? அடடா.... அத்தனை அருமை. மாடு உதைத்து கழுநீர் தொட்டியில் விழுந்து மற்றவர்கள் உதவியால் வெளியேறும் முதல் காட்சியில் துவங்கி, பெரியப்பாவிடம் பக்தி நிறைந்த நட்பு,அப்பா அம்மாவிடம் பணிவு, பெண்களிடம் கலாட்டா ,இதில் பிள்ளையாரு கோயிலுக்கு,தாழையாம் ,தேரோடும் எங்க சீரான பாடல்களில் தாள லயத்துக்கேற்ப நொண்டி நொண்டி முழு பாடலுக்கும் நடனமாடும் தேர்ச்சி (கமல் அப்படியே இந்த ஸ்டெப் களை ஆட்டு குட்டி,,செவ்வந்தி பூ முடிச்ச பாடல்களில் அட்சரம் தப்பாமல் கையாளுவார்),தம்பியுடன் வாஞ்சை,அவன் கொஞ்சம் கொஞ்சமாக மாறும் போது திருப்ப பார்க்கும் பாசமுள்ள குத்தல், எம்.ஆர்.ராதா வின் அடாவடி தனங்களுக்கு சவடால்களுக்கு தன் இயல்பு மாறாமல் அளிக்கும் counter response ,reactions , பொன்னி ஒரு சங்கடமான சூழ்நிலையில் தன்னை மணக்கும் நிலைக்கு தள்ள படும் போது empathy யுடன் அவள் நிலையை பேசும் அழகு,தன் குறை மறந்து மண வாழ்க்கையில் தோய்வது ,பிரிவினை கொடுமை தாளாமல் பெற்றோரிடம் ,பெரியப்பாவிடம் தவிப்பது,பெரியம்மாவின் உதாசீனத்தை பொருமலுடன் ஏற்பது,தன்னுடைய மகனை உதாசீனம் செய்யும் போது ஒரு வெறுப்புடன் கையாலாகா தனத்தை விம்மலுடன் காட்டுவது, பட்டணத்தில் டாக்டர் செக் அப் செய்ததை கூச்சத்துடன் விவரிக்கும் பாங்கு என ஒவ்வொரு அணுவையும் ஆக்கிரமித்து ,நம் கவனம் ஈர்த்து தன்னிடமே தக்க வைப்பார்.

எம்.ஆர்.ராதாவிற்கு ரத்த கண்ணீருக்கு பிறகு ஒரு பெரிய break தந்த படம் இது.அடாவடியின் உச்சம். வசனங்கள் பெரும் பலம்.நடிகர்திலகத்தின் முன்னே தைரியமாக நின்று பார்வையாளரை ஈர்ப்பார்.(நடிகர்திலகம் உடனே தனது counter கொடுத்து சமன் செய்வார்).

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 07, 2019 9:11 pm

பாகப் பிரிவினை - 31/10/1959 - ஒரு அலசல் ! 12Wat04uTLKTaIY30fQt+images(2)

சரோஜாதேவிக்கு நடிக்கும் வாய்ப்பு. நன்றாக பயன் படுத்தி ,வரும் காட்சிகளில் அனுதாபம் தட்டுவார். பாலையா,சுப்பையா,சி.கே.சரஸ்வதி ,ராஜம்மா எல்லோரும் அருமையான கூட்டணி .கிட்டத்தட்ட தில்லானா அளவு எல்லா நடிகர்களும் ஒத்துழைத்து களை கட்ட வைப்பார்கள்.

படப் பிடிப்பு, படத்தொகுப்பு,பின்னணி இசை ,பாடல்கள் எல்லாமே உன்னதம். எம்.எஸ்.வீ-டி.கே.ஆர் இணைவில் தாழையாம் பூ,தங்கத்திலே,தேரோடும்,ஒற்றுமையாய், ஏன் பிறந்தாய் எல்லா பாடல்களும் அருமை.
1956 முதல் பிணங்கி நின்ற கண்ணதாசன் ,இந்த படத்தின் மூலம் திரும்பினார். பட்டுகோட்டையார் ஏன் பிறந்தாய் மகனே பாட்டை எழுத மறுத்ததால் இந்த யோகம்.

ஆனால் முழுவதும் மனம் மாறாமல் கால் அடிபட்டு படுக்கையில் கிடந்த பழைய நண்பருக்கு தோதாக தங்கத்திலே பாட்டில் ஒரு வரி சேர்த்தாலும் நடிகர்திலகத்தின் பெருந்தன்மை அதை அனுமதித்தது.ஆண்டவன் கட்டளை முன்னாலே அரச கட்டளை என்னாகும் என்று எழுதி விட்டு துன்ப பட்ட வாலிக்கும், இதற்கும் எத்தனை வித்யாசம்?இதுவல்லவோ பெருந்தன்மை,மனித தன்மை,விவேகம். தமிழர்களுக்கு நல்லதுதான் ஆகவே ஆகாதே?

இது வந்த வருடம்(1959) முதலிரண்டு வசூல் படங்களாக வீரபாண்டிய கட்டபொம்மன்,பாகபிரிவினை.இரண்டுக்கும் எவ்வளவு வேறுபாடு?அதுதான் சிவாஜி. 1960,1961,1962 எல்லா வருடங்களிலும் முதல் இரண்டு உன்னத வசூல் படங்கள் இந்த box -office சக்ரவர்த்தியுடையதே.(1960- தெய்வ பிறவி,படிக்காத மேதை, 1961-பாவமன்னிப்பு,பாசமலர்,1962-ஆலய மணி)

இந்த படத்தை இன்றைய தலைமுறையும் அலுக்காமல் ரசிக்க முடியும். ரசிக்க வேண்டும். நம் உன்னதங்களை,சாதனைகளை கொண்டாட தமிழர்கள் கற்க வேண்டும்.

நன்றி வாட்சப் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 08, 2019 12:02 am


-

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 08, 2019 9:40 pm

நன்றி அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக