புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Poll_c10பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Poll_m10பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Poll_c10 
54 Posts - 45%
ayyasamy ram
பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Poll_c10பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Poll_m10பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Poll_c10 
50 Posts - 42%
prajai
பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Poll_c10பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Poll_m10பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Poll_c10பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Poll_m10பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Poll_c10 
4 Posts - 3%
Jenila
பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Poll_c10பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Poll_m10பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Poll_c10 
2 Posts - 2%
M. Priya
பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Poll_c10பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Poll_m10பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Poll_c10 
1 Post - 1%
kargan86
பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Poll_c10பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Poll_m10பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Poll_c10 
1 Post - 1%
jairam
பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Poll_c10பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Poll_m10பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Poll_c10பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Poll_m10பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Poll_c10பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Poll_m10பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Poll_c10பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Poll_m10பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Poll_c10 
97 Posts - 56%
ayyasamy ram
பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Poll_c10பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Poll_m10பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Poll_c10 
50 Posts - 29%
mohamed nizamudeen
பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Poll_c10பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Poll_m10பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Poll_c10 
8 Posts - 5%
prajai
பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Poll_c10பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Poll_m10பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Poll_c10 
6 Posts - 3%
Jenila
பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Poll_c10பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Poll_m10பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Poll_c10பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Poll_m10பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Poll_c10பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Poll_m10பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Poll_c10பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Poll_m10பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Poll_c10பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Poll_m10பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Poll_c10 
1 Post - 1%
jairam
பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Poll_c10பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Poll_m10பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82037
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 05, 2020 8:20 pm

பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Thillai5

உடலமைப்போடு ஆலயம்

பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலமானதை
நம் உடம்போடு உவமையானவை. கால்- மண். வயிறு- நீர்.
இதயம்- நெருப்பு. கழுத்து- காற்று. தலை- ஆகாயம்.

சிதம்பரத்தில் நடராஜரின் உருவை மனித உடம்பில் தலைப்
பகுதியில் வைக்காமல் இருதய ஸ்தானத்தில் வைத்திருக்கின்றார்கள்.
எல்லா ஆலயங்களிலும் கருவறையை, ஆலயத்தின் மத்தியில் நேராக
இருக்கும்படி அமைத்திருப்பார்கள்.

ஆனால், சிதம்பரத்தில் இடது பாகமான நம்முடைய இருதய ஸ்தானம்
இருக்கும் அமைப்போடு இருப்பதைக் காணலாம். இவருடைய ஆட்டம்
நின்றுவிட்டால் உலகச் செயல் யாவும் நின்று போகுமே.

அதனால் இவர் ஆடிக்கொண்டே இருக்கிறார். இருதயம் ஆடாமல் நின்று
போனால் எல்லா ஆட்டமும் நின்றுதானே போகும். சிதம்பர விளக்கத்தின்
ஒரு பகுதி இதுவாகும்.

நால்வரும், நான்கு கோபுரங்களும்


கருங்கற்களால் கட்டப்பட்ட மதிற்சுவர்களுடன், விண்ணுக்குள்
ஊடுருவியதுபோல, நான்கு இராஜ கோபுரங்களுடன் சிதம்பர திருக்கோபுரம்
நன்கு அமைந்திருக்கிறது.

கோவில் கோபுரத்து மாடங்களில் எண்ணற்ற முனிவர்கள், தேவர்கள்
சிற்பங்களாகப் பரவிக் காணப்படுகின்றனர். கிழக்கு மேற்கு கோபுரங்களில்
நூற்றிஎட்டு நடன பாவனங்களையும் விளக்கும் சிற்பங்களாகப்
படைத்திருப்பதைக் காண்பவர் மெய்சிலிர்க்காது இருந்ததில்லை.

(தில்லை) சமயக்குரவர் என்று போற்றப்படும் அப்பர், சம்பந்தர், சுந்தரர் மற்றும்
மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் ஒவ்வொரு வாயில் வழியாக தில்லை
சிதம்பரம் கோவிலுக்குள் எழுந்தருளினர் என்று வரலாறு கூறுகிறது.

சமயக்குரவர் நால்வரில் ஒவ்வொருவரும், ஒருவர் சென்ற வாயில் வழியாக
ஒருவர் செல்லாது, ஒவ்வொருவரும் ஒவ்வொரு வாயில் வழியாகவே சென்றனர்.
எதனால்? சமயக்குரவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான கோபுரவாயில்
வழியாக உள்புகுந்து வழிபட்டனர் என்பது எதிலும் குறிப்பில்லா வியப்பு நமக்கு.

மேற்குக் கோபுர வாயில் வழியாக திருநாவுக்கரசரும்,
தெற்குக் கோபுர வாயில் வழியாக திருஞானசம்பந்தரும்,
வடக்கு கோபுர வாயில் வழியாக சுந்தரரும்,
கிழக்குக் கோபுர வாயில் வழியாக மாணிக்கவாசகரும்

சென்று தில்லைச் சிற்றம்பலத்திலுள்ள சிவபெருமானை வழிபட்டிருக்கின்றனர்.

நடராஜப் பெருமானுக்கு உள்ள திருச்சபைகள் ஐந்தில் சிதம்பரம் தலம்
கனகசபையாகும். மற்றவை 1.திருவாலங்காடு இரத்தினசபை,
2.மதுரை – வெள்ளிசபை, 3.திருநெல்வேலி – தாமிரசபை,
4.திருக்குற்றாலம் – சித்திரசபை.

இவையன்றி தில்லை சிதம்பரத்தில் உள்ள நடராஜப் பெருமானுக்கு
இக்கோவிலேயே ஐந்து சபைகள் இருக்கின்றன. அவை,
1.சிற்சபை (சிற்றம்பலம்), 2.கனகசபை, 3.இராசசபை, 4.தேவசபை,
5.நிருத்தசபை ஆகியவையாகும்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82037
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 05, 2020 8:20 pm

சிற்சபை: (சிற்றம்பலம்)

இச்சபையில் நடராஜப் பெருமான் திருநடனம் புரிந்தருளும் இடமாகும்.
முதலாம் ஆதித்த சோழனுடைய மகன் முதல் பராந்தக சோழன்
இச்சிற்றம்பலத்திற்கு பொன் வேய்ந்தான் என்று திருவாலங்காட்டுச்
செப்பேடுகள் கூறுகின்றன.

கனகசபை: (பொன்னம்பலம்)


சிற்றம்பலத்திற்கு முன் அமைந்திருக்கிறது. இங்கு ஸ்படிக லிங்கம்
இருக்கிறது. இதற்கு நாள்தோறும் ஆறு கால பூஜை நடைபெறுகிறது.
இப்பொன்னம்பலத்தின் முகட்டை, முதலாம் ஆதித்த சோழன், கொங்கு
நாட்டிலிருந்து கொண்டுவந்து உயர்ந்த மாற்றுடைய பொன்னால்
வேய்ந்தான் என்று தெய்வச் சேக்கிழார் பெருமான் கூறுகின்றார்.

தில்லைக் கோயிலிருக்கும் கல்வெட்டுப் பாடலொன்றில் சிறந்த
சிவபக்தனும், படைத்தலைவனுமான மணவில் கூத்தனான “காளிங்கராயன்”
என்பவன் இப்பொன்னம்பலத்தைப் பொன்னால் வேய்ந்தான் என இருக்கின்றது.

இராசசபை:


இச்சபையே ஆயிரங்கால் மண்டபம் ஆகும். இங்கு ஆண்டுதோறும்
ஆனி, மார்கழி மாதங்களில் நடைபெறும் ஒன்பதாம் நாள் திருவிழாக்களில்
நடராஜப் பெருமான் இரவில் இம்மண்டபத்தில் எழுந்தருளி மறுநாள்
காலை பக்தர்களுக்கு தரிசனம் தருவது வழக்கம்.

தேவசபை:


இதை பேரம்பலம் என்று அழைக்கப்படுகிறது.
இதன் விமானம் செம்பினால் செய்யப்பட்டுள்ளது.

நிருத்தசபை:


நடராஜப் பெருமானின் கொடிமரத்திற்குத் தென்புறம் மிகவும் அற்புதமான
வேலைப்பாடுகளுடன் அமைந்திருக்கிறது. ஊர்த்துவ பெருமானின்
திருமேனியும் இங்கு இருக்கிறது.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82037
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 05, 2020 8:22 pm

சிதம்பர ரகசியம்

சிதம்பர ரகசியம் என்பது சிதம்பரத்தில் மிக முக்கியமானதாகும்.
சிற்சபையில் சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ளது ஒரு சிறு
வாயில். இதில் உள்ள திரை அகற்றப்படும்போது கற்பூர ஆரத்தி
காட்டப்பெறும். இதனுள்ளே திருவுருவம் ஏதும் கிடையாது.

தங்கத்தாலான வில்வதள மாலை ஒன்று சுவரில் தொங்கவிடப்பட்டக்
காட்சி தெரியும். மூர்த்தி ஏதும் இல்லாமல் வில்வதள மாலை தொங்குவதை,
இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதை நமக்கு
உணர்த்துவதேயாகும்.
பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Thillai9
ஆக, அகண்ட பெருவெளியில் நிறைந்திருக்கும் இறைவனை வெறும்
வெளியையே காட்டி இங்கு வழிபட வகை செய்யப்பட்டுள்ளன.
இதுவேதான் சிதம்பர ரகசியம் என அனைவராலும் போற்றி வழிபாடு
செய்யப்பட்டு வருகின்றது.

திருவெண்காடு தலமே ஆதிசிதம்பரம் என்பர் ஒரு சிலர்.
சிதம்பரம் சிற்சபையில் காணும் நடராஜப் பெருமானின் திருமேனி
ராஜராஜன் காலத்தில்தான் தோற்றுவிக்கப்பட்டது. அதன் பின்னரே
தமிழ்நாட்டில் அனைத்துச் சிவாலயங்களிலும் நடராஜர் திருமேனி
வழிபாட்டுக்கு அமைக்கப்பட்டது.

சிதம்பரத்தில் நடராஜப் பெருமானுக்கு மார்கழி மாதம் திருவாதிரை
நட்சத்திரத்தில் நிகழும் ஆருத்ரா தரிசனமும், ஆனிமாதம் உத்திர
நட்சத்திரத்தில் நடக்கும் விழாவும் இங்கு நடக்கும் இரு சிறப்பு வாய்ந்த
பெரும் விழாக்களாகும்.

சைவ, வைணவ சமய ஒற்றுமைக்கு சிதம்பரம் கோவில் ஒரு எடுத்துக்காட்டாக
திகழ்கிறது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82037
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 05, 2020 8:23 pm

பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Thillai10

நூற்றி எட்டு வைணவ திவ்யதேசங்களில் ஒன்றான
திருசித்திரக்கூடம் என்று அழைக்கப்படும் கோவிந்தராஜப் பெருமாள்
கோவில் தில்லை சிதம்பரம் கோவிலின் உள்ளே அமைந்திருக்கிறது.

நடராஜப் பெருமானின் சந்நிதிக்கு நேர் எதிரே நின்றுகொண்டு
நடராஜரை தரிசனம் செய்தபிறகு இடதுபுறம் திரும்பிப் பார்த்தால்
கோவிந்தராஜப் பெருமாள் சயண நிலையுடனான சந்நிதியைக்
காணலாம்.

இரண்டு சந்நிதிகளும் அருகருகே அமைந்திருப்பது தில்லை கோவிலின்
சிறப்பு.

தில்லை எல்லையை மிதித்தாலே நம் தொல்லை வினைகள் இல்லை
என்றாக்கும், தில்லை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத நடராஜரை, சிதம்பரத்திற்கு
ஒருமுறையேனும் சென்று வழிபட்டு, வாழ்வில் சிறந்து விளங்க உங்களை
சிதம்பரம் பயணிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

நன்றி- தினமணி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக