புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ‘மலைக்கள்ளன்’ வெளியாகி 66 ஆண்டுகள் Poll_c10 ‘மலைக்கள்ளன்’ வெளியாகி 66 ஆண்டுகள் Poll_m10 ‘மலைக்கள்ளன்’ வெளியாகி 66 ஆண்டுகள் Poll_c10 
30 Posts - 71%
heezulia
 ‘மலைக்கள்ளன்’ வெளியாகி 66 ஆண்டுகள் Poll_c10 ‘மலைக்கள்ளன்’ வெளியாகி 66 ஆண்டுகள் Poll_m10 ‘மலைக்கள்ளன்’ வெளியாகி 66 ஆண்டுகள் Poll_c10 
11 Posts - 26%
mohamed nizamudeen
 ‘மலைக்கள்ளன்’ வெளியாகி 66 ஆண்டுகள் Poll_c10 ‘மலைக்கள்ளன்’ வெளியாகி 66 ஆண்டுகள் Poll_m10 ‘மலைக்கள்ளன்’ வெளியாகி 66 ஆண்டுகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ‘மலைக்கள்ளன்’ வெளியாகி 66 ஆண்டுகள் Poll_c10 ‘மலைக்கள்ளன்’ வெளியாகி 66 ஆண்டுகள் Poll_m10 ‘மலைக்கள்ளன்’ வெளியாகி 66 ஆண்டுகள் Poll_c10 
72 Posts - 66%
heezulia
 ‘மலைக்கள்ளன்’ வெளியாகி 66 ஆண்டுகள் Poll_c10 ‘மலைக்கள்ளன்’ வெளியாகி 66 ஆண்டுகள் Poll_m10 ‘மலைக்கள்ளன்’ வெளியாகி 66 ஆண்டுகள் Poll_c10 
32 Posts - 29%
mohamed nizamudeen
 ‘மலைக்கள்ளன்’ வெளியாகி 66 ஆண்டுகள் Poll_c10 ‘மலைக்கள்ளன்’ வெளியாகி 66 ஆண்டுகள் Poll_m10 ‘மலைக்கள்ளன்’ வெளியாகி 66 ஆண்டுகள் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
 ‘மலைக்கள்ளன்’ வெளியாகி 66 ஆண்டுகள் Poll_c10 ‘மலைக்கள்ளன்’ வெளியாகி 66 ஆண்டுகள் Poll_m10 ‘மலைக்கள்ளன்’ வெளியாகி 66 ஆண்டுகள் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘மலைக்கள்ளன்’ வெளியாகி 66 ஆண்டுகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82381
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 23, 2020 8:13 am

 ‘மலைக்கள்ளன்’ வெளியாகி 66 ஆண்டுகள் 565877
-
தமிழில் முதல் ஆக்‌ஷன் ஹீரோ யார் என்பது தெரியும்தானே?
முதல் மாஸ் ஹீரோ யார் என்று அறிவீர்கள்தானே.
தமிழ்த்திரையுலகின் சூப்பர் ஹீரோ யாராக இருக்கும்
என்பதை தெரிந்துகொண்டிருக்கிறீர்களே..!
இந்த மூன்றுக்குமான பதில் மூன்றெழுத்துதான். எம்.ஜி.ஆர்.

பணக்காரர்களிடம் கொள்ளையடித்து ஏழைகளுக்கு
வழங்கும் ஹீரோவின் கதை என்றால் ‘அட ராபின்ஹூட் கதை’
என்று இன்றைக்குச் சொல்லுவோம். அப்படியொரு கதையில்
எம்ஜிஆர் நடித்துத்தான் மாஸ் அந்தஸ்தைப் பெற்றார்.

பட்டிதொட்டியெங்கும், எம்ஜிஆரைக் கொண்டு சென்றது அந்தத்
திரைப்படம். அதுதான் ‘மலைக்கள்ளன்’.

திரையுலகிலும் ரசிகர்களிடமும் ‘மலைக்கள்ளன்’ ஏற்படுத்திய
தாக்கம் அசாதாரணம். அதற்கு முன்பு ஆக்‌ஷன் படங்கள்
வந்திருந்தாலும் ‘மலைக்கள்ளன்’ மலைப்பை ஏற்படுத்திய
அளவுக்கு அதுவரை எந்தப் படமும் ஏற்படுத்தவில்லை.

நாமக்கல் ராமலிங்கம் எழுதிய கதை. திரைக்கதை, வசனம்
எழுதியவர் மு.கருணாநிதி. படத்தைத் தயாரித்தது பக்ஷிராஜா
ஸ்டூடியோஸ் எனும் பிரமாண்டமான நிறுவனம்.

இந்தப் படத்தை இயக்கியவர் ஸ்ரீராமுலு நாயுடு. இவர்தான்
படத்தைத் தயாரித்து இயக்கினார். இந்தப் படம் வருவதற்கு
முன்பு ‘சந்திரலேகா’ பிரமாண்டப் படம் என்று பேரெடுத்தது.

பின்னர், அந்தப் பட்டியலில் பிரமாண்டமாக இணைந்து
கொண்டான் ‘மலைக்கள்ளன்’.

இந்தப் படத்துக்கு ஏகப்பட்ட பெருமைகள் உண்டு.
முதல் பெருமை... தமிழில் முதன்முதலாக ஜனாதிபதி விருது
பெற்ற முதல் படம் எனும் கெளரவத்தை ‘மலைக்கள்ளன்’
அடைந்தது. அந்த வருடத்தில், தமிழக அரசும் சிறந்த படமாக
அங்கீகரித்து, விருது கொடுத்தது.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82381
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 23, 2020 8:34 am

 ‘மலைக்கள்ளன்’ வெளியாகி 66 ஆண்டுகள் 15954212882948
-


மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம்.
ஊர் செட் போட்டிருப்பார்கள். காடு செட் போட்டிருப்பார்கள்.
காட்டில் மலை செட் போட்டிருப்பார்கள். ஒரு மலையில்
இருந்து இன்னொரு மலைக்குச் செல்ல ‘விஞ்ச்’ இருக்கும்.

அதில் சண்டையும் இருக்கும். ரசிகர்கள், வாய்பிளந்து
சண்டைக்காட்சிகளை அதிர்ந்து பார்த்து வியந்தான்.
மலைத்துப்போனான். திரும்பத் திரும்பப் பார்த்தான்.

எம்ஜிஆருக்கு இது மிக மிக மிக முக்கியமான படம். அதுவரை
அரச கதைகளில் நடித்துக் கொண்டிருந்தவர், இந்தப் படத்தில்
சமூகக் கதையில் முதன் முதலாக நடித்தார். அதேபோல்,
கருணாநிதி, அரசியல் அதிகமில்லாமல், சமூக அவலங்களையும்
ஏற்றதாழ்வுகளையும் தோலுரிக்கிற வசனங்களை பொளேர்
சுளீரென எழுதியிருந்தார். இவையும் ரசிகர்களால் பெரிதும்
வரவேற்கப்பட்டது.

இந்தப் படத்தின் வெற்றியையும் தாக்கத்தையும் தொடர்ந்து,
இதில் இருந்து ஒவ்வொன்றாக உருவி, ஏராளமான கதைகள்
இன்று வரைக்கும் வந்துகொண்டுதான் இருக்கின்றன.

படம் தொடங்கும் போது ஹீரோ குடும்பத்தைவிட்டுப் பிரிந்து,
பிறகு படம் முடியும்போது சேருவான் என்பது மாதிரியான
முடிச்சுகள், ‘மலைக்கள்ளன்’ படத்திலிருந்துதான் ஆரம்பித்தன.

’ராபின்ஹூட்’ கதையைச் சொல்லவே வேண்டாம்.

படத்தின் ஒளிப்பதிவு சைலன் போஸ். அந்தக் காலத்தில் மிகப்
பெரிய ஒளிப்பதிவாளர். அதேபோல், எஸ்.எம்.சுப்பையா நாயுடு.
இவருக்கு அடுத்து ஜி.ஆர்.ராமநாதன். பிறகு கே.வி.மகாதேவன்.
அடுத்து மெல்லிசை மன்னர்கள்... என்று பட்டியல் வரும். இதன்
ஆரம்பகர்த்தாக்களில் முக்கியமானவர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு.
படத்தில் ஏகப்பட்ட பாடல்கள். எல்லாமே மிகப்பெரிய
வரவேற்பைப் பெற்றன.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82381
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 23, 2020 8:37 am

 ‘மலைக்கள்ளன்’ வெளியாகி 66 ஆண்டுகள் 15954213352948
-

நாயகன் எம்ஜிஆர். நாயகி பானுமதி.
எம்ஜிஆருக்கு இணையான கேரக்டர். நடிப்பில் வெளுத்து
வாங்கியிருப்பார். பல பாடல்களை இவரே பாடியிருப்பார்.
அஷ்டாவதானி பானுமதியின் நடிப்பும் மிகப்பெரிய பலம்.
அதேபோல், எம்ஜி.சக்ரபாணி போலீஸ் அதிகாரியாக
நடித்திருப்பார்.

இவரும் தன் பங்குக்கு சிறப்பாகவே நடித்திருந்தார்.
ரஞ்சன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்கள்.

எம்ஜிஆர், அதற்கு முன்பு வரை இப்படியும் அப்படியுமாக
நடித்துக்கொண்டிருந்தார். இந்தப் படம் வந்த பிறகும் கூட
சென்டிமெண்ட், குடும்பக் கதைகளில் நடித்திருந்தார்.
ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக, மாஸ் ஹீரோ சப்ஜெக்ட்
எனும் பாதைக்குள் நுழைந்தார். அப்படிப் புதியபாதை
வகுத்துக் கொடுத்தது ’மலைக்கள்ளன்’ என்றுதான் சொல்ல
வேண்டும்.

இதைக் கொண்டுதான், எம்ஜிஆர் ஃபார்முலா எனும்
விஷயத்தை உருவாக்கினார் எம்ஜிஆர். சமூகக் கதைதான்
என்றாலும் எம்ஜிஆர் மட்டும் ராஜா காலத்து ஆடைகளை
அணிந்திருந்தார் என்பது ஆச்சரியம்தான்.

அதேபோல, படத்தின் வசனங்களுக்காக தியேட்டர்களில்
கைதட்டல்கள் கேட்டுக்கொண்டே இருந்தன.
’மலைக்கள்ளன்’ குறித்து சொல்லும்போது ஒரு தகவல்
சொல்லுவார்கள். ஒன்று... இந்தப் படத்தில் முதலில்
சிவாஜிதான் நடிக்க வேண்டியிருந்தது. அப்போது இரண்டு
படங்களில் நடிக்க ஒத்துக்கொண்டிருந்ததால், அவரால் நடிக்க
முடியவில்லை. பிறகு எம்ஜிஆர்தான் நடித்தார்.
அப்படி ’எம்ஜிஆரைப் போடுங்களேன். நல்லாருக்கும்’ என்று
சொன்னவர்... சிவாஜி கணேசன்.

அதேபோல், கருணாநிதி, இந்தப் படத்துக்கு வசனம் எழுத
சம்மதிக்கவில்லையாம். காரணம்... எம்ஜிஆர்தான். அப்போது
அவர் காங்கிரஸ் அபிமானியாக இருந்தாராம். பிறகுதான்
சம்மதித்தார் என்றொரு தகவல் சொல்லுவார்கள்.

முதல் ஜனாதிபதி விருது பெற்ற இந்த ‘மலைக்கள்ளன்’ திரைப்படம்,
1954ம் ஆண்டு வெளியானது. இதே ஆண்டில் வேறொரு வகையில்,
சிறந்த படங்கள் என்று இரண்டு விருதுகள் இரண்டு படங்களுக்குக்
கிடைத்தன. ஒன்று... ‘எதிர்பாராதது’. இன்னொன்று... ‘அந்தநாள்’.
இரண்டுமே சிவாஜி நடித்த படங்கள்.

‘மலைக்கள்ளன்’ திரைப்படம் மிகப்பிரமாண்டமான வெற்றியைப்
பெற்றது. இந்தப் படம் வெளியான கையுடன், தெலுங்கு, இந்தி,
கன்னடம், மலையாளம் என்று நான்கு மொழிகளிலும் தயாரித்து
இயக்கினார் ஸ்ரீராமுலு நாயுடு.

ஆக, ஐந்து மொழிகளிலுமே வெற்றியைத் திருடிக் கொடுத்தான்
‘மலைக்கள்ளன்’.

’தமிழன் என்றொரு இனமுண்டு’ என்பது உள்ளிட்ட பல பாடல்கள்
உள்ளன. முக்கியமாக, இத்தனை காலங்கள் கடந்தும் கூட,
இன்றைக்கும் பொருந்துகிற பாடல்... மிகப்பெரிய ஹிட்டடித்த
பாடல்... ‘எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...’
பாடல்! படம் திரையிட்ட தியேட்டர்களிலெல்லாம் 100 நாள்,
140 நாள் என ஓடியது.

1954ம் ஆண்டு, ஜூலை மாதம் 22ம் தேதி வெளியானது
‘மலைக்கள்ளன்’. வெளியாகி 66 ஆண்டுகளாகிவிட்டன.
ஆனாலும், இன்றைக்கும் மலைக்க வைத்துக் கொண்டிருக்கிறான்
‘மலைக்கள்ளன்’.

முதல் ஆக்‌ஷன் படம், முதல் ஆக்‌ஷன் ஹீரோ, முதல் ஜனாதிபதி
விருது... எல்லாவற்றுக்கும் மேலாக எம்ஜிஆர் எனும் முதல்
ஆக்‌ஷன் ஹீரோவின் முதல் ஆக்‌ஷன் படமான ‘மலைக்கள்ளன்’
படத்தை, தமிழ் சினிமா என்றைக்குமே மறக்காது!
-
------------------------------------
-வி.ராம்ஜி
இந்து தமிழ திசை



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக