புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Abiraj_26 | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள்
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
இலக்கியம்
இலக்கியம், வாழ்க்கையில் மனிதர்கள் கண்ட ஆழ்ந்த அனுபவங் களையும், உண்மைகளையும் கலைநயத்துடன் வெளியிடுகிறது. இலக்கியத்தால், பிறருடைய வாழ்க்கை, செயல், அறிவு, நினைவு, உணர்ச்சி, உள்ளக்கிடக்கை, குறிக்கோள் என்பவற்றை அறிந்து கொள்ளவும், கற்றுக் கொள்ளவும் முடியும்.
வாழ்வும் இலக்கியமும்
இலக்கியம் எனப் படைக்கப்படுவன அனைத்தும் இலக்கியமாகி விடுவதில்லை. இலக்கியம் என்பது, மனித வாழ்வோடு இணைந்து, ஆழ்ந்து–அகன்று, என்றும் நிலைபெறுவதுமான மனிதப்பண்புடன் தொடர்புடையது; மனிதனால் விரும்பக் கூடியது; மனித வாழ்க்கையோடு தொடர்புடையது; என்றும் நிலைத்திருக்கக் கூடியது; கற்போர் மனத்தில் இன்பத்தை ஊட்டுகின்றனவாக அமைவது.
இலக்கிய வகை
தனிமனிதன் வாழ்வு, அனுபவம் என்பவற்றைக் கூறும் இலக்கியம் ஒருவகை. மற்றொன்று, புறவுலக வாழ்வின் ஈடுபாட்டினால் ஏற்பட்ட அனுபவத்தின் வாழ்வு, தாழ்வு, நன்மை, தீமை, குற்றம், நீதி ஆகியவற்றுக்கும், மனிதனுக்கும் உள்ள தொடர்பை அனுபவத்தால் கூறுவது. அனுபவம் என்பது தனிமனிதன் ஒருவனுக்கு மட்டும் உரிமையானதாகா தாகையால் மனித சமுதாயம் முழுமைக்கும் பொதுமையாகி விடுகிறது. அத்தகைய வகைக்குரியவை இலக்கிய வகைகளாகின்றன.
இலக்கியக் கலை
கலை என்பது ஒருவகை ஆற்றல்; குறிப்பிட்ட ஒருவழியை மேற்கொண்டு, முன்னரே கலைஞன் மனத்தில் தோன்றிய ஒரு பயனைப் பிறர் அறியச் செய்யும் ஆற்றலே ஆகும் அது என்கிறார், ஆபர் கிராம்பி என்ற திறனாய்வாளர். மிகப் பழங்காலத்தில் வாழ்ந்த மனிதர்கள், தங்கள் கருத்துகளில் தோன்றிய சிறந்த உண்மைப் பொருள்களைக் கலைகளின் மூலமே வெளியிட்டனர். அவர்கள் வாழ்க்கையில் பெற்றிருந்த அனுபவத்தை அற ிவிக்கும் கருவியாகத் திகழ்வன அவர்கள் ஆக்கிய கலைகள் என்று, இலக்கியக் கலைக்குரிய அடிப்படைகள் கண்டறியப் படுகின்றன. அத்தகைய அடிப்படைகளைக் கொண்டு திகழும் கலைகளில் மருத்துவமும் ஒன்று. ‘ஆய கலைகள் அறுபத்து நான்கு’ என்று கூறப்படுபவற்றுள் மருத்துவமும் அடங்கும்.
இலக்கியம், வாழ்க்கையில் மனிதர்கள் கண்ட ஆழ்ந்த அனுபவங் களையும், உண்மைகளையும் கலைநயத்துடன் வெளியிடுகிறது. இலக்கியத்தால், பிறருடைய வாழ்க்கை, செயல், அறிவு, நினைவு, உணர்ச்சி, உள்ளக்கிடக்கை, குறிக்கோள் என்பவற்றை அறிந்து கொள்ளவும், கற்றுக் கொள்ளவும் முடியும்.
வாழ்வும் இலக்கியமும்
இலக்கியம் எனப் படைக்கப்படுவன அனைத்தும் இலக்கியமாகி விடுவதில்லை. இலக்கியம் என்பது, மனித வாழ்வோடு இணைந்து, ஆழ்ந்து–அகன்று, என்றும் நிலைபெறுவதுமான மனிதப்பண்புடன் தொடர்புடையது; மனிதனால் விரும்பக் கூடியது; மனித வாழ்க்கையோடு தொடர்புடையது; என்றும் நிலைத்திருக்கக் கூடியது; கற்போர் மனத்தில் இன்பத்தை ஊட்டுகின்றனவாக அமைவது.
இலக்கிய வகை
தனிமனிதன் வாழ்வு, அனுபவம் என்பவற்றைக் கூறும் இலக்கியம் ஒருவகை. மற்றொன்று, புறவுலக வாழ்வின் ஈடுபாட்டினால் ஏற்பட்ட அனுபவத்தின் வாழ்வு, தாழ்வு, நன்மை, தீமை, குற்றம், நீதி ஆகியவற்றுக்கும், மனிதனுக்கும் உள்ள தொடர்பை அனுபவத்தால் கூறுவது. அனுபவம் என்பது தனிமனிதன் ஒருவனுக்கு மட்டும் உரிமையானதாகா தாகையால் மனித சமுதாயம் முழுமைக்கும் பொதுமையாகி விடுகிறது. அத்தகைய வகைக்குரியவை இலக்கிய வகைகளாகின்றன.
இலக்கியக் கலை
கலை என்பது ஒருவகை ஆற்றல்; குறிப்பிட்ட ஒருவழியை மேற்கொண்டு, முன்னரே கலைஞன் மனத்தில் தோன்றிய ஒரு பயனைப் பிறர் அறியச் செய்யும் ஆற்றலே ஆகும் அது என்கிறார், ஆபர் கிராம்பி என்ற திறனாய்வாளர். மிகப் பழங்காலத்தில் வாழ்ந்த மனிதர்கள், தங்கள் கருத்துகளில் தோன்றிய சிறந்த உண்மைப் பொருள்களைக் கலைகளின் மூலமே வெளியிட்டனர். அவர்கள் வாழ்க்கையில் பெற்றிருந்த அனுபவத்தை அற ிவிக்கும் கருவியாகத் திகழ்வன அவர்கள் ஆக்கிய கலைகள் என்று, இலக்கியக் கலைக்குரிய அடிப்படைகள் கண்டறியப் படுகின்றன. அத்தகைய அடிப்படைகளைக் கொண்டு திகழும் கலைகளில் மருத்துவமும் ஒன்று. ‘ஆய கலைகள் அறுபத்து நான்கு’ என்று கூறப்படுபவற்றுள் மருத்துவமும் அடங்கும்.
இலக்கியப் பொருள்
தமிழர்தம் வாழ்வியல் இலக்கியமாகக் கொள்ளப் பட்டவை, இரண்டு; ஒன்று அகம், மற்றொன்று புறம். அகப்பாட்டு இலக்கியங்கள் அறிவை ஆதாரமாகக் கொண்டு தோன்றுவதில்லை. புறப்பாட்டு இலக்கியங்கள் உலகியலையும், அறிவையும் ஆதாரமாகக் கொண்டு தோன்றுகின்றன. அறிவின் பயனாகத் தோன்றுகின்ற புறப்பாட்டு இலக்கியங்கள் யாவரும் ஒப்புக் கொள்ளக் கூடியனவாக இருக்கும். ‘‘மண்திணிந்த நிலனும் நிலனேந்திய விசும்பும், விசும்புதைவரு வளியும், வளித்தலைஇய தீயும், தீ முரணிய நீரும் என்றாங்கும் ஐம்பெரும் பூதத்து இயற்கை போல”2 என்னும் புறப்பாடல், அறிவின் பயனாகவும் அதன் அடிப்படையிலும் தோன்றியது. இது அறிவுடை யோர் அனைவருக்கும் ஏற்புடையதே. இவை அறிவின் பயனாகக் காணப்படும் பொருளைப் பற்றிக் கூறப்பட்டவை. இவ்வாறான பாடல்கள் மெய்ம்மைப் பொருள்கள் பற்றியன. இத்தகைய மெய்ம்மைப் பொருள்களைப் பற்றிய இலக்கியங்களாகத் திகழ்பவை மருத்துவ இலக்கியங்களாகும்.
இலக்கிய நயங்கள்
இலக்கியம் சிறந்து விளங்குவதற்குக் காரணமாக அமைபவை புலவரின் கற்பனைத் திறன், கருத்துச் செறிவு, கவிதை நயம், சொல்லுகின்ற உத்தி, சொல்வளம் ஆகியவை எனலாம். இவை யெல்லாம் படைப்பு இலக்கியங்களில் பொருந்தி வரக் காணலாம். கற்பனைக்கு அதிகம் இடந் தராமல் கூறவந்த பொருளை உணர்த்துவதே நோக்கமாகக் கொண்ட இலக்கியங்களில் உணர்வுச் சொற்கள் (sensuous words) குறைவாகவும், அறிவுச் சொற்கள் (conceptual words) அதிகமாகவும் காணப்படும். அறிவுச் சொற்கள் எனப்படும் சொல்வகைகள் நிரம்பக் கொண்ட இலக்கியவகை அமைப்பில் காணப்படுவது தமிழ் மருத்துவ இலக்கியங்களாகும்.
அந்த மருத்துவ இலக்கியங்களில், சொற்களைப் போலவே சொல்லப்படக்கூடிய கருத்தின் பொருள் சிதைந்து விடாதவாறு, பொருளை உணர்த்துவது ஒன்றே நோக்கமாகக் கொண்டு, பொருட் செறிவுகளைக் கொண்ட பாடல்கள் நிறைந்து காணப்படுகின்றன. பொருளைச் சொல்வதற்காகப் பயன்படுத்தப்படும் உத்திகள் மாறி மாறி அமைந்தால், கற்போர் நெஞ்சில் கருத்துச் சிதைவு தோன்றக்கூடுமாகை யால், பெரும்பாலும் தொடக்க முதல் இறுதி வரை ஒரே வகையான உத்தி முறைகள் கையாளப்பட்டிருக்கின்றன.
தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்ற அளவுக்குக் கவிதை அழகு, மருத்துவ இலக்கியங்களில் காணப்படுவதில்லை. இருப்பினும் மருத்துவத்துக்குரிய பண்புகளை விளக்கிக் கூறும் போக்கில் ஆங்காங்கே கவிதை அழகு, படைப்பிலக்கியங்களில் காணப் படுவதைப் போலப் பரந்து காணப்படுகின்றன.
இலக்கியங்களின் இயல்புகள் எனக் கண்டறியப்பட்ட சில தன்மைகளை இலக்கியக் கூறுகள் எனலாம். இலக்கியத்தின் இயல்புக்குத் தேவை உணர்ச்சி, கற்பனை, வடிவம் ஆகியன. இவை, மருத்துவ இலக்கியங்களில் இடம் பெற்றிருக்கும் பாங்கு இங்கு ஆராயப்படுகிகின்றன.
மருத்துவ நூல்களின் அமைப்பு முறை, நூல்களின் வகைகள், செய்யுள் வடிவங்களின் வகை, செய்யுள் உறுப்புகள், செய்யுள்களில் காணப்பெறும் குறிப்புப் பொருள்கள், சொல்லாட்சி, அணிகளான உவமை, உருவகம் போன்றவற்றின் நிலை ஆகியன ஆராயப் படுகின்றன.
தமிழர்தம் வாழ்வியல் இலக்கியமாகக் கொள்ளப் பட்டவை, இரண்டு; ஒன்று அகம், மற்றொன்று புறம். அகப்பாட்டு இலக்கியங்கள் அறிவை ஆதாரமாகக் கொண்டு தோன்றுவதில்லை. புறப்பாட்டு இலக்கியங்கள் உலகியலையும், அறிவையும் ஆதாரமாகக் கொண்டு தோன்றுகின்றன. அறிவின் பயனாகத் தோன்றுகின்ற புறப்பாட்டு இலக்கியங்கள் யாவரும் ஒப்புக் கொள்ளக் கூடியனவாக இருக்கும். ‘‘மண்திணிந்த நிலனும் நிலனேந்திய விசும்பும், விசும்புதைவரு வளியும், வளித்தலைஇய தீயும், தீ முரணிய நீரும் என்றாங்கும் ஐம்பெரும் பூதத்து இயற்கை போல”2 என்னும் புறப்பாடல், அறிவின் பயனாகவும் அதன் அடிப்படையிலும் தோன்றியது. இது அறிவுடை யோர் அனைவருக்கும் ஏற்புடையதே. இவை அறிவின் பயனாகக் காணப்படும் பொருளைப் பற்றிக் கூறப்பட்டவை. இவ்வாறான பாடல்கள் மெய்ம்மைப் பொருள்கள் பற்றியன. இத்தகைய மெய்ம்மைப் பொருள்களைப் பற்றிய இலக்கியங்களாகத் திகழ்பவை மருத்துவ இலக்கியங்களாகும்.
இலக்கிய நயங்கள்
இலக்கியம் சிறந்து விளங்குவதற்குக் காரணமாக அமைபவை புலவரின் கற்பனைத் திறன், கருத்துச் செறிவு, கவிதை நயம், சொல்லுகின்ற உத்தி, சொல்வளம் ஆகியவை எனலாம். இவை யெல்லாம் படைப்பு இலக்கியங்களில் பொருந்தி வரக் காணலாம். கற்பனைக்கு அதிகம் இடந் தராமல் கூறவந்த பொருளை உணர்த்துவதே நோக்கமாகக் கொண்ட இலக்கியங்களில் உணர்வுச் சொற்கள் (sensuous words) குறைவாகவும், அறிவுச் சொற்கள் (conceptual words) அதிகமாகவும் காணப்படும். அறிவுச் சொற்கள் எனப்படும் சொல்வகைகள் நிரம்பக் கொண்ட இலக்கியவகை அமைப்பில் காணப்படுவது தமிழ் மருத்துவ இலக்கியங்களாகும்.
அந்த மருத்துவ இலக்கியங்களில், சொற்களைப் போலவே சொல்லப்படக்கூடிய கருத்தின் பொருள் சிதைந்து விடாதவாறு, பொருளை உணர்த்துவது ஒன்றே நோக்கமாகக் கொண்டு, பொருட் செறிவுகளைக் கொண்ட பாடல்கள் நிறைந்து காணப்படுகின்றன. பொருளைச் சொல்வதற்காகப் பயன்படுத்தப்படும் உத்திகள் மாறி மாறி அமைந்தால், கற்போர் நெஞ்சில் கருத்துச் சிதைவு தோன்றக்கூடுமாகை யால், பெரும்பாலும் தொடக்க முதல் இறுதி வரை ஒரே வகையான உத்தி முறைகள் கையாளப்பட்டிருக்கின்றன.
தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்ற அளவுக்குக் கவிதை அழகு, மருத்துவ இலக்கியங்களில் காணப்படுவதில்லை. இருப்பினும் மருத்துவத்துக்குரிய பண்புகளை விளக்கிக் கூறும் போக்கில் ஆங்காங்கே கவிதை அழகு, படைப்பிலக்கியங்களில் காணப் படுவதைப் போலப் பரந்து காணப்படுகின்றன.
இலக்கியங்களின் இயல்புகள் எனக் கண்டறியப்பட்ட சில தன்மைகளை இலக்கியக் கூறுகள் எனலாம். இலக்கியத்தின் இயல்புக்குத் தேவை உணர்ச்சி, கற்பனை, வடிவம் ஆகியன. இவை, மருத்துவ இலக்கியங்களில் இடம் பெற்றிருக்கும் பாங்கு இங்கு ஆராயப்படுகிகின்றன.
மருத்துவ நூல்களின் அமைப்பு முறை, நூல்களின் வகைகள், செய்யுள் வடிவங்களின் வகை, செய்யுள் உறுப்புகள், செய்யுள்களில் காணப்பெறும் குறிப்புப் பொருள்கள், சொல்லாட்சி, அணிகளான உவமை, உருவகம் போன்றவற்றின் நிலை ஆகியன ஆராயப் படுகின்றன.
செய்யுள் கூறும் முறை
சித்த மருத்துவ முறைகளைக் கூறும் மருத்துவ நூல் ஆசிரியர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு வகையான கூறும் முறைகளை அமைத்திருக்கின்றனர். அதிலும் குறிப்பாக, அகத்தியர் தன் மாணாக்கர் புலத்தியருக்குக் கூறுவது போலவும், போகர் தன் மாணாக்கர் புலிப்பாணிக்கு உரைப்பது போலவும் கூறுகின்றனர். மற்ற நூலாசிரியர்களில் திருவள்ளுவர் ஆண்டே என்று நிலக்கிழாரை விளிப்பது போலக் கூறுகிறார்.
அகத்தியர் நூலுள்,
கேளப்பா புலத்தியனே ஐயா ஐயா
கெடியான தயிலமதில் வகையைக் கேளு!''3
என்றும்,
எட்டடா, வெட்டடா, தட்டடா, மெட்டடா''4
என்றும்,
தயவாய்ச் சொல்லும் பள்ளீரே''5
அதிக மேகசுர மோடு மாண்டே''6
என்றும் கூறப்படுகிறது. காவியம், கலைஞானம் போன்ற பெருநூல்கள் கூறு முறையில் புலத்தியனே என்றும், வல்லாதி போன்ற நடுத்தர அளவுடைய நூல்கள் எட்டடா, வெட்டடா என்றும், பள்ளு நூல் போன்ற சிறுநூல்கள் பள்ளீரே, ஆண்டே என்னும் முன்னிலைகளைக் கொண்டு உரைக்கக் காணலாம்.
போகர் நூலுள்,
சேரவே இன்னுமொரு மார்க்கம் சொல்வேன்
செம்மலுடன் புலிப்பாணி மைந்தா கேளு''7
என்றும்,
ஆச்சப்பா இன்னமொரு மர்மம் சொல்வேன்
அப்பனே புலிப்பாணி மைந்தா கேளு''8
என்றும், புலிப்பாணியை விளித்துக் கூறும் முறை போகர் நூல்களில் காணப்படுகிறது.
இராம தேவர் நூலுள்,
பாடுகிறேன், நாடுகிறேன்''
பாரப்பா, நேரப்பா, வீரப்பா, ஆரப்பா''9
என்றும், யாரையும் குறிப்பிட்டு உரைக்காமல் கூறுவதாக அமைந் துள்ளது.
திருவள்ளுவர் நூலுள்,
பரிசை கோடா கோடி வித்தைகாண்
பாடினார் பதினெண் மகுத்தோர்களும்
வரிசையான திருவள்ளுவ னானதால்
வைப்புமே யருள் வாத மிதாண்டையே''10
உங்களுக்கும் எங்களுக்கும் பேதமாமோஆண்டே
உள்ளுணர்ந்து பார்க்க பேதம் எள்ளளவில்லை''11
என்றும், ஆண்டே–ஆண்டே என்றும் முன்னிலை கொண்டு பாடுவதாக அமைந்திருக்கிறது.
சித்த மருத்துவ முறைகளைக் கூறும் மருத்துவ நூல் ஆசிரியர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு வகையான கூறும் முறைகளை அமைத்திருக்கின்றனர். அதிலும் குறிப்பாக, அகத்தியர் தன் மாணாக்கர் புலத்தியருக்குக் கூறுவது போலவும், போகர் தன் மாணாக்கர் புலிப்பாணிக்கு உரைப்பது போலவும் கூறுகின்றனர். மற்ற நூலாசிரியர்களில் திருவள்ளுவர் ஆண்டே என்று நிலக்கிழாரை விளிப்பது போலக் கூறுகிறார்.
அகத்தியர் நூலுள்,
கேளப்பா புலத்தியனே ஐயா ஐயா
கெடியான தயிலமதில் வகையைக் கேளு!''3
என்றும்,
எட்டடா, வெட்டடா, தட்டடா, மெட்டடா''4
என்றும்,
தயவாய்ச் சொல்லும் பள்ளீரே''5
அதிக மேகசுர மோடு மாண்டே''6
என்றும் கூறப்படுகிறது. காவியம், கலைஞானம் போன்ற பெருநூல்கள் கூறு முறையில் புலத்தியனே என்றும், வல்லாதி போன்ற நடுத்தர அளவுடைய நூல்கள் எட்டடா, வெட்டடா என்றும், பள்ளு நூல் போன்ற சிறுநூல்கள் பள்ளீரே, ஆண்டே என்னும் முன்னிலைகளைக் கொண்டு உரைக்கக் காணலாம்.
போகர் நூலுள்,
சேரவே இன்னுமொரு மார்க்கம் சொல்வேன்
செம்மலுடன் புலிப்பாணி மைந்தா கேளு''7
என்றும்,
ஆச்சப்பா இன்னமொரு மர்மம் சொல்வேன்
அப்பனே புலிப்பாணி மைந்தா கேளு''8
என்றும், புலிப்பாணியை விளித்துக் கூறும் முறை போகர் நூல்களில் காணப்படுகிறது.
இராம தேவர் நூலுள்,
பாடுகிறேன், நாடுகிறேன்''
பாரப்பா, நேரப்பா, வீரப்பா, ஆரப்பா''9
என்றும், யாரையும் குறிப்பிட்டு உரைக்காமல் கூறுவதாக அமைந் துள்ளது.
திருவள்ளுவர் நூலுள்,
பரிசை கோடா கோடி வித்தைகாண்
பாடினார் பதினெண் மகுத்தோர்களும்
வரிசையான திருவள்ளுவ னானதால்
வைப்புமே யருள் வாத மிதாண்டையே''10
உங்களுக்கும் எங்களுக்கும் பேதமாமோஆண்டே
உள்ளுணர்ந்து பார்க்க பேதம் எள்ளளவில்லை''11
என்றும், ஆண்டே–ஆண்டே என்றும் முன்னிலை கொண்டு பாடுவதாக அமைந்திருக்கிறது.
தமிழ் மருத்துவ நூல் அமைப்பு முறை
நூல்கள் எவ்வாறு அமைதல் வேண்டும் என்று தொல்காப்பியம் கூறும் இலக்கணமாவது,
“நூல் என்பது, சொல்லப்படும் பொருள், தொடக்கம் முதல் முடிவுவரை மாறுபாடின்றி அமைக்கக் கருதிய பொருளைத் தொகுத்தும், விரித்தும், வகுத்தும் காட்டித் தன்கண் அடங்கிய பொருள்களை விரித் துரைத்தற்கு ஏற்ற சொல்லமைப்போடு பொருந்தி நுண்ணறிவு பொருந்த விளக்குதலாகியது நூல்”12 என்னும் இலக்கண எல்லைக்குள் அமைந்தனவாக மருத்துவ நூல்கள் விளங்குகின்றன.
நூலுள் சொல்லக் கருதிய பொருள், தொடக்கம் முதல் முடிவு வரை வேற்றுப் பொருள் கலவாமல், பொருளின் பொருளைத் தொகுத்தும், விரித்தும், வகுத்தும் உரைக்கப் பட்டுள்ள நூல்களாக, அகத்தியர் வைத்திய காவியம், அகத்தியர் பரிபூரணம்400, அகத்தியர் கருக்குரு, அகத்தியர் வைத்திய வல்லாதி, அகத்தியர் நயனவிதி, கருவூரார் வாத காவியம், சட்டமுனி வாத காவியம், போகர்700, புலிப்பாணி வைத்தியம்500, மச்சமுனி திருமந்திரம்800, திருவள்ளுவர் வைத்திய சிந்தாமணி, திருவள்ளுவர் பஞ்சரத்தினம், தேரையர் சேகரப்பா, மருத்துப் பாரதம், யமக வெண்பா, யூகிமுனிவர் பரிபூரணம்200, யூகி முனிவர் பிடிவாதம்1000, யூகிமுனிவர் வாத வைத்திய உலா போன்ற நூல்கள் கூறத் தக்கவை.
நூலின் தலைப்புக்கு ஏற்றவாறு பொருளமைந்து இருக்கக் காணலாம். நூலின் பெயர்கள், நூலில் அமைந்த பொருளின் உறுப்பின் பெயராலும், யாப்பின் பெயராலும், அளவின் பெயராலும், வகையின் பெயராலும் அமைந்துள்ளன.
நூலின் வகை
நூலின் வகைகளைக் குறிப்பிடும் போது, அவை இரண்டு வகைப்படும் என்பர். ஒன்று, முதனூல் என்றும், மற்றொன்று வழி நூல் என்றும் உரைப்பர்.
உரைபடு நூல்தாம் இருவகை நிலைய
முதலும் வழியுமென நூதலிய நெறியின்''13
என்னும் சூத்திரத்தின் நெறியின் வழி அமைந்த நூலான முதனூல் எனப்படுவது, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றவை. வழிநூல் எனப்படுவது, மகாபாரதம், கம்பராமாயணம் போன்றவை.
தமிழ் மருத்துவ நூல்களில் முதனூல் என்பதும், வழிநூல் என்பதும் இருவகைப் பட்ட நூல்கள் அல்லாமல் சார்புகளும் இருக்கக் காணலாம்.
நூல்கள் எவ்வாறு அமைதல் வேண்டும் என்று தொல்காப்பியம் கூறும் இலக்கணமாவது,
“நூல் என்பது, சொல்லப்படும் பொருள், தொடக்கம் முதல் முடிவுவரை மாறுபாடின்றி அமைக்கக் கருதிய பொருளைத் தொகுத்தும், விரித்தும், வகுத்தும் காட்டித் தன்கண் அடங்கிய பொருள்களை விரித் துரைத்தற்கு ஏற்ற சொல்லமைப்போடு பொருந்தி நுண்ணறிவு பொருந்த விளக்குதலாகியது நூல்”12 என்னும் இலக்கண எல்லைக்குள் அமைந்தனவாக மருத்துவ நூல்கள் விளங்குகின்றன.
நூலுள் சொல்லக் கருதிய பொருள், தொடக்கம் முதல் முடிவு வரை வேற்றுப் பொருள் கலவாமல், பொருளின் பொருளைத் தொகுத்தும், விரித்தும், வகுத்தும் உரைக்கப் பட்டுள்ள நூல்களாக, அகத்தியர் வைத்திய காவியம், அகத்தியர் பரிபூரணம்400, அகத்தியர் கருக்குரு, அகத்தியர் வைத்திய வல்லாதி, அகத்தியர் நயனவிதி, கருவூரார் வாத காவியம், சட்டமுனி வாத காவியம், போகர்700, புலிப்பாணி வைத்தியம்500, மச்சமுனி திருமந்திரம்800, திருவள்ளுவர் வைத்திய சிந்தாமணி, திருவள்ளுவர் பஞ்சரத்தினம், தேரையர் சேகரப்பா, மருத்துப் பாரதம், யமக வெண்பா, யூகிமுனிவர் பரிபூரணம்200, யூகி முனிவர் பிடிவாதம்1000, யூகிமுனிவர் வாத வைத்திய உலா போன்ற நூல்கள் கூறத் தக்கவை.
நூலின் தலைப்புக்கு ஏற்றவாறு பொருளமைந்து இருக்கக் காணலாம். நூலின் பெயர்கள், நூலில் அமைந்த பொருளின் உறுப்பின் பெயராலும், யாப்பின் பெயராலும், அளவின் பெயராலும், வகையின் பெயராலும் அமைந்துள்ளன.
நூலின் வகை
நூலின் வகைகளைக் குறிப்பிடும் போது, அவை இரண்டு வகைப்படும் என்பர். ஒன்று, முதனூல் என்றும், மற்றொன்று வழி நூல் என்றும் உரைப்பர்.
உரைபடு நூல்தாம் இருவகை நிலைய
முதலும் வழியுமென நூதலிய நெறியின்''13
என்னும் சூத்திரத்தின் நெறியின் வழி அமைந்த நூலான முதனூல் எனப்படுவது, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றவை. வழிநூல் எனப்படுவது, மகாபாரதம், கம்பராமாயணம் போன்றவை.
தமிழ் மருத்துவ நூல்களில் முதனூல் என்பதும், வழிநூல் என்பதும் இருவகைப் பட்ட நூல்கள் அல்லாமல் சார்புகளும் இருக்கக் காணலாம்.
முதனூல்/வழிநூல்
நூலாசிரியனின் மெய்யுணர்வினாலும் அறிவின் முயற்சியினாலும் இயற்றப்படுவது முதனூல் என்றும், வேற்று நூல் ஒன்றன் துணை கொண்டு அதன் பொருளை அடியொற்றி இயற்றுவது வழிநூல் என்றும் அறியப்படுவதனைப் போல,
செப்பினான் தென்மலையிருந்து
தீந்தமிழா ராய்ந்து இலக்கணம் வகுத்த
செய்தவத் துயர்முனி தானே''
என்று, நாக முனிவர் தலை நோய் மருத்துவ நூலில் உரைத்திருப்ப தனால், அந்நூல் வழிநூல் எனக் கருதலாம்.
தேரன் நான் மொழி செந்தமிழ் வாகடம்
ஊம நாரியி யம்பிடு வாசகமெனுமேனும்
ஆதி யானதன் வந்திரி மாதவர்
போகர் மூலர்தி கம்பரர் கோரகர்
ஆயர் வாசுகர் கம்பள் மூழையர்சடைநாதர்
போதர் மேதையர் கொங்கணர் மாசிதர்
ஆதி நூனெறி பண்டித தானவர்
போலி வாகட னின்சொலி தாமெனவருள் வாரே''14
என, தேரையர் சேகரப்பா அவையடக்கம் கூறுவதனால், குறுமுனி, தன்வந்திரி, திருமூலர்,போகர் , திகம்பரர், கோரக்கர், இடைக்காடர், வாசுகர், கம்பளிச் சித்தர், சடை நாதர், கொங்கணர் ஆகியோர் இயற்றிய முதல் நூலுக்கு இந்நூல் வழிநூல் எனக் கருதலாம்.
மேலும், தேரையர் நூல்களான சிகாமணி வெண்பா, நிகண்டு, காப்பியம், தரு, அந்தாதி, மருத்துப் பாரதம், வண்ணம், நாள்மாலை, யமக வெண்பா, எதுகை வெண்பா, கரிசல் என்னும் பதினொரு நூலையும் வழிநூலாகவே கொள்ள வேண்டும்.
விதியினால் விதித் தருட்பரம குருமுனி யருளால்
மதியினால் திருவள்ளுவன் எனும் புகழ்பெருநூல்
ஆதித ஞானவெட்டி யாயிரத் தைஞ்ஞூரதின் சுருக்கம்
துதியரத்ன சிந்தாமணி எனும் எண்ணூ<று தொழுவாம்''15
என்று, நவரத்தின சிந்தாமணியில் நூல் வணக்கம் கூறப்படுகிறது. திருவள்ளுவர் இயற்றிய இந்நூலும், ஞானவெட்டியான்1500–ம் திருவள்ளுவரின் முதனூலாகும். அதேபோல, இவரின் கெவுனமணி வயது100, பஞ்ச ரத்தினம்500, குறள் நெடி ரஹிதம் 300, 200, 50, 30, 16, 10 என்னும் நூல்களும் முதனூல் என்றுரைக்கலாம்.
தராதரமா யெனையாண்ட போகர் பாதம்
சதாநித்தம் பணிந்துணர்ந்து தாசனாகி
துறா துரச்சி சிவன் பாதமும் போற்றி போற்றி
சொல்லுகிறேன் ஏழுலட்சம் சுருக்கம் தானே.''16
பருவத்தில் வந்து என்னை ஆட்கொண்ட போக முனிவர் பாதங்களைப் போற்றிப் பணிந்து, அவரின் மாணவனாகி சிவன் பாதம் போற்றி, போற்றிச் சொல்லுகிறேன், ஏழுலட்சம் பாக்களைக் கொண்ட வாத நூலின் சுருக்கந் தன்னை என்றுரைக்கின்றமையால் கொங்கண முனிவரின் முக்காண்டம் 3000மும், வழிநூல் என்றுரைக்கலாம்.
நூலாசிரியனின் மெய்யுணர்வினாலும் அறிவின் முயற்சியினாலும் இயற்றப்படுவது முதனூல் என்றும், வேற்று நூல் ஒன்றன் துணை கொண்டு அதன் பொருளை அடியொற்றி இயற்றுவது வழிநூல் என்றும் அறியப்படுவதனைப் போல,
செப்பினான் தென்மலையிருந்து
தீந்தமிழா ராய்ந்து இலக்கணம் வகுத்த
செய்தவத் துயர்முனி தானே''
என்று, நாக முனிவர் தலை நோய் மருத்துவ நூலில் உரைத்திருப்ப தனால், அந்நூல் வழிநூல் எனக் கருதலாம்.
தேரன் நான் மொழி செந்தமிழ் வாகடம்
ஊம நாரியி யம்பிடு வாசகமெனுமேனும்
ஆதி யானதன் வந்திரி மாதவர்
போகர் மூலர்தி கம்பரர் கோரகர்
ஆயர் வாசுகர் கம்பள் மூழையர்சடைநாதர்
போதர் மேதையர் கொங்கணர் மாசிதர்
ஆதி நூனெறி பண்டித தானவர்
போலி வாகட னின்சொலி தாமெனவருள் வாரே''14
என, தேரையர் சேகரப்பா அவையடக்கம் கூறுவதனால், குறுமுனி, தன்வந்திரி, திருமூலர்,போகர் , திகம்பரர், கோரக்கர், இடைக்காடர், வாசுகர், கம்பளிச் சித்தர், சடை நாதர், கொங்கணர் ஆகியோர் இயற்றிய முதல் நூலுக்கு இந்நூல் வழிநூல் எனக் கருதலாம்.
மேலும், தேரையர் நூல்களான சிகாமணி வெண்பா, நிகண்டு, காப்பியம், தரு, அந்தாதி, மருத்துப் பாரதம், வண்ணம், நாள்மாலை, யமக வெண்பா, எதுகை வெண்பா, கரிசல் என்னும் பதினொரு நூலையும் வழிநூலாகவே கொள்ள வேண்டும்.
விதியினால் விதித் தருட்பரம குருமுனி யருளால்
மதியினால் திருவள்ளுவன் எனும் புகழ்பெருநூல்
ஆதித ஞானவெட்டி யாயிரத் தைஞ்ஞூரதின் சுருக்கம்
துதியரத்ன சிந்தாமணி எனும் எண்ணூ<று தொழுவாம்''15
என்று, நவரத்தின சிந்தாமணியில் நூல் வணக்கம் கூறப்படுகிறது. திருவள்ளுவர் இயற்றிய இந்நூலும், ஞானவெட்டியான்1500–ம் திருவள்ளுவரின் முதனூலாகும். அதேபோல, இவரின் கெவுனமணி வயது100, பஞ்ச ரத்தினம்500, குறள் நெடி ரஹிதம் 300, 200, 50, 30, 16, 10 என்னும் நூல்களும் முதனூல் என்றுரைக்கலாம்.
தராதரமா யெனையாண்ட போகர் பாதம்
சதாநித்தம் பணிந்துணர்ந்து தாசனாகி
துறா துரச்சி சிவன் பாதமும் போற்றி போற்றி
சொல்லுகிறேன் ஏழுலட்சம் சுருக்கம் தானே.''16
பருவத்தில் வந்து என்னை ஆட்கொண்ட போக முனிவர் பாதங்களைப் போற்றிப் பணிந்து, அவரின் மாணவனாகி சிவன் பாதம் போற்றி, போற்றிச் சொல்லுகிறேன், ஏழுலட்சம் பாக்களைக் கொண்ட வாத நூலின் சுருக்கந் தன்னை என்றுரைக்கின்றமையால் கொங்கண முனிவரின் முக்காண்டம் 3000மும், வழிநூல் என்றுரைக்கலாம்.
இந்நூலாசிரியரின் காலத்தில் வாதநூல்ஏழுலட்சம் பாக்களைக் கொண்டு இருந்தது என்பது மிகையாகத் தோன்றகிறது. ஏழு லட்சம் என்பது ஏழு லட்சணம் அல்லது ஏழு வண்ணங்கள் எனக் கருதலாம். நிறங்களை அறிதல் வாதத்தில் பொருள்களை ஒன்றுடன் ஒன்றை இணைப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்பதால் ஏழுலட்சணம், ஏழு லட்சம் என்றார் எனலாம்.
யூகி முனிவர், தன் முன்னோர்களான அகத்தியர், புலத்தியர், தேரையர் வழி முறை மரபில் தோன்றியவர் என்பதாகக் கூறினார், அவர்களிடம் கேட்டுத் தேறி நூலை இயற்றினேன் என்பது, மருத்துவம் வழிவழியாகக் குருமுறையில் பயிலப்பட்டு வந்திருக்கிறது. தன் முன்னோர்கள் பாடமாகக் கேட்டு அறிந்து பின்னர் பயிற்சி பெற்று அனுபவத்தை நூலாகச் செய்ததையே, மரபுக்குக் குற்றம் வாராதவாறு கூறுகிறார்.
அகத்தியருக் குச் சொல்ல ஆதி புலத்தியரும்
தகத்துடனே கேட்டுத் தான்மகிழ்ந்தார் சகத்தில்
தேரருக்குச் சொன்னார் தேரருமே யூகிமுனி
பாரி லதிகம் பரத்தினர் சீராய்
உலகம் பிழைக்க வோங்கு ரசவாதம்
கலகமில் லாமலே காட்டினார்.''17
யூகிமுனிவர், “பாரில் அதிகம் பரத்தினார்’ என்றுரைப்பதினால் முன்னவர்கள் மாணவர்களுக்குப் பாடமுறையில் மட்டுமே சொல்லி யுள்ளனர். யூகி முனிவரோ உலகத்தின் நலன்கருதி நூலாக்கி வெளியாக்கினார் என்றதனால், யூகிமுனிவரின் வைத்திய வாத உலா, பிடிவாதம் 1000, வாதகாவியம் 2000, வாதகாவியக் கும்மி 1000, வாதாங்க தீட்சை 300, வாதவைத்திய விளக்கம் 200, மதிவெண்பா, கரிசலை 36 , வைத்திய சிந்தாமணி 800, ஆனந்த களிப்பு 1000 என்னும் நூல்கள் முதனூல் வகையைச் சேர்ந்தனவாகக் கொள்ளலாம்.
மேற்கண்டவாறு, சித்த மருத்துவ நூல்கள் முதனூல்களாகவும், வழி நூல்களாகவும் அமைந்து காணப்படுகின்றன. இவை, நூல்களுக்கு இலக்கணம் கூறும் முறையினைக் கொண்டு இருப்பதாகக் கருதலாம்.
யூகி முனிவர், தன் முன்னோர்களான அகத்தியர், புலத்தியர், தேரையர் வழி முறை மரபில் தோன்றியவர் என்பதாகக் கூறினார், அவர்களிடம் கேட்டுத் தேறி நூலை இயற்றினேன் என்பது, மருத்துவம் வழிவழியாகக் குருமுறையில் பயிலப்பட்டு வந்திருக்கிறது. தன் முன்னோர்கள் பாடமாகக் கேட்டு அறிந்து பின்னர் பயிற்சி பெற்று அனுபவத்தை நூலாகச் செய்ததையே, மரபுக்குக் குற்றம் வாராதவாறு கூறுகிறார்.
அகத்தியருக் குச் சொல்ல ஆதி புலத்தியரும்
தகத்துடனே கேட்டுத் தான்மகிழ்ந்தார் சகத்தில்
தேரருக்குச் சொன்னார் தேரருமே யூகிமுனி
பாரி லதிகம் பரத்தினர் சீராய்
உலகம் பிழைக்க வோங்கு ரசவாதம்
கலகமில் லாமலே காட்டினார்.''17
யூகிமுனிவர், “பாரில் அதிகம் பரத்தினார்’ என்றுரைப்பதினால் முன்னவர்கள் மாணவர்களுக்குப் பாடமுறையில் மட்டுமே சொல்லி யுள்ளனர். யூகி முனிவரோ உலகத்தின் நலன்கருதி நூலாக்கி வெளியாக்கினார் என்றதனால், யூகிமுனிவரின் வைத்திய வாத உலா, பிடிவாதம் 1000, வாதகாவியம் 2000, வாதகாவியக் கும்மி 1000, வாதாங்க தீட்சை 300, வாதவைத்திய விளக்கம் 200, மதிவெண்பா, கரிசலை 36 , வைத்திய சிந்தாமணி 800, ஆனந்த களிப்பு 1000 என்னும் நூல்கள் முதனூல் வகையைச் சேர்ந்தனவாகக் கொள்ளலாம்.
மேற்கண்டவாறு, சித்த மருத்துவ நூல்கள் முதனூல்களாகவும், வழி நூல்களாகவும் அமைந்து காணப்படுகின்றன. இவை, நூல்களுக்கு இலக்கணம் கூறும் முறையினைக் கொண்டு இருப்பதாகக் கருதலாம்.
பாக்களின் வகைகள்
சித்த மருத்துவ நூல்களில் அமைந்திருக்கும் பாடல்கள் எந்தெந்த வகையானதாக இருக்கின்றன என்பது இந்தப் பகுதியில் ஆராயப் படுகிறது.
பா, வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என நான்கு வகைப்படும். இவை செப்பல், அகவல், துள்ளல், தூங்கல் என்று ஓசை அடிப்படையில் வகைப்படுத்தப் பட்டிருக்கின்றன.
பாக்கள் ஓசையால் மகிழ்ச்சியை ஏற்படுத்தி, அதன்பின் கூறப் படுகின்ற கருத்தின் பொருளை உணரச் செய்யப் பயன்படுகின்றன. அந்த வகையில் மருத்துவ நூல்கள், பலவகைப் பாக்களையும், பாவினங் களையும் கொண்டு இயற்றப்பட்டிருக்கின்றன. அவற்றில் பெரும் பாலான பாடல்கள் ஓசைநயம் கருதியே இயற்றப் பெற்றதாகக் கருதலாம். பொருளைக் கூறும் போது எழுத்து, சொல் ஆகியவற்றின் அளவுக்கு ஏற்றவாறு ஒரு சில இடங்களில் யாப்பை மீறுவது, இதற்குக் காரணமாகக் கூறலாம்.
வெண்பாவின் தலைமை
பாக்களில் வெண்பா முதன்மையானது. பிற பாடல்களை இயற்றுவதைவிட வெண்பா இயற்றுவது கடினம் என்பதால் ‘வெண்பா புலி’ என்று கூறக் காணலாம். அத்தகைய வெண்பாவில், நயமிக்க மருத்துவக் கருத்துகளைக் கூறுவது மிகக் கடினம் எனத் தோன்றினாலும், வெண்பா மருத்துவ நூல்களில் அதிகம் இடம் பெற்றிருக்கக் காணலாம். முழுவதும், வெண்பாவாகக் கொண்ட நூல்கள் இருக்கின்றன. வெண்பாவில் அமைந்த நாலடியார் என்னும் கீழ்க் கணக்கு நூல் போல, மருத்துவ வெண்பாக்கள் உள்ளன.
வெண்பா
மேலிட்ட பித்த வெறிக்குங் குரங்கினெதிர்
கோலிட் டதுபோற் குறுக்கலாற் சாலப்
பொடியாக்கித் தேனுடனே போட்டுச் சமைத்த
துடியா லறும்பித்தச் சூர்''18
இது, இரண்டாம் அடியில் தனிச்சொல் பெற்று வந்த இன்னிசை வெண்பா. இரண்டு விகற்பத்தால் அமைந்தது.
ஏலத்தைப் பொடியாக்கித் தேனுடன் கூட்டி உண்டால், வெறிபிடித்த குரங்கின் முன் கோல் காட்டினால் அடங்கி விடுவதைப் போல, பித்த நோய் தீர்ந்து விடும் என்பது பொருளாகும்.
அண்டத்துக் குள்ளகில மத்தனையும் வைகுதல் போல்
குண்டத்துக் குள்ளே குழுக்கள் போல் உண்டாகப்
பூண்டிருக்கு முண்மைப் பொருளா மவிழ்த்த மெல்லாம்
காண்டிகையிற் பேழைவருக் கம்''19
இது, ஒரு விகற்பம் கொண்டமைந்து, இரண்டாம் அடியில் தனிச்சொல் பெற்று வந்த இன்னிசை வெண்பா.
பெரிய பேழைக்குள் சிறு சிறு அறைகளைக் கொண்டு அதனுள் மருந்துப் பொருள்களை வைத்திருக்கும் மருந்துப் பெட்டியானது, பேரண்டத்தினுள் சிற்றண்டம் தங்கி உலவுதல் போலவும், வளை, புற்று முதலியவற்றின் கீழே தங்கியிருக்கும் சிற்றுயிர்த் தொகுதி போலவும் அமைந்திருக்கிறது. இதனை, மருத்துப் பெட்டி என்றும், ஐந்தறைப் பெட்டி எனலும் பொருந்தும்.
சித்த மருத்துவ நூல்களில் அமைந்திருக்கும் பாடல்கள் எந்தெந்த வகையானதாக இருக்கின்றன என்பது இந்தப் பகுதியில் ஆராயப் படுகிறது.
பா, வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என நான்கு வகைப்படும். இவை செப்பல், அகவல், துள்ளல், தூங்கல் என்று ஓசை அடிப்படையில் வகைப்படுத்தப் பட்டிருக்கின்றன.
பாக்கள் ஓசையால் மகிழ்ச்சியை ஏற்படுத்தி, அதன்பின் கூறப் படுகின்ற கருத்தின் பொருளை உணரச் செய்யப் பயன்படுகின்றன. அந்த வகையில் மருத்துவ நூல்கள், பலவகைப் பாக்களையும், பாவினங் களையும் கொண்டு இயற்றப்பட்டிருக்கின்றன. அவற்றில் பெரும் பாலான பாடல்கள் ஓசைநயம் கருதியே இயற்றப் பெற்றதாகக் கருதலாம். பொருளைக் கூறும் போது எழுத்து, சொல் ஆகியவற்றின் அளவுக்கு ஏற்றவாறு ஒரு சில இடங்களில் யாப்பை மீறுவது, இதற்குக் காரணமாகக் கூறலாம்.
வெண்பாவின் தலைமை
பாக்களில் வெண்பா முதன்மையானது. பிற பாடல்களை இயற்றுவதைவிட வெண்பா இயற்றுவது கடினம் என்பதால் ‘வெண்பா புலி’ என்று கூறக் காணலாம். அத்தகைய வெண்பாவில், நயமிக்க மருத்துவக் கருத்துகளைக் கூறுவது மிகக் கடினம் எனத் தோன்றினாலும், வெண்பா மருத்துவ நூல்களில் அதிகம் இடம் பெற்றிருக்கக் காணலாம். முழுவதும், வெண்பாவாகக் கொண்ட நூல்கள் இருக்கின்றன. வெண்பாவில் அமைந்த நாலடியார் என்னும் கீழ்க் கணக்கு நூல் போல, மருத்துவ வெண்பாக்கள் உள்ளன.
வெண்பா
மேலிட்ட பித்த வெறிக்குங் குரங்கினெதிர்
கோலிட் டதுபோற் குறுக்கலாற் சாலப்
பொடியாக்கித் தேனுடனே போட்டுச் சமைத்த
துடியா லறும்பித்தச் சூர்''18
இது, இரண்டாம் அடியில் தனிச்சொல் பெற்று வந்த இன்னிசை வெண்பா. இரண்டு விகற்பத்தால் அமைந்தது.
ஏலத்தைப் பொடியாக்கித் தேனுடன் கூட்டி உண்டால், வெறிபிடித்த குரங்கின் முன் கோல் காட்டினால் அடங்கி விடுவதைப் போல, பித்த நோய் தீர்ந்து விடும் என்பது பொருளாகும்.
அண்டத்துக் குள்ளகில மத்தனையும் வைகுதல் போல்
குண்டத்துக் குள்ளே குழுக்கள் போல் உண்டாகப்
பூண்டிருக்கு முண்மைப் பொருளா மவிழ்த்த மெல்லாம்
காண்டிகையிற் பேழைவருக் கம்''19
இது, ஒரு விகற்பம் கொண்டமைந்து, இரண்டாம் அடியில் தனிச்சொல் பெற்று வந்த இன்னிசை வெண்பா.
பெரிய பேழைக்குள் சிறு சிறு அறைகளைக் கொண்டு அதனுள் மருந்துப் பொருள்களை வைத்திருக்கும் மருந்துப் பெட்டியானது, பேரண்டத்தினுள் சிற்றண்டம் தங்கி உலவுதல் போலவும், வளை, புற்று முதலியவற்றின் கீழே தங்கியிருக்கும் சிற்றுயிர்த் தொகுதி போலவும் அமைந்திருக்கிறது. இதனை, மருத்துப் பெட்டி என்றும், ஐந்தறைப் பெட்டி எனலும் பொருந்தும்.
யமக வெண்பா
யமகம் என்பது மடக்கு என்னும் பொருளில் அமையும். இது, செய்யுளில் சீர், சொல், அடி மடங்கி வந்து, வேறுவேறு பொருளைக் குறிப்பதாக அமையும், அணிவகையான அலங்காரமாகும். இவ் வகையான வெண்பாக்கள் பெரும்பாலும் பயிலப்படுவதில்லை. மருத்துவ நூலில் யமக அணி வெண்பாக்கள் இயற்றப் பெற்றிருப்பது சிறப்பிற்குரியது.
பத்தியத்தை நோயையனு பானத்தை லங்கணத்தைப்
பத்தியத்தை முன்மருகன் பண்ணிலிற்கேள் பத்தியத்தை
யேகமா யார்த்தாலு மேறாச் செவிபோல
யேகமா யார்த்தாலு மெய்''20
இந்த வெண்பாவில், பத்தியத்தை என்னுஞ் சொல் மூன்று இடங்களில் அமைந்திருக்கிறது. யேகமாயார்த்தாலும் என்னுஞ் சொல் இரண்டிடங் களில் அமைந்திருக்கிறது.
முதலாமடியில் வரும் பத்தியத்தைஎன்பது, பிணி நீங்கும் வரை கடைப்பிடிக்க வேண்டிய உணவுமுறையான பத்தியத்தையும், இரண்டாமடியில் வரும் பத்தியத்தை என்பது, பத்தி+இயம்+அத்தை எனப் பிரிந்து, பத்திய முறையைப் பற்றி அத்தையிடம் என்றும், தனிச் சொல்லில் வரும் பத்தியத்தை பத்து+இயம் +அத்து+ஐ எனப் பிரிந்து, பத்து விதமான இசைக் கருவிகள் சேர்த்து இசைக்கும் இசையை என்றும் பொருளமைகிறது.
ஏகமாயார்த்தாலும் என்பது, ஒரு முகமாக முழங்குகின்ற போது என்றும், ஏக+மாய் + ஆர்த்து எனப் பிரிந்து போய்விட, கெட்டு, ஆரவாரம் செய்து என்னும் பொருளில் மாறி மாறி நின்று பொருளமைக்கும்.
பிணி நீங்குகின்ற வரைக்கும் கடைப்பிடிக்க வேண்டிய பத்தியமும், பிணியினுடைய வகையும், துணை மருந்தான அனுபானத்தையும், நோய் நீங்கத் துணைபுரியும் பட்டினியைப் பற்றியும், மாமியார் முன்னே மருமகள் செய்யும் பணிவுடன் நோயாளிக்கும் செய்க. மருமகன் மாமியாருக்குச் செய்யும் மரியாதையை ஏற்றுக் கொள்ளும் மாமியாரைப் போல நோயாளி பத்திய முறைகளை ஏற்றக் கொள்ளவும். பலவிதமான சத்தத்துடன் கூடிய முழக்கத்தின் போது சொல்லுகின்ற சொல் காதில் நுழை யாததைப் போல இருந்தால், நோய்கள் ஆரவாரம் செய்து கொண்டு உடலைக் கெட்டுப்போய்விடச் செய்யும் என்பதால், பத்தியம் முக்கியம் என்பதை உணர்க என்னும் பொருளை உரைக்கிறது.
யமகம் என்பது மடக்கு என்னும் பொருளில் அமையும். இது, செய்யுளில் சீர், சொல், அடி மடங்கி வந்து, வேறுவேறு பொருளைக் குறிப்பதாக அமையும், அணிவகையான அலங்காரமாகும். இவ் வகையான வெண்பாக்கள் பெரும்பாலும் பயிலப்படுவதில்லை. மருத்துவ நூலில் யமக அணி வெண்பாக்கள் இயற்றப் பெற்றிருப்பது சிறப்பிற்குரியது.
பத்தியத்தை நோயையனு பானத்தை லங்கணத்தைப்
பத்தியத்தை முன்மருகன் பண்ணிலிற்கேள் பத்தியத்தை
யேகமா யார்த்தாலு மேறாச் செவிபோல
யேகமா யார்த்தாலு மெய்''20
இந்த வெண்பாவில், பத்தியத்தை என்னுஞ் சொல் மூன்று இடங்களில் அமைந்திருக்கிறது. யேகமாயார்த்தாலும் என்னுஞ் சொல் இரண்டிடங் களில் அமைந்திருக்கிறது.
முதலாமடியில் வரும் பத்தியத்தைஎன்பது, பிணி நீங்கும் வரை கடைப்பிடிக்க வேண்டிய உணவுமுறையான பத்தியத்தையும், இரண்டாமடியில் வரும் பத்தியத்தை என்பது, பத்தி+இயம்+அத்தை எனப் பிரிந்து, பத்திய முறையைப் பற்றி அத்தையிடம் என்றும், தனிச் சொல்லில் வரும் பத்தியத்தை பத்து+இயம் +அத்து+ஐ எனப் பிரிந்து, பத்து விதமான இசைக் கருவிகள் சேர்த்து இசைக்கும் இசையை என்றும் பொருளமைகிறது.
ஏகமாயார்த்தாலும் என்பது, ஒரு முகமாக முழங்குகின்ற போது என்றும், ஏக+மாய் + ஆர்த்து எனப் பிரிந்து போய்விட, கெட்டு, ஆரவாரம் செய்து என்னும் பொருளில் மாறி மாறி நின்று பொருளமைக்கும்.
பிணி நீங்குகின்ற வரைக்கும் கடைப்பிடிக்க வேண்டிய பத்தியமும், பிணியினுடைய வகையும், துணை மருந்தான அனுபானத்தையும், நோய் நீங்கத் துணைபுரியும் பட்டினியைப் பற்றியும், மாமியார் முன்னே மருமகள் செய்யும் பணிவுடன் நோயாளிக்கும் செய்க. மருமகன் மாமியாருக்குச் செய்யும் மரியாதையை ஏற்றுக் கொள்ளும் மாமியாரைப் போல நோயாளி பத்திய முறைகளை ஏற்றக் கொள்ளவும். பலவிதமான சத்தத்துடன் கூடிய முழக்கத்தின் போது சொல்லுகின்ற சொல் காதில் நுழை யாததைப் போல இருந்தால், நோய்கள் ஆரவாரம் செய்து கொண்டு உடலைக் கெட்டுப்போய்விடச் செய்யும் என்பதால், பத்தியம் முக்கியம் என்பதை உணர்க என்னும் பொருளை உரைக்கிறது.
பஃறொடை வெண்பா
வெண்பாவுக்குரிய தளைகளைக் கொண்டு, இரண்டடிக் கொரு தனிச்சீர் பெற்று வருவது நேரிசைப் பஃறொடை வெண்பா என்றும், அடிதொறும் தனிச்சீர் பெற்று வருவது இன்னிசை பஃறொடை வெண்பா என்றும் கூறப்படும்.
ஓது கருங்காலி யெண்ணெய் தனையுலகில்
ஏதமற வைக்கு மியல்புகேள்தீதில்
செவியடைப்பு விக்கலிவை தீருமென முன்னோர்
உவகையுடன் சொன்னார் உகந்து''21
என்னும் நாற்பத்தேழு அடிகளைக் கொண்ட பஃறொடை வெண்பா, இரண்டடிக்கு ஒரு தனிச்சீர் பெற்று வந்திருப்பதனால், நேரிசைப் பஃறொடை வெண்பா எனக் கூறலாம்.
குறள் வெண்பா
பாக்களில் மிகவும் குறைந்த அடி அளவைக் கொண்டு அமைவது.
நிலம் ஐந்து நீர்நான்கு நீடுஅங்கி மூன்றே
உலவை இரண்டொன்று விண்''22
எழுபத்துஈ ராயிரம் நாடி அவற்றுள்
முழுபத்து நாடி முதல்''23
உந்தி முதலாகி ஓங்காரத்து உட்பொருளாய்
நின்றது நாடி நிலை''24
நாடி வழக்கம் அறிந்து செறிந்தடங்கி
நீடொளி காண்பது அறிவு''25
என்னும் குறள்கள், மருத்துவத்தின் அங்கமாக விளங்கும் யோகத்தின் வழியையும் ஞானத்தின் பயனையும் கூற, உடலியலையும் உலகியலையும் உரைக்கின்றன.
வெண்பாவுக்குரிய தளைகளைக் கொண்டு, இரண்டடிக் கொரு தனிச்சீர் பெற்று வருவது நேரிசைப் பஃறொடை வெண்பா என்றும், அடிதொறும் தனிச்சீர் பெற்று வருவது இன்னிசை பஃறொடை வெண்பா என்றும் கூறப்படும்.
ஓது கருங்காலி யெண்ணெய் தனையுலகில்
ஏதமற வைக்கு மியல்புகேள்தீதில்
செவியடைப்பு விக்கலிவை தீருமென முன்னோர்
உவகையுடன் சொன்னார் உகந்து''21
என்னும் நாற்பத்தேழு அடிகளைக் கொண்ட பஃறொடை வெண்பா, இரண்டடிக்கு ஒரு தனிச்சீர் பெற்று வந்திருப்பதனால், நேரிசைப் பஃறொடை வெண்பா எனக் கூறலாம்.
குறள் வெண்பா
பாக்களில் மிகவும் குறைந்த அடி அளவைக் கொண்டு அமைவது.
நிலம் ஐந்து நீர்நான்கு நீடுஅங்கி மூன்றே
உலவை இரண்டொன்று விண்''22
எழுபத்துஈ ராயிரம் நாடி அவற்றுள்
முழுபத்து நாடி முதல்''23
உந்தி முதலாகி ஓங்காரத்து உட்பொருளாய்
நின்றது நாடி நிலை''24
நாடி வழக்கம் அறிந்து செறிந்தடங்கி
நீடொளி காண்பது அறிவு''25
என்னும் குறள்கள், மருத்துவத்தின் அங்கமாக விளங்கும் யோகத்தின் வழியையும் ஞானத்தின் பயனையும் கூற, உடலியலையும் உலகியலையும் உரைக்கின்றன.
ஆசிரியப்பா
ஆசிரியப்பா, நயனவிதி என்னும் கண்ணோய் மருத்துவ நூலில் அமைந்திருக்கிறது.
அக்கிர ரோகம் அவிகாய விரணம்
உக்கிர ரோகம் உடைத்தெழுந் திடுதல்
சாய்கண் குருடு தடிப்புத் தினவு
தூயவெண் குருடு சுக்கிர ரோகம்
எண்ணிய நோய்கள் தொண்ணூற் றாறும்
கண்ணினில் வினையெனக் கருத லாமே''26
என வரும் நிலைமண்டில ஆசிரியப்பா நாற்பத்தெட்டு அடிகளைக் கொண்டுள்ளது. இப்பாடல், கண்ணில் வரும் நோய்கள் தொண்ணூற்றாறினை நிரல்படத் தொகுத்துக் கூறுகிறது. இச் செய்யுள், எல்லா அடியும் அளவடியாகவும் ஈற்றடி சிந்தடியாகவும், ஈற்றசை ஏகாரத்திலும் முடிந்திருப்பதால் நேரிசையாசிரியப்பா வகையைச் சேர்ந்த தெனலாம்.
கலிப்பா
பா வகையில் மூன்றாவதாக அமைவது, கலிப்பா. பிற பா வகைகள் சீர்களைக் கொண்டு தளை செய்வது போலல்லாமல், எழுத்துகளை எண்ணி அடிகளை அமைக்கும் முறை கலிப்பாவில் உள்ளதால், இதனைக் கட்டளைக் கலிப்பா என்றும் கூறுவர். எழுத்தெண்ணிப் பாடுகின்ற இவ்வகை யாப்பு வேறு நூல்களில் காணப்படாதலினால், திருமந்திர யாப்பு என்னும் சிறப்புப் பெயரும் இதற்கு உண்டு. கட்டளைக் கலிப்பாவில் அமைந்த பரணி நூல்கள் தமிழ் இலக்கிய மாகத் திகழ்கின்றன. அவ்வகை யாப்பில் அமைந்த மருத்துவப் பாடல்கள் காணப்படுகின்றன.
அத்திப் பழழும் அறைக்கீரை நல்வித்தும்
கொத்தி உலைப்பெய்து கூழ் அட்டு வைத்தனர்
அத்திப் பழத்தை அரைக்கீரை வித்துண்ணக்
கத்தி எடுத்தவர் காடு புக்காரே''27
என்று திருமூலர் திருமந்திரமும்,
அண்டங் கடுக்கா யாரு மறிந்திலர்
அண்டங் கடுக்கா யருமை யறிந்தவர்
அண்டங் கசடு அறுத்து அனைதனில்
அண்டத் தடுத்து அரூபியு மாவனே''28
என்று மச்சமுனி திருமந்திரமும்,
விண்ணடி வீழும் வெளிவிட்ட பேர்க்குத்
தன்னடி தானாய்த் தனக்குச் சரியாய்க்
கண்ணடி கண்ணாய்க் கற்றுணர்ந் தோர்க்குப்
பொன்னடி மூலம் பொருள் சொல்ல லாமே''29
என்று அகத்தியரும் கட்டளைக் கலிப்பா உரைக்கின்றார்,
நண்ணு சாறு பகண்டையி தற்கிணை
நாட்டி யாட்டி யிருகடி கைக்குளே
நல்ல வா நவ நீதங்க வசித்து
நாள ரைக்குள் முக் காலும்ப கண்டைப்பூ''30
என்று தேரையர் பாடலும் காணப்படுகிறது. திருமந்திர நூலுள் காணப் படும் கட்டளைக் கலிப்பாவும், தேரையர் நூலுள் காணப்படும் கட்டளைக் கலிப்பாவும் எழுத்துகளில் ஒற்றுமை காணப்படுகிறது. கூறும் முறையில் வேற்றுமை காணப்படுகிறது.
ஆசிரியப்பா, நயனவிதி என்னும் கண்ணோய் மருத்துவ நூலில் அமைந்திருக்கிறது.
அக்கிர ரோகம் அவிகாய விரணம்
உக்கிர ரோகம் உடைத்தெழுந் திடுதல்
சாய்கண் குருடு தடிப்புத் தினவு
தூயவெண் குருடு சுக்கிர ரோகம்
எண்ணிய நோய்கள் தொண்ணூற் றாறும்
கண்ணினில் வினையெனக் கருத லாமே''26
என வரும் நிலைமண்டில ஆசிரியப்பா நாற்பத்தெட்டு அடிகளைக் கொண்டுள்ளது. இப்பாடல், கண்ணில் வரும் நோய்கள் தொண்ணூற்றாறினை நிரல்படத் தொகுத்துக் கூறுகிறது. இச் செய்யுள், எல்லா அடியும் அளவடியாகவும் ஈற்றடி சிந்தடியாகவும், ஈற்றசை ஏகாரத்திலும் முடிந்திருப்பதால் நேரிசையாசிரியப்பா வகையைச் சேர்ந்த தெனலாம்.
கலிப்பா
பா வகையில் மூன்றாவதாக அமைவது, கலிப்பா. பிற பா வகைகள் சீர்களைக் கொண்டு தளை செய்வது போலல்லாமல், எழுத்துகளை எண்ணி அடிகளை அமைக்கும் முறை கலிப்பாவில் உள்ளதால், இதனைக் கட்டளைக் கலிப்பா என்றும் கூறுவர். எழுத்தெண்ணிப் பாடுகின்ற இவ்வகை யாப்பு வேறு நூல்களில் காணப்படாதலினால், திருமந்திர யாப்பு என்னும் சிறப்புப் பெயரும் இதற்கு உண்டு. கட்டளைக் கலிப்பாவில் அமைந்த பரணி நூல்கள் தமிழ் இலக்கிய மாகத் திகழ்கின்றன. அவ்வகை யாப்பில் அமைந்த மருத்துவப் பாடல்கள் காணப்படுகின்றன.
அத்திப் பழழும் அறைக்கீரை நல்வித்தும்
கொத்தி உலைப்பெய்து கூழ் அட்டு வைத்தனர்
அத்திப் பழத்தை அரைக்கீரை வித்துண்ணக்
கத்தி எடுத்தவர் காடு புக்காரே''27
என்று திருமூலர் திருமந்திரமும்,
அண்டங் கடுக்கா யாரு மறிந்திலர்
அண்டங் கடுக்கா யருமை யறிந்தவர்
அண்டங் கசடு அறுத்து அனைதனில்
அண்டத் தடுத்து அரூபியு மாவனே''28
என்று மச்சமுனி திருமந்திரமும்,
விண்ணடி வீழும் வெளிவிட்ட பேர்க்குத்
தன்னடி தானாய்த் தனக்குச் சரியாய்க்
கண்ணடி கண்ணாய்க் கற்றுணர்ந் தோர்க்குப்
பொன்னடி மூலம் பொருள் சொல்ல லாமே''29
என்று அகத்தியரும் கட்டளைக் கலிப்பா உரைக்கின்றார்,
நண்ணு சாறு பகண்டையி தற்கிணை
நாட்டி யாட்டி யிருகடி கைக்குளே
நல்ல வா நவ நீதங்க வசித்து
நாள ரைக்குள் முக் காலும்ப கண்டைப்பூ''30
என்று தேரையர் பாடலும் காணப்படுகிறது. திருமந்திர நூலுள் காணப் படும் கட்டளைக் கலிப்பாவும், தேரையர் நூலுள் காணப்படும் கட்டளைக் கலிப்பாவும் எழுத்துகளில் ஒற்றுமை காணப்படுகிறது. கூறும் முறையில் வேற்றுமை காணப்படுகிறது.
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|