புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முடியாதது முயலாதது மட்டுமே! Poll_c10முடியாதது முயலாதது மட்டுமே! Poll_m10முடியாதது முயலாதது மட்டுமே! Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முடியாதது முயலாதது மட்டுமே! Poll_c10முடியாதது முயலாதது மட்டுமே! Poll_m10முடியாதது முயலாதது மட்டுமே! Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
முடியாதது முயலாதது மட்டுமே! Poll_c10முடியாதது முயலாதது மட்டுமே! Poll_m10முடியாதது முயலாதது மட்டுமே! Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
முடியாதது முயலாதது மட்டுமே! Poll_c10முடியாதது முயலாதது மட்டுமே! Poll_m10முடியாதது முயலாதது மட்டுமே! Poll_c10 
17 Posts - 4%
prajai
முடியாதது முயலாதது மட்டுமே! Poll_c10முடியாதது முயலாதது மட்டுமே! Poll_m10முடியாதது முயலாதது மட்டுமே! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
முடியாதது முயலாதது மட்டுமே! Poll_c10முடியாதது முயலாதது மட்டுமே! Poll_m10முடியாதது முயலாதது மட்டுமே! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
முடியாதது முயலாதது மட்டுமே! Poll_c10முடியாதது முயலாதது மட்டுமே! Poll_m10முடியாதது முயலாதது மட்டுமே! Poll_c10 
8 Posts - 2%
Jenila
முடியாதது முயலாதது மட்டுமே! Poll_c10முடியாதது முயலாதது மட்டுமே! Poll_m10முடியாதது முயலாதது மட்டுமே! Poll_c10 
4 Posts - 1%
jairam
முடியாதது முயலாதது மட்டுமே! Poll_c10முடியாதது முயலாதது மட்டுமே! Poll_m10முடியாதது முயலாதது மட்டுமே! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
முடியாதது முயலாதது மட்டுமே! Poll_c10முடியாதது முயலாதது மட்டுமே! Poll_m10முடியாதது முயலாதது மட்டுமே! Poll_c10 
3 Posts - 1%
Rutu
முடியாதது முயலாதது மட்டுமே! Poll_c10முடியாதது முயலாதது மட்டுமே! Poll_m10முடியாதது முயலாதது மட்டுமே! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முடியாதது முயலாதது மட்டுமே!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 08, 2021 10:19 pm

–சி.வ.சு. ஜெகஜோதி

நம்ம கிட்ட நாலு காசுகூட இல்லை, ஒரு சொத்துகூட இல்லை,
நம்மெல்லாம் என்னைக்குத்தான் முன்னேறப் போகிறோம்”
என்று சிலர் புலம்புவது உண்டு. ஒரு சிலர்,

“நம்மாலும் நாலு எழுத்தாவது படிச்சிருந்தாவாவது முன்னேற
முடியும்” என்றும் சொல்லுவது உண்டு.

பலரும் படிக்கக் காரணமாக இருந்தவர் படிக்காத மேதை எ
என்று பலராலும் பாராட்டப்பட்ட காமராஜர். மறையும்வரை
முதல்வராகவே இருந்து மறைந்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
கவிஞராக, கதை வசனகர்த்தாவாக, அரசியல்வாதியாக வலம்
வந்த கலைஞர் மு. கருணாநிதி. பாரதப் பிரதமராக இருந்த
இந்திரா காந்தியும் எத்தனையோ கல்லூரிகளில் போய்ப்
படித்தார்.

ஆனால், எந்தக் கல்லூரியிலும் பட்டம் வாங்கவில்லை அவர்.
படித்துப் பட்டம் பெறாத இவர்களால், ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து
சிறப்பாக ஆட்சி செய்ய முடிந்தது எப்படி?

காரைக்குடி தந்த கவியரசு கண்ணதாசனும், பட்டுக்கோட்டை
கல்யாணசுந்தரமும் சாதாரண பள்ளிப் படிப்பை முடித்தவர்கள்தான்.
ஆனால், இவர்களால் மக்களின் மனங்களை பாட்டால் வெல்ல
முடிந்தது எப்படி? எந்தக் கல்லூரியிலும் போய் படிக்காத சிலம்புச்
செல்வர் ம.பொ.சி. நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுத முடிந்தது
எப்படி?

படிக்காமலும் முன்னேற முடியும் என்பதற்கு இவர்கள் என்றுமே
அழிக்க முடியாத சரித்திரச் சான்றுகள்.

சல்லிக்காசுகூட கையில் இல்லாமலும், உறவினர்கள், நண்பர்களின்
உதவியும் இல்லாமலும், முயன்று முன்னேறி வெற்றிக்கனியைப்
பறித்தவர்களும் ஏராளம். தோல்விகளின் குழந்தை என்று
வர்ணிக்கப்பட்ட ஆப்ரகாம் லிங்கன் மிக மிகச் சாதாரண குடும்பத்தில்
பிறந்தவர். ஆனால், இவரோ அமெரிக்க நாட்டின் அதிபராகி, வெள்ளை
மாளிகைக்குள் நுழைந்தது எப்படி?

அங்கு ஏன் போவானேன், இந்தியாவின் பாதுகாப்புக்கு வானத்தில்
வேலி கட்டிய அப்துல் கலாம், மிக ஏழ்மையான குடும்பத்தில்
பிறந்தவர். படிக்கக்கூடப் பணமில்லாமல் தட்டுத்தடுமாறிப் படித்து
முன்னேறி விஞ்ஞானியாகி, இந்தியத் திருநாட்டின் குடியரசுத்
தலைவராகவும் முடிசூட முடிந்தது எப்படி?

இன்றும் இவரால் இளசுகளின் இதயங்களில் இடம்பிடிக்க முடிகிறதே,
அது எப்படி?

பணமே இல்லாமல் இருந்து, இன்று ஆண்டுக்கு பல கோடி ரூபாய்
வருமான வரி செலுத்தும் அளவுக்கு உயர்ந்த பல தொழிலதிபர்களின்
பட்டியல் வளர்ந்துகொண்டே போகிறதே, அது எப்படி?

உயரத்தின் உச்சியைத் தொட்ட எவரும் சாதாரணமாகப் படைக்கப்
பட்டவர்களாக இருந்தும், இவர்களால் மட்டும் பலரும் பாராட்டும்படி
உயர முடிந்தது எப்படி? இப்படி எத்தனையோ எப்படிகள் உள்ளன.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 08, 2021 10:19 pm

இவர்கள் தங்களது திறமைகளை நன்றாக உணர்ந்திருந்தார்கள்.
சிறிது நேரத்தைக்கூட வீணாக்காமல் கடுமையாக உழைத்தார்கள்.
கிடைத்த வாய்ப்புகளைக் கோட்டைவிடாமல் பயன்படுத்திக்
கொண்டார்கள். அவர்களது சேவைகளையும், செயல்பாடுகளையும்
கண்டு உலகமே அவர்களை உயர்த்தியுள்ளது.

எனவே, இவர்கள் படிப்பும் இல்லாமலும், பணமும் இல்லாமலும்
முன்னேற முடியும் என்பதற்குச் சிறந்த உதாரணங்கள்.

உலகைப் படைத்த இறைவன் ஒவ்வொன்றுக்கும் ஏதேனும் ஒரு சக்தியை
வைத்துத்தான் படைத்திருக்கிறான். இனிய குரலுடைய குயில்கள்,
தோகை விரித்தாடும் மயில்கள், வானில் திரியும் பறவைக்குக்
கடலுக்குள் இருக்கும் மீனைச் சரியான நேரத்தில் கொத்தித் தூக்கும்
திறன், மானுக்கு விரைந்து ஓடும் சக்தி இப்படியாக இதன் வரிசைப்
பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

காலில் மிதிபடும் மண்ணில்கூட எத்தனேயோ வகைகள்.
மண்பானை செய்ய ஒருவகை மண், கட்டடங்கள் கட்ட ஒருவகை மண்,
தாவரங்களை விளைவிக்க ஒருவகை மண், மனிதர்களின் நோய்களைக்
கூட தீர்த்து வைக்கும் ஒருவகையான மண், இப்படியாக மண்ணுக்கே
இறைவன் பல சக்திகளை வைத்துப் படைத்திருக்கிறபோது, மனிதர்களை
மட்டும் எதற்கும் அருகதை அற்றவர்களாகப் படைத்திருப்பானா?

பட்டுப்பூச்சி ஒன்று முதன்முதலாக முட்டைக் கூட்டை விட்டு வெளிவர
முயற்சித்தது. முட்டைக் கூட்டை சிறிதளவு உடைத்து விட்டு, சிறிது நேரம்
ஓய்வு எடுத்தது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த இரக்க குணம் மிகுந்த
ஒருவர், அதற்கு உதவ நினைத்து, சிறிய கத்தரிக்கோலால் அம்முட்டைக்
கூட்டை சிறிதளவு மட்டும் வெட்டி அது வெளியே வர உதவினார்.

கூட்டை விட்டு வெளியே வந்த பட்டுப்பூச்சிக்கோ சிறகுகளை அசைத்துப்
பறக்கத் தெரியவில்லை.

அதற்குக் காரணம் என்னவென்று அவர் விசாரித்தபோது, முட்டைக்
கூட்டினை முதலாவதாக உடைத்து வெளி வர அது செய்யும் முயற்சியே
இறக்கைகளுக்குப் பலமாக அமைந்து, பறக்க உதவுகிறது எனத்
தெரியவந்ததாம்.

பட்டுப்பூச்சி தனது சுயமுயற்சியால் முட்டைக் கூட்டிலிருந்து வெளியில்
வராமல் போனதால், இறக்கைகளுக்கு சுயபலமின்றி, அதற்கு
நிரந்தரமாகவே பறக்கத் தெரியாமல் போனதாம்.

உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு சிறந்த தன்னம்பிக்கைப்
பேச்சாளராக இருந்து வருபவர் நிக்விய்ஜெசிக். ஆஸ்திரேலிய நாட்டில்
மெல்பர்ன் நகரில் பிறந்த இவருக்கோ இரு கைகளும் இல்லை,
இரு கால்களும் இல்லை. ஆனால், இவர் எழுதிய நூலின் பெயர் என்ன
தெரியுமா, இரு கையும் இல்லை, இரு கால்களும் இல்லை,
ஒரு கவலையும் இல்லை என்பதுதான்.

உள்ளம் ஊனமில்லாமல், உடல் மட்டும் ஊனமாக இருந்த இவர்,
இன்று எத்தனையோ உள்ளம் ஊனமானவர்களை தனது
தன்னம்பிக்கைப் பேச்சால் குணப்படுத்தும் சக்தி படைத்தவராக
இருக்கிறார்.

படிக்கவில்லையே, பணமில்லையே, முன்னேற முடியவில்லையே
என்ற தாழ்வு எண்ணங்கள் உடலோடு ஒட்டிக்கொண்டு இருந்தால்,
அதைப் பிய்த்து எறிந்துவிட்டு சோதனைகளைச் சாதனைகளாக்குவோம்.
முயன்றால் முடியாதது எதுவுமில்லை. முயற்சிகள் தவறலாம்,
முயற்சிக்கத் தவறலாமா?
---
நன்றி-தினமணி & நாற்சந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக