by சிவா Today at 3:13 am
» இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் திரு மாணிக்கம் நடேசன்
by சிவா Today at 2:41 am
» புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள்
by சிவா Today at 2:14 am
» IPL கிரிக்கெட் போட்டிகள் --தொடர். பதிவு.
by சிவா Today at 1:33 am
» எழுந்து விடு மனிதா
by சிவா Today at 1:18 am
» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 9:35 pm
» அக்னிவீர் திட்டத்திற்கு அலைமோதும் இளைஞர்கள்.
by சிவா Yesterday at 9:26 pm
» நன்றாகத் தூங்குவது எப்படி? அதற்கு என்ன செய்ய வேண்டும்?
by சிவா Yesterday at 8:33 pm
» விரதம் இருப்பதால் ஏற்படும் மருத்துவப் பயன்கள்
by சிவா Yesterday at 8:13 pm
» விடுதலை - ரசிகர்கள் விமர்சனம்: 'படம் கிடையாது, அனுபவம்'
by சிவா Yesterday at 8:09 pm
» தங்க நகைகளில் கட்டாயம் HUID குறியீடு
by சிவா Yesterday at 8:06 pm
» முடியின் pH சமநிலைக்கு கற்றாழை எண்ணெய்
by சிவா Yesterday at 8:02 pm
» கோயிலில் தோண்ட தோண்ட.. 2000 செம்மறி ஆடு தலைகள்
by சிவா Yesterday at 7:58 pm
» இரும்புச்சத்து குறைபாடு இருந்தால் என்ன செய்வது?
by சிவா Yesterday at 3:29 pm
» ஆசியாவின் பெரிய தேர்: பக்தர்கள் வெள்ளத்தில் திருவாரூர் ஆழித் தேரோட்டம்
by சிவா Yesterday at 3:04 pm
» நாளும் ஒரு நற்சிந்தனை நூலாசிரியர் : நீதியரசர் கற்பகவிநாயகம் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:03 pm
» மன உறுதியை அதிகரிப்பது எப்படி?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:09 pm
» பெருங்காயத்தின் பயன்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:05 pm
» கருத்துப்படம் 01/04/2023
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (19)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am
» சாவர்க்கர் எங்களுக்கு கடவுள் போன்றவர்
by சிவா Yesterday at 3:29 am
» தமிழகத்தில் மதமாற்றம் அதிகரிப்பு
by சிவா Yesterday at 3:19 am
» தழும்புகளை நீக்கும் கோகோ பட்டர்
by சிவா Fri Mar 31, 2023 9:44 pm
» Deja vu - தேஜாவு - அமானுஷ்யமா, மறுபிறவியா, மற்றொரு பிரபஞ்சத்தின் வாசலா?
by சிவா Fri Mar 31, 2023 9:35 pm
» 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
by சிவா Fri Mar 31, 2023 9:00 pm
» பெருங்குடல் புற்றுநோய் என்றால் என்ன? ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவது எப்படி?
by சிவா Fri Mar 31, 2023 8:54 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri Mar 31, 2023 8:28 pm
» மலம் கழிப்பதை அடக்கினால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?
by சிவா Fri Mar 31, 2023 7:05 pm
» IPL - ஐபிஎல் பற்றிய தகவல்களின் தொகுப்பு
by T.N.Balasubramanian Fri Mar 31, 2023 5:59 pm
» IPL Live Streaming செய்யும் இணையதளம்
by சிவா Fri Mar 31, 2023 4:58 pm
» காசி வாழ தேசம் வாழும்
by சிவா Fri Mar 31, 2023 4:46 pm
» வேப்பம் பூ மருத்துவ பயன்கள் மற்றும் சமையல் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Fri Mar 31, 2023 3:10 pm
» [கட்டுரை] யாருக்காக ???
by rajuselvam Fri Mar 31, 2023 9:30 am
» வியர்க்குரு அல்லது வேர்க்குரு - இயற்கை வைத்தியங்கள்
by சிவா Fri Mar 31, 2023 12:47 am
» ஐபிஎல் 2023: 52 நாட்கள், 10 அணிகள், 74 போட்டிகள்
by சிவா Fri Mar 31, 2023 12:23 am
» கோடை... செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை...
by சிவா Thu Mar 30, 2023 10:31 pm
» வெயில்கால தட்டம்மை நோயைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
by சிவா Thu Mar 30, 2023 10:15 pm
» பழைய சோறு... இது உணவல்ல, மருந்து
by சிவா Thu Mar 30, 2023 10:08 pm
» இட்டிலி மேல் இனிதான கவிதை
by சிவா Thu Mar 30, 2023 9:19 pm
» செல்போன் பயன்படுத்தும் மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை
by சிவா Thu Mar 30, 2023 9:14 pm
» மோடியைத் தோற்கடிக்க இஸ்லாமிய வாக்காளர்களை அழைத்து வாருங்கள்
by T.N.Balasubramanian Thu Mar 30, 2023 5:52 pm
» இன்று உலக இட்லி தினம்
by T.N.Balasubramanian Thu Mar 30, 2023 5:10 pm
» நாவல் வேண்டும்
by Riha Thu Mar 30, 2023 4:37 pm
» ராமநாமம் ஒலிக்கட்டும், தேசம் செழிக்கட்டும்...
by சிவா Thu Mar 30, 2023 2:45 pm
» நோன்பு என்றால் என்ன? இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றாக அது எப்படி மாறியது?
by Dr.S.Soundarapandian Thu Mar 30, 2023 12:20 pm
» ஸ்ரீ ராம நவமித் திருநாள்
by சிவா Thu Mar 30, 2023 6:55 am
» கோடை கால பானங்கள்
by சிவா Thu Mar 30, 2023 12:16 am
» கேந்திர வித்யாலயா பள்ளிகளில் அட்மிஷன் பெறுவது எப்படி?
by சிவா Thu Mar 30, 2023 12:13 am
» வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க!
by சிவா Wed Mar 29, 2023 10:40 pm
» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Wed Mar 29, 2023 9:55 pm
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
தமிழ்வேங்கை |
| |||
mohamed nizamudeen |
| |||
eraeravi |
| |||
eswari m |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Riha |
| |||
TAMILULAGU |
|
சிவா |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
சரவிபி ரோசிசந்திரா |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
eraeravi |
|
மந்திரங்கள்
Page 2 of 4 • 1, 2, 3, 4
மந்திரங்கள் சொல்லி தியானம் செய்வது மனதை அமைதிப்படுத்துமா?
இந்த உலகம் வேகமாக இயங்கி கொண்டிருக்கிறது. பல எதிர்பார்ப்புகள், கனவுகள், ஆசைகள் என மனிதர்கள் தொடர்ந்து அதன்பின் ஓடிக் கொண்டிருக்கின்றனர்.
நாம் மகிழ்ச்சியாக இருப்பதும், மன அழுத்தத்தில் இருப்பதும் முழுக்க முழுக்க நம்மைச் சார்ந்ததே. நமது மனதைச் சார்ந்ததே.
மந்திரங்களின் பின் உள்ள அறிவியல்
சரி. தற்போது நாம் சிந்தித்து கொண்டிருக்கும் முறையில் என்ன பிரச்னை?
மந்திரத்தைச் சொல்லி தியானம் செய்வது நமது மனதை குணப்படுத்தும் என்பதற்கு என்ன ஆதாரங்கள் உள்ளன?
நமது மனது 24 மணி நேரத்தில் 60 ஆயிரம் எண்ணங்களை நினைத்துக் கொண்டிருக்கும்.
ஒரு குரங்கைப் போல நமது மனது ஓர் எண்ணத்திலிருந்து மற்றொரு எண்ணத்திற்கு தாவாமல் இருப்பதற்கு இந்த மந்திரங்கள் உதவி செய்யும்.
நாம் எப்போதும் ஏதோ ஒரு வாழ்க்கைத் தரத்தை நோக்கி தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறோம். இன்ஸ்டாகிராமையும், ஃபேஸ்புக்கையும் நிஜ உலகம் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். என்ன வென்றே தெரியாத ஒன்றை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறோம்.
எனவே இந்த மந்திரங்கள் நமது ஆணிவேருடன் நம்மை இணைப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மந்திரம் என்னும் பாதுகாப்பு கவசம்
சமஸ்கிருதத்தில் 'மந்த்ரா' - மன் என்றால் மனது; 'த்ரா' என்றால் கருவி என்று பொருள். நாம் என்ன சிந்திக்கின்றோம் என்பதை கட்டுப்படுத்தும் ஒரு கருவியாக மந்திரங்கள் பணி செய்கின்றன.
"என்னுடைய இளம் வயதில் எனக்கு மந்திரங்கள் பழக்கமானது மற்றொரு பக்கம் நமது மானிட இருப்பின் இன்றியமையாத ஒன்று சத்தம். அதாவது நாம் பேசும் வார்த்தைகள் நமது உலகை உருவாக்கும் அல்லது உடைக்கும். வார்த்தைகளால் இது இரண்டுமே சாத்தியம்," என்கிறார் ஓம் ஸ்வாமி. இவர் தி ஏன்ஷியண்ட் சயின்ஸ் ஆஃப் மந்த்ராஸ் என்னும் புத்தகத்தை எழுதியவர்.
"ஒருவரிடம் நீங்கள் அவர்களை நேசிக்கிறீர்கள் என்று கூறி அதன்படி நடந்து கொண்டால், இந்த மொத்த உலகமும் அவர்களைப் பார்த்துக் கொள்ளும். 'மனது' என்ற பூ பூத்தவுடன் ஒருவரின் வாழ்வில் அழகு கூடிவிடுகிறது. மனம் எனும் பூ வாடினால் நாம் சோர்ந்து போகிறோம். இந்த உலகில் இருந்து மறைந்துவிடப் பார்க்கிறோம். எனவே மந்திரங்கள் உங்கள் மனதிற்கு ஒரு பாதுகாப்புக் கவசமாக செயல்படுகிறது. தேவையில்லாத எண்ணங்களிலிருந்து உங்கள் மனதைக் காக்கிறது," என்கிறார் ஓம் ஸ்வாமி.
ஆய்வு சொன்ன தகவல்
ரோசலின் மற்றும் அவர் உடன் பணிபுரியும் மரியா, இந்த 'மந்த்ரா தியானம்' அறிவியல் ரீதியாக பயன் கொடுக்குமா என்பதை நிரூபிக்க முடியுமா என்று பார்த்தார்கள்.
பெண்கள் அமைதியான மந்திரங்களை சொல்லும்போது அவர்களின் மூளையை ஸ்கேன் செய்து ஆய்வில் ஈடுபட்டார் மரியா. ரோசலின் அதன் விளைவுகளை ஆராய்ந்தார்.
"இரண்டு வார காலத்தில் திரும்ப திரும்ப மந்திரங்களை சொல்லும்போது மூளையின் அந்த டீஃபால்ட் மோட் நெட்வொர்க் பகுதி அமைதியானது," என்கிறார் ரோசலின்.
எனவே மந்திரங்களை சொன்னவர்கள், தங்களைத் தாங்களே எடைபோட்டுக் கொள்ளும் பழக்கம் குறைந்ததாக தெரிவித்தனர்.
அதேபோல ஒரு பணி குறித்த அவர்களின் நினைவாற்றலும் அதிகரித்தது. ஓம் ஸ்வாமி, தனது வாழ்நாளில் 15 ஆயிரம் மணி நேரங்களை மந்திரங்கள் ஓதவும், தியானம் செய்யவும் செலவிட்டார்.
2018ஆம் ஆண்டு அவரின் மூளையை விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். அப்போது அவர் தனது மனதை இயல்பைக் காட்டிலும் அமைதியாக வைத்துக் கொள்ளும் திறன் படைத்தவர் என்பது தெரியவந்தது.
தியானத்தை எப்படி தொடங்க வேண்டும்?
"ஒரு நல்ல மந்திரம் ஒரு சிறிய கடிதத்தை போன்று இருக்கலாம். அல்லது ஆயிரம் சொற்களை கொண்டதாகவும் இருக்கலாம். இதை நாம் மாலை மந்திரம் என்போம். அதாவது மணியால் ஆன மாலையை கொண்டு மந்திரம் ஓதுவது. மந்திரம் என்பது சொற்களின் அழகான வடிவமைப்பு," என்கிறார் ஓம் ஸ்வாமி.
"நீங்கள் என்ன வாக்கியத்தை பயன்படுத்துகிறீர்கள் என்பது மட்டுமல்ல, எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பதும்தான். அது சத்தமும் அமைதியும் கலந்தது. அமைதியை கொண்டு ஓசைக்கு அழகு சேர்ப்பது," என்கிறார் ஓம் ஸ்வாமி.
மந்திரங்களை சொல்ல நீங்கள் மத நம்பிக்கை கொண்டவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
"எந்த மொழியிலும் மந்திரத்தை நீங்கள் தேர்வு செய்யலாம். நீங்கள் எந்த மந்திரத்தை சொன்னாலும் சரி, ஒரு 6 மாத காலத்தில் அது நரம்பியல் பாதையை உருவாக்கும். 'இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி' என்றும் நீங்கள் சொல்லலாம். ஆங்கிலத்திலும் கூட அது இருக்கலாம்.
ஆனால் நீங்கள் பாரம்பரிய முறையை தேர்ந்தெடுப்பவராகவோ அல்லது மந்திரங்கள் மூலம், உங்கள் ஆழ்மனதை கட்டுப்படுத்த விரும்பினாலோ நீங்கள் ஓம் என்ற மந்திரத்தை சொல்வதன் மூலம் உங்கள் தியானத்தை தொடங்கலாம்" என்கிறார் ஓம் ஸ்வாமி.
"அனைத்தும் நன்றாக சென்று கொண்டிருக்கும்போது உங்கள் தோள்களை தட்டி, 'வாவ் எல்லாம் நன்றாக சென்று கொண்டிருக்கிறது' என்று தொடர்ந்து சொல்லுங்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் சமயம், அந்த ஆற்றலை சேகரிக்கத் தொடங்கும்போது உங்கள் மூளை அதைக் குறித்து வைத்து கொள்ளும். சில நாட்கள் கழித்து நீங்கள் சோர்வாக இருக்கும்போது, உங்கள் தோள்களைத் தட்டினால், அனைத்தும் சரியாக உள்ளது என உங்கள் மூளைக்கு ஒரு சிக்னல் அனுப்பப்படும்" என்கிறார் அவர்.
நீங்கள் முயன்றால், நமது எதிர்பார்ப்புகளிடமிருந்து மந்திரங்கள் நம்மை விடுவிக்கும் என்பதும் மந்திரங்கள் குறித்த நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
"புத்தா என்றால் விழித்தல், அவர் நாம் நமது வாழ்நாள் முழுவதும் நமது ஆசைகள் மூலமும், தேவைகள் மூலமும் உறங்கிக் கொண்டிருக்கிறோம் என்கிறார். நாம் நம் மீதும் பிறர் மீதும் வைத்திருக்கும் எதிர்ப்பார்ப்புகள் மூலம் பிணையப்பட்டு அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறாத பட்சத்தில் குற்ற உணர்ச்சியிலோ அல்லது கோபத்தாலோ சூழப்படுகிறோம்," என்கிறார் ஓம் ஸ்வாமி.
நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகவே நாம் மாறுகிறோம். எனவே நான் எதில் கவனம் செலுத்துகிறோம் என்பது மிக அவசியம். நீங்கள் எதில் கவனம் செலுத்துகிறீர்களோ அவ்வாறே உங்கள் மூளை அமைப்பும் மாறுகிறது. காலப்போக்கில் அதன்படியே செயல்படுகிறது என்கிறார்கள் நிபுணர்கள்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஸமோஹம் ஸர்வபூதேஷு ந மே த்வேஷ்யோஸ்தி ந ப்ரிய
யே பஜந்தி து மாம் பக்த்யா மயி தே தேஷு சாப்யஹம்||
எல்லா உயிரினங்களிலும் நான் ஒரே சமமாக நிறைந்துள்ளேன். எனக்கு வெறுக்கத்தக்கவன்(வேண்டாதவன்) இல்லை; வேண்டியவன் இல்லை. ஆனால்,எவர்கள் பிரேமை கொண்டு பக்தியுடன் என்னை வழிபடுகிறார்களோ, அவர்கள் என்னிடமும், நான் அவர்களிடமும் காணக்கூடியவனாக இருக்கிறேன்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

யத்கரோஷி யதஸ்நாஸி யஜ்ஜுஹோஷி ததாஸி யத் |
யத்தபஸ்யஸி கௌந்தேய தத்குருஷ்வ மதர்பணம் ||
குந்தியின் மைந்தனே! எந்த கர்மத்தைச் செய்கிறாயோ, எதை உண்கிறாயோ, எதை ஹோமம் செய்கிறாயோ, எதை தானமளிக்கிறாயோ, எந்த தவத்தைச் செய்கிறாயோ, அவையனைத்தையும் எனக்கு அர்ப்பணம் செய்துவிடு.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

தும்ஹரே பஜன் ராம்கோ பாவை |
ஜன்ம ஜன்ம கே துக்க பிஸராவை ||
அனுமனிடம் பக்தி கொள்வதால், ஒருவன் ஶ்ரீராமனை வெகுசுலபத்தில் அடைகிறான். எத்தனையோ பிறவிகளில் அவனைத் தொடர்ந்து வந்த துன்பங்கள் அவனைவிட்டு அகல்கின்றன.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

நாராயணேத்யாதி ஜபத்பிருச்சை:
பக்தை: ஸதாபூர்ண மஹாலயாய
ஸ்வதீர்த்த காங்கோபம வாரிமக்ன
நிவர்த்திதா ஸேஷரூஜே நமஸ்தே ||
நாராயணா என்னும் திவ்ய திருநாமத்தை உரக்க உச்சரிக்கும் பக்தர்கள் திருக்கோயில் எங்கும் நிறைந்திருக்க, புனித கங்கை நதிக்கு நிகரான உன் திருக்கோயில் புனித தீர்த்தத்தில் ஸ்நானம் செய்பவர்களின் சர்வரோக இன்னல்களையும் நீக்கும் குருவாயூரப்பா, உன்னை நாராயணா என்ற திவ்யநாமத்தால் வணங்குகிறேன்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

நிஜ புஜ தண்ட நிபாதித கண்ட விபாதித முண்ட படாதிபதே|
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்யகபர்தினி ஸைலஸுதே||
தாயே மஹிஷாஸுர மர்தினி. காளியாய் உருவெடுத்து சண்ட முண்டர்களை உன் கையில் உள்ள ஆயுதங்களால் அழித்தவளே. மலைமகளே! உனக்கு வெற்றி உண்டாகட்டும்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

மனம் ஒன்று நினைக்க
வாய் ஒன்று சொல்ல
மெய் ஒன்று செய்ய
என் செய்வேன் கச்சி ஏகம்பனே.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும்
கசிந்து உருகி நில்லாப் பிழையும்
நினையாப் பிழையும் நின் அஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும்
தொழாப் பிழையும் எல்லாப் பிழையும்
பொறுத்து அருள்வாய் கச்சி ஏகம்பனே.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33750
இணைந்தது : 03/02/2010
- Code:
தொழாப் பிழையும் எல்லாப் பிழையும்[size=14][/size]
பொருத்து அருள்வாய் கச்சி ஏகம்பனே.[size=14][/size]
பொறுத்து அருள்வாய் கச்சி ஏகம்பனே !
என்று இருக்கவேண்டுமோ?
@சிவா

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
மேற்கோள் செய்த பதிவு: 1351671T.N.Balasubramanian wrote:
- Code:
தொழாப் பிழையும் எல்லாப் பிழையும்[size=14][/size]
பொருத்து அருள்வாய் கச்சி ஏகம்பனே.[size=14][/size]
பொறுத்து அருள்வாய் கச்சி ஏகம்பனே !
என்று இருக்கவேண்டுமோ?
@சிவா
நன்றி தலைவரே, திருத்தி விட்டேன்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers



அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Page 2 of 4 • 1, 2, 3, 4
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்