புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 4 Poll_c10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 4 Poll_m10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 4 Poll_c10 
53 Posts - 58%
Dr.S.Soundarapandian
தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 4 Poll_c10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 4 Poll_m10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 4 Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 4 Poll_c10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 4 Poll_m10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 4 Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 4 Poll_c10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 4 Poll_m10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 4 Poll_c10 
4 Posts - 4%
prajai
தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 4 Poll_c10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 4 Poll_m10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 4 Poll_c10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 4 Poll_m10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Pradepa
தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 4 Poll_c10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 4 Poll_m10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 4 Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 4 Poll_c10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 4 Poll_m10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 4 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 4 Poll_c10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 4 Poll_m10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 4 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 4 Poll_c10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 4 Poll_m10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 4 Poll_c10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 4 Poll_m10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 4 Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 4 Poll_c10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 4 Poll_m10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 4 Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 4 Poll_c10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 4 Poll_m10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 4 Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 4 Poll_c10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 4 Poll_m10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 4 Poll_c10 
28 Posts - 3%
sugumaran
தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 4 Poll_c10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 4 Poll_m10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 4 Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 4 Poll_c10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 4 Poll_m10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 4 Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 4 Poll_c10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 4 Poll_m10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 4 Poll_c10 
18 Posts - 2%
prajai
தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 4 Poll_c10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 4 Poll_m10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 4 Poll_c10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 4 Poll_m10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 4 Poll_c10 
5 Posts - 0%
Rutu
தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 4 Poll_c10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 4 Poll_m10தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 4 Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 28, 2022 1:35 am

First topic message reminder :

தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)

தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 4 ZrtrPXg












ஈகரை தமிழ் களஞ்சியம்




தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்) - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 03, 2023 9:25 pm

பகவானிடம் புதிதாக ஒன்றும் நாம் கேட்டுப் பெற வேண்டியதில்லை. நம்மிடம் இல்லாமல் அவனிடம் உள்ள ஏதோ ஒன்றைக் கேட்கவேண்டியதில்லை. நம்மிடமே இருக்கும்படியான நம் உண்மை ஸ்வரூபத்தை நாம் அறியவில்லை. நம்முடைய உண்மை ஸ்வரூபம் ஆனந்த மயமானது. பகவானேதான் அது. பரமாத்மாவேதான் அது. அப்படிப்பட்ட நம் நிஜ ஸ்வரூபத்தை மனத்தால் மறைத்துக்கொண்டு ஓயாமல் துக்கப்படுகிறோம். “என் உண்மை நிலையை உணர அருள்வாயாக! என்னை நான் அறிய முடியாதபடி, இந்த மனசு ஆட்டிப் படைக்கிறது. இதை அன்பினாலே கட்டி, கட்டுப்படுத்தி என்னிடம் கொடுத்தால் போதும். என் ஸ்வரூபத்தையே நான் காண முடியாமல் கெடுக்கும் இந்தக் கெட்ட மனப்போக்கை நீ எடுத்துப் போ. என் ஸ்வரூபத்தையே எனக்களித்து அதைக் காக்க வேண்டிய காவலன் நீ!” என்று பிரார்த்திப்போம்.

‘தாய் விட்டபடி’ என்றிருக்கும் பூனைக் குட்டிபோல் பகவானை சரணமடைய நமக்குப் பக்குவமில்லை. குரங்காகத் திரிகிறது நம் மனசு. ஆனாலும் குரங்குக் குட்டிபோல் அவனை பற்றிக்கொள்ளவும் நமக்குப் பக்குவமில்லை. குரங்கு குட்டியாக இருந்துகொண்டே, பூனையம்மாவின் ரக்ஷணையைக் கேட்பவர்களாக இருக்கிறோம்! ஆகவே, ஆசார்யாளின் மூன்றாவது வழியைப் பின்பற்றி நாமும் “மனத்தை நீயே அடக்கி அருள்வாய்” என்று பிரார்த்திப்போம்.

இது முதலில் ஸதாகாலப் பிரார்த்தனையாக இருக்காது. ஸதாவும் பிரார்த்திக்கிறோம் என்றால், எப்போதும் அவனை விடாமல் பிடித்துக்கொண்டு மா்க்கட கிசோரமாக இருக்கிறோம் என்றாகிவிடுமே! நமக்குத்தான் அவ்வளவு யோக்கியதை இல்லையே! ஆனாலும் ஏதோ கொஞ்சம் தவிப்பு, உருப்படவேண்டும் என்ற கவலை உண்டாகிவிட்டதல்லவா? ஏதோ ஒரு நிலையில், இரண்டு நிமிஷமாவது பிரார்த்தனை என்று பண்ணத் தோன்றுகிறதல்லவா? அப்போது இந்தப் பிரார்த்தனையைப் பண்ணிக்கொள் என்று ஆசார்யாள் வழி காட்டுகிறார்.

“நான் முழுதும் குரங்காக இல்லை. மற்ற எல்லா விஷயத்திலும் மனசு குரங்காகத் திரிந்து கொண்டிருந்தாலும் உன்னைப் பிடித்துக்கொள்கிற விஷயத்தில் மட்டும் அப்படி இல்லை. வரனுக்கு எல்லா qualifications-வும் [தகுதியும்] இருக்கிறது; ஆயுள் பாவம் மட்டுமில்லை என்கிற மாதிரி, எதில் முக்கியமாகக் குரங்காக இருக்க வேண்டுமோ, அது ஒன்றைத் தவிர பாக்கி எல்லாவற்றிலும் குரங்காக இருக்கிறேன்! அதனால் இந்த விஷயத்தில் நீதான் தாய்ப் பூனை மாதிரி செய்யவேண்டும். ஆனாலும் நான் முழு குரங்குக்குட்டியாக இல்லாதபோது உன்னை மட்டும் முழு தாய்ப்பூனையாக இருக்கச் சொன்னால் அது நியாயமில்லை. உன்னிடம் அவ்வளவு பெரிய அநுக்ரஹம் எதிர்பார்க்க எனக்கு யோக்கியதை இல்லை. அதனால் ஒரேயடியாக நீ என்னை ஆட்கொண்டு நடத்திக்கொண்டு போ என்று நான் சொல்லவில்லை. ஆனால் என் அலைபாயும் குரங்கு மனஸையும் ஏதோ கொஞ்சம் சரிபண்ணிக் கொண்டு நான் இந்த நிமிஷம் உன்னைப் பிரார்த்திக்க வந்திருக்கிறேன் அல்லவா? இந்தப் பிரார்த்தனை இன்னம் வலுப்பதற்குப் பக்திக் கயிற்றால் சற்று என்னைக் கட்டிப் போடு. உன்னை விட்டுவிட்டு அந்த கயிற்றின் நீளத்திற்கு நான் ஓடிக்கொண்டுதான் இருப்பேன். நீயும் அந்த அளவுக்கு ஆட்டம் பார். ஆனால் ஒரேயடியாக உன்னிடமிருந்து நழுவிப் போவதற்கு விடாதே. இம்மாதிரி, உன்னுடனேயே ஒட்டிக் கொண்டிராவிட்டாலும், உன்னை விட்டு ஒரே ஓட்டமாக ஓடாமல் நீ என்னைக் கொஞ்சம் விட்டுப் பிடித்தால், அதுவே இந்த ஸ்டேஜில் எனக்குப் போதுமானது. உன்னை நான் விடாமல் மர்க்கட கிசோரமாகப் பிடித்துக் கொள்வதோ, நீ என்னை விடாமல் பிடித்துக்கொள்வாய் என்று பூர்ணமாக நம்பி நான் எந்த பாரமும் இல்லாமல் மார்ஜார கிசோரமாகக் கிடப்பதோ -இந்த இரண்டில் எதுவோ ஒன்று எப்போது வாய்க்கிறதோ அப்போது வாய்த்துவிட்டுப் போகட்டும். இப்போதைக்கு ஒரு நிமிஷம் நான் குரங்குக் குட்டியாக இந்த பிரார்த்தனையாவது பண்ணுகிறேன் அல்லவா? இதற்குப் பிரதியாக நீயும் கொஞ்சம் தாய்ப் பூனையின் ஸ்வபாவத்தைக் காட்டி என்னை இன்னம் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறப் பண்ணுவதற்கு எண்ணு. அதாவது, எனக்கு உன்னிடம் உள்ள அன்பை, பக்தியைக் கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்துக் கொண்டு போகப் பண்ணு” என்றிப்படிப் பிரார்த்தனை பண்ண வேண்டும்.

முதலில், நாமிருக்கிற நிலையில், “பக்தியைத் தா” என்று பிரார்த்தனை பண்ணுவோம். பக்தி வந்தபின் பிரபத்தியில் எது, மா்க்கட கிசோரமா, மார்ஜார கிசோரமா என்பதைப் பார்த்துக் கொள்ளலாம். அந்த இரண்டுக்குமே மூலாதாரமாக பக்தி அல்லவா இருந்தாக வேண்டும்?

இரண்டுமே கலந்து கலந்துதான் வருகிறது என்கிறமாதிரி, ஆசாரியாள் ச்லோகத்திலிருந்து தொனிக்கிறது. பிரார்த்தனை என்று ஒன்றைப் பண்ணுகிறோம் என்ற அளவுக்கு நாம் குரங்குக் குட்டியாக அவனைத் துளி பிடித்துக் கொள்ளத்தான் செய்கிறோம். ஆனால் பிடிப்பு உறுதியாக இல்லை. பிடி நழுவி நாம் விழுந்துவிடுகிற ஸ்திதியில்தான் இருக்கிறோம். இப்போது, அதாவது நம் முயற்சி போதாதபோது, அவனே பூனையம்மாவைப்போல் நமக்கு உறுதி தர வேண்டியிருக்கிறது என்ற உணர்வைப் பெற வேண்டும். “நான் நழுவி விழாமல் பக்திக் கயிற்றைப் போட்டுக் கட்டிப் பிடித்துக் கொள் — த்ருடம் பக்த்யா பத்த்வா பவத் அதீனம் குரு” — என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.

“உன் அருள் என்ற கயிற்றால் கட்டிப் போடு” என்று ஆசார்யாள் சொல்லவில்லை. அப்படிச்சொன்னால், அவனே பூனை கவ்விக் கொள்கிற மாதிரி நம்மைக் கயிற்றால் தன் வசத்தில் வைத்துக் கொண்டு, நம்மை உய்விக்கிற பொறுப்பைத் தானே வைத்துக்கொண்டு விடுகிறான் என்று ஆகிவிடும். பக்த்யா பத்த்வா என்றே சொல்கிறார். அதாவது “உன் அருளால்” கட்டு என்று சொல்லாமல், “என் பக்தியாலேயே என் மனஸைக் கட்டு” என்கிறார். “பக்தி வலையில் படுவோன்” என்று மாணிக்கவாசகர் சொன்ன மாதிரி ஆசாரியாள் சொல்லவில்லை. அதாவது நம்மை விட்டு ஓடிக்கொண்டிருக்கிற அவனையே நாம் பக்திக் கயிற்றால் கட்டுகிறோம். அல்லது பக்தி என்ற வலைக்குள் பிடித்துவிடுகிறோம் என்று சொல்லவில்லை. இப்படிச் சொல்லியிருந்தால் அது முழுக்க மர்க்கட கிசோர நியாயமாக ஆகிவிடும்.

இரண்டும் இல்லாமல், இரண்டும் கலந்த மாதிரி ஆசாரியாள் சொல்கிறார். பக்தியால் அவனைக் கட்டுகிற பக்குவந்தான் நமக்கு இல்லையே! அதனால் இப்போது இந்த ஆரம்ப நிலையில் பக்தியையே அவன்தான் தரவேண்டும். நாம் பக்தியே செய்யாமல் அவனே நம்மை ஒரேயடியாக உய்வித்து மோக்ஷத்தில் சேர்த்துவிட வேண்டும் என்றும் எதிர்பார்க்கக்கூடாது. அது ரொம்பவும் தகாத ஆசை. அதனால் ‘பக்தியைக் கொடு; அப்படிக் கொடுப்பதே உன் அருள்தான்’ என்று வேண்டிக் கொள்ள வேண்டும். “அவன் அருளாலே அவன் தாள் வணங்கி” என்று மாணிக்கவாசகரும் சொல்கிறது போல, அவன் தன் அருளால் நேரே மோக்ஷத்துக்குத் தூக்கிவிடாமல், முதலில் நாம் அவனை பக்தி பண்ணுகிறதற்கே அருள்செய்ய, அப்புறம் நம் பக்திக்கு இரங்கி மோக்ஷம் தரவேண்டும். இப்படிப் புருஷப் பிரயத்தனமும், தெய்வாநுக்ரஹமும் கலந்து வந்தால்தான் நன்றாயிருக்கிறது. நியாயமாயிருக்கிறது. இப்போது நமக்குச் சுரக்க வேண்டிய அன்பை (பக்தியை)யே அவன் ஒரு கயிறாகத் தரட்டும். பக்தியால் நாம் அவனைக் கட்டுவதும் கட்டாததும் பிற்பாடு நடக்கிறபடி நடக்கட்டும். இப்போதைக்கு அவனே நாம் பக்தியை விட்டுவிடாத மாதிரி, அதனால் நம்மைச் சுருக்குப் போட்டுக் கட்டிவிடட்டும் -என்றிப்படி மா்க்கட கிசோர நியாயமாகவும் இல்லாமல், மார்ஜார கிசோர நியாயமாகவும் இல்லாமல், ஒரு வழியை ஆசார்யாள் சொல்லிக் கொடுக்கிறார்.

“பிரபத்தியில் இப்படியா அப்படியா? குரங்குக் குட்டியாகப் பற்றிக்கொள்ள வேண்டுமா, அல்லது பூனைக் குட்டியாகத் தன் செயல் இல்லாமல் கிடக்க வேண்டுமா?” என்று வாதம் செய்து சண்டை போட்டு, ஏதாவது ஒன்றை நிலைநாட்டி விடலாம். ஆனால் அது வெறும் வாதமாகத்தான் இருக்குமே தவிர, காரியத்தில், நம்மில் அபூர்வமாக லக்ஷத்தில் ஒருத்தனைத் தவிர எவராலும் இரண்டு விதங்களில் எதிலும் சரணாகதி பண்ண ஸாத்யப்படாது. இதற்காக நாம் மனம் தளர்ந்து விடாமல், நம் நிலையிலும் ஸாத்யப்படுகிறமாதிரி, “பக்தி வரம் தா அப்பா!” என்று பிரார்த்திக்க, ஆசார்யாள் வழி சொல்லிக் கொடுக்கிறார்.

இப்போதைக்கு இந்த மூன்றாவது வழியில், நிஜ பக்தியைக் கொடு என்று பிரார்த்தனை பண்ண முடிந்த மட்டும் பண்ணுவோம். அப்புறம் அது முதலில் சொன்ன இரண்டு வழிகளில் எதில் கொண்டு சேர்க்கிறதோ, அல்லது பகவத்பாதாளின் ஞான மார்க்கத்தில்தான் சேர்கிறதோ, அப்படிச் சேர்த்துவிட்டுப் போகட்டும். எந்த நதியானாலும் முடிவில் அதை ஸமுத்ரம் எடுத்துக்கொள்கிற மாதிரி எந்த வழியானாலும் அதன் முடிவில் ஒருவனேயான பரமாத்மா நம்மை எடுத்துக்கொள்வான்.

“என் மனஸைக் கட்டி உன் ஆதீனத்திலேயே வைத்துக்கொள்ளு” என்று இங்கே நம்முடைய பக்தி பாவத்தை ஈச்வரப் பிரஸாதமாகவே ஆசார்யாள் விட்டுவிடுகிறார். அவரது பாஷ்யங்களிலும், அத்வைத பிரகரண கிரந்தங்களிலும் ஈச்வர ஆராதனத்தை மனம் ஒருமைப்படுவதற்காக அவர் உபாயமாகச் சொல்லியிருந்தாலும், ஈச்வரனின் அருளாலேயே பக்தியும் ஸம்பாதித்துக் கொள்ளப்படவேண்டும் என்று சொல்லவில்லை. அந்த அத்வைத நூல்கள், ஞானவிசாரமும், ஆத்ம தியானமும் செய்யக்கூடிய பக்குவம் பெற்றவர்களுக்கு ஏற்பட்டது. இங்கே “சிவானந்த லஹரி”யில் நம் எல்லோராலும் முடிந்த பக்தி மார்க்கத்தைக் காட்டுவதால் இந்த மாதிரி சொல்கிறார். பக்தியினால் (உபாஸனையால்) ஸாதகனே மனஸைக் கட்டவேண்டும் என்று ஞானப் புஸ்தகங்களில் சொன்னார். இங்கே ஈச்வரனிடம், “அப்பா, பக்தியைத் தந்து, அதனால் எங்கள் மனஸைக் கட்டிப்போடு” என்று அவனிடமே விட்டுவிடுகிறார் ஆசார்யாள்.

“ஹ்ருதய கபிம் அத்யந்த சபலம்” என்று ஆசார்யாள் சொல்கிறபடி, மகா சபலத்துடன் தாவிக்கொண்டேயிருக்கிற மனக் குரங்கை ஈச்வரன் கட்டி வைத்து, முதலில் அது கயிற்றின் நீளத்துக்குத் தாவுகிற மாதிரி விட்டுப் பிடித்தாலும், அப்புறம் அது அவன் ஆட்டினால்தான் ஆடுவது என்று குரங்காட்டியின் குரங்கு மாதிரிச் சும்மா இருக்கிறபடி செய்துவிடுவான். மனஸ் இப்படித் துளிக்கூடத் தானாக நகராதபோது, அதை அவனும் ஆட்டி வைக்காவிட்டால், அதுதான் மனமே அழிந்துபோய் ஆத்மா மட்டும் பிரகாசிக்கற அத்வைத சித்தியான மோக்ஷம். இப்படிப்பட்ட அத்வைதத்தைத் தருவதும் பரமாத்மாவின் கையில்தான் இருக்கிறது என்கிற மாதிரி இங்கே கயிற்றை அவன் கையிலேயே கொடுத்திருக்கிறார்! இந்த ச்லோகம் பக்திப் பிரார்த்தனையாக இருக்கும்போதே அதற்குப் பலனாகப் பரமாத்மா ஞான மோக்ஷத்தைக் கொடுக்கவும் செய்யலாம் என்கிற அபிப்பிராயத்தையும் கொடுக்கிறது.

பின்னாடி ஒரு ச்லோகத்தில் இந்த அபிப்பிராயம் இன்னம்கூட ஸ்பஷ்டமாக வருகிறது. அந்த ச்லோகத்தில் மனஸை ஒரு மதயானைக்கு ஒப்பிட்டுவிட்டு, “இந்த யானையை ஞானம் என்கிற கருவியால் உன் பாதமான தறியில் கட்டிவிடு” என்கிறார்: “ஹ்ருதய மதேபம் பதான சித்யந்த்ரை:

இங்கே “பக்த்யாபத்த்வா” (பக்தியினாலே கட்டி) என்றவர் அங்கே “பதான சித்யந்த்ரை:” (ஞானத்தால் கட்டு) என்கிறார். பக்தியைத் தருவது, ஞானத்தைத் தருவது, அதனால் முடிவில் அத்வைதத்தையே தருவது ஆகிய எல்லாமும் பரமாத்மப் பிரஸாதமாகவே கிடைக்கக் கூடியவை என்று இதிலிருந்து தெரிகிறது. நமக்கு அவன் பக்தியைத் தந்து, நாம் அவனை பக்தி பண்ணிக் கொண்டிருந்தாலே, அவன் ஞான மோக்ஷாதிகளைக் கொடுத்துவிடுவான் என்ற தாத்பரியம் ஏற்படுகிறது.

அந்த பக்தியை முதலில் பிரார்த்திப்போம். அதனால் இரண்டில் ஒரு தினுஸான சரணாகதி ஸித்திக்கும். அவன் விட்ட வழி என்று, நம் மனஸுக்கென்று ஆசையும் ப்ளானும் இல்லாமல் விட்டுவிடுவதுதானே சரணாகதி? இதுவும் ஞான மார்க்கத்தில் மனஸின் ஓட்டமே இல்லாத நிலை என்று சொல்லப்படுகிறதும் ஒன்றேதான். ஆத்ம விசாரத்தால் மனஸை நிறுத்துவதற்குப் பதில் இங்கே பக்தியால், அன்பினால் நிறுத்துகிறோம்.

பக்தி மார்க்கத்திலே சொல்லப்படும் இரண்டு விதமான சரணாகதிகளானாலும் சரி, ஞான மார்க்கத்திலே சொல்லப்படும் மனோ நாசமானாலும் சரி, எதற்கும் முதலிலே வழியாக இருப்பது பக்திதான். அதனால், ஆசார்யாள் சொல்லிக் கொடுக்கிற மாதிரியே –நாம் இப்போதுள்ள ஸ்திதியில் –“இந்த என் மனக்குரங்கை பக்தி என்ற கயிற்றால் திடமாகக் கட்டி, உன் ஆதீனத்தில் வைத்துக் கொள்ளப்பா” என்று பரமாத்மாவிடம் பிரார்த்தனை செய்வோம்.

மே ஹ்ருதயகபிம் அத்யந்த சபலம்

த்ருடம் பக்த்யா பத்த்வா

சிவ பவத் அதீனம் குரு விபோ ||



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 03, 2023 9:26 pm

வேத மதம்

ஹிந்துமதத்தின் ஆதார நூல்கள்



நம் அறியாமை


உலகத்தில் புஸ்தகங்கள் நிறைய இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விஷயத்தைச் சொல்லுகிறது. ஒவ்வொரு மதத்தினரும் ஏதாவது ஒரு புஸ்தகத்தைத்தான் நிரம்பவும் கெளரவமாக வைத்திருக்கிறார்கள். எல்லாம் புஸ்தகங்களேயானாலும், ஒரு புஸ்தகத்தை விசேஷமாகக் கொண்டாடுகிறார்கள். அதில்தான் ஜன்மம் கடைத்தேறும் வழிகள் சொல்லப்பட்டிருப்பதாகச் சொல்லுகிறார்கள். அந்தப் புஸ்தகத்துக்குப் பூஜை செய்கிறார்கள்; நமஸ்காரம் செய்கிறார்கள். சில மதஸ்தர்கள் அந்தப் புஸ்தகத்திற்கே தனியாகக் கோயில்கட்டி வணங்குகிறார்கள். ஸீக்கியர்கள் அவ்வாறு செய்து வருகிறார்கள். அவர்களுடைய மதப் புஸ்தகத்தை அவர்கள் “கிரந்த ஸாஹேப்” என்று மரியாதையாகச் சொல்லுவார்கள். இப்படி ஒவ்வொரு மதத்தினரும் தங்கள் தங்கள் ஆத்ம க்ஷேமத்திற்கு வேண்டிய மார்க்கங்களைச் சொல்லும் ஒவ்வொரு புஸ்தகத்தைப் பெற்றிருக்கிறார்கள். இவை எல்லாம் ஒரு மதஸ்தாபகரின் பெயரில் இருந்தாலும், வாஸ்தவத்தில் பரமாத்மாவின் வாக்கேதான், பகவானின் ஆக்ஞைதான் அந்தந்த மதஸ்தாபகர் வழியாக வந்தது என்கிறார்கள். இதனால் இவற்றை Revealed Text என்கிறார்கள். இதையே நாமும் “அபெளருஷேயம்” என்கிறோம். புருஷர்கள் (மனிதர்கள்) தாமே செய்வது பெளருஷேயம். இப்படியில்லாமல் பரமாத்மாவே மனிதனைக் கருவி மாத்திரமாகக் கொண்டு வெளியிடுவது அபெளருஷேயம்.

சரி, நம்முடைய வைதிக மதத்திற்கு ஆதாரமாக எந்தப் புஸ்தகம் இருக்கிறது? மற்ற மதஸ்தர்களை ‘உங்கள் மதப்புஸ்தகம் எது?’ என்று கேட்டால் அவர்களுக்கு சந்தேகமில்லாமல், இன்னது என்று தெரியும். கிறிஸ்தவர்கள் பைபிள் என்பார்கள். முஹம்மதியர்கள் குரான் என்பார்கள். பெளத்தர்கள் த்ரிபிடகம் என்பார்கள். பார்ஸியர் ஜெண்டவஸ்தா என்பார்கள். நம்மைக் கேட்டால் – இந்த காலத்தில் சைவர், வைஷ்ணவர், த்வைதி, அத்வைதி இன்னும் நம் தேசத்திலிருக்கப்பட்ட பல ஸம்பிரதாயத்தினருக்கும் பொதுவாக எந்த மதப்புஸ்தகம் இருக்கிறதென்றால் – எல்லோரும் சேர்ந்து எந்த ஒன்றைச் சொல்லலாம் என்பதே தெரியாமல் விழிக்கிறோம்! இதற்கு என்ன காரணம்?

முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது. மற்ற ஜனங்களுக்கு எந்த மதத்தில் ஜனனம் ஏற்பட்டிருக்கிறதோ, அந்த மதத்தைப் பற்றிப் பள்ளிக்கூடத்திலேயே சொல்லிக் கொடுக்கிறார்கள். அல்லது மதப் படிப்பை முதலில் இரண்டு அல்லது மூன்று வருஷங்கள் படித்துவிட்டு அப்புறம் லெளகிகப் படிப்பைப் படிக்கிறார்கள். அதனால் சிறு பிராயத்திலேயே அவர்களுக்கு மதத்தைப் பற்றிய ஞானம் ஏற்பட்டு விடுகிறது. நம்முடைய மதத்தில் மதத்தைப்பற்றிப் படிப்பதே கிடையாது. அப்படி படிக்காததனால் என்ன நிலைமை ஏற்பட்டிருக்கிறது? வேறு எந்த மதத்துக்காவது ஆள் வேண்டுமானால் நம்முடைய மதத்திலிருந்து பிடித்துக் கொண்டு போகிறார்கள். மற்ற மதஸ்தர்கள் தங்கள் மதத்திலிருந்து வேறொரு மதத்திற்கு போவதில்லை. காரணம் பால்யத்திலிருந்தே மத சாஸ்திரங்களை அவர்கள் படிக்கிறார்கள். அதனால் அதனிடம் பற்று ஏற்படுகிறது. நாமோ பால்யத்தில் கொஞ்சம்கூட எட்டிப் பார்ப்பது இல்லை. என்ன வாசித்தாலும் ஏறாத வயதில் நாம் வாசிக்கிறோம். நம்முடைய மதப்புஸ்தகங்களை நாமே தூஷிக்கிறோம், அழிக்கிறோம்.

நம் படிப்பெல்லாம் வெள்ளைக்கார முறையில் உள்ள படிப்பு. பேச்சு, டிரஸ், நடவடிக்கை எல்லாமே வெள்ளைக்காரர்களைப் போல இருக்க வேண்டுமென்பதுதான் நம் ஆசை. சுதந்திரம் வந்த பிறகும் இப்படியேதான் இருந்து கொண்டிருக்கிறோம். முன்னைவிட அதிகமாக வெள்ளைக்கார நாகரிகத்தையே நம் வாழ்முறையாக்கிக் கொண்டிருக்கிறோம். ஸ்வதேசியம், பாரத நாகரிகம், நம்முடைய தனிப்பண்பாடு என்று பேசுவதில் மட்டும் குறைவில்லை. உள்ளே பரதேசியாக இருந்துகொண்டு வெளியில் சுதேசிப் பேச்சுப் பேசி என்ன பிரயோஜனம்? உள்ளும் புறமும் சுதேசியமாக இருப்பதென்றால், நம் தேசத்துக்கு முதுகெலும்பாக அநாதிகாலம் தொட்டு இருந்து வருகிற மதவிஷயங்களை பால்யத்திலேயே சொல்லிக் கொடுத்தால்தான் அது ஸாத்யமாகும். ‘ஸெக்யூலர் ஸ்டேட்’டில் [மதச்சார்பற்ற ராஜாங்கத்தில்] இதற்கு வழி பண்ணித் தரமுடியவில்லை! அதனால் பழைய வெள்ளைக்காரப் படிப்பே தொடர்ந்து வந்திருக்கிறது. அதில் சொல்லிக் கொடுப்பதெல்லாம் நம்முடைய சாஸ்திரங்கள் ‘ஸூப்பர்ஸ்டிஷன்’ (மூட நம்பிக்கை) என்பதுதான்! இதனால், “நம் மதத்துக்கு ஆதாரமான புஸ்தகம் என்ன? ஹிந்துக்கள் என்ற பெயருள்ள ஸகலருக்கும் பொதுவாக என்ன இருக்கிறது?” என்று கேட்டால் கூட பதில் சொல்லத் தெரியாத நிலையில் இருக்கிறோம்.

விஷயம் தெரியாதவர்கள் மட்டந் தட்டினாலும், இதர தேசங்களிலுள்ள விஷயம் தெரிந்தவர்களும் ஆத்ம ஸாதகர்களும் நமது ஆத்ம வித்யையை (லெளகிகம் என்று தோன்றுகிற வித்யைகள்கூட நம் தேசத்தில் ஆத்மாபிவிருத்திக்கே ஸாதனமாக இருப்பதால் நம்முடைய அரசியல் சாஸ்திரம், எகனாமிக்ஸ், நாட்டிய சாஸ்திரம் உள்பட எல்லாம் ஆத்மவித்யை தான்) பாராட்டுகிறார்கள். தேடித் தேடி எடுத்துக் கொண்டு தர்ஜுமா (ட்ரான்ஸ்லேட்) பண்ணி வைத்துக் கொள்கிறார்கள். எனவே லோகத்தில் நமக்கு ஒரு கெளரவம் வேண்டுமானால், அது எதனால் நமக்குத் தன்னால் பிறரது மரியாதை கிடைக்கிறதோ அந்த சாஸ்திரங்களில் நம் அறிவை விருத்தி பண்ணிக் கொள்வதால்தான் ஏற்படும். ஸயன்ஸிலும் டெக்னாலஜியிலும் மற்றவர்களுக்கு மேல் நாம் பண்ணிக் கெளரவம் பெறமுடியாது. அப்படியே இரண்டொருத்தர் நம்மில் நோபல் பிரைஸ் வாங்கினாலும், இதனால் நாம் பூரிக்கலாமே தவிர லோகம் பூரிக்காது. “ஸயன்ஸும் டெக்னாலஜியும் நிறைவு தரவில்லை என்று நாம் ஹிந்துக்களிடம் போனால், அவர்கள் ஃபிலாஸஃபியை விட்டு விட்டு இதில் வந்து விழுந்திருக்கிறார்களே!” என்றுதான் நினைக்கிறார்கள். இந்தியாவில்தான், மற்ற அத்தனை தேசங்களின் மஹான்களைக் கூட்டினாலும், அதைவிட ஜாஸ்தியான மஹான்கள் தோன்றி ஆத்மானந்தத்தை அடைந்திருக்கிறாரகள் என்பதுதான் நம் பெருமை. அதற்கு ஆதாரமாக அவர்கள் கொடுத்துப் போயிருக்கிற சாஸ்திரங்களை நாம் தெரிந்து கொள்ளாமலிருப்பது ரொம்பக் குறைவான காரியம்.

நமக்கு ஆதாரமான மதப் புஸ்தகத்தின் பேரே தெரியவில்லை. “தெரியாததால் என்ன மோசம்? தெரிந்து கொள்வதால் என்ன லாபம்?” என்றுகூடக் கேட்கிறோம்.

பாரத நாகரிகம் என்று லோகம் பூராவும் கொண்டாடுகிற பெரிய ஸம்பிரதாயத்தின் வாரிசுகளாக வந்திருக்கிற நாம் இப்படி இருக்கலாமா? “நம் பண்பாடு என்னவானால் என்ன? பணம் தான் பெரிசு” என்று கண்டம் கண்டமாகப் பறந்து கொண்டிருக்கலாமா? இப்படி மற்ற தேசங்களுக்குப் போனவர்கள் பல பேர் என்னிடம் வருகிறார்கள். “நாங்கள் போயிருக்கிற தேசங்களில் உள்ளவர்கள் எங்களிடம் நம் மதத்தைப் பற்றி கேட்கிறார்கள். வேதத்தைப் பற்றி, உபநிஷத்தைப் பற்றி, கீதையைப் பற்றி, யோகத்தைப் பற்றி, கோயில்களைப் பற்றி, புராணங்களைப் பற்றி, இன்னம் இப்படி நம் மதத்திலுள்ள அநேக தத்வங்களைப் பற்றி ஆர்வத்துடன் கேட்கிறார்கள். எங்களுக்கு ஒன்றும் பதில் சொல்லத் தெரியவில்லை. அவர்களுக்குத் தெரிந்த அளவுகூட நம் மதத்தைப் பற்றி எங்களுக்குத் தெரியவில்லை. ரொம்பவும் அவமானமாக இருக்கிறது. அதனால் நீங்களாவது சுருக்கமாக நம் மத ஸித்தாந்தங்களை, தத்வங்களைப் புஸ்தகமாகப் போட்டுக் கொடுங்களேன்!” என்று கேட்டுக் கொள்கிறார்கள். அதாவது விதேசியமாக இருப்பதுதான் நமக்குப் பெருமை என்று நாம் நினைத்தாலும், அந்த விதேசிகள் நாம் இப்படியிருப்பதைப் பார்த்து மட்டமாகத் தான் நினைக்கிறார்கள். லோகத்துக்கெல்லாம் பழமையான ஒரு நாகரிகத்தவர்களுக்கு அதனிடம் பற்று போய்விட்டதே என்ற நம்மைப்பற்றிக் குறைவாகத்தான் மற்றவர்கள் நினைக்கிறார்கள்.

நாம் எதையுமே படிக்காமல், எதுவுமே தெரிந்து கொள்ளாமல் இருந்தால்கூடப் பரவாயில்லை. ஏதோ அறிவு போதாத ஜனங்கள் என்று வைத்து விடுவார்கள். ஆனால் இப்போது நாம் படிப்பதும், பேசுவதும், எழுதுவதும் கொஞ்சநஞ்சமல்ல. அத்தனையும் ஸயன்ஸ், டெக்னாலஜி, அரசியல், வேறு தினுசான ஆராய்ச்சிகள், ஸினிமா, கண்ட கண்ட நாவல் என்று இப்படித்தான் இருக்கின்றன. அறிவு இல்லாத ஜனங்களாக இல்லாமல், நிறைய புத்தியைச் செலவழித்து நாம் இத்தனை படித்த போதிலும், எழுதிய போதிலும், நம் தேசத்துக்கே விசேஷமாயுள்ள அத்யாத்ம சாஸ்திரங்களைப் புறக்கணிக்கிறோம் என்பதாலேயே நம்மைப் பிற தேசத்தார் மிகவும் குறைவாக நினைக்கிறார்கள்.

ஏராள நூல்கள் நம் மத விஷயமாக உள்ளன. நமக்கு அதெல்லாம் வேண்டியிருக்கவில்லை. நாமும் நிறைய படிக்கிறோம். ஆனால் எல்லாம் தேசாந்தர புஸ்தகங்கள்தான். மில்டன், வேர்ட்ஸ்வொர்த் எழுதினதெல்லாம் நமக்குத் தெரியும். பவபூதி என்ன எழுதினார், ஒட்டக்கூத்தர் என்ன எழுதினார் என்றால் தெரியாது. லூயி டைனாஸ்டி, ஃஜார் டைனாஸ்டி நமக்குத் தெரியும்; ஸூர்ய வம்சம், சந்திர வம்சம் தெரியாது. ஏன், நம் கோத்ர ரிஷிகள் பேரே தெரியாது! நமக்கு ஸம்பந்தமில்லாதவை கட்டுக்கட்டாகத் தெரியும். ஆனால், எதைக் கண்டு லோகம் பிரமிக்கிறதோ, அதற்கு ஆதாரமான நம் சாஸ்திரங்களின் பேர்கூடத் தெரியாது. சாஸ்திரக்ஞர்கள் சொல்ல வந்தாலும், நாம் காது கொடுத்துக் கேட்பதில்லை. அசட்டை செய்கிறோம். நம் தேசம் இப்படியொரு ஹீன ஸ்திதியில் இருக்கிறதே என்று ரொம்பவும் வேதனையாக இருக்கிறது.

‘நம் பண்பாட்டைப் பற்றித் தெரிந்து கொண்டால் பணம் வருமா?’ என்று நாம் கேட்டுக் கொண்டிருப்பதால் இப்படி ஆகியிருக்கிறது. வாஸ்தவத்தில் நாம் பணம் சம்பாதிப்பது, வாழ்க்கை நடத்துவது முதலான ஸகல விஷயங்களும் அந்தப் பண்பாட்டை நாம் பூரணமாகத் தெரிந்துகொண்டு, அநுஷ்டித்து, நிறைவு பெறவேண்டும் என்பதற்குத்தான்! என்ன காரணத்துக்காக நம் மதத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பது தப்பான கேள்வி. அதற்கு காரணம், பிரதி பிரயோஜனம் எதிர்பார்ப்பது முழுப் பிசகு. நாம் செய்கிற எல்லாக் காரியங்களுக்கும் பிரயோஜனமாக இருப்பதுதான் மதமே தவிர, இதனால் வேறு பிரயோஜனம் வேண்டும் என்பதில்லை. மதாநுஷ்டானத்தால்தான் எல்லாவற்றையும்விட மிகப் பிரயோஜனமான சாந்தமும், பிரேமையும், மோக்ஷமும் கிடைக்கிறது என்பதை மறந்துவிட்டு, அதனால் பணம் வருமா, வசதி கிடைக்குமா என்று மட்டும் பார்த்து, ‘என்ன பிரயோஜனம்?’ என்கிறோம். பற்று, பிரேமை இருந்துவிட்டால் இப்படி பிரதிப் பிரயோஜனம் எதிர்பார்க்கும் எண்ணமே எழாது. எதற்கு இது காரணமாக இருந்தால் நாம் இதை விரும்புவோமோ, அந்தப் பணம், வசதி முதலானவற்றையெல்லாம் இதற்கு காரணமாக வைத்துக் கொண்டு விடுவோம்.

சாஸ்திரத்தில் இப்படித்தான் சொல்லியிருக்கிறது. ப்ராஹ்மேணன நிஷ்காரணோ தர்ம: ஷடங்கோ வேத அத்யேயோ ஜ்ஞேயச்ச என்று இருக்கிறது*. அதாவது, பிராம்மணனானவன் ஒரு காரணமும் இல்லாமலே வேதங்களையும், சாஸ்திரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கிறது. சின்ன வயதில்தான் இப்படிக் காரணம் கேட்காமல், பிரயோஜனத்தை எதிர்பார்க்காமல் ஒன்றைச் சொல்லிக் கொடுத்தால் கற்றுக் கொள்ளத் தோன்றும். ‘சரித்திரம் எதற்குப் படிக்கிறோம்? பூகோளம் எதற்குப் படிக்கிறோம்?’ என்று கேட்காமலே ஒரு குழந்தை ஸ்கூலில் படிக்கிறபோதே, நம் மதக் கிரந்தங்களையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். பிற்பாடு காலேஜுக்குப் போகிறபோது இவன் ஒரு உத்தேசத்தை, பிரயோஜனத்தை நினைத்துத்தான் படிக்கிறான். வக்கீலாக வேண்டும் என்றுதான் பி.எல் படிக்கிறான்; வாத்தியாராக வேண்டும் என்றுதான் எல்.டி. படிக்கிறான்; டாக்டராக வேண்டுமென்றுதான் எம்.பி.,பி.எஸ் படிக்கிறான். லெளகிகமான பிரயோஜனத்தில் இப்போது ஆசை வந்துவிட்டது. அதனால் “மதப் புஸ்தகத்தை தெரிந்து கொண்டு என்ன ஆக வேண்டும்? தெரிந்து கொள்வதால் என்ன லாபம்?” என்றுதான் கேட்பான். அதனால் இந்தக் கேள்வி முளைப்பதற்கு முன்பே, பால்யத்திலேயே இந்த விஷயங்களை ஆரம்பித்து விடவேண்டும். அப்போது தானே பற்று ஏற்பட்டுவிடும். அப்புறமும் விடமாட்டான். பணம் காசைக் கொடுக்காவிட்டாலும் Sports-‍ல் (விளையாட்டில்) ஆசை உண்டாகிற மாதிரி, ஸங்கீதத்திலோ ஸினிமாவிலோ ஆசை உண்டாகிற மாதிரி, மதவிஷயத்திலும் ஏற்பட்டுவிடும். தாற்காலிகமான இன்பத்தைக் கொடுக்கிற விளையாட்டு, விநோதங்களிலேயே இப்படி பிரதிப் பிரயோஜனம் எதிர்பார்க்காத பற்று உண்டாகிறது என்றால், சாச்வத செளக்யத்தைக் கொடுக்கக் கூடியதான மதவிஷயத்தில் உண்டாகாமல் போகாது. ஆதாரக் கல்வி (Basic Education)யை நாம் சரியாக அமைத்துத் தராததில்தான் தோஷம் இத்தனையும் இருக்கிறது.

‘மதத்தை பற்றித் தெரிந்துகொண்டால் அது சோறு போடுமா?’ என்று கேள்வி கேட்கிற நிலைமை இன்று இருப்பது ரொம்ப அவமானம். ‘அத்யயனம் [வேதப்பயிற்சி] சாப்பாடு போடுமா என்று கேட்காதே! நாம் சாப்பிடுவதும் உயிர் வாழ்வதும் அத்யயனம் பண்ணத்தான் என்று ஆக்கிக் கொள்ளு’ என்று சாஸ்திரம் சொல்லியிருக்கிறது. காரணம் கேட்காமல் சாஸ்திரங்களைத் தெரிந்துகொள் என்கிறது.

இப்படிக் காரணம் கேட்காமல் படிக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிற மதத்தில் குழந்தை பிறந்தவுடன் நம்முடைய வித்தையை அறிய முடியாமல் கத்தரித்துவிடுகிறோம்! லெளகிக வித்தையை எடுத்தவுடன் வாசிக்கச் செய்கிறோம். பால்யப் பருவத்திலிருந்தே குழந்தைகளுக்கு ஆஸ்திக புத்தி வரும்படி நாம் பழக்கலாம். இந்த விஷயங்களைத் தவிர மற்ற விஷயங்களில் குழந்தைகளுக்காக எவ்வளவோ செலவு செய்கிறோம். ஒரு தகப்பனார், தம்முடைய குழந்தைக்கு உபநயனம் செய்வதாயிருந்தால் டாம்பீக அம்சங்களுக்காக நூற்றுக் கணக்கில் செலவழிக்கிறார்.அந்தச் செலவில் பத்தில் ஒரு பங்கு உபநயனத்திற்காக ஏற்பட்ட காரியத்தில் செலவழித்து, அந்தப் பையனை நல்ல பிரம்மசாரியாக உருவாக்கினால் நம்முடைய மதநம்பிக்கை போகாது. உபநயன வைபவத்தின் செலவைவிட உபநயன லக்ஷ்யத்திற்காகச் செலவு செய்வது விசேஷம். இந்த விஷயங்களில் பிரைவேட் டியூஷன் வைத்து குழந்தைகளுக்குச் சொல்லி வைக்கவேண்டும். அந்த விஷயங்களை அறிந்த வாத்தியார் மட்டும் ஏன் ஒருவித லாபமும் இன்றி இருக்க வேண்டும்? அவருக்கும் உபயோகமாக இருக்கும். மத விஷயங்கள் பால்யத்திலேயே தெரிந்திருந்தால் ஸந்தேஹமே வராது. நம் மதத்துக்கு ஆதாரமான புஸ்தகமே இன்னதென்று தெரியாத கேவல நிலை வராது.

அப்படி படிக்காததனால் பலவித அபிப்பிராயங்கள் நம்மவர்களிடத்தில் இருக்கின்றன. ஒருவர் ஆஸ்திகராக இருக்கிறார். வேறொருவர் நாஸ்திகராக இருக்கிறார். மற்றொருவர் பக்தி இல்லாமல் வெறும் கர்மாநுஷ்டானம் மட்டும் செய்கிறார். வேறொருவர் அநுஷ்டானமின்றி பக்தி மட்டும் பண்ணிக்கொண்டு இருக்கிறார். இவர்களுக்குள் ஒருவருக்கொருவர் அபிப்பிராய பேதங்கள் ஏகப்பட்ட விதமாக இருக்கின்றன. இதற்காகச் சண்டை வேறு! ஸந்தேஹங்களோ ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. மதப்படிப்பை இளம் பருவத்திலேயே படித்திருந்தால் எல்லாருடைய அபிப்பிராயமும் ஒன்றாக இருக்கும். ஸந்தேஹம் இருக்காது. மதப்படிப்பைப் படிக்கிற மற்ற மதங்களில் இத்தனை கக்ஷிகள் இல்லை என்பதைப் பிரத்யக்ஷமாகப் பார்க்கிறோம்.

நம்முடைய மதப் புஸ்தகம் என்ன? புஸ்தகத்தைத் தீர்மானம் பண்ணுவதே இந்தக் காலத்தில் சிரமமாக இருக்கிறது. நம்முடைய புஸ்தகம் எதுவோ அதில் சொல்லியிருக்கிறபடி நாம் அநுஷ்டானம் செய்து வந்தால் நமக்கு க்ஷேமம் உண்டாகும்.

மத க்ரந்தங்களில் எது சொல்லியிருக்கிறதோ அதே விஷயம் வேறு புஸ்தகங்களில் சொல்லியிருந்தாலும் தமது மதப் புஸ்தகம் இதுதான் என்று ஒன்றையே ஒவ்வொரு மதஸ்தர்களும் கொண்டாடுகிறார்கள். இன்றைக்கு ஒருவன் ஒரு புஸ்தகம் எழுதுவான்; நாளைக்கு ஒருவன் வேறு எழுதுவான். அவைகளில் நல்லதும் இருக்கலாம்; தப்பும் இருக்கலாம். ஆகையால் ஏதாவது ஒன்றை ஸ்திரமாக ஏற்படுத்திக் கொண்டால் நல்லதல்லவா? அதற்காகத் தான் பல மதஸ்தர்களும் தங்கள் தங்களுக்குப் பிரமாணமாக ஒவ்வொரு புஸ்கத்தை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நமது மதம் என்ன என்பதை எந்த மதப் புஸ்தகங்களிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டும்? லைப்ரரிகள் கொள்ளாமல் லக்ஷக்கணக்கில் நம் மத விஷயமாக புஸ்தகங்கள் இருக்கின்றன. விஷயங்களும் அதிகமாக இருக்கின்றன. இவற்றையெல்லாம் பார்த்தால் மூளை குழம்பிப் போகும் போல் இருக்கிறது. ஒன்றுக்கொன்று அப்படி வித்யாஸம் இருக்கும். ஆனாலும், இதற்கெல்லாம் ஆதாரமாகப் பொதுவான ஒரு சில நூல்கள் உண்டு.

நம்முடைய மத அநுஷ்டானத்தால் நல்ல அனுபவத்தையடைந்தவர்கள் இருக்கிறார்கள். உலகத்தையே மறந்து ஆனந்தமாக ஏகாந்த நிஷ்டையில் இருந்து கொண்டு, என்ன பண்ணினாலும் பொருட்படுத்தாமல், சாந்த ஸமாதியில் சாகாமற் கிடந்தவர்கள் எத்தனையோ பேர். அவர்களை நாம் பிரத்தியக்ஷமாகவும் பார்க்கிறோம். புஸ்தகங்களின் மூலம் ஸதாசிவ பிரம்மேந்திரர்கள், பட்டினத்தார் முதலியவர்களைப் பற்றிக் கேட்டிருக்கிறோம். இவ்வளவு அநுபவிகள் மற்ற மதங்களில் மிகவும் குறைவு. இத்தகைய மதத்திற்குப் பிரமாண க்ரந்தங்கள் இல்லாமலா போகும்?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 03, 2023 9:27 pm

மதம் எதற்கு?



மதம் எதற்கு? ஒரு மதகுரு சொல்லுவதை நாம் ஏன் கேட்கப் போகிறோம்? நமக்கு கஷ்டம் போவதற்காகவும் குறை நீங்குவதற்காகவும் போகிறோம். குறையில்லாவிட்டால் வேண்டியதில்லை. குறை அதிகமானால் அதிகமாகக் கோயிலுக்குப் போகிறோம்; அதிகமாகப் பெரியவர்களை தரிசிக்கிறோம்; உபதேசம் கேட்கிறோம். குறையில்லாவிட்டால் உபதேசம் வேண்டாம். நமக்குள்ள ஸந்தேஹங்களையும் கஷ்டங்களையும் போக்கிக் கொள்வதற்காக நாம் பெரியவர்களிடம் போகிறோம்; புஸ்தகங்ளை வாசிக்கிறோம்; நல்லவர்களிடம் உபதேசம் பெறுகிறோம்; மஹாக்ஷேத்திரங்களுக்குப் போகிறோம்; தீர்த்த ஸ்நானம் செய்கிறோம். அப்படி செய்வதால் மனது கொஞ்சம் கொஞ்சமாக சாந்தி அடைகிறது. முழுவதும் சாந்தி அடைந்தவர்கள் வெட்டினாலும் குத்தினாலும் பூஷித்தாலும் தூஷித்தாலும் ஆனந்தமாக இருக்கிறார்கள். புஸ்தகம் வாசித்தல், குரு தரிசனம் செய்தல் முதலியவற்றால் மற்றவர்களுக்கும் தாற்காலிகமாவது இந்த சாந்தி ஏற்படுகிறது. எல்லா ஜாதிகளிலும் மஹான்கள் கிளம்புகிறார்கள்; மனதில் சாந்தி அடைகிறார்கள். இந்த சாந்திக்குரிய மார்க்கத்தைத்தான் “மதம்” என்பது. இதன் இன்னொரு பேர் “தர்மம்” என்று சொல்வார்கள். தர்மமானது சிரேயஸுக்கு ஸாதனம். அதுதான் மதம்.

தர்மம் என்பது பின்பு லோகத்திலேயே க்ஷேமமாக இருக்கவேண்டி அநுஷ்டிப்பது. பின்பு இது வேண்டும் என்ற ஆசையில்லா விட்டால், லோகத்தில் க்ஷேமத்தை எதிர்பார்க்காமல் அநுஷ்டித்தால் அதுவே மோக்ஷத்தைத் தரும். அதுதான் மதம். மதத்தை “தர்மம்” என்றே சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறது. வாழ்க்கை பூர்ணத்வம் அடைவதற்கான அறநெறிகள் என்னவோ அவைதான் “தர்மம்” என்பது. அப்படிப்பட்ட தர்மம் என்ன என்று சொல்கிற நூல்கள் நமக்கும் இருக்கின்றன. நாம்தான் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். தர்மத்துக்கு ஆதாரமான விஷயங்களைச் சொல்வதால், இந்த நூல்களுக்கு தர்ம பிரமாணங்கள் என்று பெயர். பிரமாணம் என்றால் இதுதான் ‘அதாரிடி’யானது, சரியானது, ஸத்தியமானது என்று நிலைநாட்டிச் சொல்வது. இப்படி, ஹிந்து மதம் என்று தற்போது வழங்குகிறதும், ஸநாதனமாக வேத காலத்திலிருந்து வந்திருப்பதுமான தர்மம் என்ன என்பதை எடுத்துச் சொல்கிற, ஆதார நூல்கள், சாஸ்திரங்கள் பதினான்கு இருக்கின்றன.

தர்மம் அல்லது மதம் என்பதன் கொள்கை என்ன, அநுஷ்டானம் என்ன என்று ஸத்தியமாகத் தெரிவிக்கிறது தான் தர்ம ப்ரமாண புஸ்தகங்கள். அவை இன்னவென்று நமது சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது:

அங்கானி வேதாச் சத்வாரோ மீமாம்ஸா ந்யாய விஸ்தரபாடகன்

புராணம் த‌ர்ம சாஸ்த்ரம் ச வித்யா ஹ்யேதாச் சதுர்தச || (மனு ஸ்ம்ருதி)

புராண-ந்யாய-மீமாம்ஸா-தர்ம‍-சாஸ்த்ர‍-அங்க மிச்ரிதாபாடகன்

வேதா: ஸ்தானானீ வித்யானாம் தர்மஸ்ய ச சதுர்தச || (யாஜ்ஞவல்க்ய ஸ்ம்ருதி)



‘சதுர்தச’ என்று இந்த இரண்டு ச்லோகங்களிலும் முடிவாக வருகிறது, ‘சதுர்தச’ என்றால் பதினான்கு. நமக்கு பிரமாண நூல்கள் பதினான்கு என்று இவற்றிலிருந்து தெரிகிறது. அறிவு இந்தப் பதினான்குக்குள் அடங்கியிருக்கிறது.

‘வித்’ என்றால் ‘அறிவது’ என்று அர்த்தம். நாம் ஸத்யமான தத்வத்தை அறியும்படியாகப் பண்ணும் அறிவு நூலே வித்யா. இப்படிப் பதிநாலு இருப்பதுதான் இந்த இரண்டு ச்லோகங்களில் “வித்யா ஹ்யேதாச் சதுர்தச” என்றும், “வித்யானாம் தர்மஸ்ய ச சதுர்தச” என்பதாகவும் சொல்லப்பட்டிருகிறது. அறிவு நூலுக்கு அறிவு நூல்; அற நூலுக்கு அற நூல். அதனால் தான் இந்தப் பதிநாலும் வித்யா ஸ்தானம், தர்ம ஸ்தானம் என்ற இரண்டு பேரையும் பெற்றிருக்கின்றன: “ஸ்தானானி வித்யானாம் தர்மஸ்ய ச சதுர்தச”. ‘வித்’ – ‘அறிவது’ – என்றால், இங்கே கண்ட கண்ட விஷயத்தைத் தெரிந்து கொள்வது என்று அர்த்தமில்லை. ஸத்யத்தை அறிகிற ஞானமே ‘வித்யா’வில் வரும் ‘வித்’; ‘வித்வான்’ என்பதில் வரும் ‘வித்’, Wit, Wisdom என்பதெல்லாம் இந்த ரூட்டிலிருந்து வந்தவைதான். ‘வித்’ தாதுவிலிருந்தே ‘வேதம்’ என்பதும் வந்திருக்கிறது. வேதம் என்றால் நேர் அர்த்தம் Book of Knowledge என்று சொல்லலாம். அறிவைத் தருவதால் இந்தப் பதினான்குக்கும் வித்யாஸ்தானங்கள் என்று பெயர். “அறிவிற்கு இருப்பிடம்” என்பது அதன் அர்த்தம். அறத்துக்கு இருப்பிடமானதால் தர்ம ஸ்தானமாக இருப்பதே இப்படி அறிவுக்கும் இடமாயுள்ளது.



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 03, 2023 9:29 pm

பிரமாண நூல்கள்


அந்தப் பதினான்காவன:‍‍- நான்கு வேதங்கள்; வேதங்களின் ஆறு அங்கங்கள்; அதோடு, மீமாம்ஸை, நியாயம், புராணம், தர்மசாஸ்திரம் என்ற நாலு.

வேதத்தைப் பற்றியும் ஆறு அங்கங்களைப் பற்றியும் reference-‍ஆவது கேட்டிருப்பீர்கள்.

“வேதமோ டாறங்க மாயினானை”



என்று தேவாரம் சொல்லுகிறது. நாலு வேதமும், ஆறு அங்கமுமான இந்தப் பத்தும் ஈச்வர ஸ்வரூபம் என்று அதில் சொல்லப்பட்டிருக்கிறது. இவை போக பாக்கி நான்கு: மீமாம்ஸை, ந்யாயம், புராணம், தர்மசாஸ்திரம்.

‘சதுர்தசம்’ என்றால் பதினான்கு. சதுர்-நான்கு; தசம்-பத்து, ஆகவே பதினான்கு தர்மப் பிரமாணங்களை “சதுர்தச வித்யா” என்பார்கள். இந்தச் சதுர்தச வித்தைகளை நளன் கற்றுக் கொண்டான் என்று [நள சரித்திரமாகிய] “நைஷத”த்தில் சொல்லி இருக்கிறது. அங்கே சிலேடையாக அந்த விஷயம் சொல்லப்படுகிறது. “நளன் சதுர்தச வித்தைகளுக்குச் சதுர்தசையைக் கொடுத்தான்” என்று வார்த்தை விளையாட்டுப் பண்ணியிருக்கிறார் கவி! சதுர்-தசமான இந்தப் பதினான்கு வித்தைகளுக்கும் நான்கு தசைகளை (சதுர்தசைகளைக்) கொடுத்தானாம்! அந்த நான்கு தசைகள்: படிப்பது, படித்ததை புரிந்து கொள்ளுவது, படித்ததன்படி நடப்பது, மற்றவர்களை நடக்கச் செய்வது என்பவை.

சதுர்தசத்வம் க்ருதவான் குத: ஸ்வயம்

ந வேத்மி வித்யாஸு சதுர்தசஸ்வபி||

(நைஷத காவ்யம், I)



இந்தப் பதினான்கு வித்தைகளிலே அறிவு அடங்கி இருக்கிறது.

இன்னும் நான்கு வித்தைகள் இருக்கின்றன. அவைகளையும் சேர்த்துக் கொண்டால் பதினெட்டாகும். அஷ்டாதசம் என்றால் பதினெட்டு. இந்த அஷ்டாதச வித்தைகளில் அடங்காதது ஒன்றுமேயில்லை. லோகத்திலுள்ள ஸகல வித்தைகளும் அவைகளுக்குள்ளே அடங்கிவிடும். இந்தப் பதினெட்டில் நேராக தர்மத்தைச் சொல்லுபவை முன்பு சொன்ன பதினான்குதான். மீதமுள்ள ஆயுர்வேதம், அர்த்த சாஸ்திரம், தநுர்வேதம், காந்தர்வ வேதம் ஆகிய நான்கும் நேராக தர்மத்தைச் சொல்வன அல்ல. ஆயினும் அவையும் அறிவு தருவதால் வித்யா ஸ்தானங்களாக மட்டும் உள்ளன. மேலே சொன்ன பதினாலோ தர்ம ஸ்தானம், வித்யா ஸ்தானம் இரண்டாகவும் இருப்பவை.

ஆத்ம லோகத்தில் இன்பத்தை அடைவதற்கு ஏற்பட்ட ஸாதனங்கள் இவை.

தர்ம ஸ்தானம், வித்யா ஸ்தானம் என்பதோடு இவற்றை எல்லாம் பொதுவில் “சாஸ்திரம்” என்கிறோம். சாஸ்திரம் என்பதற்கு அர்த்தம் ‘கட்டளையாக இடப்பட்டிருப்பது’ என்பது. ராஜாங்க சாஸனம் என்கிற போது, சாஸனம் என்றால் கட்டளை என்று அர்த்தம். தர்மபுத்திரருக்கு பீஷ்மர் தர்மக் கட்டளைகளையெல்லாம் எடுத்துச் சொல்கிற பர்வத்துக்கு மஹாபாரதத்தில், ‘அநுசாஸன பர்வா’ என்றே பெயர். ஐயனார் என்பவரை சாஸ்தா என்று சொல்வது, அவர் உத்தரவு போட்டுப் பரமேச்வரனின் பூதகணங்களை எல்லாம் அடக்கி வைத்துக் கொண்டிருப்பதாலேயே! நம்மை ஒரு கட்டுப்பாட்டில், நெறியில் கொண்டு வந்து அடக்கி வைக்கிற கட்டளைப் புஸ்தகங்களே சாஸ்திரங்கள் எனப்படுபவை.

இந்தப் பதினாலும் நமக்கு ஆதார நூல்கள் என்றாலும், இவற்றில் வேதம்தான் தலைமையானது. மற்ற மதஸ்தர்கள் பைபிளை, குரானை, ஜெண்டவஸ்தாவை, த்ரிபிடகத்தை, க்ரந்த ஸாஹேபைத் தங்கள் மூல நூல் என்கிற மாதிரி நம் மதத்துக்கு எது என்றால், முக்கியமாக அது வேதம்தான்.

நாலு வேதத்தை மையமாகக் கொண்டு மற்ற பத்து வித்யைகளும் ஏற்பட்டிருக்கின்றன. இந்தச் சதுர்தச வித்யைகளுமே பூர்ணமாக நம் மதத்துக்கு சாஸ்திரங்களாகின்றன.



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 03, 2023 9:30 pm

பழைய பெருமையும், இன்றைய அவநிலையும்



இந்தச் சதுர்தச வித்யைகளும் ஆதிகாலத்திலிருந்து வெள்ளைக்கார ஆட்சி ஏற்படுகிற வரையில் நம் தேசத்தில் போதிக்கப்பட்டு வந்திருக்கின்றன. இதிலே ஒரு ரஸமான சங்கதி சொல்கிறேன். ஃபாஹியன் என்றும் ஹுவான்(த்) ஸாங் என்றும் இரண்டு சீன யாத்ரீகர்கள், பல நூற்றாண்டுகளுக்கு முன் வெவ்வேறு சமயங்களில் இந்தியாவுக்கு வந்து சஞ்சாரம் செய்து, இங்கே தாங்கள் பார்த்ததை எல்லாம் எழுதி வைத்திருக்கிறார்கள் என்று உங்களுக்குச் சரித்திர புஸ்தகங்களிலிருந்து தெரிந்திருக்கும். இவர்கள் நாலந்தா, தக்ஷசீலம் ஆகிய இடங்களிலிருந்த பெரிய பெரிய வித்யாசாலைகளைப் பற்றி கொண்டாடி எழுதியிருக்கிறார்கள். புதைபொருள் ஆராய்ச்சியிலிருந்தும் இந்தப் பழைய யூனிவர்ஸிடிகளைப் பற்றித் தெரிகிறது. இவை முக்கியமாக மிகவும் பிரகாச நிலையில் இருந்தது பெளத்த மதம் செழிப்பாக இருந்த காலத்தில்தான். ஆனால் இவற்றில் என்ன பாடத்திட்டம் (syllabus) என்று பார்த்தால், சதுர்தச வித்யைதான்! புத்தமதப் புஸ்தகங்களையும் சொல்லிக் கொடுத்தார்கள். ஆனால் முதலில் வைதிக ஹிந்து மதத்தின் இந்த ஆதார புஸ்தகங்களை சொல்லிக் கொடுத்துவிட்டு அப்புறம்தான் புத்தமத நூல்களைப் போதித்திருக்கிறார்கள். அறிவு, அறம் இரண்டும் விருத்தியாவதற்கு இந்த வைதிகமான சாஸ்திரங்கள் எந்த மதஸ்தருக்கும் உதவுகின்றன என்பதாலேயே இப்படிச் செய்திருக்கிறார்கள். கல்விக்குக் கல்வி என்ற பேர் இருக்கவேண்டுமானால், இந்தப் பதினாலு வித்தைகளும் தெரிந்திருக்க வேண்டும் என்று பெளத்தர்களும் கருதியிருக்கிறார்கள்!

இங்கே நம் தக்ஷிணதேசத்தில் பார்த்தாலும், தமிழ் மன்னர்கள் ஏற்படுத்திய கடிகா ஸ்தானம், வித்யா ஸ்தானம் எனப்பட்ட கலாசாலைகளில் சதுர்தச வித்தைகள் போதிக்கப்பட்டிருக்கின்றன. கடலூருக்கும் பாண்டிச்சேரிக்கும் நடுவே ‘பாகூர்’ என்ற இடத்தில் இருந்த வித்யா சாலை பற்றி கி.பி. 868-ம் வருஷத்தியச் செப்பேடுகள் ஐந்திலே குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதிலே சதுர்தச வித்தைகள் சொல்லிக் கொடுக்கப்பட்டதாக இருக்கிறது. இதே போல், விழுப்புரத்துக்கும் திண்டிவனத்துக்கும் நடுவில் உள்ள ‘எண்ணாயிரம்’ என்ற ஊரிலும் 340 மாணாக்கர்கள் படித்த ஒரு வித்யசாலை இருந்ததாகவும், அங்கே இந்தப் பிராசீன சாஸ்திரங்களைச் சொல்லிக் கொடுத்ததாகவும் பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் ராஜேந்திர சோழனின் சாஸனம் ஒன்றிலிருந்து தெரிகிறது. இப்படிப் பல.

தமிழ் சரித்திரத்தை ரொம்பவும் ஆராய்ச்சி பண்ணி, அதைப் பற்றியே இப்போது கதைகள், நாவல்கள்கூட எழுத ஆரம்பித்திருந்தாலும், நான் விசாரித்துத் தெரிந்து கொண்ட மட்டில், தமிழ் மன்னர்கள் வேதசாஸ்திரங்களை ரொம்பவும் ஆதரித்துப் போஷித்தார்கள் என்பதை மட்டும் யாரும் எடுத்துச் சொல்வதாகத் தெரியவில்லை. Scientific outlook (பட்சபாதமில்லாமல், நடுநிலைமையாகச் சொல்வது) என்று பெரிதாகப் பேசுகிறார்கள்; ஆனாலும் வாஸ்தவத்தில் அப்படிக் காணோம்! வைதிகத்தை எதிர்த்து சண்டை போட்ட பெளத்தர்களே புத்தி வளர்ச்சிக்கும், தர்ம வளர்ச்சிக்கும் இந்தப் பதினாலு சாஸ்திரங்கள் அவசியம் என்று கற்றுக் கொடுத்திருக்கிறார்கள் என்றால் இப்போது நம் ஊரில் ஆஸ்திகர்கள் என்று சொல்லிக் கொள்கிறவர்கள் கூட (இப்போது இவர்கள் வேதசாஸ்திரங்களை அபிவிருத்தி பண்ணா விட்டால் போகட்டும்), எப்போதோ தமிழ் ராஜாக்கள் வேத சாஸ்திரங்களை ஆதரித்து விருத்தி பண்ணினதைக்கூடச் சொல்லக்கூடாது என்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள்!

ஆக, இப்போது நாம் இருக்கிற ஸ்திதி என்ன என்றால், “உங்கள் வித்யைகள் என்ன? என்று கேட்டால், சொல்லத்தெரியாதது மட்டுமில்லை. வித்தை என்றாலே என்ன என்று தெரியவில்லை. செப்படி வித்தை, மாந்திரீகம், magic தான் வித்தை என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்!

வித்யையும் கலையும் ஒன்றே. சந்திர கலை மாதிரி எப்போதும் வளர்ந்து கொண்டேயிருக்கிற அறிவுதான் கலா, கலை எனப்படுவது. இப்போது கலை என்றால் டான்ஸைத் தான் நினைத்துக் கொள்கிறோம்!

இப்படி நாம் இருக்கக்கூடாது; நம்மவரை கொஞ்சமாவது நம்மவராக்க வேண்டும் என்றே இந்தப் பதினாலு – அல்லது பதினெட்டு – வித்யைகளைப் பற்றி கொஞ்சம் சொல்லலாம் என்ற உத்தேசம். நிறையச் சொல்லவில்லை. பேராவது தெரியட்டும் என்று சிறிது சொல்கிறேன். அதனாலேயே சிரத்தை ஏற்படலாம்; மேலே தெரிந்து கொள்ள ஆர்வம் உண்டாகலாம்.

இந்தப் பதினாலிலே மீமாம்ஸை, வியாகரணம், சிக்ஷை, நியாயம் என்று சில விஷயங்களைச் சொல்லும்போது அலுப்பாக இருக்கலாம். இதனால் எல்லாம் என்ன பிரயோஜனம், வெறும் knowledge (அறிவு) ஆக இருக்கிறதே தவிர, ஆத்மார்த்தமாக இல்லையே என்று தோன்றலாம். இப்போது நாம் செய்கிறதெல்லாம் ஆத்மார்த்தமாகவா செய்கிறோம்? மணிக்கணக்காகப் பார்க்கிற நியூஸ் பேப்பரில் என்ன இருக்கிறது? அதிலே முழுசாக ஒரு பக்கம், இரண்டு பக்கம் “ஸ்போர்ட்ஸ்’ என்று போடுகிறான். ஏதோ தேசத்தில் எவனோ விளையாடினான் என்று போடுகிறான். அதனால் நமக்கு என்ன லாபம்? ஆத்மார்த்தமாகத்தான் லாபம் உண்டா? அன்றாட வாழ்க்கைக்காவது பிரயோஜனம் உண்டா? ஆனாலும் விழுந்து விழுந்து படிக்கிறீர்கள், இல்லையா! ஒரு நாள், நான் பாட்டுக்கு நல்ல மத்தியான வேளையில் ரோடோடு வந்து கொண்டிருந்தேன். ஒரு கடை வாசலில் ஏகப்பட்ட கூட்டம். ரேடியோவில் நியூஸ் சத்தம் போட்டுக் கொண்டிருந்தது. அதற்காகத் தான் இத்தனை கூட்டம் என்று தெரிந்தது. [நியூஸ்] என்னவோ ஏதோ என்று விசாரித்தேன். எங்கேயோ பதினாயிரம் மைலுக்கு அப்பால் ஒரு தேசாந்தரத்தில் நடக்கிற கிரிக்கெட் நியூஸ்தான் என்று பதில் சொன்னார்கள். இப்படியெல்லாம் இந்த லோக வாழ்க்கைக்குகூட பிரயோஜனம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று, உங்களுக்குப் பிடித்த அநேக விஷயங்களுக்காகப் பொழுதையும், பணத்தையும், அறிவையும் செலவழிக்கிறீர்கள் அல்லவா? சிரமப்படுகிறீர்கள் இல்லையா? இதையெல்லாம் விட நிச்சயம் பிரயோஜனப்படுகிற நம் வித்யைகளைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள் என்கிறேன். அவற்றிலே நேராக ஆத்மார்த்தமாகப் பலன் தருவதாக தோன்றாததும் கூட, அதிலே கொண்டுவிடுவதற்காக ஏற்பட்டதுதான். அறிவு வளர்ச்சிக்கு இதெல்லாம் அவசியம்; மனஸை பண்படுத்திக் கொள்ள இவை உதவுபவை. பகவான் கொடுத்திருக்கிற ஒரு செல்வம் நம் அறிவு என்பது. அதை நல்ல கல்வியாலும், ஆராய்ச்சியாலும் சாணை தீட்டித் தீக்ஷணமாக்கிக் கொண்டால், அதற்கப்புறம் அதில் பரமாத்ம ஸத்யம் பளிச்சென்று ஸ்புரிப்பதும் சுலபமாகும். இப்படியே வாக்கு என்பதும் பகவத் பிரஸாதமாக மநுஷ்ய இனத்துக்கு மட்டுமே கிடைத்திருப்பது. அதைச் சரியாகப் பிரயோகிப்பதாலேயே பல க்ஷேமங்களை அடையலாம் என்பதால்தான் வாக்கைப் பற்றிய, சப்தத்தைப் பற்றிய வியாகரணம், நிருக்தம், சிக்ஷை, முதலிய சாஸ்திரங்கள் தோன்றியிருக்கின்றன. இவை எல்லாவற்றையும் பற்றி ஒரு அடிப்படை அறிவு (basic knowledge) எல்லோருக்கும் இருக்க வேண்டும் என்று என் ஆசை. அதனால் நம் வித்யாஸ்தானங்கள் ஒவ்வொன்று பற்றியும் சிறிது சொல்கிறேன்.



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 03, 2023 9:31 pm

வேதம்


மதத்தின் மூலாதாரம் வேதமே


தர்மப் பிரமாணங்கள் பதிநான்கில் பிரதானமானது வேதம். ரிக்-யஜுஸ்-ஸாமம்-அதர்வம் என்ற நாலு வேதங்களுந்தான் பதிநான்கில் முதல் நாலாகும்.

பாக்கியுள்ள பத்தில் ஆறை வேதத்தின் அங்கம் என்றும், மிகுதியுள்ள நாலை உபாங்கம் என்றும் சொல்வார்கள்.

ஒரு மனிதன் என்றால், பல அங்கங்கள் இருக்கின்றன அல்லவா? இப்படியே வேதத்தை வேத புருஷன் (வேதமாதா என்றும் சொல்வதுண்டு) என்று உருவகப்படுத்தினால், அந்த புருஷனுக்கு ஆறு அங்கங்கள். இப்படி அங்கம் மாதிரி நேராக வேதத்தில் இருப்பவை என்று இல்லாவிடினும், வேத புருஷனுக்குத் துணை அங்கமாக இருக்கிற நாலும் உபாங்கங்கள். நேர் அங்கம் ஆறை ஷடங்கம் (ஷட்-ஆறு) என்பார்கள். இவை சிக்ஷை, வியாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம் (ஜோதிடம்) , கல்பம் என்பவை. உபாங்கம் நாலு. மீமாம்ஸை, நியாயம், புராணம், தர்ம சாஸ்திரம் என்பவை.

ஆகக்கூடி வேதம்தான் முக்கியம். வேதத்துக்கு அங்கம், வேதத்துக்கு உபாங்கம் என்பதால்தான் மற்றப் பத்தும் வித்தைகளாக, சாஸ்திரங்களாக அந்தஸ்துப் பெறுகின்றன. பதினெட்டு வித்தைகள் என்கிறபோது மிச்சமிருக்கிற ஆயுர்வேதம், அர்த்த சாஸ்திரம், தநுர்வேதம், காந்தர்வ வேதம் இவற்றுக்கும் உப-வேதங்கள் என்றே பெயர் இருப்பதிலிருந்து, வேத அடிப்படையில்தான் இவையும் உண்டானவை என்று தெரிகிறது.

அங்கம், உபாங்கம் இவற்றோடுகூட வேதத்தைக் கற்க வேண்டும். அதற்கு ‘ஸ அங்க உபாங்க அத்யயனம்’ என்று பெயர். இதுவே “ஸாங்கோபாங்கம்” என்பது. இப்போது எந்த விஷயமாயினும், அரசியல் கட்சி விஷயமானாலுங் கூட, ஒருத்தர் அந்த விஷயத்தை அடியிலிருந்து நுனி வரை எல்லாப் பாயின்டுகளையும் எடுத்துக் காட்டிப் பேசினால் ‘ஸாங்கோபாங்கமாகப் பேசினார்’ என்கிறோம் அல்லவா? இந்த ஸாங்கோபாங்கம் என்ற சொல் பழைய சதுர்தச வித்யையைக் குறிப்பதுதான். அந்த வித்யாப்யாஸத்தை நாம் இப்போது அடியோடு மறந்துவிட்டாலும், வழிவழியாக அந்த பயிற்சிமுறை நம் நாகரிகத்தோடு கரைந்து விட்டதால் இன்றைக்கும் பூர்த்தியாக ஒரு விஷயத்தை விளக்குவதனால் “ஸாங்கோபாங்கமாக” என்று சொல்கிறோம். இதிலிருந்தே வேதம், அதன் ஆறு அங்கங்கள், நாலு உபாங்கங்கள் ஆகியவற்றின் அப்பியாஸமானது ஸாதாரண ஜனங்களுக்கும் தெரிகிற அளவுக்கு எவ்வளவு சிறப்பாக நம் தமிழ் நாட்டில் இருந்திருக்கிறது என்று புரிந்துகொள்ளலாம். அப்படியெல்லாம் இருந்தும், இன்று அவற்றின் பேர் கூடத் தெரியாத நிலைக்கு வந்துவிட்டதுதான் இன்னம் ஜாஸ்தி துக்கத்தைத் தருகிறது. இது இருக்கட்டும்.

வேதந்தான் பிரதானம்; மையமானது. அதை வைத்துத்தான் மற்றவை. நேரான தர்மப் பிரமாணம் நம் மதத்துக்கு எது என்றால் வேதம்தான். அதுதான் நம் பைபிள், குரான், கிரந்தஸாஹேப். இப்போது நான் இப்படி அந்த மற்ற மத நூல்களின் பெயர்களை வேதத்துக்குச் சூட்டினாலும் வேதம்தான் அவை யாவற்றிலும் முந்தையது. அவை எல்லாமுங்கூட வேதத்தின் ஒரு சில தத்வங்களிலிருந்து உண்டானவை தான் 1. எனவே வேதம் என்றால்தான் பிரமாணநூல் என்றே அர்த்தமாகி விட்டது. நான் இப்போது மாற்றிச் சொன்னாலும் பைபிளையும், குரானையும் – மற்ற மதங்களின் ஆதார நூல்களையும்தான் – கிறிஸ்துவ வேதம், முஹம்மதியர் வேதம், ஸீக்கியர் வேதம், பார்ஸியர் வேதம் என்று சொல்கிற வழக்கம் இருக்கிறது. கிறிஸ்துவர்கள் நம் ஊரில் தங்கள் பைபிளை “ஸத்ய வேதம்” என்றே சொல்கிறார்கள்.

வேதத்தைப் பற்றிச் சொல்வதென்றால், எங்கே ஆரம்பிப்பது, எங்கே முடிப்பது என்று மலைப்பாக இருக்கிறது. அத்தனை விஸ்தாரமான மகிமை வாய்ந்தது அது.

ப்ரமாணம் வேதாச்ச என்று ஆபஸ்தம்ப தர்ம ஸூத்திரத்தில் சொல்லியிருக்கிற மாதிரி, எல்லாத் தர்மங்களுக்கும் மூலமான பிரமாணம் நாலு வேதங்களும்தான்.

மநு தர்ம நூல், மநு தர்ம நூல் என்று ஒன்றைத் தமிழ் தேசத்து மஹான்கள் ஆதிகாலத்திலிருந்து போற்றி வந்திருக்கிறார்கள். பாரத தேசம் முழுவதிலுமே நீதிகளை எடுத்துச் சொல்வதில் மநுவின் தர்ம சாஸ்திரம்தான் முதல் ஸ்தானம் பெற்றிருக்கிறது. தமிழ் நாட்டில் மநுநீதிச் சோழன் என்றே ஒருவன் மஹா நீதிமானாக இருந்து கொண்டு, தன் பிள்ளையின் தேர்ச் சக்கரத்தில் மாட்டிக் கொண்டு உயிரை விட்ட ஒரு கன்றின் தாய்ப்பசுவுக்கு நியாயம் வழங்குவதற்காக, அந்த பிள்ளையையே தேர்க்காலில் பலி கொடுத்தான் என்று கதை இருக்கிறது. தர்ம விஷயங்களுக்கு மநுநீதி சாஸ்திரந்தான் பிரமாணம் என்றே வைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த மநு தர்மசாஸ்திரத்தில் என்ன சொல்லியிருக்கிறது? இந்த நூல்தான் தர்மத்துக்கெல்லாம் மூலாதாரம் என்றா சொல்லியிருக்கிறது? இல்லை. “வேதோ (அ)கிலோ தர்ம மூலம்” -ஸகல தர்மங்களுக்கும் மூலம் வேதம்தான் – என்றே மநு சொல்லியிருக்கிறார் 2. எல்லாக் காலத்துக்கும் பொதுவான சாச்வத தர்மங்களைச் சொல்வது வேதம்தான் என்று அவர் சொல்லிவிட்டார்.

வேதம் எப்படி சொல்கிறதோ அப்படித்தான் செய்யவேண்டும். அது சொல்வதை மீறக்கூடாது. ஏனென்றால், அதுதான் தர்மமூலம். யாராவது ஒன்றைச் சொல்லி அதை நாம் துளிக்கூட ஆக்ஷேபிக்காமல் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்றால், “அது என்ன வேதவாக்கோ?” என்று கேட்கிற வழக்கம் இன்றும் நம்மிடம் இருக்கிறது. அதாவது, வேத வாக்கு என்றால் எதிர்க் கேள்வி கேட்காமல் அதன்படி செய்துதான் ஆகவேண்டும் என்று அத்தனை பொது ஜனங்களும் நம்பி வந்ததைத்தான் “வேத வாக்கோ?” என்று கேட்கிற வழக்கு நிரூபிக்கிறது. இப்படி எத்தனையோ ஆயிரம் வருஷங்களாக அதுதான் நமக்கு பெரிய சட்டமாக இருந்திருக்கிறது. அதனாலேயே, வைரம் பாய்ந்த மரம் என்கிறோமே, அது மாதிரி, வேதம் வைரம் பாய்ந்தததாக இருக்கிறது. அநாதியாக வந்து கொண்டிருக்கும்படியான சட்டப் புஸ்தகம் அது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 03, 2023 9:32 pm

அநாதி – அபௌருஷேயம்



அநாதியாக என்றால் என்ன அர்த்தம்? வேதத்துக்குக் காலமே சொல்ல முடியாது; அதற்கு முந்தையதாக, அதற்கு ஆதியாக எதுவும் இல்லை என்பதுதான் ‘அநாதி’ என்ற வார்த்தைக்கு அர்த்தம். அப்படியானால் அது என்றுமே இருந்திருக்கிறது என்று அல்லவா அர்த்தமாகும்? இப்படிச் சொன்னால் எப்படிப் பொருந்தும்? ஒரு புஸ்தகம் என்றால் அதை ஒருவரோ பல பேரோதான் எழுதியிருப்பார்கள். “ஓல்ட் டெஸ்ட்மென்டில்” பல ப்ராஃபெட்கள் சொன்னதைச் சேர்த்துப் போட்டிருக்கிறது. “நியூ டெஸ்ட்மென்டி”ல் கிறிஸ்துவின் உபதேசங்களைச் சொல்லியிருக்கிறது. முகமது நபி சொன்னதைத் குரான் தெரிவிக்கிறது. இவர்கள் யாவரும் ஏதோ ஒரு காலத்தில் இருந்தவர்கள்தான். அவர்களுக்கு முந்தி அந்த உபதேசம் இல்லை. இப்படியே வேதத்தையும் யாரோ ஒருத்தரோ, பல பேரோ எழுதியிருக்கவேண்டும். அவர்கள் ஒவ்வொரு காலத்தில் இருந்திருப்பார்கள். அது ரொம்ப ரொம்ப முந்தைய காலம், பதினாயிரம் வருஷத்துக்கு முந்தயை காலம், அல்லது லக்ஷம், பத்து லக்ஷம் வருஷத்துக்கு முந்தயை காலம் என்று வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனாலும் ‘அநாதி’ என்று சொல்லிவிட்டால் தப்புத்தானே? அந்தப் பத்து லக்ஷம் வருஷத்துக்கு முந்தி வேதம் இல்லாமல்தானே இருந்திருக்க வேண்டும்?

இந்த மாதிரி கேள்விகள் எழும்புகின்றன.

வேதங்களை யாரோ மநுஷ்யர்கள் எழுதினார்கள் என்றால் இப்படிக் கேட்பது நியாயம்தான். அதை அநாதி – ஆதியற்றது – என்பது தப்புத்தான். ஆனால் இது சரிதானா?

சரியாகத்தானே இருக்கவேண்டும்? ஒரு புஸ்தகம் என்றால் அதை யாரோ மநுஷ்யர்கள்தான் எழுதியிருக்க வேண்டும். அவர்கள் ஏதோ ஒரு காலத்தில்தான் தோன்றியிருக்க வேண்டும். அதனால் அநாதி என்பது சரியில்லைதான் – இப்படித் தோன்றுகிறது.

வேதத்தை ரிஷிகள் என்ற மநுஷ்யர்கள் பண்ணினார்கள் என்றுதான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். நாம் படித்த சரித்திர புஸ்தகத்தில் அப்படித்தான் போட்டிருக்கிறது. அதில் போட்டிருப்பது மட்டுமில்லை.

வேதம் என்பது பல ஸூக்தங்களைக் கொண்டது. ஞானஸம்பந்தரின் தேவாரம் என்றால் அதில் பல பதிகங்கள் இருக்கிற மாதிரி வேதத்தில் பல ஸூக்தங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு பதிகத்திலும் பத்துச் செய்யுள்கள் இருக்கிற மாதிரி, ஒவ்வொரு ஸூக்தத்திலும் பல மந்திரங்கள் இருக்கின்றன. ஸு+உக்தம் என்பதே ‘ஸுக்தம்’. ‘ஸு’ என்றால் ‘நல்ல’ என்று அர்த்தம். ‘ஸுகுணம்’ , ‘ஸுலோசனா’ என்றெல்லாம் சொல்லுகிறோம் அல்லவா? ‘உக்தம்’ என்றால் ‘சொல்லப்படுவது’, அதாவது வாக்கு. ஸுக்தம் என்றால் நல்லவாக்கு என்று அர்த்தம்.

சாஸ்திரோக்தமாக வேதத்தைச் சொல்கிறபோது, அதிலிருக்கிற ஒவ்வொரு ஸுக்தத்துக்கும் இன்னார் ரிஷி, அது இன்ன மீட்டரில் (சந்தஸ்) இருக்கிறது, அது இன்ன தேவதையைக் குறித்தது என்று சொல்லிவிட்டுத்தான் ஆரம்பிக்கிறோம். இப்படி அநேகம் ரிஷிகளின் பெயர்களிலேயே வேத மந்திரங்கள் இருப்பதால், இந்த ரிஷிகள்தான் இவற்றைப் பண்ணியிருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். ஒவ்வொரு ரிஷியும் இன்னார் பிள்ளை, இன்ன கோத்திரம் என்று அவர்களுடைய மூதாதைகளைக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறது. “அகஸ்த்யோ மைத்ராவருணி:” என்றால், மித்ரா வருணர்களின் பிள்ளையான அகஸ்தியர் என்று அர்த்தம். “மதுச்சந்தா வைச்வாமித்ர:” என்றால், விச்வாமித்ர கோத்திரத்தில் வந்த மதுச்சந்த ரிஷி என்று அர்த்தம். இப்படி ஒவ்வொரு ரிஷியின் பேரில் மந்திரங்கள் இருக்கின்றன என்றால், அகஸ்தியர் பேரில் இருப்பது அவரது தகப்பனாரான மித்ரா வருணர்கள் காலத்தில் இல்லை, மதுச்சந்தரின் பேரில் இருப்பது விச்வாமித்ரர் காலத்தில் இல்லை என்று தானே அர்த்தமாகும்? அப்படியானால் அநாதி என்பது சரியில்லைதானே?

இப்படியெல்லாம் கேட்கிறபோது, ஒவ்வொரு ரிஷியின் பேரில் வேத மந்திரங்கள் இருப்பதால் அந்த ரிஷியே அதைச் செய்தார், இயற்றினால், compose பண்ணினார் என்று தப்பாக நினைத்து விடுகிறோம். உண்மையில் அந்த ரிஷிகள் மந்திரங்களைத் தாங்களே இயற்றவில்லை.

வேதத்துக்கு “அபௌருஷேயம்” என்றுதான் லக்ஷணம் சொல்லியிருக்கிறது. ஒரு புருஷன் அல்லது மநுஷ்யன் செய்திருந்தால் அது பௌருஷேயம். எந்த மனிதருமே செய்யாததனால் வேதம் அபௌருஷேயம். ரிஷிகள் இயற்றியிருந்தாலும் அது பௌருஷேயமாகிவிடும். ஆனால் அபௌருஷேயம் என்பதால் ரிஷிகளும் வேத மந்திரங்களைப் பண்ணவில்லை என்று ஆகிவிட்டது. மந்திரங்களை ரிஷிகள் இயற்றியிருந்தால் அவர்களுக்கு “மந்த்ரகர்த்தா” என்றே பெயர் இருக்கும். ஆனால் வாஸ்தவத்தில் அவர்களுக்கு “மந்த்ரத்ரஷ்டா” என்றுதான் பெயர் இருக்கிறது. இதற்கு “மந்திரங்களைக் கண்டவர்கள்” என்றே அர்த்தம்; செய்தவர்கள் என்று அர்த்தமில்லை.

கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார் என்றால் என்ன அர்த்தம்? அமெரிக்காவை அவரா உண்டு பண்ணினார்? இல்லை. ஏற்கெனவே இருந்த அமெரிக்காவை அவர் உலகுக்குத் தெரியும்படியாகப் பண்ணினார். இப்படியே தான் நியூடன், ஐன்ஸ்டீன் முதலிய எந்த விஞ்ஞானியும் புதுசாகச் சொல்கிற விதிகளை அவர்கள் செய்யவில்லை. நியூடன் சொல்லித்தானா ஒரு வஸ்துவை எறிந்தால் அது பூமியில் விழுகிறது? இல்லை. ஏற்கெனவே இருக்கிற விதிகளை இவர்கள்தான் புரிந்துகொண்டு லோகத்துக்குத் தெரிவித்தார்கள். அதே மாதிரி ஏற்கெனவே இருந்த மந்திரங்களைத்தான் அத்தனை ரிஷிகளும் கண்டுபிடித்து லோகத்துக்குக் கொடுத்தார்கள். அந்த மந்திரங்கள் இவர்களுடைய அப்பா, தாத்தா காலத்துக்கும், அதற்கும் முந்தியுங்கூட இருக்கத்தான் செய்தன. ஆனால் அப்போது அவை உலகுக்குத் தெரியவில்லை. இவர்கள்தான் அவற்றைக் கண்டுபிடித்தார்கள். அதனால் இவர்கள் பேரிலேயே அவற்றைச் சொல்வது வழக்கமாகிவிட்டது. ஒருத்தன் புஸ்தகம் எழுதுகிறான். இன்னொருவன் பப்ளிஷ் பண்ணுகிறான்; ஒருத்தன் ஸினிமா எடுக்கிறான்; இன்னொருத்தன் ரிலீஸ் பண்ணுகிறான். இப்படி மந்திரங்களை லோகத்துக்கு வெளியிட்டவர்கள் மட்டுமே தான் ரிஷிகள். ஏற்கெனவே அவை இருந்தாலும், நமக்குப் ப்ரயோஜனமாகிறபடி வெளிப்படுத்தி பரம உபகாரம் பண்ணினது ரிஷிகள்தான். அதனால் அவர்கள் பெயரைச் சொல்லி நமஸ்காரம் பண்ணுவது நியாயம்தான்.

ரிஷிகள் மந்திரங்களைக் கண்டார்கள் என்றால், அதற்கு முந்தி அவை எங்கே இருந்தன? அநாதி என்றால் சிருஷ்டியின் போதே அவையும் தோன்றினவா? மநுஷ்யர்கள் தோன்று முன்பே தோன்றி விட்டனவா? எப்படித் தோன்றின? இவர்கள் கண்டுபிடிக்கிற வரையில் எங்கே இருந்தன?

வேத மந்திரங்கள் சிருஷ்டியின் ஆரம்பத்தில் தோன்றின என்றால், பரமாத்மா லோகத்தில் சிருஷ்டி பண்ணுகிறபோதே இதையும் தாமே பண்ணிவிட்டார் என்று அர்த்தம் ஆகும். பரமாத்மாவே வேதங்களை எழுதி எங்கேயாவது போட்டுவிட்டாரா? அப்புறம் ஒவ்வொரு ரிஷிகள் அதில் ஒவ்வொரு பாகத்தைக் கண்டெடுத்தார்களா? ஆனால் இப்படி சிருஷ்டி ஆரம்பத்திலேயே வேதம் இருந்ததாகச் சொன்னால்கூட அது அநாதியாகிவி்டாது. ஏனென்றால் இப்போதிருக்கிற பிரம்ம சிருஷ்டி எப்போது உண்டாயிற்று என்பதற்கே கணக்கு இருக்கிறது. க்ருதயுகம், த்ரேதாயுகம், த்வாபரயுகம், கலியுகம் என்று ஒவ்வொன்றுக்கும் இத்தனை வருஷங்கள் என்று சொல்லியிருக்கிறது. இம்மாதிரி ஆயிரம் சதுர்யுகம் கொண்டது பிரம்மாவுக்கு ஒரு பகல்; ஆயிரம் சதுர்யுகம் ஒரு இரவு. இந்தக் கணக்குப்படி அவருக்கு இப்போது ஐம்பது வயசுக்கு மேல் ஆகிவிட்டது என்று திருத்தமாக இன்றைய வயசை சொல்லியிருக்கிறது. எந்தக் கர்மாவுக்கும் சங்கல்பம் செய்து கொள்ளும்போது, ஒரு பத்திரம் எழுதினால் அதில் தேதி போடுகிற மாதிரி, அன்றைய தினத்தைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். இப்படிச் சொல்லும்போது பிரம்மாவின் இத்தனாவது வயசில், இத்தனாம் மாசத்தில், இன்ன பக்ஷத்தில், இன்ன நாளில், இன்ன யாமத்தில் என்று சொல்கிறோம். இதிலிருந்து என்ன ஏற்படுகிறதென்றால் சிருஷ்டி கர்த்தாவான பிரம்மா எப்போது உண்டானார் என்பதற்கே கால வரையறை இருக்கிறது. இத்தனை கோடி கோடி வருஷங்களுக்கு முந்தி பிரம்மா உண்டானார் என்றால் அவரே அநாதியில்லை. அதனால் அவரால் உண்டான லோக சிருஷ்டியும் அநாதியில்லை. சிருஷ்டியே அநாதியில்லை என்று சொல்லிவிட்டு வேதம் அநாதி என்றால் என்ன அர்த்தம்?

சிருஷ்டி தோன்றுவதற்கு முன்பும் பரமாத்மா இருந்தார். பிரம்மா இல்லை. ஆனால் பிரம்மம் என்று சொல்லப்படுகிற பரம்பொருள் அல்லது பரமாத்மா எப்போதுமே இருந்திருக்கிறது. அதுதான் அநாதி. பிரபஞ்சம், ஜீவ ஜந்துக்கள் எல்லாம் அதிலிருந்துதான் உண்டாயின. பரமாத்மா தாமே நேரே இவற்றைப் பண்ணாமல் பிரம்மா மூலமாகப் பண்ணினார். விஷ்ணு மூலமாக பரிபாலித்தார். ருத்ரன் மூலம் ஸம்ஹாரம் பண்ணினார். அப்புறம் அந்த பிரம்ம, விஷ்ணு, ருத்ரர் எல்லாரையுங்கூட ஸம்ஹாரம் பண்ணிவிடுகிறார். இதனால் தான் பிரம்மாவுக்கும் ஆயுஸ் சொல்லியிருக்கிறது. இப்போதிருக்கிற பிரம்மாவுக்கு நூறு வயஸானபின் அவர் பரமாத்மாவோடு சேர்ந்துவிடுவார். அவர் ஆயுஸ் முடிந்துவிடும். மறுபடி இன்னொரு பிரம்மா வருவார். அவர் மறுபடியும் சிருஷ்டியை ஆரம்பிக்க வேண்டும். இம்மாதிரி இன்னொரு பிரம்மாவை உண்டு பண்ணுவதற்கு முந்தியே பரமாத்மா வேதங்களை உண்டு பண்ணி விடுவாரா?

சிருஷ்டிக்கு முந்தியே வேதம் இருந்தது என்று சாஸ்திரங்களிலிருந்து தெரிகிறது. ஏனென்றால், பிரம்மாவே வேத மந்திரங்களைக் கொண்டுதான் சிருஷ்டியே செய்தார் என்று சொல்லியிருக்கிறது. வெறும் சப்தங்களேயான மந்திரத்தைக் கொண்டு சிருஷ்டி பண்ணினார் என்றால் என்ன என்று பிறகு சொல்கிறேன். இங்கே சொல்ல வந்தது, ரிஷிகளுக்கு முந்தி, லோகமே ஏற்படுவதற்கு முந்தி, வேதங்கள் இருந்தன என்பதுதான். பிரம்மாவே வேதங்களின் உதவி கொண்டுதான் சிருஷ்டி பண்ண முடிந்தது என்று பாகவதாதி புராணங்களில் ஸர்க (சிருஷ்டி) வர்ணனை பண்ணும் இடங்களில் சொல்லியிருக்கிறது.

இதனால்தான் வேதத்தை அநாதி என்கிறார்களா? வேதம், ஈச்வரன் என்று இரண்டுமே அநாதி என்றால் இப்படி அர்த்தம் பண்ணிக்கொள்ளலாமா? யோசித்துப் பார்த்தால் இதுவும் தப்புதான்! சிருஷ்டி தோன்றா விட்டாலும், ஈச்வரன் வேதத்தை உண்டு பண்ணினார் என்று சொல்லி விட்டாலே அது உண்டாகாத ஒரு காலமும் உண்டு என்று அர்த்தமாகும். லோகமும் ஜீவஜந்துக்களும் சிருஷ்டியாகா விட்டாலும், பரமாத்மாவிடம் காலம் என்ற தத்துவம் உண்டான பிற்பாடுதான் வேதம் உண்டாயிற்று என்று அர்த்தமாகிவிடும். அதாவது அது அநாதி என்பது பொய்யாகிவிடும்.

வேதமும் அநாதி, ஈச்வரனும் அநாதி என்றால் இதை அவரும் பண்ணயிருக்கக் கூடாது. ஈச்வரன் வேதத்தை உண்டு பண்ணினார் என்றால் அது ஆதியுடையதாகிவிடும். ஈச்வரனிலிருந்து தோன்றியதுதான் ஸகலமும். அவருக்குப் புறம்பாக எதுவுமே கிடையாது. ஆகையால் வேதம், ஈச்வரன் என்று இரண்டு அநாதிகள் இருந்தன என்றாலும் தப்பு. இப்படி ஒரே குழப்பமாயிருக்கிறது.

ஈச்வரனாலும் பண்ணப்படாமல், ஈச்வரனுக்கு தனியாகவும் இல்லாமல், வேதம் அநாதியாக இருக்க வேண்டும் என்றால் அது எப்படி?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 03, 2023 9:33 pm

இந்தப் பெரிய ஸந்தேஹத்துக்கு வேதமே பதில் சொல்லியிருக்கிறது. வேதத்தில் ஒரு பகுதியான ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் (II.4.10) “ரிக் -யஜுஸ்-ஸாம-அதர்வ வேதங்கள் ஈச்வரனின் சுவாஸமாகும்” என்று சொல்லியிருக்கிறது. “நிச்வஸிதம்” – மூச்சுக்காற்று – என்ற வார்த்தையை இந்த இடத்தில் போட்டிருக்கிறது.

நமக்கு ச்வாஸமில்லாவிடில் நாம் உயிரோடு இருக்க முடியுமா? முடியாதல்லவா? அப்படித்தான் பரமாத்மாவுக்கு உயிராக இருக்கிற ச்வாஸமே வேதம். அநாதியான அவர் என்றென்றும் உயிரோடு இருந்திருக்கிறார் என்பதால், வேதமே அவருடனேயே, அவரது ச்வாஸமாக, அநாதியாக இருந்திருக்கிறது என்று ஆகிவிடுகிறது!

இதிலே கவனிக்க வேண்டிய விஷயம், ஈச்வரனைக்கூட வேதத்தை உண்டாக்கினவர் என்று சொல்கிற வழக்கமில்லை. நம்முடைய ச்வாஸத்தை நாம் உண்டாக்கினதாகச் சொன்னால் தப்புத்தானே? நாம் எப்போதிலிருந்து இருக்கிறோமோ அப்போதிலிருந்து ச்வாஸமும் இருக்கத்தானே செய்கிறது? இப்படியேதான் ஈச்வரனும் வேதமும். அவரும் அதைப் பண்ணினார் என்று சொல்ல முடியாது.

வேதங்களுக்கு பாஷ்யம் [விரிவுரை] எழுதிய வித்யாரண்ய ஸ்வாமிகள், தம் குருவையே ஈச்வரனாக பாவித்து ஸ்தோத்திரம் பண்ணும்போது,

யஸ்ய நி:ச்வஸிதம் வேதா:

என்கிறார்1. ‘எவருக்கு வேதங்கள்தான் சுவாஸமோ’ என்று அர்த்தம். உபநிஷத்தில் போட்ட அதே ‘நிச்வஸிதம்’ இங்கே வந்திருக்கிறது. வேதத்தைப் பண்ணினார் என்று இங்கேயும் இல்லை.

பகவானும் கீதையில் சொல்கிறபோது2, “நானே எல்லா வேதங்களாலும் அறியப்படுகிறவன் (வேதைச்ச ஸர்வை: அஹம் ஏவ வேத்யபுன்னகை ” என்று சொல்லிவிட்டு தன்னை “வேத க்ருத்” (அதாவது வேதத்தை பண்ணினவன்) என்று சொல்லிக் கொள்ளாமல், “வேதாந்த க்ருத்” என்றே, அதாவது வேதங்களுக்கு முடிவான தத்வத்தை உண்டு பண்ணினவன் என்றே சொல்லிக் கொள்கிறார். தன்னை வேதம் அறிந்தவனாக (வேதவித்) சொல்லிக் கொள்கிறாரே அன்றி “வேத க்ருத்” என்று சொல்லவில்லை. வேதாந்தம் என்கிற தத்வ ரூபத்தில் ஜீவர்களுக்குப் பிரயோஜனமாகப் பிரகாசிப்பதற்கு முந்தியே, ஜீவ சிருஷ்டிக்கு முன்னாலுங்கூட சப்த ரூபத்தில் இந்த வேதங்கள் ஈச்வரனோடு ஈச்வரனாக அவனது மூச்சாக இருந்திருக்கின்றன.

கீதையில் சொன்ன மாதிரியே பாகவதத்திலும் வேதங்களை பகவான் பண்ணினதாகச் சொல்லவில்லை. அவனுடைய ஹ்ருதயத்தில் வேதங்கள் ஸ்புரித்ததாகத் தான் சொல்லியிருக்கிறது. ஏற்கெனவே உள்ள ஒரு ஸத்தியம் நமக்குள் தானாகப் பளீரென்று வெளியிடப்படுவதுதான் ஸ்புரணம் என்பது. இல்லாத ஒன்றைப் புதிதாகப் பண்ணினால் அதை “ஸ்புரித்தது” என்று சொல்ல முடியாது. ‘ஸகல மந்திரங்களையும் கண்டுகொண்ட ஆதிரிஷி பிரம்மா. அவருக்குப் பரமாத்மாதான் இவற்றைக் காண்பித்துக் கொடுத்தார். எப்படி? வாயினால் சொல்லி உபதேசம் பண்ணினாரா? இல்லை, ஹ்ருதயத்தினால் வேதங்களைக் கொடுத்தார்’ – “தேனே ப்ரஹ்ம ஹ்ருதாய ஆதி கவயே” என்று பாகவதத்தின் முதல் ச்லோகம் சொல்கிறது. அதனால் பரமாத்மாவின் ஹருதயத்தில் எப்போதுமே வேதம் இருந்து கொண்டிருக்கிறது, அதை அவர் இயற்றவில்லை என்று தெரிகிறது. அவர் சங்கல்பம் பண்ணின மாத்திரத்தில் பிரம்மாவுக்கு அத்தனை வேதங்களும் தெரிந்துவிட்டன. அந்த சப்தங்களை வைத்துக் கொண்டு அவர் ஸ்ருஷ்டி பண்ண ஆரம்பித்து விட்டார்.

தேவாரம் ஈச்வரனை “வேதியா, வேதகீதா” என்கிறது. “சந்தோக ஸாமம் ஓதும் வாயானை”, “பௌழியின் காண்” என்று வேதசாகைகளின் (வேதக் கிளைகளின்) பெயர்களைச் சொல்லி, அவற்றை பகவான் பாடிக் கொண்டிருக்கிறான் என்கிறது. பாடுகிறான் என்றால் என்ன? மூச்சு விடுவதே பெரிய பாட்டுத்தான். நாம் விடுகிற மூச்சை “ஹம்ஸ கீதம்” என்று சொல்லியிருக்கிறது. இப்படி ஈச்வரனுடைய ச்வாஸ ஸங்கீதமாக இருப்பதுதான் வேதம். ஈச்வரன் பூணூல் போட்டுக் கொண்டு, விபூதி இட்டுக் கொண்டு, ஓயாமல் ஸ்நானம் பண்ணிக் கொண்டு, வேதத்தைச் சொல்லிக் கொண்டே இருக்கிறார். என்று தேவாரம் சொல்வதைப் பார்த்தால், பரமசிவன்தான் பெரிய கனபாடிகள் என்று தோன்றுகிறது! “பவளம் போல் மேனியில் பால் வெண்ணீரும்”, “வெண்ணூல் உண்டே, ஓதுவதும் வேதமே” என்றெல்லாம் அப்பர் ஸ்வாமிகள் வர்ணிக்கிறார்! இங்கேயும், “வேதம் ஓதுகிறார்”, “வேதம் இசைக்கிறார்”, என்றுதான் இருக்கிறதே தவிர, வேதத்தை இயற்றுகிறான் என்று ஓரிடத்தில் கூட இல்லை.

வேதங்களைப் பற்றியும், வைதிகமான யாக, யக்ஞாதிகளைப் பற்றியும் தேவாரத்தைப் போலவே வைஷ்ணவர்களின் திவ்யப் பிரபந்தங்களிலும் நிறையச் சொல்லியிருந்தாலும், எதனாலோ பெருமாள் வேதம் ஓதுவதாக எங்கும் சொல்லியிருக்கிறதாக எனக்கு நினைவில்லை.

புகழேந்தி புலவர், கஜேந்திர மோக்ஷத்தின் போது யானை ‘ஆதிமூலமே’ என்று அழைத்தவுடன் ‘என்ன?’ என்று கேட்டு வந்த மஹாவிஷ்ணுவை,

வேதத்தின் முன் நின்றான்; வேழம் முதலே என அழைப்ப என் என்றான் எங்கட்கிறை

என்று சொல்கிறார். இங்கே “வேதத்தின் முன்” என்றதால், “காலத்திலே வேதத்துக்கு முந்தி”, என்று அவர் சொல்வதாக எனக்குத் தோன்றவில்லை. ஒருவர் வீட்டு வாசலில் நின்றால் “வீட்டின் முன் நின்றான்” என்றுதானே சொல்வோம்? அப்படிச் சகல வேதங்களுக்கும் ஆரம்பத்தில் அவன் இருக்கிறான் என்பதையே “வேதத்தின் முன் நின்றான்” என்று சொல்லியிருப்பார். இன்னொன்று தோன்றுகிறது. பெருமாள் புறப்பாடு எப்படி நடக்கிறது? முதலில் திருவாய்மொழி கோஷ்டிக்காரர்கள் வருகிறார்கள். அப்புறம் பெருமாள் (உத்ஸவர்) வருகிறார். அவருக்குப் பின்னால் வேத பாராயணக்காரர்கள் வருகிறார்கள். இங்கேயும் ஸ்வாமி வேதத்தின் முன்னே நிற்கிறார்.

வைஷ்ணவமான ஆகமங்களின்படியும், புராணங்களின் படியும் மஹாவிஷ்ணுவையே விசேஷமாக யக்ஞ ஸ்வரூபி, வேதஸ்வரூபி என்று சொல்லியிருக்கிறது; கருடனை வேத ஸ்வரூபம் என்றும், அதன்மேல் பகவான் இருப்பதாகவும் சொல்கிறதும் உண்டு. ஆனால் வேதத்தைப் படைத்ததாகச் சொன்னதாகத் தெரியவில்லை.

வேதத்திலேயே இருக்கப்பட்ட “புருஷ ஸூக்தம்” ஒன்றில் தான் வேதங்கள் பிறந்தன (அஜாயத) என்ற வார்த்தையே வந்திருக்கிறது. ஆனால் “புருஷ ஸூக்த”மானது ரொம்பவும் symbolical-ஆகவும், allegorical – ஆகவும் [உருவக அணி கொண்டதாகவும், ஆழ்ந்த உள்ளுறைபொருளை சம்பவம் போல் சொல்லுவதாகவும்] இருப்பதால், அதிலே, “வேதம் பிறந்தது” என்று சொல்லுவதை அப்படியே நேர் அர்த்தம் பண்ணிக் கொள்ள முடியாது. பரம புருஷனையே பசுவாக பலி கொடுத்த ஒரு யக்ஞத்தில்தான் ஸ்ருஷ்டியெல்லாம் உண்டாயிற்று என்று சொல்லி, அப்போதுதான் வேதங்களும் உண்டானதாக அதில் சொல்லியிருக்கிறது. பரமபுருஷனை யக்ஞ பசுவாகப் பலி கொடுப்பது என்றால் என்ன? அதை நேர் அர்த்தம் பண்ணிக் கொண்டால் சரியாகாது அல்லவா? இந்த யாகத்திலே வஸந்த காலத்தை நெய்க்கு பதில் ஆஹூதியாக விட்டார்கள், கோடைக்காலம் ஸமித்துக் கட்டாயிற்று, சரத்காலம் ஹவிஸ் ஆயிற்று என்றெல்லாம் சொல்வதைப் புரிந்து கொள்ள முடிகிறதா? இதெல்லாம் மந்திர அர்த்தத்தைத் தியானம் பண்ணி, அதிலேயே ஊறினவர்களுக்குத்தான் அநுபவ ரூபத்தில் அர்த்தமாகும். நாம் வார்த்தைகளின் அர்த்தத்தை மட்டும் பார்த்துப் புரிந்து கொள்ள முடியாது. அதனால் வேதங்கள் பிறந்ததாக அதில் சொன்னதையும் அப்படியே பொருள் கொள்வதிற்கில்லை.

மொத்தத்தில் சாஸ்திர அபிப்பிராயம், வேதம் அநாதி; அது அநாதியாக ஈச்வரனின் சுவாஸமாக இருக்கிறது என்பதுதான்.

ஈச்வரனின் சுவாஸம் இந்த மாதிரி சப்த ரூபத்தில் இருக்கிறது என்றால், இந்த சப்தங்களைக் கொண்டுதான் பிரம்மா சிருஷ்டி பண்ணினார் என்றால், நாகரிக மூளைக்கு “இதெல்லாம் சுத்த நான்-ஸென்ஸ்” என்று தோன்றுகிறது.

நன்றாக ஆராய்ந்து பார்த்தால், பெரிய விஞ்ஞான உண்மையே இதில் இருக்கிறதென்று தெரிகிறது.

இப்படிச் சொல்லும்போது இன்றைய விஞ்ஞானத்துக்கு acceptable- ஆக (ஏற்புடைத்தாக) இருந்தால்தான் மத விஷயங்களை நாம் ஒப்புக் கொள்ளலாம் என்று நான் சொல்வதாக அர்த்தமில்லை. நம் ஸயன்ஸும், ஸயண்டிஸ்டுகளும் எங்கே போக முடியாதோ அந்தப் பரமாத்ம தத்துவத்தைச் சொல்கிற வேதத்தை, ஸயன்ஸின் லிமிட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அதிலுள்ள அநேக விஷயங்கள் ஸயன்ஸுக்கு ஒத்துவராமல்கூட இருப்பதாகத் தோன்றலாம். அதனால் அவை தப்பு என்று ஆகிவிடாது. ஆனால் இங்கே எடுத்துக் கொண்ட விஷயம் – மூச்சு எப்படி சப்தகோவைகளான மந்திரமாக இருக்க முடியும், அதை வைத்துக் கொண்டு எப்படி லோக ஸ்ருஷ்டி உண்டாக முடியும் என்ற விஷயம் – ஸயன்ஸுக்கும் ஒவ்வியதாகவே இருக்கிறது என்று மட்டும் சொன்னேன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 03, 2023 9:34 pm

ஒலியும் படைப்பும்



சப்தம் என்பது என்ன? Vibration தான் (அதிர்வுதான்) என்று இன்றைய ஸயன்ஸில் சொல்கிறார்கள். அணுவிஞ்ஞானமும், ஐன்ஸ்டீன் கொள்கையும் என்ன சொல்கின்றனவென்றால், ‘அணுவுக்குள் புகுந்து பார்த்தால் எல்லா வஸ்துவும் ஒன்றுதான், அத்வைதம்தான். லோகமெல்லாம் ஒரே சக்தி வெள்ளம்தான். எல்லாம் ஒரே electro-magnetic (மின்-காந்த) பிரவாஹம்தான். ஆனால் ஏன் இப்படி வேறு வேறு வஸ்துக்களாகத் தெரிகிறது என்றால், அந்த ஒரே சக்தியில் தோன்றுகிற வெவ்வேறு விதமான vibrationகளால்தான்’ என்று சொல்கின்றன.

அதிர்வு உண்டானால் சப்தம் உண்டாகிறது. இதையே திருப்பிச் சொன்னால், சப்தம் உண்டாக வேண்டுமானால் அதற்கான அதிர்வு ஏற்பட்டாகவேண்டும்.

ஒரே சக்தியில் பலவித vibration ஏற்படுவதால் லோக சிருஷ்டி உண்டாவதாகச் சொல்கிற விஞ்ஞானக் கருத்தும், பரமாத்மாவின் சுவாஸமான வேத சப்தத்திலிருந்து லோகம் வந்தது என்பதும் முழுக்க ஒன்றேதான்.

மநுஷ்யர்கள், பிராணிகள் இருக்கிறோம். நம்முடைய ஆரோக்யம், உணர்ச்சிகள் முதலியன எப்படி ஏற்படுகின்றன? நம்முடைய ச்வாஸ கதியிலிருந்துதான். நாடிகளில் ச்வாஸம் போகிறபோது ஏற்படுகிற vibration-களால்தான் தேகத்தின் பல பகுதிகளுக்கும் ஆரோக்யம், அல்லது ஆரோக்யக் குறைவு ஏற்படுகிறது. யோக ஸாதனங்களால் ச்வாஸப் பயிற்சி மூலம் மூச்சை நாடிகளில் ஒழுங்குப்படுத்திக் கொள்கிறவர்களுக்கு ஆச்சரியப்படும்படியான ஆரோக்யம் இருக்கிறது. அவர்களுடைய ரத்தக் குழாய்களை நறுக்கினால்கூட ரத்தம் கொட்டாமலிருக்கிறது. நாடித்துடிப்பு, ஹ்ருதயத்துடிப்பு இவற்றைக் கூட நிறுத்திவிட்டு, அவர்களால் பூமிக்கடியில் உயிரோடு ஸமாதியில் இருக்க முடிகிறது. பாம்பும் தேளும் கடித்தாலும் விஷம் அவர்களைப் பாதிப்பதில்லை. மூச்சினால் உண்டாகும் நாடி சலனத்தை அவர்கள் ஒழுங்கு படுத்தியிருப்பதால்தான் இப்படி இருக்கிறது.

உடம்புக்கு மட்டும் தான் மூச்சு முக்கியம் என்றில்லை. மனஸுக்கும் மனஸின் ஆரோக்யத்திற்கும் அதுவே முக்யமாயிருக்கிறது. எண்ணங்களுக்கு மூலமான மனஸும், மூச்சுக்கு மூலமான பிராணசக்தியும் ஒன்றாகவே இருப்பதால்தான் இப்படியிருக்கிறது. நாடி சலனத்தாலேயே ஆரோக்யமான (நல்ல) அல்லது ஆரோக்யக் குறைவான (கெட்ட) எண்ணங்களும் உண்டாகின்றன. நீங்களே கவனித்துப் பார்த்தால் தெரியும். ஒரு தெய்வ ஸந்நிதானத்தில் அல்லது மஹானின் அருகில் மனஸ் சாந்தமாக இருக்கிறபோது மூச்சு எப்படி சஞ்சரிக்கிறது; காமத்தினால், கோபத்தினால் வேகம் உண்டாகிறபோது ச்வாஸகதி எப்படியிருக்கிறது என்று பார்த்தால், ஒன்றுக்கொன்று நிரம்ப வித்யாஸமாயிருக்கும். ஸந்தோஷம் என்பதிலேயேகூட தெய்வ விஷயமாக ஒரு பஜனையில் அல்லது உத்ஸவத்தில் உண்டாகிறதற்கும், இந்திரிய சுகத்தை தருகிற விஷயங்களில் உண்டாவதற்கும் நாடி சலனத்தில் வித்யாஸம் தெரியும். பொதுவாக உத்தமமான ஸந்தோஷத்தில் மூச்சு வலது நாசித்துவாரத்தில் வரும்; வெறும் இந்திரிய ஸந்தோஷம் (புலனின்பம்) என்றால் இடது நாசித் துவாரத்தில் வரும். இத்தனை உணர்ச்சிகளிலும் ஆதாரமான சாந்தமான ஸத்வஸ்துவில் தியானம் வலுவாகிற போது, ஒரே சீராக, மிக மெதுவாக, இரு நாசிகளிலும் ஸமமாக மூச்சு வரும். தியான லக்ஷ்யத்தில் ஒன்றுபட்டுவிடுகிறபோது மூச்சே நின்றுவிடும். மனஸும் நின்றுவிடும். ஆனால் உயிர் இருக்கும். ஞானம் என்ற பேருணர்வு பூரித்து இருக்கும்.

ஆக, ஜீவன் என்று எடுத்துக் கொண்டால், அவனுடைய ஜடமான சரீரம், சைதன்யமான அறிவு இரண்டும் ச்வாஸகதியால் உண்டாகி வளர்கிறவைதான்; அல்லது அழிகிறவைதான். முறையான ச்வாஸகதி என்பது நம் உள்-vibration-களை ஒழுங்கு பண்ணிக் கொள்வதுதான்.

பரமாத்மாவிடமிருந்துதானே இத்தனை ஜட வஸ்துக்களும் சைதன்ய வஸ்துக்களும் தோன்றி விருத்தியாகின்றன? அழிவதும் வளர்வதுமாக இருக்கின்றன? இதற்கெல்லாம் ஏற்ற சலனங்கள் பரமாத்ம வஸ்துவில் ஏற்பட்டுத்தானே ஆகவேண்டும்?

பிரம்மம் நிர்குணமானது, சலனமற்றது என்கிற அத்வைதம் இருக்கட்டும். அந்த அத்வைதத்தின்படியும், இன்னதென்றே சொல்ல முடியாத (அநிர்வசனீயமான) மாயாசக்தியுடன் கூடி பிரம்மம் பலவான இந்த பிரபஞ்சமாக வேஷம் போட்டுக் கொண்டிருப்பதாகச் சொல்லித்தானே இருக்கிறது? வேஷமோ, கீஷமோ, இப்படி ஜடமான லோகமென்றும், சைதன்யமுள்ள ஜீவர்கள் என்றும் விவகார தசையில் இருக்கிறமாதிரி ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. மாயை என்று சொன்னாலும், அதற்கும் ஆதாரமான “மாயின்” என்று ஈச்வரனேதான் இருக்கிறான். ஆகக்கூடி மாயாசக்தி என்று சொல்லிவிட்டாலும், இது அத்தனையும் பரப்பிரம்ம வஸ்துவில் தோன்றின சலனங்கள் தான்; Vibration கள் தான். இத்தனை சலனங்களாலும் அது சலனமடையாமல், உள்ளூர நிர்குண சாந்த வஸ்துவாகவே இருக்கிறது. ஆனாலும் நம் பார்வையில் சலனங்கள் உண்டுதான். அதுவும் கன்னாபின்னா என்று இல்லாமல் பெரிய பெரிய சூரியன் முதலான கிரஹங்களின் ஸஞ்சாரத்திலிருந்து ஆரம்பித்து, ஒரு சின்ன புல், பூண்டு அல்லது கொசு உண்டாகிற வரை, எல்லாம் ஒரே மாதிரி நியதிப்படி, ஒழுங்குப்படி நடந்து வருகிறது.

லோக வாழ்க்கை க்ஷேமகரமாக நடக்க இந்த ஒழுங்குதான் ஒத்தாசை பண்ணுகிறது. இயற்கைச் சக்திகளை எல்லாம் ஒழுங்குப்படுத்தித்தான் பரமாத்மா லோக வாழ்க்கையை உண்டாக்கியிருக்கிறார். ஆனாலும் இதிலே கொஞ்சம் கொஞ்சம் ஒழுங்கு தப்பிப்போகிற மாதிரியும் நடக்கவிட்டு வேடிக்கை பார்க்கிறார்! வாழ்க்கைக்கு அநுகூலம் செய்யவேண்டிய இயற்கைச் சக்திகள் அப்படிச் செய்யாமலிருக்கிறதையும் பார்க்கிறோம். காலத்தில் மழை பெய்ய மாட்டேன் என்கிறது; அல்லது வெள்ளம் வருகிறது. வேறு ஏதாவது உத்பாதம் உண்டாகிறது.

ஒழுங்கு தப்பிப் போவதில் இந்த மநுஷ்ய மனஸ் இருக்கிறதே, அது எவ்வளவு தூரம்தான் போகும் என்றே சொல்ல முடியாமல், குட்டிச் சாத்தனாக அலைகிறது! பிரபஞ்ச வாழ்க்கை முழுதிலும் எத்தனையோ ஒழுங்கு, கட்டுப்பாடு, நியதி இருந்தாலும், இந்த மனஸை எடுத்துக் கொண்டால், இது மட்டும் ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் வெறிநாயாகத் திரிகிறது.

இயற்கைக் சக்திகள் நமக்குப் பிரதிகூலமாக இருக்கிற போது, அவற்றைச் சரிப்படுத்த வழி உண்டா? நம் மனஸைக் கன்னாபின்னா என்று விடாமல் கட்டுப்பாட்டில் கொண்டு வர ஏதாவது வழி இருக்கிறதா?

சலனம் – சப்தம் இதனால்தான் சகல காரியமும் ஏற்பட்டிருக்கிறது என்றால், லோக சக்திகளை அநுகூலம் பண்ணித் தரவும், நம் சித்தத்தையே சுத்தம் பண்ணிக் கொடுக்கவும் கூடச் சப்தங்கள் இருக்கத்தான் வேண்டும். அவைதான் வேதம், வேதம் என்பது.

நம்முடைய ச்வாஸகதியாலேயே, நாம் யோக மார்க்கத்தின் மூலம் பரமாத்மாவின் ச்வாஸத்தைப் பிடித்து, லோகோபகாரமாகவும், ஆத்ம க்ஷேமகரமாகவும் உள்ள காரியங்களை நடத்திக் கொள்ளலாம். இங்கே நாடி சலனம் இருந்தாலும் அது மநுஷ்யக் காதுக்கு எட்டக் கூடிய சப்தமாக இருக்கவில்லை. ஸயன்ஸிலேயே மநுஷ்யனின் காதுக்கு எட்ட முடியாத சப்தங்கள், மநுஷ்யக் கண்ணின் லென்ஸுக்கு அகப்படாத ஒளி அலைகள் எல்லாம் உண்டு என்று ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

இது மட்டுமில்லை. எட்ட முடியாததை நமக்கு எட்டுகிற மாதிரி மாற்றிக் கொடுக்கவும் முடிகிறது. ரேடியோவில் ஒருத்தன் பாடுகிறான் என்றால், முதலில் அவன் பாடுகிற சப்தங்கள் மின்சார சக்தியினால் ஒரு விதமான காந்த அலைகளாக மாறிவிடுகின்றன. இப்படி மாறின அலைகள்தான் ஆகாசத்தில் விடப்படுகின்றன. அப்போது இவற்றை நம் காதால் கேட்க முடிகிறதா? இல்லை. ஆனாலும் ரேடியோப் பெட்டியில் உள்ள கருவிகள் ஆகாசத்தில் இருக்கிற அந்த மின்சாரக் காந்த அலைகளைப் பிடித்து, மறுபடி நம் காதுக்கு எட்டுகிற மாதிரியே சப்த அலைகளாக்கிப் பாட்டாகக் கொடுக்கிறது.

இதைச் சொல்லும் போது விஞ்ஞானம் மதத்துக்கு விரோதியே இல்லை; மதத்தை வளர்க்க அதுவேதான் ரொம்ப ஒத்தாசை செய்கிறது என்று தோன்றுகிறது. ஒரு நூற்றாண்டுக்கு முன் டெலிபோன், ரேடியோ ஆகியன வருவதற்கு முந்தி, “வேதசப்தமாவது, ச்வாஸமாவது?” என்று யாராவது நாஸ்திகர்கள் ஆக்ஷேபணை கிளப்பியிருந்தால், அவர்களுக்குப் பதில் சொல்லவே முடியாமல் இருந்திருக்கும். இப்போது இந்த ஸயன்ஸ் discoveries (கண்டுபிடிப்புகள்) தான் நமக்குக் கை கொடுக்கின்றன.

ஜடமான ரேடியோப் பெட்டிக்கு இருக்கிற சக்தியை சைதன்யமுள்ள ஜீவர்களும் சம்பாதித்துக்கொள்ள முடியும். அதற்கு மேலும் செய்ய முடியும். தபஸ்தான் இந்த சக்தியைத் தருவது. ஒரு ஸத்தியத்தைத் தெரிந்து கொண்டுதான் ஆவது என்று, அதற்காக அன்ன ஆகாரத்தை விட்டு, வீடு வாசலை விட்டு, எப்போது பார்த்தாலும் அதே சிந்தனையாக மனஸை ஒருமுகப்படுத்தி விட்டால், அதுதான் தபஸ். இத்தனையிலும், ‘நான் இத்தனை பிரயாசைப்படுகிறேன் அல்லவா? அதனால் எனக்கு ஸத்தியம் தெரிந்தே ஆகவேண்டும்’ என்ற அஹம்பாவம் இருக்கக்கூடாது. நாம் எத்தனை பிரயாஸைப் பட்டாலும், பகவத் பிரஸாதமாகத்தான் எந்த ஸத்தியமும் பிரகாசிக்கும் என்ற விநயம் எப்போதும் இருக்கவேண்டும். இம்மாதிரி தபஸ் பண்ணி, யோக நிலையில் உச்சிக்குப் போனவர்கள்தான் ரிஷிகள்.

ரிஷிகளுக்கு லோக ஸ்ருஷ்டியிலே ஏற்படும் சகல சலனங்களும் -அதாவது பரமாத்மாவின் ச்வாஸகதிகளும் – தெரிந்தது. தெரிந்தது மட்டுமில்லை; மின்சார அலையை சப்த அலையாக convert பண்ணுவது (மாற்றுவது) போல, அந்த சலனங்களுக்குரிய சப்தங்கள் மநுஷ்யக் காதுக்கு எட்டுகிற சப்தங்களாகவும் அவர்களுக்குத் தெரிந்தன. அப்படிப்பட்ட சப்தங்களையே வேத மந்திரங்கள் என்று தந்திருக்கிறார்கள்.

ஒன்று தோன்றுகிறது. வேதத்துக்கு “ச்ருதி” என்று ஒரு பேர். கேட்கப்படுவது எதுவோ அதுவே ச்ருதி. ச்ரோத்ரம் என்றால் காது. புஸ்தகத்தில் எழுதிப் படிக்காமல், குரு சிஷ்ய பரம்பரையாக வாயால் சொல்லிக் காதால் கேட்டே வேதம் தலைமுறை தலைமுறையாக வந்திருப்பதால் அதற்கு “ச்ருதி” என்று பேர் ஏற்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். எழுதிப்படிக்கக் கூடாது என்று ஏன் வைத்தார்கள் என்றால் வேத சப்தங்களை இப்படி எழுத முடியாது என்பதால்தான். ‘ழ’வுக்கும், ‘ள’வுக்கும் நடுவிலுள்ள சப்தம் மாதிரி, லிபியில் கொண்டு வர முடியாத பல சப்தங்கள் வேதத்தில் உண்டு. காதால் கேட்டுத்தான் இவை வரவேண்டும். அதோடுகூட உதாத்தம், அநுதாத்தம், ஸ்வரிதம் என்றெல்லாம் வேத மந்திரங்களுக்கு ஸ்வரமும் உண்டு. அதாவது ஒரு அக்ஷரத்தை உயர்த்த வேண்டும். இன்னொன்றைத் தாழ்த்திச் சொல்ல வேண்டும். சிலதை ஸமமாகச் சொல்ல வேண்டும். புஸ்தகத்தில் எத்தனைதான் diacritical mark போட்டு காட்டினாலும், அச்சுப்பிழை வந்து விட்டால், உச்சாரணக் கோளாறாகும்; உச்சரிப்பு தப்பினால் பலனே போய்விடும்*. ஓர் அக்ஷரத்தை அழுத்தி அல்லது மெல்லிசாகச் சொல்லுகிறதால் ஏற்படுகிற சலனத்துக்கும் இன்னோர் அக்ஷரத்தை அப்படிச் சொல்வதால் உண்டாவதற்கும் நிறைய வித்யாஸமிருக்கும். நம்முடைய உணர்ச்சிகள், இயற்கையை நடத்தி வைக்கும் தேவசக்திகள், இவையும் இந்த வித்யாஸத்துக்கு ஏற்ப மாறிப் போகும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 03, 2023 9:35 pm

ஒன்றுக் கொன்று உச்சாரணம் மாறுபட்டால் எத்தனை விபரீதம் உண்டாகிவிடும் என்பதற்கு, வேதத்திலேயே தைத்ரீய ஸம்ஹிதையில் ஒரு கதை இருக்கிறது. இந்திரனை வதைக்கக்கூடிய பிள்ளை தனக்குப் பிறக்க வேண்டும் என்பதற்காக த்வஷ்டா என்ற தேவதச்சன் ஒரு மந்திரத்தை ஜபம் பண்ணினான். அப்போது அக்ஷரங்களின் உச்சரிப்பில் உதாத்தம், அநுதாத்தம் என்று சொன்னேனே, இந்த உயர்த்தல் – தாழ்த்தலில் அவன் தப்பு பண்ணியதாலேயே, அவன் விரும்பின பலனுக்கு நேர்மாறாக, “இந்திரனை வதைக்கக் கூடிய பிள்ளை”க்கு நேர்மாறாக, “இந்திரன் வதைக்கக்கூடிய பிள்ளை, அதாவது இந்திரனால் வதைக்கப் படக்கூடிய பிள்ளை” தனக்கு வேண்டும் என்று அவன் பிரார்த்தித்ததாக ஆகிவிட்டது. கதையும் அப்படியே பிற்பாடு நடந்தது!

ரேடியோவில் ஒரு wave-length (அலைவரிசை) கொஞ்சம் தப்பினால்கூட, வேறு ஏதோ ஸ்டேஷனை அல்லவா பிடித்து விடுகிறது? மயிரிழை தப்பாமல் ரேடியோவில் வேவ்-லெங்க்த் வைத்தால்தானே சரியாகக் கேட்கிறது? இப்படியேதான் வேத உச்சாரணமும். கொஞ்சம்கூட ஸ்வரம் தப்பிப் போகக் கூடாது. வேவ் – லெங்க்த் மாறினால் ஸ்டேஷன் மாறிவிடுகிற மாதிரி, வேத சப்தம் மாறினால் பலனே மாறிவிடும்.

இதனாலெல்லாந்தான் வேதத்தைக் காதால் கேட்டுப் பாடம் பண்ணவேண்டும் என்று வைத்தார்கள். “ச்ருதி” என்று ஸம்ஸ்கிருதத்திலும், “எழுதாக் கிளவி” என்று தமிழிலும் வேதத்துக்கு பேர் ஏற்பட்டது.

“ச்ருதி” என்ற பெயருக்கு இன்னொரு காரணமும் தோன்றியதைச் சொல்ல வந்தேன். மற்ற சாதாரண ஜனங்களுக்குக் கேட்காத இந்த திவ்ய சலனங்களின் சப்தங்கள் ரிஷிகளுக்குக் கேட்கத் தானே செய்தது? அதை அவர்கள் புஸ்தகத்திலே படித்தார்களா? அல்லது அவர்களாக இயற்றினார்களா? இரண்டுமில்லாமல் ஆதியிலேயே கேட்கப் பட்டு லோகத்துக்கு வந்ததாலும் “ச்ருதி” என்று சொல்லலாம் என்று தோன்றிற்று.

ரிஷிகளுக்கு “மந்த்ர த்ரஷ்டா”க்கள் என்று பெயர் என்று சொன்னேன். ‘த்ரஷ்டா’ என்றால், பார்ப்பவன். “பார்ப்பான்” என்பதற்குக் கூட அதுதான் அர்த்தம். மந்திரங்களைப் “பார்த்தவர்கள்” என்றால், அவர்கள் மந்திரங்களைக் “கேட்கவில்லை” என்று ஆகும். மந்திரங்கள் அவர்களுடைய கண்ணுக்கு அகண்ட ஆகாசத்தில் கூட்டங்கூட்டமாக தெரிந்தன என்று “மந்த்ர த்ரஷ்டா” என்பதற்கு அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம்.

இதில் எது சரி? பார்த்தார்களா? கேட்டார்களா? பார்த்தார்கள் என்றால் வேதமந்திரங்கள் எந்த லிபியில் எழுதியிருந்தது? தேவநாகரி, கிரந்தம், எல்லாவற்றுக்கும் மூலமான ப்ராம்மி முதலான எந்த லிபியும் இல்லாத காலத்தில், எந்த எழுத்தில் மந்திரங்கள் தெரிந்தன? வேத சப்தங்களையும், ஸ்வரங்களையும் உள்ளது உள்ளபடி எந்த லிபியிலும் எழுதி முடியாதே!

இதற்கெல்லாம் பதில் என்னவென்றால், பார்த்தார்கள், கேட்டார்கள் என்றெல்லாம் சொன்னாலும், வாஸ்தவத்தில் வேத மந்திரங்கள் ரிஷிகளுடைய உயர்ந்த தியான நிலையில் அவர்களுடைய ஹ்ருதயத்திலே ஸ்புரித்தன, அதாவது flash ஆயின என்பதுதான். அந்த நிலையில் அவர்களுடைய கண் பார்க்காமலும், காது கேட்காமலுங்கூட இருந்திருக்கும். அப்படி அப்படியே உள்மனஸில் மந்திர ஸப்தங்கள் flash ஆகியிருக்கும்.

காண்பது, பார்ப்பது என்பது கண்ணால் செய்கிற காரியத்தை மட்டும் குறிப்பதல்ல. எல்லா உணர்ச்சியையும் அது குறிக்கும். “ஒருத்தன் வாழ்க்கையில் பல இன்ப துன்பங்களைக் கண்டான்” என்று சொல்கிற இடத்தில், ‘கண்டான்’ என்றால் கண்ணால் பார்த்தான் என்று மட்டுமா அர்த்தம்? ‘அநுபவித்தான்’ என்பதுதானே அதன் பொருள்? ‘மந்த்ர த்ரஷ்டா’ என்றாலும், இப்படியே அநுபவித்தில் தெரிந்து கொண்டதாக வைத்துக் கொள்ளலாம்.

வேதம் சப்த ரூபத்தில் இருப்பதால் அதை நம்முடைய காதுகளுக்கு மேற்பட்ட திவ்ய சக்தி பெற்ற காதுகளால் (திவ்ய ச்ரோத்ரத்தால்) ரிஷிகள் கேட்டுக் கொண்டார்கள் என்றும் சொல்வதுண்டு.

அர்ஜுனன் பகவானின் விச்வரூபத்தைப் பார்க்க ஆசைப்பட்டான்; அப்போது கிருஷ்ண பரமாத்மா, ‘இந்த உன் கண்ணால் என் விச்வரூபத்தை பார்க்க முடியாது. உனக்கு அதற்கான வேறு திருஷ்டியை, தெய்விகமான பார்வையைத் தருகிறேன்’ என்று சொன்னதாகக் கீதையில் இருக்கிறது (XI.8).

“திவ்யம் ததாமி தே சக்ஷு:”

அர்ஜுனனுக்கு திவ்ய சக்ஷுஸ் [தெய்விக ஆற்றல் வாய்ந்த கண்] உண்டானது போல், ரிஷிகளுக்கு பரமாத்மாவிடமிருந்து தோன்றி அகண்ட ஆகாசத்தில் வியாபித்திருந்த மந்திர சப்தங்களைக் கிரஹிக்கக் கூடிய திவ்ய ச்ரோத்ரம் [தெய்வீக சக்தி வாய்ந்த காது] உண்டாகியிருந்தது.

லோக ஸ்ருஷ்டிக்கும் லோக வாழ்க்கைக்கும் வேண்டிய சப்த சலனங்களை மட்டும்தான் வேதம் கொடுக்கிறது என்றில்லை. இதைத் தாண்டி பரமாத்ம ஸத்யத்தோடு ஒன்றாகப் போய் விடவும் அதில் மந்திரங்கள் இருக்கின்றன. ஒருத்தன் வந்த வழியாகவே திரும்பிப் போனால் புறப்பட்ட இடத்துக்கே போய் சேர்ந்து விடுவான் அல்லவா? அந்த மாதிரி, ஸ்ருஷ்டி எப்படி வந்தது என்று பார்த்துக் கொண்டே போகிற போது, கடைசியில் சலனமே எழும்பாத ஸ்தானத்துக்கு அது கொண்டு விட்டுவிடுகி்றது. சில மந்திரங்களினால் ஏற்படும் நாடி சலனமே அங்கே அழைத்துப் போகிறது. உபநிஷத் மஹா வாக்யங்கள், பிரணவம் எல்லாம் இப்படிப் பட்டவைதான்.

இவ்வளவும் எதற்குச் சொல்ல வந்தேன் என்றால், வேதத்தை யாரும் இயற்றவில்லை; ரிஷிகளும் இயற்றவில்லை; பரமாத்மாவுமேகூட யோசித்து யோசித்து ஓலைச் சுவடியும், எழுத்தாணியும் வைத்துக் கொண்டு வேதத்தை எழுதவில்லை என்று விளக்குவதற்குத்தான்.

Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக