புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை Poll_c10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை Poll_m10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை Poll_c10 
56 Posts - 50%
heezulia
ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை Poll_c10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை Poll_m10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை Poll_c10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை Poll_m10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை Poll_c10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை Poll_m10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை Poll_c10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை Poll_m10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை Poll_c10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை Poll_m10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை Poll_c10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை Poll_m10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை Poll_c10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை Poll_m10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை Poll_c10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை Poll_m10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை Poll_c10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை Poll_m10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை Poll_c10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை Poll_m10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை Poll_c10 
12 Posts - 2%
prajai
ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை Poll_c10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை Poll_m10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை Poll_c10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை Poll_m10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை Poll_c10 
9 Posts - 2%
jairam
ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை Poll_c10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை Poll_m10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை Poll_c10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை Poll_m10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை Poll_c10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை Poll_m10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை Poll_c10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை Poll_m10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 13, 2015 2:24 pm

கடவுள் வாழ்த்து

பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலுங் கலந்துனக்கு நான்தருவேன்-கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றுந் தா.


(பதவுரை) கோலம் செய் - அழகினைச் செய்கின்ற, துங்கம் - உயாவாகிய, கரிமுகத்து - யானை முகத்தையுடைய, தூமணியே-பரிசுத்தமாகிய மாணிக்கம்போலும் விநாயகக் கடவுளே, பாலுந் தெளி தேனும் பாகும் பருப்பும்- ஆவின் பாலும் தெளிந்த தேனும் வெல்லப்பாகும் பருப்பும்ஆகிய, இவை நாலும் கலந்து-இந்நான்கையும் கலந்து, நான்உனக்குத் தருவேன் - அடியேன் தேவரீருக்கு நிவேதிப்பேன்;சங்கத் தமிழ் மூன்றும் - சங்கத்தில் வளர்க்கப்பட்ட முத்தமிழையும், நீ எனக்குத் தா - தேவரீர் அடியேனுக்குத் தந்தருள்வீராக.

இதன் கருத்து :- விநாயகக் கடவுளே! தேவரீர்அடியேனது பூசையை ஏற்றுக்கொண்டு எனக்கு முத்தமிழ்ப்புலமையும் தந்தருளவேண்டும் என்பதாம். முத்தமிழ் - இயல்,
இசை, நாடகம் என்னும் பிரிவினையுடையதமிழ். தமிழ் முதல்,இடை, கடை யென்னும் முச்சங்கங்களால் வளர்க்கப் பெற்றமையால் சங்கத் தமிழ் எனப் பெயர் பெறுவதாயிற்று.




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 13, 2015 2:25 pm

நன்மையே செய்க

1. புண்ணியம்ஆம் பாவம்போம் போனநாட் செய்தஅவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள்-எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை எச்சமயத் தோர்சொல்லுந்
தீதொழிய நன்மை செயல்.


(பதவுரை) புண்ணியம் ஆம் - அறமானது விருத்தியைச் செய்யும்; பாவம் போம் - பாவமானது அழிவினைச்செய்யும்; போனநாள் செய்த அவை - முற்பிறப்பிற் செய்த அப் புண்ணிய பாவங்களே, மண்ணில் பிறந்தார்க்கு - பூமியிலே பிறந்த மனிதர்களுக்கு, வைத்த பொருள் - (இப்பிறப்பிலே இன்பதுன்பங்களை அநுபவிக்கும்படி) வைத்த பொருளாகும்; எண்ணுங்கால் - ஆராய்ந்து பார்க்கின், எச்சமயத்தோர் சொல்லும் - எந்த மதத்தினர் சொல்லுவதும், ஈது ஒழிய வேறு இல்லை - இதுவன்றி வேறில்லை; (ஆகையால்) தீது ஒழிய நன்மை செயல் - பாவஞ் செய்யாது புண்ணியமே செய்க.

புண்ணியத்தால் இன்பமும், பாவத்தால் துன்பமும் உண்டாதலால், பாவத்தை யொழித்துப் புண்ணியத்தைச் செய்க எ-ம். ஆக்கும் போக்கும் என்பன ஆம் போம் என நின்றன.




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 13, 2015 2:27 pm

ஈயாமையின் இழிவு

2. சாதி யிரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின்-மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி.


(பதவுரை) சாற்றுங்கால் - சொல்லுமிடத்து, மேதினியில் - பூமியில், சாதி இரண்டு ஒழிய வேறு இல்லை - இரண்டு சாதியின்றி வேறில்லை, (அவ்விரண்டு சாதியாரும் யாவரெனின்) நீதி வழுவா நெறி - நீதி தவறாத நல்வழியில் நின்று, முறையின் - முறையோடு; இட்டார் - (வறியர் முதலானவர்க்கு) ஈந்தவரே, பெரியோர்-உயர்வாகிய சாதியார்; இடாதார் - ஈயாதவரே, இழிகுலத்தார் - இழிவாகிய சாதியார்; பட்டாங்கில் உள்ளபடி-உண்மை நூலில் உள்ள இயற்கை இதுவேயாம்.

கொடுத்தவர் உயர்குலத்தினர்; கொடாதவர் இழிகுலத்தினர்; இவ்வகையன்றி வேறு சாதியில்லை




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 13, 2015 2:28 pm

ஈதலின் சிறப்பு

3. இடும்பைக்கு இடும்பை இயலுடம்பி தன்றே
இடும்பொய்யை மெய்யென் றிராதே-இடுங்கடுக
உண்டாயி னுண்டாகும் ஊழிற் பெருவலிநோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு.


(பதவுரை) இயல் உடம்பு இது - பொருந்திய இவ்வுடம்பானது, இடும்பைக்கு - துன்பமாகிய சரக்குகட்கு, இடும்பை அன்றே - இட்டு வைக்கும் பை யல்லவா, இடும் பொய்யை - (உணவினை) இடுகின்ற நிலையில்லாத இவ்வுடம்பை, மெய் என்று இராது-நிலையுடையதென்று கருதியிராமல், கடுக - விரையில், இடும் - வறியார்க்கு ஈயுங்கள், உண்டாயின் - (இவ்வறம் உங்களிடத்து) உண்டாயின், பெருவலிநோய் - மிக்க வலிமையுடைய பாசமாகிய பிணியினின்றும், விண்டாரை - நீங்கியவரை, கொண்டாடும் - விரும்புகின்ற, வீடு-முத்தியானது, ஊழின் - முறையாலே, உண்டாகும் - உங்கட்குக் கிடைக்கும்.

அறஞ் செய்தவர்க்கு முறையாலே வீடுபேறுண்டாகும், எ-ம். நீரிலெழுத்துப்போற் கணத்துள் அழிவதாகலின் உடம்பு பொய் எனப்பட்டது. உடம்பிற்கு மெய் என்று பெயர் வந்தது எதிர் மறை யிலக்கணை. பயன் கருதாது செய்யும் அறத்தால் மனத்தூய்மையும், மெய்யுணர்வும், வீடுபேறும் முறையானே உண்டாகும் என்க.




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 13, 2015 2:28 pm

காலம் நோக்கிச் செய்க

4. எண்ணி ஒருகருமம் யார்க்குஞ்செய் யொண்ணாது
புண்ணியம் வந்தெய்து போதல்லாற்-கண்ணில்லான்
மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோ லொக்குமே
ஆங்கால மாகு மவர்க்கு.


(பதவுரை) யார்க்கும் - எத்தன்மையோர்க்கும், புண்ணியம் வந்து எய்துபோது அல்லால் - (முன்செய்த) புண்ணியம் வந்து கூடும்பொழுதல்லாமல், ஒரு கருமம்-ஒரு -காரியத்தை, எண்ணி-ஆலோசித்து, செய்யொண்ணாது - செய்து முடிக்க இயலாது; (அப்படிச் செய்யின் அது) கண் இல்லான்-குருடன், மாங்காய் விழ - மாங்காயை விழுவித்தற்கு, எறிந்த மாத்திரைக்கோல் ஒக்கும் - எறிந்த மாத்திரைக்கோலைப் போலும்; ஆம் காலம் - புண்ணியம் வந்து கூடும் பொழுது, அவர்க்கு ஆகும் - அவர்க்கு அக்காரியம் எளிதில் முடியும்.

புண்ணிய மில்லாதவன் செய்யத் தொடங்கிய காரியம் முடியப் பெறாது கைப்பொருளும் இழப்பன் எ-ம். மாத்திரை-அளவு. குருடன் மாங்காயும் பெறாது கோலும் இழப்பன் என்க.




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 13, 2015 2:29 pm

கவலையுறுதல் கூடாது

5. வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமினென்றாற் போகா-இருந்தேங்கி
நெஞ்சம்புண் ணாக நெடுந்தூரந் தாம்நினைந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில்.


(பதவுரை) வாராத-(ஊழால்) வரக்கூடாதவைகள், வருந்தி அழைத்தாலும் - பரிந்து அழைப்பினும், வாரா - வாராவாம்; பொருந்துவன - (ஊழால்) வரக்கூடியவை, போமின் என்றால் - போயிடுங்கள் என வெறுப்பினும், போகா-போகாவாம்; இருந்து ஏங்கி - (இவ்வுண்மை யறியாமல்) இருந்து ஏக்கமுற்று, நெஞ்சம் புண் ஆக - மனம் புண்ணாகும்படி. நெடுந்தூரம் தாம் நினைந்து - (அவற்றைத்) தாம் நெடுந்தூரம் சிந்தித்து, துஞ்சுவதே - மாண்டு போவதே, மாந்தர் தொழில் - மனிதர் தொழிலாக வுள்ளது.

இருவினைப் பயன்களாகிய இன்பதுன்பங்கள் தப்பாமல் வந்து கொண்டிருக்கும். ஆதலால் இன்பத்தை விரும்பியும் துன்பத்தை வெறுத்தும் கவலையுறுதல் தக்கதன்று




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 13, 2015 2:30 pm

பேராசை கூடாது

6. உள்ள தொழிய ஒருவர்க் கொருவர்சுகங்
கொள்ளக் கிடையா குவலயத்தில்-வெள்ளக்
கடலோடி மீண்டு கரையேறி னாலென்
உடலோடு வாழும் உயிர்க்கு


(பதவுரை) ஒருவர்க்கு - ஒருவருக்கு, உள்ளது ஒழிய-(ஊழினால்) உள்ள அளவல்லாமல், ஒருவர் சுகம் - மற்றொருவருடைய சுகங்களை, கொள்ள,-அநுபவிக்க விரும்பினால், கிடையா - அவை கூடாவாம்; (ஆதலால்) குவலயத்தில்-பூமியில், உடலோடு வாழும் உயிர்க்கு - மக்களுடம்போடு கூடிவாழும் உயிர்களுக்கு, வெள்ளக் கடல் ஓடி-வெள்ள நீரையுடைய கடல்கடந்து சென்று (பொருள் தேடி), மீண்டு கரையேறினால் - திரும்பிவந்து கரையேறினாலும், என் - அதனாற் பயன் என்ன?

கப்பலேறிச் சென்று பெரும்பொருள் ஈட்டினாலும் ஊழினளவன்றி அநுபவித்தல் கூடாது




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 13, 2015 2:30 pm

ஞானிகள் பற்றற்றிருப்பர்

7. எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
பொல்லாப் புழுமலிநோய்ப் புன்குரம்பை-நல்லார்
அறிந்திருப்பார் ஆதலினால் ஆங்கமல நீர்போற்
பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு


(பதவுரை) எல்லாப் படியாலும் - எல்லா வகையாலும், எண்ணினால் - ஆராயுமிடத்து, இவ்வுடம்பு - இந்த உடம்பானது, பொல்லாப் புழு-பொல்லாத புழுக்களுக்கும், மலி நோய்-நிறைந்த பிணிகளுக்கும், புல் குரம்பை - புல்லிய குடிசையாக இருக்கின்றது; நல்லார் - நல்லறிவுடையோர், அறிந்திருப்பார் - (இவ்வுடம்பினிழிவை) அறிந்திருப்பார்கள்; ஆதலினால்-ஆகையால் (அவர்கள்), கமல நீர் போல் - தாமரை இலையில் தண்ணீர் போல, பிறிந்து இருப்பார் - (உடம்போடு கூடியும்) கூடாதிருப்பார்கள்; பிறர்க்குப் பேசார் - (அதைக் குறித்துப்) பிறரிடத்தில் பேசமாட்டார்கள், ஆம்: அசை.

உடம்பின் இழிவை யறிந்த ஞானிகள் உடம்போடு கூடி இருப்பினும் அதிற் பற்றற்றிருப்பார்கள்




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 13, 2015 2:31 pm

மரியாதையே தேடத்தக்கது

8. ஈட்டும் பொருண்முயற்சி எண்ணிறந்த வாயினும் ஊழ்
கூட்டும் படியன்றிக் கூடாவாம்-தேட்டம்
மரியாதை காணு மகிதலத்தீர் கேண்மின்
தரியாது காணுந் தனம்


(பதவுரை) மகிதலத்தீர்-பூமியிலுள்ள மனிதர்களே, கேண்மின் - கேளுங்கள்; ஈட்டும் பொருள் - தேடுதற்குரிய பொருள்களானவை, முயற்சி எண் இறந்த ஆயினும்-முயற்சிகள் அளவில்லாதன வாயினும், ஊழ் கூட்டும்படி அன்றிக் கூடாவாம் - ஊழ் கூட்டு மளவினல்லாமல் சேராவாம்; தனம் தரியாது-ஊழினாலே (சேரினும்) அப்பொருள் நிலைபெறாது; தேட்டம் மரியாதை - (ஆதலினால் நீங்கள்) தேடத்தகுவது மரியாதையே யாம். ஆம்: அசை. காணுமிரண்டும் முன்னிலை யசை.




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 13, 2015 2:32 pm

குடிப்பிறந்தார் இல்லை எனமாட்டார்

9. ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வாறு
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும்-ஏற்றவர்க்கு
நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லையென மாட்டார் இசைந்து


(பதவுரை) ஆற்றுப் பெருக்கு அற்று - ஆற்றில் வெள்ளம் வற்றிப்போய், அடி சுடும் அந்நாளும்-(மணலானது வெயிலினாலே காய்ந்து நடப்பவருடைய) அடியைச் சுடுகின்ற அக்காலத்திலும், அவ் ஆறு - அந்த ஆறானது, ஊற்றுப் பெருக்கால் - ஊற்றுநீர்ப் பெருக்கினால், உலகு ஊட்டும் - உலகத்தாரை உண்பிக்கும்; (அது போல) நல்ல குடிப்பிறந்தார்-நற்குடியிற் பிறந்தவர், நல்கூர்ந்தார் ஆனாலும்-வறுமையுடையவரானாலும், ஏற்றவர்க்கு - இரந்தவர்க்கு, இசைந்து - மனமிசைந்து, இல்லையென மாட்டார்-இல்லையென்று சொல்லமாட்டார் (இயன்றது கொடுப்பர்).

உயர்ந்த குடியிற் பிறந்தவர் வறுமைக் காலத்திலும் இரந்தவர்க்குக் கொடாது விடார்




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக