புதிய பதிவுகள்
» ஆலமரம் போல் தனித்துவமாக வாழ....
by சிவா Today at 5:08 pm
» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Today at 4:12 pm
» மாநிலத்தின் செயல்பாட்டை முடக்கும் ஆளுநர் பதவி தேவையா?
by சிவா Today at 3:41 pm
» 6 ஆண்டுகளில் 10,814 என்கவுன்ட்டர்கள்... உ.பி-யில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா?
by சிவா Today at 3:37 pm
» அதிமுக vs பா.ஜ.க.
by சிவா Today at 3:24 pm
» தமிழ்நாடு பட்ஜெட் 2023-2024
by சிவா Today at 3:15 pm
» [மின்னூல்] உடல், பொருள், ஆனந்தி - ஜாவர் சீதாராமன்
by சிவா Today at 11:26 am
» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Today at 4:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 4:01 am
» மந்திரங்கள்
by சிவா Today at 3:49 am
» மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள் யார்?
by சிவா Today at 2:41 am
» கல்யாணம் முதல் கருவுறுதல் வரை - உணவு முறை
by சிவா Today at 2:33 am
» ஸ்ரீராம தரிசனம்
by சிவா Today at 1:29 am
» பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?
by சிவா Yesterday at 10:24 pm
» கருத்துப்படம் 21/03/2023
by mohamed nizamudeen Yesterday at 7:46 am
» நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்? வைட்டமின் மாத்திரைகள் உடலுக்கு நல்லதா?
by சிவா Yesterday at 2:32 am
» சீனாவில் மோடியின் பெயர் ‘லாவோக்சியன்’: #modi_laoxian
by சிவா Yesterday at 2:17 am
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 9:08 pm
» மகா பெரியவாளும் காந்திஜியும்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 7:23 pm
» வல்லாரை கீரையின் மகிமைகள்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 5:09 pm
» மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு
by Dr.S.Soundarapandian Mon Mar 20, 2023 12:49 pm
» உலகச் செய்திகள்!
by சிவா Sun Mar 19, 2023 9:18 pm
» வியர்வை வாடை: காரணம், தீர்வுகள், கட்டுப்படுத்தும் வழிகள்
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 9:11 pm
» உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா?
by சிவா Sun Mar 19, 2023 9:07 pm
» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (14)
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 9:04 pm
» மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு 30 கட்டளைகள்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 9:02 pm
» கும்பத்தில் வலுவாகும் சனி:
by சிவா Sun Mar 19, 2023 9:02 pm
» பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
by சிவா Sun Mar 19, 2023 9:00 pm
» அண்ணாமலையின் பேச்சுக்கு, நான் பதவுரை எழுத முடியாது! - வானதி சீனிவாசன்
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 8:45 pm
» நரம்பு மண்டலம் பாதிப்படைந்து இருப்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்
by சிவா Sun Mar 19, 2023 8:35 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 1:54 pm
» கோஹினூர் வைரம்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 1:48 pm
» ரௌடியை பிரதமர் கையெடுத்துக் கும்பிட்டது ஏன்?
by சிவா Sun Mar 19, 2023 12:30 am
» லண்டன் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ள கோஹினூர் வைரம்
by சிவா Sun Mar 19, 2023 12:23 am
» தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார்
by T.N.Balasubramanian Sat Mar 18, 2023 5:44 pm
» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி
by eraeravi Fri Mar 17, 2023 8:41 pm
» பற்களை பராமரிப்பதில் நாம் செய்யும் தவறுகள்
by T.N.Balasubramanian Fri Mar 17, 2023 7:34 pm
» உலக தூக்க தினம் - மார்ச் 17
by T.N.Balasubramanian Fri Mar 17, 2023 6:21 pm
» 18 நாடுகள் இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்ய அனுமதி
by T.N.Balasubramanian Fri Mar 17, 2023 6:10 pm
» அதிகம் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முன்னணியில் இந்தியா
by mohamed nizamudeen Fri Mar 17, 2023 9:56 am
» கடன் வாங்கி ஆடம்பரத் திருமணம் செய்ய வேண்டாமே...
by Dr.S.Soundarapandian Thu Mar 16, 2023 10:03 pm
» வெளிநாட்டு வழக்கறிஞர்கள் இந்தியாவில் பயிற்சி செய்யலாம், ஆனால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது
by Dr.S.Soundarapandian Thu Mar 16, 2023 10:00 pm
» 3 வல்லரசுகள் உருவாக்க திட்டமிடும் அணுசக்தி நீர்மூழ்கி படை
by Dr.S.Soundarapandian Thu Mar 16, 2023 9:54 pm
» முதுமலையில் படமாக்கப்பட்ட ஆவணப்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது
by Dr.S.Soundarapandian Thu Mar 16, 2023 9:46 pm
» கண் அழுத்த நோய் - Glaucoma
by சிவா Thu Mar 16, 2023 8:17 pm
» ஆன்லைன் சூதாட்டமும் அரசியல் சூதாட்டமும்
by சிவா Thu Mar 16, 2023 5:28 pm
» போதை வலையில் சிறுவர்கள்... என்னவாகும் தமிழ்நாடு?
by T.N.Balasubramanian Thu Mar 16, 2023 5:19 pm
» 5,000 கலை அம்சங்கள் உடன் 5,000 ஆண்டுகால இந்திய நாகரிகத்தை சிறப்பிக்கும் புதிய நாடாளுமன்ற கட்டிடம்
by சிவா Thu Mar 16, 2023 5:00 pm
» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Thu Mar 16, 2023 4:09 pm
» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
by சிவா Thu Mar 16, 2023 3:35 am
by சிவா Today at 5:08 pm
» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Today at 4:12 pm
» மாநிலத்தின் செயல்பாட்டை முடக்கும் ஆளுநர் பதவி தேவையா?
by சிவா Today at 3:41 pm
» 6 ஆண்டுகளில் 10,814 என்கவுன்ட்டர்கள்... உ.பி-யில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா?
by சிவா Today at 3:37 pm
» அதிமுக vs பா.ஜ.க.
by சிவா Today at 3:24 pm
» தமிழ்நாடு பட்ஜெட் 2023-2024
by சிவா Today at 3:15 pm
» [மின்னூல்] உடல், பொருள், ஆனந்தி - ஜாவர் சீதாராமன்
by சிவா Today at 11:26 am
» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Today at 4:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 4:01 am
» மந்திரங்கள்
by சிவா Today at 3:49 am
» மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள் யார்?
by சிவா Today at 2:41 am
» கல்யாணம் முதல் கருவுறுதல் வரை - உணவு முறை
by சிவா Today at 2:33 am
» ஸ்ரீராம தரிசனம்
by சிவா Today at 1:29 am
» பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?
by சிவா Yesterday at 10:24 pm
» கருத்துப்படம் 21/03/2023
by mohamed nizamudeen Yesterday at 7:46 am
» நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்? வைட்டமின் மாத்திரைகள் உடலுக்கு நல்லதா?
by சிவா Yesterday at 2:32 am
» சீனாவில் மோடியின் பெயர் ‘லாவோக்சியன்’: #modi_laoxian
by சிவா Yesterday at 2:17 am
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 9:08 pm
» மகா பெரியவாளும் காந்திஜியும்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 7:23 pm
» வல்லாரை கீரையின் மகிமைகள்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 5:09 pm
» மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு
by Dr.S.Soundarapandian Mon Mar 20, 2023 12:49 pm
» உலகச் செய்திகள்!
by சிவா Sun Mar 19, 2023 9:18 pm
» வியர்வை வாடை: காரணம், தீர்வுகள், கட்டுப்படுத்தும் வழிகள்
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 9:11 pm
» உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா?
by சிவா Sun Mar 19, 2023 9:07 pm
» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (14)
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 9:04 pm
» மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு 30 கட்டளைகள்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 9:02 pm
» கும்பத்தில் வலுவாகும் சனி:
by சிவா Sun Mar 19, 2023 9:02 pm
» பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
by சிவா Sun Mar 19, 2023 9:00 pm
» அண்ணாமலையின் பேச்சுக்கு, நான் பதவுரை எழுத முடியாது! - வானதி சீனிவாசன்
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 8:45 pm
» நரம்பு மண்டலம் பாதிப்படைந்து இருப்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்
by சிவா Sun Mar 19, 2023 8:35 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 1:54 pm
» கோஹினூர் வைரம்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 1:48 pm
» ரௌடியை பிரதமர் கையெடுத்துக் கும்பிட்டது ஏன்?
by சிவா Sun Mar 19, 2023 12:30 am
» லண்டன் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ள கோஹினூர் வைரம்
by சிவா Sun Mar 19, 2023 12:23 am
» தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார்
by T.N.Balasubramanian Sat Mar 18, 2023 5:44 pm
» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி
by eraeravi Fri Mar 17, 2023 8:41 pm
» பற்களை பராமரிப்பதில் நாம் செய்யும் தவறுகள்
by T.N.Balasubramanian Fri Mar 17, 2023 7:34 pm
» உலக தூக்க தினம் - மார்ச் 17
by T.N.Balasubramanian Fri Mar 17, 2023 6:21 pm
» 18 நாடுகள் இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்ய அனுமதி
by T.N.Balasubramanian Fri Mar 17, 2023 6:10 pm
» அதிகம் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முன்னணியில் இந்தியா
by mohamed nizamudeen Fri Mar 17, 2023 9:56 am
» கடன் வாங்கி ஆடம்பரத் திருமணம் செய்ய வேண்டாமே...
by Dr.S.Soundarapandian Thu Mar 16, 2023 10:03 pm
» வெளிநாட்டு வழக்கறிஞர்கள் இந்தியாவில் பயிற்சி செய்யலாம், ஆனால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது
by Dr.S.Soundarapandian Thu Mar 16, 2023 10:00 pm
» 3 வல்லரசுகள் உருவாக்க திட்டமிடும் அணுசக்தி நீர்மூழ்கி படை
by Dr.S.Soundarapandian Thu Mar 16, 2023 9:54 pm
» முதுமலையில் படமாக்கப்பட்ட ஆவணப்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது
by Dr.S.Soundarapandian Thu Mar 16, 2023 9:46 pm
» கண் அழுத்த நோய் - Glaucoma
by சிவா Thu Mar 16, 2023 8:17 pm
» ஆன்லைன் சூதாட்டமும் அரசியல் சூதாட்டமும்
by சிவா Thu Mar 16, 2023 5:28 pm
» போதை வலையில் சிறுவர்கள்... என்னவாகும் தமிழ்நாடு?
by T.N.Balasubramanian Thu Mar 16, 2023 5:19 pm
» 5,000 கலை அம்சங்கள் உடன் 5,000 ஆண்டுகால இந்திய நாகரிகத்தை சிறப்பிக்கும் புதிய நாடாளுமன்ற கட்டிடம்
by சிவா Thu Mar 16, 2023 5:00 pm
» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Thu Mar 16, 2023 4:09 pm
» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
by சிவா Thu Mar 16, 2023 3:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
கோபால்ஜி |
| |||
mohamed nizamudeen |
| |||
venkat532 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dhivya Jegan |
| |||
Elakkiya siddhu |
| |||
ஜாஹீதாபானு |
| |||
eraeravi |
| |||
THIAGARAJAN RV |
| |||
கோபால்ஜி |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம்
Page 1 of 1 •

கரிசலாங்கண்ணி இலையில் உள்ள சத்துக்கள்:
நீர்=85%
மாவுப்பொருள்=9.2%
புரதம்=4.4%
கொழுப்பு=0.8%
கால்சியம்=62 யூனிட்
இரும்புத் தாது=8.9 யூனிட்
பாஸ்பரஸ்=4.62%
இவை அனைத்தும் 100 கிராம் #கரிசலாங்கண்ணி இலைச்சாற்றில் உள்ள சத்துகள்.
‘ஒரு மூலிகையில் இரும்பு விளையும்’ என்று சொல்லுமளவுக்கு இரும்புச் சத்தை வாரி வழங்கும் ‘#மூலிகை இயந்திரம்’ கரிசாலை!
முதுமைக்கான அறிகுறிகளை எட்டிப்பார்க்க விடாமல் இரும்புக்கரம் கொண்டு அடக்கும் வலிமையான மூலிகை இது.
வயலோரங்களிலும் நீர்ப்பாங்கான இடங்களிலும் நிறைவாய்த் தென்படும் இந்தக் கற்ப மூலிகையைப் பற்றிய வள்ளலாரின் பதிவுகள் அதிகம். கரிசாலையிலிருந்து பிறப்பெடுக்கும் ‘#கரிசாலை மை’ கண்களுக்கு அழகூட்டுவது மட்டுமல்லாமல், தலைவலியையும் கண் நோய்களையும் நீக்கும் ‘அஞ்சனமாக’ வழக்கத்திலிருந்தது!
பெயர்க்காரணம்:
கரிச்சை, கரியசாலை, கரிக்கை, கைகேசி, கரிக்கண்டு, கையாந்தகரை, பிருங்கராஜம், தேகராஜம், கரிசணாங்கண்ணி, கரிசனம், பொற்றலைக்கையான் (மஞ்சள் கரிசாலை) ஆகிய வேறு பெயர்களை உடையது.
கரிசல்+ ஆம்+காண்+நீ (கரிசலாங் கண்ணி); இதன் இலைச் சாறு கரிசல் நிலம் போல, கருமையான சாயத்தைக் கொடுப்பதால் இப்பெயர்.
அடையாளம்:
படர்ந்தும் சற்று நிமிர்ந்தும் வளரக்கூடிய சிறுசெடி. இலைகளின் மேற்பரப்பு சொரசொரப்பாக இருக்கும். வெள்ளை, மஞ்சள் நிற மலர்கள், இனத்தைப் பிரித்துக் காட்டும். ‘அஸ்டரேசியே’ (Asteraceae) குடும்பத்தைச் சார்ந்த இதன் தாவரவியல் பெயர் ‘எக்லிப்டா புரோஸ்ட்ரேடா’ (Eclipta prostrata). ‘விடிலோலேக்டோன்’ (Wedelolactone), ‘பீட்டா அமைரின்’ (Beta-amyrin), ‘லுடியோலின்’ (Luteolin) போன்ற முக்கியத் தாவர வேதிப்பொருட்கள் இதிலுள்ளன.
உணவாக:
கோடைக்கால மதிய வேளைகளில், நீர்மோரோடு கரிசாலை இலைச் சாற்றைச் சிறிதளவு கலந்து பருக, உடல் குளிர்ச்சியடைவதோடு, வெப்பச் சோர்வைச் சமாளிக்கக்கூடிய ஆற்றலும் கிடைக்கும். துவரம் பருப்பு சேர்த்து சமைத்த ‘கரிசாலை-பருப்புக் கடையலை’ அவ்வப்போது சுவைத்துவர, உடல் தளர்வடையாமல் தேவைக்கேற்ப உழைப்பதோடு கண்பார்வையும் கூர்மையடையும்.
பசியை அதிகரித்து ஊட்டங்கள் முழுமையாக உட்கிரகிக்கப்படவும் கரிசாலை உதவுகிறது. இதன் சாற்றுடன் சிறிது வெண்ணெய் சேர்த்து விழுங்க, தொண்டைவலி குணமாகும்; குடற் கிருமிகளையும் வெளியேற்றும். சுவாசப் பிரச்சினைகளுக்கான உணவாகக் கரிசாலையைப் பயன்படுத்தலாம். கரிசாலையின் பலன்களைப் பெற, இதன் சாற்றுடன் பனைவெல்லம் சேர்த்து, லேகிய பதத்தில் செய்து சுவையாகவும் சாப்பிடலாம். கொடம்புளியும் கரிசாலையையும் சம அளவு எடுத்து புன்னைக் காயளவு சாப்பிட்டுவர, மூல நோயின் தாக்கம் குறையும்.
மருந்தாக:
#கல்லீரல் செல்களுக்குப் புத்துயிர் அளித்து, ‘கல்லீரல் பாதுகாவலனாக’ செயல்படும் முக்கிய மூலிகை கரிசாலை என்று ஆய்வுகள் பதிவிடுகின்றன. உடலின் நோய் எதிர்ப்பாற்றலை முடுக்கிவிடும் ஆற்றல் (Immuno-stimulatory) படைத்தது கரிசாலை. புற்று செல்களுக்கு எதிரியாகச் செயல்படும் நுண்கூறுகளைக் கொண்டிருக்கிறது. ரத்தத்தில் #கொழுப்பு_வகைகள் அதிகரித்து விடாமல் கட்டுப்படுத்தும் ஆதாரமாகக் கரிசாலை செயல்படுவதாக ஆய்வு குறிப்பிடுகிறது. எதிர்-ஆக்ஸிகரணி தன்மை உடையதால், கரிசாலையை வைத்து பல்வேறு கற்ப மருந்துகள் வழக்கத்தில் உள்ளன. ‘பொற்றலை கையாந்தக்கரை பொன்னிறமாக்கும் உடலை…’ எனும் அகத்தியர் பாடலின் மூலம், மஞ்சள் கரிசாலை யின் மேன்மையை அறியலாம்.
வீட்டு மருந்தாக:
குழந்தைகளுக்கு உண்டாகும் சளி, இருமலுக்கு, இதன் இலைச் சாறு இரண்டு துளியோடு தேன் சேர்த்துக் குழப்பி நாவில் தடவ, இயற்கையாய் இருமல் தணியும். இலைச் சாறு, #நல்லெண்ணெய் சேர்த்து தயாரிக்கப்படும் மருந்தே, அக்கால கிராமங்களில் இருமலுக் கான டானிக்! கரிசாலையை #சூரணம் செய்து, இளநீரில் ஒரு மாதமும் தேனில் ஒரு மாதமும் உட்கொள்ள நரைதிரை மாறும் என்கிறது ‘தேரன் யமக வெண்பா’. இதன் இலைகளை மென்று சாப்பிட்டு வாய் கொப்பளிக்க, பல் ஈறு பலமடையும்.
‘அயச் செந்தூரம்’ எனும் சித்த மருந்தைக் கரிசலாங்கண்ணி சாற்றின் அனுபானத்தில் கொடுக்க, ரத்தக் குறைவு, உடல் வீக்கம் குணமாகும். ‘அயபிருங்கராஜ கற்பம்’ எனும் சித்த மருந்து, ரத்த சோகையில் சிறப்பாகச் செயல்படக் கூடியது. கரிசாலை, மிளகின் உதவியுடன் உருவாக்கப்படும் மாத்திரைகள், #காமாலை, உடல் வீக்கத்துக்கான பாரம்பரிய மருந்து.
கரிசாலை சூரணத்தோடு #திப்பிலி சூரணத்தைத் தேனில் குழைத்துக் கொடுக்க, சளி, இருமல் அமைதியடையும். கரிசாலை கற்ப மாத்திரை, கையான் எண்ணெய் என சித்த மருத்துவத்தில் பல்வேறு வகைகளில் பயன்படும் கரிசாலை, சில வகையான காமாலைக்கான அற்புத மருந்து.
#ஆமணக்கெண்ணெய், கரிசாலைச் சாறு, சிறிது பூண்டு சேர்த்து பதமாய்க் காய்ச்சி தயாரிக்கப்படும் மருந்து, பித்த நோய்களின் ஆட்டத்தைக் கட்டுப்படுத்தும் வல்லமை பெற்றது. கரிசாலைச் சாறு, நெல்லிக்காய்ச் சாற்றின் உதவியுடன், நல்லெண்ணெய்யை அடிப்படையாக வைத்துத் தயாரிக்கப்படும் தலைமுழுகும் எண்ணெய்யை அவ்வப்போது பயன்படுத்த, உடலில் அதிகரித்திருக்கும் பித்தம் சாந்தமடையும்.
கண், காது நோய்களுக்கான மருத்துவ எண்ணெய்யும்கூட! உள்ளுக்கு மருந்தாகப் பயன்படும் ‘கரிசாலை மடக்குத் தைலம்’, தோல் முதல் உள்ளுறுப்புகள்வரை வலுவைக் கொடுக்கக்கூடியது. கரிசாலைச் சாறு, செம்பரத்தை, கறிவேப்பிலை ஆகியவற்றைத் தேங்காய் எண்ணெய்யில் சேர்த்துக் காய்ச்சிப் பயன்படுத்த, கூந்தல் ஆரோக்கியத்துக்கு நீண்ட நாள் உத்தரவாதம் கிடைக்கும்.
#கரிசாலை, #அம்மான்பச்சரிசி, #தும்பை, #மிளகு, ஆகியவற்றை அரைத்து வெள்ளாட்டுப் பாலில் கலக்கி, பனங்கற்கண்டு சேர்த்துக் கொடுக்க, சிறுநீர் எரிச்சல் குறைந்து, உடல் வீக்கம் வற்றும்.
கரிசாலை… உடல் நலமோடு பயணிக்க தேவையான இரும்புச்சாலை..!
[thanks]டாக்டர் வி.விக்ரம்குமார்
அரசு சித்த மருத்துவர் [/thanks]
#சித்த_மருத்துவம் #கரிசாலை #கரிசலாங்கண்ணி #இரும்புச்_சத்து #இயற்கை_மருத்துவம்


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33690
இணைந்தது : 03/02/2010
கரிசாலையிலிருந்து பிறப்பெடுக்கும் ‘கரிசாலை மை’ கண்களுக்கு அழகூட்டுவது மட்டுமல்லாமல், தலைவலியையும் கண் நோய்களையும் நீக்கும் ‘அஞ்சனமாக’ வழக்கத்திலிருந்தது!
உண்மைதான் சிவா. எனக்கு இன்றும் நினைவில் உள்ளது.எனது அந்த காலங்களில் ( 1948)
கரிசலாங்கண்ணி கீரை வாங்கி அதை சாறெடுத்து, புதிதாக வாங்கிய மண் சட்டியில்
அதன் வெளிப்புறத்தில் அந்த சாறை தடவி, சிறிய அகல் விளக்கில் விளக்கெண்ணெய் விட்டு
பஞ்சு திரி கொண்டு பற்ற வைத்து படியும் கரும் புகை தூளை எடுத்து கண்ணுக்கு மை தயாரிப்பார்கள் .
இப்போது அதெல்லாம் கனவாகி போச்சு.
ஏதாவது இது போல் பதிவுகள் வந்தால் மட்டும் நினைவுக்கு வருகிறது.


@சிவா

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1