புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 3:13 am

» இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் திரு மாணிக்கம் நடேசன்
by சிவா Today at 2:41 am

» புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள்
by சிவா Today at 2:14 am

» IPL கிரிக்கெட் போட்டிகள் --தொடர். பதிவு.
by சிவா Today at 1:33 am

» எழுந்து விடு மனிதா
by சிவா Today at 1:18 am

» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 9:35 pm

» அக்னிவீர் திட்டத்திற்கு அலைமோதும் இளைஞர்கள்.
by சிவா Yesterday at 9:26 pm

» நன்றாகத் தூங்குவது எப்படி? அதற்கு என்ன செய்ய வேண்டும்?
by சிவா Yesterday at 8:33 pm

» விரதம் இருப்பதால் ஏற்படும் மருத்துவப் பயன்கள்
by சிவா Yesterday at 8:13 pm

» விடுதலை - ரசிகர்கள் விமர்சனம்: 'படம் கிடையாது, அனுபவம்'
by சிவா Yesterday at 8:09 pm

» தங்க நகைகளில் கட்டாயம் HUID குறியீடு
by சிவா Yesterday at 8:06 pm

» முடியின் pH சமநிலைக்கு கற்றாழை எண்ணெய்
by சிவா Yesterday at 8:02 pm

» கோயிலில் தோண்ட தோண்ட.. 2000 செம்மறி ஆடு தலைகள்
by சிவா Yesterday at 7:58 pm

» இரும்புச்சத்து குறைபாடு இருந்தால் என்ன செய்வது?
by சிவா Yesterday at 3:29 pm

» ஆசியாவின் பெரிய தேர்: பக்தர்கள் வெள்ளத்தில் திருவாரூர் ஆழித் தேரோட்டம்
by சிவா Yesterday at 3:04 pm

» நாளும் ஒரு நற்சிந்தனை நூலாசிரியர் : நீதியரசர் கற்பகவிநாயகம் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:03 pm

» மன உறுதியை அதிகரிப்பது எப்படி?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:09 pm

» பெருங்காயத்தின் பயன்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:05 pm

» கருத்துப்படம் 01/04/2023
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (19)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» சாவர்க்கர் எங்களுக்கு கடவுள் போன்றவர்
by சிவா Yesterday at 3:29 am

» தமிழகத்தில் மதமாற்றம் அதிகரிப்பு
by சிவா Yesterday at 3:19 am

» தழும்புகளை நீக்கும் கோகோ பட்டர்
by சிவா Fri Mar 31, 2023 9:44 pm

» Deja vu - தேஜாவு - அமானுஷ்யமா, மறுபிறவியா, மற்றொரு பிரபஞ்சத்தின் வாசலா?
by சிவா Fri Mar 31, 2023 9:35 pm

» 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
by சிவா Fri Mar 31, 2023 9:00 pm

» பெருங்குடல் புற்றுநோய் என்றால் என்ன? ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவது எப்படி?
by சிவா Fri Mar 31, 2023 8:54 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri Mar 31, 2023 8:28 pm

» மலம் கழிப்பதை அடக்கினால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?
by சிவா Fri Mar 31, 2023 7:05 pm

» IPL - ஐ‌பி‌எல் பற்றிய தகவல்களின் தொகுப்பு
by T.N.Balasubramanian Fri Mar 31, 2023 5:59 pm

» IPL Live Streaming செய்யும் இணையதளம்
by சிவா Fri Mar 31, 2023 4:58 pm

» காசி வாழ தேசம் வாழும்
by சிவா Fri Mar 31, 2023 4:46 pm

» வேப்பம் பூ மருத்துவ பயன்கள் மற்றும் சமையல் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Fri Mar 31, 2023 3:10 pm

» [கட்டுரை] யாருக்காக ???
by rajuselvam Fri Mar 31, 2023 9:30 am

» வியர்க்குரு அல்லது வேர்க்குரு - இயற்கை வைத்தியங்கள்
by சிவா Fri Mar 31, 2023 12:47 am

» ஐபிஎல் 2023: 52 நாட்கள், 10 அணிகள், 74 போட்டிகள்
by சிவா Fri Mar 31, 2023 12:23 am

» கோடை... செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை...
by சிவா Thu Mar 30, 2023 10:31 pm

» வெயில்கால தட்டம்மை நோயைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
by சிவா Thu Mar 30, 2023 10:15 pm

» பழைய சோறு... இது உணவல்ல, மருந்து
by சிவா Thu Mar 30, 2023 10:08 pm

» இட்டிலி மேல் இனிதான கவிதை
by சிவா Thu Mar 30, 2023 9:19 pm

» செல்போன் பயன்படுத்தும் மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை
by சிவா Thu Mar 30, 2023 9:14 pm

» மோடியைத் தோற்கடிக்க இஸ்லாமிய வாக்காளர்களை அழைத்து வாருங்கள்
by T.N.Balasubramanian Thu Mar 30, 2023 5:52 pm

» இன்று உலக இட்லி தினம்
by T.N.Balasubramanian Thu Mar 30, 2023 5:10 pm

» நாவல் வேண்டும்
by Riha Thu Mar 30, 2023 4:37 pm

» ராமநாமம் ஒலிக்கட்டும், தேசம் செழிக்கட்டும்...
by சிவா Thu Mar 30, 2023 2:45 pm

» நோன்பு என்றால் என்ன? இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றாக அது எப்படி மாறியது?
by Dr.S.Soundarapandian Thu Mar 30, 2023 12:20 pm

» ஸ்ரீ ராம நவமித் திருநாள்
by சிவா Thu Mar 30, 2023 6:55 am

» கோடை கால பானங்கள்
by சிவா Thu Mar 30, 2023 12:16 am

» கேந்திர வித்யாலயா பள்ளிகளில் அட்மிஷன் பெறுவது எப்படி?
by சிவா Thu Mar 30, 2023 12:13 am

» வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க!
by சிவா Wed Mar 29, 2023 10:40 pm

» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Wed Mar 29, 2023 9:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
[இலக்கியம்] நற்றிணை - Page 13 Poll_c10[இலக்கியம்] நற்றிணை - Page 13 Poll_m10[இலக்கியம்] நற்றிணை - Page 13 Poll_c10 
108 Posts - 64%
T.N.Balasubramanian
[இலக்கியம்] நற்றிணை - Page 13 Poll_c10[இலக்கியம்] நற்றிணை - Page 13 Poll_m10[இலக்கியம்] நற்றிணை - Page 13 Poll_c10 
30 Posts - 18%
Dr.S.Soundarapandian
[இலக்கியம்] நற்றிணை - Page 13 Poll_c10[இலக்கியம்] நற்றிணை - Page 13 Poll_m10[இலக்கியம்] நற்றிணை - Page 13 Poll_c10 
11 Posts - 7%
தமிழ்வேங்கை
[இலக்கியம்] நற்றிணை - Page 13 Poll_c10[இலக்கியம்] நற்றிணை - Page 13 Poll_m10[இலக்கியம்] நற்றிணை - Page 13 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
[இலக்கியம்] நற்றிணை - Page 13 Poll_c10[இலக்கியம்] நற்றிணை - Page 13 Poll_m10[இலக்கியம்] நற்றிணை - Page 13 Poll_c10 
5 Posts - 3%
eraeravi
[இலக்கியம்] நற்றிணை - Page 13 Poll_c10[இலக்கியம்] நற்றிணை - Page 13 Poll_m10[இலக்கியம்] நற்றிணை - Page 13 Poll_c10 
3 Posts - 2%
சரவிபி ரோசிசந்திரா
[இலக்கியம்] நற்றிணை - Page 13 Poll_c10[இலக்கியம்] நற்றிணை - Page 13 Poll_m10[இலக்கியம்] நற்றிணை - Page 13 Poll_c10 
1 Post - 1%
eswari m
[இலக்கியம்] நற்றிணை - Page 13 Poll_c10[இலக்கியம்] நற்றிணை - Page 13 Poll_m10[இலக்கியம்] நற்றிணை - Page 13 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
[இலக்கியம்] நற்றிணை - Page 13 Poll_c10[இலக்கியம்] நற்றிணை - Page 13 Poll_m10[இலக்கியம்] நற்றிணை - Page 13 Poll_c10 
1 Post - 1%
Riha
[இலக்கியம்] நற்றிணை - Page 13 Poll_c10[இலக்கியம்] நற்றிணை - Page 13 Poll_m10[இலக்கியம்] நற்றிணை - Page 13 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

[இலக்கியம்] நற்றிணை


   
   

Page 13 of 19 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 19  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88963
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 01, 2023 9:53 am

First topic message reminder :

முகவுரை



    தமிழிலுள்ள நூல்களுள் காலத்தால் மிக முந்தியவை சங்க இலக்கியங்கள். கடைச் சங்க காலத்திலும் அதற்கு முன்பும் வாழ்ந்த புலவர் பெருமக்களின் பாடல்களில் சிறந்தன பலவும் கடைச் சங்க காலத்தின் இறுதியில் ஒருங்கு தொகுக்கப்பட்டன. இவை தொகை நூல்கள் எனப்படுபவை. பாவகையாலும், பொருள் பட்டு, எட்டுத் தொகுதிகளாக அமைக்கப்பட்டன. இவற்றைப் பண்டைய உரையாசிரியர்கள் 'தொகை' என்றும், 'எண் பெருந்தொகை' என்றும், குறிப்பிட்டுள்ளனர்.

    [You must be registered and logged in to see this link.] நூல்களாவன; [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.] என்பனவாம். இவ் வரிசை,

    நற்றிணை, நல்ல குறுந்தொகை, ஐங்குறுநூறு,
    ஒத்த பதிற்றுப்பத்து, ஓங்கு பரிபாடல்,
    கற்றறிந்தார் ஏத்தும் கலியே, அகம், புறம், என்று
    இத் திறத்த எட்டுத் தொகை.



என்ற பாடலில் காணும் அடைவுமுறையாகும். இம் முறையில் நூல்கள் தொகுக்கப்படவில்லை என்றும், தொகை நூல்களுள் குறுந்தொகை முதலாவதாகவும், ஏனைய நூல்கள் அதன் பின்னராகவும், தொகுக்கப்பட்டிருக்கலாம் என்றும், ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

    ஒட்டுத் தொகையுள் ஒன்றாகிய நற்றிணை ஒன்பது முதல் பன்னிரண்டு அடி வரையிலுள்ள நானூறு அகவற் பாக்களின் தொகுதி. குறுந்தொகை, நெடுந்தொகை, இரண்டிற்கும் இடைப் பட்டு, அளவான அடிகளை உடைமையினால், இது 'நற்றிணை' என வழங்கப்பட்டது போலும்.

    'நற்றிணை நானூறு' என்றும் இது வழங்கப்பெறும். 'இதனைத் தொகுப்பித்தான் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி' என்பது பழங் குறிப்பு. தொகுத்தாரது பெயர் தெரியவில்லை. நற்றிணைப் பாடல்களில் 234ஆம் பாடல் முற்றும் கிடைக்கவில்லை. 385ஆம் பாடலின் பிற்பகுதியும் மறைந்து போயிற்று. 56 பாடல்களின் ஆசிரியர் பெயர் காணப்பெறவில்லை. ஏனைய பாடல்களைப் பாடியவர்களின் தொகை 192.

    நற்றிணைச் செய்யுட்களுக்குக் குறிஞ்சி, முல்லை, முதலிய ஐந்திணைப் பாகுபாடு ஏட்டுப் பிரதிகளில் காணப் பெறவில்லை. இவை பதிப்பாசிரியர்களால் ஊகித்துக் கொடுக்கப் பெற்றனவே. அகப் பொருட் பாடல்களின் பொருள் விளக்கத்திற்கு இத் திணை விளக்கம் இன்றியமையாதது என்னும் கருத்தாலும், அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகியவற்றில் திணைப் பாகுபாடு பழமையாகவே உள்ளமையாலும், இந் நூலுக்கும் திணைப் பாகுபாடு பாடல்களின் தலைப்பில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பாடல்களின் அடியில் கொடுக்கப் பெற்றுள்ள கருத்துகள் பழமையானவை. அவை இந் நூலைத் தொகுத்தவராலேனும் பிற்காலத்தவராலேனும் அமைக்கப்பெற்றிருத்தல் வேண்டும்.


கடவுள் வாழ்த்து



'மா நிலம் சேவடி ஆக, தூ நீர்
வளை நரல் பௌவம் உடுக்கை ஆக,
விசும்பு மெய் ஆக, திசை கை ஆக,
பசுங் கதிர் மதியமொடு சுடர் கண் ஆக,
இயன்ற எல்லாம் பயின்று, அகத்து அடக்கிய
வேத முதல்வன்' - என்ப-
'தீது அற விளங்கிய திகிரியோனே.'



பாரதம் பாடிய பெருந்தேவனார்.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88963
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 03, 2023 12:15 am

138. நெய்தல்



உவர் விளை உப்பின் குன்று போல்குப்பை
மலை உய்த்துப் பகரும், நிலையா வாழ்க்கை,
கணம் கொள் உமணர் உயங்குவயின் ஒழித்த
பண் அழி பழம் பார் வெண் குருகு ஈனும்
தண்ணம் துறைவன், முன் நாள், நம்மொடு 5
பாசடைக் கலித்த கணைக் கால் நெய்தல்
பூவுடன் நெறிதரு தொடலை தைஇ,
கண் அறிவுடைமை அல்லது, நுண் வினை
இழை அணி அல்குல் விழவு ஆடு மகளிர்
முழங்கு திரை இன் சீர் தூங்கும் 10
அழுங்கல் மூதூர் அறிந்தன்றோ இன்றே.



உவர் நிலத்து விளைகின்ற குன்றுபோலும் உப்பின் குவியலை மலைநாட்டகத்தே கொண்டுபோய் விலைகூறி விற்கின்ற; ஓரிடத்திலும் நிலைத்தலில்லாத வாழ்வினையுடைய கூட்டங்கொண்ட உப்பு வாணிகர்; தங்கள் பண்டி முறிந்த விடத்திலே போகட்டொழிந்த இயல்பு அழிந்த பழைய பாரின்கண் வெளிய நாரை தன் சினையை ஈனாநிற்கும்; தண்ணிய கடலினது துறையையுடைய தலைமகன்; முன்னை நாளிலே பசிய இலையிடைநின்றும் வெளியில் வந்த திரண்ட தண்டினையுடைய நெய்தன் மலருடன்; நெறிக்கின்ற இலையை இடையிடையிட்டுத் தொடுத்த மாலையை நினக்குச்சூட்ட; அதனைக் கண்ணால் அறியக் கிடந்த தொன்றன்றி; நுண்ணிய கம்மத் தொழிலான் ஆக்கிய கலனையணிந்த அல்குலையுடைய விழாக் களத்துத் துணங்கையாடு மகளிரினுடைய; இனிய தாள அறுதி முழங்கும் கடல் ஓசை போலே பரவா நிற்கும்; ஒலியையுடைய இவ்வூர் பிறிது ஒன்றனையும் அறிந்ததில்லை; அங்ஙனமாக நீ ஆற்றாது வருந்துகின்ற தென்னையோ?

'அலர் ஆயிற்று' என ஆற்றாளாய தலைமகட்குத் தலைவன் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது. - அம்மூவனார்




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88963
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 03, 2023 12:16 am

139. முல்லை



உலகிற்கு ஆணியாகப் பலர் தொழ,
பல வயின் நிலைஇய குன்றின் கோடுதோறு
ஏயினை, உரைஇயரோ!- பெருங் கலி எழிலி!
படுமலை நின்ற நல் யாழ் வடி நரம்பு
எழீஇயன்ன உறையினை! முழவின் 5
மண் ஆர் கண்ணின் இம்மென இமிரும்-
வணர்ந்து ஒலி கூந்தல் மாஅயோளொடு
புணர்ந்து இனிது நுகர்ந்த சாரல் நல் ஊர்,
விரவு மலர் உதிர வீசி-
இரவுப் பெயல் பொழிந்த உதவியோயே! 10



பெரிய ஓசையையுடைய மேகமே!; மத்தளத்தின் மார்ச்சனை வைத்த கண்போல இம்மென முழங்குகின்ற இடிகளுடனே; கடைகுழன்று தாழ்ந்த கூந்தலையுடைய மாமைநிறத்தையுடைய காதலியுடனே முயங்கி அவளது நலனை இனிதாக நுகர்ந்து யான் உறைகின்ற சாரலிலுள்ள நல்ல ஊரின்கண்ணே; கலந்த மலர்கள் உதிரும்படி மோதி இரவில் மழை பொழிந்த உதவியையுடையாய்; நீ நிலைபெறுதலையுடைய நல்ல யாழின் முறுக்கிய நரம்பினின்று 'படுமலை' என்னும் பண்ணினை எழுப்பினாற் போன்ற ஒலியொடு பெய்யும் மழையினை உடையையாகி; இவ்வுலகத்துக்கோர் ஆதாரமாக யாவருந் தொழுமாறு ஆங்காங்குள்ள நிலைநின்ற பலவாகிய குன்றின் கொடுமுடிகள் தோறும்; பொருந்தி உலாவுவாயாக;

தலைவன் வினைமுற்றி வந்து பள்ளியிடத்தானாக, பெய்த மழையை வாழ்த்தியது. - பெருங்கௌசிகனார்



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88963
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 03, 2023 12:16 am

140. குறிஞ்சி



கொண்டல் மா மழை குடக்கு ஏர்பு குழைத்த
சிறு கோல் இணர பெருந் தண் சாந்தம்
வகை சேர் ஐம்பால் தகை பெற வாரி,
புலர்விடத்து உதிர்த்த துகள் படு கூழைப்
பெருங் கண் ஆயம் உவப்ப, தந்தை 5
நெடுந் தேர் வழங்கும் நிலவு மணல் முற்றத்து,
பந்தொடு பெயரும் பரிவிலாட்டி
அருளினும், அருளாள் ஆயினும், பெரிது அழிந்து
பின்னிலை முனியல்மா நெஞ்சே!- என்னதூஉம்
அருந் துயர் அவலம் தீர்க்கும் 10
மருந்து பிறிது இல்லை, யான் உற்ற நோய்க்கே.



எனது பெருமையுற்ற நெஞ்சமே! நீரை முகந்து கொள்ளுதலையுடைய கரிய மேகம் மேல்பாலுள்ள மலையிலே எழுந்து மழை பெய்து தழையச் செய்த; சிறிய கிளைகளிலே பூங்கொத்துக்களையுடைய பெரிய குளிர்ச்சி பொருந்திய சந்தனமரத்தின் குறையோடு; பலவாய பொருள்களையும் சேர்த்து அமைக்கப்பெற்ற சாந்தம்பூசிய கூந்தலை அழகு பெற வாரி; அச்சாந்தம் காய்ந்தவழி உதிர்க்கப்பட்ட துகள் பொருந்திய ஐவகையாக வகுக்கப்பட்ட கூந்தலையும பெரிய கண்ணையுமுடைய தோழியர் மகிழுமாறு; தன் தந்தையின் நெடிய தேர் இயங்குகின்ற நிலவு போன்ற வெளிய மணல் பரவிய முன்றிலின்கண்; விளையாடும் வண்ணம் பந்தோடு செல்லுகின்ற நம்பால் அன்பில்லாத இளமகள்; நம்மை அருள் செய்தாலும் அங்ஙனம் அருள்செய்யாளாய் அகன்று போனாலும்; நீ பெரிதும் மனமழிந்து இரந்து வழிபட்டு நிற்றலை வெறாதே கொள்; யான் அடைந்துடைய காமநோயொடு கலந்த துன்பமாகிய அவலத்தை ஒழிக்குமருந்தாவாள் அந்த அன்பில்லாத இளமகள் ஒருத்தியேயன்றி வேறொன்று சிறிதளவேனும மருந்தாகும் தன்மையதில்லைகாண்!

குறை மறுக்கப்பட்ட தலைவன் தன் நெஞ்சினை நெருங்கியது. - பூதங்கண்ணனார்



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88963
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 03, 2023 12:17 am

141. பாலை



இருஞ் சேறு ஆடிய கொடுங் கவுள், கய வாய்,
மாரி யானையின் மருங்குல் தீண்டி,
பொரி அரை ஞெமிர்ந்த புழற் காய்க் கொன்றை,
நீடிய சடையோடு ஆடா மேனிக்
குன்று உறை தவசியர் போல, பல உடன் 5
என்றூழ் நீள் இடைப் பொற்பத் தோன்றும்
அருஞ் சுரம் எளியமன், நினக்கே; பருந்து பட,
பாண்டிலொடு பொருத பல் பிணர்த் தடக் கை
ஏந்து கோட்டு யானை இசை வெங் கிள்ளி
வம்பு அணி உயர் கொடி அம்பர் சூழ்ந்த 10
அரிசில் அம் தண் அறல் அன்ன, இவள்
விரி ஒலி கூந்தல் விட்டு அமைகலனே.



நெஞ்சமே! பெரிய செவ்விய மத்தகத்தையுடைய வளைந்த கவுளையும் அகன்ற வாயையுமுடைய கரிய மேகம் போன்ற யானையின்; விலா வுரிஞ்சுதலானே பொரிந்துள்ள அடிபரந்த உள்ளே துளைபொருந்திய காய்களையுடைய கொன்றை மரங்கள்; குன்றின்கண்ணே யுறைகின்ற நீண்ட சடையையும் அசையாத மெய்யையுமுடைய தவஞ்செய்பவர் போலே பலவும் வெயில் நிலைபெற்ற இடங்களில் அழகுபெறத் தோன்றாநிற்கும்; செல்லுதற்கரிய சுரம் நினக்கு மிக எளிய ஆகும் ஆதலின் நீயே சென்றுகாண்; கொல்லும் பிணங்களிலே பருந்து விழுந்து அலைக்குமாறு பகைவருடைய தேர்ப்படையோடு போர் செய்து வென்ற பலவாய சருச்சரையுடைய நீண்ட கையையும் தலையேந்திய கோட்டினையுமுடைய யானைப்படையையுடைய புகழ்விரும்பிய கிள்ளி வயளவனது; புதுவதாக அலங்கரித்த உயர்ந்த கொடி கட்டிய அம்பர் நகரைச் சூழ்ந்த அரிசிலாற்றின் தௌ¤ந்த கருமணல் போன்ற; இவளுடைய விரிந்த தழைந்த கூந்தலின்கண்ணே துயிலுவதனைக் கைவிட்டுச் சிறிது பொழுதேனும் அமைகுவேன் அல்லேன்;

பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைவன் சொல்லிச் செலவு அழுங்கியது. - சல்லியங்குமரனார்




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88963
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 03, 2023 12:17 am

142. முல்லை



வான் இகுபு சொரிந்த வயங்கு பெயற்கடை நாள்,
பாணி கொண்ட பல் கால் மெல் உறி
ஞெலி கோல் கலப் பை அதளொடு சுருக்கி,
பறிப் புறத்து இட்ட பால் நொடை இடையன்
நுண் பல் துவலை ஒரு திறம் நனைப்ப, 5
தண்டு கால் வைத்த ஒடுங்கு நிலை மடி விளி
சிறு தலைத் தொழுதி ஏமார்த்து அல்கும்
புறவினதுவே- பொய்யா யாணர்,
அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்,
முல்லை சான்ற கற்பின், 10
மெல் இயற் குறுமகள் உறைவின், ஊரே.



இராப்பொழுதாயிருப்பினும் வந்த விருந்தைக் கண்டு மகிழா நிற்கும் யான் கூறிய சொற்பிழையாதபடி இல்லிலிருந்து நல்லறஞ் செய்யும் கற்பினையும்; மென்மையாகிய சாயலையும் உடைய இளைய மாறாத நங் காதலி உறைகின்ற பொய்யாத புது வருவாயினையுடைய ஊரானது; மழை காலிறங்கிப் பொழிந்த விளங்கிய பெயலின்¢ இறுதி நாளிலே; கையிற் கொண்ட பலவாகிய காலிட்டுப் பின்னிய மெல்லிய உறியுடனே தீக்கடைகோல் முதலாய கருவிகளை இட்டு வைத்த தோற்பையை ஒருசேரச் சுருக்கிக்கட்டி; பனையோலைப் பாயோடு முதுகிற் கட்டியிட்ட பால் விலைகூறி ஏகும் இடையன்; நுண்ணிய பலவாய மழைத்துளி தன்னுடம்பிலொருபுறம் நனைத்தலைச் செய்யக் கையின் சோலையின்றி அதன்மேல் ஒருகாலை வைத்த ஒடுங்கிய நிலையோடு நின்று வாயைக் குவித்து ஊதும் 'வீளை' எனப்படுகிற அழைத்தலாகிய குறிப்பொலியை அறிந்து; சிறிய தலையையுடைய யாட்டின் தொகுதி பிறபுலம் புகுதாது மயங்கி அவ்வண்ணமே தங்காநிற்கும் ஈண்டுள்ள புறவின் கண்ணதாயிரா நின்றது; ஆதலின் நமது தேர் விரைந்து செல்லின் அவளை இன்னே மகிழ்ந்து முயங்கலாகும்;

வினை முற்றி மீளும்தலைமகன், தேர்ப்பாகற்குச் சொல்லியது. - இடைக்காடனார்




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88963
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 03, 2023 12:18 am

143. பாலை



ஐதே கம்ம யானே; ஒய்யென,
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து,
ஓரை ஆயமும் நொச்சியும் காண்தொறும்,
நீர் வார் கண்ணேன் கலுழும் என்னினும்,
கிள்ளையும், 'கிளை' எனக் கூஉம்; இளையோள் 5
வழு இலள் அம்ம, தானே; குழீஇ,
அம்பல் மூதூர் அலர் வாய்ப் பெண்டிர்
இன்னா இன் உரை கேட்ட சில் நாள்
அறியேன் போல உயிரேன்;
'நறிய நாறும் நின் கதுப்பு' என்றேனே. 10



உழையர் கொணர்ந்த மணல் பரப்பிய அழகிய மாளிகையின் முன்றிலின்கண்; ஓரையாடுகின்ற தோழியர் கூட்டத்தையும் ஆடிடமாகிய நொச்சி வேலியையும் காணுந்தோறும்; யான் விரைய நீர் வடிகின்ற கண்ணையுடையேனாகி அழுகின்ற என்னினுங்காட்டில்; அவள் வளர்த்த கிளியும் "அன்னாய்! துயிலுணர்தி" எனக் கூவா நிற்கும்; இவை நிற்ப என் இளம் புதல்விதானும் குற்றமே உடையள் அல்லள்; அவள் கொண்ட காமம் மிகவியப்புடையதாய் இராநின்றது; அம்பல் மிக்க இப் பழைய ஊரின்கணுள்ள அலர்தூற்றும் வாயையுடைய ஏதிலாட்டியர் பலரும் ஒருசேரக்கூடிக் கூறுகின்ற கொடிய இனிய உரைகேட்ட சில நாளளவும்; யாதொன்றனையும் அறியாதேன் போல மூச்சுவிட்டேனுமில்லேன்; பின்னும் மிக அலர் எழுதலாலே ஒரோவொருகால் என்மகளை நோக்கி நின் கூந்தல் பண்டைமணமின்றி வேறு புதுமணம் கமழாநின்றதே அஃதென்ன காரணமென்று வினாவினேன்; தகுதியான விடை கூறினாளுமல்லள்; முன்னரே அவளது இயல்பை அறிந்து வைத்தும் பாதுகாவாமையின் யானே வழுவுடையேன் ஆயினேன்மன்;

மனை மருட்சி. - கண்ணகாரன் கொற்றனார்



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88963
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 03, 2023 12:18 am

144. குறிஞ்சி



பெருங் களிறு உழுவை தாக்கலின், இரும் பிடி
கருவி மா மழையின் அரவம் அஞ்சுபு,
போது ஏர் உண் கண் கலுழவும், ஏதில்
பேதை நெஞ்சம் கவலை கவற்ற
ஈங்கு ஆகின்றால்- தோழி!- பகுவாய்ப் 5
பிணவுப் புலி வழங்கும் அணங்கு அருங் கவலை,
அவிர் அறல் ஒழுகும் விரை செலல் கான் யாற்றுக்
கரை அருங் குட்டம் தமியர் நீந்தி,
விரவு மலர் பொறித்த தோளர்
இரவின் வருதல் அறியாதேற்கே. 10



தோழீ! பிளந்த வாயையுடைய பெண் புலி இரைதேடி இயங்குகின்ற துன்பம் நீங்குதற்கரிய கவர்த்த வழியில்; விளங்கிய விரைந்த செலவையுடைய நீரோடுகின்ற கரை காண்பதரிதாகிய கான்யாற்றில் ஆழமுடைய புனலின்கண்ணே; தமியராய் நீந்தி அந் நீரிலே கலந்த மலர்கள் பொருந்திய தோளோடு; நங்காதலர் இரவில் வருதலை எண்ணி அறியாமையுடையேனாகிய எனக்கு; அந் நெறியின்கண்ணே புலி பெரிய களிற்றியானையை மோதிக் கொல்லுதலால் அதனை அறிந்த கரிய பிடியானை மின்னல் முதலாகிய தொகுதியையுடைய கரியமேகம் முழங்குவது போன்று பிளிற்றுகின்ற ஓசையைக் கேட்டு நடுங்கி; நீலமலர் போன்ற மையுண்ட கண்கள் நீரை வடியவிடவும் யாதுமில்லாத பேதைமையுடைய என்னெஞ்சம் கவலையால் வருந்தவும்; என்னிலைமை இவ்வண்ணமா யிராநின்றது காண்!

ஆற்றது ஏதத்திற்குக்கவன்று சிறைப்புறமாகத் தலைவி சொல்லியது. - கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88963
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 03, 2023 12:19 am

145. நெய்தல்



இருங் கழி பொருத ஈர வெண் மணல்
மாக் கொடி அடும்பின் மா இதழ் அலரி
கூந்தல் மகளிர் கோதைக் கூட்டும்
காமர் கொண்கன், நாம் வெங் கேண்மை
ஐது ஏய்ந்தில்லா ஊங்கும், நம்மொடு 5
புணர்ந்தனன் போல உணரக் கூறி,
'தான் யாங்கு?' என்னும் அறன் இல் அன்னை;
யான் எழில் அறிதலும் உரியள் நீயும்; நம்
பராரைப் புன்னைச் சேரி, மெல்ல,
நள்ளென் கங்குலும், வருமரோ- 10
அம்ம வாழி!- தோழி அவர் தேர் மணிக் குரலே!



தோழீ! நெடுங்காலம் வாழ்வாயாக! யான் கூறுகின்றதனைக்கேள்!; கரிய கழியின் கண்ணுள்ள நீர் அலையினால் மோதுதலானே ஈரமாகிய வெளிய மணலிலே படர்ந்த வலிய கொடி அடும்பின் பெரிய இதழையுடைய மலர்; மகளிரின் கூந்தலிலிடுகின்ற மாலைக்குக் கூட்டாநிற்கும்; கண்டோர் விரும்புந் தன்மையுடைய கடல் நாடனாகிய நங்காதலனுடைய; அச்சந்தரும் வெய்ய நட்பானது; பண்டு பொருந்தியிருந்து இப்பொழுது யாதொரு தொடர்பும் நம்பால் இல்லாதிருந்தும்; நம் அறன் இல்லாத அன்னையானவள்; நம்மொடு அவன் புணர்ந்தனன் போல வெளிப்படையாகச் சொல்லி; அவன் தான் இப்பொழுது யாங்குளன் என்று கூறாநிற்கும்; அன்றி நீயும் நின் எழுச்சி முதலியன என்னால் அறிதற்கும் உரியள்; நம்முடைய பருத்த அடியையுடைய புன்னை மரங்களையுடைய சேரியின்கண்; இரவில் நடுயாமத்திடையிருளிலும் அவர் தேரிலுள்ள மணியினோசை மெல்லவந்தொலியாநிற்கும்; இதற்கு யான் யாது செய்ய வல்லேன்? யாதாகி முடியுமோ;

இரவுக்குறி வந்து தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி வரைவுகடாயது. - நம்பி குட்டுவன்





சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88963
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 03, 2023 12:19 am

146. குறிஞ்சி



வில்லாப் பூவின் கண்ணி சூடி,
'நல் ஏமுறுவல்' என, பல் ஊர் திரிதரு
நெடு மாப் பெண்ணை மடல் மானோயே!-
கடன் அறி மன்னர் குடை நிழற் போலப்
பெருந் தண்ணென்ற மர நிழல் சிறிது இழிந்து, 5
இருந்தனை சென்மோ- 'வழங்குக சுடர்!' என,
அருளிக் கூடும் ஆர்வ மாக்கள்
நல்லேம் என்னும் கிளவி வல்லோன்
எழுதி அன்ன காண் தகு வனப்பின்
ஐயள், மாயோள், அணங்கிய 10
மையல் நெஞ்சம் என் மொழிக் கொளினே!



அன்போடு நெருங்கிய மகிழ்ச்சியையுடைய மாந்தர் நெருங்கிக்கூறு மீக்கூற்றால் யாம் நல்லேம் என்னும் புகழ்ச்சொல் அடையப்பெற்ற சித்திரந்தீட்டுவதில் வல்ல ஓவியன்; எழுதிவைத்தாலொத்த காட்சி தக்க அழகினையுடைய மெல்லியளாகிய மாமை நிறத்தையுடையவளால் வருத்தம் ஏறட்டுக்கொண்ட; மயக்கத்தையுடைய நெஞ்சமே!; விலைக்கு விற்றற்கியலாத பூளைமலரையும் உழிஞைப்பூவையும் எருக்கம்பூவையும் ஆவிரம்பூவோடு கலந்து கட்டிய மாலையைச் சூடி; யான் நல்ல பித்தேறினேன் என்னும் படி பல ஊர்களிலுஞ் சென்று திரிகின்ற; நெடிய கரிய பனைமடலாலே கட்டிய குதிரையையுடையாய்; நீ என் வார்த்தையை ஏற்றுக்கொள்ள விரும்புவையாயின்; ஞாயிறுதான் வெயில் வீசி ஒடுங்குவதாக என்று அவ்வெயிலின் வெம்மை அடங்குமளவும்; முறை தெரிந்து உலகைப் பாதுகாக்கும் அரசரின் குடைநிழல் குளிர்ச்சியுறுமாறுபோலே பெரிய தண்ணென்ற மரத்தின் நிழலின்கண்ணே; குதிரையினின்றிழிந்து சிறிது பொழுது தங்கியிருந்து பின்பு செல்வாயாக!

பின்னின்ற தலைவன்முன்னிலைப் புறமொழியாக, தோழி கேட்பச்சொல்லியது. - கந்தரத்தனார்





சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88963
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 03, 2023 12:20 am

147. குறிஞ்சி



யாங்கு ஆகுவமோ- 'அணி நுதற் குறுமகள்!
தேம் படு சாரற் சிறு தினைப் பெருங் குரல்
செவ் வாய்ப் பைங் கிளி கவர, நீ மற்று
எவ் வாய்ச் சென்றனை, அவண்?' எனக் கூறி,
அன்னை ஆனாள் கழற, முன் நின்று, 5
'அருவி ஆர்க்கும் பெரு வரை நாடனை
அறியலும் அறியேன்; காண்டலும் இலனே;
வெதிர் புனை தட்டையேன் மலர் பூக் கொய்து,
சுனை பாய்ந்து ஆடிற்றும் இலன்' என நினைவிலை
பொய்யல், அந்தோ! வாய்த்தனை? அது கேட்டு, 10
தலை இறைஞ்சினளே அன்னை;
செலவு ஒழிந்தனையால், அளியை நீ, புனத்தே?



தோழீ! அன்னையானவள் என்னை நோக்கி "அழகிய நெற்றியையுடைய இளமகளே! இடமகன்ற மலைச் சாரலின்கணுள்ள சிறிய தினையின் பெரிய கதிரை; சிவந்த வாயையுடைய பசிய கிளி கொய்துகொண்டு போகின்ற அளவும் நீ அதனைக் காவாது ஆங்குநின்று எவ்விடத்திற்குச் சென்றனை"? என்று கூறி; அமையாளாகிப் பலபடியாக வினாவுதலும் நீ அச்சமுற்று, அவள்முன் நின்று 'மூங்கிற் பிளவாற் செய்த கிளிகடி கருவியாகிய தட்டையையுடைய யான் அருவி யொலிக்கும் பெரிய மலைநாடனைக் காதாலே கேட்டறிதலுஞ் செய்திலேன்; கண்ணாலே காண்டலுஞ் செய்திலேன்; மலர்ந்த பூக்களைப் பறித்து அவனோடு சுனையிலே பாய்ந்து ஆடியதுஞ் செய்திலேன் என்று; நினைவில்லாது பொய்யுஞ் சொல்லாயாய் ஐயோ! உண்மையை யுரைத்துவிட்டனையே!; அதனைக் கேட்டு அன்னை சினத்தோடு வெள்கித் தலையிறைஞ்சி நின்றனள் கண்டாய்!; ஆதலின் நீ தினைப்புனத்தின் கண்ணே செல்லுதலைப் போக்கிக்கொண்டனை மன்!; இவ்வளவு அறியாமையையுடைய நீ இனி எங்ஙனம் குடிமை பூண்டொழுகவல்லாய் என்று எவரும் இரங்கத் தக்கனையாயினை; அவளது முனிவினுள்ளே படிதலால் இனி யாம் எவ்வண்ணம் உய்யவல்லேமோ?

சிறைப்புறமாகத்தோழி சொல்லியது. - கொள்ளம்பக்கனார்




Page 13 of 19 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக