by சிவா Today at 3:13 am
» இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் திரு மாணிக்கம் நடேசன்
by சிவா Today at 2:41 am
» புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள்
by சிவா Today at 2:14 am
» IPL கிரிக்கெட் போட்டிகள் --தொடர். பதிவு.
by சிவா Today at 1:33 am
» எழுந்து விடு மனிதா
by சிவா Today at 1:18 am
» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 9:35 pm
» அக்னிவீர் திட்டத்திற்கு அலைமோதும் இளைஞர்கள்.
by சிவா Yesterday at 9:26 pm
» நன்றாகத் தூங்குவது எப்படி? அதற்கு என்ன செய்ய வேண்டும்?
by சிவா Yesterday at 8:33 pm
» விரதம் இருப்பதால் ஏற்படும் மருத்துவப் பயன்கள்
by சிவா Yesterday at 8:13 pm
» விடுதலை - ரசிகர்கள் விமர்சனம்: 'படம் கிடையாது, அனுபவம்'
by சிவா Yesterday at 8:09 pm
» தங்க நகைகளில் கட்டாயம் HUID குறியீடு
by சிவா Yesterday at 8:06 pm
» முடியின் pH சமநிலைக்கு கற்றாழை எண்ணெய்
by சிவா Yesterday at 8:02 pm
» கோயிலில் தோண்ட தோண்ட.. 2000 செம்மறி ஆடு தலைகள்
by சிவா Yesterday at 7:58 pm
» இரும்புச்சத்து குறைபாடு இருந்தால் என்ன செய்வது?
by சிவா Yesterday at 3:29 pm
» ஆசியாவின் பெரிய தேர்: பக்தர்கள் வெள்ளத்தில் திருவாரூர் ஆழித் தேரோட்டம்
by சிவா Yesterday at 3:04 pm
» நாளும் ஒரு நற்சிந்தனை நூலாசிரியர் : நீதியரசர் கற்பகவிநாயகம் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:03 pm
» மன உறுதியை அதிகரிப்பது எப்படி?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:09 pm
» பெருங்காயத்தின் பயன்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:05 pm
» கருத்துப்படம் 01/04/2023
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (19)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am
» சாவர்க்கர் எங்களுக்கு கடவுள் போன்றவர்
by சிவா Yesterday at 3:29 am
» தமிழகத்தில் மதமாற்றம் அதிகரிப்பு
by சிவா Yesterday at 3:19 am
» தழும்புகளை நீக்கும் கோகோ பட்டர்
by சிவா Fri Mar 31, 2023 9:44 pm
» Deja vu - தேஜாவு - அமானுஷ்யமா, மறுபிறவியா, மற்றொரு பிரபஞ்சத்தின் வாசலா?
by சிவா Fri Mar 31, 2023 9:35 pm
» 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
by சிவா Fri Mar 31, 2023 9:00 pm
» பெருங்குடல் புற்றுநோய் என்றால் என்ன? ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவது எப்படி?
by சிவா Fri Mar 31, 2023 8:54 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri Mar 31, 2023 8:28 pm
» மலம் கழிப்பதை அடக்கினால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?
by சிவா Fri Mar 31, 2023 7:05 pm
» IPL - ஐபிஎல் பற்றிய தகவல்களின் தொகுப்பு
by T.N.Balasubramanian Fri Mar 31, 2023 5:59 pm
» IPL Live Streaming செய்யும் இணையதளம்
by சிவா Fri Mar 31, 2023 4:58 pm
» காசி வாழ தேசம் வாழும்
by சிவா Fri Mar 31, 2023 4:46 pm
» வேப்பம் பூ மருத்துவ பயன்கள் மற்றும் சமையல் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Fri Mar 31, 2023 3:10 pm
» [கட்டுரை] யாருக்காக ???
by rajuselvam Fri Mar 31, 2023 9:30 am
» வியர்க்குரு அல்லது வேர்க்குரு - இயற்கை வைத்தியங்கள்
by சிவா Fri Mar 31, 2023 12:47 am
» ஐபிஎல் 2023: 52 நாட்கள், 10 அணிகள், 74 போட்டிகள்
by சிவா Fri Mar 31, 2023 12:23 am
» கோடை... செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை...
by சிவா Thu Mar 30, 2023 10:31 pm
» வெயில்கால தட்டம்மை நோயைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
by சிவா Thu Mar 30, 2023 10:15 pm
» பழைய சோறு... இது உணவல்ல, மருந்து
by சிவா Thu Mar 30, 2023 10:08 pm
» இட்டிலி மேல் இனிதான கவிதை
by சிவா Thu Mar 30, 2023 9:19 pm
» செல்போன் பயன்படுத்தும் மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை
by சிவா Thu Mar 30, 2023 9:14 pm
» மோடியைத் தோற்கடிக்க இஸ்லாமிய வாக்காளர்களை அழைத்து வாருங்கள்
by T.N.Balasubramanian Thu Mar 30, 2023 5:52 pm
» இன்று உலக இட்லி தினம்
by T.N.Balasubramanian Thu Mar 30, 2023 5:10 pm
» நாவல் வேண்டும்
by Riha Thu Mar 30, 2023 4:37 pm
» ராமநாமம் ஒலிக்கட்டும், தேசம் செழிக்கட்டும்...
by சிவா Thu Mar 30, 2023 2:45 pm
» நோன்பு என்றால் என்ன? இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றாக அது எப்படி மாறியது?
by Dr.S.Soundarapandian Thu Mar 30, 2023 12:20 pm
» ஸ்ரீ ராம நவமித் திருநாள்
by சிவா Thu Mar 30, 2023 6:55 am
» கோடை கால பானங்கள்
by சிவா Thu Mar 30, 2023 12:16 am
» கேந்திர வித்யாலயா பள்ளிகளில் அட்மிஷன் பெறுவது எப்படி?
by சிவா Thu Mar 30, 2023 12:13 am
» வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க!
by சிவா Wed Mar 29, 2023 10:40 pm
» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Wed Mar 29, 2023 9:55 pm
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
தமிழ்வேங்கை |
| |||
mohamed nizamudeen |
| |||
eraeravi |
| |||
rajuselvam |
| |||
சரவிபி ரோசிசந்திரா |
| |||
eswari m |
| |||
ஜாஹீதாபானு |
|
சிவா |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
eraeravi |
| |||
சரவிபி ரோசிசந்திரா |
| |||
T.N.Balasubramanian |
|
[இலக்கியம்] நற்றிணை
Page 2 of 19 • 1, 2, 3 ... 10 ... 19
முகவுரை
தமிழிலுள்ள நூல்களுள் காலத்தால் மிக முந்தியவை சங்க இலக்கியங்கள். கடைச் சங்க காலத்திலும் அதற்கு முன்பும் வாழ்ந்த புலவர் பெருமக்களின் பாடல்களில் சிறந்தன பலவும் கடைச் சங்க காலத்தின் இறுதியில் ஒருங்கு தொகுக்கப்பட்டன. இவை தொகை நூல்கள் எனப்படுபவை. பாவகையாலும், பொருள் பட்டு, எட்டுத் தொகுதிகளாக அமைக்கப்பட்டன. இவற்றைப் பண்டைய உரையாசிரியர்கள் 'தொகை' என்றும், 'எண் பெருந்தொகை' என்றும், குறிப்பிட்டுள்ளனர்.
[You must be registered and logged in to see this link.] நூல்களாவன; [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.] என்பனவாம். இவ் வரிசை,
நற்றிணை, நல்ல குறுந்தொகை, ஐங்குறுநூறு,
ஒத்த பதிற்றுப்பத்து, ஓங்கு பரிபாடல்,
கற்றறிந்தார் ஏத்தும் கலியே, அகம், புறம், என்று
இத் திறத்த எட்டுத் தொகை.
என்ற பாடலில் காணும் அடைவுமுறையாகும். இம் முறையில் நூல்கள் தொகுக்கப்படவில்லை என்றும், தொகை நூல்களுள் குறுந்தொகை முதலாவதாகவும், ஏனைய நூல்கள் அதன் பின்னராகவும், தொகுக்கப்பட்டிருக்கலாம் என்றும், ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
ஒட்டுத் தொகையுள் ஒன்றாகிய நற்றிணை ஒன்பது முதல் பன்னிரண்டு அடி வரையிலுள்ள நானூறு அகவற் பாக்களின் தொகுதி. குறுந்தொகை, நெடுந்தொகை, இரண்டிற்கும் இடைப் பட்டு, அளவான அடிகளை உடைமையினால், இது 'நற்றிணை' என வழங்கப்பட்டது போலும்.
'நற்றிணை நானூறு' என்றும் இது வழங்கப்பெறும். 'இதனைத் தொகுப்பித்தான் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி' என்பது பழங் குறிப்பு. தொகுத்தாரது பெயர் தெரியவில்லை. நற்றிணைப் பாடல்களில் 234ஆம் பாடல் முற்றும் கிடைக்கவில்லை. 385ஆம் பாடலின் பிற்பகுதியும் மறைந்து போயிற்று. 56 பாடல்களின் ஆசிரியர் பெயர் காணப்பெறவில்லை. ஏனைய பாடல்களைப் பாடியவர்களின் தொகை 192.
நற்றிணைச் செய்யுட்களுக்குக் குறிஞ்சி, முல்லை, முதலிய ஐந்திணைப் பாகுபாடு ஏட்டுப் பிரதிகளில் காணப் பெறவில்லை. இவை பதிப்பாசிரியர்களால் ஊகித்துக் கொடுக்கப் பெற்றனவே. அகப் பொருட் பாடல்களின் பொருள் விளக்கத்திற்கு இத் திணை விளக்கம் இன்றியமையாதது என்னும் கருத்தாலும், அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகியவற்றில் திணைப் பாகுபாடு பழமையாகவே உள்ளமையாலும், இந் நூலுக்கும் திணைப் பாகுபாடு பாடல்களின் தலைப்பில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பாடல்களின் அடியில் கொடுக்கப் பெற்றுள்ள கருத்துகள் பழமையானவை. அவை இந் நூலைத் தொகுத்தவராலேனும் பிற்காலத்தவராலேனும் அமைக்கப்பெற்றிருத்தல் வேண்டும்.
கடவுள் வாழ்த்து
'மா நிலம் சேவடி ஆக, தூ நீர்
வளை நரல் பௌவம் உடுக்கை ஆக,
விசும்பு மெய் ஆக, திசை கை ஆக,
பசுங் கதிர் மதியமொடு சுடர் கண் ஆக,
இயன்ற எல்லாம் பயின்று, அகத்து அடக்கிய
வேத முதல்வன்' - என்ப-
'தீது அற விளங்கிய திகிரியோனே.'
பாரதம் பாடிய பெருந்தேவனார்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
33. பாலை
'படு சுடர் அடைந்த பகு வாய் நெடு வரை,
முரம்பு சேர் சிறுகுடி, பரந்த மாலை,
புலம்பு கூட்டுண்ணும் புல்லென் மன்றத்து,
கல்லுடைப் படுவில் கலுழி தந்து,
நிறை பெயல் அறியாக் குறைத்து ஊண் அல்லில், 5
துவர்செய் ஆடைச் செந் தொடை மறவர்
அதர் பார்த்து அல்கும் அஞ்சுவரு நெறியிடை,
இறப்ப எண்ணுவர் அவர் எனின், மறுத்தல்
வல்லுவம்கொல்லோ, மெல்லியல்! நாம்?' என
விம்முறு கிளவியள் என் முகம் நோக்கி, 10
நல் அக வன முலைக் கரை சேர்பு
மல்கு புனல் பரந்த மலர் ஏர் கண்ணே.
எம்பெருமானே ! தலைமகள் என்னை நோக்கி மெல்லியால் ! மேலைத்திசையிற் செல்லுகின்ற ஆதித்த மண்டிலம் மறைந் தொழிதலாலே பரவிய மாலைப் பொழுதில்; பிளவுபட்ட நீண்ட மலைச்சார்பில் வன்னிலத்தமைந்த சிறு குடியின்கண்; அச்சமிக்கிருக்கும் பொலிவழிந்த பொதியிலில்; கல்லையுடைய குழிகளிலுள்ள கலங்கனீரைக் கொணர்ந்து கொடுத்து; நிறைந்த மழையைக் கண்டறியாத குறைந்த உணவையுடைய இராப் பொழுதிலே; துவர்த்த நிறத்தையுடைய ஆடையையும் செவ்விய அம்புத் தொடையையுமுடைய ஆறலைகள்வர் நெறி நோக்கியிருக்கும் அச்சம் வரும் வழியின்கண்ணே; அவர் செல்லக் கருதுவர் எனின் யாம் மறுக்கவல்லேமோ என்று; வெளியிற் போதாமே விம்மிய சொல்லையுடையளாய் என் முகத்தை நோக்கலும்; அவ்வளவில் அவளுடைய மலர் போன்ற கண்களிலிருந்து; நல்ல மார்பின்கணுள்ள அழகிய முலைமுகட்டில் விழுந்து பரக்கும்படி மல்கிய கண்ணீர்¢ பரந்தன; ஆதலின் நீ வருமளவும் எவ்வாறு ஆற்றியிருக்குந் தன்மையள்?
பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகளது குறிப்பு அறிந்த தோழி தலைமகற்குச் சொல்லியது. - இளவேட்டனார்
34. குறிஞ்சி
கடவுட் கற்சுனை அடை இறந்து அவிழ்ந்த
பறியாக் குவளை மலரொடு காந்தள்
குருதி ஒண் பூ உரு கெழக் கட்டி,
பெரு வரை அடுக்கம் பொற்பச் சூர்மகள்
அருவி இன் இயத்து ஆடும் நாடன் 5
மார்பு தர வந்த படர் மலி அரு நோய்
நின் அணங்கு அன்மை அறிந்தும், அண்ணாந்து,
கார் நறுங் கடம்பின் கண்ணி சூடி,
வேலன் வேண்ட, வெறி மனை வந்தோய்!
கடவுள் ஆயினும் ஆக, 10
மடவை மன்ற, வாழிய முருகே!
முருகவேளே ! நீ நெடுங் காலம் இம் மடமையோடு வாழ்வாயாக !; கடவுட்டன்மை பொருந்திய மலையிலுள்ள சுனையில் இலைகளை விலக்கி மேலே எழுந்து மலர்ந்த கொய்யாமல் விட்டிருந்த குவளை மலரைப் பறித்து, அவற்றோடு; குருதிபோன்ற காந்தளின் ஒள்ளிய மலர்களை வடிவு விளங்கக் கட்டிச் சூடி; பெரிய மலையின் பக்கங்களெல்லாம் பொலிவுபெற அருவியின் ஒலியை இனிய வாச்சிய முட்டுக்களாகக்கொண்டு சூரரமகள் ஆடாநிற்கும் நாட்டையுடைய தலைவனது; மார்பைப் புணர்ந்ததன் காரணமாக அம் மார்பு தருதலாலே வந்த கருதுதலிற் குறைபாடிலாத நீங்குதற்கரிய இக்காம நோயானது; நின்னால் வருத்திக் கொடுக்கப்பட்ட தன்றென்பதை நன்றாக நீ அறிந்து வைத்தும்; தலைநிமிர்ந்து கார் காலத்து மலர்கின்ற நறிய கடப்ப மாலையைச் சூடிப் படிமத்தான் வேண்டுகையாலே; வெறிக்களத்துப் பலிபெற வந்தோய் நீ கடவுட் பகுதியாருள் வைத்தெண்ணுதற் குரியையாயினுமாகுக; திண்ணமாக நீ அறியாமையுடையை காண் !
தோழி தெய்வத்துக்கு உரைப்பாளாய் வெறி விலக்கியது. - பிரமசாரி
35. நெய்தல்
பொங்கு திரை பொருத வார் மணல்அடைகரைப்
புன் கால் நாவல் பொதிப் புற இருங் கனி
கிளை செத்து மொய்த்த தும்பி, பழம் செத்துப்
பல் கால் அலவன் கொண்ட கோட்கு அசாந்து,
கொள்ளா நரம்பின் இமிரும் பூசல் 5
இரை தேர் நாரை எய்தி விடுக்கும்
துறை கெழு மாந்தை அன்ன இவள் நலம்
பண்டும் இற்றே; கண்டிசின்தெய்ய;
உழையின் போகாது அளிப்பினும், சிறிய
ஞெகிழ்ந்த கவின் நலம்கொல்லோ?- மகிழ்ந்தோர் 10
கள்களி செருக்கத்து அன்ன
காமம்கொல்?- இவள் கண் பசந்ததுவே!
பொங்கி எழுகின்ற அலைமோதிய நேரிதாகிய மணல் அடுத்த கடற்கரையின் கண்ணே உதிர்ந்த புல்லிய காம்பையுடைய நாவலின் களி பொருந்திய புறத்தினையுடைய கரிய கனியை; தம்மினமென்று கருதி மொய்த்த வண்டுகள்; அதனைக் கனியென வோர்ந்து பலவாகிய கால்களையுடைய ஞெண்டு கைக்கொண்ட கோட்பாட்டினால் அஞ்ஞெண்டை விலக்கித் தாம் வலிந்து கொள்ளப்படாதனவாய் யாழோசைபோல மிக்கு ஒலிக்கும் பெரும் பூசலை; ஆண்டு இரையைத் தேடுகின்ற நாரை வரக்கண்ட ஞெண்டு கைவிட்டகலா நிற்கும் கடற்றுறை விளங்கிய மாந்தை போன்ற இவளுடைய நலமானது; பண்டும் இத்தன்மையதேயாகும் நீ காண்பாயாக !; இவள்பானின்றும் களவுக் காலத்து விலகாமலிருந்து தலையளி செய்தாலும்; இவள் பசப்புற்றதன் காரணம் சிறிதளவு முயக்கம் கை நெகிழ்ந்ததனாற் கெட்ட அழகின் மிகுதியோ?; கள்ளுண்டார்க்குக் கள் அறூஉங் காலத்துப் பிறந்த வேறுபாடு போன்ற காம வேறுபாடோ? அவ்விரண்டுமல்லவே;
மண மனைப்பிற்றைஞான்று புக்க தோழி, 'நன்கு ஆற்றுவித்தாய்' என்ற தலைமகற்குச் சொல்லியது. - அம்மூவனார்
36. குறிஞ்சி
குறுங் கை இரும் புலிக் கோள் வல்ஏற்றை,
பூ நுதல் இரும் பிடி புலம்ப, தாக்கி,
தாழ் நீர் நனந் தலைப் பெரு களிறு அடூஉம்
கல்லக வெற்பன் சொல்லின் தேறி,
யாம் எம் நலன் இழந்தனமே; யாமத்து, 5
அலர் வாய்ப் பெண்டிர் அம்பலொடு ஒன்றி,
புரை இல் தீ மொழி பயிற்றிய உரை எடுத்து,
ஆனாக் கௌவைத்துஆக,
தான் என் இழந்தது, இவ் அழுங்கல் ஊரே?
குறிய முன்னங்காலையுடைய கொல்லவல்ல பெரிய ஆண்புலி; பொலிவுபெற்ற நெற்றியையுடைய கரிய பிடியானை புலம்புமாறு நீரற்ற அகன்ற காட்டினிடத்துப் பெரிய களிற்று யானையைத் தாக்கி¢க் கொல்லா நிற்கும் மலையிடத்தையுடைய சிலம்பன்; 'நின்னிற் பிரியேன்' என்று கூறிய பொய்ம்மொழியை மெய்யெனத் தௌ¤ந்து; யாம் எம் நலத்தை இழந்தேவிட்டேம், ஆதலின் இந்நடுயாமத்துக் கண் துயிலாதொழிந்தனம்; பழிதூற்றும் வாயையுடைய ஏதிலாட்டியராற் கூறப்படும் அம்பலொடு சேர ஒலிமிக்க இவ்வூர்; மேன்மையில்லாத தீய சொற்களைக் கூறுதற்கு வேண்டிய உரைகளை ஏறட் டெடுத்துக்கொண்டு அமையாத பழி மொழிமையுடையதாக எம்மைப்போல் எதனை இழந்தது? இந் நடுயாமத்திலும் துயின்றிலதே;
இரவுக்குறிச்சிறைப்புறமாகத் தோழி சொல்லியது. - சீத்தலைச்சாத்தனார்
37. பாலை
பிணங்கு அரில் வாடிய பழ விறல்நனந் தலை,
உணங்குஊண் ஆயத்து ஓர் ஆன் தௌ மணி
பைபய இசைக்கும் அத்தம், வை எயிற்று
இவளொடும் செலினோ நன்றே; குவளை
நீர் சூழ் மா மலர் அன்ன கண் அழ, 5
கலை ஒழி பிணையின் கலங்கி, மாறி
அன்பிலிர் அகறிர் ஆயின், என் பரம்
ஆகுவது அன்று, இவள் அவலம்- நாகத்து
அணங்குடை அருந் தலை உடலி, வலன் ஏர்பு,
ஆர்கலி நல் ஏறு திரிதரும் 10
கார் செய் மாலை வரூஉம் போழ்தே.
ஒன்றோடொன்று சிக்குண்ட சிறுதூறுகளும் பழைமையான நல்ல தோற்றமும் வாடிய அகன்ற இடத்தையுடைய; உணவின்றி வாட்டமுற்ற நிரையிலுள்ள ஓராவினது தௌ¤ந்த மணியோசை மெல்லென வந்து ஒலியாநிற்கும் அத்தத்தில்; நீயிர் பொருள் நசையாற் செல்லுகின்ற இப்பொழுது கூரிய பற்களையுடைய இவளோடுஞ் செல்வீராயின் அது மிக நல்லதொரு காரியமாகும்; அங்ஙனமின்றிக் கலைமானைப் பிரிந்த பெண் மான் போல இவள் கலக்க முற்றுக் குவளையின் நீர் நிரம்பிய கரிய மலர்போன்ற கண்களில் அழுகின்ற நீர்வடிய; மாறுபட்டு அன்பில்லாதீராய் நீயிர் இவளைப் பிரிந்து செல்லுவீராயின்; பாம்பினது வருத்துகின்ற அரிய தலை துணிந்து விழும்படி சினந்து; வலமாக எழுந்து மிக்க முழக்கத்தையுடைய நல்ல இடியேறு குமுறித் திரியாநின்ற முகில் சூழ்ந்துலாவுங் கார்ப்பருவத்து மாலைக் காலம் வரும்பொழுது இவள் அவலம் என்பரம் ஆகுவது அன்று இவள் படுகின்ற அவலம் என்னாலே தாங்கப்படுவ தொன்றன்று காண்மின்;
வரைவிடை வைத்துப்பிரிவின்கண் தோழி சொல்லியது. - பேரி சாத்தனார்
38. நெய்தல்
வேட்டம் பொய்யாது வலைவளம்சிறப்ப,
பாட்டம் பொய்யாது பரதவர் பகர,
இரும் பனந் தீம் பிழி உண்போர் மகிழும்
ஆர் கலி யாணர்த்துஆயினும், தேர் கெழு
மெல்லம் புலம்பன் பிரியின், புல்லெனப் 5
புலம்பு ஆகின்றே- தோழி! கலங்கு நீர்க்
கழி சூழ் படப்பைக் காண்டவாயில்,
ஒலி காவோலை முள் மிடை வேலி,
பெண்ணை இவரும் ஆங்கண்
வெண் மணற் படப்பை, எம் அழுங்கல் ஊரே. 10
தோழீ ! கலங்கிய நீரையுடைய கடற்கழி சூழ்ந்த தோட்டங்களையுடைய 'காண்ட வாயில்'என்னும் ஊரிலுள்ள; தழைந்த முற்றிய பனையோலையோடு முட்களைச் சேர்த்துக் கட்டப்பட்ட வேலியகத்து; பனைமரங்கள் உயர்ந்த பெரிய மணல்மேட்டினையுடைய பக்கஞ் சூழ்ந்த ஒலிமிக்க எம்மூரானது; கடலிடத்து மீன்வேட்டைமேற் சென்றார்க்கு ஆங்குத் தப்பாது பெறவேண்டி மழைபொய்யாது பெய்தலானே வலைவளம் சிறப்ப; அவ்வலை வளத்தால் வந்தபொருளைப் பிற நாட்டிற்சென்று பரதமாக்கள் விலைக்குவிற்றுவர, இரும்பனந் தீம்பிழி யுண்போர் மகிழும் அப்பொருளை ஈந்து கரிய பனையின் இனிய கள்ளைப் பெற்றுண்பவராய் மகிழ்ந்திருக்கும், ஆர் கலி யாணர்த்து ஆயினும் நிரம்பிய ஒலியையுடைய புதுவருவாயினையுடைய தாயினும்; தொகுதி விளங்கிய நமது மெல்லிய கடற் சேர்ப்பன் நம்மைவிட்டுப் பிரிந்தகாலத்தில் நம்மூரானது பொலிவழிந்தாற் போல வருத்தமுடையதா யிராநின்றது; ஆதலின் யான் எங்ஙனம் வருந்தாது ஆற்றியிருப்பேன் ?;
தலைவி வன்புறை எதிர்அழிந்து சொல்லியது. - உலோச்சனார்
39. குறிஞ்சி
சொல்லின் சொல் எதிர்கொள்ளாய், யாழ நின்
திருமுகம் இறைஞ்சி நாணுதி கதுமென;
காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ?
கொடுங் கேழ் இரும் புறம் நடுங்கக் குத்திப்
புலி விளையாடிய புலவு நாறு வேழத்தின் 5
தலை மருப்பு ஏய்ப்ப, கடை மணி சிவந்த நின்
கண்ணே கதவ? அல்ல; நண்ணார்
அரண் தலை மதிலராகவும், முரசு கொண்டு,
ஓம்பு அரண் கடந்த அடு போர்ச் செழியன்
பெரும் பெயர்க் கூடல் அன்ன நின் 10
கரும்புடைத் தோளும் உடையவால் அணங்கே.
நங்காய்! யான் நின்னைத் தழீஇக் கொண்டு சில கூறின் அவற்றை எதிரேற்றுக் கொள்ளாயாய் நின் அழகிய முகம் இறைஞ்சி நின்று கண்புதைத்து நாணுகின்றனை; விரைவாகக் காமமானது கைகடந்து மிகுமாயின் அதனை யான் தாங்கியிருத்தல் எளியதொரு காரியமாமோ; புலி நடுங்குமாறு அதன் வளைந்த கரிய நிற முள்ள வரிகளையுடைய பெரிய முதுகிலே குத்தி வீழ்த்தி வளையாட்டயர்ந்த; புலவு நாற்றத்தையுடைய களிற்றின் இனிய நுனியையுடைய மருப்புப்போல; கடைமணி சிவந்த நின்கண்கள் தாமோ சினவா நின்றன; பகைவர் அரண்மிக்க மதிலிடத்திற் போந்தாராகவும்; உடனே மேல்வீழ்ந்து வென்று அவரது முரசைக் கைக்கொண்டு அவராற் பாதுகாக்கப்படுகின்ற அரணையும் கைப்பற்றிய போரிற் கொல்லவல்ல பாண்டியனது; பெரிய புகழையுடைய மதுரையை யொத்த நின்னுடைய தொய்யிலெழுதப்பட்ட கரும்பையுடைய தோள்களும் என்னை வருத்துதலை யுடையன காண் !;
இரண்டாம் கூட்டத்து எதிர்ச்சியில் தலைவன் சொல்லியது. - மருதன் இளநாகனார்
40. மருதம்
நெடு நா ஒள் மணி கடி மனை இரட்ட,
குரை இலைப் போகிய விரவு மணற் பந்தர்,
பெரும்பாண் காவல் பூண்டென, ஒரு சார்,
திருந்துஇழை மகளிர் விரிச்சி நிற்ப,
வெறி உற விரிந்த அறுவை மெல் அணைப் 5
புனிறு நாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச,
ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈரணிப்
பசு நெய் கூர்ந்த மென்மை யாக்கைச்
சீர்கெழு மடந்தை ஈர்- இமை பொருந்த,
நள்ளென் கங்குல், கள்வன் போல, 10
அகன் துறை ஊரனும் வந்தனன்-
சிறந்தோன் பெயரன் பிறந்தமாறே.
காவலையுடைய மாளிகையிடத்து நெடிய நாவையுடைய ஒள்ளிய மணி ஒலியா நிற்ப ஒலிக்கின்ற தெங்கங் கீற்றான் மிடைந்து புனைந்த மணல் பரப்பிய பந்தரின்கண்ணே; முன்பு பரத்தையிற் சென்ற வழி¢ப் பெரிய பாணர் தலைவனைச் சூழ்ந்து காவலை மேற்கொண்டாற் போலத் திருந்திய கலனணிந்த மகளிர் இப்பொழுது நன்னிமித்தமாக நிற்ப; நறுமணமிக்க விரிப்பு விரித்த மெல்லிய அணையின்மீது செவிலியுடனே ஈன்ற அணுமை விளங்கிய புதல்வன் துயிலா நிற்ப; வெண்கடுகை யப்பிய எண்ணெய் தேய்த்து ஆடும் நீராட்டினால் ஈரிய அணியையுடைய குளிர்ந்த நெய்பூசிய மிக்க மென்மையாகிய உடம்பினையுடைய அழகு விளங்கிய மனைவிதான்; தன் ஈரிமையும் ஒன்றோடொன்று பொருந்த வுறங்கா நிற்ப; அகன்ற நீர்த்துறையையுடைய வூரனும் சிறந்த தந்தையின்பெயரனாகிய தன் மைந்தன் பிறந்ததனால் இடையாமத் திருளிலே கள்வனைப் போல வந்துற்றான்;
தலைமகட்குப் பாங்கு ஆயினார் கேட்பப் பரத்தை சொல்லியது. - கோண்மா நெடுங்கோட்டனார்
41. பாலை
பைங் கண் யானைப் பரூஉத் தாள்உதைத்த
வெண் புறக் களரி விடு நீறு ஆடி,
சுரன் முதல் வருந்திய வருத்தம் பைபயப்
பாஅர் மலி சிறு கூவலின் தணியும்
நெடுஞ் சேண் சென்று வருந்துவர் மாதோ- 5
எல்லி வந்த நல் இசை விருந்திற்கு,
கிளர் இழை அரிவை! நெய் துழந்து அட்ட
விளர் ஊன் அம் புகை எறிந்த நெற்றி,
சிறு நுண் பல் வியர் பொறித்த
குறு நடைக் கூட்டம் வேண்டுவோரே. 10
விளங்கிய கலன் அணிந்த அரிவையே; இரவின்கண் வந்த நல்ல புகழையுடைய விருந்தினர் உண்ணவேண்டி; நீ நெய்யை அளாவவிட்டுக் கொழுவிய தசையைச் சமைத்ததனாலாகிய புகைபடிந்த நெற்றியின்கண் சிறிய நுண்ணிய பலவாய வியர்வை நீர் தோன்றப் பெற்ற; குறுகிய நடையொடு சென்ற நின் புணர்ச்சியை அக்காலத்து விரும்பினவர்; பசிய கண்களையுடைய யானை தன் பருத்த காலால் உதைத்தலிற் பொடிபட்ட வெளிய மேலிடத்தையுடைய பாழ்நிலத்திலுள்ள விடு புழுதி மூழ்கப்பெற்று; சுரத்தின்கண் வந்து வருந்திய வருத்தமெல்லாம்; மெல்ல நடந்து பருத்திகள் சூழ முளைத்திருக்கின்ற சிறிய கிணற்றிற் சென்று தணித்துக் கொள்ளா நிற்கும்; நெடிய மிக்க சேணிடத்தேகி வருந்தாநிற்பர் போலும்; அங்ஙனம் போய் வருந்துவதும் பின்னர் நின்னொடு இல்லறம் வழுவாது நடத்தற் பொருட்டு அன்றோ? இதனை ஆராயாது வருந்துவது என்னை ?
பிரிவு உணர்த்தப்பட்டு ஆற்றாளாய தலைமகளைத் தோழி உலகியல்கூறி வற்புறுத்தியது. - இளந்தேவனார்
42. முல்லை
மறத்தற்கு அரிதால்- பாக! பல் நாள்
அறத்தொடு வருந்திய அல்கு தொழில் கொளீஇய
பழ மழை பொழிந்த புது நீர் அவல
நா நவில் பல் கிளை கறங்க, மாண் வினை
மணி ஒலி கேளாள், வாணுதல்; அதனால், 5
'ஏகுமின்' என்ற இளையர் வல்லே
இல் புக்கு அறியுநராக, மெல்லென
மண்ணாக் கூந்தல் மாசு அறக் கழீஇ,
சில் போது கொண்டு பல் குரல் அழுத்திய
அந் நிலை புகுதலின், மெய் வருத்துறாஅ 10
அவிழ் பூ முடியினள் கவைஇய
மட மா அரிவை மகிழ்ந்து அயர் நிலையே.
பாகனே ! நீரின்மையாலே கோடையில் பல நாளாக வறட்சியுற்ற உயிர்கள் மகிழ்ச்சியோடு தத்தந் தொழிலை மேற்கொண்டு நிகழ்த்துமாறு; தொன்று தொட்டுப் பெய்யும் வழக்குப் போல மழை பெய்ததனாலாய புதிய நீர் நிரம்பிய பள்ளங்கடோறும் நாவினால் ஒலிக்கின்ற பலவாய கூட்டத்தையுடைய தவளைக ளொலித்தலானே; நாம் செல்லுகின்ற தேரிற் கட்டிய மணிகளின் ஒலியை ஒள்ளிய நுதலையுடைய நம் தலைவி கேட்டறிந்திலள்; ஆதலின் நீயிர் முன்னே சென்று கூறுமினென்றபடி அக்கட்டளையை ஏற்ற இளையோர் விரைந்து நமது மாளிகையிற் புகுந்து அறிவித்தனராக; உடனே மெல்ல அதுகாறுஞ் சீவிக்கை செய்யாத கூந்தலின் மாசு போகத் தூநீராடிச் சிலவாய மலரைக் கொண்டு பலவாய கூந்தலிலே முடிக்கின்ற அத்தறுவாயில் யான் உள்ளே புகுதலின்; என்னை நோக்கித் தன் மெய்துவள வந்து அவிழ்ந்து குலையு முடியினளாய் என்னை அணைத்துக் கொண்ட, மடம் மா அரிவை மகிழ்ந்து அயர் நிலை மறத்தற்கு அரிது மடப்பத்தையுடைய சிறந்த நம் அரிவை மகிழ்ந்து கொண்டாடுந் தன்மை யான் மறத்தற்கரியதுகாண்; அத்தகையாள் இன்றும் மகிழ்ந்தணைக்குமாறு விரைவிலே தேரைச் செலுத்துவாயாக !
வினைமுற்றி மீள்வான் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - கீரத்தனார்
Page 2 of 19 • 1, 2, 3 ... 10 ... 19
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்