புதிய பதிவுகள்
» ஆலமரம் போல் தனித்துவமாக வாழ....
by சிவா Today at 5:08 pm

» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Today at 4:12 pm

» மாநிலத்தின் செயல்பாட்டை முடக்கும் ஆளுநர் பதவி தேவையா?
by சிவா Today at 3:41 pm

» 6 ஆண்டுகளில் 10,814 என்கவுன்ட்டர்கள்... உ.பி-யில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா?
by சிவா Today at 3:37 pm

» அதிமுக vs பா.ஜ.க.
by சிவா Today at 3:24 pm

» தமிழ்நாடு பட்ஜெட் 2023-2024
by சிவா Today at 3:15 pm

» [மின்னூல்] உடல், பொருள், ஆனந்தி - ஜாவர் சீதாராமன்
by சிவா Today at 11:26 am

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Today at 4:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 4:01 am

» மந்திரங்கள்
by சிவா Today at 3:49 am

» மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள் யார்?
by சிவா Today at 2:41 am

» கல்யாணம் முதல் கருவுறுதல் வரை - உணவு முறை
by சிவா Today at 2:33 am

» ஸ்ரீராம தரிசனம்
by சிவா Today at 1:29 am

» பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?
by சிவா Yesterday at 10:24 pm

» கருத்துப்படம் 21/03/2023
by mohamed nizamudeen Yesterday at 7:46 am

» நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்? வைட்டமின் மாத்திரைகள் உடலுக்கு நல்லதா?
by சிவா Yesterday at 2:32 am

» சீனாவில் மோடியின் பெயர் ‘லாவோக்சியன்’: #modi_laoxian
by சிவா Yesterday at 2:17 am

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 9:08 pm

» மகா பெரியவாளும் காந்திஜியும்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 7:23 pm

» வல்லாரை கீரையின் மகிமைகள்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 5:09 pm

» மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு
by Dr.S.Soundarapandian Mon Mar 20, 2023 12:49 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Sun Mar 19, 2023 9:18 pm

» வியர்வை வாடை: காரணம், தீர்வுகள், கட்டுப்படுத்தும் வழிகள்
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 9:11 pm

» உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா?
by சிவா Sun Mar 19, 2023 9:07 pm

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (14)
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 9:04 pm

» மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு 30 கட்டளைகள்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 9:02 pm

» கும்பத்தில் வலுவாகும் சனி:
by சிவா Sun Mar 19, 2023 9:02 pm

» பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
by சிவா Sun Mar 19, 2023 9:00 pm

» அண்ணாமலையின் பேச்சுக்கு, நான் பதவுரை எழுத முடியாது! - வானதி சீனிவாசன்
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 8:45 pm

» நரம்பு மண்டலம் பாதிப்படைந்து இருப்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்
by சிவா Sun Mar 19, 2023 8:35 pm

» தமிழக அரசியல் செய்திகள்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 1:54 pm

» கோஹினூர் வைரம்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 1:48 pm

» ரௌடியை பிரதமர் கையெடுத்துக் கும்பிட்டது ஏன்?
by சிவா Sun Mar 19, 2023 12:30 am

» லண்டன் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ள கோஹினூர் வைரம்
by சிவா Sun Mar 19, 2023 12:23 am

» தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார்
by T.N.Balasubramanian Sat Mar 18, 2023 5:44 pm

» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி
by eraeravi Fri Mar 17, 2023 8:41 pm

» பற்களை பராமரிப்பதில் நாம் செய்யும் தவறுகள்
by T.N.Balasubramanian Fri Mar 17, 2023 7:34 pm

» உலக தூக்க தினம் - மார்ச் 17
by T.N.Balasubramanian Fri Mar 17, 2023 6:21 pm

» 18 நாடுகள் இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்ய அனுமதி
by T.N.Balasubramanian Fri Mar 17, 2023 6:10 pm

» அதிகம் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முன்னணியில் இந்தியா
by mohamed nizamudeen Fri Mar 17, 2023 9:56 am

» கடன் வாங்கி ஆடம்பரத் திருமணம் செய்ய வேண்டாமே...
by Dr.S.Soundarapandian Thu Mar 16, 2023 10:03 pm

» வெளிநாட்டு வழக்கறிஞர்கள் இந்தியாவில் பயிற்சி செய்யலாம், ஆனால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது
by Dr.S.Soundarapandian Thu Mar 16, 2023 10:00 pm

» 3 வல்லரசுகள் உருவாக்க திட்டமிடும் அணுசக்தி நீர்மூழ்கி படை
by Dr.S.Soundarapandian Thu Mar 16, 2023 9:54 pm

» முதுமலையில் படமாக்கப்பட்ட ஆவணப்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது
by Dr.S.Soundarapandian Thu Mar 16, 2023 9:46 pm

» கண் அழுத்த நோய் - Glaucoma
by சிவா Thu Mar 16, 2023 8:17 pm

» ஆன்லைன் சூதாட்டமும் அரசியல் சூதாட்டமும்
by சிவா Thu Mar 16, 2023 5:28 pm

» போதை வலையில் சிறுவர்கள்... என்னவாகும் தமிழ்நாடு?
by T.N.Balasubramanian Thu Mar 16, 2023 5:19 pm

» 5,000 கலை அம்சங்கள் உடன் 5,000 ஆண்டுகால இந்திய நாகரிகத்தை சிறப்பிக்கும் புதிய நாடாளுமன்ற கட்டிடம்
by சிவா Thu Mar 16, 2023 5:00 pm

» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Thu Mar 16, 2023 4:09 pm

» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
by சிவா Thu Mar 16, 2023 3:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்  - Page 2 Poll_c10ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்  - Page 2 Poll_m10ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்  - Page 2 Poll_c10 
23 Posts - 70%
T.N.Balasubramanian
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்  - Page 2 Poll_c10ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்  - Page 2 Poll_m10ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்  - Page 2 Poll_c10 
5 Posts - 15%
Dr.S.Soundarapandian
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்  - Page 2 Poll_c10ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்  - Page 2 Poll_m10ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்  - Page 2 Poll_c10 
2 Posts - 6%
venkat532
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்  - Page 2 Poll_c10ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்  - Page 2 Poll_m10ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்  - Page 2 Poll_c10 
1 Post - 3%
கோபால்ஜி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்  - Page 2 Poll_c10ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்  - Page 2 Poll_m10ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்  - Page 2 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்  - Page 2 Poll_c10ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்  - Page 2 Poll_m10ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்  - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்  - Page 2 Poll_c10ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்  - Page 2 Poll_m10ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்  - Page 2 Poll_c10 
435 Posts - 67%
T.N.Balasubramanian
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்  - Page 2 Poll_c10ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்  - Page 2 Poll_m10ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்  - Page 2 Poll_c10 
95 Posts - 15%
Dr.S.Soundarapandian
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்  - Page 2 Poll_c10ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்  - Page 2 Poll_m10ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்  - Page 2 Poll_c10 
65 Posts - 10%
mohamed nizamudeen
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்  - Page 2 Poll_c10ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்  - Page 2 Poll_m10ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்  - Page 2 Poll_c10 
23 Posts - 4%
Dhivya Jegan
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்  - Page 2 Poll_c10ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்  - Page 2 Poll_m10ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்  - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Elakkiya siddhu
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்  - Page 2 Poll_c10ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்  - Page 2 Poll_m10ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்  - Page 2 Poll_c10 
6 Posts - 1%
THIAGARAJAN RV
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்  - Page 2 Poll_c10ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்  - Page 2 Poll_m10ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்  - Page 2 Poll_c10ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்  - Page 2 Poll_m10ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
eraeravi
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்  - Page 2 Poll_c10ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்  - Page 2 Poll_m10ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
கோபால்ஜி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்  - Page 2 Poll_c10ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்  - Page 2 Poll_m10ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்  - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்


   
   

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88781
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 01, 2023 7:10 pm

First topic message reminder :

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்  - Page 2 PjgQ576

எடப்பாடியின் வேட்பாளர் அறிவிப்பு: என்ன செய்யப் போகிறது பா.ஜ.க.?


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்  - Page 2 Collage_4.jpg?w=640&dpr=1

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட, யாரும் எதிர்பாராத வகையில் திடீரென தன்னுடைய வேட்பாளரை அறிவித்துள்ளது எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அதிமுக.

ஈரோட்டுத் தேர்தல் பணிமனையில் வைக்கப்பட்டுள்ள பேனரில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களின் படங்களும் இடம் பெறவில்லை. தவிர, கூட்டணியின் பெயரும்கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி என்பதற்குப் பதிலாக தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி என்று எழுதப்பட்டுள்ளது.

இவையெல்லாமுமே தங்களுடைய முடிவில் இபிஎஸ் அணி உறுதியாக இருக்கிறது என்பதற்கான சமிக்ஞைகளாகவே கருதப்படுகின்றன. இபிஎஸ் அணி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கே.எஸ். தென்னரசுக்கும் எதிரணியை அசைத்துப் பார்க்கக் கூடிய பின்புலமும் இருக்கிறது.

அதிமுகவின் இபிஎஸ் அணி தானாக வேட்பாளரை அறிவிக்கும் என்பதை யார் எதிர்பார்த்திருந்தாலும் பாரதிய ஜனதா எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் என்றதும் காங்கிரஸ் போட்டியிட்டு ரிஸ்க் எடுப்பதைவிட ஆளுங்கட்சியான திமுகவே போட்டியிடலாம் என்றுதான் கூறப்பட்டது. ஆனால், காங்கிரஸ் தொகுதி காங்கிரஸுக்கு, வலிந்து திமுக போட்டியிடுவதுதான் ரிஸ்க். ஒருவேளை தோற்க நேரிட்டால் மக்களவைத் தேர்தலைச் சந்திப்பதில் சங்கடங்கள் உருவாகிவிடும், காங்கிரஸையே நிறுத்தி முழுமூச்சாக பணியாற்றுவோம் என்று திமுக தலைமையிடம் உள்ளூர் திமுக தலைவர்கள் வலியுறுத்த அப்படியே ஆனதாகக் கூறப்படுகிறது. இதையொட்டிய நகர்வுதான் இன்னொரு மகனுக்குப் பதிலாக இவிகேஎஸ் இளங்கோவனே காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடுவதும்.

ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ்தான் போட்டியிடும் என்றதுமே எதிர்த்து யார் போட்டியிடப் போவது என்பதில் எதிர்க்கட்சிகளுக்குள் நிறையவே விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

திமுக அணியில் காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ். இளங்கோவன் என்று அறிவித்த நிலையில், பிரிந்து கிடக்கும் அதிமுக அணிகள் எல்லாம் ஒருசேர ஆதரித்தால் போட்டியிடலாம், வெற்றி பெற்றால் தமிழ்நாட்டு அரசியலில் எளிதில் ஒரு பெரிய இடத்தைக் கைப்பற்றிவிட முடியும் என்ற ஆவல் பாரதிய ஜனதா கட்சி வட்டாரங்களில் காணப்பட்டது. ஏற்கெனவே, கோவையில் வானதி சீனிவாசனும் மொடக்குறிச்சியில் சரஸ்வதியும் பெற்ற வெற்றியும் கொங்கு மண்டலத்தில் பாஜகவுக்கு செல்வாக்கு இருப்பதைப் போன்ற தோற்றமும் இந்த எண்ணத்துக்கு நெய்யூற்றின.

உள்ளூர இருந்த பாரதிய ஜனதாவின் இந்த ஆசையைத்தான் அதிமுகவின் மற்றோர் அணித் தலைவரான ஓ. பன்னீர்செல்வம் பேட்டியொன்றில் எதிரொலித்தார் - பா.ஜ.க. போட்டியிட்டால் ஆதரிப்போம் என்று (இத்தகைய ஆசையை பாஜகவினர் மனதில் விதைத்தவரே ஓ. பன்னீர்செல்வமாக இருக்கலாமோ என்னவோ?). இதை உறுதிப்படுத்தும் வகையிலேயே, புதன்கிழமை மாலையில் தங்கள் அணி வேட்பாளர் அறிவிப்பின்போதும்கூட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரை அறிவிக்கும்பட்சத்தில், தங்கள் வேட்பாளரை வாபஸ் பெற்றுவிடுவோம் என்று தெரிவித்திருக்கிறார் ஓ. பன்னீர்செல்வம்.

ஆனால், பாஜகவின் நினைப்புக்கு மாறாக, அதிமுகவின் பிற அணித் தலைவர்களான பழனிசாமியோ, அமமுக தலைவர் டி.டி.வி. தினகரனோ இந்தக் கருத்தைப் பொருட்படுத்தவே இல்லை. போட்டியிடுவதில் உறுதியாக இருந்ததுடன், அமமுகவோ வேட்பாளரையும் அறிவித்துவிட்டது.

இந்த நிலையில், என்ன மாயமோ பாரதிய ஜனதா போட்டியிடும் என்ற பேச்சு திடீரென நின்றுவிட, ஈரோடு கிழக்கில் போட்டியில்லை, அதிமுகதான் வலுவான கட்சி என்று பேட்டியளித்தார் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை.

இத்தகைய சூழ்நிலையில்தான், யாருக்கு ஆதரவு என்ற தங்களுடைய முடிவைத் தாமதப்படுத்துவதன் மூலம் - இழுத்தடிப்பதன் மூலம், நெருக்கடியை ஏற்படுத்த முடியும், இந்த நெருக்கடியைப் பயன்படுத்தி, எடப்பாடி பழனிசாமியை, இபிஎஸ் அணியைத் தங்கள் வழிக்குக் கொண்டுவர முடியும், இடைத்தேர்தலை முன்வைத்து அதிமுக அணிகளை ஒன்றுசேர்த்துவிட முடியும் என்றெல்லாம் பாஜக நம்பிக் கொண்டிருந்தது (இதனிடையே, தேமுதிக, நாம் தமிழர் கட்சி எல்லாம் வேட்பாளர்களை அறிவித்தன).

ஆனால், எடப்பாடி பழனிசாமியோ, இந்த மாதிரியெல்லாம் சிக்கிக்கொள்ள விரும்பாமல்,  எதைப் பற்றியும் கவலைப்படாமல், பாஜகவின் ஆதரவுக்காகவோ, ஒப்புதலுக்காகவோ காத்துக்கொண்டும் இருக்காமல், ஈரோடு கிழக்கு தொகுதிக்குத் தங்கள் வேட்பாளரை இன்று (பிப். 1) அறிவித்துவிட்டார்.

இந்த அறிவிப்பின் காரணமாக, வேறு வழியே இல்லாமல், அதிமுக எடப்பாடி பழனிசாமியின் அணியை, வேட்பாளரை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்துக்கு பாரதிய ஜனதா தள்ளப்பட்டிருக்கிறது என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

அதிமுகவின் ஓ. பன்னீர்செல்வம் அணியும் ஈரோடு கிழக்கில் போட்டியிட்டே தீர வேண்டிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கிறது. ஓபிஎஸ் அணி வேட்பாளரின் தேர்தல் முடிவு என்னவாக இருக்கும் என்பதை எல்லாராலும் எளிதில் ஊகித்துவிட முடியும்.

பாரதிய ஜனதா கட்சியும் வெற்றி வாய்ப்புள்ள இபிஎஸ் அணி வேட்பாளரை விட்டுவிட்டு, அதிமுகவின் ஓரணிக்கு, ஓபிஎஸ் அணி வேட்பாளருக்கு ஆதரவு என்று அறிவிக்கவும் முடியாது. அப்படியே அறிவித்தாலும் மேலும் குழப்பங்கள்தான் ஏற்படும்; அதன் விளைவும் அனைவரும் அறியக் கூடியதாகவே இருக்கும்.

இந்த நிலையில்தான், திருச்சியில் செய்தியாளர்களுடன் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் விஷயத்தில், கூட்டணியின் பெயரை மாற்றியிருப்பது பற்றி உரிய நேரத்தில் பதிலளிப்பேன். எங்கள் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தும் வரை பொறுமையாக இருங்கள் என்று தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமியின் வேட்பாளர் அறிவிப்பு பற்றி பாரதிய ஜனதா கட்சியின் மேலிடம் என்ன கருதுகிறது என்று இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை. மீண்டும் மீண்டும் அதிமுக அணிகளின் இணைப்பை அல்லது ஒற்றுமையை வலியுறுத்திக் கொண்டிருந்த  பாஜக தலைவர்கள் என்ன முடிவெடுக்கப் போகிறார்கள் என்றும் தெரியவில்லை.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலைப் பொருத்தவரை, பாரதிய ஜனதா கட்சிக்கு  மூன்றே வழிகள்தான் இருக்கின்றன.

1. ஆளுங்கூட்டணிக்கு எதிராக வலுவான வேட்பாளர் என்று குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி அணியை ஆதரிப்பது.

2. ஓ. பன்னீர்செல்வம் அணி வேட்பாளரை ஆதரிப்பது.

3. ஆளும் திமுக அணிக்கு எதிராக வலுவான அணியும் வேட்பாளரும் தேவை என்ற நிலையில் அதிமுக அணிகளின் ஒற்றுமையைத்தான் விரும்பினோம். ஆனால், அதிமுக தலைவர்கள் இணங்கி வராததால் யாரையும் ஆதரிக்கப் போவதில்லை. பாஜக ஆதரவாளர்கள் தங்கள் விருப்பப்படி வாக்களித்துக் கொள்ளலாம் என்று அறிவித்துவிடுவது.

ஓபிஎஸ் அணி வேட்பாளரை ஆதரிப்பதற்கான வாய்ப்பு அரிதிலும் அரிது என்ற நிலையில், தங்களைக் கண்டுகொள்ளாமல் வேட்பாளரையே அறிவித்துவிட்ட எடப்பாடி அணியை ஆதரிப்பதிலும் பாஜகவுக்கு தர்மசங்கடங்கள் இருக்கின்றன.

இரண்டு அணிகளையும் ஆதரிக்காமல் ஒதுங்கிக்கொண்டு, விருப்பமானவர்களுக்கு வாக்கு என அறிவித்துவிடுவதன் மூலம், இடைத்தேர்தலையே தவிர்த்துவிட்டால், எப்போதும் போல கொங்கு மண்டல செல்வாக்கு என்ற தங்களுடைய பிம்பத்தையும் பாரதிய ஜனதாவால் தொடர்ந்து பராமரிக்க முடியும்.

இவற்றையெல்லாம் தாண்டி வேறு திட்டம் எதையேனும் பாரதிய ஜனதா வைத்திருக்கிறதா? தெரியவில்லை.

இயன்றவரை தாமதப்படுத்தினாலும் வாய்ப்புகளை அறிந்துகொண்ட பிறகு, எப்படியும் விரைவில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் தங்கள் நிலை என்ன? என்பதை பாரதிய ஜனதா அறிவிக்க வேண்டியிருக்கும். அதற்கான  வேலையைத்தான் விரைவுபடுத்தித் தொடங்கிவைத்திருக்கிறார் வேட்பாளர் அறிவிப்பின் மூலம் எடப்பாடி பழனிசாமி!

தினமணி


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88781
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 05, 2023 3:15 pm

ஈரோடு அ.தி.மு.க.வின் கோட்டை என்பது தவறு, தி.மு.க.வின் எக்கு கோட்டை ; செந்தில் பாலாஜி



ஈரோட்டில் இன்று மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

பொதுமக்கள் கை சின்னத்திற்கு வாக்களிக்க உற்சாகத்தோடு இருக்கிறார்கள். செல்லும் இடங்களில் மக்கள் உற்சாகத்தோடு வரவேற்பு அளிக்கிறார்கள். முதலமைச்சரின் கடந்த 1½ ஆண்டு கால சாதனையாக கைச்சின்னம் மாபெரும் வெற்றி பெறும். மேற்கு மண்டலம் அ.தி.மு.க.வின் கோட்டை என்பது தவறான கருத்து. முதலமைச்சரின் கோட்டை. அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சித்தேர்தல் கூட நடத்த முடியாத ஒரு நிலை இருந்தது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகுதான் நகர்புற உள்ளாட்சித்தேர்தல் நடத்தப்பட்டு மக்களின் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன

ஈரோடு அ.தி.மு.க.வின் கோட்டை என்பது தவறு. இது தி.மு.க.வின் எக்கு கோட்டை. பொறுத்திருந்து பாருங்கள் என்றார். அவங்க கட்சியில் எவ்வளவு உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்பதை அவரிடம் கேளுங்கள். பா.ஜ.க. ஒரு மிஸ்டு கால் பார்ட்டி. பூத் கமிட்டிக்கு கூட ஆள் இல்லாத கட்சி. இல்லாத ஒரு நபரை இருப்பதை போல் காட்டி அவருக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம்.அவர்களை மையப்படுத்தி தேர்தல் நடப்பது போன்ற சூழலை உருவாக்குகின்றனர்" என்றார்.

jairam and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 8291
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Feb 06, 2023 1:09 pm

இடைத்தேர்தலில் , ஆளும் கட்சியே வெற்றிபெறும் என்பது ஓர் உண்மை! எதிர்க்கட்சிக்காரர்கள் பதுங்கிக் கொள்வார்கள்! இப்படிப் பார்க்கும்போது, ஈ வி கே எஸ். வெல்வார்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33690
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 06, 2023 3:54 pm

Dr.S.Soundarapandian wrote:இடைத்தேர்தலில் , ஆளும் கட்சியே வெற்றிபெறும் என்பது ஓர் உண்மை! எதிர்க்கட்சிக்காரர்கள் பதுங்கிக் கொள்வார்கள்! இப்படிப் பார்க்கும்போது, ஈ வி கே எஸ். வெல்வார்!
மேற்கோள் செய்த பதிவு: undefined



இது வரை இப்பிடித்தான் நடந்துள்ளது.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88781
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 06, 2023 8:49 pm

இபிஎஸ்ஸுக்கு இரட்டை இலை! தேர்தல் ஆணையம் அங்கீகாரம்!



ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்  - Page 2 ADMK_ECI_letter.jpg?dpr=1

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் சின்னத்துக்கான படிவத்தில் தமிழ்மகன் உசேன் கையெழுத்திட இந்தியத் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தமிழ் மகன் உசேனை அங்கீகரித்து ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் அலுவலர் சிவகுமாருக்கு தேர்தல் ஆணையம் கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளது.

இதனால், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பது உறுதியாகியுள்ளது.

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கான படிவத்தில் ஏ, பி பிரிவுகளில் தமிழ்மகன் உசேன் கையெழுத்திட தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. எனினும் குறுகிய காலத்துக்கு மட்டுமே தமிழ்மகன் உசேனுக்கு இந்த அங்கீகாரம் வழங்குவதாகவும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88781
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 07, 2023 4:56 pm

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு



ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈ.வெ.ரா ஜனவரி 4ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். அதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு இத்தொகுதியை மீண்டும் ஒதுக்கியதையடுத்து காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மூத்த தலைவரும் மறைந்த திருமகன் ஈ.வெ.ராவின் தந்தையுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகின்றார்.

இதனையொட்டி திமுகவின் கூட்டணிக் கட்சிகள் இடைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். அதிமுக சார்பில் தென்னரசுவும், தேமுதிக சார்பாக ஆனந்தும், அமமுக சார்பாக சிவபிரசாத்தும் போட்டியிடுகின்றனர். மேலும் பல கட்சியினர், சுயேச்சைகள் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து நாளை மற்றும் நாளை மறுநாள் வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. இதையடுத்து வரும் 10 ஆம் தேதி வேட்புமனுக்கள் திரும்பப் பெற கடைசி நாளாகும். அதன்பிறகு பிப்ரவரி 27 ஆம் தேதி வாக்குப் பதிவும், மார்ச் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 8291
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Feb 08, 2023 12:51 pm

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்  - Page 2 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88781
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 09, 2023 2:02 am

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்  - Page 2 940780

ஈரோடு கிழக்கு தொகுதியில் ‘சாதி’ அரசியல் எடுபடுமா?


ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களை சாதி ரீதியாக பிரித்து வெளியாகிவரும் புதிய புள்ளிவிவரத்தால் அரசியல் கட்சிகளிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஈரோடு கிழக்கில் ‘சாதி’ அரசியல் எடுபடுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் என முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் எண்ணிக்கை சுருங்கியுள்ளது.

ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் தேர்தல் பணியாற்ற, பகுதி வாரியாகவும், வாக்குச்சாவடி வாரியாகவும் வாக்காளர்கள் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளனர். அந்தந்தப் பகுதிகளில் தேர்தல் பணிமனை அமைத்து, அப்பகுதி வாக்காளர்களை தினமும் சந்தித்து வாக்கு சேகரிப்பது இவர்கள் பணியாக உள்ளது.

இந்நிலையில், ஈரோடு கிழக்கில் சாதி வாரியாக உள்ள வாக்குகள் தொடர்பாக பல்வேறு புள்ளிவிவரங்கள் தொடர்ந்து உலா வரத் தொடங்கியுள்ளன. இந்தப் புள்ளிவிவரங்களில், ஒவ்வொரு சாதிக்குமான வாக்கு சதவீதம் ஏறியும், இறங்கியும் இருப்பதால், எது உண்மையான புள்ளிவிபரம், இது வாக்குப்பதிவில் எதிரொலிக்குமா என தேர்தல் பணிக்கு வந்துள்ள வெளிமாவட்ட அரசியல் பிரமுகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியில், கடந்த மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல்படி, 1 லட்சத்து 10 ஆயிரத்து 713 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 16 ஆயிரத்து 140 பெண் வாக்காளர்களும், 23 இதர வாக்காளர்களும், 22 ராணுவ வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 898 வாக்காளர்கள் உள்ளனர்.

இவர்களில், செங்குந்த முதலியார் சமுதாயம் பெரும்பான்மை சமுதாயமாக உள்ளது என அனைத்து புள்ளிவிவரம் கூறுகின்றன. அடுத்தது கொங்கு வேளாளக் கவுண்டர் மற்றும் இஸ்லாமியர், கிறிஸ்த்துவர் அடங்கிய சிறுபான்மை பிரிவு வாக்கு சதவீதத்தை ஒவ்வொரு புள்ளிவிவரமும் கூட்டியும், குறைத்தும் காட்டுவதால் அரசியல் கட்சியினர் குழம்பி வருகின்றனர்.

இவர்கள் தவிர அருந்ததியர் 6 சதவீதமும், செட்டியார், நாயுடு, நாயக்கர், பிள்ளை, வன்னியர், முக்குலத்தோர், தேவேந்திரகுல வேளாளர், நாடார், பிராமணர் உள்ளிட்ட பிரிவினர் 1 சதவீதம் முதல் ஐந்து சதவீதம் வரை பல்வேறு நிலைகளில் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதோடு, இந்தி பேசும் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் 3 சதவீதம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், ஈரோடு கிழக்கு தொகுதி நகரம் சார்ந்த தொகுதி என்பதால், சாதி ரீதியாக வாக்குகள் பதிவாகாது என்ற கருத்தும் நிலவுகிறது. புள்ளி விவரங்களின்படி, செங்குந்த முதலியார் சமுதாயம் இத்தொகுதியில் அதிகமாக இருந்தாலும், பிரதான கட்சிகளான திமுக, அதிமுக, தேமுதிக ஆகியவை அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை வேட்பாளராக நிறுத்தவில்லை. நாம் தமிழர் கட்சி மட்டும் அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த பெண் வேட்பாளரை களமிறக்கியுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்குப்பதிவில், சாதி ரீதியான அம்சங்கள் எதிரொலிக்குமா என முன்னாள் மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசனிடம் கேட்டபோது, “ஈரோடு கிழக்கு தொகுதி கைத்தறி நெசவாளர்களை அதிகம் கொண்ட தொகுதியாக முன்பு இருந்தது. அப்போது முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக இருந்தனர். ஆனால் தற்போது, கடைகள் மற்றும் மஞ்சள் மண்டி நடத்துவோர், சிறுபான்மையினர், ஆசிரியர், அரசு ஊழியர் மற்றும் வடமாநிலத்தவர் என பலரும் வசிப்பதால், ‘காஸ்மாபாலிடன் தொகுதியாக’ மாறிவிட்டது.

எனவே, சாதி ரீதியான வாக்குப்பதிவு இங்கு எடுபட வாய்ப்பில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திமுக ஆட்சியின் பிரதிபலிப்பு தேர்தலில் எதிரொலிக்கும். எனவே, தேர்தல் முடிவு திமுகவிற்கு சாதகமாகவே இருக்கும்” என்றார்.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 8291
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Feb 09, 2023 11:04 am

ஈரோடு கிழக்கு - “தேர்தல் முடிவு திமுகவிற்கு சாதகமாகவே இருக்கும்” -
பொறுத்திருந்து பார்ப்போம்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
sncivil57
sncivil57
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 308
இணைந்தது : 18/07/2020
https://tamilnewbookspdf.blogspot.com/

Postsncivil57 Thu Feb 09, 2023 5:15 pm

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் எடப்படியார் வெற்றிபெறுவர்


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்  - Page 2 USjRJit



இந்த முகவரியில் தமிழ் மின் புத்தகம் தரவிரக்கம் செய்ய இயலும்


https://tamilnewbookspdf.blogspot.com/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88781
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 09, 2023 5:19 pm

sncivil57 wrote:

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் எடப்படியார் வெற்றிபெறுவர்


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்  - Page 2 USjRJit

இடைத்தேர்தல் என்றாலே அது ஆளுங்கட்சிக்கு சாதகமாகத்தானே இருக்கும்.

அவ்வாறு எதிர்க்கடசி வெற்றி பெற்றால் அந்த ஆட்சியின் நிர்வாகத்திறன் மிகவும் மோசமாக உள்ளது என்பதைத்தான் அது காட்டும்.

T.N.Balasubramanian and sncivil57 இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக