புதிய பதிவுகள்
» ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி - உவமைத் தொடர் குறிக்கும் பொருள் என்ன?.
by சிவா Today at 21:31

» வெற்றியை உணர்த்தும் சகுனங்கள்
by சிவா Today at 21:08

» ஆலமரம் போல் தனித்துவமாக வாழ....
by சிவா Today at 19:38

» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Today at 18:42

» மாநிலத்தின் செயல்பாட்டை முடக்கும் ஆளுநர் பதவி தேவையா?
by சிவா Today at 18:11

» 6 ஆண்டுகளில் 10,814 என்கவுன்ட்டர்கள்... உ.பி-யில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா?
by சிவா Today at 18:07

» அதிமுக vs பா.ஜ.க.
by சிவா Today at 17:54

» தமிழ்நாடு பட்ஜெட் 2023-2024
by சிவா Today at 17:45

» [மின்னூல்] உடல், பொருள், ஆனந்தி - ஜாவர் சீதாராமன்
by சிவா Today at 13:56

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Today at 6:39

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:31

» மந்திரங்கள்
by சிவா Today at 6:19

» மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள் யார்?
by சிவா Today at 5:11

» கல்யாணம் முதல் கருவுறுதல் வரை - உணவு முறை
by சிவா Today at 5:03

» ஸ்ரீராம தரிசனம்
by சிவா Today at 3:59

» பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?
by சிவா Today at 0:54

» கருத்துப்படம் 21/03/2023
by mohamed nizamudeen Yesterday at 10:16

» நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்? வைட்டமின் மாத்திரைகள் உடலுக்கு நல்லதா?
by சிவா Yesterday at 5:02

» சீனாவில் மோடியின் பெயர் ‘லாவோக்சியன்’: #modi_laoxian
by சிவா Yesterday at 4:47

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Mon 20 Mar 2023 - 23:38

» மகா பெரியவாளும் காந்திஜியும்
by T.N.Balasubramanian Mon 20 Mar 2023 - 21:53

» வல்லாரை கீரையின் மகிமைகள்
by T.N.Balasubramanian Mon 20 Mar 2023 - 19:39

» மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு
by Dr.S.Soundarapandian Mon 20 Mar 2023 - 15:19

» உலகச் செய்திகள்!
by சிவா Sun 19 Mar 2023 - 23:48

» வியர்வை வாடை: காரணம், தீர்வுகள், கட்டுப்படுத்தும் வழிகள்
by T.N.Balasubramanian Sun 19 Mar 2023 - 23:41

» உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா?
by சிவா Sun 19 Mar 2023 - 23:37

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (14)
by T.N.Balasubramanian Sun 19 Mar 2023 - 23:34

» மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு 30 கட்டளைகள்
by Dr.S.Soundarapandian Sun 19 Mar 2023 - 23:32

» கும்பத்தில் வலுவாகும் சனி:
by சிவா Sun 19 Mar 2023 - 23:32

» பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
by சிவா Sun 19 Mar 2023 - 23:30

» அண்ணாமலையின் பேச்சுக்கு, நான் பதவுரை எழுத முடியாது! - வானதி சீனிவாசன்
by T.N.Balasubramanian Sun 19 Mar 2023 - 23:15

» நரம்பு மண்டலம் பாதிப்படைந்து இருப்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்
by சிவா Sun 19 Mar 2023 - 23:05

» தமிழக அரசியல் செய்திகள்
by Dr.S.Soundarapandian Sun 19 Mar 2023 - 16:24

» கோஹினூர் வைரம்
by Dr.S.Soundarapandian Sun 19 Mar 2023 - 16:18

» ரௌடியை பிரதமர் கையெடுத்துக் கும்பிட்டது ஏன்?
by சிவா Sun 19 Mar 2023 - 3:00

» லண்டன் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ள கோஹினூர் வைரம்
by சிவா Sun 19 Mar 2023 - 2:53

» தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார்
by T.N.Balasubramanian Sat 18 Mar 2023 - 20:14

» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி
by eraeravi Fri 17 Mar 2023 - 23:11

» பற்களை பராமரிப்பதில் நாம் செய்யும் தவறுகள்
by T.N.Balasubramanian Fri 17 Mar 2023 - 22:04

» உலக தூக்க தினம் - மார்ச் 17
by T.N.Balasubramanian Fri 17 Mar 2023 - 20:51

» 18 நாடுகள் இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்ய அனுமதி
by T.N.Balasubramanian Fri 17 Mar 2023 - 20:40

» அதிகம் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முன்னணியில் இந்தியா
by mohamed nizamudeen Fri 17 Mar 2023 - 12:26

» கடன் வாங்கி ஆடம்பரத் திருமணம் செய்ய வேண்டாமே...
by Dr.S.Soundarapandian Fri 17 Mar 2023 - 0:33

» வெளிநாட்டு வழக்கறிஞர்கள் இந்தியாவில் பயிற்சி செய்யலாம், ஆனால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது
by Dr.S.Soundarapandian Fri 17 Mar 2023 - 0:30

» 3 வல்லரசுகள் உருவாக்க திட்டமிடும் அணுசக்தி நீர்மூழ்கி படை
by Dr.S.Soundarapandian Fri 17 Mar 2023 - 0:24

» முதுமலையில் படமாக்கப்பட்ட ஆவணப்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது
by Dr.S.Soundarapandian Fri 17 Mar 2023 - 0:16

» கண் அழுத்த நோய் - Glaucoma
by சிவா Thu 16 Mar 2023 - 22:47

» ஆன்லைன் சூதாட்டமும் அரசியல் சூதாட்டமும்
by சிவா Thu 16 Mar 2023 - 19:58

» போதை வலையில் சிறுவர்கள்... என்னவாகும் தமிழ்நாடு?
by T.N.Balasubramanian Thu 16 Mar 2023 - 19:49

» 5,000 கலை அம்சங்கள் உடன் 5,000 ஆண்டுகால இந்திய நாகரிகத்தை சிறப்பிக்கும் புதிய நாடாளுமன்ற கட்டிடம்
by சிவா Thu 16 Mar 2023 - 19:30

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் Poll_c10மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் Poll_m10மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் Poll_c10 
25 Posts - 71%
T.N.Balasubramanian
மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் Poll_c10மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் Poll_m10மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் Poll_c10 
5 Posts - 14%
Dr.S.Soundarapandian
மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் Poll_c10மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் Poll_m10மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் Poll_c10 
2 Posts - 6%
venkat532
மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் Poll_c10மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் Poll_m10மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் Poll_c10 
1 Post - 3%
கோபால்ஜி
மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் Poll_c10மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் Poll_m10மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் Poll_c10மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் Poll_m10மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் Poll_c10மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் Poll_m10மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் Poll_c10 
450 Posts - 68%
T.N.Balasubramanian
மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் Poll_c10மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் Poll_m10மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் Poll_c10 
95 Posts - 14%
Dr.S.Soundarapandian
மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் Poll_c10மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் Poll_m10மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் Poll_c10 
65 Posts - 10%
mohamed nizamudeen
மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் Poll_c10மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் Poll_m10மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் Poll_c10 
23 Posts - 3%
Dhivya Jegan
மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் Poll_c10மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் Poll_m10மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் Poll_c10 
12 Posts - 2%
Elakkiya siddhu
மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் Poll_c10மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் Poll_m10மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் Poll_c10மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் Poll_m10மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் Poll_c10 
4 Posts - 1%
eraeravi
மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் Poll_c10மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் Poll_m10மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் Poll_c10 
4 Posts - 1%
THIAGARAJAN RV
மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் Poll_c10மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் Poll_m10மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் Poll_c10 
4 Posts - 1%
கோபால்ஜி
மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் Poll_c10மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் Poll_m10மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88783
இணைந்தது : 20/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 2 Feb 2023 - 21:49

மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் MK_Stalin_new_Edi_640

பட்டா மாறுதல், சான்றிதழ் பெறுதல் ஆகியவை எளிமையாக நடைபெற வேண்டும். மக்கள் இதற்காக சில இடங்களில் அலைய வைக்கப்படுகிறார்கள் என்ற தகவல் வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியாளர்கள் கண்காணித்து தடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருக்கிறார்.


கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

மாவட்டங்களுக்குச் சென்று நிர்வாகப் பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகளையும் நேரடியாக ஆய்வு செய்யும் “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தின் கீழ், மு.க. ஸ்டாலின், வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து நேரடியாக ஆய்வு மேற்கொள்வதற்காக வேலூர் மாவட்டத்திற்கு வந்திருந்து, பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

அதனையடுத்து, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர், வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், முதல்வர் உரையாற்றியதாவது, இந்தக் கூட்டத்தைப் பொறுத்தவரைக்கும் ஏதோ குறைகளைக் கண்டுபிடிப்பதற்காக நடத்துகின்ற கூட்டம் அல்ல, இதனுடைய நோக்கம் அது அல்ல. மக்களுக்கான பணி சிறக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கருதித்தான் இந்தக் கூட்டத்தை கூட்டியிருக்கிறோம்.

மக்களுக்காகத்தான் அரசு! மக்களை மையப்படுத்தி இயங்குவதுதான் ஒரு நல்லரசாக அமைந்திட முடியும். இதை நாங்கள் மட்டுமல்ல, நீங்களும் நன்றாக அறிந்து வைத்திருக்கிறீர்கள். அந்த எண்ணத்தை நெஞ்சில் ஏந்தித்தான் நாம் அனைவரும் செயல்பட்டாக வேண்டும். சுணக்கம் காணப்படக்கூடிய சில பணிகள் இந்தக் கூட்டத்தில் அடையாளம் காணப்பட்டது. அதை நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள். விரைவிலே நிறைவேற்றுவோம் என்கிற நம்பிக்கையையும் சொல்லியிருக்கிறீர்கள். அதை செய்ய வேண்டிய பொறுப்பு உங்களிடத்தில் இருக்கிறது.

இந்த ஆய்வின் போது, குடிநீர் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், வருவாய்த் துறை வழங்கக்கூடிய பட்டா மாறுதல் உள்ளிட்ட சேவைகள், ஊரக மேம்பாடு, விளிம்பு நிலை மக்களுடைய நலன், நகர்ப்புற வளர்ச்சி, சாலை மேம்பாடு, வாழ்வாதாரத்தை உயர்த்துதல், இளைஞர் திறன் மேம்பாடு, பொதுக் கட்டமைப்பு வசதிகள், கல்வி, மருத்துவம், குழந்தைகள் ஊட்டச்சத்துபோன்ற முக்கிய துறைகளைச் சார்ந்த திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் அதனுடைய பயன் பொதுமக்களுக்கு முழுமையாகச் சென்றடைவது குறித்தும் இந்த ஆய்வில் நாம் மேற்கொண்டிருக்கிறோம்.
இந்தத் துறைகள் சார்பாக அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் எந்தளவிற்கு செயலாக்கம் பெற்றுள்ளன, செயல்படுத்துவதற்கு தயார் நிலையில் இருக்கிறோம் என்பதை நாம் ஆய்வு செய்திருக்கிறோம்.

திட்ட செயலாக்கத்தில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமென்றால், அதற்கான திருத்த ஆணை வெளியிடலாம். நிதி தேவை அல்லது பணியாளர் பற்றாக்குறை இருந்தால் அதைச் சரிசெய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். செயலாளர்களையும், துறைத் தலைவர்களையும் இதைத்தான் நான் வலியுறுத்தி, வற்புறுத்தி கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

வழக்கமாக தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட முதன்மைச் செயலாளர்கள், துறைத் தலைவர்களைத் தான் நான் சந்திப்பேன். அதோடு மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆய்வுக் கூட்டங்களை நடத்தியிருக்கிறேன். ஆனால் அதைவிட இப்படி அடுத்தகட்ட அலுவலர்களோடு அந்த மண்டலத்திற்கே வந்து கலந்துரையாட வேண்டும் என்று முடிவு செய்து, அந்தப் பணியை இப்போது நிறைவேற்றத் தொடங்கி இருக்கிறோம்.

நீங்கள் எல்லோரும் ஒவ்வொரு திட்டத்தின் செயல்பாடு மற்றும் அதன் காரணமாக மக்கள் பெறக்கூடிய பயன்கள் குறித்து பார்க்கும் வாய்ப்பைப் பெற்றவர்கள். திட்டங்களின் சாதக, பாதகங்கள் என்ன என்று கண்ணுக்கு முன்னால் கவனிப்பவர்கள் நீங்கள். அந்த அடிப்படையில் இந்தக் கூட்டம் மிகமிக முக்கியமான கூட்டமாக அமைந்திருக்கிறது.

அதே போல் எல்லோரையும் ஒருசேரச் சந்திப்பதும் மிகமிக முக்கியமானது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையைக் கவனித்து வந்தாலும் - யாரும் தனியாகச் செயல்பட முடியாது. அப்படி செயல்பட முற்பட்டால் அது தாமதத்திற்கு தான் வழிவகுக்கும். அரசுத் துறைகள் எல்லாம் ஒன்றோடு ஒன்று இணைந்தவை. அதனால், பலரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் அடிப்படையான வழிமுறை.

உங்கள் பணிகளையெல்லாம் இணைக்கும் ஒரே விபரம் மக்கள் நலன். அதனை நீங்கள் மறக்கவே கூடாது. பட்டா மாறுதல், சான்றிதழ் பெறுதல், அரசு நலத்திட்டங்களின் பயனடைதல் ஆகியவை எளிமையாக நடைபெற வேண்டும். மக்கள் இதற்காக சில இடங்களில் அலைய வைக்கப்படுகிறார்கள் என்ற தகவலும் வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியாளர்கள் கண்காணித்து தடுக்க வேண்டும். சிறப்பாக பணியாற்றக்கூடிய அலுவலர்களை பாராட்டுங்கள், அது மற்றவர்களை ஊக்கப்படுத்தும். பின்தங்கும் அலுவலர்களுக்கு வழிகாட்டி, அவர்களது பணியும் மேம்படுவதை மாவட்ட ஆட்சியாளர்களே நீங்களும் துறைத்தலைவர்களிடம் உறுதி செய்ய வேண்டும். அனைத்து துறை வளர்ச்சி என்ற இலக்கோடுதான் நாம் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறோம். அத்தகைய சிந்தனையோடுதான் திட்டங்களை தீட்டி வருகிறோம்.

தமிழ்நாடு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள், ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் வழங்கப்பட்டிருக்கக்கூடிய வாக்குறுதிகள் இதையெல்லாம் முதல்கட்ட அடிப்படையாக வைத்து திட்டங்களை தீட்டினோம்.

அடுத்த கட்டமாக அமைச்சர்கள் – செயலாளர்கள், அவர்களோடு கலந்துரையாடல்கள் மூலமாகவும், பேரவைக் கூட்டத்தொடரில் வைக்கப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையிலும் வல்லுநர் குழு அளித்த அறிக்கைகளின் அடிப்படையிலும் மாவட்ட நிர்வாகமாகிய உங்கள் கோரிக்கைகளின் அடிப்படையிலும் பல திட்டங்கள் தீட்டப்பட்டன.

பலகோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒவ்வொரு திட்டமும் அறிவிக்கப்படுகிறது. பல்வேறு நிதி அமைப்புகளிடம் அரசு கருவூலத்தில் இருக்கும் பணத்தின் மூலமாக மட்டுமல்ல, கடன் வாங்கியும் பல திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது. மக்களின் வரிப்பணமும் அரசின் நிதியில் உள்ளது. அதனால் திட்டங்களுக்கான நிதி வீணாகிவிடாமல் விரைவாகவும் - சிக்கனமாகவும் திட்டங்களை நீங்கள் செயல்படுத்த வேண்டும்.

திட்டப்பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதிக்குள் குறைவாகச் செலவு செய்து பணியை முடிப்பதில் கவனமாக இருக்க வேண்டும். அதே போல் குறிப்பிட்ட காலத்துக்கு முன்னதாக திட்டப்பணிகளை முடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

ஏதாவது ஒரு திட்டம் முடக்கப்பட்டாலோ, சுணக்கமாக நடந்தாலோ அது அரசின்மீது விமர்சனமாக வைக்கப்படுகிறது. எனவே, இதில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அந்தந்த நிதி ஆண்டுக்கான பணிகள் அந்த ஆண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும்.

சார்நிலை அலுவலர்களின் பணியை கண்காணித்து, ஒருங்கிணைத்து செயல்படாததால் திட்டங்களை முழுமையாக நிறைவேற்றுவதில் காலதாமதமும் தொய்வும் ஏற்படுகிறது என்று நான் கருதுகிறேன். எனவே, இதுபோன்ற ஆலோசனைக் கூட்டங்களை, கண்காணிப்பு கூட்டங்களை, திட்டமிடும் கூட்டங்களை, கலந்துரையாடும் கூட்டங்களை உங்களுக்கு கீழே இருக்கக்கூடிய அதிகாரிகளுடன் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். தொடர்ந்து தீவிர கள ஆய்வுகளை மேற்கொள்ளுங்கள். மக்களோடு கலந்து பழகுங்கள், அவர்களின் தேவையை உணர்ந்து செயல்படுங்கள். அரசு ஆணைகளை மட்டும் செயல்படுத்துவராக இல்லாமல், உங்களது கனவுத் திட்டங்களையும் அரசுக்குச் சொல்லி, அதனையும் செயல்படுத்த முனையும் திறன் கொண்டவர்களாக நீங்கள் அனைவரும் இருக்க வேண்டும்.

அரசினுடைய முன்னுரிமை பணிகள் எவை என்பதை உணர்ந்து மாவட்ட நிர்வாகம் செயல்பட வேண்டும். மாவட்ட அளவில் இருக்கும் நீங்கள் உங்களது மாவட்ட எல்லைக்குட்பட்ட பணிகளை உன்னிப்பாக, கவனமாக கண்காணித்து செயல்படுத்தினால் அனைத்து திட்டங்களும் முழுமையாக மக்களை போய் சென்றடையும்.

அடுத்த மாதத்தில் தமிழ்நாடு அரசினுடைய நிதிநிலை அறிக்கை தாக்கல் ஆக இருக்கிறது. அதன்பிறகு, அமைச்சருடைய துறை மானியக் கோரிக்கைகள் தாக்கல் ஆக இருக்கிறது. புதியபுதிய திட்டங்கள் ஏராளமாக சேர்ந்துவிடும். அதற்கு முன்னதாகவே, இதுவரை அறிவிக்கப்பட்டிருக்கக்கூடிய திட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்திக் காட்டுங்கள் என்று நான் உங்களையெல்லாம் கேட்டுக் கொள்கிறேன்.

தினமணி


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33690
இணைந்தது : 04/02/2010

PostT.N.Balasubramanian Thu 2 Feb 2023 - 22:04

சார் பதிவாளர்கள் ஆபீசில் நேரிடையாக பணம் பெறுவதில்லை.. ரகசிய போலீஸ் அனுப்பி அறியலாம்.அவர்கள் யுக்தியே தனி ரகம்தான்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக