புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 2:00 pm

» காதல் வரளர்த்தேன்....
by ayyasamy ram Today at 1:30 pm

» பெண் : ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்
by ayyasamy ram Today at 1:11 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 1:04 pm

» ஊக்கமூட்டும் வரிகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:44 pm

» நாடாளுமன்ற தேர்தல் 2024 - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:30 pm

» யாவரும் வல்லவரே!
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm

» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm

» கவித்துவம்
by Dr.S.Soundarapandian Today at 12:20 pm

» மந்திரச் சொல்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» கலியுகம் என்றால் என்ன?
by Dr.S.Soundarapandian Today at 12:09 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» கருத்துப்படம் 19/03/2024
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am

» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm

» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am

» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am

» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am

» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am

» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm

» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm

» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm

» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm

» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm

» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm

» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm

» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm

» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm

» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அண்ணா வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_c10அண்ணா வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_m10அண்ணா வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_c10 
38 Posts - 56%
heezulia
அண்ணா வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_c10அண்ணா வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_m10அண்ணா வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_c10 
18 Posts - 26%
Dr.S.Soundarapandian
அண்ணா வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_c10அண்ணா வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_m10அண்ணா வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_c10 
8 Posts - 12%
Abiraj_26
அண்ணா வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_c10அண்ணா வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_m10அண்ணா வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
அண்ணா வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_c10அண்ணா வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_m10அண்ணா வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_c10 
1 Post - 1%
SINDHUJA Theeran
அண்ணா வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_c10அண்ணா வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_m10அண்ணா வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அண்ணா வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_c10அண்ணா வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_m10அண்ணா வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_c10 
288 Posts - 36%
ayyasamy ram
அண்ணா வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_c10அண்ணா வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_m10அண்ணா வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_c10 
264 Posts - 33%
Dr.S.Soundarapandian
அண்ணா வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_c10அண்ணா வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_m10அண்ணா வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_c10 
153 Posts - 19%
krishnaamma
அண்ணா வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_c10அண்ணா வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_m10அண்ணா வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_c10 
24 Posts - 3%
sugumaran
அண்ணா வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_c10அண்ணா வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_m10அண்ணா வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_c10 
23 Posts - 3%
mohamed nizamudeen
அண்ணா வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_c10அண்ணா வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_m10அண்ணா வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_c10 
19 Posts - 2%
T.N.Balasubramanian
அண்ணா வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_c10அண்ணா வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_m10அண்ணா வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_c10 
13 Posts - 2%
prajai
அண்ணா வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_c10அண்ணா வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_m10அண்ணா வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_c10 
3 Posts - 0%
M. Priya
அண்ணா வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_c10அண்ணா வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_m10அண்ணா வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
அண்ணா வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_c10அண்ணா வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_m10அண்ணா வாழ்க்கை வரலாறு - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்ணா வாழ்க்கை வரலாறு


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 03, 2023 3:48 pm

First topic message reminder :

தமிழ்நாடு அரசியலில் திராவிட இயக்கம் மூலம் அண்ணா செய்த மாற்றங்கள் என்ன?



காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை.



1909 செப்டம்பர் 15ம் தேதி இந்தப் பெயருக்கு உரியவர் காஞ்சிபுரத்தில் ஓர் எளிய நெசவாளர் குடும்பத்தில் பிறந்தபோது அது அடுத்த தெருவுக்கு கூட செய்தி இல்லை. நடராஜன் - பங்காரு அம்மாள் இணையருக்கு ஒரு மகன். அவ்வளவுதான்.

1969 பிப்ரவரி 3-ம் தேதி அவர் இறந்தபோது அது பல கோடி மக்களுக்குப் பெருந்துயரம்.

அண்ணாவின் இறுதி ஊர்வலத்துக்காக சென்னையில் குவிந்தவர்கள் எண்ணிக்கை 1.5 கோடி என்று மதிப்பிடப்பட்டது. இந்த எண்ணிக்கை கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்திலும் பதிவானது.

சாமானியப் பிறப்புக்கும், சாதனை மரணத்துக்கும் இடைப்பட்ட அண்ணாவின் வாழ்க்கையானது, வரலாற்றுத் திருப்பங்கள் நிறைந்தது மட்டுமல்ல, வரலாற்றைத் திருப்புவதாக அமைந்ததும் கூட.

யார் இந்த அண்ணா?



சமூக நீதி, மாநில உரிமை, மொழி உரிமை தொடர்பான சிந்தனையாளர், அந்த சிந்தனையை வெற்றிகரமாக அரசியல் படுத்தியவர். அப்படி அரசியல் படுத்துவதற்காக மேடை, பத்திரிகை, நாடகம், சினிமா, நூல்கள் என்று எல்லா ஊடகங்களையும், கையில் எடுத்து அதற்குப் புதிய தோற்றமும், உள்ளடக்கமும் தந்தவர்.

இந்த ஊடகங்களில் பிற திராவிட இயக்கப் படைப்பாளிகளும் அணி அணியாக நுழைந்து தனித்துவமான ஒரு பாரம்பரியம் உருவாக காரணமாக இருந்தவர்.

காங்கிரஸ் அல்லாத கட்சி ஒன்றின் சார்பில் இந்தியாவில் முதலமைச்சரான இரண்டாவது தலைவர். தமிழ்நாட்டில் இடையறாமல் நடந்துவரும் 53 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு அதன் மூலம் அடித்தளம் இட்டவர். நவீன தமிழின் மீது, மக்கள் புழங்கும் தமிழின் மீது அண்ணா செலுத்தியிருக்கும் தாக்கம் அளப்பரியது. பெரிதாக ஆவணமாக்கப்படாதது.

எல்லாவற்றுக்கும் மேலாக உலகில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஒரு நிலப்பரப்புக்கு அதன் முகவரியாக விளங்கும் 'தமிழ்நாடு' என்ற பெயரை சூட்டியவர் அண்ணா. தங்களை ஒரு தனித்த தேசிய இனமாக உணரத் தொடங்கிய தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு அசைக்கமுடியாத ஓர் அங்கீகாரமாகிவிட்டது இந்தப் பெயர்.


அண்ணா என்ற பெயர் ஒரு பண்பாட்டின் குறியீடாகிவிட்டது. அது ஒரு வரலாறாக, அடையாளமாக கொண்டாடப்படுகிறது. அவரது பெயரில் கட்சி, பல்கலைக்கழகம், விமான நிலையம், சாலை, நூலகம் என்று ஏராளமான நிறுவனங்கள் உள்ளன. ஆனாலும் கூட நவீன தமிழ்நாட்டின் மொழி, அரசியல், பண்பாடு ஆகியவற்றின் மீது அவர் செலுத்திய தாக்கத்தின் பரிமாணத்தோடு ஒப்பிடும்போது இந்த அங்கீகாரம் குறைவே.

இந்த தாக்கம் ஆதரவாளர்களால் மிகவும் கொண்டாடப்படுகிறது. விமர்சகர்களால் கடுமையாகத் தாக்கப்படுகிறது என்பது வேறு.

துடிப்பும், பரபரப்பும், விவாதங்களும் நிரம்பிய அவரது வாழ்க்கையை அதன் இயல்பில், சுருக்கமாக அறிமுகம் செய்யும் முயற்சியே இந்த கட்டுரை.

மிக எளிய குடும்பத்தில் பிறந்த அண்ணா தமது சித்தி ராஜாமணி என்பவராலேயே வளர்க்கப்பட்டார். அவரது குடும்பம் கடவுள் நம்பிக்கை மிகுந்த குடும்பம். எனவே இயல்பிலேயே அண்ணாவும் சிறு வயதில் கடவுள் நம்பிக்கை மிக்கவராகவே இருந்தார். பின்னாளில் தமிழ்நாட்டின் பிரபலமான நாத்திகத் தலைவரான அண்ணா சிறுவயதில் பிள்ளையார் பக்தர் என்ற தகவலைத் தெரிவிக்கிறது, அண்ணாவின் வளர்ப்பு மகன் டாக்டர் பரிமளம் எழுதிய 'அண்ணா வாழ்க்கை வரலாறு' நூல்.





சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 03, 2023 4:09 pm

இயக்க அரசியலா? தேர்தல் அரசியலா?



பிரிட்டிஷ் இந்தியாவோ, சுதந்திர இந்தியாவோ தேர்தல் ஜனநாயகத்தின் மீது பெரியாருக்கு எப்போதும் நம்பிக்கை இல்லை. அவர் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டது கூட பெரும் ஆபத்தை தவிர்க்கும் நோக்கிலே அன்றி மாற்றங்களைக் கொண்டு வரமுடியும் என்கிற எண்ணத்தில் அல்ல. ஆனால் அண்ணாவோ தேர்தல் ஜனநாயகம் வழியாக தான் படைக்க விரும்பும் பொன்னுலகத்தை அடையமுடியும் எனக் கருதினார். பெரியாரின் சீடராக மாறுவதற்கு முன்பே அதற்கான முயற்சியிலும் அண்ணா ஈடுபட்டிருக்கிறார்.

அவருடைய அரசியல் வாழ்வே தேர்தலுடன் தான் தொடங்கியிருக்கிறது என்று கூட சொல்லமுடியும். 1934-ம் ஆண்டிலே பெரியாரின் அறிமுகம் அண்ணாவிற்கு கிடைத்திருந்த போதிலும் 1935ஆம் ஆண்டு தனது 26வது வயதில் சென்னை நகரசபை தேர்தலுக்கு நீதிக் கட்சியின் சார்பாக போட்டியிட்டார் அண்ணா. அதில் அவரால் வெற்றி பெறமுடியவில்லை.இதன் பிறகே 1937 ஆம் ஆண்டு சுய மரியாதை இயக்கத்திற்குள்ளும் பெரியார் நடத்தி வந்த குடியரசு பத்திரிகையிலும் தன்னைத் தீவிரமாக பிணைத்துக் கொண்டார். ஆக தேர்தல் தோல்விக்குப் பிறகுதான் தேர்தல் பாதையை நீக்கி செயல்பட்டுக் கொண்டிருந்த சுயமரியாதை இயக்கத்தில் இணைகிறார் அண்ணா.

ஆனால் பெரியாரோ தேர்தலில் போட்டியிட்டு வந்த நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு நீதிக்கட்சியையே தேர்தல் பாதையில் இருந்து வெளியேற்றுகிறார். அதனை திராவிடர் கழகமாக மாற்றுகிறார். இந்த மாற்றத்தை அவர் அண்ணா மூலம் கொண்டு வந்ததுதான் வரலாற்று முரண். 1944 ஆம் ஆண்டு சேலம் மாநாட்டில் அண்ணா முன்மொழிந்த தீர்மானங்கள் அடிப்படையிலேயே நீதிக்கட்சி தேர்தல் பாதையை விடுத்து அரசியல் இயக்கமாக மாறியது. ஆனால் அப்போது அண்ணாவுக்கு தேர்தல் ஆசை இருந்ததா என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை.ஆனால் நீதிக் கட்சி திராவிடர் கழகமாக மாறிய பின் அவருக்கு தேர்தல் பாதையின் மீது நாட்டம் இருந்தது என்பதைக் காண முடிகிறது.



சுதந்திர தினம் இன்ப நாள் என விளக்கி எழுதிய கட்டுரையில் முஸ்லீம் லீக்கிற்கு பாகிஸ்தான் கிடைக்க காரணம் அது தேர்தலில் போட்டியிட்டு மக்கள் தன் பக்கம் இருக்கிறார்கள் என்பதை நிரூபித்ததால்தான் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் திராவிட கழகத்தார் தேர்தலில் பங்கெடுக்காமல் பலத்தை நிரூபிக்காமல் எப்படி திராவிட நாடு பெறமுடியும் என்கிற தொணியும் அதில் இருந்தது.

அப்போது மட்டுமல்ல 1948 ஆம் ஆண்டில் காங்கிரஸை எதிர்த்துப் பேசிய அண்ணா , "இந்த ஆட்சியாளர்கள் எதிர்க்கட்சி இல்லை என இறுமாந்துள்ளனர்…. சட்டசபையிலேயே தூங்குபவர்களை தட்டி எழுப்பக் கூட ஆள் இல்லை " என்று வெற்றிடத்தை சுட்டிக் காட்டினார்.

ஈரோடு பெட்டிச் சாவி மாநாட்டில் குத்தூசியார் தேர்தலுக்கு ஆதரவாக பேசிய போது, அதை மறுத்துதான் பேசினார் அண்ணா. அவர் மறுத்து பேசியதிலேயே தேர்தல் வெற்றி ஒன்றும் எட்டாக் கனி அல்ல என்கிற அர்த்தம் பொதிந்திருந்தது. இதற்குப் பிறகு பேசிய பெரியார், அண்ணா தலைவராகி பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று உரைத்தது கூட தேர்தல் அரசியலைக் குறித்துதான் என்பது வரலாற்று நோக்காளர்களுக்குப் புரியும்.

மாநாடு நிகழ்ந்து ஓராண்டுக்குள்ளாகவே திக உடைந்து திமுக உருவானது. திக போல இயக்க அரசியலை மட்டுமே முன்னெடுக்கும் என்று சொன்னது. ஆனால் பெரியார் சொன்னதுதான் நிகழ்ந்தது. கட்சி தொடங்கிய நான்கே ஆண்டுகளில் தேர்தல் பாதையைத் தேர்ந்தெடுத்தது திமுக.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அண்ணா நினைத்தது போலவே பெரியாரின் சமூக நீதிக் கொள்கைகள் சட்டமாகின. பெரியார் எச்சரித்தது போலவே தேர்தல் அரசியல் காரணமாக பல சமூக நீதிக் கொள்கைகளில் நிறைய சமரசம் செய்துகொள்ள திமுக தள்ளப்பட்டது. இன்றைய தேதியில் இருந்து அலசி ஆராய்ந்தால் கூட இரு பெரும் ஆளுமைகளில் யார் பக்கம் சரி, யார் பக்கம் தவறு என்று அறுதியிட்டுக் கூறுவது கடினம்.

இந்தக் கட்டுரையில் அண்ணா, தேர்தல் வெற்றிக்காக வாய்ப்புகளை உருவாக்கி அவற்றைப் பயன்படுத்திக் கொண்டவர் என்று அவருடைய பரந்த நோக்கத்தையும் ஆளுமையையும் சுருக்கிப் பார்க்கும் அபாயம் இருக்கிறது. சுதந்திரம் கிடைத்து இந்தியா ஜனநாயகக் குடியரசை ஏற்றுக் கொண்ட பிறகு தேர்தல் பாதையே சிறந்த பாதை என்கிற முடிவெடுத்தார் அண்ணா. அது சரியான முடிவும் கூட. காரணம். அண்ணா தேர்தல் பாதைக்கு வந்திராவிட்டால் தமிழகம் இவ்வளவு வேகமாக சமூகநீதி பாதையில் நடைபோட்டு இருக்காது. எளிதாகக் கிடைத்த பல சமூகநீதி சட்டங்களைப் போராடி பெற்று இருக்கவேண்டிய நிலை இருந்திருக்கும்.



அப்படி என்றால் தேர்தல் பாதை தேவையில்லாத பாதை என்று பெரியார் சுட்டிக்காட்டிய இயக்கவழி அவசியமற்றதா என்று கேள்வி எழலாம். அதற்கும் ஆம் என்று பதிலளிக்க முடியவில்லை.காரணம் தேர்தல் சாராத இயக்கங்களே இன்றளவும் பல முக்கிய போராட்டங்களை முன்னெடுத்து சாதித்துக் காட்டிக் கொண்டிருக்கின்றன.

பெரியாரைப் பொருத்தவரை இந்த அரசு இயந்திரம் சுரண்டலின் வழிமுறையோடு இயங்குகிறது, அது எப்போதும் சாதி, வர்க்க அடிப்படையில் மேல்தட்டில் இருப்பவர்களின் நலனுக்காகவே இருக்கிறது, ஆகையால் இந்த அரசால் சமூக, பொருளாதார ரீதியாக ஒடுக்கப்படுகிறவர்களுக்கு எதுவும் நன்மை செய்யமுடியாது என்கிற கருத்தைக் கொண்டிருந்தார்.

சுதந்திர தினம் இன்ப நாள் என விளக்கி எழுதிய கட்டுரையில் முஸ்லீம் லீக்கிற்கு பாகிஸ்தான் கிடைக்க காரணம் அது தேர்தலில் போட்டியிட்டு மக்கள் தன் பக்கம் இருக்கிறார்கள் என்பதை நிரூபித்ததால்தான் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் திராவிட கழகத்தார் தேர்தலில் பங்கெடுக்காமல் பலத்தை நிரூபிக்காமல் எப்படி திராவிட நாடு பெறமுடியும் என்கிற தொணியும் அதில் இருந்தது.

அப்போது மட்டுமல்ல 1948 ஆம் ஆண்டில் காங்கிரஸை எதிர்த்துப் பேசிய அண்ணா , "இந்த ஆட்சியாளர்கள் எதிர்க்கட்சி இல்லை என இறுமாந்துள்ளனர்…. சட்டசபையிலேயே தூங்குபவர்களை தட்டி எழுப்பக் கூட ஆள் இல்லை " என்று வெற்றிடத்தை சுட்டிக் காட்டினார்.

ஈரோடு பெட்டிச் சாவி மாநாட்டில் குத்தூசியார் தேர்தலுக்கு ஆதரவாக பேசிய போது, அதை மறுத்துதான் பேசினார் அண்ணா. அவர் மறுத்து பேசியதிலேயே தேர்தல் வெற்றி ஒன்றும் எட்டாக் கனி அல்ல என்கிற அர்த்தம் பொதிந்திருந்தது. இதற்குப் பிறகு பேசிய பெரியார், அண்ணா தலைவராகி பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று உரைத்தது கூட தேர்தல் அரசியலைக் குறித்துதான் என்பது வரலாற்று நோக்காளர்களுக்குப் புரியும்.

புதிய பரிதி
ஊடகவியலாளர்
பிபிசி தமிழ்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 03, 2023 4:18 pm

தி.மு.கவைத் துவக்கிய நாளில் பெரியாரின் திருமணம் பற்றி அண்ணா பேசியது என்ன?


திராவிடர் கழகத் தலைவர் பெரியார், மணியம்மையைத் திருமணம் செய்துகொண்டதால் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டின் காரணமாக சி.என். அண்ணாதுரை உள்ளிட்ட திராவிடர் கழகத் தலைவர்கள் அந்தக் கட்சியில் இருந்து பிரிந்து 1949 செப்டம்பர் 17ஆம் தேதி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை உருவாக்கினர்.

அந்தக் கட்சியின் நோக்கத்தையும் கொள்கைகளையும் விளக்கும் வகையில் அடுத்த நாள், அதாவது செப்டம்பர் 18ஆம் தேதி சென்னை ராயபுரத்தில் உள்ள ராபின்சன் பூங்காவில் (தற்போது அண்ணா பூங்கா) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் சி.என் அண்ணாதுரை உரையாற்றினார்.

திராவிட முன்னேற்றக்கழகம் தோன்றியதற்கான காரணத்தை சுமார் ஒன்றரை மணி நேரம் அவர் விவரித்தார். அண்ணா பேசிக்கொண்டிருந்தபோது கடும் மழையும் பெய்துகொண்டிருந்தது. பெரியார், மணியம்மையைத் திருமணம் செய்வதுதான் விலகியதற்கான முக்கிய காரணம் என்று கூறிய அண்ணா, தமது புதிய கட்சியின் கொள்கைகளையும் தெளிவாக விளக்கினார்.

அவரது உரையின் சில பகுதிகள் இங்கே:



"மழை பலமாகப் பெய்துகொண்டிருக்கிறது. பலர் பேச வேண்டும். சங்கடமான நிலைதான். விடாது மழை பெய்கிறது. அளவற்ற கூட்டம். தாய்மார்கள் தவிக்கின்றனர். மழையில் நின்றுகொண்டே இருக்கிறீர்கள். சங்கடம்தான்; ஆனாலும் சமாளிக்கிறீர்கள். இது போன்ற நிலையில்தான் நாட்டிலே சில காலம் கழகத்தின் வேலைகள் செயலற்றுக் கிடந்தன. சங்கடமான நிலை ஏற்பட்டது. சரி செய்தோம்.

பெரியார் திருமணம் என்ற செய்தி கேட்டதும் அழுதவன் நான். ஆயாசங் கொண்டவன் நான். அதுமட்டுமல்ல, நான் ஒதுங்கிவிடுகிறேன் என்ற எண்ணத்தை, நான் கொண்ட கருத்தைத் தெரிவித்தவன் நான். என் போன்ற பல தோழர்கள் பெரியாரை, பெரியார் போக்கை, அவர் திருமண ஏற்பாட்டை ஏற்கவில்லை என்பதை மட்டுமல்ல, கண்டித்தனர். கதறினர். வேண்டாம் என்றனர் வேதனை உள்ளத்தோடு.

அவரோடு சேர்ந்து பணிபுரிய முடியாத பெரும்பான்மையினர், கழக முக்கியஸ்தர்கள் கூடிப் பேசி ஒரு முடிவுசெய்தனர். அந்த முடிவுதான் திராவிட முன்னேற்றக் கழகத் தோற்றம். இது போட்டி கழகமல்ல.

திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிவிட்டது. திராவிடக் கழகத்திற்குப் போட்டியாக அல்ல. அதே கொள்கைப் பாதையில்தான், திராவிடர் கழகத்தின் அடிப்படைக் கொள்கைகளின் மீதுதான் திராவிட முன்னேற்றக் கழகம் அமைக்கப்பட்டுள்ளது.

அடிப்படைக் கொள்கைகளில், கருத்துகளில் மாறுதல், மோதல் எதுவும் கிடையாது. சமுதாயத் துறையிலே சீர்திருத்தம், பொருளாதாரத் துறையிலே சமதர்மக் கொள்கை, அரசியலில் வடநாட்டு ஏகாதிபத்தியத்தினின்று விடுதலை ஆகிய கொள்கைகள்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்பாடுகளாகும்.

நம்மை மதியாத, இகழ்ந்த, தூற்றலுடன் துச்சமென மதித்த தலைவரின் தலைமையைவிட்டு வெளியேறித் தனிக்குடித்தனம், தனி முகாம், தனிக் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம் அமைத்திருக்கிறோம். நாம் உழைத்து உருவாக்குவோம் இந்தக் கழகத்தை.

இத்தனை ஆண்டுகளிலும் நான் அறிந்த தலைவர், தெரிந்த தலைவர், பார்த்த தலைவர், இவர் ஒருவர்தான். வேறு தலைவரின் தலைமையில் நான் வேலை செய்தது கிடையாது. செய்யவும் மனம் வந்ததில்லை. அதே காரணத்தால்தான் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தலைவரை ஏற்படுத்தவில்லை. அவசியம் என்றும் கருதவில்லை.

இதயபூர்வமான தலைவர், இதயத்திலே குடியேறிய தலைவர், நமக்கெல்லாம் அவ்வப்போது நல்வழி காட்டிய பெரியார் அமர்ந்த பீடத்தை, தலைவர் பதவியை, நாற்காலியை காலியாகவே வைத்திருக்கிறோம். அந்த பீடத்திலே, நாற்காலியிலே வேறு ஆட்களை அமர்த்தவோ அல்லது நாங்களே அல்லது நானோ அமரவோ விரும்பவில்லை.

திராவிடர் கழகமாகட்டும், திராவிட முன்னேற்றக் கழகமாகட்டும் படைவரிசை வேறு என்றாலும் கொள்கை ஒன்றுதான். கோட்பாடு ஒன்றுதான். திட்டமும் வேறு அல்ல என்ற நிலை இருந்தே தீரும். படைவரிசை இரண்டுபட்டுவிட்டது என்று எக்காளமிடும் வைதீகபுரிக்கும், வடநாட்டு ஏகாதிபத்யத்துக்கும் சம்மட்டியாக விளங்க வேண்டும்.

இரு கழகங்களும் இரு திக்குகளிலிருந்தும் வட நாட்டு ஏகாதிபத்தியத்தை ஒழித்து, வைதீகக் காட்டை அழித்துச் சமதர்மப் பூங்காவை திராவிடத்தைச் செழிக்கச் செய்தல் வேண்டும். அதிலே எந்தக் கழகம் பூங்காவை அமைத்தாலும் அதில் பூக்கும் பூக்கள், காய்கள், கனிகள் திராவிடத்தின் எழுச்சியை, மலர்ச்சியைத்தான் குறிக்கும்.

இரு பூங்காக்களும் தேவை. ஒன்றோடொன்று பகைக்க தேவையில்லை. அவசியமும் இல்லை. எது புஷ்பித்தாலும் மாலையாகப் போவது திராவிடத்திற்குத்தான் என்ற எண்ணம் வேண்டும்.

திராவிட இயக்கம் - நாடு முழுமைக்கும் பங்களிக்க வேண்டிய சித்தாந்தம்
பெரியார், அண்ணா பெயர்கள் மீண்டும் ஓங்கி ஒலிப்பதற்குக் காரணம் என்ன?
மழை பெய்து நின்று, கறுத்த வானம் வெளுத்திருப்பதைப் போல இன்று புதுக் கழகம் அமைத்து முன்னேற்ற வேகத்துடன் மோதல் இன்றிப் பணியாற்ற புறப்பட்டுவிட்டனர். கொள்கை பரப்புவதே நமது முதல் பணி. பகைமை உணர்ச்சியை அடியோடு விட்டொழிக்க வேண்டும்.

நான் கேட்கிறேன் தோழர்களே, எது முக்கியம் நமக்கு? லட்சியமா, பெரியாரா? லட்சியம் தேவை, பெரியாரல்ல என்று முடிவுசெய்தோம். பிரச்சனை முடிந்தது அத்தோடு. இதோ நம் கண் முன் வடநாட்டு ஏகாதிபத்தியம், மக்களைப் பாழ்படுத்தும் பாசிசம், பதுங்கிப் பாய நினைக்கும் பழமை இவைதான் ஒழிய வேண்டும்.

பழமையும், பாசிசமும் முறியடிக்கப்படும்வரை ஓயமாட்டோம். உழைப்போம். உருவான பலனைக் காண்போம். அப்போது பெரியார், "பயல்கள் பரவாயில்லை. உருவான வேலைதான் செய்கிறார்கள் " என்று உள்ளம் மகிழும் நிலை வரத்தான் போகிறது.

முதல் வேலையாக எழுத்துரிமை, பேச்சுரிமை, எதையும் அடக்கும் சர்க்கார் போக்கை எதிர்த்துப் போரிட திராவிட முன்னேற்றக் கழக முன்னணிப்படை அமைய வேண்டும். அதில் பங்குகொள்ள சமதர்ம தோழர்களை வாருங்கள் என்று வரவேற்கிறேன். கம்யூனிஸ்டுகளை ஒத்துழையுங்கள் என்று கூப்பிடுகிறேன்.

பேச்சுரிமையைப் பறிக்காதே, எழுத்துரிமையைத் தடுக்காதே, புத்தகங்களைப் பறிமுதல் செய்யாதே என்று போரிடுவோம்!

பெரியாரே.... நீரளித்த பயிற்சி, பக்குவம் பெற்ற நாங்கள் உம் வழியே சர்க்காரை எதிர்த்து சிறைச்சாலை செல்லத்தான் வேண்டுகோள் விடுக்கிறோம். துவக்க நாளாகிய இன்றே!" என்று சி.என். அண்ணாதுரை தன் உரையை முடித்தார்.



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 03, 2023 4:20 pm

'எனது திராவிட நாட்டுக்கு உரிமை கேட்கிறேன்' - நாடாளுமன்றத்தில் பேசிய அண்ணா


பெருமதிப்பிற்குரிய மன்றத் தலைவர் அவர்களே, இந்த அவையிலே பதிவு செய்யப்பட்ட கருத்துகளுடன் எனது கருத்துகளை எடுத்துரைக்க கிடைத்த வாய்ப்புக்காக உங்களுக்கு பெரிதும் நன்றி தெரிவிக்கிறேன். இந்த கூட்டத்தொடர் விவாதத்தில் பங்கேற்க முதலில் நான் சிறிது தயங்கினேன். ஏனெனில் இந்த அவையை கவனித்துக் கற்றுக்கொள்வதுதான் எனது ஆசையாக இருந்ததே தவிர, பேசிப் பிரச்னைகளைக் கிளறுவது அல்ல.

ஆனால், இந்த அவையில் நிலவும் இணக்கமான சூழ்நிலை மற்றும் இந்திய குடியரசு தலைவரைப் போற்றிக் குவியும் வாழ்த்துரை என்னையும் பங்கேற்க தூண்டியது. இப்போது அவரது உடல் குன்றியிருந்தாலும், குடியரசுத் தலைவரின் சுயநலமற்ற சேவைக்கு மற்றவர்களுடன் சேர்ந்து நானும் மரியாதை செலுத்திக் கொள்கிறேன்.

பாபு ராஜேந்திர பிரசாத் அவர்களை வாழ்த்தும்போது, நான் அவரின் அடியொட்டிச் செல்லும் தொண்டனோ அல்லது அவர் நெஞ்சம் நிறைந்து ஏற்றுக்கொண்டுள்ள அரசியல் கட்சியின் தத்துவங்களுக்கும் எனக்கும் எவ்வித ஒற்றுமையோ இல்லை என்பதையும் தெளிவுபடுத்திக் கொள்கிறேன்.

வெகு தூரத்தில் நின்றபடி, குடியரசு தலைவரின் சிறந்த முயற்சிகளைப் போற்றுகிறேன். அது ஒரு வகையில் எனக்கு பலத்தையும் மற்றொரு வகையில் பலவீனத்தையும் ஏற்படுத்துகிறது. அவருடன் இணைந்து சேவையாற்றினோம் எனக் கூறிக் கொள்வோருக்கு ஏற்படும் பெருமிதம், எனக்கு ஏற்படாதது பலவீனமாக இருக்கலாம்.

ஒரு கடமை உணர்ச்சி மிகுந்த கட்சிக்காரரை மற்றொரு கட்சிக்காரர் பாராட்டுவதாக இல்லாமல், தூரத்தில் இருந்து குடியரசுத் தலைவரின் பணியைக் கண்டு மகிழ்ந்து உண்மையாகப் பாராட்டுவதாக எனது மரியாதை இருப்பதை பலமாகக் கருதுகிறேன்.

நான் எனது மரியாதையை வெளிப்படுத்தும்போது, துரதிருஷ்டவசமாக குடியரசுத் தலைவர் ஆற்றிய உரையில் பெரிதும் ஏமாற்ற உணர்வே கிடைத்தது. அரசியல் சட்ட சரித்திர மாணவர்கள் என்ற முறையில், குடியரசுத் தலைவர் பேசினால், அது அரசாங்கமே பேசுவதாக அமையும் என்பதை அறிவோம். எனவே அந்த உரையில் ஏதாவது குற்றம் குறைகளை சுட்டிக்காட்டினால் அது குடியரசு தலைவருக்கு எதிரான தனிப்பட்ட கருத்தாக கருதக்கூடாது. கருத மாட்டார்கள் என்று மிகவும் நம்புகிறேன்.

குடியரசு தலைவர் என்றாலும் கூட, அரசு தெரிவிக்க வேண்டியதை சரியானபடி கூறவில்லை. எனவே, அது பற்றி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருதும் சில கருத்துகளை வெளிப்படுத்துகிறோம்.

"திட்டங்கள்" பற்றி "திட்டத்தின் தந்தை" என புகழப்படும் கிருஷ்ணமாச்சாரி எடுத்துரைத்ததை கேட்கும் பேறை நான் பெற்றுள்ளேன். குடியரசு தலைவர் உரையைப் படித்துப் பார்த்தால், அது ஒரு நிறுவனத்தின் செயல்பாட்டறிக்கை போல இருக்கிறதே தவிர, நம்பிக்கையையும், குறிக்கோளையும் அது எடுத்துக் கூறுவதாக அமையவில்லை.

நிறுவனத்தின் செயல்பாட்டறிக்கை என்று நான் குறிப்பிடுவதற்கு காரணம், அந்த நிறுவனம் இப்போது உறுப்பினர்களின் தேவையைக் கொண்டிருக்கிறது.

குடியரசுத் தலைவரின் உரைமீது பேசிய ஆளும் கட்சியினருக்கு அவர்களின் பேச்சில் ஒருவித பெருமிதமும், செருக்கும் இருப்பதை பார்த்தேன். 'ஓ... நாமும் மூன்று முறை தொடர்ச்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம். எனவே எது பேசினாலும் அது சரியாகத்தான் இருக்கும்; எதைச் செய்தாலும் சரியாக இருக்கும். எனவே சிறிய கட்சிகளுக்கு நம்மைத் தட்டிக் கேட்க உரிமை இல்லை" என்பதாக அவர்கள் எண்ணுகிறார்கள்.

பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு எந்தக் கட்சிக்கும் வெற்றிக்களிப்பை அடைய உரிமை உண்டு. ஆனால், நல்ல அமைப்பு முறையும் சரியாகவும் கட்டமைக்கப்பட்ட காங்கிரஸ் போன்ற கட்சி பல்வேறு அக்கறையும் கொள்கைகளும் கொண்ட எதிர்க்கட்சி குழுக்களை எதிர்த்து வெற்றி பெறுவது என்பது ஆச்சரியத்திற்குரியது அல்ல என்பதையும் உங்கள் அனுமதியோடு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

காங்கிரசின் பலம் அதனிடம் இல்லை, எதிர்க்கட்சிகளின் பலவீனத்தில்தான் காங்கிரஸ் கட்சியின் பலம் இருக்கிறது.

எனவே, வெற்றியில் பெருமிதம் கொள்வதைக் காட்டிலும் ஆளும் கட்சி பணிவையும், ஜனநாயகத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும் அதனால்தான் எடுத்த எடுப்பிலேயே முதல் கருத்தைக் கூறும்போதே பொதுத்தேர்தலில் நடந்த ஊழல்களை இந்தத் தரப்பு உறுப்பினர்கள் எடுத்துக் கூறினார்கள்.

தேர்தலில் நடைபெற்ற ஊழல் முறைகளைப் பற்றி இந்தத் தரப்பு உறுப்பினர்கள் பேசியபோது ஆளும் கட்சியினர் அவற்றை நிரூபிக்க முடியுமா? என்று கேட்க எழுந்தார்கள். ஆதாரங்கள் மட்டும் எங்கள் கைக்குக் கிடைக்கும் நிலைமை இருந்தால், அய்யா, நாங்கள் இந்த அவையில் அவை குறித்துப் பேசிக்கொண்டிருக்காமல் அவர்களை (ஆளும் கட்சியினரை) நீதிமன்றங்களில் சமர்ப்பித்திருப்போம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

போதுமான வசதிகளற்ற வகையில் வைக்கப்பட்டுள்ள மற்ற கட்சிகளுக்கு, தக்க ஆதாரம் காட்டி நிரூபிப்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல. அந்த விஷயத்தில் நாங்கள் நீதி நடவடிக்கைகளை விட இந்த பிரச்னையில் உள்ளடங்கியுள்ள தத்துவத்தையே பெரிதாக வலியுறுத்துகிறோம்.

சில காலத்துக்கு முன்பு, பெரு தொழில் நிறுவனங்களிடம் இருந்து ஆளும் கட்சி நன்கொடை பெறுவது சட்டபூர்வமானதுதான் என்றாலும் அது ஒழுங்கீனமான செயல் என்று உயர் நீதிமன்றங்கள் கண்டனம் தெரிவித்ததை நாம் பார்க்கவில்லையா? அவ்வாறு பெறுவது சட்டபூர்வமானதாக இருக்கலாம். ஆனால், தங்களுக்கான ஆயுதங்களை டாட்டா மற்றும் பிர்லாக்களின் ஆயுத தளவாட கூடங்களில் இருந்து அவர்கள் பெற்றது முற்றிலும் தார்மீகமற்ற நிலை இல்லையா?

முந்த்ராஸ்களிடம் கூட நிதியைப் பெற சென்றதை தங்களுக்கு தகுதிக் குறைவானதாக அவர்கள் பார்க்கவில்லை. அவர்களின் தேர்தல் நிதி எங்கிருந்து சேர்ந்தது என்பதை இந்த நாடு மறந்து விட்டதா?

இந்த அடிப்படையில்தான் ஆளும்கட்சி பெருமிதப்படுகிறதா? மற்ற கட்சிகளிடமும் கூட இதுபோன்ற ஊழல் செயல்பாடுகள் இருப்பதாக ஆளும் கட்சி உறுப்பினர்கள் கூறலாம். இந்த பரந்த துணைக்கண்டத்தின் மூத்த பெரும் கட்சி என்ற முறையில் உயரிய பாரம்பரிய மரபுகளை நிலைநாட்டுவது காங்கிரசின் தலையாய கடமை இல்லையா?

இந்த நேரத்தில் சமஸ்கிருத பண்டிட்களின் சொல் ஒன்று நினைவுக்கு வருகிறது. யதா ராஜா, ததா ப்ரஜா (அரசன் எவ்வழியோ, குடிகன்களும் அவ்வழியே).

மரபுகள் என்று எதை எல்லாம் காங்கிரஸ் உண்டாக்குகிறதோ, அவை அனைத்தையும் மற்ற கட்சிகள் பின்பற்றினாலும் பின்பற்றலாம்.

"பின்பற்றினாலும் பின்பற்றலாம்" என்ற வார்த்தையை நான் பயன்படுத்தக் காரணம், அந்த வார்த்தையில் "பின்பற்றாமல் இருந்தாலும் இருக்கலாம்" என்ற அர்த்தமும் அடங்கயிருக்கிறது.

எனவே எங்களின் முதல் கருத்தே இந்தத் தேர்தல் வெளிப்படையாகவும், சுதந்திரமாகவும், நடைபெறவில்லை. மக்களின் விருப்பம், சட்டப்பூர்வமாக தெரிந்து கொள்ளப்படவில்லை.

அடுத்த தேர்தலின்போதாவது, இலவச போனஸ் வழங்கும் முதலாளிகளுடனும், லாப வேட்டைக்காரர்களுடனும், பர்மிட்காரர்களுடனும் தொடர்புகொள்ளாமல் கங்காதரன் சின்ஹா மற்றொரு நாளில் இங்கே குறிப்பிட்டதைப் போல, பொதுத் தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பே ஆளும் கட்சி உறுப்பினர்களும் அமைச்சர்களும் தங்களின் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு மீண்டும் பதவிக்கு வர முடியுமா என்ற நான் சவால் விடுக்கிறேன்.

எனவே, குடியரசுத் தலைவர் பேச்சின் ஒரு பகுதியில், நாம் அனைவரும் ஜனநாயக மரபுகளைக் கட்டிக் காக்க வேண்டுமென்று -

(உறுப்பினர்களின் கூச்சல்)

திரு.ராமா ரெட்டி (மைசூர்): இதற்கு ஏதாவது முன்மாதிரி இருக்கிறதா?

மாநிலங்களவை தலைவர்: ஆறு மாதங்களுக்கு முன் ராஜிநாமா செய்ய முன்மாதிரி இருக்கிறதா என கேட்கிறார்.

புபேஷ் குப்தா (மேற்கு வங்கம்): ஒருவரது கன்னிப்பேச்சில் குறுக்கிடுவதற்கு முன்னுதாரணம் இல்லை.

சி.என். அண்ணாதுரை: ஆமாம், இது எனது கன்னிப் பேச்சுதான், ஆனால், குறுக்கீடுகளால் கூச்சமடைபவன் நான் அல்ல. எனவே, அவற்றை விரும்புகிறேன்.

Admin இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 03, 2023 4:22 pm

பெருமதிப்பிற்குரிய மன்றத் தலைவர் அவர்களே, இந்த அவையிலே பதிவு செய்யப்பட்ட கருத்துகளுடன் எனது கருத்துகளை எடுத்துரைக்க கிடைத்த வாய்ப்புக்காக உங்களுக்கு பெரிதும் நன்றி தெரிவிக்கிறேன். இந்த கூட்டத்தொடர் விவாதத்தில் பங்கேற்க முதலில் நான் சிறிது தயங்கினேன். ஏனெனில் இந்த அவையை கவனித்துக் கற்றுக்கொள்வதுதான் எனது ஆசையாக இருந்ததே தவிர, பேசிப் பிரச்னைகளைக் கிளறுவது அல்ல.

ஆனால், இந்த அவையில் நிலவும் இணக்கமான சூழ்நிலை மற்றும் இந்திய குடியரசு தலைவரைப் போற்றிக் குவியும் வாழ்த்துரை என்னையும் பங்கேற்க தூண்டியது. இப்போது அவரது உடல் குன்றியிருந்தாலும், குடியரசுத் தலைவரின் சுயநலமற்ற சேவைக்கு மற்றவர்களுடன் சேர்ந்து நானும் மரியாதை செலுத்திக் கொள்கிறேன்.

பாபு ராஜேந்திர பிரசாத் அவர்களை வாழ்த்தும்போது, நான் அவரின் அடியொட்டிச் செல்லும் தொண்டனோ அல்லது அவர் நெஞ்சம் நிறைந்து ஏற்றுக்கொண்டுள்ள அரசியல் கட்சியின் தத்துவங்களுக்கும் எனக்கும் எவ்வித ஒற்றுமையோ இல்லை என்பதையும் தெளிவுபடுத்திக் கொள்கிறேன்.

வெகு தூரத்தில் நின்றபடி, குடியரசு தலைவரின் சிறந்த முயற்சிகளைப் போற்றுகிறேன். அது ஒரு வகையில் எனக்கு பலத்தையும் மற்றொரு வகையில் பலவீனத்தையும் ஏற்படுத்துகிறது. அவருடன் இணைந்து சேவையாற்றினோம் எனக் கூறிக் கொள்வோருக்கு ஏற்படும் பெருமிதம், எனக்கு ஏற்படாதது பலவீனமாக இருக்கலாம்.

ஒரு கடமை உணர்ச்சி மிகுந்த கட்சிக்காரரை மற்றொரு கட்சிக்காரர் பாராட்டுவதாக இல்லாமல், தூரத்தில் இருந்து குடியரசுத் தலைவரின் பணியைக் கண்டு மகிழ்ந்து உண்மையாகப் பாராட்டுவதாக எனது மரியாதை இருப்பதை பலமாகக் கருதுகிறேன்.

நான் எனது மரியாதையை வெளிப்படுத்தும்போது, துரதிருஷ்டவசமாக குடியரசுத் தலைவர் ஆற்றிய உரையில் பெரிதும் ஏமாற்ற உணர்வே கிடைத்தது. அரசியல் சட்ட சரித்திர மாணவர்கள் என்ற முறையில், குடியரசுத் தலைவர் பேசினால், அது அரசாங்கமே பேசுவதாக அமையும் என்பதை அறிவோம். எனவே அந்த உரையில் ஏதாவது குற்றம் குறைகளை சுட்டிக்காட்டினால் அது குடியரசு தலைவருக்கு எதிரான தனிப்பட்ட கருத்தாக கருதக்கூடாது. கருத மாட்டார்கள் என்று மிகவும் நம்புகிறேன்.

குடியரசு தலைவர் என்றாலும் கூட, அரசு தெரிவிக்க வேண்டியதை சரியானபடி கூறவில்லை. எனவே, அது பற்றி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருதும் சில கருத்துகளை வெளிப்படுத்துகிறோம்.

"திட்டங்கள்" பற்றி "திட்டத்தின் தந்தை" என புகழப்படும் கிருஷ்ணமாச்சாரி எடுத்துரைத்ததை கேட்கும் பேறை நான் பெற்றுள்ளேன். குடியரசு தலைவர் உரையைப் படித்துப் பார்த்தால், அது ஒரு நிறுவனத்தின் செயல்பாட்டறிக்கை போல இருக்கிறதே தவிர, நம்பிக்கையையும், குறிக்கோளையும் அது எடுத்துக் கூறுவதாக அமையவில்லை.

நிறுவனத்தின் செயல்பாட்டறிக்கை என்று நான் குறிப்பிடுவதற்கு காரணம், அந்த நிறுவனம் இப்போது உறுப்பினர்களின் தேவையைக் கொண்டிருக்கிறது.

குடியரசுத் தலைவரின் உரைமீது பேசிய ஆளும் கட்சியினருக்கு அவர்களின் பேச்சில் ஒருவித பெருமிதமும், செருக்கும் இருப்பதை பார்த்தேன். 'ஓ... நாமும் மூன்று முறை தொடர்ச்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம். எனவே எது பேசினாலும் அது சரியாகத்தான் இருக்கும்; எதைச் செய்தாலும் சரியாக இருக்கும். எனவே சிறிய கட்சிகளுக்கு நம்மைத் தட்டிக் கேட்க உரிமை இல்லை" என்பதாக அவர்கள் எண்ணுகிறார்கள்.

பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு எந்தக் கட்சிக்கும் வெற்றிக்களிப்பை அடைய உரிமை உண்டு. ஆனால், நல்ல அமைப்பு முறையும் சரியாகவும் கட்டமைக்கப்பட்ட காங்கிரஸ் போன்ற கட்சி பல்வேறு அக்கறையும் கொள்கைகளும் கொண்ட எதிர்க்கட்சி குழுக்களை எதிர்த்து வெற்றி பெறுவது என்பது ஆச்சரியத்திற்குரியது அல்ல என்பதையும் உங்கள் அனுமதியோடு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

காங்கிரசின் பலம் அதனிடம் இல்லை, எதிர்க்கட்சிகளின் பலவீனத்தில்தான் காங்கிரஸ் கட்சியின் பலம் இருக்கிறது.

எனவே, வெற்றியில் பெருமிதம் கொள்வதைக் காட்டிலும் ஆளும் கட்சி பணிவையும், ஜனநாயகத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும் அதனால்தான் எடுத்த எடுப்பிலேயே முதல் கருத்தைக் கூறும்போதே பொதுத்தேர்தலில் நடந்த ஊழல்களை இந்தத் தரப்பு உறுப்பினர்கள் எடுத்துக் கூறினார்கள்.

தேர்தலில் நடைபெற்ற ஊழல் முறைகளைப் பற்றி இந்தத் தரப்பு உறுப்பினர்கள் பேசியபோது ஆளும் கட்சியினர் அவற்றை நிரூபிக்க முடியுமா? என்று கேட்க எழுந்தார்கள். ஆதாரங்கள் மட்டும் எங்கள் கைக்குக் கிடைக்கும் நிலைமை இருந்தால், அய்யா, நாங்கள் இந்த அவையில் அவை குறித்துப் பேசிக்கொண்டிருக்காமல் அவர்களை (ஆளும் கட்சியினரை) நீதிமன்றங்களில் சமர்ப்பித்திருப்போம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

போதுமான வசதிகளற்ற வகையில் வைக்கப்பட்டுள்ள மற்ற கட்சிகளுக்கு, தக்க ஆதாரம் காட்டி நிரூபிப்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல. அந்த விஷயத்தில் நாங்கள் நீதி நடவடிக்கைகளை விட இந்த பிரச்னையில் உள்ளடங்கியுள்ள தத்துவத்தையே பெரிதாக வலியுறுத்துகிறோம்.

சில காலத்துக்கு முன்பு, பெரு தொழில் நிறுவனங்களிடம் இருந்து ஆளும் கட்சி நன்கொடை பெறுவது சட்டபூர்வமானதுதான் என்றாலும் அது ஒழுங்கீனமான செயல் என்று உயர் நீதிமன்றங்கள் கண்டனம் தெரிவித்ததை நாம் பார்க்கவில்லையா? அவ்வாறு பெறுவது சட்டபூர்வமானதாக இருக்கலாம். ஆனால், தங்களுக்கான ஆயுதங்களை டாட்டா மற்றும் பிர்லாக்களின் ஆயுத தளவாட கூடங்களில் இருந்து அவர்கள் பெற்றது முற்றிலும் தார்மீகமற்ற நிலை இல்லையா?

முந்த்ராஸ்களிடம் கூட நிதியைப் பெற சென்றதை தங்களுக்கு தகுதிக் குறைவானதாக அவர்கள் பார்க்கவில்லை. அவர்களின் தேர்தல் நிதி எங்கிருந்து சேர்ந்தது என்பதை இந்த நாடு மறந்து விட்டதா?

இந்த அடிப்படையில்தான் ஆளும்கட்சி பெருமிதப்படுகிறதா? மற்ற கட்சிகளிடமும் கூட இதுபோன்ற ஊழல் செயல்பாடுகள் இருப்பதாக ஆளும் கட்சி உறுப்பினர்கள் கூறலாம். இந்த பரந்த துணைக்கண்டத்தின் மூத்த பெரும் கட்சி என்ற முறையில் உயரிய பாரம்பரிய மரபுகளை நிலைநாட்டுவது காங்கிரசின் தலையாய கடமை இல்லையா?

இந்த நேரத்தில் சமஸ்கிருத பண்டிட்களின் சொல் ஒன்று நினைவுக்கு வருகிறது. யதா ராஜா, ததா ப்ரஜா (அரசன் எவ்வழியோ, குடிகன்களும் அவ்வழியே).

மரபுகள் என்று எதை எல்லாம் காங்கிரஸ் உண்டாக்குகிறதோ, அவை அனைத்தையும் மற்ற கட்சிகள் பின்பற்றினாலும் பின்பற்றலாம்.

"பின்பற்றினாலும் பின்பற்றலாம்" என்ற வார்த்தையை நான் பயன்படுத்தக் காரணம், அந்த வார்த்தையில் "பின்பற்றாமல் இருந்தாலும் இருக்கலாம்" என்ற அர்த்தமும் அடங்கயிருக்கிறது.

எனவே எங்களின் முதல் கருத்தே இந்தத் தேர்தல் வெளிப்படையாகவும், சுதந்திரமாகவும், நடைபெறவில்லை. மக்களின் விருப்பம், சட்டப்பூர்வமாக தெரிந்து கொள்ளப்படவில்லை.

அடுத்த தேர்தலின்போதாவது, இலவச போனஸ் வழங்கும் முதலாளிகளுடனும், லாப வேட்டைக்காரர்களுடனும், பர்மிட்காரர்களுடனும் தொடர்புகொள்ளாமல் கங்காதரன் சின்ஹா மற்றொரு நாளில் இங்கே குறிப்பிட்டதைப் போல, பொதுத் தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பே ஆளும் கட்சி உறுப்பினர்களும் அமைச்சர்களும் தங்களின் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு மீண்டும் பதவிக்கு வர முடியுமா என்ற நான் சவால் விடுக்கிறேன்.

எனவே, குடியரசுத் தலைவர் பேச்சின் ஒரு பகுதியில், நாம் அனைவரும் ஜனநாயக மரபுகளைக் கட்டிக் காக்க வேண்டுமென்று -

(உறுப்பினர்களின் கூச்சல்)

திரு.ராமா ரெட்டி (மைசூர்): இதற்கு ஏதாவது முன்மாதிரி இருக்கிறதா?

மாநிலங்களவை தலைவர்: ஆறு மாதங்களுக்கு முன் ராஜிநாமா செய்ய முன்மாதிரி இருக்கிறதா என கேட்கிறார்.

புபேஷ் குப்தா (மேற்கு வங்கம்): ஒருவரது கன்னிப்பேச்சில் குறுக்கிடுவதற்கு முன்னுதாரணம் இல்லை.

சி.என். அண்ணாதுரை: ஆமாம், இது எனது கன்னிப் பேச்சுதான், ஆனால், குறுக்கீடுகளால் கூச்சமடைபவன் நான் அல்ல. எனவே, அவற்றை விரும்புகிறேன்.

Admin இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 03, 2023 4:25 pm

ஜனநாயகம், சோஷலிசம், தேசியம் - அண்ணாவின் விளக்கம்



இரண்டாவதாக, குடியரசுத் தலைவரின் உரையில் நான் மூன்று உன்னத தத்துவங்கள் மிளிருவதைக் காண்கிறேன் - ஜனநாயகம், சோஷலிசம், தேசியம்.

ஜனநாயகம் - ஜனநாயகத்தை பொறுத்தவரை, விகிதாசார பிரதிநிதித்துவ முறையும், அரசாங்கத்தின் குறிப்பிட்ட செயலுக்கு பொதுமக்களின் ஆதரவு உண்டா இல்லையா என்பதை அறிந்து கொள்ளும் வாக்கெடுப்பு முறையும் இந்த பெரிய துணை கண்டத்தில் அமல் ஆகாதவரை ஜனநாயகத்துக்கான எந்த பலனையும் நீங்கள் எதிர்பார்க்க முடியாது. முந்தைய பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளில் ஜனநாயக கட்டமைப்பில் நிலவிய பற்றாக்குறையை சரி செய்ய செயல்பட்டது போல எந்தவொரு விளக்கமும் குடியரசு தலைவரின் உரையில் அமையவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அது தற்போது தேவையா இல்லையா என்பதை விட குறைந்தபட்சம் இப்போதாவது ஜனநாயகத்தின் அந்த மாண்பு பற்றி சுதந்திரமாக சிந்திக்க முயற்சிக்கலாம்.

சோஷலிசம் - சோஷலிசத்தை பொறுத்தவரை, இந்த அவையில் மற்றொரு நாளில் ஒரு புதுவித பொருளாக்கம் தரப்பட்டது. மிகப்பெரிய தொழில் அதிபர்களான டாட்டா மற்றும் பிர்லா போன்றோரின் தொழிற்சாலை. நிறுவனங்களைப் பற்றி ராமமூர்த்தி எடுத்துரைத்தபோது மற்றொரு மதிப்புக்குரிய உறுப்பினர், பங்குகளைப் பற்றியும் லாபங்களைப் பற்றியும் வியத்தகு விளக்கம் அளிப்பதை பார்த்தேன்.

கோடி கோடியாக லாபம் குவிக்கப்பட்டாலும், டாட்டா, பிர்லாக்களின் பணப்பெட்டிக்குள் போகாமல், பங்குதாரர்களுக்குப் போய்விடுவதை அவர் விவரித்தார். இதுதான் பொருளாதார விளக்கம் என்றால் நமக்கேன் பொதுத்துறை, தனியார்துறை என்ற இரண்டு, எனது மதிப்பிற்குரிய நண்பர் தனியார் துறைதான் பொதுத்துறை என்றும், டாட்டா பிர்லாக்களால் நிர்வகிக்கப்படும் தொழிற்சாலைகள் அனைத்தும் பொதுத்துறையைச் சேர்ந்தவை என்றும் கருதினால் பொதுத்துறை, தனியார் துறை என்று ஏன் வேறுபாடு காட்டவேண்டும்?

பங்குகளும் லாபங்களும் பிரிக்கப்பட்டுத் தரப்படுகிறது என்று பேசியபோது வேறு குறிக்கோளை நோக்கி, அவர் கூற வந்த குறிக்கோளை விட்டு எங்கேயோ கடந்து பேசினார்.

இந்த பிரச்னை பற்றி ஆராய நாம் அமைத்த குழுக்கள், பலமுள்ள தொழில் சாம்ராஜ்யங்கள் ஏக போக உரிமைகளின் மேல் வளர்ந்திருப்பதாக கூறின. பிரதமர் கூட இந்த பிரச்னை பற்றி கவனிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இரண்டு திட்டங்களினால் உற்பத்தியான வளம் எங்கே, எப்படிப் போயின என்பதை கண்டுபிடிக்க ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அறிகிறேன்.

எனவே, இங்குள்ள சோஷலிசம் வேறு வகையானது என்று வாதிடுவதைவிட, அதற்கு வேறு ஏதாவது பெயரை வழங்கி விடலாம். சோஷலிசத்தின் பெயரை ஏன் இழுக்கிறீர்கள்? அதற்கு உங்கள் சொந்த விளக்கத்தை ஏன் தருகிறீர்கள்? சோஷலிசம் என்பது சேமநலம் மட்டுமல்ல, சேம நலத்திற்கு உறுதி தருவது மட்டுமல்ல. சமத்துவத்தை உண்டாக்கப் பாடுபடுவதுதான் சோஷலிசம்.

லாஸ்கியின் கூற்றின்படி, சமத்துவம் என்பது எல்லோரையும் ஒரே மாதிரியாக நடத்துவது அல்ல. எல்லோருக்கும் சமவாய்ப்புகளை வழங்குவது.

ஆனால், நமது நாட்டில், இங்கே சமவாய்ப்பு தரப்பட்டது அல்லது வழங்கி வருகிறோம் என்று நம்மால் கூற முடியுமா? தாழ்த்தப்பட்ட சமுதாயம், பிற்பட்ட சமுதாயம் என்பதெல்லாம் பின்னர் எதைக் குறிக்கின்றன?

ஹைதராபாத்தில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான மாநாடு நடைபெற்றபோது, அதில் பிரதமரும் ஜகஜீவன்ராமும் கலந்துகொண்டதாக சில காலத்துக்கு முன்பு பத்திரிகைகளில் படித்தேன். ஒருங்கிணைந்த கருத்தை வெளியிடாமல், பலதரப்பட்ட கருத்துக்களை அவர்கள் பேசினார்கள். பிரதமர் பேசும்போது, "இனிமேல் தாழ்த்தப்பட்டோருக்கும் பிற்பட்ட வகுப்பினருக்கும் தனித்தன்மைகள் வழங்கப்படக்கூடாது என்றார்"

ஆனால் ஜகஜீவன்ராம் பேசும்போது, "சமூகத்தின் அடிமட்டத்துக்கு விரட்டப்பட்ட அந்த சமூகத்தினருக்கு தொடர்ந்து சலுகைகள் தேவை" என்றார்.

இப்படி ஒரே கட்சியில் இருக்கும் இரண்டு பெரியவர்கள் இதுபோல முரண்பட்ட கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருக்கிறார்கள் என்றால், ஆளும் கட்சிக்கும், மற்ற கட்சிகளுக்கும் கொள்கை வேற்றுமை இருப்பதில் ஏதாவது வியப்பு இருக்குமா?

எனவே இங்கு சோஷலிசத்திற்குத் தரப்படும் பொருளும் செயல்படும் முறையும் உண்மையான சோஷலிசத்தை நோக்கி நம்மை அழைத்துச் செல்லவில்லை.

இந்தியாவின் நண்பரும், இந்த அரசாங்கத்தின் ஆதரவாளரும் அமெரிக்காவின் தூதரும் பொருளாதார நிபுணராயுமிருக்கிற டாக்டர் கால்பிரெய்த், நமது சோஷலிசத்தைப் பற்றிக் கூறியுள்ளதை இங்கு தெரிவிக்க விரும்புகிறேன். அவர் இதை "அஞ்சலக சோஷலிசம்" என்று கூறியுள்ளார். ஏன் பேராசிரியர் கால்பிரெய்த் அவ்வாறு கூறினார்?

படக்குறிப்பு, 1967 வெற்றிக்குப் பின் முதல் திமுக அமைச்சரவை பதவியேற்பு


இந்தியாவைப் போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் பொதுத்துறை நிறுவனங்கள் ஏற்று நடத்தும் தொழில்கள் அதிக வருவாயை பெருக்கும் நோக்குடனேயே செயல்படவேண்டும் என்பதற்காகவே அப்படி அவர் வலியுறுத்திக் கூறினார்.

கிடைக்கும் லாபத்தை மீண்டும் தொழிலேயே போட்டு மறுமுதலீடாக்கி மக்கள் நன்மைக்குப் பயன்படுத்த வேண்டும் என்பது அந்தப் பேச்சின் கருத்து. ஆனால் டி.டி.கிருஷ்ணமாச்சாரி பாசனத் திட்டமானாலும் மின்சாரத் திட்டமானாலும் தொழில் திட்டமானாலும் பொதுத் துறையில் எதிர்பார்க்கும் அளவுக்கு லாபம் வருவதில்லை என்கிறார்.

சோஷலிசத்திற்கு நாம் அளிக்கும் முரண்பட்ட விளக்கத்தால்தான் இப்படி நிலைமை இருக்கிறது. ஏராளமான பொருள் பொதுத்துறையில் போடப்பட்டிருந்தாலும் அதற்காக செலவிடப்பட்ட உழைப்புக்கேற்ற ஊதியமோ, எந்த நேரத்திற்காக முதலீடு செய்யப்படுகிறதோ அந்த நோக்கமோ நிறைவேறுவதில்லை.

சிந்த்ரி, அல்லது பாக்ரா அல்லது மற்ற திட்டங்களைப்பற்றி மக்களிடம் சிந்துபாடி விவரிக்க மேற்கொள்ளும் முயற்சி கூட அந்த திட்டங்களின் இலக்கை எட்டும் அளவுக்கு இல்லை.

இப்படிக் கூறுவதால், நான் திட்டங்களின் எதிர்ப்பாளன் என்று நினைத்துவிடக் கூடாது. என் ஆதரவு அனைத்தும் திட்டங்களுக்கும் பொதுத்துறைக்கும் உண்டு. இவ்வளவு குறைவான லாபம் ஈட்டும் வகையிலும் இவ்வளவு சேதாரத்துடனும் பொதுத்துறை இல்லாதபடி நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஊழலைப்பற்றிய வதந்திகள் நிறைய உலவுகின்றன. அதுபற்றி புள்ளி விவரங்கள் தரும் நிலையில் நான் இல்லை. ஆனால் ஊழலும் தவறான நிர்வாகமும், இதர கேடுகளும் பொதுத்துறையில் இருப்பதாக வதந்திகள் பரவலாக இருக்கின்றன.

எனவே, சோஷலிசம் என்ற குறிக்கோள் இருந்தாலும் அதை நோக்கி நாம் முன்னேறிச் செல்லவில்லை என்று குடியரசுத் தலைவர் தனது உரையில் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்றே உணர்கிறேன்.

தேசியம் - எந்தக் கட்சியைச் சார்ந்திருக்க நான் பெருமை கொள்கிறேனோ அந்தக் கட்சிக்கு இது மிகவும் நெருங்கிய தொடர்புள்ளதாகும். இப்போது அதிக வழக்கத்திலிருக்கும் வார்த்தையை உபயோகிக்க வேண்டுமானால் அதை "தேசிய ஒருமைப்பாடு" என்று அழைக்கலாம்.

ஆனால் அது பற்றி பேசும் முன்பு ஒன்றை தெரிவிக்க விரும்புகிறேன்.

சுதந்திரம் பெற்று 15 ஆண்டுகள் கழித்து, தேசிய அரசாங்கம் ஒன்று 15 ஆண்டுகள் ஆட்சி செலுத்திய பின்னரும், தேசிய ஒருமைப்பாட்டுக்கு முயற்சி எடுத்துக் கொள்வது இதுவரை செய்து வந்த, சிந்தித்து வந்தவற்றுக்கு எல்லாம் எதிர்மறையாகி விட்டது, என்று தானே பொருள்?

தேசிய தலைவர்கள் இத்தனை நாள் செய்து வந்த முயற்சி அனைத்தும் கனியவில்லை என்று தானே பொருள்?

இன்றைக்கு மட்டும் ஏன் தேசிய ஒருமைப்பாடு பற்றி பேசவும், திட்டம் தீட்டவும் புறப்பட்டுள்ளோம்?

மக்கள் ஒன்றுபட்டபின் ஒருமைப்பாட்டுக்கு என்ன வேலை?

நாங்கள் தென்னகத்திலிருந்து குறிப்பாக தமிழகத்தில் இருந்து வந்திருக்கிறோம். ஆனால் இங்கு ஆங்கிலத்தை அறிந்தபோதும் உறுப்பினர்கள் ஹிந்தியில் பேசுவதையும், கேள்வி கேட்பையும் பதில் பெறுவதையும் பார்க்கிறோம்.

அப்படிப் பேசும்போது அவர்கள் கண்கள் மின்னுவதைப் பார்க்கிறேன். அதன் பொருள் என்ன?

நீங்கள் ஹிந்தியை கற்றுக் கொள்ளுங்கள். இல்லையேல் இங்கு பேசாமல் இருங்கள் என்பதுதானே? இதுதான் தேசிய ஒருமைப்பாட்டுக்கான வழியா?

தேசிய ஒருமைப்பாடு என்று சொல்லுவது முன்னுக்குப்பின் முரணான வாசகம் என்றுதான் கூறுகிறேன்.

ஒருமைப்பாடு பெற்ற மக்கள் சமுதாயம்தான் நாடு ஆகிறது. அப்படி ஒரு நாடு உருவாகி இருந்தால் இப்போது ஒருமைப்பாட்டை வலியுறுத்த என்ன அவசியம் வந்தது?

காலநடையில் மறைந்து போன தத்துவங்களின் வறுமைதான் தேசிய ஒருமைப்பாடு.

எனவே, நாம் இது பற்றி மறுபடியும் சிந்திப்போம். நமக்கென அரசியலமைப்பு இருக்கிறது. பெரிய திறமைசாலிகள்தான் அரசியலமைப்பை உருவாக்கினார்கள். ஆனால் தேசியம் என்றால் என்ன என்பதை மறுபடியும் சிந்தித்துப் பார்க்க, மறு மதிப்பிட, புது விளக்கம் அளிக்க காலம் கனிந்து விட்டது.

இப்போது இந்தியாவின் ஒருபகுதியாக ஆகியுள்ள ஒரு நாட்டில் இருந்து நான் வந்திருக்கிறேன் என கோருகிறேன். அதில் வேறுபட்ட இன மக்கள் வாழ்கிறார்கள். அவர்கள் மற்றவர்களுக்குப் எதிரிகள் அல்ல.

நான் ஒரு திராவிடன். என்னை திராவிடன் என அழைத்துக்கொள்வதில் பெருமைப்படுகிறேன்.

இப்படிக் கூறுவதால் நான் வங்காளிக்கோ, மராட்டியருக்கோ, குஜராத்தியருக்கோ எதிரானவன் அல்ல.

ராபர்ட் பர்ன்ஸ் குறிப்பிட்டது போல, மனிதன் எப்படியிருந்தாலும் மனிதன் தான்.

என்னை திராவிட இனத்தை சேர்ந்தவன் என்று அழைத்துக் கொள்ளும்போது திராவிடனிடம் இந்த உலகத்துக்கு வழங்க திட்டவட்டமான, தெளிவான மற்றவைகளிடமிருந்து வேறுபட்ட சில திடமான, வித்தியாசமான கருத்து உள்ளது என நம்புகிறேன். சுயநிர்ணய உரிமையே எங்களின் தேவை.

இந்த அவையின் உறுப்பினர்கள் காட்டிய அன்பை பல நேரங்களில் பார்த்தேன். நான் இங்கு வந்து இவ்வளவு அன்பைப் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை. சில ஹிந்தி மொழி பேசும் உறுப்பினர்களால் ஏற்படுத்தப்படும் விரும்பத்தகாத செயல்களை அந்த அன்பு மறக்கடிக்க வைக்கிறது.

உங்களோடு ஒரே நாடாக இருக்கவும் எனக்கு விருப்பம்தான். ஆனால் ஆசை வேறு, யதார்த்தம் வேறு.

நாங்கள் ஒரே உலகத்தை விரும்புகிறோம். ஒரே அரசாங்கத்தை விரும்புகிறோம். எனினும் நாங்கள் தேசிய எல்லைகளை மறக்கத் தயாராக இல்லை.

இங்கு தாயாபாய் படேல் குஜராத் பற்றிப் பேசும்போது அனல் பறக்கப் பேசினார். தொழில் முன்னேற்றம் அடைந்த பகுதியைச் சேர்ந்த அவர், குஜராத்திலிருந்து வந்திருக்கிறேன். குஜராத்தைப் பற்றிப் பேசுகிறேன். என்றெல்லாம் பேசினார்.

எனது சென்னை மாநிலத்தை எடுத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு வகையிலும் அது பிற்போக்கானது. இங்கே உங்களுக்கு நான்கு எஃகு ஆலைகள் உள்ளன. நாங்களோ பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு எஃகு ஆலை வேண்டும் என்று கூக்குரலிட்டு வந்துள்ளோம். அவர்கள் என்ன அளித்தார்கள்? கனரக இயந்திர இலாகாவை எங்கள் அமைச்சருக்கு தந்தார்கள். எஃகு தொழிற்சாலையை அல்ல.

சுப்பிரமணியம் இங்கு வராமலிருந்தால் எஃகு ஆலை வேண்டுமென்று அங்கிருந்து வலியுறுத்திக் கொண்டிருப்பார்.

இது ராஜதந்திரமா அல்லது விவேகமா அல்லது அரசியல் உத்தியா? எதுவென்று எனக்குப் புரியவில்லை. அவரை இங்கு அழைத்து வந்து, தென்னகத்தின் கோரிக்கைக்கு அவரையே பதில் பேச வைத்திருக்கிறீர்கள். இதைத்தான் பிரிட்டிஷாரும் செய்து வந்தார்கள்.



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 03, 2023 4:27 pm

திராவிட நாடும் அண்ணாவும்
பிரி, ஆள், பண்டமாற்று நடத்தி பணம் வாங்கு, புள்ளி விவரங்களை வீசி வாதத்தைக் கெடு, போன்றவை பிரிட்டிஷ் ராஜ தந்திரத்தை போலத்தானே இருக்கிறது.

தவறான அடிப்படையில், குரோத மனப்பான்மையால் நாங்கள் பிரிவினையைக் கோரவில்லை. பிரிவினை என்றவுடன் வட பகுதியில் வாழ்வோரின் எண்ணத்தில், பாகிஸ்தான் பிரிவினைபோது நடந்த சம்பவங்கள் நினைவுக்கு வரும். பிரிவினையால் ஏற்பட்ட கொடும் விளைவுகளை நான் அறிவேன். அவர்களுக்கு என் அனுதாபம் உண்டு. ஆனால் நாங்கள் கோரும் பிரிவினை, பாகிஸ்தான் பிரிவினையில் இருந்து மாறுபட்டது.

எங்கள் லட்சியம் பரிசீலனை செய்யப்பட்டால், அனுதாபத்தோடு அது கவனிக்கப்பட்டால் நம்மிடையே குரோத உணர்ச்சி ஏற்பட அவசியம் இருக்காது. அப்போது பின் விளைவுகள் ஏதும் இருக்காது.

அதிர்ஷ்டவசமாக, தென்னகம் ஒரு தனி பூகோள பகுதியைக் கொண்டுள்ளது. அதை நாம் தக்காண பீடபூமி என்றும், தக்காண தீபகற்பம் என்றும் அழைக்கிறோம். எனவே, பிரிவினையால் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு மக்கள் குடிபெயர மாட்டார்கள்.

எனவே, அகதிகள் பிரச்சனை இருக்காது. எனவே அமைதியாக ஆழ்ந்து, அனுதாபத்தோடு இந்தப் பிரச்சினைகளை பாருங்கள்.

ஜோஸப் மேத்தன் (கேரளா): தென்னகத்தின் மொழி என்னவாக இருக்கும்?

சி.என். அண்ணாதுரை: மொழி மற்றும் இதர விபரங்கள் அரசியல் நிர்ணய சபையில் தீர்மானிக்கப்படும். என்னதான் இங்கு இருக்கும் நிலையை எடுத்துரைத்தாலும், எங்களுக்கு அது கிடைக்காமல் போனாலும் இந்திய அரசின் மீதுதான் எங்கள் மக்கள் குற்றம்சாட்டுவார்கள்.

புதிய தொழிற்சாலைகள் உடனே ஏற்படுத்த முடியாததற்கு சில இயற்கையான காரணங்கள் இருக்கலாம். ஆனால் எந்த விநாடி, இரும்பாலை சேலத்தில் வைக்க மறுக்கப்படுகிறதோ எந்த விநாடி புதிய ரயில்பாதை போட மறுக்கப்படுகிறதோ எந்த விநாடி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை வைக்க மறுக்கப்படுகிறதோ எந்த விநாடி புதியரயில் பாதை போட மறுக்கப்படுகிறதோ அந்த விநாடியே தென்னகத்து வீதியோர மனிதன் உடனே எழுந்து கூறுகிறான்.

இதுதான் டெல்லியின் போக்கு, வடக்கு ஏகாதிபத்தியத்தின் போக்கு. அந்த ஏகாதிபத்தியத்தில் இருந்து வெளியேறாதவரை உங்கள் நாட்டை நீங்கள் பாதுகாப்பாக செழிப்பாக முன்னேற்றமாக வைத்திருக்க முடியாது.

எனவே நான் இந்த அவையில் நான் பிரிவினை பற்றிப் பேசுகிறேன் என்றால் விழிப்புணர்வு மிக்கவர்களின் சார்பில் பேசுகிறேன் என்று பொருள்.

மீராபென் சில நாட்களுக்கு முன்பு கூறியதுபோல், பிரிட்டிஷாரை எதிர்த்தபோது உருவாகிய இயற்கை ஒற்றுமை நிலையானது என்று நினைக்கக்கூடாது.

பிரிவினைத் தத்துவம் அதற்குரிய சரியான மொழியில் கூறவேண்டுமென்றால் சுயநிர்யண உரிமை, உலகப்புகழ் பெற்ற தலைவர்களால் ஏன் இந்த துணை கண்டத்தின் நமது பிரதமராலேயே ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது.

என் நினைவு சரியாக இருக்குமானால் காபுர்தாலா மைதானத்தில் நேரு அதிகாரப் பூர்வமாக இவ்வாறு கூறினார்.

ஒரு நிறுவனம் என்ற முறையில் காங்கிரஸ் இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் இந்திய யூனியனில் இருக்கவேண்டும் என்றே முயற்சி செய்யும். ஆனால் ஏதாவது ஒருபகுதி பிரிந்துபோக வேண்டுமென்றால் அதற்கு காங்கிரஸ் சம்மதம் தெரிவிக்கும் என்று அவர் பேசினார்.

எனவே சுயநிர்ணய உரிமையை காங்கிரஸும் ஒப்புக்கொண்டிருக்கிறது.

நாட்டின் பிரதமர் ஆன பிறகும் தாராள சிந்தனையும், ஜனநாயக உணர்வும் நேருவின் நெஞ்சில் இன்னும் கனன்று விட்டு எரிந்து கொண்டிருப்பதாக நினைத்து இந்தத் துணிச்சலான வேண்டுகோளை விடுக்கிறேன்.

பிரிவினையால் இந்தியா பீடிக்கப்பட்டு விடக் கூடாது என்று உறுதியுடன் இருக்கும்போது ஏன் தீபகற்பத்துக்கு சுயநிர்ணய உரிமையை அளிக்கக் கூடாது? அப்படி முடிவெடுப்பது இந்தியாவின் தரத்தை மேம்படுத்துவதாக அமையும்.

"இந்தியா ஒன்று" என எண்ணுவோருக்கு, அது இங்கும் அங்கும் குழப்பம் மிகுந்த கதம்பப் பகுதிகளாக இருப்பதை விட, நேசம் வாய்ந்த பல நாடுகளாக இருப்பது நல்லது தானே?

இங்கு உறுப்பினர்கள் எழுந்து அந்தத் திட்டம் வேண்டும். இந்தத் திட்டம் வேண்டும் என்று பிரித்து வாதிடும்போது, "இந்தியா ஒன்று" என்பதையும் அது பிரிக்க முடியாதது என்பதையும் அவர்கள் மறந்து விடவில்லையா?

மராட்டிய நண்பர்கள் மராட்டிய மாநிலம் கோரியது போல, இந்தியா ஒன்று என்பதை மறந்துவிடவில்லையா? பெருபாரியை பிரித்து பாகிஸ்தானுக்கு வழங்கும்போது வங்காளிகள் கொதிப்படையவில்லையா?

ஒரிசாவின் கோரிக்கையால் பீஹார் கொதிப்படையவில்லையா? அஸ்ஸாம் மற்றும் வங்கம் ஆகிய இரு பகுதிகளுக்கு இடையே, மொழித் தகராறால் வெறுப்பு ஏற்படவில்லையா?

இவை எல்லாம் பிராந்திய நோக்கு என்று முற்றாக மறுப்பது இதையெல்லாம் பூசி மெழுகவே ஆகும்.

எனவே இந்த பிரச்னையைத் தெளிவாகப் பார்க்கவேண்டும் என்று அவையை கேட்டுக் கொள்கிறேன். நான் எங்கிருந்து வந்தேனோ, அந்த திராவிட பூமிக்கு சுயநிர்ணய உரிமை தாருங்கள்.

என்.எம்.லிங்கம்: உங்கள் தத்துவப்படி சுய நிர்ணய உரிமை தருவதானால், இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களுக்கும் சுய நிர்ணய உரிமை கேட்பதுதானே? அது பொருத்தமாக இருக்கும்.

சி.என். அண்ணாதுரை: நீங்கள் அதற்கும் ஆதரவாகப் பேசலாம். ஆனால் நான், எனது திராவிட நாட்டுக்கு உரிமை கேட்கிறேன். அப்படிக் கேட்பது ஏதோ குரோதத்தால் அல்ல. அப்படி நாடு பிரிக்கப்பட்டால் சிறிய, ஒன்றுபட்ட, ஒரே மாதிரியான மக்கள் வாழும் நாடாக மாறும். எல்லா பகுதியும் கலந்து பழகி, வளர்ச்சிப் பூர்வமாக ஒன்றுபடுவார்கள். அப்போது பொருளாதார முன்னேற்றத்தையும், சமுதாய முன்னேற்றத்தையும் மிக நல்ல முறையில் எட்டலாம்.

டெல்லிக்கு நான் வந்து 10 நாட்களாகின்றன. எல்லா இடங்களிலும் நான் சுற்றித் திரியவில்லை ஆனாலும், நான் மரம் அடர்ந்த சாலைகளுக்கு, புதிய வீதிகளுக்கு, பூங்காக்களுக்கு சென்றேன். இங்கே ஒரு வீதிக்காவது தென்னாட்டைச் சேர்ந்தவரின் பெயரை வைக்க வேண்டுமென்ற எண்ணமே இந்திய அரசுக்கு தோன்றாதது ஏன்?

இந்த மனப்பான்மை, தென்னாட்டு மக்களை இரண்டாந்தர மக்களாக நீங்கள் கருதுவதைக் காட்டவில்லையா?

லட்சுமி மேனன் (வெளியுறவு இணை அமைச்சர்): தியாகராஜா மார்க் என்ற ஒரு சாலை இருக்கிறது. இதை வைத்து தென்னகத்தவர்களை இரண்டாம் தரமானவர்கள் என்று அர்த்தம் கொள்வதா?

ராமரெட்டி: சங்கீத வித்வான் தியாகராஜாவின் பெயரில் ஒரு சாலை இருக்கிறதே?

ஒரு உறுப்பினர்: இதைவிட உங்களுக்கு இன்னும் என்ன வேண்டும்?

(மேலும் பல குறுக்கீடுகள்)

சி.என். அண்ணாதுரை: லிங்கம் அவர்களின் வாதத்தை கண்டு வியக்கிறேன். ஒரு தியாகராயா வீதியால் அது சர் தியாகராயர் பெயரில் அமைந்ததோ அல்லது கீர்த்தனை புகழ் தியாகராயர் பெயரால் அமைந்ததோ எனத் தெரியவில்லை அவர் திருப்தி அடைவாரேயானால் நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன், அதுமட்டும் தென்னகத்துக்குப் போதாது.

தெற்கே வாருங்கள், மோதிலால் நேரு சோலையில் உலவலாம். நேரு வாசக சாலையில் நுழையலாம், கமலா நேரு மருத்துவமனைக்குப் போகலாம்.

ராமாரெட்டி: இது ஒருமைப்பாட்டைக் காட்டுகிறது.

மாநிலங்களவைத் தலைவர்: ஆர்டர், ஆர்டர் அவர் தொடர்ந்து பேசட்டும்.

சி.என். அண்ணாதுரை: அபுல்கலாம் ஆசாத் சாலையில் வாகனத்தில் பயணிக்கலாம். அத்தகைய விஷயம் இங்கு ஏன் இல்லை? தெற்கே உள்ளவர்களின் எண்ணத்தைப் பாருங்கள். தெற்கை பற்றிப் பேசும்போது தெற்கத்திய நண்பர்களே எழுந்து, அப்படிப் பேசாதே. எல்லாம் சரியாக இருக்கிறது என்கிறார்கள்.

இது பய உணர்ச்சியால் வருவது தென்னகப் பிரதிநிதிகளாக இருப்பதால் ஏதாவது கேட்டால் பிரிவினை வாதிகளான திமுகவில் சேர்ந்து விட்டனரோ, என்று பிறர் அஞ்சுவார்களோ, அதனால் நமது அரசியல் எதிர்காலம் பாழ்பட்டுவிடுமோ என அவர்கள் அஞ்சுகிறார்கள்.

எனவேதான் எழுந்து, அந்த வீதி இருக்கிறது என்கிறார்கள். இது எனக்குத் தெரியாதா? தென்னகத்தில் இருந்து வந்துள்ள மற்ற அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் அறிந்திருப்பது போலவே நானும் அந்த விவரங்களை அறிந்திருக்கிறேன்.

நான் ஒரு தேசிய கொள்கைக்காக பேசுகிறேன். குறுகிய மனப்பான்மைக்காக அல்ல, கட்சிக் கொள்கைக்காக அல்ல.

என்னுடைய பெருமைக்குரிய நாட்டுக்கு சுயநிர்யண உரிமை கோருகிறேன். அதன்மூலம், அந்த நாடு உலகுக்கு தனது பங்களிப்பை செலுத்தும். அய்யா எங்களுக்கென்று ஒரு தனிக் கலாசாரம் உண்டு.

திராவிட நாட்டிலில் இருக்கும் கலாசாரத்துக்கும் பிற பகுதிகளிலுள்ள கலாசாரத்திற்கும் மேலேழுந்தவாரியாக ஒற்றுமை நிலவலாம்.

இமய மலை முதல் கன்னியாகுமரி வரை ராமனும், கிருஷ்ணனும் வழிபடப்படுகிறார்கள். அதனால் இந்தியா ஒற்றுமைப்பட்டுள்ளது என்று தாங்கள் முன்பு ஒருமுறை பேசிய பாண்டித்யம் மிகுந்த வாசகங்கள் என் நினைவுக்கு வருகின்றன. அதேபோல உலகம் முழுவதும் மரியாதையுடன் பயத்துடனும் ஏசுநாதர் பிரார்த்தனை செய்யப்படுகிறார்.

இருந்தாலும் ஐரோப்பாவில் பலப்பல தேசிய நாடுகள் உள்ளன. புதிய, புதிய தேசிய நாடுகள் உலகில் உருவாக்கிக் கொண்டே இருக்கின்றன.

ஆகையால், தென்னகத்தில் கொதித்தெழும் புதிய தேசிய இனம் பற்றி குடியரசு தலைவர் எதுவும் குறிப்பிடாதது பற்றி நான் மிகவும் வருந்துகிறேன்.

ஜனநாயகம், சோஷலிசம், தேசியம் ஆகிய இந்த மூன்றில் - ஜனநாயகம் உருக்குலைக்கப்பட்டிருக்கிறது, சோஷலிசம் காரமற்றதாக்கப்பட்டிருக்கிறது, தேசியம் தவறான பொருளுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன்.

வரும் ஆண்டுகளில் புதிய எண்ண ஓட்டத்தின் விளைவாக தென்னகத்தின் தேவையும் தத்துவமும் புரிந்து கொள்ளப்பட்டு, நான் சார்ந்திருக்கும் திராவிட நாட்டுக்கு சுயநிர்ணய உரிமை வழங்கப்படும் என்ற நம்பிக்கையுடன் உரையை நிறைவு செய்கிறேன்.


BBC News தமிழ்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34954
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 03, 2023 6:33 pm

அண்ணா உயிருடன் இருந்திருந்தால் தமிழ் நாட்டில் ஊழல் மிக்க அரசுகள் தோன்றி இருக்காது.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக