புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 4:24 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm
» இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள்
by சிவா Yesterday at 8:20 pm
» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Yesterday at 8:19 pm
» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Yesterday at 8:17 pm
» தேசியச் செய்திகள்
by சிவா Yesterday at 7:03 pm
» இன்று உலக பட்டினி தினம்
by சிவா Yesterday at 7:01 pm
» நாட்டை துண்டாடியவர்களுக்கு பாடப்புத்தகத்தில் இடம் இல்லை
by சிவா Yesterday at 6:57 pm
» நிறம் மாறும் வியாழன் கிரகத்தின் கோடுகள்: காரணம் என்ன?
by சிவா Yesterday at 6:51 pm
» செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர்
by சிவா Yesterday at 6:48 pm
» வேலை மோசடி: ஓமனில் விற்கப்படும் பெண்கள்; என்ன நடக்கிறது, பின்னணி என்ன?
by சிவா Yesterday at 6:45 pm
» பட்டுப் போன்ற முடிக்கு நெல்லி பொடி
by சிவா Yesterday at 6:40 pm
» புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
by சிவா Yesterday at 6:34 pm
» அறிவியல் கோட்பாடுகளின் பிறப்பிடமே வேதங்கள்தான்: இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்
by சிவா Yesterday at 6:22 pm
» 75 ரூபாய் நாணயம் --
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எஸ் . பாலசுப்ரமணியன் மோகமலர் நாவல் வேண்டும்
by சிவா Yesterday at 6:02 pm
» கருத்துப்படம் 28/05/2023
by mohamed nizamudeen Yesterday at 10:48 am
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:21 am
» பரம்பரை வீட்டு வைத்தியம்
by ஜாஹீதாபானு Sat May 27, 2023 3:38 pm
» மையற்ற கிறுக்கல்கள்
by சரவிபி ரோசிசந்திரா Sat May 27, 2023 8:35 am
» செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence
by T.N.Balasubramanian Fri May 26, 2023 7:15 pm
» காங்கிரஸ் செய்தால் சரி; பா.ஜ., செய்தால் தவறா : எதிர்க்கட்சிகளின் எகத்தாள பாலிடிக்ஸ்
by T.N.Balasubramanian Fri May 26, 2023 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Fri May 26, 2023 6:52 pm
» கணைய புற்றுநோய்க்கு தடுப்பூசி?
by T.N.Balasubramanian Fri May 26, 2023 6:39 pm
» தமிழ்நாட்டில் செறிவூட்டப்பட்ட அரிசி! - விளைவுகள் தெரியாமல் அனுமதிக்கிறதா அரசு?
by Dr.S.Soundarapandian Fri May 26, 2023 12:44 pm
» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (37)
by Dr.S.Soundarapandian Fri May 26, 2023 12:29 pm
» நிவேதா ஜெயநந்தன் நாவல்கள்
by prajai Thu May 25, 2023 10:37 pm
» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Thu May 25, 2023 10:03 pm
» மூட்டுவலி எதனால் வருகிறது… வராமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
by சிவா Thu May 25, 2023 9:40 pm
» தொலையாத வார்த்தைகள் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu May 25, 2023 1:55 pm
» அறம் சொல்லும் திருக்குறளே அகிலம் காக்கும் கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu May 25, 2023 1:30 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Thu May 25, 2023 1:14 am
» பீகாரில் ஷேர்ஷாபாதி முஸ்லிம் பெண்களின் திருமணத்தில் இன்னும் ஏன் இவ்வளவு சிரமங்கள்?
by சிவா Thu May 25, 2023 12:34 am
» தி கேரளா ஸ்டோரி = திரைப்படம்
by சிவா Wed May 24, 2023 11:48 pm
» ₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி
by சிவா Wed May 24, 2023 11:33 pm
» மாதவிடாய்: சிறுவர்களும் ஆண்களும் இதைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டியது ஏன் முக்கியமானது?
by ஸ்ரீஜா Wed May 24, 2023 5:24 pm
» வருடங்கள், அயணங்கள், ருதுக்கள், மாதங்கள், பக்ஷங்கள், திதிகள், வாஸரங்கள், நட்சத்திரங்கள், கிரகங்கள்
by ஸ்ரீஜா Wed May 24, 2023 5:06 pm
» முதலுதவி - முழுமையான கையேடு
by ஸ்ரீஜா Wed May 24, 2023 3:17 pm
» ஃபர்ஹானா - ஒரு ‘கூண்டுக்கிளி’யின் விடுதலைப் போர்!
by ஸ்ரீஜா Wed May 24, 2023 3:13 pm
» ஶ்ரீ வேணுகோபாலன் நாவல்களுக்கான தேடல்
by திருமதி.திவாகரன் Wed May 24, 2023 8:28 am
» Erotomania - என்பது ஒரு மனநலக் குறைபாடு. காதல் தொடர்பான மாயத் தோற்றம்
by சிவா Wed May 24, 2023 5:14 am
» இளையராஜா பாடல்கள்
by heezulia Wed May 24, 2023 12:54 am
» மனிதர்களின் உறுப்புகள் இயற்கையிலேயே இத்தனை 'பிழைகளுடன்' படைக்கப்பட்டிருப்பது ஏன்?
by சிவா Wed May 24, 2023 12:20 am
» பப்புவா நியூகினியா நாட்டு மொழியில் திருக்குறளை மொழிபெயர்த்த தமிழ் தம்பதி
by சிவா Wed May 24, 2023 12:06 am
» மோடியை, “தலைவா” என்ற ஆஸி பிரதமர்: நிகழ்வின் முக்கிய அம்சங்கள்
by சிவா Tue May 23, 2023 11:59 pm
» விண்வெளிக்குச் சென்ற முதல் அரேபிய பெண் ரய்யானா பர்னாவி
by சிவா Tue May 23, 2023 11:37 pm
» புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் திட்டம்
by சிவா Tue May 23, 2023 10:28 pm
» வெம்பு விக்ரமனின் நாவல்களுக்கான தேடல்
by திருமதி.திவாகரன் Tue May 23, 2023 8:55 pm
» ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியுமா?
by சிவா Tue May 23, 2023 6:10 pm
» மையற்ற கிறுக்கல்கள்
by சரவிபி ரோசிசந்திரா Tue May 23, 2023 6:02 pm
by சிவா Today at 4:24 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm
» இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள்
by சிவா Yesterday at 8:20 pm
» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Yesterday at 8:19 pm
» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Yesterday at 8:17 pm
» தேசியச் செய்திகள்
by சிவா Yesterday at 7:03 pm
» இன்று உலக பட்டினி தினம்
by சிவா Yesterday at 7:01 pm
» நாட்டை துண்டாடியவர்களுக்கு பாடப்புத்தகத்தில் இடம் இல்லை
by சிவா Yesterday at 6:57 pm
» நிறம் மாறும் வியாழன் கிரகத்தின் கோடுகள்: காரணம் என்ன?
by சிவா Yesterday at 6:51 pm
» செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர்
by சிவா Yesterday at 6:48 pm
» வேலை மோசடி: ஓமனில் விற்கப்படும் பெண்கள்; என்ன நடக்கிறது, பின்னணி என்ன?
by சிவா Yesterday at 6:45 pm
» பட்டுப் போன்ற முடிக்கு நெல்லி பொடி
by சிவா Yesterday at 6:40 pm
» புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
by சிவா Yesterday at 6:34 pm
» அறிவியல் கோட்பாடுகளின் பிறப்பிடமே வேதங்கள்தான்: இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்
by சிவா Yesterday at 6:22 pm
» 75 ரூபாய் நாணயம் --
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எஸ் . பாலசுப்ரமணியன் மோகமலர் நாவல் வேண்டும்
by சிவா Yesterday at 6:02 pm
» கருத்துப்படம் 28/05/2023
by mohamed nizamudeen Yesterday at 10:48 am
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:21 am
» பரம்பரை வீட்டு வைத்தியம்
by ஜாஹீதாபானு Sat May 27, 2023 3:38 pm
» மையற்ற கிறுக்கல்கள்
by சரவிபி ரோசிசந்திரா Sat May 27, 2023 8:35 am
» செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence
by T.N.Balasubramanian Fri May 26, 2023 7:15 pm
» காங்கிரஸ் செய்தால் சரி; பா.ஜ., செய்தால் தவறா : எதிர்க்கட்சிகளின் எகத்தாள பாலிடிக்ஸ்
by T.N.Balasubramanian Fri May 26, 2023 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Fri May 26, 2023 6:52 pm
» கணைய புற்றுநோய்க்கு தடுப்பூசி?
by T.N.Balasubramanian Fri May 26, 2023 6:39 pm
» தமிழ்நாட்டில் செறிவூட்டப்பட்ட அரிசி! - விளைவுகள் தெரியாமல் அனுமதிக்கிறதா அரசு?
by Dr.S.Soundarapandian Fri May 26, 2023 12:44 pm
» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (37)
by Dr.S.Soundarapandian Fri May 26, 2023 12:29 pm
» நிவேதா ஜெயநந்தன் நாவல்கள்
by prajai Thu May 25, 2023 10:37 pm
» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Thu May 25, 2023 10:03 pm
» மூட்டுவலி எதனால் வருகிறது… வராமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
by சிவா Thu May 25, 2023 9:40 pm
» தொலையாத வார்த்தைகள் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu May 25, 2023 1:55 pm
» அறம் சொல்லும் திருக்குறளே அகிலம் காக்கும் கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu May 25, 2023 1:30 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Thu May 25, 2023 1:14 am
» பீகாரில் ஷேர்ஷாபாதி முஸ்லிம் பெண்களின் திருமணத்தில் இன்னும் ஏன் இவ்வளவு சிரமங்கள்?
by சிவா Thu May 25, 2023 12:34 am
» தி கேரளா ஸ்டோரி = திரைப்படம்
by சிவா Wed May 24, 2023 11:48 pm
» ₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி
by சிவா Wed May 24, 2023 11:33 pm
» மாதவிடாய்: சிறுவர்களும் ஆண்களும் இதைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டியது ஏன் முக்கியமானது?
by ஸ்ரீஜா Wed May 24, 2023 5:24 pm
» வருடங்கள், அயணங்கள், ருதுக்கள், மாதங்கள், பக்ஷங்கள், திதிகள், வாஸரங்கள், நட்சத்திரங்கள், கிரகங்கள்
by ஸ்ரீஜா Wed May 24, 2023 5:06 pm
» முதலுதவி - முழுமையான கையேடு
by ஸ்ரீஜா Wed May 24, 2023 3:17 pm
» ஃபர்ஹானா - ஒரு ‘கூண்டுக்கிளி’யின் விடுதலைப் போர்!
by ஸ்ரீஜா Wed May 24, 2023 3:13 pm
» ஶ்ரீ வேணுகோபாலன் நாவல்களுக்கான தேடல்
by திருமதி.திவாகரன் Wed May 24, 2023 8:28 am
» Erotomania - என்பது ஒரு மனநலக் குறைபாடு. காதல் தொடர்பான மாயத் தோற்றம்
by சிவா Wed May 24, 2023 5:14 am
» இளையராஜா பாடல்கள்
by heezulia Wed May 24, 2023 12:54 am
» மனிதர்களின் உறுப்புகள் இயற்கையிலேயே இத்தனை 'பிழைகளுடன்' படைக்கப்பட்டிருப்பது ஏன்?
by சிவா Wed May 24, 2023 12:20 am
» பப்புவா நியூகினியா நாட்டு மொழியில் திருக்குறளை மொழிபெயர்த்த தமிழ் தம்பதி
by சிவா Wed May 24, 2023 12:06 am
» மோடியை, “தலைவா” என்ற ஆஸி பிரதமர்: நிகழ்வின் முக்கிய அம்சங்கள்
by சிவா Tue May 23, 2023 11:59 pm
» விண்வெளிக்குச் சென்ற முதல் அரேபிய பெண் ரய்யானா பர்னாவி
by சிவா Tue May 23, 2023 11:37 pm
» புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் திட்டம்
by சிவா Tue May 23, 2023 10:28 pm
» வெம்பு விக்ரமனின் நாவல்களுக்கான தேடல்
by திருமதி.திவாகரன் Tue May 23, 2023 8:55 pm
» ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியுமா?
by சிவா Tue May 23, 2023 6:10 pm
» மையற்ற கிறுக்கல்கள்
by சரவிபி ரோசிசந்திரா Tue May 23, 2023 6:02 pm
இந்த வார அதிக பதிவர்கள்
சிவா |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஸ்ரீஜா |
| |||
mohamed nizamudeen |
| |||
திருமதி.திவாகரன் |
| |||
heezulia |
| |||
சரவிபி ரோசிசந்திரா |
| |||
ஜாஹீதாபானு |
| |||
M. Priya |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள் யார்?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
தமிழக பட்ஜெட்டில் தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை செப்டம்பர் முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், உரிமைத் தொகை பெற தகுதியானவர்கள் எப்படி தேர்வு செய்யப்படுவார்கள், யார் தகுதியானவர்கள் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. |
2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை எப்போது வழங்குவார்கள் என்று குடும்பத் தலைவிகள் இடையே பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. தி.மு.க ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்தும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்துவதைப் பற்றிய அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால், எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்து வந்தன.
இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையில், தகுதிவாய்ந்த குடுமபத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். மேலும், இதற்காக பட்ஜெட்டில் ரூ.7,000 கோடி ஒதுக்கியுள்ளதாக அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு பெரும் வரவேற்பு பெரிய அளவில் இருந்தாலும், முதலில் குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டு, இப்போது தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் என்றால் எப்படி என்று எதிர்க்கட்சியினர் விமர்சனங்களை முன்வைத்தனர்.
அதே நேரத்தில், அரசு ஊழியர்கள், வருமானவரி செலுத்துபவர்கள் வரிசையில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை தேவை இருக்காது என்று ஆளும் தி.மு.க தரப்பில் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். |
தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குவதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குவதற்கு தகுதிவாய்ந்த குடும்பத்தலைவிகள் எப்படி தேர்வு செய்யப்படுவார்கள் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
தமிழ்நாட்டில் மொத்தம் 2.2 கோடி குடும்ப அட்டைகள் இருக்கின்றனர். இந்த குடும்ப அட்டைகள் மொத்த 4 வகையான குடும்ப அட்டைகள் இருக்கிறது.
1. AAY, 2. PHH, 3. NPHH, 4. NPHH-S என 4 வகையான குடும்ப அட்டைகள் உள்ளன.
தமிழ்நாட்டில் அந்தியோதயா அட்டைகள் வைத்திருப்பவர்கள் 18,64,201 குடும்ப அட்டைகள் உள்ளன. இவர்கள் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு மாதம் 35 கிலோ அரிசி வழங்கப்படுகிறது.
PHH அட்டை என்கிற முன்னுரிமை குடும்ப அட்டைகளுக்கும் அரிசி வழங்கப்படுகிறது. அதே போல, NPHH என்கிற முன்னுரிமை அல்லாத குடும்ப அட்டைகளுக்கும் அரிசி வழங்கப்படுகிறது. இந்த அரிசி அட்டைகள் மட்டும் 1,98,24, 931 குடும்ப அட்டைகள் இருக்கிறது.
மேலும், NPHHS சர்க்கரை மட்டுமே வழங்கப்படுகிற அட்டைகள் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல், கௌரவ அட்டைகள் இருக்கின்றன. இந்த குடும்ப அட்டையை அடையாள அட்டையாக மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதில், AAY, PHH ஆகிய 2 வகை கும்பஅட்டை குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தெரிய வருகிறது.
“அனைத்துப் பெண்களுக்கும் ரூ.1000 தருவதுதானே திமுக வாக்குறுதி...” - உரிமைத் தொகை மீது இபிஎஸ் விமர்சனம் |
“திமுக தேர்தல் வாக்குறுதியில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்குவதாக அறிவித்துவிட்டு இப்போது தகுதிவாய்ந்த பெண்களுக்கு என்று கூறுவது ஏற்புடையது அல்ல” என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் இன்று காலை தாக்கல் செய்யப்பட்டது. இது திமுக அரசின் 2வது முழுமையான பட்ஜெட். 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 10 மணிக்கு இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம் ஆகியன அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "கல்வியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது உள்ளிட்ட பிரச்சினைகளை கண்டித்து சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தோம். விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு குறித்து விவாதிக்க அனுமதி கோரினோம். அனுமதி வழங்கப்படவில்லை. அதனால் நாங்கள் வெளியேறினோம். நீட் தேர்வை இதுவரை ரத்து செய்யவில்லை. இரண்டு ஆண்டுகளில் அதிகளவில் கடன் வாங்கியுள்ளனர். எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் விற்பனை நடக்கிறது. இளைஞர்கள் மத்தியில் போதைப்பழக்கம் அதிகரித்துள்ளது.
திமுக ஆட்சியில் சொத்து வரி, பால் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் ஜிஎஸ்டி., கலால் வரி, பத்திரப்பதிவு, பெட்ரோல், டீசல் வரி வருவாய் உயர்ந்துள்ளது. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது உண்மையில் தமிழகத்தில் வருவாய் பற்றாக்குறை பூஜ்ஜியமாக இருந்திருக்க வேண்டும். திமுக ஆட்சியில் வரி வருவாய் அதிகரித்தபோதும் வருவாய் பற்றாக்குறை வெறும் ரூ30 ஆயிரம் கோடி மட்டுமே குறைந்துள்ளது. மேலும் பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறையை குறைக்க எந்த திட்டமும் வகுக்கவில்லை.
அதேபோல் திமுக தேர்தல் வாக்குறுதியில் அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை 1000 ரூபாய் என்று சொல்லிவிட்டு இப்போது தகுதியான குடும்ப தலைவிக்கு என்கிறார்கள். ரூ.1000 உரிமைத்தொகையை பெறுவதற்கான தகுதி என்னவென்று தெரிவிக்கவில்லை. ரூ.7000 கோடி ஒதுக்கிவிட்டு 1 கோடி பேருக்கு ரூ.1000 கொடுக்க முடியுமா என்று தெரியவில்லை" என்றார்.
முன்னதாக இன்று சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், "தகுதிவாயந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்பட இருக்கிறது. ஒன்றிய அரசால், பெருமளவு உயர்த்தப்பட்டுள்ள சமையல் எரிவாயு விலை, விலைவாசி உயர்வால் அதிகரிக்கும் குடும்பச் செலவுகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் என்பது அவர்களது அன்றாட வாழ்க்கைக்குப் பேருதவியாக இருக்கும்.
சிறப்புமிக்க இந்த திட்டம் கலைஞரின் நூற்றாண்டான இந்த ஆண்டில், திராவிட இயக்க மாதம் என சொல்லத்தக்க செப்டம்பர் மாதத்தில், பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 15ம் நாள் முதல் இத்திட்டம் முதல்வரால் தொடங்கிவைக்கப்பட இருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் மகளிர் பயன்பெறுவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும். தமிழ்நாடு மகளிரின் சமூக பொருளாதார வாழ்வில் ஒரு புரட்சியை ஏற்படுத்தக்கூடிய இத்திட்டத்திற்காக இந்த வரவு செலவுத் திட்டத்தில் 7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்று கூறியிருந்தார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33936
இணைந்தது : 03/02/2010
எம லோகத்திற்கு ஒரு துஷ்டனின் உயிர் வந்தது.
எமதர்மன் அவனை வரவேற்று நரகத்தை காண்பித்தான்.
உள்ளே இருந்தவர்கள் அமிர்த பானம் குடித்துக்கொண்டும்
ஆட்டம் பாட்டம் முழங்க ஊர்வசி ரதி போன்ற பெண்கள் நடனமாடி
அங்கிருந்தவர்களை குஷிப்படுத்திக்கொண்டும் இருந்தனர்.
எமதர்மா, எனக்கு பேராசை ஒன்றும் இல்லை.நான் அதிகமாகவே
மக்களுக்கு கெடுதல் செய்துள்ளேன். நரகமே போதும் என்றான்.
எமதர்மனும் , "உன் விருப்பப்படியே, நரகத்திற்கு அனுப்புகிறேன்" என்றான்.
உள்ளே போனவுடன் அவன் கண்ட காட்சிகள் யாவும் மறைந்து போனது.
செக்கிழுக்கும் மனிதர்கள், வேலை செய்தாலும் செய்யா விட்டாலும் அங்குள்ள எமதூதர்கள்
அங்குள்ளவர்களை சவுக்கடி கொடுத்ததும், காய்ச்சிய எண்ணெய் கொப்பரையில்
தள்ளியும் துன்புறுத்தி வந்தனர்.
துஷ்டன் எமதர்மனை அணுகி ,காண்பித்தது ஒன்று நடைமுறையில் இருப்பது வேறாக
இருக்கிறதே ! என்றான் .
அதற்கு எமதர்மன், உன்னைப் போன்றவர்களை கவருவதற்காக போட்ட திட்டம்
காண்பிப்பது ஒன்று நடைமுறை வேறு என்றானாம்.
கவருவதற்காக திட்டங்கள் தேர்தல் வாக்குறுதிகள் தரும் அரசியல்வாதிகள்
ஜெயித்தவுடன் கொணரும் திட்டங்கள் வேறு.
ஏமாளிகள் இனி ஏமாறாமல் இருந்தால் சரி.
எமதர்மன் அவனை வரவேற்று நரகத்தை காண்பித்தான்.
உள்ளே இருந்தவர்கள் அமிர்த பானம் குடித்துக்கொண்டும்
ஆட்டம் பாட்டம் முழங்க ஊர்வசி ரதி போன்ற பெண்கள் நடனமாடி
அங்கிருந்தவர்களை குஷிப்படுத்திக்கொண்டும் இருந்தனர்.
எமதர்மா, எனக்கு பேராசை ஒன்றும் இல்லை.நான் அதிகமாகவே
மக்களுக்கு கெடுதல் செய்துள்ளேன். நரகமே போதும் என்றான்.
எமதர்மனும் , "உன் விருப்பப்படியே, நரகத்திற்கு அனுப்புகிறேன்" என்றான்.
உள்ளே போனவுடன் அவன் கண்ட காட்சிகள் யாவும் மறைந்து போனது.
செக்கிழுக்கும் மனிதர்கள், வேலை செய்தாலும் செய்யா விட்டாலும் அங்குள்ள எமதூதர்கள்
அங்குள்ளவர்களை சவுக்கடி கொடுத்ததும், காய்ச்சிய எண்ணெய் கொப்பரையில்
தள்ளியும் துன்புறுத்தி வந்தனர்.
துஷ்டன் எமதர்மனை அணுகி ,காண்பித்தது ஒன்று நடைமுறையில் இருப்பது வேறாக
இருக்கிறதே ! என்றான் .
அதற்கு எமதர்மன், உன்னைப் போன்றவர்களை கவருவதற்காக போட்ட திட்டம்
காண்பிப்பது ஒன்று நடைமுறை வேறு என்றானாம்.
கவருவதற்காக திட்டங்கள் தேர்தல் வாக்குறுதிகள் தரும் அரசியல்வாதிகள்
ஜெயித்தவுடன் கொணரும் திட்டங்கள் வேறு.
ஏமாளிகள் இனி ஏமாறாமல் இருந்தால் சரி.

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா and கண்ணன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்
மகளிர் உரிமைத்தொகைக்கு தகுதி நிர்ணயம்... சரியா, தவறா?
அரிசி அட்டைதாரர்கள் எல்லோருக்கும் உரிமைத்தொகை வழங்காமல், வரம்புகளை நிர்ணயித்து பயனாளிகளைக் குறைப்பது ஏமாற்று வேலை” |
தி.மு.க ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகப்போகிற நிலையில், ‘மகளிருக்கு எப்போது மாதம் 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்குவீர்கள்?’ என்ற கேள்வியே அரசை நோக்கி அதிகம் எழுப்பப்பட்ட கேள்வி. அதற்கு முடிவுகட்டும் வகையில், ‘மகளிருக்கான உரிமைத்தொகை திட்டத்தை வரும் பட்ஜெட்டில் அறிவிக்கப்போகிறோம்’ என்று ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரையில் போட்டுடைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதன்படி, அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ம் தேதி முதல் மகளிருக்கான உரிமைத்தொகை வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவித்திருக்கிறார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். அதுவும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது. இதன் பின்னணியில் இருப்பது அக்கறையா... அரசியலா? |
ஒரு கோடிப் பேருக்கு மட்டும்..!
தமிழ்நாடு அரசின் முந்தைய திட்டங்களான வண்ணத் தொலைக்காட்சி, இலவச மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி போன்ற அனைத்து நலத்திட்டங்களுமே இருப்பவர்கள், இல்லாதவர்கள் என்ற பாகுபாடின்றி 2.3 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டன. ஆனால், மகளிர் உரிமைத்தொகை அப்படி எல்லோருக்கும் வழங்கப்படாது என்பதை அரசு ஒதுக்கியிருக்கும் நிதியே தெளிவுபடுத்துகிறது. ஏனெனில், இதற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் தொகை 7,000 கோடி ரூபாய். ‘திட்டம் அமல்படுத்தப்படும் நாளிலிருந்து கணக்கு வைத்துக்கொண்டால், வரும் நிதியாண்டில் ஆறு அல்லது ஏழு மாதங்களுக்கு உரிமைத்தொகை வழங்கவேண்டியிருக்கும். அப்படியானால் மாதம் ஒன்றுக்குச் சராசரியாக 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே ஒரு கோடி மகளிருக்கு மட்டுமே உரிமைத்தொகை வழங்கப்படலாம்’ என்று பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர்.
இது தொடர்பாக அதிகாரிகள் வட்டாரத்திலும் விசாரித்தோம். “மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான தகுதி எதுவும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. வருமான வரி செலுத்தும் பெண்கள், மத்திய, மாநில அரசுப் பணிகளில் இருக்கும் பெண்கள், ஜி.எஸ்.டி செலுத்தும் பெண்களைத் தவிர்த்து மற்ற அனைவரும் உரிமைத்தொகை பெறுவதற்கான வரம்பில் இருப்பார்கள்” என்றனர்.
ஏமாற்று வேலையா?
“அரிசி அட்டைதாரர்கள் எல்லோருக்கும் உரிமைத்தொகை வழங்காமல், வரம்புகளை நிர்ணயித்து பயனாளிகளைக் குறைப்பது ஏமாற்று வேலை” என்று சாடுகிறார் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா. இது தொடர்பாக நம்மிடம் பேசிய அவர், “மகளிருக்கான உரிமைத்தொகை விவகாரத்தில் தேர்தல் அறிக்கையில் தி.மு.க சொன்னது வேறு, இப்போது செய்வது வேறு. மொத்த குடும்பத்தலைவிகளில் 6% பேர்தான் அரசு வேலையில் இருப்பார்கள். மற்றவர்களில் பெரும்பான்மையானோர் கூலித் தொழிலாளிகள். தி.மு.க-வை நம்பி வாக்களித்த மக்கள் எப்போது 1,000 ரூபாய் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கிறார்கள். மக்களை ஏமாற்றாமல் சொன்னபடி அனைவருக்கும் வழங்க வேண்டும்” என்றார்.
பயனாளிகளை வடிகட்டும் முறைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், அது தொடர்பாக பொருளியல் பேராசிரியர் ஜோதி சிவஞானத்தைத் தொடர்புகொண்டு பேசினோம். “இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பங்கு மேல்தட்டு மக்களைச் சென்றடைவதைப்போல, நலிந்த பிரிவினருக்குச் சென்றடைவதில்லை. நமது பொருளாதாரக் கொள்கைகள் அப்படி வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அதனால்தான், ‘குறைந்தபட்ச வருமான உத்தரவாதம்’ (Universal Basic Income) என்ற பெயரில் ஏழை, எளிய குடும்பங்களுக்கு மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்க வேண்டுமென்று பொருளாதார அறிஞர்கள் அரவிந்த் சுப்ரமணியம், அபிஜித் பேனர்ஜி, ஜான் திரேஸ் போன்றோர் நீண்டகாலமாகக் கூறிவருகிறார்கள். அதை மத்திய அரசே இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை. ஆனால், தமிழ்நாடு நடைமுறைப்படுத்துகிறது என்பது வரவேற்புக்குரியது. அதேசமயம் பொது விநியோகத் திட்டத்தைப்போல அனைவருக்கும் உரிமைத்தொகை வழங்க வேண்டுமென்று கூறுவது இன்றைய நிதிநிலையில் சாத்தியமற்றது. அரிசி, பருப்பு வழங்குவது ‘புரொட்டெக்டிவ்’ (அத்தியாவசியப் பாதுகாப்பு) நோக்கம். ஆனால், உரிமைத்தொகை வழங்குவது ‘புரொமோஷன்’ (ஊக்குவிப்பு) நோக்கம்கொண்டது. எனவே, சரியான பயனாளிகளைக் கண்டறிந்து வழங்குவதில் தவறில்லை” என்றார்.
ஜூன் மாதமே கொடுக்கலாமே?
“இரண்டு வருடங்களுக்குப் பிறகு மகளிர் உரிமைத்திட்டம் தி.மு.க அரசுக்கு நினைவுக்கு வந்ததில் மகிழ்ச்சி. ஆனால், செப்டம்பர் மாதம் வரையிலான நிலுவைத்தொகை 28,000 ரூபாயையும் சேர்த்து வழங்க வேண்டும்” என்று வித்தியாசமாக விமர்சித்திருக்கிறார் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை. இது தொடர்பாக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனிடம் பேசினோம். “தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் ஆட்சிக்கு வந்த முதல் நாளே நிறைவேற்ற வேண்டுமென்று பேசுவது புரிதலற்ற விமர்சனம். இதுநாள் வரை எப்போது நிறைவேற்றுவீர்கள் எனக் கேட்டவர்கள், நிறைவேற்றும்போது புதிய குறை காண்கிறார்கள். எதையும் பாராட்டாமல், விமர்சிப்பவர்களை திருப்திப்படுத்த முடியாது. கல்வி, சமத்துவம், பொருளாதார சுதந்திரத்தைப் பெண்கள் பெற வேண்டுமென்பது ‘திராவிட மாடல்’ லட்சியங்களில் ஒன்று. அந்த நோக்கத்தில்தான் முதல்வர் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியிருக்கிறார்” என்றார்.
மகளிருக்கான உரிமைத்தொகை திட்டம் அரசியல்ரீதியாக என்ன தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்பது குறித்து பத்திரிகையாளர் ப்ரியனிடம் பேசினோம். “தி.மு.க ஆட்சிக்கு வந்ததிலிருந்தே நகரப் பேருந்துகளில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துப் பயணம், புதுமைப்பெண் திட்டம், காலை உணவு எனப் பெண்களைக் குறிவைத்து பல திட்டங்களைக் கொண்டுவந்திருக்கிறார்கள். அந்த வகையில் தேர்தல் வாக்குறுதிகளில் அளித்திருந்த உரிமைத் தொகையையும் வழங்குவதைத் தற்போது உறுதி செய்திருக்கிறார்கள். ஒருகாலத்தில் அ.தி.மு.க-வின் பலமான வாக்குவங்கியாக இருந்த பெண்களை, இப்போது தி.மு.க கவர் செய்துவருகிறது. அதுபோக, ‘பெண்களுக்கு அதிகாரமளித்தல்’ என்பது திராவிட அரசியல் சித்தாந்தத்தில் ஒன்றாகவே இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக இதையும் பார்க்கலாம். ஆனால், அதை செப்டம்பர் மாதம் வரை காத்திருக்கச் செய்யாமல் ஜூன் மாதத்திலேயே கொடுக்க வேண்டுமென்பதுதான் பெண்களின் எதிர்பார்ப்பு” என்றார்.
“மகளிருக்கு, கட்டணமில்லா பேருந்துப் பயணச் சலுகை வழங்கிய பிறகு, வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. புதுமைப்பெண் திட்டத்தால் கல்லூரிக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை 29% அதிகரித்திருக்கிறது” என்று அரசின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அந்த வகையில், உரிமைத்தொகைத் திட்டமும், மகளிரை ஓர் அடி முன்னோக்கி நகர்த்தினாலும் அது வரவேற்புக்குரியதே!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33936
இணைந்தது : 03/02/2010
இப்போது புழக்கத்தில் உள்ள கார்டு 23 வருடங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்டவை.
சிலர் வீட்டில் 2 வயது 3 வயது பையன் /பெண் இருந்து, கார்டுதார் சிறிய வேலையில் இருந்து
அரிசி கார்டு வாங்கி இருந்திருப்பார், 23 ஆண்டுகளுக்கு முன்பு.
வாங்கியவர் மேலுலகத்திற்கும் டிக்கட் வாங்கி இருப்பர். ஆனால் கார்டு மாத்திரம் இருக்கும்.
பெண்ணுக்கு கல்யாணம் ஆகி இருக்கும்.
பையன் நன்றாக படித்து வருடத்திற்கு 20/24 லக்ஷத்தில் சம்பளம் பெறுவான்
முகவரி மாறி பெரிய flat லோ சொந்த வீட்டிலோ இருப்பான்.
ஆனாலும் அரிசி கார்டு வைத்திருந்து வீட்டில் வேலை செய்பவருக்கோ /ரேஷன் கடை ஊழியருக்கோ
அந்த சலுகை பொருட்கள் கிடைக்கும்.
அரசு உண்மையிலேயே, தாழ்நிலையில் இருப்பவர்களுக்கு உதவும் எண்ணம் இருந்தால்
அவர்களுடைய பேங்க் அக்கவுண்டிற்கு பணத்தை மாற்றவேண்டும்.
பிரதம மந்திரி திட்டப்படி சுலபமாக சேமிப்பு நிதி கணக்கு இருக்கவே இருக்கிறது.
ஒரே ஒரு சங்கடம் என்ன என்றால், அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் பணம் பண்ண முடியாது.
நல திட்டங்கள் என்றால் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும்.
இலவச பஸ் வசதி என்று கூறி எல்லா பெண்களும் அதை உபயோகப்படுத்திக் கொள்வது போல்.
சிலர் வீட்டில் 2 வயது 3 வயது பையன் /பெண் இருந்து, கார்டுதார் சிறிய வேலையில் இருந்து
அரிசி கார்டு வாங்கி இருந்திருப்பார், 23 ஆண்டுகளுக்கு முன்பு.
வாங்கியவர் மேலுலகத்திற்கும் டிக்கட் வாங்கி இருப்பர். ஆனால் கார்டு மாத்திரம் இருக்கும்.
பெண்ணுக்கு கல்யாணம் ஆகி இருக்கும்.
பையன் நன்றாக படித்து வருடத்திற்கு 20/24 லக்ஷத்தில் சம்பளம் பெறுவான்
முகவரி மாறி பெரிய flat லோ சொந்த வீட்டிலோ இருப்பான்.
ஆனாலும் அரிசி கார்டு வைத்திருந்து வீட்டில் வேலை செய்பவருக்கோ /ரேஷன் கடை ஊழியருக்கோ
அந்த சலுகை பொருட்கள் கிடைக்கும்.
அரசு உண்மையிலேயே, தாழ்நிலையில் இருப்பவர்களுக்கு உதவும் எண்ணம் இருந்தால்
அவர்களுடைய பேங்க் அக்கவுண்டிற்கு பணத்தை மாற்றவேண்டும்.
பிரதம மந்திரி திட்டப்படி சுலபமாக சேமிப்பு நிதி கணக்கு இருக்கவே இருக்கிறது.
ஒரே ஒரு சங்கடம் என்ன என்றால், அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் பணம் பண்ண முடியாது.
நல திட்டங்கள் என்றால் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும்.
இலவச பஸ் வசதி என்று கூறி எல்லா பெண்களும் அதை உபயோகப்படுத்திக் கொள்வது போல்.

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
யாருக்கெல்லாம் உரிமைத் தொகை ரூ1000 கிடைக்கும்? - பேரவையில் முதல்வர் கொடுத்த விளக்கம்
மகளிர் உரிமைத் தொகை யார் யாருக்கு வழங்கப்படும் என்பது குறித்து சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
தொடக்கத்திலேயே, ”இந்த மகளிர் உரிமைத் தொகை திட்டம் இரண்டு நோக்கங்களை கொண்டது. பிரதிபலன் பாராமல் வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்கு கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது” என்று தனது கருத்தினை அவர் பதிவு செய்தார்.
பின்னர் பேசிய முதல்வர், ”அடுத்து ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமை தொகை என்பது பெண்களை வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருந்து வறுமையை ஒழித்து வாழ்க்கை தரத்தை உயர்த்தி சுயமரியாதையோடு சமூகத்தில் வாழ்வதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதாகும். மகளிர் சமூக பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அறிவிக்கப்பட்டு இருக்கக்கூடிய மாதம் ஆயிரம் ரூபாய் என்பது தேவைப்படும் குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் அவரவர் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்” என்றார்.
”நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர்,
அதிகாலையில் கடற்கரை நோக்கி விரைந்திடும் மீனவ மகளிர்,
கட்டுமான தொழிலில் பணிபுரியும் மகளிர்,
சிறிய கடைகள் வணிகம் மற்றும் சிறு நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியக்கூடிய மகளிர்
ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட இல்லங்களில் பணிபுரியக்கூடிய பெண்கள்
என பல்வேறு வகைகளில் தங்கள் விலைமதிப்பில்லா உழைப்பே தொடர்ந்து வழங்கிவரும் பெண்கள் இந்தத் திட்டத்தால் பயன்பெறுவார்கள்..” என்று முதல்வர் கூறினார்.
அத்துடன், இந்த திட்டத்திற்கான வழிகாட்டு முறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33936
இணைந்தது : 03/02/2010
அடுக்ககத்தில் வேலை செய்யும் ஆண்
இரவு நேரத்தில் காவல் காக்கும் செக்யூரிட்டி
அவனே காலையில் தோட்டவேலை
பிறகு அவனே கார் துடைத்தல்
(flat ல் ) உள்ளோர் அவசரப்படுத்தும் போது ஓடி சென்று
கொத்தமல்லி கருகேப்பிலை எலுமிச்சை வாங்கி வரும் எடுபிடியாக
வாயிற்காப்போனாக /தோட்டக்காரனாக /கார் துடைப்பவனாக/
எடுபிடியாக வேலை செய்யும் ஆண்களுக்கும்
இந்த உரிமை தொகை கொடுக்கப்படவேண்டும்.
இரவு நேரத்தில் காவல் காக்கும் செக்யூரிட்டி
அவனே காலையில் தோட்டவேலை
பிறகு அவனே கார் துடைத்தல்
(flat ல் ) உள்ளோர் அவசரப்படுத்தும் போது ஓடி சென்று
கொத்தமல்லி கருகேப்பிலை எலுமிச்சை வாங்கி வரும் எடுபிடியாக
வாயிற்காப்போனாக /தோட்டக்காரனாக /கார் துடைப்பவனாக/
எடுபிடியாக வேலை செய்யும் ஆண்களுக்கும்
இந்த உரிமை தொகை கொடுக்கப்படவேண்டும்.

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
மேற்கோள் செய்த பதிவு: undefinedT.N.Balasubramanian wrote:அடுக்ககத்தில் வேலை செய்யும் ஆண்
இரவு நேரத்தில் காவல் காக்கும் செக்யூரிட்டி
அவனே காலையில் தோட்டவேலை
பிறகு அவனே கார் துடைத்தல்
(flat ல் ) உள்ளோர் அவசரப்படுத்தும் போது ஓடி சென்று
கொத்தமல்லி கருகேப்பிலை எலுமிச்சை வாங்கி வரும் எடுபிடியாக
வாயிற்காப்போனாக /தோட்டக்காரனாக /கார் துடைப்பவனாக/
எடுபிடியாக வேலை செய்யும் ஆண்களுக்கும்
இந்த உரிமை தொகை கொடுக்கப்படவேண்டும்.
மிகச் சரியான கருத்து.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33936
இணைந்தது : 03/02/2010
சிவா wrote:மிகச் சரியான கருத்து.
யார் கண்டது ? ஒரு வேளை 1000ல் 500 டாஸ்மாக் மூலம் அரசுக்கே வந்தாலும் வரலாம்.

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Page 1 of 2 • 1, 2
Similar topics
» லண்டன் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் யார்? யார்?
» தமிழ் மாத பெயர்கள் சூரிய மாதம் மற்றும் சந்திர மாதம்
» நாஞ்சில் சம்பத் தோடு வெளியேறப் போவது யார், யார்...! ம.தி.மு.க.,வில் பரபரப்பு
» இந்த மாதம் இதழ்கள் சில ஜூலை மாதம்
» என்ன பெத்த ஐயா’ன்னு அழும் பெண்கள் தேசிய விருதுக்குத் தகுதியானவர்கள்...!!
» தமிழ் மாத பெயர்கள் சூரிய மாதம் மற்றும் சந்திர மாதம்
» நாஞ்சில் சம்பத் தோடு வெளியேறப் போவது யார், யார்...! ம.தி.மு.க.,வில் பரபரப்பு
» இந்த மாதம் இதழ்கள் சில ஜூலை மாதம்
» என்ன பெத்த ஐயா’ன்னு அழும் பெண்கள் தேசிய விருதுக்குத் தகுதியானவர்கள்...!!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2