புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புவிசார்_குறியீடு - புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள் Poll_c10புவிசார்_குறியீடு - புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள் Poll_m10புவிசார்_குறியீடு - புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள் Poll_c10 
10 Posts - 67%
ayyasamy ram
புவிசார்_குறியீடு - புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள் Poll_c10புவிசார்_குறியீடு - புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள் Poll_m10புவிசார்_குறியீடு - புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள் Poll_c10 
4 Posts - 27%
சிவா
புவிசார்_குறியீடு - புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள் Poll_c10புவிசார்_குறியீடு - புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள் Poll_m10புவிசார்_குறியீடு - புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள் Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புவிசார்_குறியீடு - புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள் Poll_c10புவிசார்_குறியீடு - புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள் Poll_m10புவிசார்_குறியீடு - புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள் Poll_c10 
310 Posts - 42%
heezulia
புவிசார்_குறியீடு - புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள் Poll_c10புவிசார்_குறியீடு - புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள் Poll_m10புவிசார்_குறியீடு - புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள் Poll_c10 
307 Posts - 42%
Dr.S.Soundarapandian
புவிசார்_குறியீடு - புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள் Poll_c10புவிசார்_குறியீடு - புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள் Poll_m10புவிசார்_குறியீடு - புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
புவிசார்_குறியீடு - புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள் Poll_c10புவிசார்_குறியீடு - புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள் Poll_m10புவிசார்_குறியீடு - புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
புவிசார்_குறியீடு - புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள் Poll_c10புவிசார்_குறியீடு - புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள் Poll_m10புவிசார்_குறியீடு - புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
புவிசார்_குறியீடு - புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள் Poll_c10புவிசார்_குறியீடு - புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள் Poll_m10புவிசார்_குறியீடு - புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
புவிசார்_குறியீடு - புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள் Poll_c10புவிசார்_குறியீடு - புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள் Poll_m10புவிசார்_குறியீடு - புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள் Poll_c10 
6 Posts - 1%
prajai
புவிசார்_குறியீடு - புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள் Poll_c10புவிசார்_குறியீடு - புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள் Poll_m10புவிசார்_குறியீடு - புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
புவிசார்_குறியீடு - புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள் Poll_c10புவிசார்_குறியீடு - புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள் Poll_m10புவிசார்_குறியீடு - புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள் Poll_c10 
4 Posts - 1%
manikavi
புவிசார்_குறியீடு - புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள் Poll_c10புவிசார்_குறியீடு - புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள் Poll_m10புவிசார்_குறியீடு - புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 02, 2023 2:14 am

புவிசார்_குறியீடு - புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள் Gi-tags-of-tamilnadu

புவிசார் குறியீடு என்றால் என்ன


ஓரிடத்தில் விளையக்கூடிய பொருட்கள் அல்லது தயாரிக்கக்கூடிய பொருட்களின் தரம் அந்த இடத்தின் காலநிலை, நிலம், நீர் இதனுடைய தன்மை போன்றவற்றை வைத்தே புவிசார் குறியீடு நிர்ணயிக்கப்படுகின்றது.

அது மட்டுமல்லாது ஒரு பொருளினது இடத்தின் பாரம்பரியத்தை உலகுக்கே தெரிவிக்கவும், அடுத்த தலைமுறைக்குப் பத்திரமாய் கொடுக்கவும் என நினைத்து புவிசார் குறியீடு பாதுகாப்புச் சட்டம் என்பதனை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்திய அரசு 1999ஆம் ஆண்டில் புவிசார் குறியீடு மற்றும் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தியது. அந்தச் சட்டத்தை 2003ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு கொண்டு வந்தார்கள்.

இச்சட்டத்தின்படி ஒவ்வொரு ஊருக்கும் அவ்வூரின் சிறப்பான விடயத்திற்கு புவிசார் குறியீடு வாங்கிக் கொள்ளலாம் என கூறப்பட்டது. இது மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சுக்களோடு அறிவுசார் சொத்துரிமைத்துறை ஆகியவை இணைந்து புவிசார் குறியீடு வழங்குகின்றது.

அதன் அடிப்படையில் 2003ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை சுமார் 3200க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடுகள் மத்திய அரசினால் வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 32ற்கும் மேற்பட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடுகள் கொடுக்கப்பட்டுள்ளது.

புவிசார் குறியீடு என்றால் என்ன


ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு சிறப்பான வடிவங்கள் இருக்கும் அவ்வாறான சிறப்பான பொருட்களை அங்கிகாரம் செய்வதற்கும், கௌரவிக்கும் வகையிலும் கொடுக்கப்படுவது தான் புவிசார் குறியீடு ஆகும்.

புவிசார் குறியீடு கிடைப்பதன் பலன்கள்


ஒரு பொருளுக்கும் புவிசார் குறியீடு கிடைக்கும் எனில் அந்த ஊர் மக்களை தவிர வேறு ஊர் மக்கள் அந்தப் பெயரை பயன்படுத்தி அப்பொருளை தயாரிக்க முடியாது.

உதாரணத்திற்கு ஸ்ரீ வில்லிபுத்தூர் பால்கோவா ஸ்ரீ வில்லிபுத்தூர் மக்கள்தான் இதனைத் தயாரிக்க முடியும். அதைத்தவிர வேறு ஊர்களில் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவை தயாரித்து விற்க முடியாது.

இதன் மூலம் போலிகள் தயாரிப்பது தடுக்கப்படுவது மட்டுமன்றி அந்த ஊர் தொழிலாளர்களுக்குப் பயனுள்ளதாகவும் இருக்கும். இதன் மூலம் அப்பொருளை வாங்குவதற்கு அந்த ஊரைத் தேடி மக்கள் வருவார்கள்.

அதுமட்டுமன்றி அப்பொருளின் ஏற்றுமதியும் அதிகரிக்கும். இதனால் உற்பத்தி பெருகும். அப் பொருளுக்கும், அவ்வூர் மக்களுக்குமான வரலாற்றுப் பிணைப்பு மாறாமல் பாதுகாக்கப்படும்.

பொருட்களுக்கு சட்டபூர்வமான பாதுகாப்பும் மற்றும் சர்வதேச வர்த்தகத்தில் சட்டப் பாதுகாப்பும் புவிசார்க் குறியீட்டினால் கிடைக்கப்படுவது மேலும் பயனுள்ளதாகின்றது.

தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள்


சேலம் சுங்கடி

காஞ்சிப்பட்டு

பவானி ஜமக்காளம்

மதுரை சுங்குடி சேலை

கோயமுத்தூர் ஈரமாவு அரவைப்பொறி

தஞ்சாவூர் ஓவியம்

தஞ்சாவூர் ஓவியத்தட்டு

சுவாமிமலை வெண்கலப் படிமங்கள்

நாச்சியார் கோயில் விளக்கு

ஆரணிப் பட்டு

கோவை கோரா பருத்திப் புடவை

சேலத்துப் பட்டு

கிழக்கிந்திய தோல் தொழிற்சாலை

தலையாட்டி பொம்மை

ஈத்தாமொழி நெட்டை தென்னை

யூகலிப்டசு தைலம்

யூகலிப்டசு இலச்சினை (விண்ணப்ப எண் 116வுடன் இணைக்கப்பட்டது)

விருப்பாச்சி வாழை

சிறுமலை மலை வாழைப்பழம்

தோடா பூந்தையல்

பத்தமடைபாய்

நாச்சியார் கோயில் விளக்கு

செட்டிநாடு கொட்டான்

தஞ்சாவூர் வீணை

ஈரோடு மஞ்சள்

மதுரை மல்லி

திருவில்லிபுத்தூர் பால்கோவா

மகாபலிபுரம் கற்சிற்பம்

தஞ்சாவூர் தட்டு (இலட்சினை)

சுவாமிமலை வெண்கலச் சிலை

கோயில் நகை - நாகர்கோயில் (இலச்சினை)

பழநி பஞ்சாமிர்தம்

சீரக சம்பா அரிசி

பத்தமடை பாய்

பழநி பஞ்சாமிர்தம்

கொடைக்கானல் மலைப்பூண்டு

சீரக சம்பா

பத்தமடை பாய்

கோவில்பட்டி கடலை மிட்டாய்

அரும்பாவூர் மர வேலைப்பாடுகள்

நரசிங்கம்பேட்டை நாகசுரம்

வேலூர் முள்ளு கத்தரிக்காய்

ராமநாதபுரம் குண்டு மிளகாய்

தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு

கன்னியாகுமரி கிராம்பு

மணப்பாறை முறுக்கு

மார்த்தாண்டம் தேன்

மயிலாடுதுறை தைக்கால் பிரம்பு வேலைப்பாடு

ஆத்தூர் வெற்றிலை

கம்பம் பன்னீர் திராட்சை

சோழவந்தான் வெற்றிலை

நகமம் காட்டன் சேலை

மயிலாடி கல் சிற்பம்

சேலம் ஜவ்வரிசி

மானாமதுரை மண்பாண்டம்

ஊட்டி வர்க்கி

குறிச்சொற்கள் #புவிசார்_குறியீடு #Geographical_indication


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Apr 02, 2023 11:09 am

புவிசார்_குறியீடு - புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள் 3838410834 புவிசார்_குறியீடு - புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள் 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 305
இணைந்தது : 17/10/2014

Postகண்ணன் Mon Apr 03, 2023 6:28 pm

புவிசார்_குறியீடு - புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள் 103459460 புவிசார்_குறியீடு - புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள் 1571444738

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 03, 2023 7:18 pm

நல்ல பதிவு.

ஆத்தூர் வெற்றிலையா? 

கும்பகோணம் வெற்றிலை /ராஜாஜி வறுவல் சீவல் /வெண்ணை கலந்த 

வாசனை சுண்ணாம்பு பிரியர்களை கண்டுளேன்.

படுக்கைக்கு அருகில் செல்லப்பெட்டியில் இவை இருக்க அதன் முகத்தில்தான் காலையில் கண்விழிப்பேன் 

என்று தம்பட்டம் அடித்த நண்பர்கள் உண்டு. இப்போதெல்லாம் குட்கா /பீடா  கலாச்சாரம் 

நல்ல பதிவு.ருசித்தேன்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 08, 2023 2:49 pm

புவிசார் குறியீடு: இந்திய அளவில் முதலிடம் பிடித்த தமிழ்நாடு - தொழில்களுக்கு பயன் என்ன?


* உணவு பொருட்கள், வேளாண் பொருட்கள், கைவினை மற்றும் கைத்தறி பொருட்கள்,இயற்கை பொருட்கள் என ஐந்து வகையான உற்பத்தி பொருட்கள் புவிசார் குறியீட்டு அங்கீகாரம் பெறுவதற்கு தகுதியானவை

* 1999 ஆம் ஆண்டு மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சகத்தின் கீழ் புவிசார் குறியீடு (பதிவு மற்றும் பாதுகாப்புச் சட்டம், 1999) உருவாக்கப்பட்டு, 2002ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது.

* வட்டாரப் பகுதிகளில் உற்பத்தி ஆகக்கூடிய தனித்துவமான பொருட்களை அடையாளம் கண்டு, அதற்கான சட்ட பாதுகாப்பு வழங்குவதே இந்த புவிசார் குறியீட்டுச் சட்டத்தின் நோக்கம்.

* வணிக சின்னம் (ட்ரேட் மார்க்), காப்புரிமை (பேடெண்ட்) மற்றும் புவிசார் குறியீடு (Geographical indication) ஆகிய மூன்று விஷயங்களும் அறிவுசார் சொத்துரிமைச் சட்டத்தின் கீழ் வருகின்றன.இதில் புவிசார் குறீட்டை தவிர மற்ற இரண்டுமே தனி நபர்களுக்கான உரிமையை நிர்ணயிப்பதாக விளங்குகின்றன.

* புவிசார் குறியீடு மட்டுமே குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் பொதுவான உரிமையாக விளங்குகிறது.

”இந்தியாவுடைய வளர்ச்சியில் கிராம பொருளாதாரங்களின் வளர்ச்சி பெரும்பங்கு வகிக்கின்றன. இதனால் கிராமங்களில் உற்பத்தியாகக் கூடிய தனித்துவமான பொருட்களின் சிறப்புகளை நாம் மேம்படுத்தி காட்டுவது மிகவும் அவசியமாகிறது.எனவே புவிசார் குறியீடு என்பது ஒரு அங்கீகாரம் மட்டுமல்ல, அது நாட்டின் வளர்ச்சிக்கான ஒரு திறவுகோல்”.

இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட நிலபரப்பில் தனித்துவமாக உற்பத்தியாகும் பொருட்களுக்கு இந்திய அரசாங்கம் புவிசார் குறியீடு வழங்கி அங்கீகரிக்கிறது. அந்த வகையில் தற்போது அதிகமான பொருட்களுக்கு புவிசார் குறியீடுகளை பெற்றிருக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது.

ஏற்கனவே மதுரை மல்லி, திண்டுக்கல் பூட்டு, காஞ்சிபுரம் பட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, சேலம் சுங்குடிச் சேலை, பழனி பஞ்சாமிர்தம் உள்ளிட்ட தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் 45 பொருட்கள் புவிசார் குறியீடுகளை பெற்றிருந்தன. இந்த நிலையில் மணப்பாறை முறுக்கு, மார்த்தாண்டம் தேன், நகமம் காட்டன், மயிலாடி கற்சிற்பம், சேலம் ஜவ்வரிசி, மானாமதுரை மண்பாண்டம், ஊட்டி வர்க்கி, கம்பம் பன்னீர் திராட்சை, ஆத்தூர் வெற்றிலை, சோழவந்தான் வெற்றிலை உள்ளிட்ட மேலும் 11 பொருட்களுக்கு சமீபத்தில் புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளன. இதனால் தமிழகத்தில் புவிசார் குறியீடு பெற்றிருக்கும் பொருட்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.

அதிகமான புவிசார் குறியீடுகளை பெற்றிருக்கும் மாநிலங்களில் தமிழ்நாட்டிற்கு அடுத்ததாக கர்நாடக மாநிலம் இரண்டாவது இடத்திலும், உத்தரபிரதேச மாநிலம் மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன.

புவிசார் குறியீடு பெறுவதனால் கிடைக்கக்கூடிய சிறப்புகள் என்ன, இதனால் கிராம பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் என்ன என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 08, 2023 2:50 pm

புவிசார் குறியீடு என்றால் என்ன?


”உணவு பொருட்கள், வேளாண் பொருட்கள், கைவினை மற்றும் கைத்தறி பொருட்கள்,இயற்கை பொருட்கள் என ஐந்து வகையான உற்பத்தி பொருட்கள் புவிசார் குறியீட்டு அங்கீகாரம் பெறுவதற்கு தகுதியானவை.

இப்படி கிராமப்புற பகுதிகள், மாநகரப் பகுதிகள் , சிற்றூர்கள் என இந்தியாவின் ஒவ்வொரு உள்ளூர் அல்லது வட்டாரப் பகுதிகளில் உருவாகக் கூடிய தனித்துவமான பொருட்களின் தரத்தை நம்பிக்கைக்குரிய முறையில் உறுதிப்படுத்தி, அதனை உலகளவில் எடுத்துச் செல்வதற்கு இந்த புவிசார் குறியீட்டு அங்கீகாரம் உதவுகிறது”என்கிறார் உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞரும், அறிவுசார் சொத்துரிமை அட்டர்னி கழகத் தலைவருமான சஞ்சய் காந்தி.

தமிழகத்தை பொறுத்தவரை காஞ்சிபுரம் பட்டுதான் முதன்முதலில் புவிசார் குறியீட்டை பெற்றது. அதற்கான முயற்சியை முன்னெடுத்து, சாத்தியமாக்கி காட்டியவர் இந்த சஞ்சய் காந்தி. புவிசார் குறியீடு பெறுவதன் முக்கியத்துவம் குறித்தும், அதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்தும் சில தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார்.

“1999 ஆம் ஆண்டு மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சகத்தின் கீழ் புவிசார் குறியீடு (பதிவு மற்றும் பாதுகாப்புச் சட்டம், 1999) உருவாக்கப்பட்டு, 2002ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது. வட்டாரப் பகுதிகளில் உற்பத்தி ஆகக்கூடிய தனித்துவமான பொருட்களை அடையாளம் கண்டு, அதற்கான சட்ட பாதுகாப்பு வழங்குவதே இந்த புவிசார் குறியீட்டுச் சட்டத்தின் நோக்கம்.

வணிக சின்னம் (ட்ரேட் மார்க்), காப்புரிமை (பேடெண்ட்) மற்றும் புவிசார் குறியீடு (Geographical indication) ஆகிய மூன்று விஷயங்களும் அறிவுசார் சொத்துரிமைச் சட்டத்தின் கீழ் வருகின்றன. இதில் புவிசார் குறீட்டை தவிர மற்ற இரண்டுமே தனி நபர்களுக்கான உரிமை நிர்ணயிப்பதாக விளங்குகின்றன.

ஆனால் புவிசார் குறியீடு மட்டுமே குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் பொதுவான உரிமையாக விளங்குகிறது. உதாரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு வாங்க முடிந்தது, ஆனால் அதுவே திருநெல்வேலி இருட்டு கடை அல்வாவிற்கு நம்மால் புவிசார் குறியீடு வாங்க முடியாது” என்று கூறுகிறார் சஞ்சய் காந்தி.

”உள்ளூர் உற்பத்தியாளர்களின் வாழ்க்கை தரம் மேம்பட வேண்டுமென்பதற்காகவே,கடந்த 20 ஆண்டுகளாக நம் தமிழகத்தின் தனித்துவமான பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்று தருவதில் தீவிரமாக இயங்கி வருகிறேன். இதுவரை தமிழ்நாட்டில் மொத்தம் 56 பொருட்களுக்கு புவிசார் குறியீடுகள் கிடைத்துள்ளன. அதில் 37 பொருட்களுக்கு என்னுடைய தனிபட்ட முயற்சியினால் மட்டுமே புவிசார் குறியீடுகள் கிடைத்துள்ளன.

இதுதவிர நம்முடைய தமிழக அரசும் பல வேளாண் மற்றும் இயற்கை பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்காக, ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது ” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 08, 2023 2:51 pm

அங்கீகாரம் பெறுவது எப்படி?


”புவிசார் குறியீடு பெறுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதற்காக நாம் நிறைய ஆதாரங்களையும், ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

முதலில் குறிப்பிட்ட பொருளுக்கான விவரக்குறிப்பு, விளக்கம், பொருளின் ஆரம்பம் முதல் இறுதி வரை நடைபெறும் உற்பத்தி முறை, தனித்துவம், பொருளுக்கான சிறப்பு தன்மை, சிறப்பு மூலபொருட்கள், வேளாண் அல்லது இயற்கை பொருட்களாக இருந்தால் அது உற்பத்தியாகக் கூடிய காலநிலை விவரங்கள், மனிதர்கள் தயாரிக்கக்கூடிய கைவினைப் பொருட்களாக இருந்தால் அவர்களுடைய தனித்துவமான திறன், எந்த பகுதியில் உற்பத்தியாகிறது போன்ற அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய முறையான ஆவணங்களை நாம் சமர்பிக்க வேண்டும்.

மிக முக்கியமாக அந்த பொருட்களுக்கு இருக்கும் வரலாற்று சிறப்புகளை நிரூபிக்கும் வகையிலான ஆவணங்களை நாம் அளிக்க வேண்டும். பாரம்பரியமாகவே அந்த பொருட்கள் சிறப்பு தன்மை வாய்ந்ததாக விளங்கி வருகிறது என்பதை குறிப்பிட வேண்டும். உதாரணமாக மதுரை மல்லிக்காக புவிசார் குறியீட்டை விண்ணப்பிக்கும்போது சங்க இலக்கியத்தில் இருந்த ஒரு பாடலை ஆதாரமாக சமர்ப்பித்தோம்.

மணப்பாறை முறுக்கு நூறாண்டுகளுக்கும் மேலாக தயாரிக்கப்பட்டு வருகிறது. எனவே அதனுடைய விண்ணப்பத்தின்போது மணப்பாறை முறுக்கு முதன்முதலில் யாரால், எப்போது தயாரிக்கப்பட்டது என்பது போன்ற பூர்விக ஆவணங்களை சமர்ப்பித்தோம்.

விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு சில மாதங்களில், மத்திய அரசின் குழுவால் பொருட்களினுடைய உற்பத்தி முறைகள் குறித்து மேலும் சில கேள்விகள் கேட்கப்படும். அதற்கான பதிலை நாம் அவர்களுக்கு அளிக்க வேண்டும்.

அதன்பிறகு 7பேருக்கு குறையாத நபர்களால் ஒரு குழு அமைக்கப்படும். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து, சம்பந்தப்பட்ட துறையில் இயங்கி வருபவர்கள் இந்த குழுவில் இருப்பார்கள். அவர்களின் முன்னிலையில் நாம் நம்முடைய பொருட்கள் குறித்த சிறப்பு தன்மையை நேரில் விளக்க வேண்டும்.

நம்முடைய பதில்கள் அவர்களுக்கு திருப்தி அளித்து அனைவரும் ஒப்புக்கொண்டால், சில மாதங்களில் நம்முடைய பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்குவது குறித்த தகவல் மத்திய அரசு நாளிதழில் வெளியிடப்படும். ஒரு மாதத்திற்கு பின் பொதுமக்களின் கருத்துகளையும் கேட்ட பிறகு, அதிகாரப்பூர்வமாக புவிசார் குறியீடு வழங்கப்படுவது குறித்து அறிவிப்பு வெளியாகும்” என்று கூறுகிறார் சஞ்சய் காந்தி.

”இத்தனை பெரிய செயல்முறைகள் இருப்பதால்தான், ஒரு சில பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவது தாமதமடைகிறது. மணப்பாறை முறுக்கிற்கு பத்தாண்டுகளுக்கு முன்பாகவே விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால் அதற்கு சமீபத்தில்தான் புவிசார் குறியீடு கிடைத்திருக்கிறது” எனவும் அவர் விவரிக்கிறார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 08, 2023 2:52 pm

புவிசார் குறியீடு ஏன் அவசியம்?


“இந்தியாவுடைய வளர்ச்சிக்கு கிராம பொருளாதாரங்களின் வளர்ச்சி மிகவும் முக்கியம். குறிப்பாக கிராமங்களில் உற்பத்தியாகக் கூடிய தனித்துவமான பொருட்களின் சிறப்புகளை நாம் மேம்படுத்தி காட்டுவது மிகவும் அவசியமாகிறது. இது கிராமங்களின் வளர்ச்சியை உயர்த்துவதோடு மக்களுக்கான வேலை வாய்ப்புகளையும் அதிகரிக்கிறது. எனவே புவிசார் குறியீடு என்பது ஒரு அங்கீகாரம் மட்டுமல்ல, அது நாட்டின் வளர்ச்சிக்கான ஒரு திறவுகோல்” என்கிறார் சஞ்சய் காந்தி.

அவர் தொடர்ந்து பேசும்போது, “நம்முடைய தனித்துவமான உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவது மிகவும் அவசியம். ஏனென்றால், புவிசார் குறியீடு பெறுவதற்காக விண்ணப்பிக்கப்படும் படிவத்தில், அந்த குறிப்பிட்ட பொருட்கள் எந்த ஊர் அல்லது வட்டாரம் அல்லது மாவட்டத்தில் உற்பத்தியாகிறது என்பது குறித்து குறிப்பிடப்படும்.

எனவே புவிசார் குறியீடு பெற்ற பிறகு எந்த வட்டாரப் பகுதியை குறிப்பிட்டு விண்ணப்பிக்கப்பட்டதோ, அந்த குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள் மட்டும்தான் அந்த பொருள் சம்பந்தப்பட்ட உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் விற்பனைகளில் ஈடுபட முடியும்.

குறிப்பாக சம்பந்தப்பட்ட பொருட்கள் மற்ற ஊர்களில் தயாரிக்கப்பட்டு வந்தாலும்,புவிசார் குறியீடு பெற்ற சிறப்புதன்மையை பயன்படுத்தி அவர்களால் வியாபாரம் செய்ய முடியாது. உதாரணமாக சேலத்தில் தயாரிக்கும் முறுக்கை மணப்பாறை முறுக்கு என்று கூறி சந்தைப்படுத்த முடியாது, விழுப்புரத்தில் விளையும் மல்லிகை பூக்களை மதுரை மல்லி என்று கூறி ஏற்றுமதி செய்ய முடியாது.

இதன் மூலம் ஒவ்வொரு உள்ளூர் உற்பத்தி பொருட்களின் எண்ணிக்கைகளும் உயர்கின்றன, இதனால் உள்ளூர் உற்பத்தியாளர்களின் வியாபாரம் பெருகி அவர்களின் பொருளாதார சூழல் மேம்படுகிறது.

காஞ்சிபுரம் பட்டு என்றால் முன்பு எங்கு வேண்டுமானாலும் சென்று மக்கள் வாங்கி கொண்டிருந்தனர். ஆனால் புவிசார் குறியீடு பெற்ற பிறகு, பட்டு வாங்குவதற்காகவே காஞ்சிபுரம் செல்லும் குடும்பங்களை இன்று நம்மால் காணமுடிகிறது. அதேபோல் கோவில்பட்டி மிட்டாய் என்று பெயரிட்டு அனைத்து ஊர்களிலும் உற்பத்தி செய்துகொண்டிருந்தார்கள்.

தற்போது புவிசார் குறியீடு பெற்ற பிறகு அப்படி விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகிறது. இதன்மூலம் கோவில்பட்டியில் கடலைமிட்டாய் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களுக்கு பலன் கிடைக்கிறது” என்று சஞ்சய் காந்தி விவரிக்கிறார். இதேபோல் ஒவ்வொரு பகுதியின் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கும் வெவ்வேறு வகைகளில் பயன்கள் கிடைக்கின்றன.

இன்று தமிழ்நாட்டை பொறுத்தவரை பெரும்பாலான கைவினை மற்றும் கைத்தறி பொருட்களுக்கு புவிசார் குறியீடு வாங்கிவிட்டோம். ஆனால் இன்னும் தனித்துவமான வேளாண் மற்றும் இயற்கை பொருட்கள் பெரும் எண்ணிக்கையில் மீதம் இருக்கின்றன. இனி அவற்றுக்கு புவிசார் குறியீடு வாங்கும் முயற்சியில் நாம் ஈடுபட வேண்டும் ” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக