by ayyasamy ram Yesterday at 8:45 pm
» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:16 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
Page 5 of 18 • 1, 2, 3, 4, 5, 6 ... 11 ... 18
வியர்வை நாற்றத்தை போக்க என்ன செய்ய வேண்டும்?
வெயில் காலத்தில் எல்லோருக்கும் வியர்வை என்பது மிக அதிகமாக வரும். வேர்வை வந்தாலே தானாகவே வியர்வை நாற்றம் உடலில் இருந்து வீசத் தொடங்கிவிடும்.
எனவே வியர்வை நாற்றம் தடுக்க சில முயற்சிகளை செய்யலாம். முதல் வகையில் மஞ்சள் பொடியை அக்குளில் தடவி வந்தால் வியர்வை நாற்றம் மறைந்து மஞ்சள் மணம் மட்டுமே இருக்கும்.
அதேபோல் தக்காளியை பிழிந்து பக்கெட் தண்ணீரில் கலந்து குளித்தால் வியர்வை மாற்றம் இருக்காது.
மேலும் புதினாவை ஊறவைத்து அக்குளில் தடவி குளித்து வந்தால் வியர்வை வாடை சுத்தமாக இருக்காது. குளிக்கும் போது நீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குளித்து வந்தால் உடலில் உள்ள துர்நாற்றம் நீங்கும்
T.N.Balasubramanian, Dr.S.Soundarapandian and ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்
இளநரையை போக்கும் எளிய வழிகள்
*இஞ்சி சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணெயை தலையில் தேய்த்து வர முடி செழித்து வளரும்.
*அவுரி இலை அல்லது அவுரி பொடியை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலைக்கு தேய்த்து வர இளநரை வருவதை தடுக்கலாம்.
*நெல்லிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, தேங்காய் எண்ணெயில் கருப்பாக மாறும் வரை வதக்கி எடுத்து வைத்துக் கொண்டு தலைமுடிக்கு மசாஜ் செய்து வர இளநரை மற்றும் முடி உதிர்தல் தடுக்கப்படும்.
*இளநரை முடி உதிர்தல் மற்றும் வழுக்கைக்கு வெங்காயச் சாறு பெரிதும் உதவுகிறது.
*கருமையான மற்றும் பளபளப்பான முடியை பெற தேங்காய் எண்ணெய்யில் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தடவி மசாஜ் செய்துவர விரைவில் இளநரை மாறும்.
*வேகவைத்த கொய்யா இலை தண்ணீரை தலையில் தடவி மசாஜ் செய்து வர இளநரையை தடுக்கலாம்.
*முசுமுசுக்கை இலையின் சாறு மற்றும் நல்லெண்ணெயை சம அளவு சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு, வாரம் ஒருமுறை அந்த எண்ணெயைத் தேய்த்து குளித்து வந்தால் இளநரை மாறும்.
*அன்றாடம் உண்ணும் உணவில் கறிவேப்பிலையை சேர்த்து வந்தால் இளநரை மறையும். இளநரையை மாற்றும் சக்தி பசுவெண்ணெய்க்கு உண்டு. அதனால் இதனுடன் கறிவேப்பிலைப் பொடியை சேர்த்து சாப்பிட இளநரை மறையும்.
*தண்ணீரில் உலர்ந்த நெல்லிக்காயை இரவு ஊறவைத்து, அந்தத்தண்ணீரை தலையில் தேய்த்து குளித்து வந்தால் இளநரை மாறும். தேங்காய் எண்ணெயில் கறிவேப்பிலையை அரைத்து, காய்ச்சி தினமும் தேய்த்து வர இளநரை மறையும்.
*கறிவேப்பிலையை நன்றாக அரைத்து தினமும் வெறும் வயிற்றில் ஒரு கவளம் சாப்பிட்டு வந்தால் ஒரு மாதத்தில் இளநரையைப் போக்கலாம்.
*நரைமுடி கருப்பாக மாற முளைக்கீரை உதவும். எனவே முளைக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிடலாம்.
*செம்பருத்தியின் இலை மற்றும் பூவை அரைத்து, அதனை தலையில் தடவி, அரை மணிநேரம் ஊற வைத்து குளித்து வந்தால் நரைமுடி மறைய ஆரம்பிக்கும், இதனை வாரத்துக்கு ஒரு முறை செய்ய வேண்டும்.
குறிச்சொற்கள் #நரைமுடி #இளநரை |
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
எந்தெந்த பழங்களை தோலுடன் சாப்பிடலாம்
பழங்களில் சில பழங்கள் தோலுடன் சாப்பிடும் வகையிலும் சில பழங்கள் தோலை எடுத்து விட்டு சாப்பிடும் வகையிலும் இருக்கும் என்பது தெரிந்ததே. மாம்பழம் சப்போட்டா திராட்சை கொய்யா ஆப்பிள் ஆகிய பழங்கள் தோலுடன் சாப்பிடுவது நல்லது
அதேபோல் பழங்களை பிழிந்து வடிகட்டி சாற்றை மட்டும் குடிக்கும்போது அதில் உள்ள நார்ச்சத்து விலக்கப்படும் என்றும் எனவே பொதுவாக பழங்களை ஜூஸ் போட்டு குடிக்காமல் பழமாக சாப்பிடுவது மிகவும் நல்லது என்றும் கூறப்படுகிறது.
பழங்களில் உள்ள முக்கிய சத்துக்கள் இதய நோயாளிகளுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும் தேவைப்படுகிறது என்பதால் பழமாகவே சாப்பிட வேண்டும் என்றும் குறிப்பாக ஆப்பிள் பழத்தை தோலுடன் சாப்பிட்டால் தான் முழு அளவு சத்துக்கள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
கொய்யா பழத்தின் தோலில் சருமத்திற்கு நல்லது செய்யும் வைட்டமின்கள் இருப்பதால் கண்டிப்பாக தோலுடன் தான் சாப்பிட வேண்டும் என்றும் அதேபோல் சப்போட்டா பழங்களின் தோல், காயங்களை ஆற்றும் குணம் உள்ள வேதிப்பொருட்கள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வாழைப்பழத் தோலில் கால்சியம் அமிலம் ஆகியவை இருந்தாலும் வாழைப்பழத்தை யாரும் தோளுடன் சாப்பிடுவதில்லை. ஆனால் வாழைப்பழத்தை தோளோடு சாப்பிட்டால் மூட்டு வலி கட்டுப்படுத்தும் என்று கூறப்படுகிறது.
திராட்சை பழத்தை தோலுடன் சாப்பிட்டால் அதில் உள்ள சத்துக்கள் முழுவதுமாக கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
பூண்டு யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?
தினசரி சமையலில் பயன்படுத்தப்படும் பூண்டு மருத்துவ குணம் மிக்கது. அதேசமயம் பூண்டை சிலர் உணவில் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது நன்மை பயக்கும். யாரெல்லாம் பூண்டு சேர்க்கக்கூடாது என பார்க்கலாம்.
பூண்டு சாப்பிடுவதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு வெகுவாக குறையும் என்பதால் நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.
சமீபத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் கார உணவுகள், பூண்டு சேர்த்த உணவுகள் தவிர்ப்பது நல்லது
பூண்டில் உள்ள அலிசின் கல்லீரல் நச்சை அதிகரிக்கும். இதனால் கல்லீரல் பிரச்சினை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்
பூண்டில் உள்ள சல்பர் காரணமாக அதிகமாக சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் ஏற்படலாம்.
பச்சை பூண்டை சாப்பிடுவதால் சிலருக்கு தலைவலி ஏற்பட்டும் வாய்ப்பு உள்ளது.
அதிகம் பூண்டு சாப்பிடுவது நெஞ்சு எரிச்சல், செரிமான கோளாறை ஏற்படுத்தலாம்.
அலர்ஜி உள்ளவர்கள் பூண்டு சாப்பிடுவதால் தோல் அரிப்பு, தடிப்பு உண்டாகும் வாய்ப்பு உள்ளது.
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
தைராய்டு
#தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் உணவு வகைகள் எடுத்துக் கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். கோடை காலங்களில் சரியான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதுகுறித்து காண்போம்..
தைராய்டு உள்ளவர்கள் பொதுவாக ஓவனில் சமைக்கப்பட்ட உணவுகள், பீட்சா போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
பரங்கிக்காய் விதையில் உள்ள ஜிங்க் சத்து தைராய்டு பிரச்சினை உள்ளவர்களுக்கு முக்கியமான சத்தாகும்.
கருவேப்பிலையில் உள்ள காப்பர் சத்து தைராக்சின் உற்பத்தியை ஊக்குவிப்பதால் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தண்டுக் கீரையில் உள்ள செலினியம் சத்து டி4-ஐ டி3 ஆக மாற்றுவதால் தண்டுக் கீரை எடுப்பது நல்லது.
கோடை காலத்தில் குளிர்ச்சி அளிக்கும் சப்ஜா விதைகளை எடுத்துக் கொள்வதால் உடலில் மெட்டபாலிசம் அதிகரிக்கும்.
புளிக்காத தயிர் சாப்பிடுவதன் மூலம் அயோடின் சத்தயும், நோய் எதிர்ப்பு சக்தியையும் பெறலாம்.
பாசிப்பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகள் தைராய்டு பிரச்சினைகளை குறைக்கும் நல்ல உணவுகளாகும்
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
முதுகு வலி
கால்சியம் குறைபாடு காரணமாக முதுகு வலி வருவதால் கால்சியம் அதிகம் உள்ள பால் பொருட்களை சாப்பிட வேண்டும். குறிப்பாக பால் தயிர் வெண்ணை பாலாடை கட்டி போன்ற பொருட்களை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதேபோல் தினை, உளுந்தம் பருப்பு பீன்ஸ் எள் போன்றவற்றை சாப்பிட்டால் புரதச்சத்து இரும்பு சத்து ஆகியவை கிடைக்கும். மேலும் அன்னாசி, திராட்சை ப்ளூபெர்ரி போன்ற பழங்களை சாப்பிட்டால் #முதுகுவலி வருவது தவிர்க்கப்படும்.
மேலும் இஞ்சி துளசி இலவங்கப்பட்டை ஆகியவற்றையும் மஞ்சள் போன்றவையும் சாப்பிட்டால் முதுகு வலி குறையும். வைட்டமின் சி மற்றும் பி12 நிறைந்த காய்கறிகளை சாப்பிட வேண்டும். குறிப்பாக கத்திரிக்காய் முருங்கைக்காய் ஆகியவற்றை சாப்பிட்டால் முதுகு வலி குறையும்..
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
பல பயனுள்ள மருத்துவ குறிப்புகள்.
நன்றி சிவா.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
பெருஞ்சீரகம்
அன்றாடம் சமையலில் பயன்படுத்தப்படும் பொருட்களில் நல்ல மருத்துவ குணம் வாய்ந்தது #பெருஞ்சீரகம் எனப்படும் சோம்பு. அதன் அளவில்லா பயன்களை குறித்து அறிவோம்
பெருஞ்சீரக தண்ணீரை குடிப்பதால் உடலில் ஹார்மோன் சமநிலை ஏற்படுகிறது.
கோடை காலத்தில் ஏற்படும் செரிமான கோளாறு பெருஞ்சீரக தண்ணீர் குடித்தால் குணமாகும்.
பெருஞ்சீரகத்தை மென்று தண்ணீர் குடித்தால் வாயு தொல்லை பிரச்சினைகள் தீரும்.
பெருஞ்சீரகத்தில் உள்ள ஆண்டிபிராஸ்மோட்டிக் மாதவிடாய் பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கிறது.
பெருஞ்சீரகத்தில் உள்ள விட்டமின் சி உடலில் ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க உதவுகிறது.
வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் பெருஞ்சீரகம் மென்று வாய் கொப்பளிக்க துர்நாற்றம் நீங்கும்.
பெருஞ்சீரகத்தில் உள்ள அனெத்தோல் புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை தடுக்கிறது.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
மாரடைப்பு பரம்பரை வியாதியா?
ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்தால் அவரது வாரிசுகளுக்கும் சர்க்கரை நோய் வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் #மாரடைப்பு அதே போல் வாரிசுகளுக்கு 30% வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
குடும்பத்தில் உள்ள பெற்றோருக்கு மாரடைப்பு வந்தால் அந்த குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு 30 சதவீதம் மாரடைப்பு வர அதிக வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதே நேரத்தில் வாழ்க்கை முறையை சரியாக கட்டமைத்துக் கொண்டால் மாரடைப்பிலிருந்து தப்பிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஆரோக்கியமான உணவுகள், சரியான உடற்பயிற்சி ஆகியவை எடுத்துக்கொண்டு மது புகை ஆகியவற்றை தவிர்த்து வந்தால் மாரடைப்பிலிருந்து தப்பிக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் அவ்வப்போது உடல் பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும் என்றும் ஸ்மார்ட் வாட்ச் போன்ற சாதனங்களை பயன்படுத்தி மாரடைப்பு வருவதை முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த வாழ்க்கை முறையை கடைப்பிடித்து மகிழ்ச்சியாக இருந்தால் மாரடைப்பு நோயிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்றும் கூறப்படுவதுண்டு
- Sponsored content
Page 5 of 18 • 1, 2, 3, 4, 5, 6 ... 11 ... 18
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
|
|