by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு |
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் |
மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
Page 9 of 18 • 1 ... 6 ... 8, 9, 10 ... 13 ... 18
வியர்வை நாற்றத்தை போக்க என்ன செய்ய வேண்டும்?
வெயில் காலத்தில் எல்லோருக்கும் வியர்வை என்பது மிக அதிகமாக வரும். வேர்வை வந்தாலே தானாகவே வியர்வை நாற்றம் உடலில் இருந்து வீசத் தொடங்கிவிடும்.
எனவே வியர்வை நாற்றம் தடுக்க சில முயற்சிகளை செய்யலாம். முதல் வகையில் மஞ்சள் பொடியை அக்குளில் தடவி வந்தால் வியர்வை நாற்றம் மறைந்து மஞ்சள் மணம் மட்டுமே இருக்கும்.
அதேபோல் தக்காளியை பிழிந்து பக்கெட் தண்ணீரில் கலந்து குளித்தால் வியர்வை மாற்றம் இருக்காது.
மேலும் புதினாவை ஊறவைத்து அக்குளில் தடவி குளித்து வந்தால் வியர்வை வாடை சுத்தமாக இருக்காது. குளிக்கும் போது நீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குளித்து வந்தால் உடலில் உள்ள துர்நாற்றம் நீங்கும்
T.N.Balasubramanian, Dr.S.Soundarapandian and ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்
மரவள்ளிக்கிழங்கு
இந்தியாவில் ஒரு பிரதான உணவாக #மரவள்ளிக்கிழங்கு பயன்படுத்தப்படுகிறது. இதனை வேகவைத்து சாப்பிட சுவையாக இருக்கும். இதில் உள்ள பல நன்மைகள் நம் உடலுக்கு வல்லமைக் கொடுக்கக்கூடியது.
* மரவள்ளிக்கிழங்கில் கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் C சத்து மிகுந்துள்ளது.
* மரவள்ளிக்கிழங்கு மாவில் தோசை, அடை, உப்புமா போன்ற எல்லா வகை சிற்றுண்டிகளும், இனிப்பு கார வகைகளும் செய்யலாம்.
* அதிக அளவில் மாவுச்சத்து மிக்க மரவள்ளிக்கிழங்கு, உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது. வேக வைத்த மரவள்ளிக்கிழங்கு, உடலுக்கு ஆற்றலைத் தரும்.
* கரு சுமக்கும் தாய்மார்கள் சிலருக்கு, கருவில் உண்டாகும் மழலைகளின் ஊனம் தவிர்க்க, மரவள்ளிக்கிழங்கு மருந்தாகிறது.
* பாதிப்புடைய நடுத்தர வயதினர், வாரமிருமுறை மரவள்ளிக்கிழங்கை சாப்பிட்டுவர, எலும்புகளின் உறுதி அதிகரிக்கும்.
* ஞாபக மறதி வியாதியை குணப்படுத்தும். உடலில் நீரின் அளவை சரியாக்கும். ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து, மெட்டபாலிசம் எனப்படும் உடலின் வளர்சிதை மாற்றத்தை சீராக்கும்.
* ரத்த சிவப்பணுக்களை அதிகரித்து, ரத்த ஓட்டத்தை சீராக்கி, ரத்தத்தில் கலந்துள்ள நச்சுக் கொழுப்புகளை கரைக்கிறது.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
சக்கரவள்ளி கிழங்கு
நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் சக்கரவள்ளி கிழங்கில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிரம்பி இருப்பதாக கூறப்படுகிறது.
இதில் உள்ள வைட்டமின் பி-6 என்ற வைட்டமின் இதய நோயை சரி செய்கிறது என்றும் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் தேவையற்ற நச்சுப் பொருட்களை வெளியேற்றுகிறது என்றும் கூறப்படுகிறது.
மேலும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீராக பராமரிக்க சக்கர வள்ளிக்கிழங்கு உதவுகிறது என்றும் வலுவான எலும்புகள் வலுவான இதயம் ஆகியவற்றுக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
தைராய்டு சுரப்பி, பற்கள், எலும்புகள், நரம்புகள் ஆகியவற்றின் ஆரோக்கியத்தை காக்கவும் சக்கரவள்ளி கிழங்கில் உள்ள வைட்டமின் டி உதவுகிறது. சக்கரவள்ளி கிழங்கை வேகவைத்த அல்லது சிப்ஸ் செய்து சாப்பிடலாம் அதில் உள்ள சத்துக்கள் முழுவதும் உடலுக்கு கிடைக்கும்.
#சக்கரவள்ளி_கிழங்கு
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
விட்டமின் ஈ - உணவுகள்
கண் பார்வையை ஆரோக்கியம், தசை வளர்ச்சி உள்ளிட்ட பல உடல் ஆரோக்கியத்திற்கு விட்டமின் ஈ சத்து அவசியமானது. விட்டமின் ஈ சத்தை அள்ளி வழங்கும் உணவுகள் பற்றி அறிவோம்
#விட்டமின்_ஈ சத்து நிறைந்த பழ வகைகளில் முக்கியமானது கிவி பழம்.
வேர்க்கடலையில் உள்ள விட்டமின் ஈ சத்து உடலை உறுதிப்படுத்துகிறது.
சூரியகாந்தி எண்ணெய்யிலும் விட்டமின் ஈ உள்ளதால் அளவாக உணவில் பயன்படுத்தலாம்.
சூரியகாந்தி பூ விதைகளை உணவாக எடுத்துக் கொள்வதன் மூலம் உடலில் விட்டமின் ஈ சத்தை அதிகரிக்கலாம்.
மாம்பழத்தில் விட்டமின் ஈ சத்து உள்ளதால் மாம்பழம் சாப்பிடுவது நல்லது.
மீன் வகைகளில் நிறைந்துள்ள விட்டமின் ஈ சத்து மற்றும் பிற சத்துக்கள் கண் பார்வையை வலுப்படுத்துகின்றன.
#Vitamin-E
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
பச்சரிசியை விட புழுங்கல் அரிசி நல்லதா?
நெல்லை நேரடியாக வெயிலில் உலர்த்தி ஆலையில் அரைத்து அதன் உமியை நீக்கினால் அது #பச்சரிசி என்பதும், நெல்லை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து பின்னர் வேகவைத்து வெயிலில் உலர்த்தி பின்னர் உமியை நீக்குவதால் கிடைப்பது புழுங்கல் அரிசி என்பதும் தெரிந்ததே.
நெல்லை வேக வைக்கும் போது அதில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி போன்ற சத்துக்கள் அரிசிக்குள் திணிக்கப்படுவதால் புழுங்கல் அரிசி, பச்சரிசியை விட அதிகம் ஊட்டச்சத்து உள்ளதாக கருதப்படுகிறது.
மேலும் #புழுங்கல்_அரிசி நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது என்றும் வயிற்றுப்போக்கு மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தாது என்றும் கூறப்படுகிறது.
எனவே நீரிழிவு நோயாளிகள் உள்பட அனைவருக்கும் பச்சரிசியை விட புழுங்கல் அரிசி சிறந்தது என்று கூறப்படுகிறது
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
கொத்தவரங்காய்
சிறிதாக விரல் போல நீண்டிருக்கும் #கொத்தரவரங்காய் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டது. கொத்தவரங்காயை ஜூஸாக குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து அறிந்து கொள்வோம்
கொத்தவரங்காயில் விட்டமின் ஏ, சி, கால்சியம், புரதம், இரும்புச்சத்து, போலேட் நிறைவாக உள்ளது.
கொத்தவரங்காயில் கிளைசிமிக்ஸ் இண்டெக்ஸ் மிகக் குறைவு என்பதால் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம்.
கொத்தவரங்காய் விதைகளில் உள்ள நார்ச்சத்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
கொத்தவரங்காய் ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது.
கொத்தவரங்காய் சாப்பிடுவதால் பைட்டோநியூட்ரியண்ட்ஸ் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
கொத்தவரங்காயில் உள்ள போலேட் மற்றும் இரும்புச்சத்து கர்ப்பிணி பெண்களுக்கு அவசியமான சத்துக்களாகும்.
#Kothavarangai
தெளிவான கண் பார்வை வேண்டுமா?
கண் பார்வை ஆரோக்கியம் என்பது எல்லாருக்கும் அவசியமான ஒன்று. கண்பார்வையை ஆரோக்கியமாக வைக்க சில எளிய வழிகளை இங்கே காணலாம்.
நல்ல கண் பார்வை பெற தினசரி 7 – 8 மணி நேரம் நன்றாக தூங்குவது அவசியம். இதனால் கண்கள் நல்ல ஓய்வை பெறுவது ஆரோக்கியமாக இருக்கும்.
மொபைல், கணினி உள்ளிட்ட டிஜிட்டல் திரைகளை நீண்ட நேரம் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். நீண்ட நேரம் டிஜிட்டல் திரை வெளிச்சத்தை பார்ப்பது கண் விழித்திரைகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.
தினமும் இருவேளை உள்ளங்கைகளால் கண்களை மூடிக் கொண்டு சில நிமிடங்கள் பயிற்சி செய்ய வேண்டும்.
கண் பார்வையை மேம்படுத்தும் மீன், கேரட், பப்பாளி போன்ற உணவுகளை அவ்வபோது எடுத்துக் கொள்ள வேண்டும்.
கண்ணை கூசும் வெயில் வெளியே சென்றால் கூலிங் க்ளாஸ் போன்றவற்றை அணிந்து கொள்ள வேண்டும்.
இரவு நேரங்களில் முக்கியமாக நள்ளிரவு நேரங்களில் விழித்திருப்பதை தவிர்க்க வேண்டும்.
தினசரி இரண்டு முதல் இரண்டரை லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். இது உடல் சூட்டை குறைப்பதுடன், கண் நரம்புகள் சிறப்பாக செயல்பட உதவும்.
வாதநாராயணன் கீரை
முடக்குவாத நோய்களை தீர்க்க கை வைத்தியத்தில் வாத நாராயணன் கீரையை அதிகம் உபயோகப்படுத்தப்படுகிறது. வாதநாராயணன் இலைகள், கைப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. ஆதிநாராயணன், வாதரசு, வாதமடக்கி போன்ற பெயர்களாலும் இது குறிப்பிடப்படுகின்றது. தமிழகமெங்கும், கிராமங்களில், வேலிகளில், சாலையோரங்களில் வளர்க்கப்படுகின்றது. ரயில் நிலையங்களின் பாதையோரங்களிலும் இவை பரவலாகக் காணப்படும். இதன் இலை, பட்டை ஆகியவை மருத்துவப் பயன் மிகுந்தவை.
#வாதநாராயணன் இலையைச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால், வாதவலி, வீக்கம், கட்டிகள் குணமாகும். வாரம் இரண்டு முறை பயன்படுத்தலாம். மேலும், இலையை ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி, வீக்கம், கட்டிகள் மேல் பற்றிட குணமாகும். கை, கால் குடைச்சல், வலி குணமாக வாதநாராயணன் இலைச்சாறு ஒரு தேக்கரண்டி, தினமும் காலையில் மட்டும் குடித்துவர வேண்டும்.
வாத நோய்களைக் குணமாக்குவதோடு பித்த நீரை அதிகரிக்கும் நாடி நடையைப் பலப்படுத்தும் உடல் வெப்பத்தை அதிகரிக்கும். மேலும், வீக்கத்தைக் கரைக்கும். அதிகமாக உட்கொண்டால் கழிச்சலுண்டாக்கும்.
ருமட்டாய்டு ஆர்த்தரைட்டீஸ் பிரச்னை இருப்பவர்களுக்கு காலை நேரத்தில் வலியுடன் மூட்டுகளில் இளஞ்சூடு இருக்கும். இவர்கள் வாத நாராயண இலையை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்துவந்தால் நோய் தீவிரமும் வலியும் குறைவதை உணரலாம்.காலை வேளையில் எழுந்ததும் வாதநாராயணன் இலையை கடுகு எண்ணெயுடன் கலந்து மைய அரைத்து வலி இருக்கும் இடத்தில் தடவி வந்தால் வீக்கம், இளஞ்சூடு உணர்வு தணியும்.
வாத நாராயண இலையை நீரில் ஊற வைத்து அந்த நீரை மூட்டுகள் இருக்கும் இடங்களில் பொறுமையாக ஊற்றி வந்தால் குடைச்சல் குறையும். மூட்டுவலியால் அவதிப்படுபவர்களுக்கு தக்க நிவாரணி வாதநாராயணன் கீரை. இந்த வாதநாராயணன் கீரைக் குழம்பை செய்து சாப்பிட்டு வந்தால், பல்வேறு நோய்களுக்கும் மருந்தாக அமையும்.மழைக்காலம், வெயில்காலம் என்று எல்லா நேரங்களிலும் சாப்பிடலாம். நரம்புகளை பலப்படுத்தும். கை, கால் முடக்கத்தை போக்கும். ரத்த ஓட்டத்தை சீராக்கும். மூட்டு வலிக்கு சிறந்த வலி நிவாரணி, மலக்கட்டை நீக்கி, குடலை சுத்தப்படுத்தும்.
#வாதநாராயணன்_கீரை
குடற்புழுக்களை நீக்கும் உணவுகள்
வயிற்றில் குடல் பகுதியில் உருவாகும் புழுக்கள் உடல் நலனுக்கு கேடு விளைவிப்பவை. ஆனால் இவற்றை ஆரோக்கியமான இயற்கை உணவுகளை கொண்டு நீக்க முடியும். அதுகுறித்து தெரிந்து கொள்வோம்.
கற்பூரவள்ளி எண்ணெயை எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்து வர #குடற்புழு நீங்கும்.
கிராம்பு இரண்டை தினசரி மென்று தின்று வர குடற்புழுக்களை அழிக்கும்.
தினமும் காலை வெறும் வயிற்றில் பச்சை கேரட்டை கடித்து சாப்பிட்டு வர குடற்புழு நீங்கும்.
ஒரு கப் புதினா சாற்றுடன், எலுமிச்சை சாறு கறுப்பு உப்பு கலந்து சாப்பிட்டு வர குடற்புழு பிரச்சினை நீங்கும்.
வெதுவெதுப்பான பாலுடன் ஆமணக்கு எண்ணெய் 2 ஸ்பூன் கலந்து குடித்தால் குடற்புழுக்கள் மலத்தில் வெளியேறிவிடும்.
தினசரி ஒரு பல் பூண்டை மென்று சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் #குடற்புழுக்கள் அழியும்.
எலுமிச்சை விதைகளை பொடியாக்கி நீருடன் கலந்து பருக குடற்புழு நீங்கும்.
#Tapeworm #hookworm #pinworm
பச்சை ஆப்பிள், சிவப்பு ஆப்பிள் எதை சாப்பிடலாம்?
உடலுக்கு தேவையான சத்துக்களை வழங்குவதி ஆப்பிள் முக்கியமானது. தற்போது சந்தைகளில் #சிவப்பு_ஆப்பிள் #பச்சை_ஆப்பிள் கிடைக்கும் நிலையில் எதை யார் சாப்பிடலாம் என அறிவோம்.
பச்சை, சிவப்பு இரண்டு ஆப்பிள்களிலும் புரதம், விட்டமின், தாதுக்கள் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன.
சிவப்பு ஆப்பிளை விட பச்சை ஆப்பிளில் சர்க்கரை குறைவு என்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு பச்சை ஆப்பிள் சிறந்தது.
ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் உடலில் அதிகரிக்க சிவப்பு ஆப்பிள்கள் சிறப்பானவை.
பச்சை ஆப்பிளில் உள்ள ஃப்ளாவனாய்டுகள் நுரையீரலை பலப்படுத்தி ஆஸ்துமா அபாயத்தை குறைக்கிறது.
பச்சை, சிவப்பு இரண்டு ஆப்பிள்களுமே செரிமான சக்தியை அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சினைகளை தீர்க்கிறது.
பச்சை ஆப்பிளில் சிவப்பு ஆப்பிளை விட கால்சியம் சத்து கூடுதலாக இருப்பதால் எலும்பிற்கு வலு அளிக்கிறது.
உடல் எடை குறைக்க விரும்புபவர்களுக்கு புளிப்பு சுவை கொண்ட பச்சை #ஆப்பிள் சிறந்தது.
- Sponsored content
Page 9 of 18 • 1 ... 6 ... 8, 9, 10 ... 13 ... 18
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
|
|