புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாஸ்மாக் மது விற்பனையில் கலால் வரி ஏய்ப்பு; ரூ4 லட்சம் கோடி மோசடி Poll_c10டாஸ்மாக் மது விற்பனையில் கலால் வரி ஏய்ப்பு; ரூ4 லட்சம் கோடி மோசடி Poll_m10டாஸ்மாக் மது விற்பனையில் கலால் வரி ஏய்ப்பு; ரூ4 லட்சம் கோடி மோசடி Poll_c10 
32 Posts - 51%
heezulia
டாஸ்மாக் மது விற்பனையில் கலால் வரி ஏய்ப்பு; ரூ4 லட்சம் கோடி மோசடி Poll_c10டாஸ்மாக் மது விற்பனையில் கலால் வரி ஏய்ப்பு; ரூ4 லட்சம் கோடி மோசடி Poll_m10டாஸ்மாக் மது விற்பனையில் கலால் வரி ஏய்ப்பு; ரூ4 லட்சம் கோடி மோசடி Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
டாஸ்மாக் மது விற்பனையில் கலால் வரி ஏய்ப்பு; ரூ4 லட்சம் கோடி மோசடி Poll_c10டாஸ்மாக் மது விற்பனையில் கலால் வரி ஏய்ப்பு; ரூ4 லட்சம் கோடி மோசடி Poll_m10டாஸ்மாக் மது விற்பனையில் கலால் வரி ஏய்ப்பு; ரூ4 லட்சம் கோடி மோசடி Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாஸ்மாக் மது விற்பனையில் கலால் வரி ஏய்ப்பு; ரூ4 லட்சம் கோடி மோசடி Poll_c10டாஸ்மாக் மது விற்பனையில் கலால் வரி ஏய்ப்பு; ரூ4 லட்சம் கோடி மோசடி Poll_m10டாஸ்மாக் மது விற்பனையில் கலால் வரி ஏய்ப்பு; ரூ4 லட்சம் கோடி மோசடி Poll_c10 
74 Posts - 57%
heezulia
டாஸ்மாக் மது விற்பனையில் கலால் வரி ஏய்ப்பு; ரூ4 லட்சம் கோடி மோசடி Poll_c10டாஸ்மாக் மது விற்பனையில் கலால் வரி ஏய்ப்பு; ரூ4 லட்சம் கோடி மோசடி Poll_m10டாஸ்மாக் மது விற்பனையில் கலால் வரி ஏய்ப்பு; ரூ4 லட்சம் கோடி மோசடி Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
டாஸ்மாக் மது விற்பனையில் கலால் வரி ஏய்ப்பு; ரூ4 லட்சம் கோடி மோசடி Poll_c10டாஸ்மாக் மது விற்பனையில் கலால் வரி ஏய்ப்பு; ரூ4 லட்சம் கோடி மோசடி Poll_m10டாஸ்மாக் மது விற்பனையில் கலால் வரி ஏய்ப்பு; ரூ4 லட்சம் கோடி மோசடி Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
டாஸ்மாக் மது விற்பனையில் கலால் வரி ஏய்ப்பு; ரூ4 லட்சம் கோடி மோசடி Poll_c10டாஸ்மாக் மது விற்பனையில் கலால் வரி ஏய்ப்பு; ரூ4 லட்சம் கோடி மோசடி Poll_m10டாஸ்மாக் மது விற்பனையில் கலால் வரி ஏய்ப்பு; ரூ4 லட்சம் கோடி மோசடி Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாஸ்மாக் மது விற்பனையில் கலால் வரி ஏய்ப்பு; ரூ4 லட்சம் கோடி மோசடி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 16, 2023 8:09 pm



தமிழக அரசின் டாஸ்மாகில் மதுபானங்கள் விற்பனை வரி செலுத்தாமல் விற்கப்படுவதாகவும், இதனால் நான்கு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடந்துள்ளதாகவும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றசாட்டு வைக்கிறார்.

இதைப்பற்றி அவரது அறிக்கையில் கூறியுள்ளதாவது, “தமிழ்நாடு அரசின் #டாஸ்மாக் சில்லறை கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும் மதுப்புட்டிகளில் பெரும்பாலானவற்றுக்கு கலால் வரி மற்றும் விற்பனை வரி செலுத்தப்படாமல் ஏய்க்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

மக்களின் உயிர் போனாலும் பரவாயில்லை; அரசுக்கு வருவாய் வேண்டும் என்ற நோக்கத்துடன் நடத்தப்படும் மதுவணிகத்தில் வரி ஏய்ப்பு செய்து, அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் தனிநபர்களுக்கு திருப்பி விடப்படுவதை மன்னிக்க முடியாது.

தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த எக்கியார்குப்பத்தில் நச்சு சாராயம் குடித்து 14 பேரும், செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் பேருக்கரணை கிராமத்தில் நச்சு சாராயம் குடித்து ஐவரும் உயிரிழந்தது மதுவால் ஏற்படும் சீரழிவுகள் குறித்த விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவது ஒருபுறம் என்றால், இன்னொருபுறம் சந்து கடைகள் என்ற பெயரில், ஒவ்வொரு டாஸ்மாக் கடைக்கு கீழும் 5 முதல் 10 சட்டவிரோத மதுக்கடைகள் இயங்குகின்றன.

அங்கு 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படுவதாகவும், அவ்வாறு விற்கப்படும் மதுப்புட்டிகள் எதற்கும் கலால் வரியோ, மதிப்புக் கூட்டு வரியோ செலுத்தப்படுவதில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களே இந்த வரி ஏய்ப்பை உறுதி செய்கின்றனர்.

தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மதுப் புட்டிகளில் மூன்றில் ஒரு பங்குக்கு மட்டும் தான் முறைப்படி கலால் வரி மற்றும் மதிப்புக் கூட்டு வரி செலுத்தப்படுவதாகவும், மீதமுள்ள இரு பங்கு மதுப்புட்டிகள் எந்த வரியும் செலுத்தப்படாமல் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாகவும் கூறப்படும் புகார்களை நம்பாமல் இருக்க முடியவில்லை.

இக்குற்றச்சாட்டை நிதியமைச்சராக பணியாற்றிய பழனிவேல் தியாகராஜனும் உறுதி செய்திருக்கிறார். கடந்த ஆண்டு மார்ச் 15 ஆம் நாள் தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் கலால் வரி ஏய்ப்பு பற்றி அவர் கூறிய தகவல்கள் முக்கியமானவை.

‘‘தமிழகத்தில் ஆயத்தீர்வை வளையத்திற்கு வெளியே விற்பனை செய்யப்படும் மதுவின் அளவு மிகவும் அதிகம். அதிகபட்சமாக 50% அளவுக்கு இது இருக்கலாம். சிறந்த தொழில் நுட்பங்கள் மற்றும் கண்காணிப்பை பயன்படுத்தி இதைத் தடுப்பதற்கான வழிகளை நாம் கண்டறிய வேண்டும்.

மதுபாட்டில்கள் மீது ஹோலோகிராம் முத்திரை ஒட்டும் இப்போதைய முறை பயனற்றது. டாஸ்மாக் கடைகளில் ரசீது வழங்கும் கருவிகள் இன்னும் முழுமையாக ஏற்படுத்தப் படவில்லை. மது விற்பனை அமைப்பு அடிப்படையாக மேம்படுத்தப்படவேண்டும்’’ என்று பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கூறி இருந்தார். அதற்குப் பிறகும் கலால் வரி ஏய்ப்பைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

டாஸ்மாக் மது வணிகத்தில் செய்யப்படும் கலால் வரி மற்றும் மதிப்புக் கூட்டு வரி ஏய்ப்பு தடுத்து நிறுத்தப்பட்டிருந்தால், அது அரசின் கலால் மற்றும் விற்பனை வரி வசூலில் எதிரொலித்திருக்கும். ஆனால், அவ்வாறு தெரியவில்லை. கடந்த 2021-22ஆம் ஆண்டில் கலால் வரி ரூ.8236.60 கோடி, மதிப்புக் கூட்டு வரி ரூ.27,814.05 கோடி என மொத்தம் ரூ.36,050.65 கோடி மதுவணிகத்தின் மூலம் வருவாயாக கிடைத்தது.

கலால் வரி மற்றும் மதிப்புக் கூட்டு வரி ஏய்ப்பு தடுக்கப்பட்டிருந்தால், மது வணிகத்தின் மூலமான வருவாய் 2022-23ஆம் ஆண்டில் ரூ.72,000 கோடியாக அதிகரித்திருக்க வேண்டும். ஆனால், 2022-23ஆம் ஆண்டில் மது வணிகத்தின் மூலமான வருவாய் ரூ.44,098 கோடி மட்டும் தான்.

கலால் வரி உயர்வு காரணமாக மதுப்புட்டிகளின் விலை அதிகரிக்கப்பட்டதும், டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது வகைகளின் எண்ணிக்கை 553 ஆக அதிகரிக்கப்பட்டதால் மது விற்பனை உயர்ந்ததும் தான் வருவாய் அதிகரிக்க காரணமே தவிர, வரி ஏய்ப்பு தடுக்கப்பட்டது அல்ல.

டாஸ்மாக் மது வணிகத்தில் கலால் மற்றும் மதிப்புக் கூட்டு வரி ஏய்ப்பு கடந்த 20 ஆண்டுகளாகவே நடைபெற்று வருவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. வரி ஏய்ப்பை நிதியமைச்சரே சுட்டிக்காட்டியும் அது சரி செய்யப்படவில்லை என்றால், வரி ஏய்ப்பு என்பது தவறுதலாக நடக்கவில்லை; திட்டமிட்டே செய்யப் படுகிறது என்று தான் பொருள் ஆகும். இது இனியும் தொடருவதற்கு அரசு அனுமதிக்கக் கூடாது.

தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மதுவின் அளவில் மூன்றில் ஒரு பங்கிற்கு மட்டும் தான் வரி செலுத்தப்படுகிறது; இரு பங்குக்கு வரி செலுத்தப்படுவதில்லை என்று இப்போது புகார்கள் எழுந்துள்ளன. 50% மதுப்புட்டிகளுக்கு கலால் வரி செலுத்தப்படவில்லை என்று நிதியமைச்சரே கூறுகிறார். இவை உண்மை என்றால் அது மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் அப்பட்டமான தோல்வி ஆகும்.

கலால் வரி ஏய்ப்பு என்பது ஆயத்தீர்வை துறைக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மது ஆலையும் தனித்து இயங்குவதில்லை. அங்கு உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு மதுப்புட்டிக்கும் கலால் வரி செலுத்தப்படுவதையும், மதுப்புட்டிகள் டாஸ்மாக் கிடங்கைத் தவிர வேறு எங்கும் செல்லாமல் இருப்பதையும் உறுதி செய்யவும் ஒவ்வொரு ஆலையிலும் மாவட்ட வருவாய் அலுவலர் நிலையிலான அதிகாரிகள் பணியமர்த்தப்படுகின்றனர்.

அவர்களின் கண்காணிப்பை மீறி வரி ஏய்ப்பும், கள்ளச் சந்தைக்கு செல்வதும் நடக்காது. தமிழகத்தில் உள்ள மது ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் மதுவின் அளவும், டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுவின் அளவும் சமமாக இருக்கிறதா என்பதை தமிழக அரசின் ஆயத்தீர்வை துறை ஆய்வு செய்திருந்தாலே இந்த வரி ஏய்ப்பு அம்பலமாகியிருக்கும். ஆனால், அதை ஆயத்தீர்வைத்துறை செய்ததா? எனத் தெரியவில்லை.

கலால் வரி ஏய்ப்பை கண்டுபிடிப்பது இப்போதும் கூட கடினமானது அல்ல. தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 11 மது ஆலைகள், 7 பீர் ஆலைகளில் கடந்த காலங்களில் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப் பட்டது? எவ்வளவு தண்ணீர் பயன்படுத்தப்பட்டது என்பதை கண்டறிவதன் மூலம் அந்த ஆலைகளில் எவ்வளவு மது மற்றும் பீர் தயாரிக்கப்பட்டது என்பதை கணக்கிட முடியும். எந்த அளவுக்கு மதுவும், பீர் வகைகளும் உற்பத்தி செய்யப்பட்டனவோ, அதே அளவுக்கு வரி செலுத்தப்பட்டுள்ளதா? என்பதை மிகவும் எளிதாக கண்டறிய முடியும். அதை இன்று வரை ஆயத்தீர்வைத் துறை செய்யாதது ஏன்?

முன்னாள் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியவாறு 50% மதுப்புட்டிகளுக்கு கலால் வரியும், மதிப்புக் கூட்டு வரியும் செலுத்தப்படவில்லை என்றால், கடந்த 20 ஆண்டுகளில் மது வணிகத்தின் மூலம் அரசுக்கு எவ்வளவு வருவாய் கிடைத்திருக்குமோ, கிட்டத்தட்ட அதே அளவு, அதாவது ரூ.3 லட்சத்து 90,713.86 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும்.

இது தமிழ்நாடு அரசின் நேரடிக் கடனில் 60 விழுக்காட்டுக்கும் அதிகம் ஆகும். தமிழக அரசின் வரலாற்றில் இது தான் மிகப்பெரிய வருவாய் இழப்பாகும். இது உண்மை எனில், இதை எளிதில் கடந்து செல்ல முடியாது; கடந்து செல்லக் கூடாது.

தில்லியில் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் வகையில் மது கலால் வரிக் கொள்கையை வகுத்ததால் பெரும் புயல் எழுந்துள்ளது. அது தொடர்பான விசாரணை தில்லியில் தொடங்கி தெலுங்கானா வரையிலும் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டிலும் கடந்த 20 ஆண்டுகளாக கலால் வரி மற்றும் விற்பனை வரி செலுத்தப்படாமல் மது விற்பனை செய்யப்படுவதாக கூறப்படும் புகாரின் உண்மைத்தன்மை குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும். அதற்காக, கலால்வரி மற்றும் விற்பனை வரி ஏய்ப்பு குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவு (சி.பி.ஐ) விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்”, என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 14-ஐ தொட்டது. அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் போலி மது குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

இந்தநிலையில், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி இராமதாஸ் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

இதைப்பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், “சமூக அக்கறை இல்லாத மதுவிலக்குத் துறை அமைச்சரை மாற்றவேண்டும். அடுத்த தலைமுறையை நாம் காப்பாற்றவேண்டும். இந்த தலைமுறை மது இல்லாமல் வாழ முடியாது என்ற நிலையை திராவிடக் கட்சிகள் உருவாக்கியுள்ளன.

தமிழகம் மற்றும் ஜிப்மரில் கூட Methyl alcohol poisoning antidote என்ற மருந்து இல்லை. அது இருந்திருந்தால் உயிரிழப்பைத் தடுத்திருக்க முடியும். அந்த மருந்து வெளிநாடுகளில் உள்ளது. தமிழகத்தில் சாராயம் இருக்கக் கூடாது என்று முதல்வர் கூறியிருந்தால், மதுவிலக்குத் துறையை என் கண்காணிப்பில் விடுங்கள். அவரின் லட்சியத்தை நிறைவேற்றுவேன். மதுவிலக்கை குஜராத், பிஹாரில் நடைமுறைபடுத்தும்போது இங்கு ஏன் நடைமுறைப்படுத்த முடியாது?

தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் சில்லறை கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும் மதுப்புட்டிகளில் பெரும்பாலானவற்றுக்கு கலால் வரி மற்றும் விற்பனை வரி செலுத்தப்படாமல் ஏய்க்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. மக்களின் உயிர் போனாலும் பரவாயில்லை; அரசுக்கு வருவாய் வேண்டும் என்ற நோக்கத்துடன் நடத்தப்படும் மதுவணிகத்தில் வரி ஏய்ப்பு செய்து அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் தனிநபர்களுக்கு திருப்பி விடப்படுவதை மன்னிக்க முடியாது.

தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த எக்கியார்குப்பத்தில் நச்சு சாராயம் குடித்து 14 பேரும், செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் பேருக்கரணை கிராமத்தில் நச்சு சாராயம் குடித்து ஐவரும் உயிரிழந்தது மதுவால் ஏற்படும் சீரழிவுகள் குறித்த விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது” என்றார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed May 17, 2023 12:29 pm

“அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் தனிநபர்களுக்கு திருப்பி விடப்படுவதை மன்னிக்க முடியாது.” -
யார் அந்தத் தனி நபர்கள்? தெரிந்தும் அவர்கள் பெயரைச் சொல்லாதவர்கள் , அவர்களுக்கு உதவி செய்பவர்கள் அல்லாமல் வேறென்ன?



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Thu May 18, 2023 3:36 pm

இன்றைய இளைய தலைமுறை இந்த மதுவால் சீரழிந்து கொண்டு இருக்கிறார்கள் என்பது மிகவும் வேதனையான உண்மை.முன்பு ஊருக்கு ஒதுக்குப்புறமாய் செய்த வியாபாரத்தை ஊருக்கு நடுவில் கொண்டு வந்து விட்டார்கள். இதன் விளைவு வீட்டுக்கு பயந்து ஒளிந்து மதுவருந்தி வந்தவர்கள் இப்பொழுது சர்வ சாதாரணமாய் ஒன்று கூடி மதுவருந்துகின்றனர். எந்த வகையான நிகழ்ச்சி என்றாலும் இது இல்லாமல் கொண்டாடுவது இல்லை என்பது வெட்கக்கேடு.

இப்படி இருக்க இதில் முறைகேடு வேறு .... என்னத்தை
சொல்ல....

வருமான இழப்பை கணக்கில் கொள்ளாமல் மக்கள் நலனை மட்டும் மனதில் கொண்டு மதுக்கடைகளை முழுதும் அடைத்தால் மட்டுமே நம் நாடு வளர்ச்சி பாதையை நோக்கி செல்ல முடியும்.... இந்த தலைமுறை கஷ்டப்பட்டாலும் அடுத்த தலைமுறையாவது  மதுவுக்கு அடிமை ஆகாமல் தடுக்கலாம்....



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

சிவா and T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 18, 2023 4:51 pm

Code:
இந்த தலைமுறை கஷ்டப்பட்டாலும் அடுத்த தலைமுறையாவது  மதுவுக்கு அடிமை ஆகாமல் தடுக்கலாம்....

நடக்கக்கூடிய காரியமா என்றால் ?
இல்லையில்லை இது குடிக்க கூடிய கூட்டம் என்கிறார்கள்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா and ஸ்ரீஜா இந்த பதிவை விரும்பியுள்ளனர்

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Thu May 18, 2023 5:17 pm

T.N.Balasubramanian wrote:
Code:
இந்த தலைமுறை கஷ்டப்பட்டாலும் அடுத்த தலைமுறையாவது  மதுவுக்கு அடிமை ஆகாமல் தடுக்கலாம்....

நடக்கக்கூடிய காரியமா என்றால் ?
இல்லையில்லை இது குடிக்க கூடிய கூட்டம் என்கிறார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: undefined
ஆமோதித்தல் ஆமோதித்தல் சோகம் நடக்காது தான் இருந்தாலும் ஒரு நட்பாசை தான் ஐயா ...

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக