புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜூலை 26 - கார்கில் போர் வெற்றி தினம் Poll_c10ஜூலை 26 - கார்கில் போர் வெற்றி தினம் Poll_m10ஜூலை 26 - கார்கில் போர் வெற்றி தினம் Poll_c10 
62 Posts - 57%
heezulia
ஜூலை 26 - கார்கில் போர் வெற்றி தினம் Poll_c10ஜூலை 26 - கார்கில் போர் வெற்றி தினம் Poll_m10ஜூலை 26 - கார்கில் போர் வெற்றி தினம் Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
ஜூலை 26 - கார்கில் போர் வெற்றி தினம் Poll_c10ஜூலை 26 - கார்கில் போர் வெற்றி தினம் Poll_m10ஜூலை 26 - கார்கில் போர் வெற்றி தினம் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
ஜூலை 26 - கார்கில் போர் வெற்றி தினம் Poll_c10ஜூலை 26 - கார்கில் போர் வெற்றி தினம் Poll_m10ஜூலை 26 - கார்கில் போர் வெற்றி தினம் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜூலை 26 - கார்கில் போர் வெற்றி தினம் Poll_c10ஜூலை 26 - கார்கில் போர் வெற்றி தினம் Poll_m10ஜூலை 26 - கார்கில் போர் வெற்றி தினம் Poll_c10 
104 Posts - 59%
heezulia
ஜூலை 26 - கார்கில் போர் வெற்றி தினம் Poll_c10ஜூலை 26 - கார்கில் போர் வெற்றி தினம் Poll_m10ஜூலை 26 - கார்கில் போர் வெற்றி தினம் Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
ஜூலை 26 - கார்கில் போர் வெற்றி தினம் Poll_c10ஜூலை 26 - கார்கில் போர் வெற்றி தினம் Poll_m10ஜூலை 26 - கார்கில் போர் வெற்றி தினம் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
ஜூலை 26 - கார்கில் போர் வெற்றி தினம் Poll_c10ஜூலை 26 - கார்கில் போர் வெற்றி தினம் Poll_m10ஜூலை 26 - கார்கில் போர் வெற்றி தினம் Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜூலை 26 - கார்கில் போர் வெற்றி தினம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 26, 2023 8:45 pm

ஜூலை 26 - கார்கில் போர் வெற்றி தினம் Kargil_62dfa4d0e5b09

1999- ல் பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் வெற்றி தினம் ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

கடந்த 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்தினர் ஜம்மு-காஷ்மீரின் கார்கில் பகுதியில் ஊடுருவி அப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்தனர். இதனால் இந்திய ராணுவத்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் மூண்டது. மிகப்பெரிய மலைத் தொடரில் இந்த போர் நடந்தது. சவால்கள் நிறைந்த இந்தப் போரில், பாகிஸ்தானுக்கு இந்தியா பலத்த அடி கொடுத்தது. பாகிஸ்தானின் செயலுக்கு அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மன் உள்ளிட்ட உலகின் முக்கியமான நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தன. ஆனால், பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் பகுதியில் ஊடுருவலை நிறுத்தவில்லை.

இந்திய பகுதியான கார்கில் பகுதியை மீட்க ‘விஜய் நடவடிக்கை' என்கிற பெயரில் இந்திய ராணுவம் முழுமையாக களமிறக்கப்பட்டது. மைனஸ் டிகிரி குளிர் உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொண்டு சவால்கள் நிறைந்த வகையில் இந்தப் போர் நடைபெற்றது. இதில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலர் பலியாயினர். நாட்டை காக்க நடந்த இந்த போரில் இந்திய தரப்பிலும் 543 ராணுவத்தினர் வீரமரணம் அடைந்தனர்.

பாகிஸ்தான் ராணுவத்தை விரட்டியடித்து கார்கிலை மீட்டு வெற்றி பெற்ற நாள் 1999 ஜூலை 26-ஆம் தேதி ஆகும். கார்கில் போரில் வெற்றி பெற்றதன் நினைவாக ஜூலை 26-ம் தேதி ஆண்டுதோறும் கார்கில் வெற்றி தினமாகக் கொண்டாடப்படுகிறது. கார்கில் போரானது மே மாதம் தொடங்கி ஜூலை 26ஆம் தேதி நிறைவுக்கு வந்த இந்நாள் விஜய் திவஸ் என்று அழைக்கப்படுகிறது.

கார்கில் போரில் உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களை நினைவு கூரும் வகையிலும் உயிரோடு இருக்கும் கார்கில் போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் இந்த வெற்றி தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவாக மவுன அஞ்சலி செலுத்தப்படும். அந்த நாளில் நமக்காக எல்லையில் பணியாற்றும் வீரர்களை நினைவுகூர்வோம்.



ஜூலை 26 - கார்கில் போர் வெற்றி தினம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 26, 2023 8:59 pm

ஒரு பெரிய நாடு எதிர்கள் அதிகம் கொண்ட நாடு ஆனால் உலகில் யாருமில்லாமல் தனித்து நிற்போம் அணிசேராமல் நிற்போம் என தனித்து நின்றால் என்னாகும் என்பதை மிக மோசமான அனுபவங்களால் பெற்ற நாடு இந்தியா.

நேருவின் அந்த குழப்பமான கொள்கையால் தேசம் சந்தித்த குழப்பம் அப்படி, ஆளாளுக்கு அடித்தார்கள், யானை தனியாக நின்றால் செந்நாய்கள் சூழும் என்பது போல் சூழ்ந்து அடித்தார்கள்.

இதோ இப்போது நேட்டோ என்றொரு அமைப்பு இருக்கின்றது அங்கிருக்கும் நாடுகளை இன்னொரு நாடு தொடமுடியுமா? தொட்டால் எல்லா நாடுகளும் சேர்ந்து அடிக்கும்.

ஆனால் தனியே ஒரு நாடு இருந்தால் என்னாகும் அதுவும் அடித்தால் ஆளில்லாத நாடு என்றால் உற்சாகமாக அடிப்பார்கள்.

அதனால்தான் குட்டிநாடான பாகிஸ்தான் இந்தியா மேல் புகுந்து புகுந்து அடித்ததது, இலங்கையெல்லாம் இந்தியாவினை எதிர்க்க துணிந்தது.

சீனா போட்டு பரிதாபமாக அடிக்கும் அளவு இந்தியா பலவீனமாக இருந்தது.

அந்த பலவீனம்தான் கார்கில் போருக்கும் வழிவகுத்தது, இந்தியாவினை அடித்தால் கேட்க யாருமில்லை என்ற துணிச்சலில் புகுந்து அடிப்பார்கள்.

அப்பொழுது வாஜ்பாய் பிரதமராக இருந்தார் ஒருபக்கம் அணுகுண்டு வெடித்தாலும் இன்னொரு பக்கம் பாகிஸ்தானுடன் நல்லுறவிற்கே முயன்றார்.

அவரின் டெல்லி லாகூர் பேருந்து முயற்சி நிச்சயம் இந்திய வரலாற்றின் மாபெரும் அமைதி முயற்சி. அது கொஞ்சகாலம் நடக்கவும் செய்தது.

பஸ்களில் பயணிகளை அனுப்பிய பாகிஸ்தான் சத்தமில்லாமல் இன்னொரு காரியத்தையும் செய்தது அதாவது காஷ்மீரின் கார்கில் பகுதியில் தீவிரவாதிகள் எனும் பெயரில் பாகிஸ்தான் ராணுவத்தை அனுப்பியது.

சோழமன்னன் காலத்தில் புலிகொடி பறந்த சிகரம் உள்ள இடம் அது, பாண்டியர் மீன் முத்திரை பதித்த இடங்களும் உண்டு.

வஞ்சகமாக தன் குரங்கு சேட்டையினை நரிதந்திரமாக செய்தது பாகிஸ்தான், இந்திய உளவுதுறையின் தோல்வியும் நாம் ஒப்புகொள்ள கூடியது.

எனினும் பனிபடர்ந்த அம்மலை புவியில சிக்கல் உள்ள இடம் என்பதும் இன்னொரு விஷயம்.

போராளிகள் என்ற பெயரில் பாகிஸ்தானிய ராணுவம் கார்கிலை ஆக்கிரமித்து மொத்த காஷ்மீரையும் விழுங்கும் முயற்சியில் ஈடுபட்டபொழுது பாகிஸ்தானை விரட்டி அந்த இடத்தை இந்தியா மீட்டது.

காஷ்மீரை எமது ராணுவம் காத்த வெற்றி பெருநாள் இன்று..

மிக வலுவாக காலூன்றிய பாகிஸ்தானை நாம் போட்டு அடித்த நாள் இது, ஆப்கனை கைபற்றிய தாலிபன்களும் ஐஎஸ்ஐ வழிகாட்டலில் ஊடுருவியிருந்தார்கள்.

அதில் பாகிஸ்தான் ராணுவம், அல் கய்தா, தாலிபன் என பல பயங்கர முகங்கள் இருந்தன.
உண்மையில் அது மிகபெரிய போர், அந்த போரில்தான் இந்திய ராணுவம் பெரும் வெற்றிபெற்றது.
அந்த போரினை பார்த்தவர்களுக்கு புரியும், அது முஷாரப் ரகசியமாக நடத்திய போர், முதலில் திணறிய இந்தியா கொஞ்சம் உயிர் பலிகளை கொடுதது.

பின் சுதாரித்து நிலமையினை அளந்து அடித்தது, இந்திய விமானபடையின் வீரமான அதே நேரம் நுட்பமான தாக்குதலும் பாகிஸ்தானை ஓட வைத்தது.

இது தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் என ராஜதந்திரமாக இந்தியா அடித்த அடியில் திருடனுக்கு தேள் கொட்டியது போல் பாகிஸ்தான் ராணுவம் பல்லை கடித்து கொண்டிருந்தது.

மறுபடியும் பாகிஸ்தானுக்கு மூக்கு உடைந்தநாள் இன்று, இந்த தோல்வியே பின்பு முஷாரப்புகும் நவாசுக்கும் பெரும் முரண்பாடாய் முடிந்தது.

இந்திய எல்லையில் ஊடுருவ வந்த எதிரிகளை அடித்து விரட்டி நம் நிலத்தை நம் ராணுவம் காத்த நாள் இன்று.
கார்கில் மீட்பில் பலியான எமது வீரர்களுக்கு பெரும் அஞ்சலி செலுத்தி, இந்நாளை நினைவு கூர்வோம்.

அந்த யுத்தத்தில் மிராஜ் ரக விமானங்களின் பலத்தோடு இந்திய விமானபடை காட்டிய வீரமும் மறக்கமுடியாதது.
அந்த ராணுவத்துக்கு வெள்ளிபனிமலை மேலுலவுவோம்.. என்ற பாரதியின் வரிகளுடன் கம்பீரமாய் வீர வணக்கம் செலுத்துவோம்.

இந்த வெற்றிக்கு பின் இந்தியா தன் வான் பாதுகாப்பு, பல்வகை உளவு, எல்லை பாதுகாப்பு என எல்லாவற்றையும் பலபடுத்தியது. அதன் பின் ஒரு இன்ச் கூட பாகிஸ்தானால் தொட முடியவில்லை.

இனி கனவில் கூட தொட்டுபார்க்க முடியாது.

நேருவின் அணிசேரா கொள்கையினை வீசி விட்டு மோடி குவாட் அமைப்பிலும் இன்னும் பல நாட்டு அமைப்பிலும் இந்தியாவினை சேர்த்தபின் தேசம் இப்போது மிகவும் பலமாயிற்று.

பாகிஸ்தான் இனி நாட்டை நடத்தவே வழி இல்லை எனும் வகையில் இனி யுத்தமில்ல்லை.

உக்ரைனில் ரஷ்யா ஆக்கிரமித்து படும்பாட்டில் இனி சீனா இந்தியாவோடு யுத்ததிற்கு வரபோவதில்லை, எனினும் எந்த யுத்தத்துக்கும் தேசம் தயாராக இருக்கின்றது.

பாரதம் ஒருபோதும் தோற்காது.. வந்தே மாதரம்... ஜெய் ஹிந்த்

#பிரம்ம_ரிஷியார்



ஜூலை 26 - கார்கில் போர் வெற்றி தினம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 26, 2023 9:19 pm

ராணுவத்துக்கு உதவ மக்கள் தயாராக இருக்க வேண்டும்- ராஜ்நாத்சிங் பேச்சு



1999-ம் ஆண்டு லடாக் எல்லையில் கார்கில் பகுதியை கைப்பற்ற பாகிஸ்தான் முயற்சித்தது. இதை எதிர்த்து இந்திய ராணுவ வீரர்கள் வீர தீரத்துடன் போரிட்டனர்.

இதில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை வீழ்த்தியது. இதையொட்டி ஆண்டு தோறும் ஜூலை 26-ந்தேதி கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 24-வது கார்கில் வெற்றி தினம் (கார்கில் விஜய்திவாஸ்) நாட்டின் பல பகுதிகளில் இன்று கடைபிடிக்கப்பட்டது.

லடாக் திராஸ் போர் நினைவிடத்தில் கார்கில் போரில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத்சிங், ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே, கடற்படை தலைமை தளபதி ஹரிகுமார் உள்ளிட்டோர் திராஸ் போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். அப்போது ராஜ்நாத்சிங் பேசியதாவது:-

கார்கில் போர் இந்தியாவின் மீது திணிக்கப்பட்டது. பாகிஸ்தானால் முதுகில் குத்தப்பட்டோம். நாட்டுக்காக தங்கள் உயிரை தியாகம் செய்த எங்கள் துணிச்சலான மகன்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன்.

எப்போதெல்லாம் போர் சூழல் ஏற்பட்டாலும் பொது மக்கள் எப்போதும் படைகளுக்கு ஆதரவு வழங்கினாலும் அந்த ஆதரவு மறைமுகமாகவே இருந்துள்ளது. தேவை ஏற்பட்டால் நேரடியாக போர்க்களத்தில் படையினருக்கு ஆதரவளிக்க பொது மக்கள் தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நாட்டின் கவுரவத்தையும், கண்ணியத்தையும் காக்க நாம் எந்த எல்லைக்கும் செல்லலாம். எல்லை கோட்டை கடப்பது அதில் அடங்கும் என்றால் அதை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு ராஜ்நாத்சிங் பேசினார்.
Code:




ஜூலை 26 - கார்கில் போர் வெற்றி தினம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக