புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரிசி விலை தொடர்ந்து உயர்வு... தமிழகத்தில் தட்டுப்பாடு வருமா? Poll_c10அரிசி விலை தொடர்ந்து உயர்வு... தமிழகத்தில் தட்டுப்பாடு வருமா? Poll_m10அரிசி விலை தொடர்ந்து உயர்வு... தமிழகத்தில் தட்டுப்பாடு வருமா? Poll_c10 
21 Posts - 66%
heezulia
அரிசி விலை தொடர்ந்து உயர்வு... தமிழகத்தில் தட்டுப்பாடு வருமா? Poll_c10அரிசி விலை தொடர்ந்து உயர்வு... தமிழகத்தில் தட்டுப்பாடு வருமா? Poll_m10அரிசி விலை தொடர்ந்து உயர்வு... தமிழகத்தில் தட்டுப்பாடு வருமா? Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரிசி விலை தொடர்ந்து உயர்வு... தமிழகத்தில் தட்டுப்பாடு வருமா? Poll_c10அரிசி விலை தொடர்ந்து உயர்வு... தமிழகத்தில் தட்டுப்பாடு வருமா? Poll_m10அரிசி விலை தொடர்ந்து உயர்வு... தமிழகத்தில் தட்டுப்பாடு வருமா? Poll_c10 
63 Posts - 64%
heezulia
அரிசி விலை தொடர்ந்து உயர்வு... தமிழகத்தில் தட்டுப்பாடு வருமா? Poll_c10அரிசி விலை தொடர்ந்து உயர்வு... தமிழகத்தில் தட்டுப்பாடு வருமா? Poll_m10அரிசி விலை தொடர்ந்து உயர்வு... தமிழகத்தில் தட்டுப்பாடு வருமா? Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
அரிசி விலை தொடர்ந்து உயர்வு... தமிழகத்தில் தட்டுப்பாடு வருமா? Poll_c10அரிசி விலை தொடர்ந்து உயர்வு... தமிழகத்தில் தட்டுப்பாடு வருமா? Poll_m10அரிசி விலை தொடர்ந்து உயர்வு... தமிழகத்தில் தட்டுப்பாடு வருமா? Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
அரிசி விலை தொடர்ந்து உயர்வு... தமிழகத்தில் தட்டுப்பாடு வருமா? Poll_c10அரிசி விலை தொடர்ந்து உயர்வு... தமிழகத்தில் தட்டுப்பாடு வருமா? Poll_m10அரிசி விலை தொடர்ந்து உயர்வு... தமிழகத்தில் தட்டுப்பாடு வருமா? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரிசி விலை தொடர்ந்து உயர்வு... தமிழகத்தில் தட்டுப்பாடு வருமா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 25, 2023 10:10 pm

அரிசி விலை தொடர்ந்து உயர்வு... தமிழகத்தில் தட்டுப்பாடு வருமா? Hike_in_rice_prices

இந்தியா முழுவதும் அரசியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. விலை இப்போதைக்குக் குறையாது என்கிறார்கள் நிபுணர்கள். இதற்கு காரணம் என்ன?

பாஸ்மதி அரிசி தவிர மற்ற அரிசிகளின் ஏற்றுமதியை இந்தியா தற்போது தடைசெய்திருக்கிறது. இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்துவரும் அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொண்டிருக்கிறது.

இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் அரிசியில் சுமார் 25 சதவீதம் மட்டுமே பாஸ்மதி அரிசி; மீதி 75 சதவீதம் வழக்கமான அரிசி எனும் நிலையில், இந்தியா மேற்கொண்டிருக்கும் இந்த நடவடிக்கையால் உலகம் முழுவதுமே உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

இந்தியாவில் அரிசியின் விலை வேகமாக உயர்வதாக தற்போது நுகர்வோர் உணர்ந்தாலும், கடந்த ஓராண்டாகவே இந்தியாவில் அரிசியின் விலை தொடர்ந்து அதிரித்துக்கொண்டே வருகிறது என்பதுதான் நிதர்சனம்.

யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு ஏற்படுத்திய தாக்கம்


அரிசி விலை உயர்வுக்கு உள்ளூர் காரணங்களும் சர்வதேசக் காரணங்களும் இருக்கின்றன. யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு, உலகம் முழுவதும் கோதுமையின் விலை உயர்ந்ததால், மற்றொரு முக்கிய தானியமான அரிசியின் விலையும் உயர ஆரம்பித்தது. சமீபத்தில், யுக்ரைனிலிருந்து உணவு தானியங்கள் பாதுகாப்பாக வெளியேற அனுமதிப்பதாகக் கொடுத்த வாக்குறுதியிலிருந்து விலகிக்கொள்வதாக ரஷ்யா அறிவித்தது, உணவு தானிய விலையேற்ற அபாயத்தை உலகம் முழுவதும் ஏற்படுத்தியிருக்கிறது.

உலகில் அதிக அளவில் அரிசியை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. உலகில் ஏற்றுமதி செய்யப்படும் அரசியில் 40 சதவீதம் இந்தியாவிலிருந்தே ஏற்றுமதியாகிறது. பாஸ்மதி அல்லாத அரிசி, ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.

இந்தியாவில் கடந்த ஆண்டிலிருந்து அரிசியின் விலை தொடர்ந்து உயர்ந்த நிலையில், அரிசி ஏற்றுமதிக்கு 20 சதவீதம் வரி விதித்தது இந்தியா. கோதுமை, சர்க்கரை ஆகியவற்றின் ஏற்றுமதிகளும் கட்டுப்படுத்தப்பட்டன.

இந்தியாவில் அரிசியின் விலை உயர்வது ஏன்?


இது எல் - நினோ ஆண்டு என்பதால், இந்த ஆண்டு மழை குறைவாகப் பெய்து விளைச்சல் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் ஏற்கனவே தென் மாநிலங்களில் ஏற்பட்டிருக்கிறது. மாறாக, வட மாநிலங்களில் பெய்துவரும் கன மழையும் வரலாறு காணாத வெள்ளமும் உணவு உற்பத்தியைக் கடுமையாக பாதித்திருக்கிறது. அரிசி மட்டுமல்லாமல் தக்காளி போன்ற காய்கறிகளின் விலையும் கடுமையாக அதிகரித்திருக்கிறது.

கடந்த ஆண்டைப் பொறுத்தவரை இந்தியா முழுவதுமே மழை 11 சதவீதம் அதிக அளவில் பெய்தது. உத்தரப்பிரதேசம், பிஹார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் பெய்த கடும் மழையின் காரணமாக கடந்த ஆண்டில் நெல் உற்பத்தி 14 சதவீதம் அளவுக்குக் குறைந்தது. அதனால், 2022ஆம் ஆண்டு அக்டோபரிலிருந்தே அரிசியின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மே மாதம் பண வீக்க விகிதம் 4.25ஆக இருந்தாலும்கூட, அரிசி விலை உயர்வு சுமார் 11 சதவீதம் அளவுக்கு இருந்தது.

அரிசியின் விலை அதிகரித்திருப்பதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன என்கிறார் தமிழ்நாடு அரசின் விலை கண்காணிப்புக் குழு உறுப்பினர் டி. சடகோபன்.

"விளைச்சல் பற்றிய கணிப்பு விலை ஏற்றத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம். மற்றொரு பக்கம், எரிபொருள் விலை உயர்வு போன்ற வேறு பல பொருட்களின் விலை உயர்வும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். இதெல்லாம் போக, கடந்த ஒரு மாதமாக வட இந்தியாவில் பெய்து வரும் கன மழை, உணவுப் பொருள் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதுவும் விலை ஏற்றத்திற்கு ஒரு காரணம். இந்தச் சூழலில் மத்திய, மாநில அரசுகள் பதுக்கலை கண்காணிக்கவேண்டும்" என்கிறார் அவர்.

ஏற்றுமதிக்கு தடை விதித்த பிறகும் அரசி விலை உயர்வது ஏன்?


ஒரு பொருளின் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டால், அதன் விலை குறையும் என்பது எதிர்பார்ப்பு. ஆனால், அப்படி நடப்பதில்லை என்கிறார் தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரான ராமசாமி. "வெங்காய ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டால், அதன் விலை உடனடியாக உயர்வதைக் கவனித்திருக்கிறீர்களா. அதுதான் அரிசியிலும் நடக்கிறது. அதனை தட்டுப்பாட்டுக்கு அறிகுறியாக வியாபாரிகள் கருதுவார்கள். மேலும், தற்போது பல மாநில அரசுகள் இலவச அரசி கொடுக்க முயல்வதால், வெளிச் சந்தைக்கு வருவதற்கு முன்பாகவே, மாநில அரசுகள் கொள்முதல் செய்கின்றன. இதனால், வெளிச் சந்தை விலை அதிகரித்து வருகிறது" என்கிறார் அவர்.

ராமசாமி இன்னொரு விஷயத்தையும் சுட்டிக்காட்டுகிறார். கடந்த சில ஆண்டுகளில் இந்தியா முழுவதுமே உணவுப் பழக்கம் வெகுவாக மாறியிருப்பதும் ஒரு காரணம் என்கிறார் அவர். பாஸ்மதி அரிசியல்லாத, வேறு அரிசியின் பயன்பாடு வட இந்தியப் பகுதியில் வெகுவாக அதிகரித்திருக்கிறது என்கிறார் அவர்.

தமிழ் நாட்டில் தட்டுப்பாடு ஏற்படுமா?


ஆனால், அரிசி தட்டுப்பாடு குறித்தோ, விலை உயர்வு குறித்தோ நுகர்வோர் அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை என்கிறார் தமிழ்நாடு அரிசி ஆலை மற்றும் நெல்லரிசி மொத்த வணிகர்கள் சம்மேளனத்தின் தலைவர் துளசிங்கம்.

"மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் 3 லட்சம் டன் அரிசியை ஒதுக்கீடு செய்கிறது. இது தவிர மாநிலத்தில் விளையும் அரிசி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் சேமிக்கப்படும் அரிசி ஆகியவையும் உள்ளன. ஆகவே, தற்போது ஏற்பட்டிருக்கும் விலை உயர்வு தற்காலிகமானது. இது குறித்து அச்சமடையத் தேவையில்லை. தமிழ்நாட்டில் ஒருபோதும் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படாது" என்கிறார் துளசிங்கம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பொதுவாக 19 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் நெல் பயிரிடப்படுகிறது. விளைச்சல் சரியாக இருக்கும் பட்சத்தில் ஆண்டுக்கு 72.65 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்யப்படுகிறது. மழை சரியாக பெய்யாத காலகட்டத்தில் சுமார் 14 லட்சம் ஹெக்டேர் நிலத்திலும் மழை நன்றாகப் பெய்யும் காலகட்டத்தில் சுமார் 20 லட்சம் ஹெக்டேர் அளவுக்கும் நெல் பயிரிடப்படுகிறது.

மலேசியாவில் சில மாதங்களுக்குள் 5 முறை அரிசி விலையேற்றம் கண்டுள்ளது. ஆக கடைசியாக இரண்டு நாட்களுக்கு முன்னர் அரிசி விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.







அரிசி விலை தொடர்ந்து உயர்வு... தமிழகத்தில் தட்டுப்பாடு வருமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jul 27, 2023 1:07 pm

“ மத்திய, மாநில அரசுகள் பதுக்கலை கண்காணிக்கவேண்டும்" என்கிறார் அவர்.
- இதை நம் அரசுகள் செய்யாதே !





முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 27, 2023 5:09 pm

ரேஷன் கடை அரிசி கேரளாவிற்கு அதிக அளவில் கடத்தப்படுகிறது.

ஏதாவது திருப்பிக்கொடுக்கவேண்டுமே.!

குப்பை -ரசாயன கழிவுகளை கேரளா தமிழக எல்லையில் இரவோடு இரவாக
கொட்டுகிறது.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக