புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
20 நிமிடங்களில் 5,000 ராக்கெட் வீச்சு: ஹமாஸ் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த இஸ்ரேல் Poll_c1020 நிமிடங்களில் 5,000 ராக்கெட் வீச்சு: ஹமாஸ் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த இஸ்ரேல் Poll_m1020 நிமிடங்களில் 5,000 ராக்கெட் வீச்சு: ஹமாஸ் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த இஸ்ரேல் Poll_c10 
64 Posts - 50%
heezulia
20 நிமிடங்களில் 5,000 ராக்கெட் வீச்சு: ஹமாஸ் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த இஸ்ரேல் Poll_c1020 நிமிடங்களில் 5,000 ராக்கெட் வீச்சு: ஹமாஸ் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த இஸ்ரேல் Poll_m1020 நிமிடங்களில் 5,000 ராக்கெட் வீச்சு: ஹமாஸ் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த இஸ்ரேல் Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
20 நிமிடங்களில் 5,000 ராக்கெட் வீச்சு: ஹமாஸ் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த இஸ்ரேல் Poll_c1020 நிமிடங்களில் 5,000 ராக்கெட் வீச்சு: ஹமாஸ் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த இஸ்ரேல் Poll_m1020 நிமிடங்களில் 5,000 ராக்கெட் வீச்சு: ஹமாஸ் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த இஸ்ரேல் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
20 நிமிடங்களில் 5,000 ராக்கெட் வீச்சு: ஹமாஸ் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த இஸ்ரேல் Poll_c1020 நிமிடங்களில் 5,000 ராக்கெட் வீச்சு: ஹமாஸ் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த இஸ்ரேல் Poll_m1020 நிமிடங்களில் 5,000 ராக்கெட் வீச்சு: ஹமாஸ் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த இஸ்ரேல் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
20 நிமிடங்களில் 5,000 ராக்கெட் வீச்சு: ஹமாஸ் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த இஸ்ரேல் Poll_c1020 நிமிடங்களில் 5,000 ராக்கெட் வீச்சு: ஹமாஸ் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த இஸ்ரேல் Poll_m1020 நிமிடங்களில் 5,000 ராக்கெட் வீச்சு: ஹமாஸ் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த இஸ்ரேல் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
20 நிமிடங்களில் 5,000 ராக்கெட் வீச்சு: ஹமாஸ் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த இஸ்ரேல் Poll_c1020 நிமிடங்களில் 5,000 ராக்கெட் வீச்சு: ஹமாஸ் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த இஸ்ரேல் Poll_m1020 நிமிடங்களில் 5,000 ராக்கெட் வீச்சு: ஹமாஸ் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த இஸ்ரேல் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
20 நிமிடங்களில் 5,000 ராக்கெட் வீச்சு: ஹமாஸ் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த இஸ்ரேல் Poll_c1020 நிமிடங்களில் 5,000 ராக்கெட் வீச்சு: ஹமாஸ் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த இஸ்ரேல் Poll_m1020 நிமிடங்களில் 5,000 ராக்கெட் வீச்சு: ஹமாஸ் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த இஸ்ரேல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
20 நிமிடங்களில் 5,000 ராக்கெட் வீச்சு: ஹமாஸ் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த இஸ்ரேல் Poll_c1020 நிமிடங்களில் 5,000 ராக்கெட் வீச்சு: ஹமாஸ் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த இஸ்ரேல் Poll_m1020 நிமிடங்களில் 5,000 ராக்கெட் வீச்சு: ஹமாஸ் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த இஸ்ரேல் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

20 நிமிடங்களில் 5,000 ராக்கெட் வீச்சு: ஹமாஸ் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த இஸ்ரேல்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 07, 2023 8:28 pm


20 நிமிடங்களில் 5,000 ராக்கெட் வீச்சு: ஹமாஸ் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த இஸ்ரேல் 8ee4560f57

Palestinian armed forces fired 5,000 rockets in 20 minutes


இஸ்ரேல் நாட்டின் தென் பகுதியில் இஸ்லாமிய ஆயுதக்குழுவான ஹமாஸ் திடீர் தாக்குதல் நடத்தியது. வெறும் 20 நிமிடங்களில் 5,000 ராக்கெட்டுகளை ஏவிய தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலில் பதற்றம் நிலவுகிறது.

ஜெருசலேம் உள்பட நாட்டின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் அபாய ஒலி எழுப்பப்பட்டுள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். போருக்கான தயார் நிலையை இஸ்ரெல் பிரகடனப்படுத்தியுள்ளது.

இந்த திடீர் தாக்குதலைத் தொடர்ந்து, ஹமாஸ் என்ற இஸ்லாமிய ஆயுதக் குழுவைச் சேர்ந்த டஜன் கணக்கான ஆயுதக்குழுவினர் தெற்கு இஸ்ரேலுக்குள் நுழைந்து தற்போது தலைமறைவாக உள்ளனர்.

காஸா பகுதியில் உள்ள இலக்குகளை ஹமாஸ் ஆயுதக் குழு தாக்கி வருவதாகவும் அப்பகுதியில் நிலவும் சூழ்நிலையை மதிப்பிட்டு வருவதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, 20 நிமிடங்களில் 5,000 ராக்கெட்டுகள் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டன. இதனால் நாடு முழுவதும் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கையை அறிவிக்கும் விதமாக அபாய ஒலிகள் எழுப்பப்பட்டன.

இந்தத் தாக்குதலின்போது ஒருவர் கொல்லப்பட்டதுடன், டெல் அவிவ் மற்றும் காஸாவை சுற்றியுள்ள பகுதிகளில் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

பாலஸ்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. அதன் ஆயுதமேந்திய தாக்குதல் நடத்தும் பிரிவு 20 நிமிடங்களில் 5,000 ராக்கெட்டுகளை ஏவியதாக அறிவித்துள்ளது.

"காஸா பகுதியிலிருந்து இஸ்ரேலிய எல்லைக்குள் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலின் போது இஸ்ரேலிய ராக்கெட்டுகள் இலக்கு வைக்கப்பட்டன" என்றும் ஆயுதக் குழுவினர் "வெவ்வேறு இடங்களில்" இஸ்ரேலிய எல்லைக்குள் நுழைந்ததாகவும் இஸ்ரேலின் பாதுகாப்புப் படை (IDF) கூறியுள்ளது.

இஸ்ரேலிய பொது ஊழியர்களின் தலைவர் "சூழ்நிலை மதிப்பீட்டை" நடத்தி வருவதாகவும், "இந்த நிகழ்வுகளுக்கான விளைவுகளையும் பொறுப்பையும் ஹமாஸ் எதிர்கொள்ளும்" என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காஸாவை சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் அங்கேயே பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ள அதே நேரத்தில் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் உள்ள பொதுமக்கள் "தற்காலிக முகாம்களுக்கு அருகிலேயே இருக்க" அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது.

ஒருவர் உயிரிழந்ததாகவும், 15 பேர் காயமடைந்ததாகவும் இஸ்ரேலின் மேகன் டேவிட் ஆடோம் மீட்பு நிறுவனம் கூறியுள்ளது.

அஷ்கெலோன் நகரில் தீயை அணைக்கும் பணியில் இஸ்ரேலிய தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளதை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள காட்சிகள் காட்டுகின்றன. அதில் வாகனங்கள் எரிந்து கரும்புகை வெளியேறும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

ராக்கெட் தாக்குதல்களின் விளைவாக பாதுகாப்புத் துறையின் முக்கிய அதிகாரிகளின் சந்திப்பு நடைபெற உள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

காசா பகுதியில் இருந்து இஸ்ரேலிய எல்லைக்குள் "அதிக எண்ணிக்கையிலான பயங்கரவாதிகள்" ஊடுருவியுள்ளதாகவும், சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளதாகவும் இஸ்ரேலின் தற்காப்புப் படைக் குழுவின் ஆரம்ப அறிக்கை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, இஸ்ரேல் பாதுகாப்புப் படை "நாடு முழுவதும் உள்ள இஸ்ரேலியர்கள் - ஷபாத் மற்றும் சிம்சாட் தோராவின் விடுமுறை நாளில் சைரன்கள் ஒலிப்பதையும், ஹமாஸ் பயங்கரவாதிகள் ராக்கெட் வீசும் சத்தத்தையும் கேட்டுக் கண் விழித்தனர். நம்மை நாமே காத்துக் கொள்வோம்" என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகள் வீசப்பட்டன: ஹமாஸ் அறிவிப்பு


இஸ்லாமிய ஆயுதக் குழுவின் தலைவரான முகமது டெய்ஃப், "ஆபரேஷன் அல்-அக்ஸா ஸ்டார்ம்" என்ற பெயரில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இந்தத் தாக்குதலைத் தொடங்க சனிக்கிழமை அதிகாலை 5,000 ராக்கெட்டுகள் இஸ்ரேல் நாட்டின் மீது ஏவப்பட்டதாகவும் கூறினார்.

"இஸ்ரேலின் நடவடிக்கைகளை பொறுத்தது போதும் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம்," என்று டெய்ஃப் கூறினார்.

“நாங்கள் ஏற்கெனவே எதிரியை எச்சரித்துள்ளோம். இஸ்ரேலிய ராணுவம் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் பொதுமக்களுக்கு எதிராக நூற்றுக்கணக்கான படுகொலைகளை அரங்கேற்றியுள்ளது. இந்த ஆக்கிரமிப்பின் காரணமாக நேர்ந்த குற்றங்களால் இந்த ஆண்டு நூற்றுக்கணக்கான தியாகிகள் இறந்தனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்."

"ஆபரேஷன் அல்-அக்ஸா ஸ்டார்மின் தொடக்கத்தை நாங்கள் அறிவிக்கிறோம். மேலும் எதிரிகளின் ராணுவ நிலைகள், விமான நிலையங்கள் மற்றும் ராணுவ கோட்டைகளைக் குறிவைத்த முதல் தாக்குதலில் 5,000 ஏவுகணைகள் மற்றும் ஷெல்களை கொண்டு நாங்கள் தாக்குதல் நடத்தியுள்ளோம்."


"போருக்குத் தயார்நிலை" பிரகடனத்தை வெளியிட்ட இஸ்ரேல்


ஹமாஸ் ஆயுதக் குழுவினரின் திடீர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், "போருக்கான தயார் நிலை" பிரகடனம் செய்யப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. ராணுவ வீரர்களை அழைக்க பாதுகாப்பு அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இஸ்ரேலிய ராணுவம் காசா பகுதியில் பதிலடி கொடுக்கும் வகையில் வான்வழித் தாக்குதல்களை நடத்தத் தொடங்கியுள்ளது என்பதுடன் ஹமாஸ் மிகக் கடுமையான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளது.

இதற்கிடையே, தொடக்கத்தில் 5,000 ராக்கெட்டுகளைக் கொண்டு தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பு, மேலும் இரண்டாயிரம் ராக்கெட்டுகளை ஏவியதாக ஹமாஸ் தொலைக்காட்சி சேனல் அறிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தத் தாக்குதல் குறித்த காட்சிகள் நாடு முழுவதும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. ஹமாஸ் ஆயுதக் குழு மிக மோசமான தவற்றைச் செய்துள்ளது என இஸ்ரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சர் கூறியுள்ளார்.

யோவ் காலன்ட் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், "ஹமாஸ் ஆயுதக் குழுவினர் இன்று காலையில் மிக மோசமான செயலைச் செய்துள்ளனர். இஸ்ரேல் நாட்டுக்கு எதிரான ஒரு போரைத் தொடங்கியுள்ளது," எனத் தெரிவித்துள்ளார். மேலும், எதிரிகள் இருக்கும் ஒவ்வொரு இடத்திலும் இஸ்ரேல் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது என்றும், இந்தப் போரில் இஸ்ரேல் ராணுவம் விரைவில் வெற்றிக்கொடி நாட்டும் என்றும் கூறியுள்ளார்.

ஹமாஸ் ஆயுதக் குழுவினரின் இந்த திடீர் தாக்குதலில் காயமடைந்த மற்றும் படுகாயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிபிசி




20 நிமிடங்களில் 5,000 ராக்கெட் வீச்சு: ஹமாஸ் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த இஸ்ரேல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 07, 2023 8:34 pm

அல்-அக்சா ஸ்டார்ம்: இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு ஹமாஸ் இந்த பெயரை சூட்டியது ஏன்?



இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்தியுள்ள திடீர் தாக்குதல் 2021-ம் ஆண்டு 11 நாள் போருக்குப் பிறகு அவை இரண்டையும் ஒரு போருக்குத் தள்ளியுள்ளன. இருபதே நிமிடங்களில் 5 ஆயிரம் ராக்கெட்டுகளை வீசியதுடன், ஆயுதம் தாங்கிய ஹமாஸ் குழுவினர் இஸ்ரேலுக்குள் ஊடுருவியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஹமாசுக்குப் பதிலடியாக இஸ்ரேலும் கடுமையான தாக்குதலை தொடங்கியுள்ளது.

இரு தரப்பையும் மீண்டும் ஒரு போருக்கு தள்ளியுள்ள இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு ஹமாஸ் அமைப்பு, 'ஆபரேஷன் அக் அக்சா ஸ்டார்ம்' என்று பெயரிட்டுள்ளது. அல் ஜசீரா தொலைக்காட்சியிடம் பேசிய ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் காலித் குவாடோமி, "கடந்த பல தசாப்தங்களாக பாலத்தீனர்கள் சந்தித்த ஒடுக்குமுறைக்குப் பதிலடியாக இந்த தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது." என்றார்.

மேலும் தொடர்ந்த அவர், "காசாவில் பாலத்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலின் அடக்குமுறையை சர்வதேச சமூகம் தடுத்து நிறுத்த வேண்டும் என்று விரும்புகிறோம். அதுபோல், எங்களது புனிதத் தலமான அல்அக்சா போன்ற இடங்களில் இஸ்ரேலின் அத்துமீறல்களையும் தடுத்து நிறுத்த வேண்டும். எங்கள் தாக்குதலுக்கான காரணம் இவைதான்" என்று விளக்கம் அளித்தார்.

பதற்றம் அதிகரிக்க காரணம்


கடந்த காலங்களிலும் அல்-அக்ஸா மசூதி தொடர்பான சர்ச்சை காரணமாகவே பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் இடையே பல மோதல்கள் தொடங்கியுள்ளன.

மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமை 1948இல் இருந்து 1967இல் நடந்த ஆறு நாள் போர் வரை ஜோர்டன் ஆட்சி செய்தது.

இந்த போருக்குப் பிறகு இஸ்ரேல் இந்தப் பகுதியில் மேலாதிக்கத்தை நிறுவியது.

இருப்பினும், ஜோர்டனுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான சமாதான உடன்படிக்கையின்கீழ், ஜெருசலேமின் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மத தலங்களைக் கண்காணிக்க ஜோர்டனுக்கு உரிமை கிடைத்தது.

கடந்த ஆண்டு மே மாதம், இஸ்ரேலின் அப்போதைய பிரதமர் நெஃப்தாலி பென்னட், அல்-அக்ஸா மசூதியின் நிர்வாகத்தில் வெளிநாட்டு தலையீட்டை நிராகரிப்பதாகக் கூறினார். இந்த அறிக்கைக்குப் பிறகு, ஜோர்டன் மற்றும் பாலஸ்தீனியர்கள் கோபமடைந்தனர்.

புனிதத் தலங்களில் உள்ள 'பாலஸ்தீன நிலத்தை ஆக்கிரமிக்கும்' திட்டத்தின் ஒரு பகுதி இது என்று ஜோர்டன் அழைத்தது. தற்போது, ​​அதன் நிர்வாகப் பொறுப்பு ஜோர்டன் வக்ஃப் வாரியத்திடம் உள்ளது.

அல்-அக்ஸா மசூதி ஏன் மிகவும் முக்கியமானது?


ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதி தொடர்பாக இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே சர்ச்சை ஏற்படுவது இது முதல் முறையல்ல.

கடந்த ஆண்டும் இங்கு பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே மோதல் தொடங்கியது.

அல்-அக்ஸா மசூதி இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு ஏன் இவ்வளவு முக்கியம் என்பதைத் தெரிந்து கொள்வது அவசியமாகிறது.

அல்-அக்ஸா மசூதி ஏன் இவ்வளவு முக்கியம்?


அல்-அக்ஸா மசூதி கிழக்கு ஜெருசலேமில் அமைந்துள்ள யூதர்களின் புனிதமான இடம். மேலும் இது இஸ்லாத்தின் மூன்றாவது புனிதமான இடமாகவும் கருதப்படுகிறது.

யூதர்களால் 'டெம்பிள் மவுண்ட்' என்றும், முஸ்லிம்களால் 'அல்-ஹராம் அல்-ஷரீஃப்' என்றும் அழைக்கப்படும் புனிதத் தலத்தில் 'அல்-அக்ஸா மசூதி' மற்றும் 'டோம் ஆஃப் தி ராக்' ஆகியவை உள்ளன.

'டோம் ஆஃப் தி ராக்' கிற்கு யூத மதத்தில், அனைத்தையும்விட புனிதமான தலம் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. முகமது நபியுடன் இணைந்திருப்பதால், இதை ஒரு புனித இடமாக முஸ்லிம்களும் கருதுகின்றனர்.

இந்த மத தலத்தில் முஸ்லிம் அல்லாதவர்கள் பிரார்த்தனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வளாகம் ஜோர்டனின் வக்ஃப் மூலம் நிர்வகிக்கப்படுகிறது, பாதுகாப்பு ஏற்பாடுகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

நீண்ட காலமாக இங்கு முஸ்லிம்கள் மட்டுமே தொழுகை நடத்த முடியும். குறிப்பிட்ட நாட்களில் முஸ்லிம் அல்லாதவர்கள் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள், ஆனால் அவர்கள் இங்கு பிரார்த்தனை செய்ய முடியாது.

100 ஆண்டுகள் பழைமையான சர்ச்சை


முதல் உலகப் போரில் உஸ்மானியா சுல்தானின் தோல்விக்குப் பிறகு, மத்திய கிழக்கில் பாலஸ்தீனம் என்று அழைக்கப்பட்ட பகுதி பிரிட்டனின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

சிறுபான்மை யூதர்களும் பெரும்பான்மை அரேபியர்களும் இந்த நிலத்தில் இருந்து வந்தனர்.

யூத மக்களுக்கு பாலஸ்தீனத்தை 'நேஷனல் ஹோம்’ என்ற வகையில் நிறுவுமாறு சர்வதேச சமூகம் பிரிட்டனை பணித்தபோது இருவருக்கும் இடையே பதற்றம் தொடங்கியது.

யூதர்களை பொருத்தவரை இது அவர்களின் மூதாதையர் வாழ்ந்த பகுதி. அதே நேரத்தில் பாலஸ்தீன அரேபியர்களும் அந்தப் பகுதி தங்களுடையது என்று சொல்லி இந்த நடவடிக்கையை எதிர்த்தனர்.

1920 மற்றும் 1940க்கு இடையில் ஐரோப்பாவில் துன்புறுத்தல் மற்றும் இரண்டாம் உலகப் போரின்போது இனப்படுகொலையில் இருந்து தப்பிய பின்னர் ஏராளமான யூதர்கள் ஒரு தாயகத்தைத் தேடி இங்கு வந்தடைந்தனர்.

இந்த நேரத்தில் அரேபியர்கள், யூதர்கள் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு இடையேயும் வன்முறை தொடங்கியது.

1948க்கு பிறகு நிலைமை


1947 இல் ஐக்கிய நாடுகள் சபை பாலஸ்தீனத்தை யூதர்கள் மற்றும் அரேபியர்களின் தனி நாடுகளாகப் பிரிக்க வாக்களித்தது. மேலும் ஜெருசலேம் ஒரு சர்வதேச நகரமாக மாற்றப்பட்டது.

இந்தத் திட்டம் யூத தலைவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அரபு தரப்பு அதை நிராகரித்தது மற்றும் அது ஒருபோதும் செயல்படுத்தப்படவில்லை.

பிரச்னையைத் தீர்க்க முடியாமல் 1948இல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வெளியேறினர். யூத தலைவர்கள் இஸ்ரேல் நாட்டை உருவாக்குவதாக அறிவித்தனர்.

இதற்கு பல பாலஸ்தீனியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் போர் தொடங்கியது. அரபு நாடுகளின் பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர்.

லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. வீடுகளில் இருந்து பலர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். இதை அவர்கள் அல்-நக்பா அதாவது 'பேரழிவு' என்று அழைத்தார்கள்.

பிற்காலத்தில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்த நேரத்திற்குள் பெரும்பாலான பகுதிகளை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருந்தது.

ஜோர்டனால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் மேற்குக் கரை என்றும் எகிப்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் காஸா என்றும் அழைக்கப்பட்டது.

அதே நேரத்தில் ஜெருசலேமின் மேற்குப்பகுதி இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளுக்கும் கிழக்குப்பகுதி ஜோர்டனிய பாதுகாப்புப் படைகளுக்கும் பிரித்தளிக்கப்பட்டது.



20 நிமிடங்களில் 5,000 ராக்கெட் வீச்சு: ஹமாஸ் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த இஸ்ரேல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 07, 2023 8:55 pm


20 நிமிடங்களில் 5,000 ராக்கெட் வீச்சு: ஹமாஸ் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த இஸ்ரேல் AP23280288778376.jpg?w=640&dpr=1

இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்: விமான நிலையங்களில் குவியும் வெளிநாட்டினர்.


டெல் அவிவ்: இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் மூண்டிருக்கும் நிலையில், இஸ்ரேலில் இருக்கும் வெளிநாட்டினர், விமான நிலையங்களில் குவிந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாலஸ்தீனத்திலிருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்திய நிலையில், இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் மூண்டுள்ளது.

இஸ்ரேல் மக்களே, நாம் இப்போது போர்க்களத்தில் இருக்கிறோம். ஒரு நடவடிக்கை எடுக்காமல் வெற்றியைப் பெற முடியாது.. போர்தான் என்று நெதன்யாகு தனது எக்ஸ் பக்கத்தில் விடியோ வெளியிட்டுள்ளார்.

நாம் இப்போது போர்க்களத்தில் உள்ளோம். போரில் வெல்வோம் என்று அவர் விடியோவில் தெரிவித்துள்ளார். நமது எதிரி அதற்கான விலையைக் கொடுத்தாக வேண்டும், இதுவரை அவர் கண்டிராத வகையில் பதிலடி கொடுக்கப்படும் என்றும் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

காஸாவிலிருந்து இஸ்ரேலுக்குள் ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், போர் அறிவிப்பை இஸ்ரேல் பிரதமர் வெளியிட்டார். ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், இஸ்ரேலில் இதுவரை 22 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 500 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதற்கிடையே, பாலஸ்தீனர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் உரிமை பெற்றுள்ளனர் என்று பாலஸ்தீன அதிபர் அறிவித்துள்ளார். இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல் காரணமாக, காஸா பகுதியில் வெடிகுண்டுகள் வெடிக்கும் சப்தம் தொடர்ந்து கேட்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளனர்.

இஸ்ரேலின் மையப்பகுதியும் தெற்குப்பகுதியிலும் சனிக்கிழமை காலை 3.5 மணி நேரத்திற்கும் மேலாக கடுமையான ராக்கெட் தாக்குதலுக்கு உள்ளாகியதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

"இஸ்ரேல் ஒரு அவசரநிலையில் உள்ளது" மற்றும் ஹமாஸின் ஒருங்கிணைந்த தாக்குதலுக்கு "கடுமையான இராணுவ பதிலடியை" லாபிட் ஆதரிப்பார் என்று எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலக அறிக்கை கூறியுள்ளது. .



20 நிமிடங்களில் 5,000 ராக்கெட் வீச்சு: ஹமாஸ் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த இஸ்ரேல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 07, 2023 8:56 pm

20 நிமிடங்களில் 5,000 ராக்கெட் வீச்சு: ஹமாஸ் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த இஸ்ரேல் Palestine.jpg?w=640&dpr=1

இஸ்ரேல் பதிலடி: 200 பாலஸ்தீனியர்கள் பலி


பாலஸ்தீனத்தின் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியதில் கிட்டத்தட்ட 200 பாலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளனர்.

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் மூண்டிருக்கும் நிலையில், பாலஸ்தீனத்திலிருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். அந்தத் தாக்குதலில் இஸ்ரேலில் இதுவரை 22 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. 500 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பாலஸ்தீனத்தின் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியதில் கிட்டத்தட்ட 200 பாலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளனர்.



20 நிமிடங்களில் 5,000 ராக்கெட் வீச்சு: ஹமாஸ் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த இஸ்ரேல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 07, 2023 9:09 pm

இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும்: பிரதமர் மோடி


இக்கட்டான இந்த சூழலில் இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்பதாக எக்ஸ் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பதாவது, இஸ்ரேல் மீது நடந்த தீவிரவாத தாக்குதலை அறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன். தாக்குதலில் பாதிக்கப்பட்ட இஸ்ரேல் மக்கள் குறித்து கவலை கொள்வதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்காக பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த இக்கட்டான சூழலில், இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

பாலஸ்தீனத்திலிருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகள், இஸ்ரேல் மீது நடத்திய ராக்கெட் தாக்குதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே போர் தொடங்கியிருக்கிறது.

இஸ்ரேல் ராணுவ வீரர்கள் சிலரை ஹமாஸ் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றிருப்பதாகவும், 50க்கும் மேற்பட்ட ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் சிலர் பலியானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், இஸ்ரேலில் 18000 இந்தியர்கள் இருக்கலாம் என்று மத்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. 900 இந்தியர்கள் இஸ்ரேலில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் படித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் அனைவரும், உள்நாட்டு அரசு வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்றும், மிகவும் அவசியமின்றி, வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் மத்திய வெளியுறவுத் துறை எச்சரித்துள்ளது.



20 நிமிடங்களில் 5,000 ராக்கெட் வீச்சு: ஹமாஸ் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த இஸ்ரேல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 07, 2023 9:10 pm

இஸ்ரேலில் 18,000 இந்தியர்கள்: மத்திய அரசு அறிவுறுத்தல்


இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் மூண்டிருக்கும் நிலையில், இஸ்ரேலில் சுமார் 18,000 இந்தியர்கள் தங்கியிருக்கலாம் என்று மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனத்திலிருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகள், இஸ்ரேல் மீது நடத்திய ராக்கெட் தாக்குதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே போர் தொடங்கியிருக்கிறது.

இஸ்ரேல் ராணுவ வீரர்கள் சிலரை ஹமாஸ் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றிருப்பதாகவும், 50க்கும் மேற்பட்ட ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் சிலர் பலியானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், இஸ்ரேலில் 18000 இந்தியர்கள் இருக்கலாம் என்று மத்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. 900 இந்தியர்கள் இஸ்ரேலில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் படித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் அனைவரும், உள்நாட்டு அரசு வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்றும், மிகவும் அவசியமின்றி, வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் மத்திய வெளியுறவுத் துறை எச்சரித்துள்ளது.



20 நிமிடங்களில் 5,000 ராக்கெட் வீச்சு: ஹமாஸ் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த இஸ்ரேல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 07, 2023 9:14 pm



ஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்தும் தாக்குதலுக்கு ஈரான் ஆதரவு தெரிவித்துள்ளது



இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக்குழுக்கள் இன்று திடீர் தாக்குதல் நடத்தின. பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களின் திடீர் தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் அதிரடியாக களமிறக்கப்பட்டுள்ளனர். மேலும், போர் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், போருக்கு தயார் என்றும் இஸ்ரேல் அறிவித்துள்ளது. தொடர்ந்து காசாவில் ஹமாஸ் குழுவினர் பதுங்கி இருந்த இடங்களில் இஸ்ரேல் பாதுகாப்புப்படை பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையின் தாக்குதலுக்கு இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் பிரதமர் மோடி இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில், "இஸ்ரேல் மீதான பயங்கரவாத தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்தும் தாக்குதலுக்கு ஈரான் ஆதரவு தெரிவித்துள்ளது. பாலஸ்தீன போராளிகளை வாழ்த்துவதாகவும், பாலஸ்தீனம் மற்றும் ஜெருசலேம் விடுதலை அடையும் வரை பாலஸ்தீன போராளிகளுக்கு துணை நிற்போம் எனவும் ஈரான் தலைவர் அயடோலா அலி காமேனியின் பாதுகாப்பு ஆலோசகர் ரஹீம் சஃபாவி கூறியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



20 நிமிடங்களில் 5,000 ராக்கெட் வீச்சு: ஹமாஸ் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த இஸ்ரேல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 07, 2023 9:15 pm

இஸ்ரேல் மீதான ஹமாஸ் அமைப்பின் தாக்குதலுக்கு ஐ.நா. சபை தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.



இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக்குழுக்கள் இன்று திடீர் தாக்குதல் நடத்தின. பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களின் திடீர் தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை தொடர்ந்து காசாவில் ஹமாஸ் குழுவினர் பதுங்கி இருந்த இடங்களில் இஸ்ரேல் பாதுகாப்புப்படை பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. காசா பகுதியில் இருந்து மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ஹமாஸ் குழுவினரின் இருப்பிடங்களை குறித்து இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனிடையே இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையின் தாக்குதலுக்கு இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் பிரதமர் மோடி இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில், இஸ்ரேல் மீதான பயங்கரவாத தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது என்றும், கடினமான சூழலை எதிர்கொண்டிருக்கும் இஸ்ரேலுக்கு உறுதுணையாக நிற்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இஸ்ரேல் மீதான ஹமாஸ் அமைப்பின் தாக்குதலுக்கு ஐ.நா. சபை தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் போராளிகளின் தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். மேலும் வன்முறைகளைத் தவிர்த்து அமைதிக்கான வழியை தேடுமாறு அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறேன்."

இவ்வாறு டென்னிஸ் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.



20 நிமிடங்களில் 5,000 ராக்கெட் வீச்சு: ஹமாஸ் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த இஸ்ரேல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 07, 2023 9:17 pm

இஸ்ரேலில் நேபாளத்தைச் சேர்ந்த 17 பேர் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக்குழுக்கள், 'ஆபரேஷன் அல் அக்சா ஃபிளட்' என்ற பெயரில் இஸ்ரேல் மீது இன்று திடீர் தாக்குதல் நடத்தின. பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களின் திடீர் தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் அதிரடியாக களமிறக்கப்பட்டுள்ளனர். மேலும், போர் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், போருக்கு தயார் என்றும் இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதையடுத்து 'ஆபரேஷன் அயர்ன் ஸ்வார்ட்' என்ற பெயரில் காசாவில் ஹமாஸ் குழுவினர் பதுங்கி இருந்த இடங்களில் இஸ்ரேல் பாதுகாப்புப்படை பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் இஸ்ரேலில் நேபாள நாட்டைச் சேர்ந்த 17 பேர் ஹமாஸ் அமைப்பினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை இஸ்ரேல் நாட்டுக்கான நேபாள தூதர் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் அங்கு நடந்த தாக்குதல்களில் நேபாள நாட்டைச் சேர்ந்த 7 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



20 நிமிடங்களில் 5,000 ராக்கெட் வீச்சு: ஹமாஸ் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த இஸ்ரேல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 07, 2023 9:17 pm

இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன



இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக்குழுக்கள், 'ஆபரேஷன் அல் அக்சா ஃபிளட்' என்ற பெயரில் இன்று திடீர் தாக்குதல் நடத்தின. காசா முனையில் இருந்து 20 நிமிடங்களில் 5 ஆயிரம் ராக்கெட்டுகள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டுள்ளன. மேலும், இஸ்ரேலின் பல்வேறு நகரங்களுக்குள் நுழைந்த பாலஸ்தீனிய ஆயுதக்குழுவினர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களின் திடீர் தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் அதிரடியாக களமிறக்கப்பட்டுள்ளனர். ரிசர்வ் படைகளும் களத்தில் இறக்கப்பட்டுள்ளன. மேலும், போர் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், போருக்கு தயார் என்றும் இஸ்ரேல் அதிரடியாக அறிவித்துள்ளது.

இதையடுத்து 'ஆபரேஷன் அயர்ன் ஸ்வார்ட்' என்ற பெயரில் காசாவில் ஹமாஸ் குழுவினர் பதுங்கி இருக்கும் இடங்களில் இஸ்ரேல் பாதுகாப்புப்படை பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற ஹமாஸ் குழுவினர் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது. இதன் காரணமாக மேற்குகரையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையின் தாக்குதலுக்கு இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் ஜேம்ஸ் கிளவெர்லி வெளியிட்டுள்ள பதிவில், "இஸ்ரேல் மக்கள் மீது ஹமாஸ் நடத்தும் கொடூரமான தாக்குதல்களை இங்கிலாந்து வண்மையாக கண்டிக்கிறது. தங்களை பாதுகாத்துக் கொள்ளும் இஸ்ரேலின் உரிமையை இங்கிலாந்து எப்போதும் ஆதரிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேல் மக்கள் மீதான இந்த தாக்குதல், ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு பயங்கரவாத தாக்குதல் என்றும், இஸ்ரேல் மற்றும் அதன் மக்களுடன் பிரான்ஸ் அரசு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஜெர்மனி வெளியுறவுத்துறை மந்திரி அனாலேனா பேர்பாக், காசா நிகழ்த்திய பயங்கரவாத தாக்குதலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு உள்ளதாக தெரிவித்துள்ளார்.



20 நிமிடங்களில் 5,000 ராக்கெட் வீச்சு: ஹமாஸ் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த இஸ்ரேல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக