புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 14:50
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 14:46
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 14:27
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:28
by ayyasamy ram Today at 14:50
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 14:46
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 14:27
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:28
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருவாசகம் எனும் தேன் ! திருவாசகத்தை பதிப்பித்தவர் !
Page 1 of 1 •
- sugumaranஇளையநிலா
- பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010
திருவாசகம் எனும் தேன் ! திருவாசகத்தை பதிப்பித்தவர் !
திருவாசகத்துக்கு உருகாதார், ஒரு வாசகத்துக்கும் உருகார்" என்பது தொடர்ந்து வழங்கி வரும் ஒரு பழஞ்சொல் ஆகும் .
அப்பரது சம்பந்தரது தேவாரங்களின் பதிகங்களில் காணாத ஒரு ஈரத்தை, ஒரு நெகிழ்வை, அதிக கசிவை மாணிக்கவாசகரது திருவாசகத்தில் காணமுடியும் திருவாசகப்பாடல்கள் உருகி உருகிப் பாடப்பெற்றமையால், படிப்பவரையும் கேட்பவரையும் மனம் உருகச்செய்யும். வலிமைப்பெற்றது
அழுதால் பெறலாமே என்று உருகிக்கூறுவார் . உணர்வின் வலிமை அறிந்த மணிவாசகப பெருமான்
திருவாசகத்துக்கு மேலும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. சிவன் தன்னுடைய சிந்தையிலே நின்றதனால், அவனுடைய திருவருளாலே அவனுடைய திருத்தாள்களை வணங்கி, மாணிக்கவாசகர் உரைத்த திருப்பாடல்கள் அவை; அவற்றை சிவபெருமானே நேரில் வந்து, தன்னுடைய திருக்கரத்தினால் எழுதி, அந்நூலின் "திருக்கடைக்காப்புப்பகுதியில், "இவை எழுதியது, அழகியதிருச்சிற்றம்பலமுடையான் எழுத்து" என்று கையெழுத்திட்டு அருளிய நூல்;
இத்தகைய பெருமைகள் பல கொண்ட இந்த நூலை நம்பியாண்டார் நம்பி எனும் மாமனிதர் , மாமன்னர் இராஜராஜன் துணைக்கொண்டு , தில்லைக்கோயிலில் இருந்து மீட்டு மக்களிடம் கொண்டு சேர்த்தாலும் ,அவைகள் ஓலைச் சுவடிகளில் இருந்தமையால் அவை பெருவாரியான மக்களை சென்றடையவில்லை .
தமிழ்க் கல்வி பரவிய வரலாற்றில் அச்சு நூல்களின் உருவாக்கம் அறிவுத்தேடலில் ஒரு புதிய பரி மாணத்தைத் தந்தது.
ஏறத்தாழ கி.பி. 1800 வரைக்கும் ஏடுகளைச் சார்ந்தே தமிழ்க்கல்விபயிற்றுவித்தல் அமைந்திருந்தது. பழந்தமிழறிஞர்கள் ஏடுகளின் வாயிலாகவே தம்புலமையை வளர்த்துக் கொண்டு அடுத்த தலைமுறைக்கு அதனைப் பதிவு செய்தனர்.
இந்தச் சூழலில் முதன்முறையாக திருவாசகத்தை அச்சில் பதிப்பித்தவர்திரு .சிவக்கொழுந்து தேசிகர்ஆகும் .
அச்சில் பதிப்பித்தல் என்பது அத்துணை எளியக்காரியம் அல்ல .ஏட்டு சுவடியாக இருந்த திருவாசகத்தை 1834-ஆம் ஆண்டில் முதன் முதலில் அச்சிட்டு வெளியிட்டவர் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகரே.
ஏடுகளில் இருந்த இத்தகைய அரிய தமிழ்ச் செல்வங் களை அப்போதைய தமிழ் அறிஞர்கள் அச்சுவடிவில் நூலுருவாக்கம் செய்யாமல் இருந்திருந்தால் எல்லோருக்கும்இத்தகைய கல்வி பரவலாகச் சென்று சேர்ந்திருக்காது., நமக்கெல்லாம் பயிலும் வாய்ப்பு கிட்டியி ருக்குமா என்பது ஐயமே .சுவடிகளினின்றும் அவற்றைப் பதிப்பிப்பதற்குப் புலமையும் பொறுமையும் கடின உழைப்பும் இன்றி யமையாதன.
பழஞ்சுவடிகளில் ஒற்றெழுத்துகளுக்குப் புள்ளி இருக்காது. நெட்டெழுத்தைச் சுட்டும் கொம்பு வேறுபாடுகளும் சுவடிகளில் இரா. இவற்றை அறிந்து எழுதுவதற்குத் தக்க பயிற்சி வேண்டும். பொறுமையும், பயிற்சியும், புலமையும் இப்பணிக்குத் தேவையாகும்.
சுவடிகளில் எழுதப்பெறும் எழுத்து வடிவங்களை எப்படியெல்லாம் படிக்க வேண்டும் என்பது பற்றியும் வேறுபாடங்களைத் தந்தால் வரும் பொருள் மாற்றங்கள் குறித்தும் அனுபவமும் ,அறிவும் அதிகம் தேவை .
திருவாசகத்தை முதல் முதலில் பிழைத்த திருத்தி அச்ச்சில் கொண்டுவந்த ,திரு .கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் அவர்கள் தமிழ்நாட்டில் கும்பகோணம் என்ற ஊருக்கு அருகில் உள்ள. ஏரண்ட புரி என்ற ஊரைச் சேர்ந்தவர்
ஏரண்டம் என்பதற்கு ஆமணக்கு என்ற கொடியின் கொட்டை என்பது பொருள் ஆகும்இப்போது அந்த ஊர் கொட்டையூர் என்று அழைக்கப்படுகிறது .எதில் இருந்து எது வந்தது என்பது ஆய்வுக்கு உரியது .
இவரின் தந்தை பெயர் தண்டபாணி தேசிகர். சைவ மரபைச் சேர்ந்தவர். தமிழ் இலக்கியம், இலக்கணம் முதலானவற்றில் நன்கு தேர்ச்சி பெற்றவர்கொட்டையூருக்குத் தெற்கில் உள்ள ஊர் சத்திமுற்றம்.ஆகும் அங்குள்ள இறைவன் பெயர் சிவக்கொழுந்து, இந்த இறைவன் பெயரையே தன் மகனுக்கும் இட்டார். சிவக்கொழுந்து தேசிகர் தமிழ் இலக்கணம், இலக்கியம் ஆகியவற்றில் சிறந்தவராக விளங்கினார்.இந்தக்குடும்பம் சுமார் 300 ஆண்டுகளுக்கு அதிகமாக அந்த ஊரில் வசித்து இருந்ததாகக் கூறப்படுகிறது .
இவரது ஆசிரியர்களாக திரு வைத்திநாத தேசிகர் வம்சத்தினரும் , மற்றும் சில திருவாரூரில் இருந்த பெரும் புலவர்களும் அமைந்திருந்தனர் .நிலம் வீடு போன்ற வசதிகள் இருந்ததால் இறைவழிபாடும் , மாணவர்களுக்கு பயிற்றுவித்தல் , சிறு நூல்கள் செய்வதுமாக இவரது இளம் வயது கழிந்தது .
இவரது அறிவுத் திறனைக் கேள்விப்பட்ட சரபோஜி மன்னர் இவரைத் தம் அரண்மனைப் புலவர் ஆக்கினார்.
முகலாய மன்னர்களின் ஆதிக்க ஆட்சியை எதிர்த்து வெற்றி பெற்றவர் சிவாஜி என்ற மராட்டிய மன்னர். சிவாஜியின் சகோதரர் வெங்கோஜி. இவர் ஏகோஜி என்றும் அழைக்கப்பட்டார். ஏகோஜி தஞ்சாவூரில் 1674-ஆம் ஆண்டில் மராட்டிய அரசை நிறுவியவர் ஆவார். அன்று முதல் 180 ஆண்டுகளில் 14 மராட்டிய மன்னர்கள் தஞ்சாவூரை ஆண்டு வந்துள்ளனர்.மராட்டிய மன்னர்களுள் ஒருவர் துளஜாஜி. இவருக்குக் குழந்தைகள் இல்லை. எனவே, ஓர் ஆண் குழந்தையை மகனாகத் தத்து எடுத்துக் கொண்டார். அந்தக் குழந்தைக்குத் தன் விருப்பக் கடவுளின் பெயரை இட்டார்.அவரது விருப்பக் கடவுள் திரிபுவனம் சரபேசர்.ஆகும் இதைச் சரபோஜி என்று அந்தக் குழந்தைக்குபெயராக இட்டார். ஆனால், இவருக்கு முன் சரபோஜி என்ற பெயரில் மூன்று மன்னர்கள் ஆண்டுள்ளனர். எனவே இவர் நான்காம் சரபோஜி ஆவார்.
சரபோஜி மன்னர் 1798-இல் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். ஆனால், இவருக்கு நாட்டை ஆள்வதில் விருப்பம் இல்லை. கலைகளில் மிகுந்த ஆர்வம் காணப்பட்டது. எனவே, ஆங்கிலக் கம்பெனியாருடன் உடன்பாடு செய்துகொண்டு, ஆட்சிப் பொறுப்பில் இருந்து விடுபட்டார்.
தஞ்சாவூரில் சரசுவதி மகால் என்ற நூல் நிலையத்தை நிறுவினார். இன்றியமையாத நூல்கள் பலவற்றைப் பதிப்பிப்பதற்காக அச்சகம் ஒன்றையும் நிறுவினார். தம் அரண்மனையில் அரும்பொருள் காட்சி நிலையத்தையும் ஏற்படுத்தினார். அனைவருக்கும் மருத்துவ வசதி கிடைப்பதற்காக மருத்துவச் சாலை ஒன்றையும் உருவாக்கினார். இவ்வாறு பல்வேறு சிறப்புகளை உடையவராகச் சரபோஜி மன்னர் திகழ்ந்தார்.
.இந்த நூல் நிலயத்தைப்பரமரிக்க சரபோஜி மன்னர் திரு சிவக்கொழுந்து தேசிகர்அவர்களை அழைத்து நூலகப்பொறுப்பைத்தந்தார் .அங்கு இருக்கும்போது சிவக்கொழுந்து தேசிகர் பல மருத்துவ நூல்களையும் கவிதை வடிவில் இயற்றினார்.கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் இயற்றிய இலக்கிய நூல்கள்
1)கொட்டையூர் உலா2)திருவிடைமருதூர்ப் புராணம்3)திருமண நல்லூர்ப் புராணம்4)சரசக் கழிநெடில்5)கோடீச்சுரக் கோவை6)தஞ்சைப் பெருவுடையார் உலா7)ஸ்ரீ சரபேந்திர பூபாலக் குறவஞ்சி நாடகம்
.இவ்வாறு, பல சிறப்புகளை உடைய கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் இயற்றிய நூல்களில் ஒன்றே சரபேந்திர பூபாலக் குறவஞ்சி ஆகும்.இந்த நூலின் பாட்டுடைத் தலைவர் சரபோஜி மன்னர். ஆகும்
சென்னை மாநிலத்தில் அப்போது ஆட்சியிலிருந்த ஆங்கிலேய அரசு கல்விச் சங்கம் என்று ஒரு சங்கத்தை அமைத்துத் தமிழ்ப் புலவர்களை வரவழைத்துப் பழைய நூல்களை ஏடுகளில் இருந்து ஆய்வுகள் செய்து பதிப்பித்தனர். புதிய நூல்களும் இயற்றப்பட்டன.
அப்போது கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகரின் புலமையைக் கேள்வியுற்ற ஆங்கில அரசு அவரை சென்னைக்கு அந்தக்கல்விக்கழகத்திற்கு அனுப்பப் கேட்டுக்கொண்டது .இத்தைத்தட்ட இயலாத சரபோஜி மன்னரும் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகராய் சென்னைக்கு அனுப்ப சம்மதித்தார்
. சென்னைத் தமிழ்ச் சங்கத்தின் தலைமைத் தமிழ்ப்புலவரான வித்துவான் தாண்டவராய முதலியாருக்கு உதவியாககொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் உடனிருந்து பணி செய்து வந்தார்
.சென்னையில் இருந்தபோதுதான் ஏட்டு சுவடியாக இருந்த திருவாசகத்தை 1834-ஆம் ஆண்டில் முதன் முதலில் அச்சிட்டு வெளியிட்டார்
.இதுவே இவரின் பணிகளில் தலையானது . திருவாசகம் நம் அனைவரும் படிக்க , காரணமாக இருந்தது திரு கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் போன்ற தலை சிறந்த மனிதர்களின் அயராத முயற்சிதான் .
ஆயினும் அவருக்கு நாம் தரவேண்டிய மதிப்பை நல்கவில்லை . இது தமிழரின் குறையாகும் .
90 ஆண்டுகள் வரை வாழ்ந்த சிவக்கொழுந்து தேசிகருக்கு இரு மனைவியர். இரு ஆண்மக்களும், ஐந்து பெண்களும் பிறந்தனர். முதல் மனைவியாருக்குப் பிறந்த வடுகநாததேசிகரின் பெயரனான சிவக்கொழுந்து தேசிகருடைய குமாரரே காசிவாசி சுவாமிநாத தேசிகர் ஆவார். உ.வே.சா. அவர்கள் தமது சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தங்கள் பதிப்பில் இவற்றை விரிவாகக் குறிப்பிட்டிருக்கிறார் . .
அந்தப்புத்தகதையைப்பார்த்தே நான் இந்த வரலாற்றை எழுதினேன் .1932 இல் வெளிவந்த அந்தப்புத்தகத்தின் நகல் என்னிடம் உள்ளது .
.
திருவாசகத்தின் பெருமைக்குறித்து எத்தனை சொன்னாலும் நிறையுண்டாகாது .ஆயினும் ஒரே ஒரு பாடலை சொல்லி இதை நிறைவு செய்யலாம்
.போற்றி அகவல் – திருவாசகம்
“பாரிடை ஐந்தாய்” பரந்தாய்ப் போற்றி” நீரிடை நான்காய் ” நிகழ்ந்தாய்ப் போற்றி” தீயிடை மூன்றாய்” திகழ்ந்தாய்ப் போற்றி” வளியிடை இரண்டாய்” மகிழ்ந்தாய்ப் போற்றி” வெளியிடை ஒன்றாய்” விளைந்தாய்ப் போற்றி
நம் உடலில் ஐம் பூதங்களும் எந்த விகிதத்தில் கலந்து இருக்கின்றான் என்பதை இப்பாடல் விளக்குகின்றது
பாரிடை ஐந்தாய் = மண் – 5 பாகங்களாக – மெய் , வாய், கண் , மூக்கு , செவி ஆகிய பாகங்களாக
நீரிடை நான்காய் = நீர் = 4 பாகங்கள் – கண்ணீர் , சிறு நீர் , ரத்தம் , அமுதம் ஆகிய பாகங்களாக
தீயிடை மூன்றாய்” = 3 பாகங்கள் – சூரியன் – சந்திரன் – அக்கினி ஆகிய பாகங்களாக
வளியிடை இரண்டாய்” = 2 பாகங்கள் – பிராணன் – அபானன் ஆகிய பாகங்களாக
வெளியிடை ஒன்றாய் = 1 பாகம் – சிதாகாஸப் பெருவெளியாகஎத்தனை அனுபவங்களை உணர்வுடன் தெரிவிக்கும் தேன் திருவாசகம் .
வான்கலந்த மாணிக்கவாசக! நின் வாசகத்தை, நான்கலந்து பாடுங்கால், நற்கருப்பஞ்சற்றினிலே தேன்கலந்து, பால்கலந்து, செழுங்கனித் தீஞ்சுவை கலந்து,என் ஊன்கலந்து, உயிர்கலந்து, உவட்டாமல் இனிப்பதுவே!" - வடலூர் ராமலிங்க அடிகளார்
அண்ணாமலை சுகுமாரன் 04/4/18 மீள் பதிவு 4/4/2024 படங்கள் இணையத்தில் இருந்து நன்றியுடன் பெற்றது
திருவாசகத்துக்கு உருகாதார், ஒரு வாசகத்துக்கும் உருகார்" என்பது தொடர்ந்து வழங்கி வரும் ஒரு பழஞ்சொல் ஆகும் .
அப்பரது சம்பந்தரது தேவாரங்களின் பதிகங்களில் காணாத ஒரு ஈரத்தை, ஒரு நெகிழ்வை, அதிக கசிவை மாணிக்கவாசகரது திருவாசகத்தில் காணமுடியும் திருவாசகப்பாடல்கள் உருகி உருகிப் பாடப்பெற்றமையால், படிப்பவரையும் கேட்பவரையும் மனம் உருகச்செய்யும். வலிமைப்பெற்றது
அழுதால் பெறலாமே என்று உருகிக்கூறுவார் . உணர்வின் வலிமை அறிந்த மணிவாசகப பெருமான்
திருவாசகத்துக்கு மேலும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. சிவன் தன்னுடைய சிந்தையிலே நின்றதனால், அவனுடைய திருவருளாலே அவனுடைய திருத்தாள்களை வணங்கி, மாணிக்கவாசகர் உரைத்த திருப்பாடல்கள் அவை; அவற்றை சிவபெருமானே நேரில் வந்து, தன்னுடைய திருக்கரத்தினால் எழுதி, அந்நூலின் "திருக்கடைக்காப்புப்பகுதியில், "இவை எழுதியது, அழகியதிருச்சிற்றம்பலமுடையான் எழுத்து" என்று கையெழுத்திட்டு அருளிய நூல்;
இத்தகைய பெருமைகள் பல கொண்ட இந்த நூலை நம்பியாண்டார் நம்பி எனும் மாமனிதர் , மாமன்னர் இராஜராஜன் துணைக்கொண்டு , தில்லைக்கோயிலில் இருந்து மீட்டு மக்களிடம் கொண்டு சேர்த்தாலும் ,அவைகள் ஓலைச் சுவடிகளில் இருந்தமையால் அவை பெருவாரியான மக்களை சென்றடையவில்லை .
தமிழ்க் கல்வி பரவிய வரலாற்றில் அச்சு நூல்களின் உருவாக்கம் அறிவுத்தேடலில் ஒரு புதிய பரி மாணத்தைத் தந்தது.
ஏறத்தாழ கி.பி. 1800 வரைக்கும் ஏடுகளைச் சார்ந்தே தமிழ்க்கல்விபயிற்றுவித்தல் அமைந்திருந்தது. பழந்தமிழறிஞர்கள் ஏடுகளின் வாயிலாகவே தம்புலமையை வளர்த்துக் கொண்டு அடுத்த தலைமுறைக்கு அதனைப் பதிவு செய்தனர்.
இந்தச் சூழலில் முதன்முறையாக திருவாசகத்தை அச்சில் பதிப்பித்தவர்திரு .சிவக்கொழுந்து தேசிகர்ஆகும் .
அச்சில் பதிப்பித்தல் என்பது அத்துணை எளியக்காரியம் அல்ல .ஏட்டு சுவடியாக இருந்த திருவாசகத்தை 1834-ஆம் ஆண்டில் முதன் முதலில் அச்சிட்டு வெளியிட்டவர் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகரே.
ஏடுகளில் இருந்த இத்தகைய அரிய தமிழ்ச் செல்வங் களை அப்போதைய தமிழ் அறிஞர்கள் அச்சுவடிவில் நூலுருவாக்கம் செய்யாமல் இருந்திருந்தால் எல்லோருக்கும்இத்தகைய கல்வி பரவலாகச் சென்று சேர்ந்திருக்காது., நமக்கெல்லாம் பயிலும் வாய்ப்பு கிட்டியி ருக்குமா என்பது ஐயமே .சுவடிகளினின்றும் அவற்றைப் பதிப்பிப்பதற்குப் புலமையும் பொறுமையும் கடின உழைப்பும் இன்றி யமையாதன.
பழஞ்சுவடிகளில் ஒற்றெழுத்துகளுக்குப் புள்ளி இருக்காது. நெட்டெழுத்தைச் சுட்டும் கொம்பு வேறுபாடுகளும் சுவடிகளில் இரா. இவற்றை அறிந்து எழுதுவதற்குத் தக்க பயிற்சி வேண்டும். பொறுமையும், பயிற்சியும், புலமையும் இப்பணிக்குத் தேவையாகும்.
சுவடிகளில் எழுதப்பெறும் எழுத்து வடிவங்களை எப்படியெல்லாம் படிக்க வேண்டும் என்பது பற்றியும் வேறுபாடங்களைத் தந்தால் வரும் பொருள் மாற்றங்கள் குறித்தும் அனுபவமும் ,அறிவும் அதிகம் தேவை .
திருவாசகத்தை முதல் முதலில் பிழைத்த திருத்தி அச்ச்சில் கொண்டுவந்த ,திரு .கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் அவர்கள் தமிழ்நாட்டில் கும்பகோணம் என்ற ஊருக்கு அருகில் உள்ள. ஏரண்ட புரி என்ற ஊரைச் சேர்ந்தவர்
ஏரண்டம் என்பதற்கு ஆமணக்கு என்ற கொடியின் கொட்டை என்பது பொருள் ஆகும்இப்போது அந்த ஊர் கொட்டையூர் என்று அழைக்கப்படுகிறது .எதில் இருந்து எது வந்தது என்பது ஆய்வுக்கு உரியது .
இவரின் தந்தை பெயர் தண்டபாணி தேசிகர். சைவ மரபைச் சேர்ந்தவர். தமிழ் இலக்கியம், இலக்கணம் முதலானவற்றில் நன்கு தேர்ச்சி பெற்றவர்கொட்டையூருக்குத் தெற்கில் உள்ள ஊர் சத்திமுற்றம்.ஆகும் அங்குள்ள இறைவன் பெயர் சிவக்கொழுந்து, இந்த இறைவன் பெயரையே தன் மகனுக்கும் இட்டார். சிவக்கொழுந்து தேசிகர் தமிழ் இலக்கணம், இலக்கியம் ஆகியவற்றில் சிறந்தவராக விளங்கினார்.இந்தக்குடும்பம் சுமார் 300 ஆண்டுகளுக்கு அதிகமாக அந்த ஊரில் வசித்து இருந்ததாகக் கூறப்படுகிறது .
இவரது ஆசிரியர்களாக திரு வைத்திநாத தேசிகர் வம்சத்தினரும் , மற்றும் சில திருவாரூரில் இருந்த பெரும் புலவர்களும் அமைந்திருந்தனர் .நிலம் வீடு போன்ற வசதிகள் இருந்ததால் இறைவழிபாடும் , மாணவர்களுக்கு பயிற்றுவித்தல் , சிறு நூல்கள் செய்வதுமாக இவரது இளம் வயது கழிந்தது .
இவரது அறிவுத் திறனைக் கேள்விப்பட்ட சரபோஜி மன்னர் இவரைத் தம் அரண்மனைப் புலவர் ஆக்கினார்.
முகலாய மன்னர்களின் ஆதிக்க ஆட்சியை எதிர்த்து வெற்றி பெற்றவர் சிவாஜி என்ற மராட்டிய மன்னர். சிவாஜியின் சகோதரர் வெங்கோஜி. இவர் ஏகோஜி என்றும் அழைக்கப்பட்டார். ஏகோஜி தஞ்சாவூரில் 1674-ஆம் ஆண்டில் மராட்டிய அரசை நிறுவியவர் ஆவார். அன்று முதல் 180 ஆண்டுகளில் 14 மராட்டிய மன்னர்கள் தஞ்சாவூரை ஆண்டு வந்துள்ளனர்.மராட்டிய மன்னர்களுள் ஒருவர் துளஜாஜி. இவருக்குக் குழந்தைகள் இல்லை. எனவே, ஓர் ஆண் குழந்தையை மகனாகத் தத்து எடுத்துக் கொண்டார். அந்தக் குழந்தைக்குத் தன் விருப்பக் கடவுளின் பெயரை இட்டார்.அவரது விருப்பக் கடவுள் திரிபுவனம் சரபேசர்.ஆகும் இதைச் சரபோஜி என்று அந்தக் குழந்தைக்குபெயராக இட்டார். ஆனால், இவருக்கு முன் சரபோஜி என்ற பெயரில் மூன்று மன்னர்கள் ஆண்டுள்ளனர். எனவே இவர் நான்காம் சரபோஜி ஆவார்.
சரபோஜி மன்னர் 1798-இல் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். ஆனால், இவருக்கு நாட்டை ஆள்வதில் விருப்பம் இல்லை. கலைகளில் மிகுந்த ஆர்வம் காணப்பட்டது. எனவே, ஆங்கிலக் கம்பெனியாருடன் உடன்பாடு செய்துகொண்டு, ஆட்சிப் பொறுப்பில் இருந்து விடுபட்டார்.
தஞ்சாவூரில் சரசுவதி மகால் என்ற நூல் நிலையத்தை நிறுவினார். இன்றியமையாத நூல்கள் பலவற்றைப் பதிப்பிப்பதற்காக அச்சகம் ஒன்றையும் நிறுவினார். தம் அரண்மனையில் அரும்பொருள் காட்சி நிலையத்தையும் ஏற்படுத்தினார். அனைவருக்கும் மருத்துவ வசதி கிடைப்பதற்காக மருத்துவச் சாலை ஒன்றையும் உருவாக்கினார். இவ்வாறு பல்வேறு சிறப்புகளை உடையவராகச் சரபோஜி மன்னர் திகழ்ந்தார்.
.இந்த நூல் நிலயத்தைப்பரமரிக்க சரபோஜி மன்னர் திரு சிவக்கொழுந்து தேசிகர்அவர்களை அழைத்து நூலகப்பொறுப்பைத்தந்தார் .அங்கு இருக்கும்போது சிவக்கொழுந்து தேசிகர் பல மருத்துவ நூல்களையும் கவிதை வடிவில் இயற்றினார்.கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் இயற்றிய இலக்கிய நூல்கள்
1)கொட்டையூர் உலா2)திருவிடைமருதூர்ப் புராணம்3)திருமண நல்லூர்ப் புராணம்4)சரசக் கழிநெடில்5)கோடீச்சுரக் கோவை6)தஞ்சைப் பெருவுடையார் உலா7)ஸ்ரீ சரபேந்திர பூபாலக் குறவஞ்சி நாடகம்
.இவ்வாறு, பல சிறப்புகளை உடைய கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் இயற்றிய நூல்களில் ஒன்றே சரபேந்திர பூபாலக் குறவஞ்சி ஆகும்.இந்த நூலின் பாட்டுடைத் தலைவர் சரபோஜி மன்னர். ஆகும்
சென்னை மாநிலத்தில் அப்போது ஆட்சியிலிருந்த ஆங்கிலேய அரசு கல்விச் சங்கம் என்று ஒரு சங்கத்தை அமைத்துத் தமிழ்ப் புலவர்களை வரவழைத்துப் பழைய நூல்களை ஏடுகளில் இருந்து ஆய்வுகள் செய்து பதிப்பித்தனர். புதிய நூல்களும் இயற்றப்பட்டன.
அப்போது கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகரின் புலமையைக் கேள்வியுற்ற ஆங்கில அரசு அவரை சென்னைக்கு அந்தக்கல்விக்கழகத்திற்கு அனுப்பப் கேட்டுக்கொண்டது .இத்தைத்தட்ட இயலாத சரபோஜி மன்னரும் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகராய் சென்னைக்கு அனுப்ப சம்மதித்தார்
. சென்னைத் தமிழ்ச் சங்கத்தின் தலைமைத் தமிழ்ப்புலவரான வித்துவான் தாண்டவராய முதலியாருக்கு உதவியாககொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் உடனிருந்து பணி செய்து வந்தார்
.சென்னையில் இருந்தபோதுதான் ஏட்டு சுவடியாக இருந்த திருவாசகத்தை 1834-ஆம் ஆண்டில் முதன் முதலில் அச்சிட்டு வெளியிட்டார்
.இதுவே இவரின் பணிகளில் தலையானது . திருவாசகம் நம் அனைவரும் படிக்க , காரணமாக இருந்தது திரு கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் போன்ற தலை சிறந்த மனிதர்களின் அயராத முயற்சிதான் .
ஆயினும் அவருக்கு நாம் தரவேண்டிய மதிப்பை நல்கவில்லை . இது தமிழரின் குறையாகும் .
90 ஆண்டுகள் வரை வாழ்ந்த சிவக்கொழுந்து தேசிகருக்கு இரு மனைவியர். இரு ஆண்மக்களும், ஐந்து பெண்களும் பிறந்தனர். முதல் மனைவியாருக்குப் பிறந்த வடுகநாததேசிகரின் பெயரனான சிவக்கொழுந்து தேசிகருடைய குமாரரே காசிவாசி சுவாமிநாத தேசிகர் ஆவார். உ.வே.சா. அவர்கள் தமது சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தங்கள் பதிப்பில் இவற்றை விரிவாகக் குறிப்பிட்டிருக்கிறார் . .
அந்தப்புத்தகதையைப்பார்த்தே நான் இந்த வரலாற்றை எழுதினேன் .1932 இல் வெளிவந்த அந்தப்புத்தகத்தின் நகல் என்னிடம் உள்ளது .
.
திருவாசகத்தின் பெருமைக்குறித்து எத்தனை சொன்னாலும் நிறையுண்டாகாது .ஆயினும் ஒரே ஒரு பாடலை சொல்லி இதை நிறைவு செய்யலாம்
.போற்றி அகவல் – திருவாசகம்
“பாரிடை ஐந்தாய்” பரந்தாய்ப் போற்றி” நீரிடை நான்காய் ” நிகழ்ந்தாய்ப் போற்றி” தீயிடை மூன்றாய்” திகழ்ந்தாய்ப் போற்றி” வளியிடை இரண்டாய்” மகிழ்ந்தாய்ப் போற்றி” வெளியிடை ஒன்றாய்” விளைந்தாய்ப் போற்றி
நம் உடலில் ஐம் பூதங்களும் எந்த விகிதத்தில் கலந்து இருக்கின்றான் என்பதை இப்பாடல் விளக்குகின்றது
பாரிடை ஐந்தாய் = மண் – 5 பாகங்களாக – மெய் , வாய், கண் , மூக்கு , செவி ஆகிய பாகங்களாக
நீரிடை நான்காய் = நீர் = 4 பாகங்கள் – கண்ணீர் , சிறு நீர் , ரத்தம் , அமுதம் ஆகிய பாகங்களாக
தீயிடை மூன்றாய்” = 3 பாகங்கள் – சூரியன் – சந்திரன் – அக்கினி ஆகிய பாகங்களாக
வளியிடை இரண்டாய்” = 2 பாகங்கள் – பிராணன் – அபானன் ஆகிய பாகங்களாக
வெளியிடை ஒன்றாய் = 1 பாகம் – சிதாகாஸப் பெருவெளியாகஎத்தனை அனுபவங்களை உணர்வுடன் தெரிவிக்கும் தேன் திருவாசகம் .
வான்கலந்த மாணிக்கவாசக! நின் வாசகத்தை, நான்கலந்து பாடுங்கால், நற்கருப்பஞ்சற்றினிலே தேன்கலந்து, பால்கலந்து, செழுங்கனித் தீஞ்சுவை கலந்து,என் ஊன்கலந்து, உயிர்கலந்து, உவட்டாமல் இனிப்பதுவே!" - வடலூர் ராமலிங்க அடிகளார்
அண்ணாமலை சுகுமாரன் 04/4/18 மீள் பதிவு 4/4/2024 படங்கள் இணையத்தில் இருந்து நன்றியுடன் பெற்றது
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|