புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_c10“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_m10“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_c10 
21 Posts - 66%
heezulia
“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_c10“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_m10“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_c10“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_m10“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_c10 
63 Posts - 64%
heezulia
“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_c10“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_m10“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_c10“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_m10“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_c10“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_m10“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்”


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 03, 2010 8:59 pm

“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Nasi


பிரதமரின் சிறப்பு உதவியாளர்: “இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்”


இன்று காலையில் மலாக்காவில் நடந்த ஒரே மலேசியா கருத்தரங்கில் பிரதமர் நஜிப்பின் சிறப்பு உதவியாளர் கொட்டிய கொடுஞ்சொற்களால் சீற்றமடைந்த மஇகா, மசீச உறுப்பினர்களும் மற்றும் அரசு சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகளும் வெளிநடப்புச் செய்தனர்.

“இந்தியர்கள் இந்நாட்டிற்குப் பிச்சைக்காரர்களாக வந்தனர். சீனர்கள், குறிப்பாக பெண்கள், உடலை விற்க (”jual tubuh”) வந்தனர்”, என்றவர் கூறியதாக பெயரை வெளியிட விரும்பாத வட்டாரம் கூறியது.

“குடியேறிகளாக இங்கு வந்த இந்தியர்களும் சீனர்களும் இப்போது இந்நாட்டில் நல்வாழ்க்கையை அனுபவிக்கின்றனர்”, என்று பிரதமரின் சிறப்பு அதிகாரியான நசிர் சாபார் (டை கட்டியிருப்பவர்) கூறினார்.

“மலேசியாவின் அரசமைப்புச் சட்டத்தை வரைந்ததற்கான முழு பொறுப்பும் அம்னோவை மட்டுமே சாரும்” என்று கூறிய நசிர் அன்றைய கூட்டணி பங்காளிகளின் பங்களிப்பை நிராகரித்து விட்டார்.

“குடியுரிமை பறிக்கப்படும்”

எஸ்பிஎம் தேர்வுக்கு விதிக்கப்பட்டிருக்கும் 10 பாட வரம்பை 12 கிற்கு உயர்த்த வேண்டும் என்று இந்தியர்கள் அளவிற்கு வீறி வலியுறுத்துவார்களானால் அவர்களுடைய குடியுரிமை பறிக்கப்படும் என்று அவர் மிரட்டியுள்ளார் என்றும் கூறப்பட்டது.

“அவர் (நசிர்) பல மஇகா கிளைகளுக்குச் சென்று இந்த விவகாரத்தில் அரசாங்கத்தின் நிலையை விளக்கியதாகவும் ஆனால் அக்கிளைகள் அரசாங்கம் விதித்துள்ள வரம்பை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையில் விடாப்பிடியாக இருந்தன என்று வருத்தப்பட்டுக் கொண்டார். அவர்கள் “மிதமிஞ்சிய” கோரிக்கையை விடுத்தனர் என்று குற்றம் சாட்டினார்.

“பகசா மிலாயு அதிகாரத்துவ மொழியாக இருக்கையில் அவர்கள் எப்படி தமிழ்மொழியைப் பற்றி அவ்வளவு பேச முடியும். அவர்கள் தொடர்ந்து அவ்வாறான கோரிக்கைகளை விடுத்தால், நான் அவர்களின் குடியுரிமையைப் பறிக்க முடியும்”, என்று நசிர் கூறினார்.”

“அவர்களின் குடியிரிமையைப் பறிக்க இவர் யார்? என்று சினமுற்ற அந்த வட்டாரம் கேட்டது.

இதன் பின்னர், மஇகா மசீச உறுப்பினர்களும் அங்கிருந்த இதர அரசு சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகளும் அறையைவிட்டு வெளிநடப்புச் செய்ய தீர்மானித்தனர்.

“ஏற்பாட்டாளர்கள் எங்களை வெளியேறாமல் தடுப்பதற்காக தாஜா செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் நாங்கள் மிகுந்த வேதனையில் இருந்தோம். இது ஜாசா என்ற தகவல் அமைச்சின் சிறப்பு விவகார பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்டதாகும்.”

இதனிடையே, மஇகா இளைஞர் பிரிவு இச்சம்பவம் மீது செந்தூல் மாவட்ட போலீஸ் நிலையத்தில் இன்று மாலை இரு புகார் செய்ய திட்டமிட்டிருப்பதாக நம்பப்படுகிறது.

மேலும், பெப்ரவரி 4 ஆம் தேதி மலாக்காவிற்கு வருகை புரியும் நஜிப்பிடம் ஒரு மனு அளிக்கப்படும்.

சாமிவேலு: தேசநிந்தனைச் சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும்

இச்சம்பவத்தால் கடும் சினமடைந்துள்ள மஇகா தலைவர் ச. சாமிவேலு இச்சம்பவத்திற்குப் பொறுப்பான நசிர் தேசநிந்தனைச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும் என்று வலிவான கோரிக்கை விடுத்தார்.

நசிரின் கூற்று “இனவாதத்தின் உச்சக்கட்டம்” என்று வர்ணித்த அவர் பிரதமர் அவருடைய உதவியாளருக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

போலீஸ் புகார் செய்யப்படும் என்பதை உறுதிப்படுத்திய அவர், “இந்திய மலேசியர்களை இழிவுபடுத்திய இம்மனிதரின் காலனித்துவ மனப்பான்மையை மஇகா வன்மையாக கண்டிக்கிறது”, என்றார்.

“இம்மனிதரின் போக்கு ஒரே மலேசியா கோட்பாட்டின் கீழ் அரசாங்கமும் பிரதமரும் பேணிவரும் நல்லிணக்கத்திற்கு எதிர்மாறானதாக இருக்கிறது’, என்று அவர் மேலும் கூறினார்.

இந்நாட்டிலுள்ள தற்போதைய இந்தியத் தலைமுறையினர் மலேசியாவில் பிறந்தவர்கள் என்பதோடு அவர்கள் இந்நாட்டு மண்ணின் மைந்தர்கள் என்பதை நசிர் உணர்ந்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

“நிலைமை அவ்வாறிருக்க, தங்களுடைய உரிமைகளுக்காக போராடுகிறார்கள் என்பதற்காக அவர்களுடைய குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் என்று கூற இவர் யார்”, என்று சாமிவேலு வினவினார்.

“நான் எனது 29 ஆண்டுகால அமைச்சர் பணியில் இந்திய மலேசியர்களின் விசுவாசம் குறித்து கேள்வி எழுப்புவதற்கு தகுதியுடையவராக கருதிய ஒரு மனிதரைக் கண்டதில்லை. அவமானத்துக்குரியவறே!”, என்று சாடிய அவர் பிரதமர் சரியான நடவடிக்கை எடுப்பார் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.

பத்துமலைக்குப் போவதின் அர்த்தம் என்ன?

மஇகா இளைஞர் பிரிவின் ஆலோசகர் எஸ். வேலுபாரியும் இவ்விவகாரம் குறித்து தமது ஆதங்கத்தைத் தெரிவித்துக்கொண்டார்.

“மக்களிடையே நல்லுறவை வளர்ப்பதற்காக பிரதமர் மேற்கொண்ட கடும் உழைப்பு இச்செயலால் பாழாக்கப்பட்டு விட்டது”, என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

“இங்கு அவருடைய சொந்த சிறப்பு அதிகாரி ஒரே மலேசியாவின் கோட்பாட்டை புரிந்துகொள்ளாதிருக்கையில், நஜிப் தைப்பூசத்திற்குப் பத்துமலைக்குச் செல்வது, தமிழ் நாட்டிற்குச் சென்று தமிழர்களுடனான நெருங்கிய உறவு குறித்து பேசுவது போன்றவற்றால் என்ன பலன்?”, என்று வேள்பாரி வினவினார்.

போலீசார் இந்த அதிகாரியை தேசநிந்தனைக்காக விசாரிக்க வேண்டும். இந்திய மற்றும் சீன மக்களிடையே எழும்பக்கூடிய எந்த ஒரு புதிய கவலையையும் அகற்றுவதற்கு அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

இவ்விவகாரம் சம்பந்தமாக, மலேசிய இந்திய இளைஞர் மன்றத்தின் தலைவர் எ. ராஜரெத்னம், நசிர் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என்று கோரினார்.

எதிர்வரும் திங்கள்கிழமைக்குள் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றால், மலேசிய இந்திய இளைஞர் மன்றம் ஒரு பெரும் கண்டன கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யும் என்றார்.

மலேசியா இன்று:



“இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்” Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக