புதிய பதிவுகள்
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மஞ்சள் காமாலைக்கு இலகு வைத்தியம் Poll_c10மஞ்சள் காமாலைக்கு இலகு வைத்தியம் Poll_m10மஞ்சள் காமாலைக்கு இலகு வைத்தியம் Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
மஞ்சள் காமாலைக்கு இலகு வைத்தியம் Poll_c10மஞ்சள் காமாலைக்கு இலகு வைத்தியம் Poll_m10மஞ்சள் காமாலைக்கு இலகு வைத்தியம் Poll_c10 
56 Posts - 38%
சண்முகம்.ப
மஞ்சள் காமாலைக்கு இலகு வைத்தியம் Poll_c10மஞ்சள் காமாலைக்கு இலகு வைத்தியம் Poll_m10மஞ்சள் காமாலைக்கு இலகு வைத்தியம் Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
மஞ்சள் காமாலைக்கு இலகு வைத்தியம் Poll_c10மஞ்சள் காமாலைக்கு இலகு வைத்தியம் Poll_m10மஞ்சள் காமாலைக்கு இலகு வைத்தியம் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
மஞ்சள் காமாலைக்கு இலகு வைத்தியம் Poll_c10மஞ்சள் காமாலைக்கு இலகு வைத்தியம் Poll_m10மஞ்சள் காமாலைக்கு இலகு வைத்தியம் Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
மஞ்சள் காமாலைக்கு இலகு வைத்தியம் Poll_c10மஞ்சள் காமாலைக்கு இலகு வைத்தியம் Poll_m10மஞ்சள் காமாலைக்கு இலகு வைத்தியம் Poll_c10 
3 Posts - 2%
jairam
மஞ்சள் காமாலைக்கு இலகு வைத்தியம் Poll_c10மஞ்சள் காமாலைக்கு இலகு வைத்தியம் Poll_m10மஞ்சள் காமாலைக்கு இலகு வைத்தியம் Poll_c10 
2 Posts - 1%
Poomagi
மஞ்சள் காமாலைக்கு இலகு வைத்தியம் Poll_c10மஞ்சள் காமாலைக்கு இலகு வைத்தியம் Poll_m10மஞ்சள் காமாலைக்கு இலகு வைத்தியம் Poll_c10 
1 Post - 1%
சிவா
மஞ்சள் காமாலைக்கு இலகு வைத்தியம் Poll_c10மஞ்சள் காமாலைக்கு இலகு வைத்தியம் Poll_m10மஞ்சள் காமாலைக்கு இலகு வைத்தியம் Poll_c10 
1 Post - 1%
Manimegala
மஞ்சள் காமாலைக்கு இலகு வைத்தியம் Poll_c10மஞ்சள் காமாலைக்கு இலகு வைத்தியம் Poll_m10மஞ்சள் காமாலைக்கு இலகு வைத்தியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மஞ்சள் காமாலைக்கு இலகு வைத்தியம் Poll_c10மஞ்சள் காமாலைக்கு இலகு வைத்தியம் Poll_m10மஞ்சள் காமாலைக்கு இலகு வைத்தியம் Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
மஞ்சள் காமாலைக்கு இலகு வைத்தியம் Poll_c10மஞ்சள் காமாலைக்கு இலகு வைத்தியம் Poll_m10மஞ்சள் காமாலைக்கு இலகு வைத்தியம் Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
மஞ்சள் காமாலைக்கு இலகு வைத்தியம் Poll_c10மஞ்சள் காமாலைக்கு இலகு வைத்தியம் Poll_m10மஞ்சள் காமாலைக்கு இலகு வைத்தியம் Poll_c10 
16 Posts - 4%
prajai
மஞ்சள் காமாலைக்கு இலகு வைத்தியம் Poll_c10மஞ்சள் காமாலைக்கு இலகு வைத்தியம் Poll_m10மஞ்சள் காமாலைக்கு இலகு வைத்தியம் Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
மஞ்சள் காமாலைக்கு இலகு வைத்தியம் Poll_c10மஞ்சள் காமாலைக்கு இலகு வைத்தியம் Poll_m10மஞ்சள் காமாலைக்கு இலகு வைத்தியம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மஞ்சள் காமாலைக்கு இலகு வைத்தியம் Poll_c10மஞ்சள் காமாலைக்கு இலகு வைத்தியம் Poll_m10மஞ்சள் காமாலைக்கு இலகு வைத்தியம் Poll_c10 
7 Posts - 2%
jairam
மஞ்சள் காமாலைக்கு இலகு வைத்தியம் Poll_c10மஞ்சள் காமாலைக்கு இலகு வைத்தியம் Poll_m10மஞ்சள் காமாலைக்கு இலகு வைத்தியம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
மஞ்சள் காமாலைக்கு இலகு வைத்தியம் Poll_c10மஞ்சள் காமாலைக்கு இலகு வைத்தியம் Poll_m10மஞ்சள் காமாலைக்கு இலகு வைத்தியம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
மஞ்சள் காமாலைக்கு இலகு வைத்தியம் Poll_c10மஞ்சள் காமாலைக்கு இலகு வைத்தியம் Poll_m10மஞ்சள் காமாலைக்கு இலகு வைத்தியம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மஞ்சள் காமாலைக்கு இலகு வைத்தியம் Poll_c10மஞ்சள் காமாலைக்கு இலகு வைத்தியம் Poll_m10மஞ்சள் காமாலைக்கு இலகு வைத்தியம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மஞ்சள் காமாலைக்கு இலகு வைத்தியம்


   
   
நிஷா
நிஷா
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 13/01/2010

Postநிஷா Wed Mar 17, 2010 9:50 pm

மஞ்சள் காமாலைக்கு இலகு வைத்தியம்

மஞ்சள் காமாலை நோய் ஒருவருக்கு ஏற்பட்டால் அவரது கண்கள், முகம் மஞ்சள் நிறமாகும். நோய் முதிர முதிர நாக்கு, வாயின் மேற்பாகம், உதடு, சிறுநீர் என்பன படிப்படியாக மஞ்சள் நிறத்தை அடைந்து கொண்டு வரும். அதன் பின் தோல் மஞ்சள் நிறத்தோடு பச்சை நிறம் பெற்றது போல் தோன்றும். சிறுநீர் மிகவும் மஞ்சள் நிறமாக இரத்தம் கலந்ததுபோல் தென்படும். சிறுநீர் ஆடையில் படின் கறை போல் தோற்றமளிக்கும். வியர்வை மஞ்சளாகும். மலம் வெளுத்து வெளியாகும். சிலருக்கு உமிழ் நீர், கண்ணீர் கூட மஞ்சள் நிறமாகும்.

நோய் தொடங்கும் போதே உடல் வரண்டு நமைச்சல் உண்டாகும்.

மஞ்சள் கரிசலாங்கண்ணிக் கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அத்துடன் 9 மிளகைச் சேர்த்து அம்மியில் வைத்து அரைத்து 2 பாகமாக்கி காலை, மாலை இரு வேளை வீதம் தேன் கலந்து தொடர்ந்து ஒரு வாரம் உண்டு வர குணமாகும்.

கீழா நெல்லிக் கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து மைபோல் அரைத்து அதை 200 மி.லீ. தயிரில் கலந்து காலை ஒரு வேளையாக தொடர்ந்து ஐந்து நாள் அருந்தி வர குணமாகும்.

அருநெல்லிக்காயின் உள்ளே உள்ள பருப் புகளை 5 கிராம் அளவு மை போன்று அரைத்து 200 மி.லீ. புளித்த மோரில் கலந்து காலை, மாலை இரு வேளையாக தொடர்ந்து 5 நாள் அருந்தி வர குணமாகும்.

கலியாணப் பூசணிக்காயை நறுக்கி தோலைச் சீவ வேண்டும். உள்ளிருக்கும் பஞ்சு போன்றவற்றை நீக்கி துண்டுகளாக நறுக்கி அவற்றை ஆவியில் வேக வைக்கவும்.
வெந்த பிறகு எடுத்து பிழிந்து சாறு எடுக்கவும். அதில் அரை சங்களவு எடுத்துப் பனங் கற்கண்டு சேர்த்து தினசரி 3 வேளை வீதம் 3 நாட்களுக்கு குடிக்க வேண்டும்.

10 கிராம் கடுகு ரோகிணியைப் பொடித்து 4 கப் நீர் கலந்து கால் பங்காக வற்ற வைத்து எடுக்க வேண்டும். பாதி பாதியாக காலை, மாலை 5 நாட்களுக்குக் குடித்தால் குணமாகும். பால் சாதம் மட்டுமே உணவாக எடுக்க வேண்டும்.

கோவை இலையை நன்றாக அரைத்து நெல்லிக்காயளவு எடுத்து காலை, மாலை இரு வேளையாக 5 நாட்கள் உட்கொள்ள வேண்டும்.

கீழாநெல்லி இலையும், மஞ்சள் கரிசலாங்கண்ணி இலையையும் சம அளவு எடுத்து நன்றாக அரைக்கவும். தேசிப்பழப் பிரமாணம் காலை, மாலை ஆட்டுப் பாலிலோ, எருமைத் தயிரிலோ, பசுப்பாலிலோ கலந்து பருகவும். இவ்வாறு 5 நாட்கள் அருந்தி பாற்சோறு மட்டும் சாப்பிட்டு வந் தால் மஞ்சட் காமாலை உறுதியாக குணமாகிவிடும்.

கீழ்க்காய் நெல்லி சழலம் 4 (வேர், தண்டு நீக்கியது), ஒரு வெங்காயம், சீரகம் சிறி தளவு என்பவற்றை பசுப்பாலில் அரைத்து தேசிப்பழம் பிரமாணம் எடுத்து 50 100 மி.லீ. பசுப்பாலில் கலந்து காலை, மாலை இரு வேளையாக 5 நாட்கள் கொடுக்க வேண்டும். 5 நாட்களும் உப்பைத் தவிர்த்து பத்தியம் இருக்க வேண்டும்.

சிற்றாமணக்கு கொழுந்தை சேகரித்து தட்டிச் சாறு பிழிந்து சமவெள்ளாட்டுப் பால் கலந்து வைத்துக் கொண்டு 75 மி.லீ. அளவில் வாரம் ஒரு முறை அதிகாலையில் கொடுக்கப் பேதியாகும். காமாலை நோயைத் தடுக்கும் முறையாகவும், குணப்படுத்தும் பரிகாரமாகவும் இதனைக் கொடுக்கலாம்.
இதன்போது உப்பில்லாத பத்தியம் இருக்க வேண்டும்.

பூவரசுக் கொழுந்து இலைக் குடிநீர்

உருக்குச் சட்டியை அடுப்பில் வைத்து 8 கிராம் மிளகு போட்டு சிறிது வறுக்க வேண் டும். பின் சட்டியில் வைத்தே அதை தூளாக்க வேண்டும். பின் அச்சட்டியி லுள்ள தூளில் 600 மி.லீ. இளநீர் விட வேண்டும். அது கொதிக்க ஆரம்பித்ததும் ஒரு கைப்பிடி பூவரசு கொழுந்து இலையை கையில் வைத்து கசக்கி சாற்றைப் பிழிய வேண்டும். சக்கையையும் அந் நீரிலேயே போட்டு விட வேண்டும். சில நிமிடங்களில் எட்டில் ஒருபங்காக வற்றிவிடும். பின் அடுப்பிலிருந்து சட்டியை இறக்கி நீரை வடி கட்டி ஆறவைக்க வேண்டும். இளஞ்சூடாக இருக்கும் பொழுது நோய் ஏற்பட்டவர் அம் மருந்தை அருந்த வேண்டும். மொத்தத்தில் 3 பொழுது இம் மருந்தை தயாரித்து உண்டால் நோய் உடனடியாக குணம் அடகிறது. இம் மருந்தை சாப்பிட்ட பின் உணவில் உப்போ உறைப்போ கண்டிப்பாக ஒரு நாள் முழுவதும் சேர்க்கக் கூடாது. இனிப்பையும் குறைக்க வேண்டும்.

மருந்து சாப்பிடும் முறை

மேற்கூறிய குடிநீரை ஒரு நாளில் மாலை 6 மணிக்கு ஒரு தடவை சாப்பிட்டால் அடுத்த நாள் காலை 6 மணிக்கு 2 ஆவது தடவை மருந்தை அருந்த வேண்டும்.
அன்று மாலை 6 மணிக்கு 3 ஆம் வேளை மருந்தை அருந்த வேண்டும். அன்று முழுவதும் உப்பில்லா அரிசிக் கஞ்சி மட்டும் சாப்பிடுவது நல்லது. அடுத்த நாள் காலை சிறிதளவு பசுவெண்ணெயை தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.

நீண்ட நாள் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நோயாளிகள் ஒரு நாள் விட்டு மீண்டும் 3 பொழுது மருந்தைச் சாப்பிடுவது நல்லது. சீரகத்தை கையாந் தரைச் சாற்றில் ஊற வைத்து உலர்த்தி தூளாக்கி அத் தூளில் 4 கிராமை எடுத்து அதனுடன் சர்க்கரை 2 கிராம், சுக்குப் பொடி 2 கிராம் கலந்து தினம் இரு வேளை கொடுக்கலாம்.

புதினாப் பூண்டை உலர்த்தி குடி நீரிட்டுப் பருகலாம்.

புளியங்கொழுந்து, சீரகம் சம எடை சேர்த்து அரைத்து பாக்களவு காலை, மாலை இரு வேளை ஆட்டுப் பாலில் கலக்கி 3 தினங்கள் சாப்பிடக் குணமாகும்.

அதிமதுரம், முட்சங்கன் வேர்ப்பட்டை இவ்விரண்டையும் சம எடை எடுத்து பழச் சாறு விட்டு அரைத்து தேற்றான் கொட்டைப் பிரமாணம் பசுப்பாலில் கலந்து தினம் இரு வேளை கொடுக்கலாம்.

மஞ்சட்காமாலை கஷாயம்

கரிசலாங்கண்ணி வேர், வெள்ளை மிளகு, சிறு நெருஞ்சிவேர், சீரகம், சிறுகீரை வேர், வில்வவேர், கீழாநெல்லி வேர், பேய்ப்புடல், சோம்பு வகைக்கு 5 கி. அளவு எடுத்து வெள்ளை மிளகு, சீரகம் என்பவற்றைத் தனியாகத் தட்டியும், மற்றவற்றை நசித்தும் ஒன்றாக ஒரு சட்டியில் இட்டு 500 மி.லீற்.நீர் விட்டு நன்றாக காய்ச்சி கொதிக்க வைத்து ஆறிய பின் வடிகட்டி அதில் வேளைக்கு 50 மி.லீ. வீதம் ஒரு நாளைக்கு காலை, பகல், மாலை என மூன்று வேளையாக தொடர்ந்து அருந்தி வர படிப்படியாக குணமாகும். மஞ்சட் காமாலை முற்றிவிட்டால் மஞ்சள் கரிசலாங்கண்ணிச் சாறு எடுத்து முதலாம் நாள் கால் அவுன்ஸ் அருந்தவும். அடுத்த நாள் அரை அவுன்ஸ் என தினசரி கால் அவுன்ஸ் வீதம் கூட்டி தொடர்ந்து 10 நாட்களுக்கு அருந்தவும். 11 ஆவது நாளில் இருந்து ஒவ்வொரு நாளும் கால் அவுன்ஸ் ஆக குறைத்து மேலும் 10 நாட்களுக்கு அருந்தவும். இந்த 20 நாட்களும் உப்பு, புளி, காரம், எண்ணெய் ஆகியவற்றை நீக்கிச் சாப்பிட வேண்டும்.

முள்ளங்கி இலையை இடித்துச் சாறு பிழிந்து வடிகட்ட வேண்டும். அதில் சர்க்கரை சிறிது சேர்த்து 200 மி.லீ. வீதம் ஒரு வார காலம் அருந்தினால் மஞ்சட் காமாலை குணமாகும்.

உணவு

உப்பில்லா பத்திய உணவு உண்ண வேண்டும். புளி, உப்பு நீக்கிய கஞ்சி வகை நல்லது. இரு முறை வடித்த சோறு கொடுக்கலாம். எண்ணெய், நெய், வெண்ணெய் முதலிய கொழுப்புப் பொருட்களை நீக்க வேண்டும். தாளிப்பு இல்லாத காய்கறிகள், இளம் பிஞ்சுகள், கீரைவகைகள், பழங்கள், மோர், வெள்ளாட்டுப் பால், பசுப்பால் முதலியன சேர்க்கலாம். புகைபிடித்தல், மதுபானம் அருந்துதல் அறவே கூடாது.

மருந்துகளை பாலில் கலந்து சாப்பிட்டால் பால்சாதம் சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம்.

மருந்தை தயிரில் கலந்து சாப்பிட்டால் தயிர் சாதம் உப்பில்லாமல் சாப்பிட வேண்டும். தினசரி குறைந்தது 2 இளநீர் அருந்தலாம். இரவு உணவு அவசியம். அரை வயிறு சாப்பிட்டால் போதுமானது. போதியளவு ஓய்வு அவசியம்.

வைத்திய கலாநிதி திலகேஸ்வரி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 17, 2010 10:20 pm

வைத்திய கலாநிதி திலகேஸ்வரி

மஞ்சள் காமாலைக்கு இலகு வைத்தியம் 56667



மஞ்சள் காமாலைக்கு இலகு வைத்தியம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக