புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Manimegala | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சினிமாவை பற்றிய சில செய்திகள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
பரத் போட்ட பிரேக்
பம்பரமாக சுழன்றுக் கொண்டிருக்க வேண்டிய நேரம், பாஸ்போர்ட்டை எடுத்துக் கொண்டு ஹாங்காங் சென்றிருக்கிறார் பரத். எதற்கு?
கோடை வந்துவிட்டதால் குளுகுளு ஏரியாவுக்கு வண்டியேறுவதை ஒரு பழக்கமாக கொண்டிருக்கிறார் பரத். இந்தமுறை அவர் சென்றிருப்பது ஹாங்காங். இந்த திடீர் பயணத்தால் அப்செட்டில் இருக்கிறாராம் பேரரசு.
திருத்தணி படத்தை முடித்து திரைக்கு கொண்டுவரும் அவரது எண்ணத்துக்கு ஸ்பீடு பிரேக் போட்டிருக்கிறது பரத்தின் ஹாங்காங் ட்ரிப். பேரரசு திருத்தணி படத்தை இயக்குவதுடன் இசையமைக்கும் வேலையையும் எடுத்துக் கொண்டிருக்கிறார். இவரது இசையில் விஜய டி.ஆர். பாடியிருக்கும் பாடல் திருத்தணியின் ஹைலைட்களில் ஒன்று.
இன்னும் ஓரிரு மாதங்களில் திருத்தணி திரைக்கு வருகிறது.
பம்பரமாக சுழன்றுக் கொண்டிருக்க வேண்டிய நேரம், பாஸ்போர்ட்டை எடுத்துக் கொண்டு ஹாங்காங் சென்றிருக்கிறார் பரத். எதற்கு?
கோடை வந்துவிட்டதால் குளுகுளு ஏரியாவுக்கு வண்டியேறுவதை ஒரு பழக்கமாக கொண்டிருக்கிறார் பரத். இந்தமுறை அவர் சென்றிருப்பது ஹாங்காங். இந்த திடீர் பயணத்தால் அப்செட்டில் இருக்கிறாராம் பேரரசு.
திருத்தணி படத்தை முடித்து திரைக்கு கொண்டுவரும் அவரது எண்ணத்துக்கு ஸ்பீடு பிரேக் போட்டிருக்கிறது பரத்தின் ஹாங்காங் ட்ரிப். பேரரசு திருத்தணி படத்தை இயக்குவதுடன் இசையமைக்கும் வேலையையும் எடுத்துக் கொண்டிருக்கிறார். இவரது இசையில் விஜய டி.ஆர். பாடியிருக்கும் பாடல் திருத்தணியின் ஹைலைட்களில் ஒன்று.
இன்னும் ஓரிரு மாதங்களில் திருத்தணி திரைக்கு வருகிறது.
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ஈழத்தமிழரின் தமிழ்ப்படம்
கனடியவாழ் ஈழத் தமிழர் சுரேஷ் ஜோக்கிம் 12 நாட்களில் தயாரித்து, நடித்த சிவப்பு மழை என்ற திரைப்படம் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
கின்னஸ் புத்தக நிறுவனத்திடமிருந்து இதற்கான சான்றிதழ் சமீபத்தில் சிவப்பு மழை குழுவினருக்கு அனுப்பப்பட்டது.
இப்படத்தில், சுரேஷ் ஜோக்கிம், மீரா ஜாஸ்மின், இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, மக்கள் தொடர்பாளர் நெல்லை சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார். படத்திற்கு தேவா இசையமைத்துள்ளார்
1990ம் ஆண்டு பிரிட்டிஷ் நிறுவனம் ஒன்று 13 நாள்களில் ஒரு படத்தை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தது. ஆனால் சிவப்பு மழை படம் 12 நாட்களிலேயே அனைத்துப் பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகிவிட்டது. இதன் மூலம் இந்தப் படம் பழைய சாதனையை முறியடித்துள்ளது.
ஈழப் போராட்டப் பின்னணியில் இந்தப் படம் உருவாக்கப்பட்டதால், இந்தியாவில், சென்சார் சான்றிதழ் பெறுவதில் பல போராட்டங்களை சிவப்பு மழை திரைப்படம் சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கனடியவாழ் ஈழத் தமிழர் சுரேஷ் ஜோக்கிம் 12 நாட்களில் தயாரித்து, நடித்த சிவப்பு மழை என்ற திரைப்படம் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
கின்னஸ் புத்தக நிறுவனத்திடமிருந்து இதற்கான சான்றிதழ் சமீபத்தில் சிவப்பு மழை குழுவினருக்கு அனுப்பப்பட்டது.
இப்படத்தில், சுரேஷ் ஜோக்கிம், மீரா ஜாஸ்மின், இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, மக்கள் தொடர்பாளர் நெல்லை சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார். படத்திற்கு தேவா இசையமைத்துள்ளார்
1990ம் ஆண்டு பிரிட்டிஷ் நிறுவனம் ஒன்று 13 நாள்களில் ஒரு படத்தை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தது. ஆனால் சிவப்பு மழை படம் 12 நாட்களிலேயே அனைத்துப் பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகிவிட்டது. இதன் மூலம் இந்தப் படம் பழைய சாதனையை முறியடித்துள்ளது.
ஈழப் போராட்டப் பின்னணியில் இந்தப் படம் உருவாக்கப்பட்டதால், இந்தியாவில், சென்சார் சான்றிதழ் பெறுவதில் பல போராட்டங்களை சிவப்பு மழை திரைப்படம் சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்த ரசிகர்களுக்கு நடிகை தமன்னா கண்டனம் தெரிவித்துள்ளார். கேடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை தமன்னா, கல்லூரி, கண்டேன் காதலை, பையா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக திகழ்ந்து வரும் தமன்னாவுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. அகில இந்திய தங்கப்பதுமை தமன்னா ரசிகர் மன்றம் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் அந்த ரசிகர் மன்றம் விரைவில் மற்ற மாவட்டங்களிலும் தொடங்கப்பட இருப்பதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் தூத்துக்குடியில் பையா படம் ரீலிஸ் ஆன தியேட்டரில் தமன்னாவுக்கு 50 அடி உயர கட்-அவுட் வைத்த ரசிகர்கள், கட்-அவுட்டுக்கு பால் அபிஷேகமும் செய்து அசத்தியுள்ளனர்.
இதுபற்றி கேள்விப்பட்ட தமன்னா, தனது கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்த ரசிகர்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், தூத்துக்குடியில் எனது பெயரில் ரசிகர் மன்றம் தொடங்கி இருப்பது பற்றி என் கவனத்துக்கு இதுவரை வரவில்லை. என் கட்-அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்ததாக கேள்விப்பட்டேன். கட்-அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. கடவுளுக்கு இணையாக இதுபோல் பால் அபிஷேகம் செய்யும் காரியங்களை நான் எப்போதும் ஊக்கப்படுத்த மாட்டேன், என்று கூறியுள்ளார்.
ஹீரோ, ஹீரோயின்களின் கட்-அவுட்களுக்கு பால் அபிஷேகம், நடிகைகளுக்கு கோயில் என ரசிகர்கள் தங்களது பாசத்தை காலம் காலமாக காட்டி வந்தாலும் அதனை பெரும்பாலான நட்சத்திரங்கள் கண்டித்ததில்லை. ஆனால், இதுபோன்ற காரியங்கள் தவறு, அதனை நான் ஒருபோதும் ஊக்குவிக்க மாட்டேன் என்று தமன்னா கூறியிருப்பது அவரது பெருந்தன்மையையே காட்டுகிறது
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
இந்தப் பக்கம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் சூப்பர் ஹிட் படத் தலைப்புகளை தனுஷ் ரிசர்வ் செய்துவிட, அந்தப் பக்கம் புரட்சித் தலைவரின் படப் பெயர்களை விஜய் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்.
அவர் அடுத்த நடிக்கும் படத்துக்கு காவல்காரன் என்ற பெயரைச் சூட்டியுள்ளார். படப்பிடிப்பும் இன்று ஆரம்பித்துள்ளது.
குண்டடிபட்டு பேச முடியாமல் மருத்துவமனையிலிருந்த எம்ஜிஆர் மீண்டும் வருவாரா, படங்கள் நடிப்பாரா என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் விரைவில் குணமடைந்து முன்னிலும் வேகத்தோடு நடித்துக் கொடுத்த படம் காவல்காரன். பெரிய ஹிட்!
இந்தத் தலைப்பைத்தான் விஜய் தனது 51வது படத்துக்குப் பயன்படுத்தியுள்ளார்.
ஏற்கெனவே வேட்டைக்காரன் என்ற தலைப்பைப் பயன்படுத்தினார் விஜய். உரிமைக்குரல், மீனவ நண்பன், எங்கள் தங்கம் போன்ற படங்களின் பெயர்களையும் பதிவு செய்து வைத்துள்ளனர் விஜய்க்காக.
காவல்காரன் படத் தலைப்புக்காக சத்யா மூவீஸாருடன் பேசி அனுமதியும் வாங்கி விட்டனராம்.
மலையாளத்தில் வெளியான பாடிகார்டு படத்தின் தமிழாக்கம்தான் இந்த காவல்காரன். விஜய்க்கு இதில் ஜோடி அசின். இருவரும் இணையும் மூன்றாவது படம் இது.
வடிவேலு படம் முழுக்க விஜய்யுடன் வருகிறார். காரணம் அவருக்கு விஜய்யைக் கண்காணிக்கும் வேடமாம்!
ராஜ்கிரண் முதல் முறையாக விஜய்யுடன் நடிக்கிறார். படத்தில் இவரது மகளான அசினுக்குதான் பாடிகார்டாக வருகிறார் விஜய். மீதிக் கதையும் காட்சிகளும் உங்களுக்கே தெரிகிறதல்லவா...!
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
நோ நான்சென்ஸ் நடிகர்கள் என்று இரண்டு பேரை குறிப்பிட்டார் பிரகாஷ்ராஜ். ஒருவர் பிருத்விராஜ், இன்னொருவர் பிரசன்னா. எந்த வேடம் கொடுத்தாலும் மீட்டருக்கு மேலோ, கீழோ நடிக்காத ஒழுங்கு இவர்கள் இருவருக்கும் உண்டு.
மலையாளத்தில் பிருத்விராஜின் கொடி உயரப் பறக்கிறது. இவரது நடிப்பில் வெளிவந்திருக்கும் தாந்தோணி படம்தான் இப்போது மலையாளத்தின் சூப்பர்ஹிட். ஆனால், பிரசன்னா?
பிருத்விராஜ் அளவுக்கு நல்ல படங்கள் தமிழில் பிரசன்னாவுக்கு அமையவில்லை. இதன் காரணமாக சில முடிவுகள் எடுத்திருக்கிறறார்.
நல்ல கதையம்சம் உள்ள படத்தில் மட்டுமே நடிப்பது என்பது அதில் ஒன்று. தற்போது மிஷ்கின் உதவியாளர் இயக்கும் முரண் படத்தில் நடிக்கிறார். பிரசன்னா எதிர்பார்த்த எல்லா அம்சங்களும் இந்தப் படத்தில் இருக்கிறதாம். அதனால் முரண் முடிந்த பிறகே அடுத்தப் படம் என தீர்மானித்துள்ளார்.
மூன்றாவது முடிவு, கௌரவ வேடங்களில் இனி நடிப்பதில்லை. கோவாவுக்குப் பிறகு எடுத்த முடிவாம் இது. ஹீரோக்களுக்கு பஞ்சம் என்று புலம்பும் இயக்குனர்கள் இந்த நல்ல நடிகரை ஏன் ஒதுக்குகிறார்கள் என்பதுதான் புரியாத புதிர்.
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
ஆண்ட்ரியா திரைத்துறையில் நுழைந்தது பாடகியாக. கௌதம் மேனனின் கண்களுக்கு அவர் ஒரு நடிகையாகத் தெரிய, பச்சைக்கிளி முத்துச்சரத்தில் ஹீரோயினாக கிடைத்தது புரமோஷன். இப்போது அவர் பாடலாசிரியரும் கூட.
மதராசப்பட்டினம் படத்தில் நா.முத்துக்குமார் எழுதிய தமிழ்ப் பாடலை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார் ஆண்ட்ரியா. மதராசப்பட்டினத்தின் ஹீரோயின் ஆங்கில நடிகை என்பதால் பாடல் ஆங்கிலத்திலும் வருகிறது.
இத்துடன் முடியவில்லை, ஆண்ட்ரியாவின் அவதாரங்கள். விரைவில் ஒரு படத்தையும் இயக்கப் போகிறார். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் செல்வராகவனிடம் உதவி இயக்குனர் ரேஞ்சுக்கு பணியாற்றினாராம். அதில் வந்த தைரியம்தான் இந்த படம் இயக்கும் ஐடியாவாம்.
தனது முதல் படம் குழந்தைகளை பற்றியதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார் இந்த அழகான நடிகை. சிறப்பு ஆலோசகர் யார், செல்வராகவனா?
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
புதிதாக உருவாகி வரும் ஒரு படத்தில் நடிகர் நாசர் பிரதமர் வேடத்தில் நடிக்கப்போகிறார். மம்முட்டி - அர்ஜூன் இணைந்து நடிக்கும் புதிய படம் வந்தேமாதரம். இப்படத்தில் மம்முட்டி ஜோடியாக சினேகா நடிக்கிறார். அறுவடை என்ற பெயரில்தான் இப்படத்தின் சூட்டிங் தொடங்கப்பட்டது. பின்னர் என்ன காரணத்தினாலோ படத்தின் பெயர் வந்தே மாதரம் என மாற்றப்பட்டது.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டு விட்ட நிலையில், முக்கிய காட்சிகள் சிலவற்றை எடுக்க தாமதமானதால் படத்தை திரைக்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. வந்தேமாதரம் படத்தில் இடம்பெறும் கேரக்டர்களில் முக்கியமானது பிரதமர் கேரக்டர். இந்த கேரக்டரில் நடிக்க பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனை கேட்டிருந்தனர். தேதி ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டதால் சூட்டிங்கை முடிக்க தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதமர் வேடத்தில் நடிக்க நடிகர் நாசரை ஒப்பந்தம் செய்துள்ளது வந்தேமாதரம் குழு. நடிப்பு தவிர திரைக்கதை, வசனம், பாடலாசிரியர், பாடகர் உள்ளிட்ட பல அவதாரங்களை எடுத்து வெற்றி பெற்றிருக்கும் நாசர், கலைமாமணி உள்ளிட்ட ஏராளமான பட்டங்களையும், விருதுகளையும் பெற்றிருக்கிறார். ஏற்கனவே ஒரு படத்தில் முதல்வர் வேடத்தில் நடித்திருக்கும் நாசர், இப்போது பிரதமர் வேடத்தில் நடிக்கப்போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
பாதுகாப்பான பின் சீட்டை விட, பரபரப்பான முன் சீட் விரும்பிகளுக்காக எடுக்கப்பட்ட பயணப்படம் இது. காதல், மோதல் என்று வழக்கமான ரூட்தான் என்றாலும், எப்படா க்ளைமாக்ஸ் வரும் என்ற சலிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனாலும் மீட்டருக்கு மேலே போட்டுக் கொடுக்கிற ஆசை வரணுமே, ம்ஹ¨ம்!
வழியிலே பார்த்த பெண்ணுக்காக குழியிலே கூட விழலாம் என்கிற அளவுக்கு லவ்வில் விழுந்து வைக்கிறார் கார்த்தி. அவரை மயக்கிய அந்த அழகான பெண் தமன்னா. அதென்னவோ தெரியவில்லை, இவர் போகும் இடத்துக்கெல்லாம் தமன்னாவும் வருகிறார் சொல்லி வைத்த மாதிரி. அப்படிதான் ரயில்வே ஸ்டேஷனிலும் ஒரு சந்திப்பு. உடன் வரும் ஆசாமி, கார்த்தியை டாக்சி டிரைவர் என்று நினைத்துக் கொண்டு "வண்டி சென்னை வருமா" என்று கேட்க, மனசுக்குள் ஹார்ன் அடிக்கிறது கார்த்திக்குக்கு. ஆனால், ஆசாமி எதற்காகவோ இறங்குகிற நேரம் பார்த்து "வண்டிய கிளப்பு" என்கிறார் தமன்னா. அவ்வளவுதான் விருட்டென்று 120 க்கு போகும் கார்த்தி, தமன்னாவின் விருப்பத்திற்கேற்ப மும்பை வரைக்கும் போகிறார் காரிலேயே. ஆசைப்பட்ட பெண் அருகில் இருந்தாலும், பயணம் என்னவோ பதற வைக்கிறது.
தமன்னாவை தேடி ஒரு கும்பலும், கார்த்தியை தேடி இன்னொரு கும்பலும் விரட்ட, இருவரையும் புஜபலத்தால் வென்று தமன்னாவை மும்பைக்கே கொண்டு சேர்க்கிறார் கார்த்தி. அப்போதும் கூட தன் காதலை சொல்லாத கார்த்தியிடம், எப்படி சேர்ந்தார் தமன்னா? முடிவு.
அவிழ்த்துவிட்ட காளையிடம், குடையை விரித்து காட்டிய மாதிரி ஒரு ஆக்ரோஷம் கார்த்தியிடம். அதே நேரத்தில் குணா கமல் மாதிரி தமன்னாவை காதலால் கசிந்துருகுவதும் அற்புதம். லிப்ட் கேட்கிற சாப்ஃட்வேர் ஆசாமியை வண்டியில் ஏற்றி, பின்பு காதலுக்கு வேட்டு வைப்பானோ என்று அஞ்சி நட்ட நடுவழியில் இறக்கிவிடுகிற காட்சியெல்லாம் கலகலப்பு. தமன்னாவுக்கு யார் மீதும் லவ் இல்லை என்கிற போது வண்டியின் ஸ்பீடா மீட்டர் எகிறுவதும், அடுத்த காட்சியிலேயே சொய்ங்ங் என்று கிழிறங்குவதுமாக கார்த்தியின் சேஷ்டைகளில் தியேட்டரை கலகலக்கிறது.
அவ்வப்போது வண்டியை நிறுத்தி இயற்கையை ரசிப்பதும், மழையில் நனைந்து ரசிகர்களை குளிர வைப்பதும்தான் தமன்னாவின் மெயின் நடிப்பாக இருக்கிறது. தேனும் தித்திப்பும் மாதிரி, இணைந்தே இருக்கிறது தமன்னாவும் கவர்ச்சியும். போதாதா? பேஸ்த் அடித்துப் போகிறது மொத்த தியேட்டரும்.
இடையிடையே வரும் தாதாக்களின் எபிசோடு, பல முறை ஷேவ் செய்யப்பட்ட பிளேடு. தமிழ்சினிமாவிலேயே தாதாக்கள் மாறி ரொம்ப வருஷம் ஆச்சுங்க சாரே... சண்டக்கோழி, ரன் என்று முந்தைய படங்களின் சாயலை விட முடியவில்லை லிங்குசாமியால். அவருக்கேயுரிய காதல் நகாசுகள் இந்த படத்தில் மிஸ்சிங். சண்டக்கோழியில் மீராஜாஸ்மினின் குறும்புகள் மறுபடியும் நினைவில் வந்து ஏங்க வைக்கிறதே சாமி...
பையனின் துள்ளாட்டம் யுவன்சங்கர் ராஜாவிடம்தான். பின்னணி இசை மிரட்டல் என்றால், பாடல்கள் எல்லாமே தாலாட்டு. அடடா மழை போன்ற மெலடிகளும், யுவனே பாடியிருக்கும் ஒரு சோகப்பாடலும் இந்த வருடத்தின் சூப்பர்ஹிட் வரிசையில்.
மயங்க வைத்த மற்றொருவர் ஒளிப்பதிவாளர் மதி. ஆக்ஷன் காட்சிகளில் அதிர வைக்கிற அதே கேமிரா, டூயட்டுகளில் அழகாகிவிடுகிறதே, அற்புதம். கார் சேசிங் காட்சிகளில் ஆங்கில படங்களை நினைவுபடுத்தியிருக்கிறார். எடிட்டர் ஆன்ட்டனியின் 'கட்டிங்'கும் கூட செம போதைதான்! விசாலமாக பயணிக்க முடியாமல் காருக்குள்ளேயே முடங்கிப் போனதால், பிருந்தாசாரதியின் பேனாவும் 'மூடி'யாகவே இருக்கிறது. கிடைத்த சந்தர்ப்பத்தில் அதையும் மீறி மனசுக்குள் 'இங்க்' தெளிக்கிறார் மனுஷன்.
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
புல்வெளிப் பனித்துளி,ப்ளம் கேக்,ஃபிரிட்ஜில் வைத்த
ஐஸ்க்ரீம்,செர்ரிப் பழம்.... "அடியே கொல்லுதே...'
என்று கொடிப்பிடித்து பாடத் தோன்றுகிறது.
ஷமீரா ரெட்டியைப் பார்த்தால்...
* அஜித்துடன் நடித்த அனுபவம் எப்படி?
சினிமா கேரியரில் மறக்க முடியாத நபர் அஜித். அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. ஷூட்டிங் ஸ்பாட்டில் மிகவும் சிம்பிளாக இருப்பார். அவரைப் பார்த்து நான் சில விஷயங்களைக் கற்றுக் கொண்டேன்.
""காற்றை நிறுத்திக் கேளு...'' பாடலுக்காக நிறைய டிப்ஸ் கொடுத்தார். இந்திய சினிமாவில் சிலருக்குத்தான் "மாஸ்' இருக்கிறது. அதில் முக்கியமான நபர் அஜித். ஸ்டைல், பேச்சு, குணம் என அனைத்திலும் அவர் தனித்து இருக்கிறார். என் வாழ்வில் சந்தித்த மிகவும் புத்துணர்ச்சியான மனிதர் அவர். அவருடன் நடிக்க இப்போதும் ஆவலாக இருக்கிறேன்.
* ரஜினியுடன் நடிக்க விருப்பமாமே?
யாருக்குத் தான் விருப்பம் இல்லை? "ரஜினியுடன் நடிக்க ஆசை இருக்கிறதா?' என சில தொலைக்காட்சி நிருபர்கள் என்னிடம் கேட்டனர். "இருக்கிறது' என்றேன். அது பலித்தால் அதுதான் என் திரை வாழ்க்கையின் முக்கியமான தருணம். இப்போது ரஜினி நடிக்கும் "எந்திரன்' திரைப்படத்தைப் பாலிவுட் திரையுலகம் பெரிதும் எதிர்பார்க்கிறது. நானும் அந்தப் படத்தை பார்க்க ஆசையாக இருக்கிறேன். படத்தின் ஸ்டில்களைப் பார்த்தேன் ரஜினியும், ஐஸ்வர்யாவும் புதுசாய் இருக்கிறார்கள்.
* நீங்கள் நடித்த ஹிந்தி படங்களை விட, மற்ற மொழிப் படங்கள்தான் ஹிட் ஆகுதாமே?
அப்பவே சொன்னாங்க... சென்னை மீடியாக்களிடம் ஜாக்கிரதையாக இருக்கணும்னு! இதுவரைக்கும் ஹிந்தியையும் சேர்த்து மூன்று மொழிகளில் நடித்திருக்கிறேன். இந்தியாவில் இன்னும் எத்தனையோ மொழிகள் இருக்கு. ஷமீராவின் சேவை எல்லா மொழிகளுக்கும் தேவை. இன்னும் சில மொழிகளில் நடித்த பிறகு இந்த "கம்ப்ளெய்ன்ட்'டைச் சொல்லுங்க.. அப்போது பதில் சொல்கிறேன்!
இப் போதைக்கு மூன்று மொழிகளில் நடிக்கிறேன். சில சினிமாக்கள் ஜெயிக்கின்றன. ஹிந்தி சினிமா நன்றாக இருக்கிறது. சில மொழி ரசிகர்களுக்கு நான் புதுசாகத் தெரிகிறேன். கொஞ்ச நாள் போனால் நானும் ரசிகர்களுக்குப் பழசாகத் தெரிவேன். இதுதானே உண்மை?!
* அடுத்து தமிழில் நடிப்பது எப்போது?
இப்போதுதான் அஜித்துடன் ஒரு பெரிய படத்தை முடித்திருக்கிறேன். அடுத்து கௌதம் சார் ஒரு படம் பண்ணலாம்னு சொல்லியிருக்கிறார். நிச்சயம் தமிழிலும் சாதிப்பேன். பாலிவுட்டில் இருப்பவர்கள் தமிழ் சினிமாவைப் பெரிதும் ரசிக்கிறார்கள், புகழ்கிறார்கள். அப்படிப்பட்ட தமிழ் சினிமாவில் நடிப்பது சந்தோஷம்தான்.
* பொது விழாக்களில் கவர்ச்சியான ஆடை அணிவதாக உங்கள் மீது ஒரு குற்றச்சாட்டு இருக்கிறதே?
சில மீடியாக்கள் அப்படிச் சொல்கின்றன. எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாகத்தான் டிரெஸ் அணிகிறேன். சினிமா, ஃபங்ஷன் எனப் பிரித்துப் பார்ப்பதில்லை. டிரெஸ் அணிவது என் தனிப்பட்ட விஷயம். அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவேண்டாம்.
* சரி, "லவ் கிராஃப்' எப்படியிருக்கிறது?
சினிமாவுக்கு அடுத்து என் லவ்... வீடியோ கேம்ஸ். தமிழுக்கு இப்போதுதான் வந்திருக்கிறேன். இந்தக் காதல் கிசுகிசுவெல்லாம் அடுத்த பேட்டியில் வெச்சுக்கலாமே.
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
நேற்று முன் தினம், சத்யம் தியேட்டரில் திரையிடப்பட்ட 'பையா' திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் சத்யம் தியேட்டரில் காண்பிக்கப்பட்டன.லிங்கு சாமி இயக்கத்தில், லுங்கியில் இருந்து பேண்ட், டீஷார்ட்டிற்கு அதிரடியாக மாறி நடித்துள்ள கார்த்தியின் மூன்றாவது திரைப்படமென்பதால், படத்தை பற்றி பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறது படக்குழு! மீடியாக்களிடம் அதிகம் பிடிபடாத சங்கீதாவும், விஜய்யுடன் இணைந்து வந்திருக்க, சிபிராஜ் ரேவதி தம்பதியினரும், வெங்கட் பிரபு, ப்ரேம்ஜி, ஜெய், பார்த்தீபன், விவேக் என பெரியவொரு நடிகர் பட்டாளமே படம் பார்க்க வந்திருந்தது.
'லிங்கு சாமி, கார்த்தி, தமனா அனைவரும் எனது நண்பர்கள் என்ற வகையில், இந்நிகழ்வுக்கு வந்ததில் பெருமைப்படுவதாக கூறினார் விஜய்! படத்தின் நட்சத்திர திறப்பு விழாவுக்கு, இப்படி அநேக நட்சத்திரங்கள் நேரடியாக வந்து கலந்துகொண்டதால் மகிழ்ச்சியில் இருக்கும் லிங்கு சாமி, நாளை முதல், இரயில்களிலும் பஸ்களிலும், இப்பட விளம்பரத்தினை மேற்கொள்ளப்போகிறாராம்!
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|