புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திண்ணை Poll_c10திண்ணை Poll_m10திண்ணை Poll_c10 
30 Posts - 55%
heezulia
திண்ணை Poll_c10திண்ணை Poll_m10திண்ணை Poll_c10 
21 Posts - 38%
Manimegala
திண்ணை Poll_c10திண்ணை Poll_m10திண்ணை Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
திண்ணை Poll_c10திண்ணை Poll_m10திண்ணை Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
திண்ணை Poll_c10திண்ணை Poll_m10திண்ணை Poll_c10 
1 Post - 2%
jairam
திண்ணை Poll_c10திண்ணை Poll_m10திண்ணை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திண்ணை Poll_c10திண்ணை Poll_m10திண்ணை Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
திண்ணை Poll_c10திண்ணை Poll_m10திண்ணை Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
திண்ணை Poll_c10திண்ணை Poll_m10திண்ணை Poll_c10 
12 Posts - 4%
prajai
திண்ணை Poll_c10திண்ணை Poll_m10திண்ணை Poll_c10 
9 Posts - 3%
Jenila
திண்ணை Poll_c10திண்ணை Poll_m10திண்ணை Poll_c10 
4 Posts - 1%
jairam
திண்ணை Poll_c10திண்ணை Poll_m10திண்ணை Poll_c10 
3 Posts - 1%
Rutu
திண்ணை Poll_c10திண்ணை Poll_m10திண்ணை Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
திண்ணை Poll_c10திண்ணை Poll_m10திண்ணை Poll_c10 
2 Posts - 1%
Guna.D
திண்ணை Poll_c10திண்ணை Poll_m10திண்ணை Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
திண்ணை Poll_c10திண்ணை Poll_m10திண்ணை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திண்ணை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 29, 2009 4:10 am

திண்ணை Dsc01710


கிராமத்து வீடுகளில் திண்ணையில்லா


வீடு தேடினாலும் கிடைக்காது


பெரிய திண்ணை, சின்ன


திண்ணை ஒட்டுத் திண்ணை.


பெரிய மருது, சின்ன மருதுவாய்


மகுடம் தரிக்காத மகாராஜாக்கள்


ஆண்டு சரித்திரம் படைத்தவை ;


ஒன்றா இரண்டா? எடுத்துச் சொல்ல மாளாது;


வெற்றிலைப் பெட்டியும், வெங்கலக்கூஜாவுமாக


திண்ணையில் உட்கார்ந்து


வயல்வரப்பு, மடவாய்ச்சண்டை,


அண்ணன் தம்பி குடும்பச் சண்டை


பாகப்பிரிவினை, பண்ணை ஆட்களுக்கு


பஞ்சாயத்து, கோர்ட்டுக்குப் போகாம


காசு வாங்காத நியாயமான கட்டைப்


பஞ்சாயத்து நடக்கும்;


பிள்ளைகள் நிறைந்து ஒரு திண்ணை,


பள்ளிக்கூடமாய் ஆகிவிடும்;


சீனா மாமாவீட்டுத் திண்ணையிலே


தினம் தினம் நடக்கும் சீட்டுக்கச்சேரி


சாயங்காலம் வரைக்கும் ஓயாது.



குருக்கள் வீட்டுத “திண்ணையிலே விபூதி மந்திரிக்க,


தாயத்து, குறிகேட்க வரும் கூட்டம்,



தெருக்குழந்தைகளுடன்,


கட்டம், சோழி பல்லாங்குழி, கல்லாங்காய்,


புளியங்கொட்டை ஆட்டம்


ஆடும் சங்கரி அத்தை திண்ணை,


நாட்டுச்சேதி, வீட்டுச்சேதி


அரசியல் சேதி, அக்குவேறு ஆனி


வேறாக அலச


தெருவே கூடும், நியூஸ்பேப்பர்


மாமா வீட்டுத் திண்ணை.



வீட்டுப் பசங்க ராத்திரி,


திண்ணையிலே படுக்கிறேன்.


காத்துவரலே"' உள்ளே எனச்


சொல்லி, தலையணைமேலே போர்வையால்


மூடித்தூங்குவது போல வைத்துவிட்டு


இரண்டாம் பிளே சினிமாவுக்குப்


போக உதவிய திண்ணை.


காற்றாட உட்கார்ந்து களிப்பும்


சிரிப்புமா இயற்கைக்காற்றை


அணு அணுவா ரசித்து,


மகிழ்ந்திருந்த திண்ணை.



அத்தனையும் விட்டுவிட்டு


நாம் பட்டணத்துப்


பகட்டுக்கு ஆசைப்பட்டு ஓடிவந்து,


அலங்காரமாய் நிற்கும்


அடுக்குமாடிக் கட்டடங்களில்


மூடிப்போட்ட ஜாடியாய்


அடைபட்டு மூச்சு முட்ட சாத்திய


கதவுக்குள், காற்றைகாசு


கொடுத்து ஃபேன், ஏஸி என வாங்கி


கரண்ட் போய், வியர்வை வெள்ளத்தில்


மூழ்கி, சோபாவில்


உட்கார்ந்தால், ஐயகோ! கூர்முள்ளாய்க்


குத்துது, குஷன் வைத்தசோபா!



கிராமத்துத் திண்ணை நினைவுகளில்


அலைபாயும் நெஞ்சில் ஏக்கம்வடியுது;


இனித் திண்ணையோடு வீடு கிடைக்குமா?


கிடைக்குமா?


- பிச்சை சுவாமிநாதன், தேதியூர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 29, 2009 4:16 am

திண்ணை

திண்ணை என்பது என்ன என்று கேட்டால் இன்றைய சமூகத்தில் பல பேருக்கு தெரிவதில்லை. திண்ணை என்பது என்ன அதன் பயன் என்ன, அதனுடைய சமுக பயன்பாடுகள் பற்றி பார்ப்போம்.

அமைப்பு:

திண்ணை என்பது ஒரு திண்டு போன்ற அமைப்பு. இது வீட்டின் முன் பகுதியில் பிரதான வாயில் அல்லது தலைவாசல் பகுதியில் உள்ள ஒரு திறந்த வெளி அமைப்பாகும். இது காலை தொங்கவிட்டு அமர்வதற்கு வசதியாக இருக்கும்.இன்னொருபுறம் சுவரில் சாய்ந்து இருப்பதற்கு வசதியாக இருக்கும். திண்ணையில் இருக்கும் தூண்கள் வீட்டின் கூரையை தாங்கி பிடிப்பதற்க்கு உதவியாக இருக்கும்.


பயன்:

பழங்காலத்தில் போக்குவரத்து இல்லாத காலகட்டத்தில் மக்கள் கால்நடையாக ஒரு இடத்தில் இருந்து வேறு இடங்களுக்கு செல்வது வழக்கம்.அந்த நேரங்களில் மக்கள் தங்களை கொஞ்சம் இளைப்பாற்றி கொள்ள வீதி ஓரங்களில் இருக்கும் எதாவது ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்து செல்வார்கள். அல்லது வீடிற்கு நெருக்கம் இல்லாத நபர்களை உபசரிபதர்க்கும் பயன்படுத்துவார்கள்.
காலையில் வேலைக்கு செல்லும் மக்கள் மாலையில் தங்களை இளைப்பாற்றி கொள்ளவும் தங்கள் உறவினர்களோடு பேசி மகிழவும் திண்ணையை பயன் படுத்துவார்கள்.

சமுகபயன்பாடுகள்:

பழங்காலத்தில் திண்ணையில் பள்ளி கூடங்களை நடத்தினார்கள்.ஊரில் உள்ள சிறார்கள் எதாவது ஒரு வீட்டின் திண்ணையில் கூடி குரு அதாவது ஆசிரியர்கள் சொல்லிகொடுக்கும் பாடங்களை படிப்பார்கள். இதை திண்ணை பள்ளிக்கூடம் என்பார்கள்.
ஊரில் எதாவது முக்கிய முடிவுகள் எடுக்கவேண்டும் என்றாலும் அல்லது குடும்பங்களுக்கு இடையே உள்ள பிரச்சனைகளை ஊரில் உள்ள ஒரு பெரியவரின் வீட்டு திண்ணையில் ஒன்று கூடி முடிவு எடுப்பார்கள்.

இன்றைய மக்களின் மனநிலையும் திண்ணை காலத்து மக்களின் மனநிலையும்:

இன்றைய காலத்து மக்கள் படிக்கிறார்கள் அறிவு வளர்கிறது நல்லதுதான் ஆனால் அவ்ர்கள் மனநிலை சுருங்குகிறது. அவர்கள் மனநிலை நான்,என் மனைவி குழந்தைகள் என ஒரு குறுகிய வட்டத்துக்குள் வந்து விடுகிறது.அவர்கள் தங்கள் கட்டும் வீடுகளுக்கு சுற்று சுவர் போடுகிறார்கள் கேட்டால் பாதுகாப்பாக இருக்கும் என்பார்கள் நல்லதுதான்.சுற்று சுவர் போட்டாலே என் அனுமதி இன்றி உள்ள வராதே என்று சொல்லாமல் சொல்வதுதான் பொருள்.இப்பொழுது எந்த வீட்டிலும் திண்ணை வைத்து கட்டுவதில்லை கேட்டால் பழங்காலத்தில் போக்குவரத்து இல்லை இப்பொழுதுதான் எல்லாம் இருக்கிறதே வழிபோக்கர்கள் இல்லையே என்று சொல்வார்கள். அல்லது திண்ணை இருந்தால் யாராவது வந்து வெட்டியாக பேசிக்கொண்டு இருப்பார்கள் என்பார்கள். ஆனால் அவர்கள் வீட்டில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்து நேரத்தை வீணடித்து கொண்டு இருப்பார்கள். தங்கள் உறவினர்களிடம் பேசுவதை விட தொலைபேசியில் வேறு யாரிடமாவது கதையடித்து கொண்டிருப்பார்கள். வெளியே சென்று பேசினால் யாரும் உதவி கேட்டுவிடுவார்களோ என்று பயப்படுகிறார்கள்.

ஆனால் திண்ணை வீட்டு காலத்து தங்கள் கட்டியிருக்கும் வீடு சிறிது என்றாலும் அதில் ஒரு பகுதியை மற்றவர்கள் பயன்படுத்தி கொள்ள திண்ணை வைத்து வீடு கட்டும் பெரிய மனதுகாரர்களாக இருந்தார்கள்.திண்ணையில் கூடி வெட்டியாக பேசி பிரச்சனைகளை இழுப்பார்கள் என்று ஒரு வாதம் இருந்தாலும், பொதுவாக திண்ணை என்பது உறவினர்கள் நண்பர்கள் ஒன்று கூடி பேசி மகிழ்ந்து தங்கள் துன்பங்களயும்,பிரச்சனைகளயும் தங்கள் மகிழ்ச்சிகளையும் அனுபவங்களயும் பகிர்ந்து கொள்ளும் உறவின் பாலமாகவே இருந்துள்ளது. இன்று கண்டு பிடிக்கப்படும் புதிய சிந்த்னனைகளும், புதிய அறிவியல் கண்டு பிடிப்புகளும் திண்ணை காலத்து ஞானிகளின் வாதங்களையும் அவர்களின் சிந்தனயும் மேற்கோள் காட்டியே கண்டு பிடிக்கபடுகிறது.திண்ணை காலத்து மக்களிடம் மூடநம்பிக்கை உண்டு என்னும் வாதம் இருந்தாலும் அவர்களின் உண்மையான அன்பான உபசரிப்பாலும் எதையும் எதிர்பார்க்காமல் செய்யும் உதவியினாலும் மூடநம்பிக்கை மறைந்துவிடுகிறது.

பொதுவாக திண்ணை என்பது உறவின் பாலமாகவும், அறிவின் பல்கலைகழகமகவும் இருந்துள்ளது.

குழந்தை மனது போல் இருக்க வேண்டும் என்றால் குழந்தை போல் நாம் ஆக வேண்டும் என்பது பொருள் அல்ல. அது போல நாம் திண்ணை வீடு கட்டவேண்டும் என்று கட்டாயம் இல்லை அந்த சாத்தியகூறுகளும் இல்லை. ஆனால் நமது மனநிலையை மாற்றிகொள்வோம். நமது குழந்தைகளையும் அதன் படி வளர்ப்போம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 29, 2009 4:17 am

திண்ணை Thinna10

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 29, 2009 4:18 am

திண்ணை Thinna11

http://makkalai-thedi.blogspot.com/2008/07/blog-post.html

avatar
Guest
Guest

PostGuest Mon Jun 29, 2009 7:16 am

சூப்பர் அ௫மையான கட்டுரை மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக