புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» Peak 8 CBD Gummies
by NewsVibes Today at 2:38 pm

» https://www.facebook.com/Peak8CBD/
by NewsVibes Today at 2:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» Sight Care Australia [Benefits] - Is Truth or Myth Science?
by KristLowry Today at 1:11 pm

» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் Poll_c10தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் Poll_m10தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் Poll_c10 
50 Posts - 48%
ayyasamy ram
தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் Poll_c10தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் Poll_m10தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் Poll_c10 
34 Posts - 33%
mohamed nizamudeen
தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் Poll_c10தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் Poll_m10தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் Poll_c10தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் Poll_m10தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் Poll_c10தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் Poll_m10தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் Poll_c10 
3 Posts - 3%
prajai
தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் Poll_c10தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் Poll_m10தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் Poll_c10தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் Poll_m10தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் Poll_c10 
2 Posts - 2%
manikavi
தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் Poll_c10தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் Poll_m10தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் Poll_c10 
2 Posts - 2%
NewsVibes
தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் Poll_c10தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் Poll_m10தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் Poll_c10 
2 Posts - 2%
Kavithas
தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் Poll_c10தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் Poll_m10தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் Poll_c10தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் Poll_m10தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் Poll_c10 
216 Posts - 42%
heezulia
தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் Poll_c10தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் Poll_m10தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் Poll_c10 
191 Posts - 37%
Dr.S.Soundarapandian
தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் Poll_c10தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் Poll_m10தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் Poll_c10தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் Poll_m10தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் Poll_c10 
18 Posts - 4%
sugumaran
தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் Poll_c10தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் Poll_m10தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் Poll_c10தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் Poll_m10தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் Poll_c10 
6 Posts - 1%
manikavi
தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் Poll_c10தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் Poll_m10தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் Poll_c10 
4 Posts - 1%
prajai
தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் Poll_c10தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் Poll_m10தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் Poll_c10 
4 Posts - 1%
Kavithas
தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் Poll_c10தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் Poll_m10தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் Poll_c10தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் Poll_m10தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 01, 2010 11:28 pm

இரண்டாயிரம் ஆண்டுகளுக்குக் குறையாத, தொடர்ச்சி குன்றாத தமிழ் இலக்கிய வரலாற்றுப் பின்னணியிலே ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றை வைத்துப் பார்க்கும் போது, ஈழத்துத் தமிழிலக்கிய வரலாறு மிகவும் தொய்ந்து காணப்படுகிறது. பொதுவான தமிழிலக்கிய வரலாறு பற்றிய நூல்கள் பல வெளிவந்துள்ளன. இலங்கைத் தமிழிலக்கிய வரலாறு என்று ஒரு நூல் இன்னும் வெளிவரவில்லை. இலங்கைத் தமிழிலக்கிய வரலாறு என்பது ஒரு தனிப்பாடநெறியாக அண்மைக் காலத்திலிருந்தே இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைகளில் இடம்பெற்று வருகின்றது. ஈழத்துத் தமிழிலக்கியம் பற்றி இதுவரை வெளிவந்துள்ள நூல்களிலே விதந்து குறிப்பிடக்கூடிய ஆக்கம் கலாநிதி க. செ. நடராசா வெளியிட்டுள்ள ஈழத்துத் தமிழிலக்கிய வளர்ச்சி (1982) என்பதாகும். இந்தநூல் 14ஆம் நூற்றாண்டு முதல் 18ஆம் நூற்றாண்டு வரையிலான வளர்ச்சியை எடுத்துக் காட்டுமுகத்தால், ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றின் தொடக்க காலத்தைக் கூறுவதாக ஆசிரியர் கூறியுள்ளார். வரலாற்றுப் பின்னணியின் அடிப்படையிலே நூலாசிரியர் நடராசாவின் கருத்துக்கள் சிலவற்றை ஆராய்வதே இவ் விரிவுரையின் நோக்கமாகும்.

நடராசா சோதிட, வைத்திய நூல்களின் தோற்றம் பற்றிக்கொண்ட பார்வை ஆழம்பெறவேண்டும். 14ஆம் நூற்றாண்டு வரையிலே தமிழ்க்கல்வெட்டுச் சான்று கொண்டு தமிழர் குடியிருப்புப் பற்றியும் தமிழ்ச் செய்யுள் மரபின் வழக்காறு பற்றியும் ஆசிரியர் கொண்ட கருத்து விரிவுபெறணேடும். ஈழத்துப் பூதந்தேவனாரை ஒதுக்கியமை கைவிடப்படவேண்டும்.

சோதிட, வைத்திய நூல்களின் தோற்றம்

நூலின் முடிவுரையிலே நடராசா தெரிவிக்கும் கருத்து வருமாறு:-

"ஆரம்பகால ஈழத் தமிழிலக்கியங்களை நோக்குமிடத்து, அவை வடக்குத் தெற்கு என்ற பாகுபாடின்றி, ஆங்காங்குள்ள அரசர்களின் ஆதரவிலேயே வளர்ந்திருக்கின்றன என்று காணலாம். அத்தகைய நூல்கள் சில, அவற்றைச் செய்வித்த அரசர் பெயராலே வழங்கிவருவதும் அதற்குச் சான்றாகும். அக்கால இலங்கை அரசர்கள் சோதிடத்திலும் வைத்தியத்திலும் முக்கிய கவனஞ் செலுத்தியிருக்கிறார்களென்பது அவர்கள் செய்வித்த ஆதிநூல்களைக் கொண்டு அறியலாம். அப்பொழுதிருந்த நிலைபேறற்ற அரசியல் நிலைமை அதற்குக் காரணமாயிருந்திருக்கலாம். எவ்வாறாயினும், சோதிடத்திலே ஈழத்தமிழ் மன்னருக்கும் சிங்கள அரசர்களுக்கும் 14ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டிருந்த பெருநம்பிக்கையை அவர்கள் செய்வித்த சோதிட நூல்கள் பிரதிபலிக்கின்றன".

14ஆம் நூற்றாண்டு அரசியல் வரலாற்றை நுணுகி நோக்கும்போது, மேற்படி பந்தியிலுள்ள கருத்துக்கள் சில தெளிவுறும். சிங்கள அரசின் வீழ்ச்சிக்காலம் 13ஆம் நூற்றாண்டிலேயே ஆரம்பித்துவிட்டது. சோழப்பேரரசருக்குப் பயந்த காலம் போய், கலிங்கமாகனுக்கும் மலாய்ச் சந்திரபானுவுக்கும் பாண்டியப் பேரரசருக்கும் பயப்பட்டு வாழவேண்டிய நிலையிலே தம்பதேனியாவிலிருந்த சிங்கள அரசு இருந்தது. வடஇலங்கை, பாண்டியப் பேரரசரின் தளபதியாக வந்த ஆரியச்சக்கரவர்த்தியினாலும் அவர் பரம்பரையாலும் ஆளப்பட்டு வந்தது (Pathmanathan, 1978). இந்தச் சூழ்நிலையிலே தம்பதேனியாவில் ஆட்சிபுரிந்த நான்காம் பராக்கிரமபாகுவுக்குச் சோதிடத்தில் அலாதி நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. சோதிடராக வந்து சேர்ந்த தமிழ்ப்புலவர் இலங்கையின் தென்முனையான தேவிநுவரையில் இருந்த பிரபல விஷ்ணு கோவிலின் அர்ச்சகரான போசராசர் என்பவர். தேவிநுவரை என்பதே தேனுவரையென்று மருவியிருக்கிறது. தேவனுடைய நகர் என்று பொருள்படும் தேவிநுவரைக்கு, அப்பெயர் ஏற்படக் காரணம் அங்கிருந்த விஷ்ணு கோவிலே. அக்கோவிற் பிராமணருக்கு நிலதானம் செய்ததைக் குறிக்கும் பராக்கிரமபாகுவின் "நாய்மன"த் தமிழ்க் கல்வெட்டு வெளிவந்துள்ளது. போர்த்துக்கேயர் காலத்திலே இக்கோயில் தரைமட்டமாகியது. பெருமாள் என்பது திருமாலுக்கு ஒரு நாமம். தேனுவரைப்பெருமாள் எனப்பட்ட போசராச பண்டிதர் ஒரு வீரவைணவர் என்பது சரசோதிமாலையின் கண்ணுள்ள அகச்சான்றுகளாற் புலப்படுகிறது. விநாயகருக்கும் விஷ்ணுவிற்கும் மட்டுமே கடவுள் வாழ்த்துப்பாடியுள்ளார்! விநாயகரைத் திருமாலின் மருமகனென்றே வணங்குகிறார்! சோதிடப்புலமை எய்தத் திருமாலை வணங்கவேண்டுமென்கிறார்.

சிங்களப் பௌத்த மன்னனாகக் கணிக்கப்படும் பராக்கிரமபாகுவின் அரசவையிலே சரசோதிமாலை எப்படி அரங்கேறியது என்ற வினா எழுகிறது. பாண்டியர்களோடு போராடி வந்த பராக்கிரமபாகு தமிழின விரோதியாகச் செயற்படவில்லை! தன்னைச் சோழமரபினன் என்று கருதியிருக்கிறான். சரசோதிமாலைப் பாயிரம் மேருமலையிலே புலி இலச்சினையைப் பொறித்தவனெனவும் ஆத்திமாலையைச் சூடியவனெனவும் சூரியவம்சத்தவனெனவும் சோழர் குலப்பெருமைகளுக்கு உரிமையுடையவனாக பராக்கிரமபாகுவைப் பாராட்டுகிறது. பாயிரம் அரங்கேறியபோது இதைக்கேட்டு மகிழும் நிலையிலே சிங்கள மன்னனுடைய அரசவை இருந்திருக்கிறது போசராசர் சிங்களமொழி தெரியாதவராக இருந்திருக்கக் கூடும். அவருடைய சோதிடப்புலமையை நூலுருவாக்கி வைக்க அரசன் விரும்பியிருந்திருக்கக்கூடும். இவர் தேனுவரையில் வாழ்ந்தமையால், அங்கும் அக்காலத்திலே தமிழ்க்குடிகள் இருந்தன என்று நடராசா முடிவு கட்டியுள்ளார். இன்று அப்பகுதியிலே தமிழ்க்குடிகள் இல்லை. திக்குவெலை என்ற முஸ்லீம் கிராமம் இருக்கிறது. தமிழில் ஆக்க இலக்கியம் படைக்கும் முஸ்லீம்கள் அங்கு வாழ்கின்றனர்.

சரசோதிமாலை அரங்கேறிய காலம் கி.பி.1310. இந்த ஆண்டு பாண்டியப்பேரரசு திடீரென வீழ்ச்சியடைகிறது. அரசுரிமைக்காக இரண்டு இளவரசர்களிடையே பாண்டிய நாட்டில் உள்நாட்டுப்போர் தொடங்குகிறது. வடஇந்தியாவிலிருந்து முஸ்லிம்களின் படையெடுப்பு தொடங்குகிறது. தமிழ்நாடெங்கும் பேரழிவு ஏற்படுகிறது. தமிழரசர்களால் தலைதூக்கவே முடியவில்லை. சில ஆண்டுகளுக்குள் மதுரையில் முஸ்லிம் ஆட்சி ஏற்படுகிறது. 14ஆம் நூற்றாண்டு இறுதிக்குள் தமிழ்நாடு விசயநகரப் பேரரசுக்குள் அடங்குகிறது. தமிழ்நாட்டிலே குழப்பம் மிகுந்தது! அன்னியர் கெடுபிடிகள் அதிகரித்தன. கோவில்கள் எரிக்கப்பட்டன. அல்லது கொள்ளையடிக்கப்பட்டன! நிலங்கள் பறிபோகின (Nilakanta Sastri, 1955). இந்தக்காலத்திலே, தமிழ்மக்கள், சிறப்பாக மேல்மட்டத்திலிருந்த தமிழ்மக்கள, நாட்டிலிருந்து வெளியேறி இலங்கையிலே குடிபுகுந்திருக்க வேண்டும். வடஇலங்கையிலிருந்த ஆரியச்சக்கரவர்த்தி பாண்டியப் பேரரசின் வீழ்ச்சியைப் பயன்படுத்தி தனியரசு செய்யத் தொடங்கியிருக்க வேண்டும.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 01, 2010 11:29 pm

ஆரியச் சக்கரவர்த்திகளின் சிம்மாசனப் பெயர்களான செகராசசேகரன், பரராசசேகரன் என்பன சோதிட நூலுக்கும் வைத்திய நூல்களுக்கும் வழங்கியமையின் முக்கியத்துவம் இன்னும் தேவையான அளவு அழுத்திக் கூறப்படவில்லை. ஆக்குவித்தோனாகிய அரசனுடைய பெயர் ஆக்கத்தின் பெயராக அமையும்போது அரசனுடைய பிரத்தியேகமான ஆதரவு அந்த ஆக்கத்துக்கு உண்டு என்பதே அதன் பொருள். சோழப்பெருமன்னர் காலத்தில் இந்த மரபு நிலவி வந்ததற்கு வீரசோழன் பெயரில் வீரசோழியம் எழுந்தது என்பது போன்ற பல சான்றுகள் காட்டலாம். 14ஆம் நூற்றாண்டு முற்பகுதியிலே செகராசசேகரமாலை என்ற சோதிடநூலை ஆக்குவித்த வரோதைய சிங்கையாரியனும் வாழ்ந்திருக்கிறான்.

செகராசகேரமாலையின் பதிப்பாசிரியராகிய இரகுநாதையர் (1942) இவ்விரு சோதிடநூல்களுக்குமுள்ள தொடர்புபற்றிப் பின்வருமாறு கூறியுள்ளார். "இவ்விரு நூலுள் ஒன்று மற்றொன்றைக் கண்டபின்னரே அதனிலுஞ் சிறப்பாக விளங்க வேண்டும் என்னும் நோக்கத்துடன் செய்யப்பட்டிருத்தல் வேண்டும்'. முந்திய படலங்களில் சரசோதிமாலையிற் சுருக்கமாகக் கூறப்பட்ட பல விஷயங்கள் செகராசசேகரமாலையில் விரிவாக விளக்கப்பட்டமையாலும், அதிற் கூறப்படாத சில விஷயங்கள் இதிற் புதிதாகச் சேர்க்கப்பட்டமையாலும் செகராசசேகரமாலையே பிந்திச் செய்யப்பட்டதென்பது தெளிவாகிறது."

சரசோதிமாலையைத் திருத்தியும் புதுக்கியும் செகராசசேகரமாலை வெகுவிரைவில் தோன்றிய சூழ்நிலை ஆராயப்பட வேண்டும். சரசோதிமாலையை அரங்கேற்றுவித்த பராக்கிரமபாகு நிம்மதியாக வாழவில்லை. பாண்டியப்பேரரசின் வீழ்ச்சி அவனுக்கு நன்மையாக முடியவில்லை. தனியரசு அமைத்துக்கொண்ட வரோதையசிங்கையாரியனின் தாக்குதல்களை அவனாலே சமாளிக்க முடியவில்லை. அவனுக்கு வேறு உட்பகையும் இருந்து வந்தது. தன்னுடைய தலைநகரை மலையரண்கள் நன்கு வாய்க்கப் பெற்ற குருநாகலுக்கு மாற்றிப் பார்த்தான். அம்மன்னன் சில ஆண்டுகளின் பின் படுகொலை செய்யப்பட்டான். அந்தச் சூழ்நிலையிலே, சரசோதிமாலையிலே மக்கள் நம்பிக்கை தளர்ந்திருக்கும்.

இந்தச் சந்தப்பர்த்திலே, இந்துவெளியின் வரலாற்றுக்கு முந்திய நாகரிகம் என்ற பெயரில் K.N. Dikshit (1973) என்பவர் அண்மைக் காலத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தினூடாக வெளியிட்ட நூலொன்றிற் காணப்படும் கருத்தொன்றை நோக்கலாம்:-

“The cities (of the Indus Valley Civilization) were inhabited by the intellectual class of people like Physicians and Astrologers.”

இந்துவெளியின் வரலாற்றுக்கு முந்திய நாகரிகம் திராவிடருக்குரியது என்ற கருத்து இன்று வலுப்பட்டு வருகிறது. அப்படியானால், கி.மு.2000, 3000 ஆண்டுகளிலே திராவிடர் வைத்தியர்களாகவும் சோதிடர்களாகவும் பிரபலம் பெற்று விளங்கினர். கி.பி. 14ஆம் நூற்றாண்டிலே, ஈழத்திலே தமிழ் நூல்கள் தோன்றத் தொடங்கியபோது வைத்தியநூல்களும் சோதிடநூல்களுமே முக்கியமானவையாகத் தோன்றுவது திராவிடப்பண்பாட்டுக்கு இயைபானதாகக் காணப்படுவது வியப்பாக இருக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து இலங்கையில் வந்து குடியேறிய மக்களுள் ஒரு பகுதியினருக்குச் சோதிடமும் வைத்தியமுமே தொழில்களாக இருந்திருக்கக்கூடும். சிங்களவர் இலங்கையிலே விசயன் தலைமையில் வந்து முதலிலே குடியேறினரெனக் கூறும் மகாவம்சம், அதே விசயன் காலத்திலேயே மதுரையிலிருந்து பல்வேறு வகைத் தொழிலாளர்களும் இலங்கையிலே குடியேறியதை உடன்படுகிறது. இலங்கையிலே எப்பொழுதும் செல்வாக்குப் பெற்று விளங்கிய பிராமணர்களுள்ளே தமிழ்ப் பிராமணர்களும் இருந்திருக்கக்கூடும். தமிழர்கள் இலங்கையிலே மிகநீண்டகாலமாகப் போர்வீரர்களாகவும் வியாபாரிகளாகவும் விளங்கியதற்குப் பல வரலாற்றுச் சான்றுகளுள்ளன. கி.பி.13, 14ஆம் நூற்றாண்டுகளிலிருந்து சோதிடம், வைத்தியம் முதலிய புதிய தொழில்களிலும் தமிழர்கள் இறங்குகின்றனர். இலங்கைத் தமிழர் வரலாற்றிலே (Social History) இது முக்கியமான மாற்றமாகும். செகராசசேகரமாலை அரசனுடைய பெயரால் அரசமுத்திரை குத்தப்பட்ட சோதிடமுறையை அறிமுகஞ்செய்து தொழிலைப் பாதுகாக்க எழுந்த நூல் என்று கூறலாம். முதலாவது நூல் சரசோதிமாலை என்று பெயர் பெற இரண்டாவது நூல் செகராசசேகரமாலை என்று பெயர் பெற்றுள்ளது. வடமொழிச் சோதிட முதனூலாசிரியர்களின் பெயர்கள் செகராசசேகரமாலையில் மட்டுமே கூறப்பட்டுள்ளன. நூலாசிரியராகிய சோமசன்மா திருமாலையும் வழிபடும் சைவசமயத்தவர் போலக் காணப்படுகிறார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 01, 2010 11:29 pm

செகராசசேகரமாலை தோன்றிய வரோதையசிங்கையாரியன் காலத்திலேயே செகராசசேகரம் என்ற வைத்திய நூலும் தோன்றியிருக்கிறது. சோதிடத்துக்கு ஒரு தராதரநூலைத் தர வரோதையன் முயன்றிருக்கிறான். செகராசசேகரம் என்ற வைத்திய நூலின் ஆசிரியர் பெயர் தெரியவரவில்லை. சரசோதிமாலைக்கு மூல வடநூலாசிரியர் பெயர் குறிப்பிடாதது போல, செகராசசேகரத்துக்கும் குறிப்பிடப்பட்டிருக்காது என்று கருதினேன். செகராசசேகரத்தின் மூல வடநூலாசிரியன் "வேதங்கடந்த மாமுனிவன்" என்று செகராசசேகரம் முதற் செய்யுள் கூறுவதாக நடராசா குறிப்பிட்டுள்ளார். "வேதங்கடந்த மாமுனிவன்" என்று எவருக்கும் பெயரில்லை. ஆயுள்வேத வைத்தியத்தின் தோற்றம் பற்றிய மரபு, சிறிதளவு இலக்கண அறிவு இவை இரண்டும் ஒன்று சேர இருந்தால் மர்மம் தெளிவாகும். சித்த வைத்தியத்தைச் சிவபெருமான் உபதேசித்தாரென்பது போல, பிரமதேவனே ஆயுள்வேதத்தை உபதேசித்தாரென்பது ஐதீகம். வேதங்களைத் தோற்றுவித்தவனும் பிரமனே என்பது வைதிக மரபு. எனவே "வேதங்கடந்த மாமுனிவன்" என்பது "வேதங்கள் தந்த மாமுனிவன்" என்று பிரித்துப் பொருள் கொள்ளப்பட்டுப் பிரமதேவனைக் குறிப்பதாகக் கொள்ளவேண்டும். முதனூல் ஒன்று இருக்கும்போது அதனைத் திருத்தியும் புதுக்கியும் வெளியிடுவது சுலபம்! புதிதாகத் தராதரமான முதனூலை ஆக்குவது சிரமம். வைத்தியநூல் ஆக்கத்திலே செகராசசேகரத்துக்குப்பின் பரராசசேகரம் தோன்ற வேண்டி ஏற்படுகிறது. நடராசாவின் கூற்று வருமாறு:-

"பரராசசேகரத்தைவிடச் செகராசசேகரம் காலத்தாற் சிறிது முற்பட்டதென்பதற்குச் சில ஆதாரங்களைக் காட்டலாம். செகராசசேகரத்தோடு நோக்குமிடத்துப் பரராசசேகரம் பாரிய நூலாகும். செகராசசேகரத்திற் சொல்லப்பட்டனவும் சொல்லப்படாத பலவும் பரராசசேகரத்திற் சொல்லப்படுகின்றன. செகராசசேகரம் செய்யப்பட்ட பின்னர் அதனைக் கண்ணுற்ற ஒருவரே செகராசசேகரத்தின் குறைபாடுகளை நோக்கிப் பரராசசேகரத்தைச் செய்திருக்க வேண்டும்."


பரராசசேகரம் அளவு பாரிய நூல் எதுவும் இலங்கைத் தமிழில் வேறு இல்லை! 12,000 செய்யுள்கள் இதில் இருந்தனவென்றால், இந்தியத் தமிழில் வேறு உண்டா என்பதும் ஆராய்ச்சிக்குரிய விடயமாகும். பரராசசேகரம் என்பது, எந்தச் சிங்கையாரியப்பரராசசேகரன் காலத்திலே பாடப்பட்டது என்பது தெரியவரவில்லை. 19ஆம் நூற்றாண்டிலே இராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் தொகுப்பித்த "சித்த வைத்திய சங்கிரக"மும் தஞ்சை மாராட்டிய மன்னன் இரண்டாம் சரபோஜி தொகுப்பித்த "சரபேந்திர வைத்திய முறைக"ளும் வைத்தியர்கள், புலவர்கள் பலரின் கூட்டு முயற்சிகளாக இருந்தது போல (Krishnan, 1984) பரராசசேகரம், ஆரியச்சக்கரவர்த்திகளின் அரசவையிலே கூட்டு முயற்சியாக இருந்திருக்கக்கூடும். மேலும் கவனிக்க வேண்டியது, இருநூல்களும் வடமொழி ஆயுள்வேத வைத்திய நூல்களின் தழுவல்களென்று பாயிரங்களிலேயே கூறப்பட்டிருக்கிறது. தமிழர்களுக்கு சிறப்பாக உரிய சித்த மருத்துவம் அக்காலத் தமிழர்களிடையே பரவியிருந்திருக்கவில்லை என்று கொள்ள வேண்டியிருக்கிறது. பரராசசேகரப் பாயிரம் தன்வந்திரிவாகடத்தின் வழிநூலாக, அந்நூல் ஆக்கப்பட்டதாகக் கூறுகிறது. ஆயுள்வேதவைத்திய முதனூலாசிரியர்களுள் நிபுணர் ஒருவர் தன்வந்திரி! இன்னொருவர் வாக்படர். வாக்படர் இயற்றியது வாகடம். வாகடம் என்ற காரணப்பெயர் பின்பு பாரம்பரிய வைத்திய நூல்களுக்கு பொதுப்பெயராகிறது. Historical Semantics என்ற வரலாற்றுச் சொற்பொருளாய்வியலில் Extension என்னும் பொதுப் பெயராக்கத்துக்கு இது நல்ல உதாரணம். சித்த வைத்திய நூல்கள் இயற்றிய பதினெண் சித்தர்களுள் தன்வந்திரியும் ஒருவராகச் சிலர் கூறுவர். ஒரு சித்தருக்கு அப்படிப் பெயர் இருந்திருந்தால், அவர் தமிழரான, பிறர் ஒருவராக இருந்திருக்கக்கூடும்.



பரராசசேகரம் என்ற அரசமுத்திரை குத்தப்பட்ட விரிவான வைத்திய நூல் எழுந்த பின், தமிழ் வைத்தியர் நாடு முழுவதும் சென்று வைத்தியம் செய்யத்தக்க நிலைமை உருவாகியிருக்க வேண்டும். கண்டியரசன் தேவிக்கு ஏற்பட்ட வயிற்று நோயை அங்குள்ள வைத்தியர்களாலே தீர்க்க முடியாது போக, ஆரியச்சக்கரவர்த்திகள் குலத்தவனான பரநிருபசிங்கனை அழைத்து தீர்த்ததாக யாழ்ப்பாணவைபவமாலை கூறுவது தமிழருடைய வைத்தியத் திறமை தமிழருக்கு மட்டும் பயன்படவில்லை என்பதைக் காட்டுகிறது. தமிழ்நாட்டு மன்னர்கள் எவரும் சோதிடம், வைத்தியம் என்னும் துறைகளிலே 19ஆம் நூற்றாண்டு வரையில் யாழ்ப்பாண மன்னர்கள் அளவு ஆர்வம் காட்டாதமை கவனிக்கத்தக்கது. சோதிடத்தின் மூன்று கூறுகளில் கணிதம் ஒரு கூறு. கணி என்ற சொல் பண்டைக்காலத்திலிருந்து சோதிடரைக் குறிக்க வழங்கிவந்துள்ளது. வைத்தியம் உயிரியல் விஞ்ஞானத்தோடு நெருங்கிய தொடர்புடையது. யாழ்ப்பாணத்தமிழர் இன்றும் போற்றி வரும் துறைகள் இவை. 19ஆம் நூற்றாண்டில் மேனாட்டு முறையிலமைந்த மருத்துவ, கணித, விஞ்ஞான நூல்கள் தமிழில் யாழ்ப்பாணத்தில் எழுந்த பின்னணி இதுவே. அறிவு இலக்கியத்தைப் பேணுவதில், யாழ்ப்பாணத்துக்கு எழுநூற்றாண்டுப் பாரம்பரியம் உண்டு. யாழ்ப்பாண மன்னர் காலத்திலே வட இந்தியக் கலைச் செல்வங்களை பேணிய கல்விப் பாரம்பரியம், 19ஆம் நூற்றாண்டிலிருந்து மேனாட்டுக் கலைச் செல்வங்களைப் பேணிவருகிறது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 01, 2010 11:30 pm


14ஆம் நூற்றாண்டு வரையிலான சாசனச்சான்றுகள்


நடராசாவின் நூலிற் காணப்படும் மேல்வரும் பகுதிகளும் கவனிக்கப்படவேண்டியன:-

"தமிழ் இலக்கிய மரபு கி.பி. 14ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே ஈழத்தில் உயர்ந்த நிலையில் இருந்தது என்பதனைக் கல்வெட்டுச் செய்யுட் சான்றுகள் காட்டி நிற்கும்."

"அனுராதபுரத்தின் வட பாகத்திலே'. நாலுநாட்டார் கல்வெட்டு இதனை வலியுறுத்துவதாகும்' இத்தகைய செய்யுள்வளம் கி.பி. 9ஆம் 10ஆம் நூற்றாண்டளவில் ஈழத்தே விருத்தியடைந்ததென்றால், அதற்குச் சில நூற்றாண்டுகளின் முன்னரே அங்கு தமிழ் இலக்கிய மரபு மலர்ச்சியுற்றிருக்க வேண்டும் என்பது தெளிவு. அவ்வாறே கி.பி. 14ஆம் நூற்றாண்டில் கோட்டகம என்னுமிடத்திற் பொறித்த' வெண்பாவின் சிறப்பும் ஈழத்துத் தமிழ் இலக்கிய மரபின் தொடர்ச்சியான வளர்ச்சியினை நிலை நாட்டும்."

"'ஆங்காங்கு வாழும் மக்களின் மொழியிலேயே கல்வெட்டுக்கள் பொறிக்கப்படுகின்றன. எனவே, கி.பி.14ஆம் நூற்றாண்டிற் கேகாலைப் பகுதியிலும் தமிழர்கள் அதிகமாக வாழ்ந்தனர் என்பது போதரும்."



நூலாசிரியர் கூற்றுக்கள் இரண்டு வகைகளிலே குன்றக்கூறலாக (Understatement) அமைந்துள்ளன. கல்வெட்டுச் செய்யுள்கள் சிலவற்றை எடுத்துக்காட்ட அவர் தவறியுள்ளார்! உரைநடையில் அமைந்துள்ள தமிழ்க்கல்வெட்டுக்கள் காணப்படும் இடங்களிலும் தமிழர்கள் அதிகமாக வாழ்ந்திருப்பர் என்பதனை அவர் உணர்ந்ததாகத் தெரியவில்லை.



நூலாசிரியர் எடுத்துக்காட்டிய செய்யுள்கள் இரண்டும் பலரும் பல இடங்களிலே எடுத்துக்காட்டியயிருப்பவை.



அனுராதபுரச் செய்யுள் (கி.பி. 9ஃ10 நூற்றாண்டு)


போதி நிழலமர்ந்த புண்ணியன்போ லெவ்வுயிர்க்குந்

தீதி வருள்சுரக்குஞ் சிந்தையா - னாதி

வருதன்மங் குன்றாத மாதவன்மாக் கோதை

யொருதர்ம பாலனுளன்



கோட்டகம (கேகாலை மாவட்ட)ச் செய்யுள் (கி.பி. 14ஆம் நூற்றாண்டு)

கங்கணம்வேற் கண்ணிணையாற் காட்டினார. காமர்வளைப்

பங்கயக்கை மேற்றிலதம் பாரித்தார் - பொங்கொலிநீர்ச்

சிங்கைநக ராரியனைச் சேராவனுரேசர்

தங்கள் மடமாதர் தாம்

அனுராதபுரச் செய்யுள் வணிக கணம் ஒன்று பௌத்த விகாரை எடுப்பித்ததைக் குறிக்கும் சாசனத்தில், பௌத்தப் பெரியாரொருவரைப் பாராட்டுவதாக அமைந்துள்ளது. கோட்டகமச் செய்யுள் யாழ்ப்பாண அரசின் படைகள் கேகாலை மாவட்டம் வரையிலே சென்று வெற்றியீட்டியதைக் குறிப்பிடுகிறது.



கி.பி.12ஆம் நூற்றாண்டுக்குரியதெனக் கொள்ளத்தக்க பதவியாக் கல்வெட்டிற் காணப்படும் இணைக்குறளாசிரியப்பாவையும் 12ஆம் நூற்றாண்டு இறுதி அல்லது 13ஆம் நூற்றாண்டுக்குரியதெனக் கொள்ளத்தக்க பண்டுவஸ்நுவரக் கல்வெட்டிற் காணப்படும் விருத்தப்பாவையும் நடராசா குறிக்கத்தவறியுள்ளார்.



பதவியாச்செய்யுள். (கி.பி.13ஆம் நூற்றாண்டு)

உத்தமர்தங் கோயில் வலகழி எனலும்

நித்தநியமம் நெறிவளர்

சித்தமுடன் சீரிளமை சேர்ந்த

பதியில் விளையாரம்ப பேரிளமையார்த்துகள்

போதா வாயிரங் கொண்டுரைப்பர் திரு

சூத்தமாக முயன்றான் முயன்ற திரு.



பண்டுவஸ்நுவர (குருணாகல் மாவட்ட)ச் செய்யுள. (கி.பி.13ஆம் நூற்றாண்டு)

தென்னிலங்கைக் கோன் பராக்கிரமபாகு நிச்சங்கமல்லற் கியாண்டஞ்சிற்

தினகரன் சுறவி வணைந்தவத்தையிலுத்திரட்டாதி யேழ்பக்கம்

பொன்னவன் தின நற்சாதயோகத்தில் ஊர்தரு போதி மாதவர்தம்

பொற்பமர் கோயில் முனிவராலயந்தேனறந் திகழ் சாலையுஞ் செயித்தம்

அன்னவை திகழ ஐவர்கண்டன் வனுபேரி இலங்கை அதிகாரி அலகுதபுயன்

தென்பராக்ரமன் மேனைச்செனெவி நாதன் திருப்பியரன்

மன்னிய சிறப்பில் மலிதருமழகாற் பராக்ரம அதிகாரிப் பிரிவுன வளர்தர

அமைத்தான் ஸ்ரீபுர நகருள் மதிமான் பஞ்சரன் மகிழ்ந்தே.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 01, 2010 11:31 pm

சைவக்கோவிலைப் பாடும் ஈழத்து இலக்கியங்களுள், இன்று கிடைக்கும் ஈழத்தவராற் பாடப்பட்ட மிகத் தொன்மையான செய்யுளாகப் பதவியாச் செய்யுள் காணப்படுகிறது. பௌத்த நிறுவனங்கள் சில நிறுவப்பட்டமையைக் கூறும் பண்டுவஸ்நுவரக் கல்வெட்டிலே சோதிடக் கலைச் சொற்கள் காணப்படுகின்றமை கவனிக்கத்தக்கது.

திருகோணமலை, வவுனியா, அனுராதபுரம் முதலிய மாவட்டங்களின் எல்லையிலே பதவியா அமைந்துள்ளது. சரசோதிமாலை அரங்கேறிய தம்பதேனியாவுக்கு அண்மையிலே பண்டுவஸ்நுவரை காணப்படுகிறது. இலங்கைத் தமிழ்க் கல்வெட்டுக்களிலே வெண்பா மட்டுமன்றி ஏனைய செய்யுள் வகைகளும் காணப்பட்டதை இந்த எடுத்துக்காட்டுகள் புலப்படுத்தியிருக்கும். சோழப்பெருமன்னர்கள் இலங்கையை ஆண்டகாலத்திலே பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் சிலவற்றிலே அம்மன்னர்களைப் பற்றிய மெய்க்கீர்த்திச் செய்யுள்களும் இடம்பெற்றுள்ளன. அவை தமிழ்நாட்டிலே ஆக்கப்பட்ட செய்யுள்களாதலால், ஈழத்தமிழ் இலக்கிய மரபு பற்றிய ஆராய்ச்சிக்கு அவை முக்கியமானவையல்ல என்று சிலர் கருதலாம். சோழப் பெருமன்னர்களுடைய மெய்க்கீர்த்திகள் இலங்கையின் வடகீழ்த் திசையிலேயே காணப்படுகின்றன. திருகோணமலை, பதவியா, பொலொன்னருவை என்னுமிடங்களிலேயே முதலாம் இராசராசனுடைய மெய்க்கீர்த்தியிலிருந்து அதிராசேந்திரனுடைய மெய்க்கீர்த்திவரை காணப்படுகின்றன. மெய்க்கீர்த்தியின் செல்வாக்கிலேயே கோணேசர் கல்வெட்டுத் தோன்றியிருக்க வேண்டும். "கல்வெட்டு" கிழக்கு மாகாணத்துக்குச் சிறப்பாக உரிய ஓர் இலக்கிய வகையாகப் பரிணமிக்கிறது. பண்டைக்காலத் தமிழர் பண்பாட்டின் ஒரு கூறாகிய நடுகல் வழிபாட்டின் எச்சசொச்சமாக, இறந்தவர் நினைவஞ்சலியாகப் பாடும் "கல்வெட்டு" வடமாகாணத்துக்கே சிறப்பாக உரியது. ஈழத்துக்கே சிறப்பாக உரிய இவ்விருவகைக் கல்வெட்டுகளில், கிழக்கு மாகாணக் கல்வெட்டுகள் பல்வேறு குழுக்களின் பெருமை கூறுவனவாக, வரலாற்றமிசம் பொருந்தியனவாக, நிலைபேறுடையனவாகக் காணப்படுகின்றன! வடமாகாணக் கல்வெட்டுகள் நிலைபேறற்றவையாகக் காணப்படுகின்றன.

கி.பி. 9ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி. 14ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்திலே, தமிழ்க் கல்வெட்டுகள் இலங்கையிலே காணப்படும் இடங்களைக் கொண்டு, தமிழர் எவ்வெப்பகுதிகளிலே தொகையாக வாழ்ந்தார்களென்று ஆராய்வது சுவையானது. தமிழ்க் கல்வெட்டுகள் கண்டு பிடிக்கப்படாத இடங்களில் தமிழர் குடியிருப்புகள் இருக்கவில்லை என்று முடிவுகட்ட முடியாது. கல்வெட்டுகள் காணப்படாததற்குப் பல காரணங்கள் இருக்கலாம். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த திருகோணமலை மாவட்டத்திலே வெவ்வேறு பகுதிகளிலும் பல தமிழ்ச் சாசனங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. தமிழர்கள் நீண்ட காலம் செல்வாக்காக வாழ்ந்த பிரதேசம் திருகோணமலை மாவட்டம் என்பதற்கு இது சான்று. மேற்குறிப்பிட்ட காலப்பகுதியிலே இலங்கையின் தலைநகர்கள் காணப்பட்ட வடமத்திய மாகாணத்தைச் சார்ந்த அனுராதபுரம், பொலொன்னருவை மாவட்டங்களிலும் வடமேல் மாகாணத்தைச் சாரந்த குருணாகல் மாவட்டத்திலும் பல தமிழ்க் கல்வெட்டுகளும் புத்தளம் மாவட்டத்தில் ஒரு தமிழ்க் கல்வெட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வடமாகாணத்தில், யாழ்ப்பாண மாவட்டத்திலும் மன்னார் மாவட்டத்திலும் தமிழ்கல்வெட்டுகள் வெளிப்பட்டுள்ளன. மத்திய மாகாணத்திலுள்ள மாத்தளை மாவட்டம், மேல்மாகாணத்திலுள்ள களுத்துறை மாவட்டம், தென்மாகாணத்திலுள்ள காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை மாவட்டங்கள் என்பனவற்றிலும் ஒவ்வொரு கல்வெட்டு கண்டுபிடித்து வெளியிடப்பட்டுள்ளது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 01, 2010 11:31 pm

ஈழத்துப் பூதந்தேவனார்



இலங்கைத் தமிழ் இலக்கியம் சங்ககாலத்திலிருந்து வளர்ந்து வருவதாகக் கொள்ளும் மரபு காணப்படுகிறது. வெவ்வேறு காரணங்களைக் காட்டி, தொல்காப்பியர், முரஞ்சியூர் முடிநாகராயர், அம்மூவனார் முதலியோர் ஈழத்தவரெனச் சிலர் காட்ட முனைந்தனராயினும் இன்று இவர்களுடைய பெயர்களை வற்புறுத்துவோர் இலரென்றே கூறலாம். ஈழத்துப் பூதந்தேவனாரின் பெயர் கணேசையருடைய புலவர் வரிசையிலே இடம்பெற்று இன்று பலரால் ஏற்கப்பட்டு வருகிறது.

ஈழத்துப் பூதந்தேவனாரை இலங்கை நாட்டின் முதற்புலவராக ஏன் ஏற்க முடியாதென நடராசாவும் கலாநிதி பூலோகசிங்கமும் சில காரணங்களைக் காட்டியுள்ளனர். நடராசா காட்டியுள்ள கருத்துகள் வருமாறு:-

"ஈழத்துப் பூதந்தேவனார்'. இலங்கையிற் பிறந்து வளர்ந்தவர் என்பதை நிரூபிக்கும்வரை, அவர் பாடல்களை ஈழத்தமிழிலக்கிய வரிசையில் இணைத்துக் கூறமுடியுமா என்பது சந்தேகமே. அப்புலவர் பெயருக்கிட்டுள்ள அடைமொழியாய "ஈழத்து" என்ற ஒரு சொல்லை மட்டுங்கொண்டு அவர் இலங்கையர் என்று சாதிப்பது தக்கதெனத் தோன்றவில்லை. ஈழவர் என்ற ஒரு வகுப்பினர் கேரளநாட்டிலும் வாழ்ந்தனர் என அறியப்படுகிறது. அவர் வாழ்பதியும் ஈழமென வழங்கப்பட்டிருத்தல் சாலும்."

கலாநிதி பூலோகசிங்கம் (1974) காட்டியுள்ள கருத்துகள் வருமாறு:-

"பூதன்றேவனார், ஈழத்துப் பூதன்றேவனார், மதுரை ஈழத்துப் பூதன்றேவனார் என்ற பெயர்களையுடையவர் மூவேந்தர் ஆட்சிக் காலத்திலே வாழ்ந்தமை குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு என்னும் தொகைநூல்களாற் புலனாகும். பூதன்றேவனார் இலங்கையைச் சேர்ந்தவரென்பதற்கு ஆதாரம் கிடைக்குமாறில்லை. எனவே அப்பெயரைத் தவிர்த்து நோக்குமிடத்து, ஏனைய இப்பெயர்களுக்கு உரியவர் ஒருவரா அல்லது இருவரா என்று துணிவதற்கில்லை. இருபெயரும் ஒருவரையே சுட்டுவதாக ஈழத்துத் தமிழ்ப்புலவர் சரிதம் (1939) கண்ட புன்னாலைக்கட்டுவன் மகாவித்துவான் சி.கணேசய்யர் (1878 - 1958) முதலானோர் கருதினர், அவர்கள் கொண்ட கருத்தினை ஆதரிக்கும் சான்றுகள் சுட்டுவதற்கில்லை."

"'.எனவே, இவ்விரு பெயர்களில் வரும் ஈழம் என்னுஞ் சொல் இலங்கை நாட்டினைத்தான் குறிப்பிடுகிறது என்று சித்தாந்தமாகக் கொள்ளத் தக்கதா என்பது சிந்திக்கத்தக்கது."

"இந்நிலையிலே ஈழத்துப் பூதன்றேவனார் இலங்கையிலே எந்தவூரினர் என்று துணியவேண்டியது அவசியமாகத் தெரியவில்லை. "கடல் கடந்த தமிழ்" என்ற கட்டுரையிலே (கல்கி, தீபாவளிமலர், 1960) சு. நடேசபிள்ளை பூதன் என்ற பெயர் யாழ்ப்பாணத்தில் இப்பொழுது வழங்கி வருவதாகும் என்று கூறியிருக்கிறார். இலங்கையிலே தமிழ் வழங்கும் வேறு பகுதிகளிலும் இப்பெயர் வழங்குவதை அவர் எக்காரணம் பற்றியோ சுட்டவில்லை."



ஈழமென்பது கேரளத்தில் ஒரு பகுதியாகலாம் என்பது நடராசாவின் ஊகம். ஈழவர் என்ற ஒரு வகுப்பினர் கேரள நாட்டிலும் வாழ்ந்தனர் என்று நடராசா இறந்த காலத்திற் கூறியிருக்கிறார். கேரளத்தில் இன்றும் வாழும் வகுப்பினர் அவர்கள். ஈழம் என்ற சொல்லுக்குக் "கள்" என்று ஒரு பொருள் உண்டு. தென்னை மரத்தில் இருந்து கள் இறக்கும் தொழில் செய்யும் வகுப்பினர் கேரளத்தில் ஈழவர் எனப்படுகின்றனர். இவ்வகுப்பினர் கேரள மாநிலம் முழுவதும் ஆங்காங்கு குடியிருக்கின்றனர். கேரளத்தின் ஒரு பகுதியிலிருந்து இவர்கள் மாநிலம் முழுவதும் பரவி வாழ்கின்றனர், என்று கொள்வதற்கு எவ்வித சான்றும் கிடைக்கவில்லை. ஒரே வகுப்பினர் என்று ஏற்றுக் கொள்ளப்படும் மக்கள் கேரளத்திலே இன்று இரு பெயர்களுடன் வாழுகின்றனர். கேரளத்தின் தென் பகுதியிலே ஈழவர் எனப்படுவோர், வடபகுதியிலே தீயர் எனப்படுகின்றனர் (V.I. Subramaniam, 1974). மலையாள மொழியிலே தீயர் என்பது தமிழிலே தீவார் என்பதற்கு நேரான சொல். கேரளத்திலே தென்னை மரத்தொழில் செய்வதற்காகத் தாம் வந்தேறிய குடிகள் என்று கூறிக்கொள்ளும் இவ்வகுப்பினர் ஈழத்திலிருந்து அல்லது தீவிலிருந்து வந்தவர்கள் என்று தம்முடைய தோற்றுவாயை விளக்குகின்றனர். ஈழம் என்பது ஒரு தீவு என்பது அவர்கள் நம்பிக்கை. ஈழவர் அல்லது தீயர் எனப்படுவோர் பல இலட்சம் மக்கட்தொகை கொண்ட வகுப்பினராகக் காணப்படுவதால், அவர்கள் இலங்கை போன்ற பெரியதீவு ஒன்றிலிருந்தே வந்திருக்க வேண்டும். எவ்வாறு நோக்கினும் கேரளத்தில் அவர்கள் வாழ்பதி ஈழமென வழங்கப்படவில்லையெனலாம்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 01, 2010 11:32 pm

ஈழம் என்னுஞ்சொல் இலங்கை நாட்டினைத்தான் குறிப்பிடுகின்றது என்று சித்தாந்தமாகக் கொள்ளத்தக்கதா என்று பூலோகசிங்கம் வினவியுள்ளார். இலங்கைக்கு வெளியில் ஊரோ நாடோ ஈழம் என வழங்கப்பட்டு வந்ததற்கு இதுவரையில் எந்தச்சான்றும் கிடைக்கவில்லை. இடைக்காலத் தமிழ்ச் சாசனங்களிலே, "சிங்களரீழமண்டலம்" என இலங்கை சிங்களரோடு தொடர்புபடுத்திச் சொல்லப்பட்டுள்ளமை மறுக்கமுடியாத சான்று. உதயணன் பெருங்கதையிலே "இலங்கையீழத்துக் கலந்தருசெப்பு" என்று காணப்படுவதனால், ஈழம் என்பது இலங்கையின் ஒரு பகுதியே என்றும் கொள்ளத் தோன்றுகிறது. கண்ணகி வழக்குரையிலே ஈழஞ்சுற்றியோடுதல் என்பது இலங்கையின் கிழக்குக் கரையைச் சுற்றியோடுதலைக் குறிக்கிறது. கிழக்கிலங்கையிலே செப்புத்தாதுப்பொருள் உள்ள இடமாகத் திருகோணமலை மாவட்டம் திகழ்கிறது. ஈழம் என்ற பெயர் திருகோணமலை, வடகிழக்கு இலங்கை, முழு இலங்கைத் தீவு மூன்றுக்குமே வழங்கியிருக்கலாம் போலத் தெரியவருகிறது. இன்றைய உலகிலும் மெக்சிக்கோ முதலிய பெயர்கள் தலைநகருக்கும் முழுநாட்டுக்கும் ஒன்றேயாய் விளங்குகின்றன.

வட இலங்கையைக் கைப்பற்றிய முதலாம் இராசராசசோழன் ஈழமண்டலத்தை வென்று விட்டதாகக் கூறியுள்ளான்! மெய்க்கீர்த்தியுடனான அவனுடைய சாசனங்கள் வடகிழக்கு இலங்கையிலுள்ள மாதோட்டம்இ பதவியாஇ திருகோணமலை ஆகிய இடங்களில் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. முழு இலங்கையையும் வெற்றிகொண்ட முதலாம் இராசேந்திரசோழன் "ஈழமண்டலம் முழுவதும்" வென்றுவிட்டதாகக் கூறியுள்ளான். அண்மையிலே, தஞ்சாவூர்த் தமிழ்ப்பல்கலைக்கழகம் வெளியிட்ட "தஞ்சை மராட்டியர் செப்பேடுகள் - 50" என்ற நூலிலே பதிப்பாசிரியர் செ. இராசுவும் துணைவேந்தர் வ.அய். சுப்பிரமணியமும் சில பிரச்சினைகளை முன் வைத்திருக்கிறார்கள். நல்லூர் மயிலைநாதர் உரையிலும் அவர் எடுத்துக்காட்டிய அகத்தியச் சூத்திரத்திலும் தமிழ்நாட்டைச் சூழவுள்ள நாடுகளாகச் சிங்களமும் ஈழமும் தனித்தனியே கூறப்பட்டுள்ளன. மயிலைநாதர் யாழ்ப்பாண அரசு வலிமை மிக்கு விளங்கிய கி.பி. 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவராகக் கொள்ளப்படுவதால், இலங்கையை இரண்டு அரசுகளாகக் கொண்டது பொருத்தமே. அகத்தியர் காலம் மிகத் தொன்மையானதென்ற கருத்தினை இக்கால அறிஞர் ஏற்பதில்லை. அகத்தியர் என்ற பெயர் வெவ்வேறு காலங்களில் வாழ்ந்த அறிஞர்களுக்கு வழங்கியிருக்கிறது என்பதே இன்றைய ஆராய்ச்சியாளர் முடிபு.

16, 17, 18ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த பல தமிழ்நாட்டுச் செப்பேடுகளிலே - சிவகங்கைப் பாண்டியன், இராமநாதபுரம் சேதுபதி, தஞ்சைநாயக்கர், தஞ்சைமராட்டியர் சாசனங்களிலே - யாழ்ப்பாணமும் ஈழமும் வேறுவேறாகக் கூறப்பட்டுள்ளனவென எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. சிங்களத்தின் இடத்தில் ஈழமும் ஈழத்தின் இடத்தில் யாழ்ப்பாணமும் கூறப்பட்டுள்ளனவாகத் தெரியவருகிறது. ஈழம் என்ற பெயருக்குச் சிறப்புரிமை திருகோணமலைப் பகுதிக்கே உரியதெனக் கொண்டால், சிக்கல் தீரும். யாழ்ப்பாண அரசிலே திருகோணமலை அடங்கியிருந்த காலத்திலே தமிழ் அரசு ஈழமெனப்பட்டது. திருகோணமலை கண்டியரசின் மேலாதிக்கத்துக்குட்பட்டிருந்தபோது, கண்டியரசே ஈழமெனப்பட்டிருக்கிறது.

கிறிஸ்தவ ஆண்டுத் தொடக்க காலத்துக்கு முன்பின்னாக, தமிழ்க் கல்வெட்டிலும் சங்க இலக்கியத்திலும் இடம்பெறும் ஈழம் என்ற சொல் இலங்கையைக் குறிப்பதாகவே, இதுவரை விளக்கப்பட்டு வருகிறது. மதுரைக்கு அண்மையிலுள்ள திருப்பரங்குன்றத்துத் தமிழ்ப் பிராமிக் கல்வெட்டிலே "ஈழக் குடும்பிகன்" என்று குறிப்பிடப்படுவது ஈழம் என்ற இடம் பரவலாகத் தெரிந்ததும், அண்மையிலுள்ளதுமாக இருந்திருக்க வேண்டும். பட்டினப்பாலையில், "ஈழத்துணவும் காழகத்தாக்கமும்" என வருவது காவிரிப்பூம்பட்டினத்திலே இறக்குமதியான பொருள்களைக் குறிக்கும் சந்தர்ப்பத்திலே காணப்படுகிறது. கடாரம் என்று இடைக்காலத்திலே பிரபலமான மலேசியப்பகுதி காழகமெனவும் ஈழமென்பது இலங்கையெனவும் இதுவரை கூறப்பட்டு வருகிற விளக்கம் பொருத்தமில்லை என்று கொள்வதானால், தக்க பிறிதொரு விளக்கம் முன்வைக்கப்பட வேண்டும்.

ஈழத்துப் பூதந்தேவனார் இலங்கையிற் பிறந்து வளர்ந்தவர் என்பது நிரூபிக்கப்பட வேண்டும் என்று நடராசா கூறுகிறார். இலங்கை சுதந்திரமடைந்ததும், இலங்கையில் ஆக்கப்பட்ட குடியுரிமைச் சட்டம் எனக்கு ஞாபகம் வருகிறது. பாட்டன் அல்லது தந்தை இலங்கையிலே பிறந்து வளர்ந்தவரென்பதை நிரூபித்தால் இலங்கைக் குடியுரிமை கிடைக்குமெனச் சட்டம் கூறியது. புpறப்பை முறைப்படி பதியும் வழக்கம் மிகவும் அண்மைக்காலம் வரையிலே பலரால் பின்பற்றப்படாமையினாலே இருபதாம் நூற்றாண்டு நடுப்பகுதியிலேயே இலங்கையர் பெரும்பாலோர் குடியுரிமை பெறமுடியாமற் போயிருக்கும். மலைநாட்டு பெருந்தோட்டத் தொழிலாளர்களை நாடற்றவர்களாக்குவதே சட்டத்தின் நோக்கமாதலால், மற்றவர்கள் தப்பிப் பிழைத்துவிட்டனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த புலவர் இலங்கையிற் பிறந்து வளர்ந்தது நிரூபிக்கப்படவேண்டும் என்று கூறும்போது, அக்கூற்றில் அடங்கிய கருத்து இன்னும் தெளிவாகக் கூறப்பட்டிருக்க வேண்டும்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 01, 2010 11:32 pm


வரலாற்றுத் தொடக்க காலத்தில் ஈழமும் தமிழரும்




பூலோகசிங்கம் சொல்வதையும் நடராசா சொல்வதையும் இணைத்துப் பார்க்கும்போது, சங்ககாலத்திலே இலங்கையிலே தமிழ்ப் புலமையுடையோர் வாழ்ந்திருக்கக் கூடுமென்பதை அவர்கள் ஐயப்படுவதாகத் தெரிகிறது. தொல்வரிவடிவவியல் (alaeography) முறையிலே, இலங்கையிலே காணப்பட்டுள்ள மிகப்பழைய வரிவடிவத்தையும் தமிழ்நாட்டிற் காணப்படும மிகப்பழைய வரிவடிவத்தையும் ஒப்பிட்டு நோக்கும்போது, அவற்றுக்கிடையே மிகநெருங்கிய ஒப்புமை காணப்படுவதை வேறு ஓர் இடத்தில் எடுத்துக்காட்டியுள்ளேன். திராவிடமொழிகளுக்குச் சிறப்பாக உரிய ளகரம் முதன்முதலிலே ஆந்திரப் பிரதேசப் பட்டிப்புறோலுச் சாசனங்களிலே காணப்பட்டது! தொடர்ந்து தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் காணப்படுகிறது. இன்றைய ஈகாரத்தின் முன்னோடி வடிவம் முதன்முதலிலே தமிழ் நாட்டிலே காணப்பட்டது, தொடர்ந்து இலங்கையிலே பயின்று காணப்பட்டுப் பின்பே வடஇந்தியாவுக்குச் செல்கிறது. தமிழ்நாட்டிலே தோன்றிய "திராவிட மகரம்" இலங்கையிலும் பல கல்வெட்டுகளிலே இடம்பெற்றுள்ளது தொல்வரிவடிவவியல் பண்பாட்டின் ஒரு கூறு என்ற முறையில், அவ்வரிவடிவங்களுக்கிடையிலான ஒற்றுமை பண்பாடுகளுக்கிடையிலான உறவைச் சுட்டுமென்பது இக்கால ஆய்வாளர் துணிபு. மேலும், சாசனவியலும் (Epigraphy) பண்பாடுகளைத் தொடர்புபடுத்திக் காட்டுவதிலே பயன்படும் முக்கியமான துறையாகும். இலங்கையின் மிகப்பழைய சாசனங்கள் சங்ககாலத்துக்குச் சமமான காலத்திலே தோன்றியவை. அச்சாசனங்களிலே காணப்படும் தமிழ்ச் செல்வாக்குக்கு எடுத்துக்காட்டுகள் சிலவாக பருமக(ன்), ஆய், வேள், பரத(ன்) முதலிய வடிவங்களைச் சுட்டலாம். சங்க இலக்கியங்களிலே வரும் பெருமகன் என்ற சொல்லே இலங்கை முழுவதும் பிராமிக் கல்வெட்டுகளிற் பரவிக் காணப்பட்ட "பருமக" என்னும் சொல் வடிவமாகத் தோன்றுகிறது.

தமிழகத்தின் எல்லை வடவேங்கடம் முதல் தென்குமரி வரை என வரையறுக்கப்படுவதால், இலங்கை தமிழக எல்லைக்கு அப்பாலுள்ள நாடு என்பது சிலருடைய வாதம். தென்னெல்லையாகக் குமரியை வரையறுத்தவர்கள் சங்ககாலத்துக்குப் பிற்பட்டவர்களான நான்காம்இ ஐந்தாம் நூற்றாண்டுகளுக்குரிய தொல்காப்பியப் பாயிர ஆசிரியரும் இளங்கோவடிகளுமேயாவர். இவர்களுடைய காலத்திலே இலங்கையிலே சிங்களவராட்சி வலுப்பட்டிருந்ததால், எல்லை சுருங்கிவிட்டது. எனினும் "வரலாற்று நினைவு" (Historical memory) இந்நூல்களுக்கு உரையெழுதியோரைக் குமரிமுனையை எல்லையாகக் கொள்ள இடங்கொடுக்கவில்லை. கடல்கோள்களால், தமிழ் மண்ணை இழந்துவிட்டோம் என்று அவர்கள் அங்கலாய்க்கிறார்கள். கடல்கோள் என்பதுகூட, தூரத்திலிருந்து கடல் கடந்து வந்தவர்கள் தமிழர் நிலத்தை அபகரித்துக் கொண்டார்கள் என்பதைக் குறிப்பதாகலாம்.

கடல்கோள்களால் அழிந்துவிட்ட நாடுகளாக, ஏழ்தெங்கநாடு, ஏழ்மதுரைநாடு, ஏழ்முன்பாலைநாடு, ஏழ்பின்பாலைநாடு, ஏழ்குன்றநாடு, ஏழ்குணகாரைநாடு, ஏழ்குறும்பனைநாடு என்பனவற்றை சிலப்பதிகாரத்திற்கு உரையெழுதிய அடியார்க்கு நல்லார் குறித்துள்ளார். இவை யாவற்றினதும் முதலிலுள்ள அடையாகிய "ஏழ்" என்பது எண்ணைக் குறிப்பதாகக் கொண்டு கடல்கொண்ட நாடுகள் நாற்பத்தொன்பது என்று அவர் கொண்டுள்ளார். ஓவ்வொரு பெயரோடும் ஏழேழு நாடுகள் என்னும்போது நம்புதற்கு அருமையாதலால்இ அது பொருத்தமில்லை. ஈழம் என்ற சொல்லின் முதல் அசையாகிய "ஈழ்" என்பதே இங்கே "ஏழ்" ஆக வழங்கியதெனலாம். இலங்கையின் மேற்கு, வடமேற்குப் பகுதிகளே தெங்கு நாடெனவும், மதுரை, மாத்தறை ஒப்புமையால் தென்பகுதியே மதுரை நாடெனவும், மத்திய மலைப்பகுதியே குன்ற நாடெனவும், முன்பாலைநாடு, பின்பாலைநாடு என்பன வன்னி, மகாவன்னியெனவும் கிழக்குப் பகுதியே குணகாரைநாடெனவும் யாழ்ப்பாணமே குறும்பனைநாடெனவும் பட்டதெனக் கருதலாம். குறும்பனை என்பது பரப்பளவாலே சிறிதாகிய பனைநாடு எனவும் குணகாரைநாடு என்பது மட்டக்களப்புத் தமிழகம் என்று பலர் கொள்ளும் கிழக்கிலங்கை விவசாயப்பூமி (காரைதீவை மையமாகக் கொண்டதாக இருக்கக்கூடுமா?) எனவும் பொருள்படலாம். இந்நாடுகளோடு சேர்த்து, "குமரி கொல்லமுதலிய பன்மலைநாடும்" கடல் கொண்டொழிந்தது என்று அடியார்க்கு நல்லார், வடவாரியர் பரம்பரையினரான நம்பூதிரிகளின் மேலாதிக்கத்துக்குட்பட்டிருந்த கேரளத்தையும் ஈழத்தையும் இணைத்துக் கூறும்போது கடல்கோள் என்ற சொல்லுக்குப் புதியபொருள் தேவைப்படுகிறது. தொல்காப்பிய உரையில், "குமரியாறு பனைநாட்டோடு கெடுவதற்கு" என்று பேராசிரியர் கூறும்போது பனைநாடு என்பது யாழ்ப்பாணத்தையே குறிப்பதாகலாம். "ஈழராசா" என்ற சொல்லே பாளி மொழியில் "எலாரா" (எல்லாளன்) எனப்பட்டிருக்கலாம்.

இலங்கை அல்லது ஈழம் என்பது பற்றிய குறிப்புகள் பண்டைத் தமிழ்ச் சான்றாதாரங்களிலே மிகவும் அருகிக் காணப்படுவதால், "புலவர் பெயருக்கிட்டுள்ள அடைமொழியாய "ஈழத்து" என்ற ஒரு சொல்லை மட்டும் கொண்டு", பூதந்தேவனாரை இலங்கையரெனச் சாதிப்பது பொருத்தமில்லை என்பது நடராசாவின் கருத்து. இலங்கையின் பூர்வீக வரலாற்றை நுணுகி நோக்காமையினாலேயே அவர் இவ்வாறு கூறியிருக்க வேண்டும். பாளி மொழியிலமைந்துள்ள இலங்கைக் காலமுறை ஏடுகளான மகாவம்சம், தீபவம்சம் என்பன புத்தர் பரிநிர்வாணமடைந்த தினமே விசயன் இலங்கையிலே காலடி வைத்தானெனக் கூறிப் பகுத்தறிவுக்கேற்காத பல விடயங்களைக் குறிப்பிட்டுள்ள போதிலும், பௌத்தசமயம் இலங்கைக்கு வந்த கி.மு. 247ஆம் ஆண்டிலிருந்து இலங்கை வரலாறு நம்பக்கூடிய விதத்தில் அமைகிறது. இந்த ஆண்டைத் தொடர்ந்து வந்த குறுகிய காலத்துக்கு மௌரியப் பேரரசின் ஆதரவு இலங்கைக்குக் கிடைத்திருக்குமாதலால், இலங்கை பாதுகாப்பாக இருந்தது. தொடர்ந்து வரும் கி.மு.77 வரையிலான நூற்றைம்பது ஆண்டுகள் வரலாறு நுணுகி நோக்கத்தக்கது. மூன்று முறை தமிழர் ஆட்சி ஏற்பட்டதாகவும், தமிழர் ஆண்ட காலம் 80 ஆண்டுகளெனவும் மகாவம்சத்தாலே தெரியவருகிறது (சேனன், கூத்திகன் - 22 ஆண்டுகள்! எல்லாளன் - 44 ஆண்டுகள்! பாண்டியர் - 14 ஆண்டுகள்). இலங்கை வரலாற்றுத் தொடக்ககாலத்திலே, நாட்டின் இறைமை தமிழருக்குரியதா, சிங்களவருக்குரியதா என்பது பிரச்சினைக்குரிய விடயமாக இருந்திருக்கிறது.

பிற்கால இலங்கை வரலாற்றை எழுதுவோர், கி.பி. 10இ 11 ஆம் நூற்றாண்டிலே இலங்கையிலே தமிழராகிய சோழராட்சி நடைபெற்றதாலே தமிழ்க்குடிகள் பெருகினவென்றும் தமிழர் செல்வாக்கு அதிகரித்து வந்ததென்றும் கூறிவரக்காணலாம், இலங்கையிலே சோழராட்சி ஏறத்தாழ எண்பது ஆண்டுகள்தான் நிலைபெற்றிருந்தது. கி.மு. 3ம், 2ம், 1ம் நூற்றாண்டுகளிலும் தமிழர் ஆட்சி இலங்கையில் எண்பது ஆண்டுகள் நிலவியதானால், சங்க இலக்கியம் தோன்றிய காலத்திலே இலங்கையிலே தமிழ்ப்புலமை இருந்திருக்கவேண்டுமென்று கூறுவதும் இலங்கைத் தமிழர் ஒருவர் மதுரையிற் குடியேறித் தமிழ்ச்செய்யுள் இயற்றினாரெனக் கூறுவதும் தயங்க வேண்டிய விடயங்களாக எனக்குத் தோன்றவில்லை. இன்னொன்று இங்கே கவனிக்க வேண்டியது - தகராறு இருந்து உரிமை நிறுவப்படும்போது, உறுதி எழுதி வைக்கும் எண்ணம் ஏற்படுகிறது. இலங்கை வரலாற்றுத் தொடக்காலத்தில் தகராறு இருந்து உரிமை பெற்ற சிங்களவரிடையே தீபவம்சம், மகாவம்சம், சூளவம்சம் என்பன தோன்றின. இடைக்காலத்திலே தகராறு இருந்து உரிமை பெற்ற தமிழரிடையே கைலாயமாலை, வையாபாடல், கோணேசர் கல்வெட்டு, மட்டக்களப்பு மான்மியம், யாழ்ப்பாண வைபவமாலை என்பன தோன்றின.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 01, 2010 11:33 pm

ஈழத்துப் பூகந்தேவனார் ஒருவரா?



ஈழத்துப் பூதந்தேவனாரும, மதுரை ஈழத்துப் பூதந்தேவனாரும் ஒருவரே என்று கொள்வதற்குச் சான்று எதுவும் இல்லை என்பது பூலோகசிங்கத்தின் வாதமாகும். புறச்சான்று எதுவும் இல்லை என்பது உண்மையே! அகச்சான்றுகள் உண்டா என்று பார்க்க வேண்டும். ஒப்பியல் இலக்கிய முறையில் (Comparative Literature) இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காணலாம். ஈழத்துப் பூதந்தேவனார் பாடிய செய்யுள்களெனக் குறுந்தொகை 343, அகநானூறு 88 ஆகிய இரு செய்யுள்கள் மட்டுமே காணப்படுகின்றன. இவற்றுள் முதலாவது செய்யுள் பாலைத் திணையாகவும் இரண்டாவது செய்யுள் குறிஞ்சித் திணையாகவும் அமைந்துள்ளன. மதுரை ஈழத்துப் பூதந்தேவனார் பாடிய செய்யுள்களாக ஐந்து செய்யுள்கள் கிடைத்துள்ளன. அவற்றுள் குறுந்தொகை 360 குறிஞ்சியாக அமைந்துள்ளது! குறுந்தொகை 189, நற்றிணை 366, அகநானூறு 231, 307 ஆகிய நான்குசெய்யுள்களும் பாலையாக அமைந்துள்ளன. எனவே, ஒரு பெயரை உடையவர் பாடிய திணைகளையே மற்றப்பெயருடையவரும் பாடியிருக்கிறாரெனத் தெளிவாகிறது.

ஈழத்துப் பூதந்தேவனாரின் செய்யுள்களிற் காணப்படும் சிறப்பியல்புகள் மதுரை ஈழத்துப் பூதந்தேவனார் எனப்படுபவரின் செய்யுள்களிலும் காணப்படுகின்றனவா என்று நோக்க வேண்டும். ஒவ்வொரு வகையில் வலிமை மிகுந்த மிருகங்களாகிய யானையும் புலியும் மோதியதில் யானை வெற்றி பெற்ற காட்சி (Imagery) ஈழத்துப் பூதந்தேவனாரின் மனதிலே ஆழமாகப் பதிந்திருந்தது, யானையும் புலியும் மோதுவது சங்ககாலப் புலவர்களுக்குப் பயங்கர அனுபவமாக இருந்திருக்கிறது. அத்தகைய மோதல்களிலே யானை வெல்வதும் உண்டு, புலி வெல்வதும் உண்டு. "புலி கொன்ற யானை" என்பது அக்காலத்துப் பிரபலமான தொடர். அத்தொடர் யானை புலியைக் கொன்றதையும் புலி யானையைக் கொன்றதையும் குறிக்கலாம் அதனால் தொல்காப்பியர் வேற்றுமை மயக்கத்தில் தடுமாறுதொழிற்பெயருக்குத் தனிச் சூத்திரம் கூறவேண்டியேற்பட்டது. ஈழத்துப் பூதந்தேவனார் பெயரிலுள்ள இரண்டு செய்யுள்களிலும் இக்காட்சியுண்டு. மதுரை ஈழத்துப் பூதந்தேவனார் என்பவர் பாடிய அகநாநூறு 307 ஆம் செய்யுளிலும் இதே காட்சி வருகிறது.

நிறப்பெய(Colour Terms)ரடைகளை எடுத்து ஆள்வதிலே ஈழத்துப் பூதந்தேவனாருக்கு ஓர் ஈடுபாடு. குறுந்தொகை 343 ஆம் செய்யுளிலே, ஈழத்துப் பூதந்தேவனார் என்பவர் வெண்கோடு, செம்மறு, கருங்கால், என்பனவற்றைக் கையாண்டுள்ளார். மதுரை ஈழத்துப் பூதந்தேவனார் என்பவர் குறுந்தொகை 189 ஆம் செய்யுளிலே வெண்தேர், பைம்பயிர், வால்வளை என்பனவற்றையும் கருந்தாள், வெண்குடை முதலியவற்றைப் பிறசெய்யுள்களிலும் கையாண்டுள்ளார். நெடும்பாட்டானால் 15 அடிகள், குறும்பாட்டானால் 7 அல்லது 8 அடிகள் என்று ஒரு வரையறை ஈழத்துப் பூதந்தேவனாரின் இயலபு எனலாம். அகநானூற்றில் மூன்று பாடல்களில் ஒவ்வொன்றும் 15 அடி! குறுந்தொகை மூன்று பாடல்களில் இரண்டு 7 அடி! ஒன்று 8 அடி. இத்தகைய ஒப்புமைகளை நோக்கும்போது, வித்துவான் கணேசையரது ஊகம் ஏற்கக் கூடியதாகவே தெரிகிறது.

மதுரை ஈழத்துப் பூதந்தேவனாரை இலங்கையரெனக் கொண்ட முதல் தமிழ் அறிஞர் யாவர் என்ற வினா எழுகிறது. நான் அறிந்தவரையிலே, கவிச்சக்கரவர்த்தி கம்பர் அந்தப் பெருமைக்கு உரியவராகிறார். "கல்வியிற் பெரியன் கம்பன்" என்று முதுமொழி ஒன்றுண்டு. கம்பர் தம்முடைய பரந்த கல்வியினால், பிறமொழி இராமாயணங்களிலே காணப்படாத புதுமைகளைத் தம்முடைய நூலிலே புகுத்தியுள்ளார். போர்க்களத்தில் எல்லாவற்றையும் இழந்து வெறுங்கையனாய் நின்ற இராவணனைப் பார்த்து "இன்று போய்ப் போருக்கு நாளை வா" என்று பெருந்தன்மையோடு இராமர் கூறியது அத்தகைய புதுமைகளில் ஒன்று. இராமனுடைய பெருந்தன்மைக்கு வித்து வள்ளுவருடைய ஊராண்மை பற்றிய குறள் என்பது பண்டிதமணி கணபதிப்பிள்ளையின் இலக்கியவழி (1964) என்ற நூலிலுள்ள கட்டுரை யொன்றிற் காணப்படுகின்றது. கம்பர் கையாண்ட வாக்கியத்துக்கு வழிகாட்டி குறுந்தொகையிற் பூதந்தேவனார் (189) கையாண்ட "இன்றே சென்று வருதும் நாளை" என்பது. மதுரை ஈழத்துப் பூதந்தேவனாரை இலங்கையராகக் கொண்டதனாலேயே, கம்பர் இலங்கைப் போர் நிகழ்ச்சியிலே இந்தக்கூற்றினை அமைத்திருக்க வேண்டும்.

ஈழத்துப் பூதந்தேவனாரை ஈழத்தவரென நம்பிய நடேசபிள்ளை பூதன் என்ற இயற்பெயர் யாழ்ப்பாணத்தில் வழங்குவதனால் அவர் யாழ்ப்பாணத்தவராக இருக்கவேண்டுமெனக் கொண்டார். பூதன் என்ற பெயர்இ இலங்கையிலே தமிழ் வழங்கும் வேறுபகுதிகளிலும் காணப்படுமாற்றைப் பூலோகசிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார். பூதந்தேவனார் செய்யுள்களைக் கொண்டு அவர் வாழ்விடம் பற்றி ஏதாவது அறிந்து கொள்ள முடியுமா என்று பார்க்கவேண்டும். அவர் புறத்திணைச் செய்யுள் எதுவும் பாடாததாலும் பாடிய அகத்திணைச் செய்யுள்களிலே மதுரையையும் பாண்டியனையும் ஒன்றில் மட்டும் குறித்துப் பிற செய்யுள்களில், அத்தகைய செய்தி எதனையும் குறிப்பிடாததாலும், அவரின் இலங்கை வாழ்விடத்தைப் பற்றிய செய்தி கருகலாகவே காணப்படுகிறது. ஆனாலும், நாம் முழுவதாக நம்பிக்கை இழக்கத் தேவையில்லை.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 01, 2010 11:34 pm

பூதந்தேவனாரின் சொந்த இடம் எது?



சுங்ககாலப்புலவர்கள் பொதுவாகத் தாம் அனுபவித்ததையே பாடினார்கள். பூதந்தேவனார் குறிஞ்சி, பாலை என்ற இரண்டையும் மட்டும் பாடுவதோடு நிறுத்திக்கொண்டார். அவருடைய வாழ்க்கை அனுபவம் இந்த இரண்டு நிலங்கள் சம்பந்தப் பட்டதாகவே இருந்திருக்க வேண்டும். மேலும், இவ்விடத்திலே உற்றுக் கவனிக்கவேண்டியது ஒன்றுண்டு. நானிலம் என்று உலகம் பாகுபடுத்தப்படும்போது, பாலை என்று தனிநிலம் இல்லையென்றாகிறது. நானிலங்களிலே முல்லையும் குறிஞ்சியும் கடும் வரட்சிக் காலத்திலே பாலையாகிய வடிவத்தைப் பெற்றுவிடுகிறதென்பது சிலப்பதிகாரச் செய்யுளடிகளிலே கூறப்பட்டுள்ள கருத்து. சங்ககால இலக்கியங்களிலே வரும் பாலை நில வருணனைகளைக் கூர்ந்து நோக்கினால், அவற்றுட் பெரும்பகுதி மலையும் மலை சார்ந்த இடமும் பற்றியனவாகக் காணப்படுகின்றன. பூதந்தேவனார் பாடிய ஐந்து பாலைத்திணைச் செய்யுள்களிலே, அகநானூறு 231 ஆம் செய்யுளில் மட்டுமே மலை, மலைசார்ந்த நிலம் அல்லது குறிஞ்சிநிலக் கருப்பொருள் எதுவும் இடம்பெறவில்லை என்று கூறலாம். எனவே, பூதந்தேவனாரது முக்கியமான வாழ்க்கை அனுபவம் மலை நாட்டோடு சம்பந்தப்பட்டதென்று கொள்ளலாம்.

மலையும் மலைசார்ந்த நிலமும் குறிஞ்சியென்பது பொதுவழக்கு. ஆனால், வரட்சி மிகுந்த நிலையிலே, மலையும் மலைசார்ந்த நிலமும் பாலையாக வருவதைச் சான்றோர் செய்யுள்களிலே காணலாம். ஒரே நிலம் வெவ்வேறு காலப்பகுதிகளிலே குறிஞ்சியெனவும் பாலையெனவும் பெயர் பெறுகிறதா அல்லது ஒரு நிலத்தின் வெவ்வேறு பகுதிகள் குறிஞ்சியெனவும் பாலையெனவும் பெயர் பெறுகிறதா என்பது ஒரு சிக்கல். பாலைக்குக் காலம் மிகவும் முக்கியமானது. தொல்காப்பியர் பெரும்பொழுது, சிறுபொழுது இரண்டுமே கூறியுள்ளார். பெரும்பொழுது, சிறுபொழுது இரண்டும் பொருந்தி வரும்போதும், குறுஞ்சி நிலம் முழுவதும் பாலையாவதில்லை. உயர்ந்து நீண்ட மலைகளுக்கு ஒரு பக்கம் மழையில்லாத வரண்ட பாலையாகவும் ஒரு பக்கம் மழைமிகுந்த வளமுள்ள குறிஞ்சியாகவும் அமைவதுண்டு. இன்றைய தமிழ்நாட்டுக்கும் கேரளத்துக்கும் இடையிலுள்ள மேற்குத் தொடர்ச்சிமலை ஒருபக்கம் பாலையாகவும் ஒருபக்கம் குறிஞ்சியாகவும் பெரும்பாலும் காணப்படுகிறது. இவ்வாறு குறுஞ்சியும் பாலையும் சந்திக்குமிடமே பூதந்தேவனார் இலங்கையில் வாழ்ந்த இடமாகலாம்

சங்ககாலத்து இலங்கையிலே தமிழர் குடியிருப்புகள் எங்கெங்கு அமைந்திருந்தன என்று அறியத் தொல்லியல் (Archaeology) உதவும். அறிவியல்முறையிலான தொல்லியல் ஆய்வுகள் நடத்தப்பட்டால், இலங்கையிலே பெருங்கற் பண்பாட்டுச் சின்னங்கள் பல இன்றும் வெளிப்படலாம். பெருங்கற் பண்பாடு (Megalithic culture) திராவிடருக்குரியது! கி.மு. 1000 - கி.பி. 400 வரை தென்னிந்தியாவிலே பரவிக் காணப்படுவது. சங்ககாலத்துத் தமிழர் பண்பாடு பெருங்கற் பண்பாடேயாம். இலங்கையிலே புத்தளம் மாவட்டத்திலுள்ள பொன்பரிப்பிலிருந்து கிழக்கு மாகாணத்தின் தென் எல்லையிலுள்ள உகந்தை வரையிலும் அனுராதபுரம் உட்பட வட மத்திய மாகாணத்திலுள்ள சில இடங்களிலும் பெருங்கற் பண்பாட்டுச்சின்னங்கள் கிடைத்துள்ளன. ஆனால், மேற்காட்டப்பட்ட இடங்களில் எதுவும் குறிஞ்சியும் பாலையும் மயங்கும் மலைப்பிரதேசமாகத் தெரியவில்லை. கேகாலை மாவட்டத்தின் வட எல்லையில் உள்ள பட்டியகம்பளை என்ற இடம் குருணாகல் மாவட்டத்தின் தென் எல்லையில் உள்ளதாய்ப் பெருங்கற் பண்பாட்டுச் சின்னமுள்ளதாய்க் காணப்படுகிறது. பட்டியகம்பளைக்கு ஒரு புறம் மழைவளமுள்ள மத்திய மலைநாடு! மறுபுறம் வரட்சி பொருந்திய மகாவன்னி. ஈழத்துப் பூதந்தேவனார் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவராக இருக்கக்கூடும். இடைக்காலத்திலே தமிழ்ச் செய்யுள் மரபு பட்டியகம்பளைக்கு அயலிலுள்ள இடங்களிலே போற்றப்பட்டமைக்கு தம்பதேனியா, கோட்டகம, பண்டுவஸ்நுவர என்னும் இடங்களிலே கிடைத்த சான்றுகள் எடுத்துக்காட்டாகின்றன.

பூதந்தேவனார் என்ற பெயருக்குப் பூதன்றேவனார் என்ற பாடபேதம் காணப்படுகிறது. திரு கு.ஓ.ஊ. நடராசா, கலாநிதி பூலோகசிங்கம் முதலியோர் பூதன்றேவனார் என்று பாடங்கொள்கின்றனர். இச்சிக்கலை விடுவிக்கப் பாடபேதத்திறனாய்வு (Textual criticism) உதவலாம். மூலபாடம் எதுவாக இருந்திருக்குமென்று தீர்மானித்தல் சுலபமன்று. பூதன் + தேவனார் ஸ்ரீ பூதன்றேவனார் என்பது தொல்காப்பியப் பொதுவிதி. தொல்காப்பியம் 350 ஆம் சூத்திரத்திலுள்ள சிறப்பு விதியால், மேற்படி புணர்ச்சி பூதந்தேவனார் என்றும் அமையலாம். இங்கே ஒரு வழி புலப்படுகிறது. சாசனக்கிளை மொழிகளின் ஆய்வு, தொல்காப்பியச் சிறப்புவிதி, தமிழ்நாட்டின் தென்கோடியிலுள்ள திருநெல்வேலி, கன்யாகுமரி மாவட்டங்களுக்கே சிறப்பாக உரியதாக இருந்தமையினையும் மேற்கில் கேரளத்திலும், கிழக்கில் மதுரை, தஞ்சாவூர் முதலிய பிரதேசங்களிலும் சிறிதளவு பின்னற்றப்பட்டு வந்தமையினையும் காட்டுகிறது. தென்னாசிய படத்தை நோக்கும்போது, பூதந்தேவனார் வாழ்ந்ததாக நாங்கள் கொள்ளும் பிரதேசம் தமிழ்நாட்டின் தென்கோடியோடு நெருங்கிய தொடர்புடையதாக இருந்திருக்க வேண்டுமென்பதை ஏற்றுக்கொள்ளலாம். எனவே, பூதந்தேவனார் என்ற பாடத்திற்குத் தடையில்லை.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக