புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் Poll_c10திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் Poll_m10திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் Poll_c10 
56 Posts - 50%
heezulia
திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் Poll_c10திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் Poll_m10திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் Poll_c10திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் Poll_m10திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் Poll_c10திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் Poll_m10திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் Poll_c10திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் Poll_m10திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் Poll_c10திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் Poll_m10திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் Poll_c10 
1 Post - 1%
Shivanya
திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் Poll_c10திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் Poll_m10திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் Poll_c10திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் Poll_m10திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் Poll_c10திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் Poll_m10திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் Poll_c10திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் Poll_m10திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் Poll_c10திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் Poll_m10திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் Poll_c10 
12 Posts - 2%
prajai
திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் Poll_c10திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் Poll_m10திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் Poll_c10திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் Poll_m10திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் Poll_c10 
9 Posts - 2%
jairam
திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் Poll_c10திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் Poll_m10திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் Poll_c10திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் Poll_m10திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் Poll_c10திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் Poll_m10திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் Poll_c10திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் Poll_m10திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம்


   
   

Page 1 of 2 1, 2  Next

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun May 23, 2010 12:50 am

திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம்

இஸ்லாம் தனிமனிதர்களை உருவாக்கி அவர்களை கொண்ட குடும்பங்களை அமைத்து இறுதியில் தன் கொள்கை வழிச் சமூகம் ஒன்றைக் காண்பதை இலக்காகக் கொண்ட மார்க்கமாகும். இஸ்லாத்தின் இலக்குகளில் குடும்பம் பிரதான இடத்தைப் பெறுகின்றது. ஒரு குடும்பம் உருவாவதற்கு அத்திவாரமாக அமைவது ஆண் பெண் உறவாகும். உலக வாழ்வு நிலைப்பதற்கும் இனப் பெருக்கத்திற்கும் மனித குலம் உற்பட அனைத்து உயிரினங்களின் இருப்புக்கும் வழியாக அல்லாஹ் அமைத்திருப்பது ஆண் பெண் உறவையாகும். அணு முதல் அனைத்திலும் பால் வேறுபாடு காணப்படுகின்றது.

ஆண் பெண் இருபாலாருக்கும் இடையே இறைவன் ஒரு வகை ஈர்ப்பை இயல்பாகவே வைத்திருக்கின்றான். இதனை இனக்கவர்ச்சி என்பார்கள். பசி, தாகம் எழுவது போல பாலுணர்வும் இயல்பான ஒன்றாகும். மிருக உலகம், தாவர உலகம் உற்பட எல்லா உயிரினங்களைப் பொறுத்தவரையிலும் அவை இயல்பான இனக்கவர்ச்சியால் உந்தப்பட்டு இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. இவ்வாறு அவை எத்தகைய கட்டுப்பாடுகளுமின்றி உறவு கொள்வதற்கு இறைவன் அனுமதி அளித்துள்ளான். ஆனால், மனிதனைப் பொறுத்தவரையில் அவன் பாலுணர்வின் கடிவாளத்தை கட்டுப்பாடுகளின்றி சுதந்திரமாக விட்டுவிடுவதை அல்லாஹ் அனுமதிக்கவில்லை. மனிதன் கௌரவமானவன். அவனது எல்லா நடவடிக்கைகளும் கௌரவமானதாக அமைதல் வேண்டும் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடு. இந்த வகையில் ஆண், பெண் உறவு திருமணம் என்ற உடன்படிக்கைக் கூடாக புனிதமான ஒன்றாக அமைதல் வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகின்றது.
சமூகம் என்ற விருட்சத்திற்கு வித்தாக அமைவது குடும்பம். குடும்பம் என்ற நிறுவனத்தின் நுழைவாயில் திருமணமாகும். இப்பின்னணியிலேயே இஸ்லாம் திருமணத்திற்கு பெரிதும் முக்கியத்துவம் கொடுக்கின்றது. இளைஞர்களை மணவாழ்வுக்கு தூண்டுகின்ற பல அல்குர்ஆன், ஸுன்னா வாக்கியங்களை காணமுடிகின்றது. திருமணம் என்பது உலகில் தோன்றிய இறைதூதர்கள் அனைவரினதும் வழிமுறையாகும் என்பதை குர்ஆனும் ஸுன்னாவும் உறுதிசெய்கின்றன. இது பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

மேலும் (நபியே) உங்களுக்கு முன்பு பல தூதர்களை நாம் அனுப்பினோம். அவர்களுக்கு மனைவிமார்களையும் குழந்தைகளையும் கொடுத்திருந்தோம்.

இது தொடர்பான ஒரு நபிமொழியும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
நான்கு விஷயங்கள் இறைத்தூதர்களின் வழிமுறைப்பாற்பட்டவையாகும். அவையாவன கத்னா செய்து கொள்ளல், நறுமணம் பூசுதல், பல் துலக்குதல், திருமணம் முடித்தல்.(ஆதாரம் : திர்மிதி)
திருமணம் என்பது அல்லாஹ்வின் ஓர் அத்தாட்சி என்றும் அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. பொருளாதார பிரச்சினைக்கு அஞ்சி மணம் முடிக்காமல் இருப்பது பிழையானதுளூ ஒருவர் குடும்ப வாழ்வை துவங்குகின்ற போது அல்லாஹ் அவருக்கு எல்லாவகையிலும் உதவிக்கரம் நீட்டுகின்றான் என்றும் இஸ்லாம் கூறுகின்றது. இது பற்றி குறிப்பிடும் ஒரு ஹதீஸ் பின்வருமாறு:
மூவருக்கு உதவி செய்வது அல்லாஹ்வின் மீது கடமையாகும்: கற்பொழுக்கத்தை நாடி திருமணம் முடிப்பவர், உரிமைச் சீட்டு எழுதப்பட்ட அடிமை, இறைப்பாதையில் போராடும் போராளி. (அஹ்மத், நஸாஈ)



திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun May 23, 2010 12:50 am

மணவாழ்வின் பயன்கள்

இளைஞர்களை திருமணத்திற்கு தூண்டும் வகையில் திருமணத்தினால் விளையும் நன்மைகளைப் பற்றியும் இஸ்லாம் பேசுகின்றது.
மனிதனிடம் காணப்படும் உணர்ச்சிகளில் பாலுணர்வே மிகவும் பலமானது. அதைத் தீர்த்துக்கொள்வதற்கான இயல்பானதும், கௌரவமானதும். பாதுகாப்பானதுமான வழியாக திருமணம் அமைந்திருப்பதாக இஸ்லாம் கருதுகின்றது. குழந்தைச் செல்வத்தைப் பெறுவது திருமணத்தின் மற்றுமொரு விளைவாகும். உலக வாழ்வு நிலைப்பதற்கும் இனப்பெருக்கத்திற்கும் வழியாக அல்லாஹ் அமைத்திருப்பது ஆண் பெண் உறவையாகும். திருமணத்திற்கூடாக குழந்தைச் செல்வம் பெறப்படல் வேண்டும் என்பது ஒரு முக்கிய எதிர்ப்பார்ப்பு என்பதனாலேயே நபி (ஸல்) அவர்கள் குழந்தைகளைப் பெற்றெடுக்கக் கூடிய பெண்களை திருமணம் முடிக்குமாறு தூண்டினார்கள்.
மனஅமைதியும் உளத்திருப்தியும் திருமணத்தின் மூலம் எதிர்ப்பார்க்கப்படும் மற்றுமொரு நன்மையாகும். எந்த மனிதனும் வாழ்க்கைத்துனையின்றி மனஅமைதியை பெறுவது சிரமசாத்தியமானதாகும். ஓர் ஆணும் பெண்ணும் திருமணத்திற்கூடாக இணைகின்ற போதே இருவரது வாழ்வும் நிறைவு பெறுகின்றது. இவ்வுண்மையை அல்குர்ஆன் பின்வருமாறு விளக்குகின்றது:
நீங்கள் ஆறுதல் பெறுவதற்குரிய துணையை உங்களில் இருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும் உங்களுக்கிடையே உவப்பையும் அன்பையும் ஏற்படுத்தி இருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்.

தாய்மை உணர்வையும் (ஆழுவுர்நுசுர்ழுழுனு) தந்தை உணர்வையும் (குயுவுர்நுசுர்ழுழுனு) பெறுவதற்கான வழியாக விளங்குவதும் மணவாழ்வாகும். சகோதரன் (டீசழவாநசாழழன) சகோதரி (ளுளைவநசாழழன) முதலான உறவுகள் தோன்றுவதும் திருமணத்தின் வழியிலாகும். இத்தகைய உணர்வுகளும் உறவுகளும் இன்றி மனித வாழ்வு நிறைவாக அமையாது. சுறுசுறுப்பு, ஊக்கம், உற்சாகம், பொறுப்புணர்ச்சி முதலான மனித வாழ்வு வளம் பெற தேவையான பண்புகளை மணவாழ்வு வளர்ப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். திருமணம் முடித்தவர்களின் ஆயுள் பிரமச்சாரிகளின் ஆயுளை விட கூடியதாக அமைகிறது என்பதும் ஆய்வுகளுக்கூடாக தெரியவந்துள்ளது. அன்றாட வாழ்வின் பொறுப்புக்களை கணவன் மனைவிக்கிடையேயும் குடும்பத்தின் ஏனையஉறுப்பினர்களுக் கிடையேயும் அழகாக பகிர்ந்து கொண்டு நிறைவுடனும் நிம்மதியாகவும் வாழ்வதற்கும் திருமண வாழ்வு வழியமைத்துக் கொடுக்கின்றது.
சீரான குடும்பங்கள் இணைந்தே பரஸ்பர அன்பும் புரிந்துணர்வும் ஒத்துழைப்பும் கொண்ட ஒரு சிறப்பான சமூகம் தோன்ற முடியும் என்ற வகையிலும் குடும்ப வாழ்வில் நுழைவாயிலாக விளங்கும் திருமணம் முக்கியத்துவம் பெறுகின்றது.



திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun May 23, 2010 12:51 am

திருமணம் பற்றிய இஸ்லாத்தின் தீர்ப்பு

மணவாழ்வில் நாட்டமும் அதற்குரிய சக்தியும் கொண்டவர் தொடர்ந்தும் திருமணம் முடிக்காமல் இருந்தால் தான் வழிதவறி விடக்கூடும் என அஞ்சும் போது அவர் திருமணம் செய்து கொள்வது கட்டாய கடமையாகும். மணவாழ்வில் நாட்டம் இருந்தும் அதற்கான வாய்ப்பைப் பெறாதவர் தனது கற்பைப் பாதுகாத்துக் கொள்ளல் வேண்டும். இத்தகையவர்களுக்கு நபியவர்கள் பின்வருமாறு வழிகாட்டினார்கள். இளைஞர்களே! உங்களில் மணம்முடிக்க சக்தி பெற்றவர் மணமுடிக்கட்டும். அது பார்வையைத் தாழ்த்திக் கொள்ளவும் கற்பைப் பாதுகாத்துக் கொள்ளவும் உதவியாக அமையும். மணமுடிக்க முடியாத நிலையில் இருப்பவர் நோன்பு நோற்கட்டும். அது அவரது இச்சையை அறுக்கக்கூடியதாக இருக்கும்.
பின்வரும் அல்குர்ஆன் வசனமும் இத்தகையவர்களுடைய கவனத்திற்குரியதாகும்.
(திருமணம் செய்து கொள்ளும் வசதியைப் பெற்றுக் கொள்ளாதவர்கள் அல்லாஹ் தனது பேரருளால் அவர்களை வசதிபடைத்தவர்களாக ஆக்கும் வரை அவர்கள் கற்புடன் நடந்து கொள்ளவும்.) (24: 33)
ஒருவருக்கு மணவாழ்வில் நாட்டமும் அதற்கான சக்தியும் வசதியும் இருந்த போதிலும் மணமுடிக்காத போது தான் வழிதவறிவிடலாம் என்ற பயம் இல்லாத போது அவர் திருமணம் செய்து கொள்வது சுன்னத்தாகும். இத்தகையவர் கூட மணவாழ்வில் நுழைவதையே இஸ்லாம் வரவேற்கின்றது, வலியுறுத்துகின்றது. ஒரு வணக்கவாளியின் வணக்கம் அவர் திருமணம் முடிக்காதவரை முழுமையடையாது என்ற இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் கூற்று சிந்தனைக்குரியதாகும்.
தாம்பத்திய உறவில் ஈடுபட முடியாதவரும், குடும்பத்திற்கு தேவையான வாழ்க்கைச் செலவை வழங்க முடியாதவரும் திருமணம் முடித்தல் ஆகாது என்பதும் ஷரீஆவின் நிலைப்பாடாகும்.

மணவாழ்க்கை நடாத்தக் கூடிய சக்தி, வாய்ப்பு வசதிகள் இருந்தும் மணவாழ்வை துறந்து பிரமச்சாரியாக வாழ்வதை, துறவரம் பூணுவதை இஸ்லாம் அனுமதிப்பதில்லை. குடும்ப வாழ்க்கையைப் புறக்கணித்து வணக்க வழிபாடுகளில் தீவிர ஆர்வம் காட்டிய சில நபித்தோழர்களை நபியவர்கள் எவ்வாறு கண்டித்து நெறிப்படுத்தினார்கள் என்பதை வரலாற்றில் காணலாம். உஸ்மான் இப்னு மழ்ஊன், அப்துல்லாஹ் இப்னு அம்ரிப்னுல் ஆஸ் ஆகிய இருவரும் இந்த வகையில் நபியவர்களால் வழிப்படுத்தப்பட்டவர்களாவர்.
இஸ்லாமிய திருமண ஒழுங்குகள்:



திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun May 23, 2010 12:51 am

துணைத் தெரிவு

திருமணம் என்பது வாழ்க்கைப் பயணத்தின் ஒருவகைத் துவக்கமாகும். மனைவி என்பவள் வாழ்க்கைத் துணைவியாவாள். கணவன் என்பவன் மனைவியின் வாழ்க்கைத் துணைவனாவான். ஆண், பெண் இருபாலாரும் தமது வாழ்க்கைத் துணையை சரியாகத் தெரிவு செய்து கொள்வதில் தான் இல்லற வாழ்வின் வெற்றி தங்கியுள்ளது. ஓர் ஆணோ அல்லது பெண்ணோ தனக்குரிய துணையைத் தெரிவு செய்யும் போது நடைமுறையில் கவனத்திற் கொள்ளும் அம்சங்கள் பல காணப்படுகின்றன. பணம், பதவி, குலம், கோத்திரம், அழகு என்று இப்பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.
இஸ்லாம் துணைத் தெரிவில் நற்குணத்திற்கும் நன்னடத்தைக்கும் முக்கியத்துவமும் முன்னுரிமையையும் கொடுக்குமாறு வழிப்படுத்துகின்றது. இஸ்லாமிய நோக்கில் ஓர் ஆண் தனக்குரிய துனையைத் தெரிவு செய்யும் போது கவனத்திற் கொள்ள வேண்டிய விடயங்களுள் பின்வருவன குறிப்பிடத்தக்கவையாகும்.



திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun May 23, 2010 12:51 am

நற்பண்புகளும் நன்னடத்தையும்

இறை நம்பிக்கையும் மறுமைப் பற்றிய விசுவாசமும் இல்லாத ஒருவரிடம் நற்பண்புகளையோ நன்னடத்தையையோ எதிர்பார்க்க முடியாது. இந்த வகையில் துணைத் தெரிவில் மார்க்கப் பற்று கவனத்திற் கொள்ளப்படல் வேண்டும். இது பற்றிப் பேசும் சில நபிமொழிகள் பின்வருமாறு.

1. மார்க்கப் பற்றுடையவள் மூக்கறுப்பட்ட அடிமையாக இருப்பினும் அவளே சிறந்தவள் (இப்னு மாஜா)
2. மார்க்கமுள்ள பெண்ணை தேடி அடைந்து கொள், இல்லாத போது நீ அழிந்து விடுவாய் (புகாரி, முஸ்லிம்)
3. உலகம் என்பது இன்பப் பொருளாகும். அதன் இன்பப் பொருட்களுள் சிறந்தது சாலிஹான பெண்ணாகும் (முஸ்லிம்)

அழகும் அடக்கமும் பணிவும் கட்டுப்பாடும் நம்பிக்கையும் விசுவாசமும் கொண்ட ஒரு பெண்ணே இஸ்லாமிய நோக்கில் சாலிஹான பெண்ணாக கொள்ளப்படுகின்றாள். நபி (ஸல்) அவர்கள் ஒரு சந்தர்ப்பத்;தில் சிறந்த, சாலிஹான பெண்ணுக்கு பின்வருமாறு வரைவிலக்கணம் சொன்னார்கள்.
'நீ அவளைப் பார்த்தால் உன்னை மகிழ்விப்பாள். நீ அவளுக்கு கட்டளையிட்டால் உடன் கட்டுப்படுவாள். நீ அவளை வைத்து சத்தியம் செய்தால் அதனை நிறைவேற்றி வைப்பாள். நீ வீட்டில் இல்லாத போது தன்னையும் உன் பொருளையும் பாதுகாத்துக் கொள்வாள். (நஸாஈ)



திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun May 23, 2010 12:52 am

குழந்தைப் பாக்கியமுடையவளாக இருத்தல்

சந்ததியை விருத்தி செய்தல் மணவாழ்வின் நோக்கங்களுள் ஒன்றாகும். எனவே ஒருவர் தனக்குரிய துணையைத் தெரிவு செய்கின்ற போது குழந்தைகளைப் பெறக்கூடிய பெண்ணை தெரிவு செய்ய வேண்டும் என்பதும் இஸ்லாத்தின் வழிகாட்டலாகும். இது பற்றி குறிப்பிடும் ஒரு ஹதீஸ் பின்வருமாறு:
அதிக அன்பும் குழந்தைப் பேறும் கொண்ட பெண்களை மணமுடிப்பீர்களாக. மறுமையில் நான் ஏனைய சமூகங்களுக்கு முன்னால் உங்களது எண்ணிக்கையை வைத்து பெருமைப்படுவேன்.
ஒரு பெண் குழந்தைப் பேறுடையவளா என்பதை அவளது குடும்பத்தில் திருமணம் முடித்துள்ள ஏனைய பெண்களை வைத்து உறுதிசெய்து கொள்ளலாம்.



திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun May 23, 2010 12:52 am

அழகு

அழகை விரும்புவது மனிதர்களின் இயல்பான பண்பாகும். அழகுணர்ச்சி என்பது அல்லாஹ்வின் பண்பாகவும் கருதப்படுகின்றது. இதற்கு பின்வரும் நபி மொழி ஆதாரமாக விளங்குகின்றது.
(அல்லாஹ் அழகானவன். அவன் அழகை நேசிக்கின்றான்.)
அழகை அடைந்து கொள்ளாத உள்ளம் நிறைவு பெறாது. அழகு என்பது ஒவ்வொருவரதும் பார்வை, நோக்கு, இரசனை, விருப்பு வெறுப்பு முதலானவற்றைப் பொறுத்து வேறுபடும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த வகையில் திருமணத்தின் போதும் ஒருவர் தனது துணையின் அழகை கவனத்திற் கொள்வது பிழையானதல்ல. ஒரு முறை அல்முகீரா இப்னு ஷுஃபா (ரழி) என்ற நபித் தோழர் ஒரு பெண்ணை திருமணம் முடிக்க முன்வந்தார். இது பற்றி நபியவர்களிடம் அவர் குறிப்பிட்ட போது அவர்கள் பின்வருமாறு ஆலோசனைக் கூறினார்கள்.
நீர் போய் அந்தப் பெண்ணைப் பார்க்க வேண்டும். அதுவே உங்கள் இருவர் மத்தியிலும் அன்பும் பிணைப்பும் நிலைப்பதற்கு வழியமைக்கும்.
திருமணம் பேசப்படும் பெண்ணைப் பார்த்து அவதாணிப்பதற்காக குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை அனுப்பி வைப்பதற்கும் ஸுன்னா அனுமதி வழங்கியிருப்பதைக் காணலாம்.



திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun May 23, 2010 12:53 am

கன்னிப் பெண்ணைத் தெரிவு செய்தல்

ஒப்பீட்டு ரீதியில் ஏலவே திருமணம் முடித்த ஒரு விதவையை விட கன்னிப் பெண்ணைத் தெரிவு செய்வது நல்லது என்பது நபியவர்களின் வழிகாட்டலாகும். ஒரு முறை ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரழி) அவர்கள் ஒரு விதவையைத் திருமணம் முடித்ததை அறிந்த நபி (ஸல்) அவர்கள் அந்நபித்தோழரைப் பார்த்து,'உமக்கு ஒரு கன்னிப் பெண் கிடைக்கவில்லையா? என்று கேட்டார்கள். அதற்கு அவர் தனது மரணமான தந்தைக்கு பல சிறு பெண்பிள்ளைகள் இருப்பதாகவும் அவர்களை பராமரிப்பதற்கு ஒரு விதவைப் பெண்ணே பொருத்தமானவள் என்றும் அதனால்தான் தான் ஒரு விதவையை மணம் முடித்ததாகவும் விளக்கம் சொன்னார்.



திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun May 23, 2010 12:54 am

வயது, குடும்பப் பின்னணி, சமூக அந்தஸ்த்து, பொருளாதார நிலை முதலானவற்றை கவனத்திற் கொள்ளல்

இல்லற வாழ்வு வெற்றிகரமாக அமைய மேற் குறித்த அம்சங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. நபி (ஸல்) அவர்கள் தனது மகள் பாத்திமாவை அபூபக்கர் (ரழி), உமர் (ரழி) ஆகியோர் மணமுடிக்க விரும்பிய போதும் அவர்களுக்கு மணமுடித்து வைக்காமல் அலி (ரழி) அவர்களுக்கு மணமுடித்து வைத்தமை கவனிக்கத்தக்கதாகும்.
ஒரு பெண்ணும் தனக்குரிய வாழ்க்கைத் துணைவனை தெரிவு செய்யும் உரிமையைப் பெற்றிருக்கிறாள்.
ஒரு விதவையை அவளது முடிவு பெறப்படாமல் திருமணம் செய்து வைத்தலாகாதுளூ கன்னிப் பெண்ணையும் அவளது சம்மதத்தைப் பெறாமல் திருமணம் செய்து வைக்கக் கூடாது என்பது நபியவர்களின் கட்டளையாகும். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியபோது அல்லாஹ்வின் தூதரே அவளது சம்மதம் எப்படி பெறப்படல் வேண்டும் என ஸஹபாக்கள் வினவியபோது நபி (ஸல்) அவர்கள் 'அவளது மௌனமே அவளது சம்மதமாகும் என்றார்கள் (புகாரி, அஹ்மத்)
ஒரு விதவை அவளது பொறுப்புதாரியை (வலி) விட அவளது விவகாரத்தைத் தீர்மாணிக்கக் கூடிய அருகதையும் தகுதியும் உடையவளாவாள். ஒரு கன்னிப் பெண்ணைப் பொருத்த வரையில் அவளது சம்மதம் கோரப்படல் வேண்டும். அவளது மௌனமே அவளது சம்மதமாகும் (முஸ்லிம், திர்மிதி, நஸாஈ) என்ற நபிமொழியும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஹன்ஸா பின்த கிதாம் அல்அன்ஸாரியா என்ற விதவைப் பெண்ணை அவளின் தந்தை அவளது விருப்பத்திற்கு மாற்றமாக ஒருவருக்கு மணம் முடித்து வைத்தார். அப்பெண் இது பற்றி நபியவர்களிடம் முறைப்பாடு செய்யவே அன்னார் அத்திருமணத்தை செல்லுபடியற்றதாக ஆக்கினார்கள். (புகாரி, திர்மிதி, இப்னு மாஜா)



திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun May 23, 2010 12:54 am

மற்றொரு சந்தர்ப்பத்தில் ஒரு கன்னிப் பெண் நபியவர்களிடம் வந்து தனது தந்தை தனது விருப்பத்;திற்கு மாற்றமாக தன்னை ஒருவருக்கு மணம் முடித்து வைத்துள்ளதாக முறைப்பட்டாள். இதனைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் அத்திருமணத்தை அந்தப் பெண்ணின் தெரிவிற்கு விட்டார்கள். (அபூதாவூத், இப்னு மாஜா)
மேற்கண்ட ஹதீஸ்கள், தான் விரும்பாத தனக்கு திருப்தி இல்லாத ஒருவரை மணம் முடித்து வைக்க ஷவலி முனைகின்ற போது அதனை மறுக்கின்ற நிராகரிக்கின்ற உரிமை ஒரு பெண்ணுக்கு உண்டு என்பதைக் காட்டுகின்றன. உண்மையில் தகப்பனோ அல்லது ஷவலி ஆக இருப்பவரோ ஒரு பெண்ணை அவள் விரும்பாத ஓர் ஆணுக்கு நிர்ப்பந்தித்து மணம் முடித்துக் கொடுக்கும் உரிமையைப் பெற்றவர் அல்ல.

ஏலவே திருமணம் முடித்து பின்னர் விதவையான ஒரு பெண்ணைப் பொறுத்தவரையில் அவள் திருப்தி காணாத ஒருவருக்கு அவளை மணம் முடித்து வைப்பதற்கு எவருக்கும் எந்த உரிமையோ அதிகாரமோ இல்லை என்பது இமாம்களின் ஏகோபித்த நிலைப்பாடாகும். வயது வந்த ஒரு கன்னிப் பெண்ணைப் பொறுத்தவரையிலும் அவளையும் குறிப்பிட்ட ஓர் ஆணை மணம் முடிக்க நிர்ப்பந்திக்க முடியாது என்பதே பெரும்பாலான அறிஞர்களின் கருத்தாகும். பருவ வயதை அடைந்த ஒரு கன்னிப் பெண்ணின் செல்வத்தை அவளது அனுமதியின்றி கையாள்வதற்கு அவளது தந்தைக்கோ மற்றொருவருக்கோ அனுமதியில்லை என்பது முடிவான கருத்தாகும். பொருள் விடயத்திலேயே ஷரீஅத் இத்தகைய ஒரு நிலைப்பாட்டைக் கொள்வதாக இருந்தால் முழு வாழ்வுடனும் தொடர்பான திருமண விடயத்தில் எவ்வாறு ஷவலி தான் விரும்பிய முடிவை எடுக்கும் உரிமையைப் பெறுவார்?!! உயிர், பொருளை விட மேலானது. திருப்தியில்லாத நிலையில் துவங்கும் குடும்ப வாழ்வினால் விளையும் கேடுகளுக்கு முன்னால் பொருள் நஸ்டம் அலட்டிக் கொள்ளத்தக்கதல்ல.

ஆயினும் ஒரு யுவதி அனுபவ குறைவினாலும் முதிர்ச்சியின்மைக் காரணமாகவும் சிலபோது தனது வாழ்க்கைத் துணைவனைத் தெரிவு செய்வதில் தவறு இழைத்து விட வாய்ப்புண்டு. இதனால் ஷரீஅத், தனது பொறுப்பில் இருக்கும் யுவதிக்கான கணவனைத் தெரிவு செய்து மணமுடித்து வைக்கும் பொறுப்பை தந்தை முதலான ஷவலி களுக்கு வழங்கியுள்ளதோடு தனது ஷவலி யின் தெரிவை ஏற்கும் உரிமையையும் மறுக்கும் உரிமையையும் அந்தப் பெண்ணுக்கு அளித்துள்ளது. அவ்வாறே தகுதியற்ற, பொருத்தமற்ற ஒருவனை தனது பொறுப்பில் உள்ள பெண் தெரிவு செய்தால் அதனை நிராகரிக்கும் அதிகாரத்தை இஸ்லாம் ஷவலி க்கு வழங்கியுள்ளது.
ஆயினும் இன்று நடைமுறையில் ஒரு பெண் தனக்குரிய கணவனை சுதந்திரமாக தெரிவு செய்யும் உரிமையை பல போது இழந்து விடுகின்றாள். அவளது விருப்பு, வெறுப்பை விட தாய், தந்தையின் விருப்பு, வெறுப்பே கூடிய முக்கியத்துவம் பெறுகின்றது. தான் விரும்பாத போதும் தந்தையின் விருப்பம், தாயின் தெரிவு என்பதற்காக ஒருவருக்கு வாழ்க்கைப்படும் நிலை பெண்களில் பலருக்கு ஏற்படுகின்றது. குடும்ப வாழ்க்கையில் பல்வேறு பிரச்சினைகளும் சிக்கல்களும் தோன்றுவதற்கு இது ஒரு முக்கிய காரணமாக அமைகின்றது.



திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக