புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தாலாட்டு Poll_c10தாலாட்டு Poll_m10தாலாட்டு Poll_c10 
81 Posts - 45%
ayyasamy ram
தாலாட்டு Poll_c10தாலாட்டு Poll_m10தாலாட்டு Poll_c10 
77 Posts - 43%
mohamed nizamudeen
தாலாட்டு Poll_c10தாலாட்டு Poll_m10தாலாட்டு Poll_c10 
6 Posts - 3%
prajai
தாலாட்டு Poll_c10தாலாட்டு Poll_m10தாலாட்டு Poll_c10 
6 Posts - 3%
Jenila
தாலாட்டு Poll_c10தாலாட்டு Poll_m10தாலாட்டு Poll_c10 
2 Posts - 1%
jairam
தாலாட்டு Poll_c10தாலாட்டு Poll_m10தாலாட்டு Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தாலாட்டு Poll_c10தாலாட்டு Poll_m10தாலாட்டு Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தாலாட்டு Poll_c10தாலாட்டு Poll_m10தாலாட்டு Poll_c10 
2 Posts - 1%
kargan86
தாலாட்டு Poll_c10தாலாட்டு Poll_m10தாலாட்டு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தாலாட்டு Poll_c10தாலாட்டு Poll_m10தாலாட்டு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாலாட்டு Poll_c10தாலாட்டு Poll_m10தாலாட்டு Poll_c10 
124 Posts - 53%
ayyasamy ram
தாலாட்டு Poll_c10தாலாட்டு Poll_m10தாலாட்டு Poll_c10 
77 Posts - 33%
mohamed nizamudeen
தாலாட்டு Poll_c10தாலாட்டு Poll_m10தாலாட்டு Poll_c10 
10 Posts - 4%
prajai
தாலாட்டு Poll_c10தாலாட்டு Poll_m10தாலாட்டு Poll_c10 
8 Posts - 3%
Jenila
தாலாட்டு Poll_c10தாலாட்டு Poll_m10தாலாட்டு Poll_c10 
4 Posts - 2%
Rutu
தாலாட்டு Poll_c10தாலாட்டு Poll_m10தாலாட்டு Poll_c10 
3 Posts - 1%
Guna.D
தாலாட்டு Poll_c10தாலாட்டு Poll_m10தாலாட்டு Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தாலாட்டு Poll_c10தாலாட்டு Poll_m10தாலாட்டு Poll_c10 
2 Posts - 1%
Baarushree
தாலாட்டு Poll_c10தாலாட்டு Poll_m10தாலாட்டு Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தாலாட்டு Poll_c10தாலாட்டு Poll_m10தாலாட்டு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாலாட்டு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 05, 2010 1:29 pm

ஏட்டு இலக்கியங்களுக்கெல்லாம் தாய்மை இலக்கியமாகத் திகழ்வது வாய்மொழி இலக்கியம் இதனை "எழுதாக் கிளவி" என்பர். நாட்டுப்புறப் பாடல்கள் எளிமையானவை, இனிமையானவை. வாயில், பிறந்து செவிகளில் உலவி, காற்றில் மிதந்து கருத்தில் இனிப்பவை. இது நாட்டுப்புற மக்களின் சொத்து. இந்த இலக்கியம் என்று பிறந்தது எவரால் பிறந்தது என எடுத்துச் சொல்ல இயலாத பண்பும் பாங்கும் கொண்டவை.

"ஏட்டிலே எழுதவில்லை
எழுதிநான் படிக்கவில்லை
வாயிலே வந்தபடி
வகையுடனே நான் படிப்பேன்"


என்ற வரிகள் இதனை மெய்ப்பிக்கும். நாட்டுப்புறப் பாடல்கள் பல வகைகளில் இருந்தாலும் தாலாட்டுக்கென்று தனிச் சிறப்பு உண்டு. தாயன்பின் வெளிப்பாடாகத் திகழும் தாலாட்டுப்பற்றி இவண் காண்போம்.

சொல் விளக்கம்:-

தாலாட்டு என்ற இப்பெயர் காரணம் பற்றி அமைந்ததாகும் "தால்" என்றால் நாக்கு "ஆட்டுதல்" என்பது அசைத்தல், நாவினை அசைத்து, சுழித்து, குரவையிட்டு, ஆட்டிப் பாடுவதால் தால்+ஆட்டு=தாலாட்டு எனப் பெயர் பெற்றது. அதனைத் தொடர்ந்து இசைக்கும் பாடலையும் தாலாட்டு என்கிறோம்.

இதனை தாலாட்டு, ஓராட்டு எனத் தாய்மார்கள் வழங்கினாலும் இத் தாலாட்டுப் பாடல்களைத் தலைமையாகக் கொண்டு எழுந்த இடைக்கால இலக்கியங்கள் "தாராட்டு" என்றும் பிள்ளைத்தமிழ் நூல்கள் "தாலேலோ" என்றும் குறிப்பிடுகின்றன.

தாலாட்டின் அளவும், பண்ணும்:-


தாயின் அன்பு வெளிப்பாடே தாலாட்டு. அவர்கள் தங்கள் மனத்தின் பாரங்களான மகிழ்ச்சி, துக்கம் இவைகளை வெளிப்படுத்த தாலாட்டு அவர்களுக்கு ஒரு ஊடகமாகப் பயன்படுகிறது. தாலாட்டுப் பாடல்கள் குறிப்பிட்ட கடவுளையோ, உறவினரையோ, பாடவேண்டும் என்ற வரையறை இல்லை. தாயின் மன இயல்புக்கு ஏற்றவாறும், குழந்தையின் உறக்கத்திற்கு ஏற்றவாறும் தாலாட்டின் அளவும், ஓசையும் கூடுதலும் குறைதலும் உண்டு.

தாலாட்டின் பண் "நீலாம்பரி" என்று கூறுவார்கள். தாலாட்டுப் பாடும் பெண்கள், ஒரே பண்ணிலே பாடுவது இல்லை ஒவ்வொருவருடைய பேச்சு ஒலிக்கு ஏற்பவும் மாறுபாடு அடைவதுண்டு. இவ்வாறே பல்வேறு விதமாகத் தாலாட்டின் அளவும் பண்ணும் அமைந்துள்ளன.

குழந்தைப் பேறு:-

ஒரு பெண் முழுமையடைவது தாய்மை அடைந்தபிறகுதான் என்பர். அத்தகைய சிறப்பிற்குத் தன்னை ஆளாக்கிய குழந்தையின்மீது தாய் அளவுகடந்த அன்பு பாராட்டுகிறாள். அதனால் ஒரு குழந்தையின் சிறப்பு என்ன என்று சொல்ல நினைத்த வள்ளுவன்

"குழலினிது யாழினிது என்ப தம்மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்"


என்ற ஒரு குழந்தையின் மழலைப் பேச்சு என்பது இனிமையாக ஒலிக்கக் கூடிய குழலும், யாழும் கூட ஒரு குழந்தையின் மழலையின் இனிமைக்கு ஈடாகா என உரைக்கிறார். குழந்தைப் பேற்றுக்காக எவ்வாறெல்லாம் கடவுளை வேண்டுகிறாள் என்பதை

"அரசே உனை வேண்டி
ஆடாத தீர்த்த மில்லை
பொருளே உனை வேண்டி
போகாத கோயிலில்லை"


எனத் தொடங்கி ஆடிய தீர்த்தங்களையும் பாடல் வரிகளாக உரைக்கும் விதத்தில் குழந்தைப் பேற்றின் அவசியத்தையும் தான் தாலாட்டுகின்ற அந்தக் குழந்தைப் பேற்றிற்காக அவள் பட்ட துன்பங்களைத் தாலாட்டின் வாயிலாகவே உரைக்கிறாள்.

தாலாட்டில் ஏழ்மை:-


எல்லாத் தாயும் தன் குழந்தையை எவ்வாறெல்லாம் சிறப்போடு வளர்க்க வேண்டும் என்று எண்ணுகிறாள். ஆனால் அவளின் ஏழ்மை நிலை அவளின் ஆசையைக் செயலாற்ற முடியாத நிலை ஏற்படும். தன் குழந்தையை ராஜ குமாரனாகவே கற்பனை செய்யும் தாயின் உள்ளம் சில வேளைகளில் ஏழ்மையின் தாக்குதலால் அதனைத் தாலாட்டின் போது வெளிப்படுத்துதலும் உண்டு.

"முத்துச் சிரிப்பழகா
முல்லைப்பூ பல்லழகா
வெத்துக் குடிசையிலே
விளையாட வந்தாயோ?
ஏழைக் குடிசையிலே
ஈரத் தரைமேலே
தாழம்பாய் போட்டுத்
தவழ்ந்தாட வந்தாயோ
தரையெல்லாம் மேடுபள்ளம்
தவழ்ந்தால் உறுத்தாதோ
பச்சரிசி சோளம்
பாதிநாள் பட்டினிதான்
பசும்பால் கொடுத்துந்தன்
பசி தீர்க்கப் பார்த்தாலும்
பருத்திவிதை இல்லையடா
பசு பாலை தரலையடா
பிள்ளைப்பால் ஊட்டியுனைப்
போசனைகள் செய்திடவே
கொள்ளையுத்தம் பஞ்சங்
குரங்காகிப் போனேண்டா"


என தன் ஏழ்மையின் தாக்கத்தைத் தாலாட்டில் வெளிப்படுத்துகிறாள். உள்ளத்துத் துன்பம் தாங்கவியலாத நிலையில் அதனை எடுத்துப் புறத்தே சொல்லுவது ஆறுதல் பெறும் வழியாகும் என்ற மனவியலே இதற்கடிப்படையாகும்.

தாலாட்டில் கற்பனை:-


குழந்தையைத் தாலாட்டும்போது பல்வேறு வகையாகக் கற்பனை செய்து தாலாட்டுவது இயல்பு அவ்வகையில் இயைபுக் கற்பனையும், மிகைக்கற்பனையும் உண்டு. மனம் உணரும் உணர்ச்சியில் மிகை தோன்றி வளரும், கற்பனையை மிகைக் கற்பனை என்பர். குழந்தை அழும் கண்ணீர் ஆறாகப் பெருகி அதில் முந்நூறுபேர் குளித்தனர். ஐநூறு பேர் கைகழுவினர். அதன்பிறகு அது குளத்தை நிறைத்து, வாய்க்கால் வழியோடி, வழிப்போக்கர் வருத்தம் தீர்த்தது, இஞ்சி, இருவாட்சி, மஞ்சள், மருதாணி, தாழைகட்குப் பாய்ந்து வாழைக் கொல்லையில் வற்றுவதாக அந்தக் கற்பனை அமைந்திருக்கும்.

தாலாட்டில் உறவினர்:-


பெண் திருமணமாகி கணவன் வீடு சென்றாலும் தன் தாய்வீட்டின் பற்று சிறிது அதிகமாகவே இருக்கும். இதன் காரணமாகக் குழந்தையைத் தாலாட்டும் போது தன் பிறந்தவர்களின் பெருமையை உரைக்கும் விதத்தில் நாட்டுப்புற இலக்கியத்தில் பல்வேறு வகையான பாடல்கள் வழங்கி வருகின்றன.

"வெள்ளியால் செய்த ஏட்டில்
வைர எழுத்தாணி கொண்டெழுத
பள்ளியில் சேர்க்க மாமன்
பணிவுடன் வந்திடுவான்"


என்ற பாடலில் ஒரு குழந்தைக்குக் கல்வியின் முக்கியத்துவம் உணர்த்தப்பட்டு, மாமனின் உதவி உரைக்கப்படுகிறது.

குழந்தையை உறங்க வைக்க மட்டும் தாலாட்டு என்ற இந்த நாட்டுப்புற இலக்கியவகை உதவாமல் அக்குழந்தைக்கு முதலில் இசையின் பெருமையை உணர்த்தியும் வளரும் பருவத்தே எவ்வாறெல்லாம் இருக்க வேண்டும் என்பதைச் சொல்லும் விதத்திலும், கல்வியின் சிறப்பை உணர்த்தும் பாடல்களும், உறவின் பெருமைகளைச் சொல்லும் பாடல்களும் சமுதாயச் சிர்கேடுகள் சொல்லும் பாடல்களும் எனப் பல்வேறு பொருள்களில் இந்தத் தாலாட்டு எனும் இலக்கியம் நாட்டுப்புற இலக்கியத்தில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பெற்றிருக்கிறது.

முனைவர் அரங்க. அன்பில்நாதன்




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Aug 05, 2010 1:49 pm

[You must be registered and logged in to see this image.]




[You must be registered and logged in to see this image.]
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Aug 05, 2010 2:06 pm

அறிய தந்தமைக்கு நன்றி தலை ......



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Aug 05, 2010 2:13 pm

இலக்கிய சான்றுகளுடன், நடைமுறை வாழ்க்கையின் யதார்த்தங்களுடன் ஒரு நல்ல தகவல். நன்றி நண்பரே.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Aug 05, 2010 2:30 pm

Kaa Na Kalyanasundaram wrote:இலக்கிய சான்றுகளுடன், நடைமுறை வாழ்க்கையின் யதார்த்தங்களுடன் ஒரு நல்ல தகவல். நன்றி நண்பரே.
[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Aug 05, 2010 2:34 pm

நன்றி மகிழ்ச்சி அன்பு மலர்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Aug 05, 2010 2:41 pm

தாலாட்டு தந்த சுகத்தில்
குழந்தைகள் நிம்மதியாய் உறக்கத்தில்....

அழகிய பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சிவா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக