புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நாட்டுப்புறப் பாடல்கள் Poll_c10நாட்டுப்புறப் பாடல்கள் Poll_m10நாட்டுப்புறப் பாடல்கள் Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian
நாட்டுப்புறப் பாடல்கள் Poll_c10நாட்டுப்புறப் பாடல்கள் Poll_m10நாட்டுப்புறப் பாடல்கள் Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
நாட்டுப்புறப் பாடல்கள் Poll_c10நாட்டுப்புறப் பாடல்கள் Poll_m10நாட்டுப்புறப் பாடல்கள் Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
நாட்டுப்புறப் பாடல்கள் Poll_c10நாட்டுப்புறப் பாடல்கள் Poll_m10நாட்டுப்புறப் பாடல்கள் Poll_c10 
3 Posts - 3%
prajai
நாட்டுப்புறப் பாடல்கள் Poll_c10நாட்டுப்புறப் பாடல்கள் Poll_m10நாட்டுப்புறப் பாடல்கள் Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
நாட்டுப்புறப் பாடல்கள் Poll_c10நாட்டுப்புறப் பாடல்கள் Poll_m10நாட்டுப்புறப் பாடல்கள் Poll_c10 
2 Posts - 2%
Pradepa
நாட்டுப்புறப் பாடல்கள் Poll_c10நாட்டுப்புறப் பாடல்கள் Poll_m10நாட்டுப்புறப் பாடல்கள் Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
நாட்டுப்புறப் பாடல்கள் Poll_c10நாட்டுப்புறப் பாடல்கள் Poll_m10நாட்டுப்புறப் பாடல்கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நாட்டுப்புறப் பாடல்கள் Poll_c10நாட்டுப்புறப் பாடல்கள் Poll_m10நாட்டுப்புறப் பாடல்கள் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
நாட்டுப்புறப் பாடல்கள் Poll_c10நாட்டுப்புறப் பாடல்கள் Poll_m10நாட்டுப்புறப் பாடல்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாட்டுப்புறப் பாடல்கள் Poll_c10நாட்டுப்புறப் பாடல்கள் Poll_m10நாட்டுப்புறப் பாடல்கள் Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
நாட்டுப்புறப் பாடல்கள் Poll_c10நாட்டுப்புறப் பாடல்கள் Poll_m10நாட்டுப்புறப் பாடல்கள் Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
நாட்டுப்புறப் பாடல்கள் Poll_c10நாட்டுப்புறப் பாடல்கள் Poll_m10நாட்டுப்புறப் பாடல்கள் Poll_c10 
231 Posts - 22%
sugumaran
நாட்டுப்புறப் பாடல்கள் Poll_c10நாட்டுப்புறப் பாடல்கள் Poll_m10நாட்டுப்புறப் பாடல்கள் Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
நாட்டுப்புறப் பாடல்கள் Poll_c10நாட்டுப்புறப் பாடல்கள் Poll_m10நாட்டுப்புறப் பாடல்கள் Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
நாட்டுப்புறப் பாடல்கள் Poll_c10நாட்டுப்புறப் பாடல்கள் Poll_m10நாட்டுப்புறப் பாடல்கள் Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
நாட்டுப்புறப் பாடல்கள் Poll_c10நாட்டுப்புறப் பாடல்கள் Poll_m10நாட்டுப்புறப் பாடல்கள் Poll_c10 
18 Posts - 2%
prajai
நாட்டுப்புறப் பாடல்கள் Poll_c10நாட்டுப்புறப் பாடல்கள் Poll_m10நாட்டுப்புறப் பாடல்கள் Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
நாட்டுப்புறப் பாடல்கள் Poll_c10நாட்டுப்புறப் பாடல்கள் Poll_m10நாட்டுப்புறப் பாடல்கள் Poll_c10 
5 Posts - 0%
Rutu
நாட்டுப்புறப் பாடல்கள் Poll_c10நாட்டுப்புறப் பாடல்கள் Poll_m10நாட்டுப்புறப் பாடல்கள் Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டுப்புறப் பாடல்கள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 14, 2010 10:00 pm

முன்னுரை


நாட்டுப்புறப் பாடல்கள் மக்கள் வாழ்வோடு பின்னிப் பிணைந்தவை. மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நாட்டுப்புறப் பாடலைக் கேட்டு மயங்கும் சூழல் அமைந்துள்ளது. நாட்டுப்புறப் பாடலின் இன்ப இசை எல்லா மக்களாலும் வெகுவாகச் சுவைக்கப்படுகின்றது. பாரதியார் கூட,


ஏற்றநீர்ப் பாட்டின் இசையினிலும் நெல்லிடிக்கும்
கோற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும்
சுண்ணம் இடிப்பார்தம் சுவைமிகுந்த பண்களிலும்
பண்ணை மடவார் பழகுபல பாட்டினிலும்
வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக்
கொட்டி இசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும்



நெஞ்சைப் பறிகொடுத்ததாகப் பாடுகின்றார்.


இத்தகைய சிறப்பு வாய்ந்த நாட்டுப்புறப் பாடல்களின் சிறப்பியல்புகளை அறியும் வண்ணம் இப்பாடப் பகுதி அமைக்கப்பட்டுள்ளது.


நாட்டுப்புற இலக்கியங்கள் பற்றிய முந்தைய பாடத்தில் பாடல்கள் உள்ளிட்ட அனைத்து வகை நாட்டுப்புற இலக்கியங்களின் தன்மைகள் பற்றிக் கூறப்பட்டது. நாட்டுப்புற இலக்கியத்தின் ஓர் அங்கமான நாட்டுப்புறப் பாடல்களுக்கும் அந்தத் தன்மைகள் அப்படியே பொருந்தும். இந்தப் பகுதியில் நாட்டுப்புறப் பாடல் பற்றிய வரையறைகள், அவற்றை வகைப்படுத்துதல், நாட்டுப்புறப் பாடல்களைப் பாடும் உத்திகள், தமிழகத்தில் நாட்டுப்புறப் பாடல்கள் சேகரிப்பு ஆகியவை பற்றி விளக்கமாகக் காணலாம். தாலாட்டுப் பாடல்கள், குழந்தைப் பாடல்கள், தொழிற் பாடல்கள், வழிபாட்டுப் பாடல்கள், கொண்டாட்டப் பாடல்கள், இரத்தல் பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள் எனும் பல்வேறு நாட்டுப்புறப் பாடல்கள் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்பட்டுள்ளன.


நாட்டுப்புறப் பாடல் - வரையறைகள்


நாட்டுப்புறப் பாடல்கள் எவை என்பதை அவற்றைக் கேட்கும் போதோ படிக்கும் போதோ கண்டுபிடித்துச் சொல்லி விடலாம். எதைக் கொண்டு அவ்வாறு சொல்ல முடிகிறது? அவற்றின் தன்மைகள் கேட்டுப் படித்த அனுபவத்தில் உங்களுக்குள் பதிவாகியிருக்கின்றன. அவற்றின் வரையறைகளை விளக்கிச் சொல்ல முடியுமா? அறிஞர் பலர் நாட்டுப்புறப் பாடல்களுக்கான வரையறைகளைத் தெரிவித்துள்ளனர். அவற்றை இங்குக் காண்போம்.


நாட்டுப்புறப் பாடல்களை - நாட்டுப் பாடல்கள், நாடோடிப் பாடல்கள், வாய்மொழி இலக்கியம், ஏட்டில் எழுதாக் கவிதைகள், காற்றில் வந்த கவிதைகள், மக்கள் பாடல்கள், மரபுவழிப் பாடல்கள், பாமரர் பாடல்கள், பரம்பரைப் பாடல்கள், நாட்டார் பாடல்கள் எனப் பலவாறு பெயரிட்டு அழைக்கின்றனர். (சு.சண்முக சுந்தரம், நாட்டுப்புறவியல், பக். 186)


"புலவர்களால் உருவாக்கப்பட்டுக் கற்றவர்களால் காப்பாற்றப்படுபவை இலக்கியங்கள். பாமர மக்களால் உருவாக்கப்பட்டு அவர்களாலேயே காப்பாற்றப்படுபவை நாட்டுப்புறப் பாடல்கள். இலக்கிய வரலாறு என்னும் கடலில் சங்கமம் ஆகும் ஆறுகளில் நாட்டுப்புறப் பாடல் என்னும் ஆறு ஒன்றாகும்" என்கிறார் ஆறு. அழகப்பன்.


நாட்டுப்புறப் பாடல் பற்றி விளக்கும்போது சு. சண்முக சுந்தரம் பின் வருவனவற்றைக் குறிப்பிடுகின்றார். " நாட்டுப்புறம் என்பது கிராமமும் கிராமீயம் சார்ந்த இடங்களும் ஆகும். இவ்விடங்களில் பாடப்பட்டு வருகின்ற பாடல்களை நாட்டுப்புறப் பாடல்கள் எனலாம். இப் பாடல்கள் எளியவை; இனியவை; எழுதப்படாதவை. வாயில் பிறந்து செவிகளில் உலவிக் காற்றில் மிதந்து கருத்தில் இனிப்பவை. இவை தனி உரிமை, உடைமை உள்ளவையல்ல. பொது உரிமையும், உடைமையும் கொண்டவை. என்று பிறந்தவை, எவரால் பிறந்தவை என எடுத்துச் சொல்ல இயலாத பண்பும் பாங்கும் இவற்றுக்கு உண்டு."


நாட்டுப்புறப் பாடல்களின் தன்மைகள் பற்றி அவர் மேலும் கூறுகிறார்.


"நாட்டுப்புறப் பாடல்களின் சொற்கள் எளியவை, எங்கும் தேடிப் பெறாதவை; அன்றாட வாழ்வில் புழங்குபவை; கொச்சையானவை. நாட்டுப்புறப் பாடல்களில் அடிகளைத் திரும்பப் பாடும் வழக்கம் உண்டு. இதனால் அவர்களுக்குச் சலிப்பு ஏற்படுவதில்லை. மாறாக, சொன்னதையே சொல்வதன் மூலம் அக்கருத்து வலுப் பெறுகிறது. கேட்கவும் இனிமை பயக்கிறது".



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 14, 2010 10:00 pm

ஆல்பர்ட் பேட்ஸ்லார்டு என்பவர், "வாய்மொழிப் பாடல் என்பது எழுதப் படிக்கத் தெரியாத மக்களால் வாய்மொழியாக நிகழ்த்தப் பெறும் போது உருவாக்கப்படுவது. இது மரபுவழிப் பாடல், நாட்டுப்புறப் பாடல் என்பவற்றிற்குச் சமமானது," என்கிறார். மக்கவுன் என்பவர், "வாய்மொழிப் பாடல்கள் என்பன முழுவதும் பெரிய, சிறிய வாய்பாடுகளால் உருவாக்கப்படுபவை. மாறாக எழுத்திலக்கியங்கள் வாய்பாடுகளற்றவை", என உறுதியாகக் கூறுகின்றார்.


ஆய்வாளர்கள் ஒரு பாடலை வாய்மொழிப் பாடல் என்று குறிப்பிடுவதற்கு மூன்று முக்கிய வழிமுறைகளைச் சுட்டிக் காட்டுகின்றனர். பாடல் ஒன்று உருவாக்கப்படும் அல்லது கட்டமைக்கப்படும் முறை [Composition], அது பரப்பப்படும் முறை [Transmission], அது நிகழ்த்தப் பெறும் முறை என்ற மூன்று முறைகளையும் அடிப்படையாகக் கொண்டு ஒரு பாடல் வாய்மொழி சார்ந்தது என வரையறுக்கின்றனர். சில பாடல்கள் இம் மூன்று முறைகளிலும் பொருந்தி அமைகின்றன. சில, ஒன்று அல்லது இரண்டு முறைகளே பொருந்தி அமைகின்றன.


ஆக இங்கே ஓர் ஐயம் தோன்றி விடுகிறது. நாட்டுப்புறப் பாடல் வாய்மொழி இலக்கியம் மட்டுமா? ஆம். அது வாய்மொழி இலக்கியமே. ஆயினும் படிப்பறிவற்ற நாட்களில் வாய்மொழியாக இருந்தவை படிப்பறிவு, எழுத்து, அச்சு வசதிகள் வந்த பின்னர் அவை எழுத்து இலக்கியமாகவும் மாறிவிடும். எழுதப்பட்டு விடுவதாலோ, எழுதியவர் சிலர் பெயர்கள் பாட்டிலேயே அமைந்திருப்பதனாலோ அவை நாட்டுப்புறப் பாடல் தன்மையை இழந்துவிட மாட்டா என எடுத்துக்காட்டுகிறார் அறிஞர் வானமாமலை.


நாட்டுப்புறப் பாடல்களை நாம் பின்வருமாறு வரையறுத்துக் கொள்ளலாம். மரபு வழியைப் பின்பற்றி யாரேனும் ஒருவரால் படைக்கப்பட்டு, வாய்மொழியாகப் பரவி, ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்களைக் கொண்டதாக, மக்களின் கூட்டுப் படைப்புக்களாக மாறுபவை நாட்டுப்புறப் பாடல்கள். இவை மக்கள்தம் பட்டறிவின் பதிவேடுகள்; மழை நீர் நிலத்தின் தன்மைக்கேற்ப நிறத்திலும் குணத்திலும் மாறுபடுவது போல, வழங்கப்படும் மக்களின் வாழ்க்கைக்கேற்ப - பாடுபவரின் தன்மைக்கேற்ப - காலத்திற்கேற்ப - நிலத்திற்கேற்ப - மாறுபடுபவை; பயன்பாட்டுக்காக உருவாக்கப்படுபவை; பயன்படும் நிலையில் வழக்கில் இருப்பவை; பயன்பாடு இல்லாதபோது உருமாறுபவை அல்லது உதிர்பவை; ஏட்டிலக்கியங்களில் சொல்லப்பட்டவற்றையும் சொல்லப்படாதவற்றையும் சொல்ல மறுக்கப்பட்டவற்றையும் பொருண்மையாகக் கொண்டவை. மக்கள் வாழ்க்கையை உள்ளது உள்ளபடி படம் பிடித்துக் காட்டும் வாழும் இலக்கியமாகத் திகழ்பவை. தோன்றிய காலம், வழங்கி வந்த காலம், வழங்கும் காலம் என்று முக்காலத்தையும் பிரதிபலிப்பவை.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 14, 2010 10:02 pm

நாட்டுப்புறப் பாடல் - வகைப்படுத்தல்


"ஒரே மாதிரியாக இருப்பவற்றை இனங் கண்டு ஒன்றாக்குதலே வகைப்படுத்தல் எனப்படும்" என்கிறார்தே.லூர்து. "நேரின மணியை நிரல்பட வைத்தாங்கு, ஓரினப் பொருளை ஒருபுடை வைப்பது"என்ற ஓத்தின் இலக்கணத்தை வகைப்படுத்தலின் இலக்கணமாகக் கொள்ளலாம். சரியான வகைப்பாடு இல்லையென்றால் எந்த ஒரு துறையும் அல்லது ஆய்வும் சிறப்புற இயலாது. வகைப்படுத்தல் எவ்வளவுக்கெவ்வளவு நுணுக்கமாகவும் செம்மையாகவும் அமைகிறதோ அவ்வளவுக்கவ்வளவு ஆய்வுகள் நுணுக்கமாக அமையும்.


வகைப்படுத்தும் முயற்சி


நாட்டுப்புறப் பாடல்களை வகைப்படுத்தும் முயற்சியில் இத்துறையில் ஈடுபாடு கொண்ட தமிழறிஞர்கள் பலர் பங்கேற்றுள்ளனர். வகைப்படுத்தும் முயற்சிகளைத் தொடக்க காலத்திலிருந்து இன்று வரை வரலாற்று அடிப்படையில், பாடல்களை உதிரியாகப் பெயர் சுட்டிய நிலை, பல்வேறு அளவுகோல்களை வைத்து வகைப்படுத்திய நிலை, ஒரே அளவுகோலை வைத்து வகைப்படுத்திய நிலை என்று மூன்று பிரிவுகளாகப் பிரித்துக் கொள்ளலாம். இந்த மூன்று பிரிவுகளையும் பற்றிய தெளிவான கண்ணோட்டம் புதிய வகைப்பாட்டுக்கான தேவையை உங்களுக்கு உணர்த்தும்.


பாடல்களை உதிரியாகப் பெயர் சுட்டிய நிலை


பாடல்களை அவற்றின் பொருள் அடிப்படையிலோ வேறு எந்த அடிப்படையிலுமோ தொகுத்து வகைப்படுத்தாமல் ஒவ்வொரு பாடலுக்கும் தனித் தலைப்பிட்டுத் தருவதை உதிரியாகப் பெயர் சுட்டிய நிலை எனலாம்.


தமிழக நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுத்து வெளியிடத் தொடங்கிய தொடக்க காலத்தை இப்பிரிவில் அடக்கலாம். தமிழில் முதல் தொகுப்பினை வெளியிட்ட மு. அருணாசலம், பாடல்களைப் பன்னிரண்டு பெயர்களில் உதிரியாகச் சுட்டுகின்றார். சாம்பமூர்த்தி பத்தொன்பது பிரிவுகளில் உதிரியாகப் பெயர் சுட்டியுள்ளார். இக்கால கட்டத்தில் பாடல்களை வகைப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படவில்லை. இதற்கு அடிப்படைக் காரணம் நாட்டுப்புறப் பாடல்களைச் சேகரிக்கும் பணி மிக அருகிக் காணப்பட்டதேயாகும். பாடல்கள் குறைவாகக் கிடைத்ததால் அவற்றை வகைப்படுத்தும் தேவை எழவில்லை. ஆயினும் வகைப்படுத்தும் முயற்சிக்கு இந்தத் தொடக்க காலகட்டமே தூண்டுகோலாக இருந்திருக்க வேண்டும் எனத் தெரிகின்றது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 14, 2010 10:03 pm

பல்வேறு அளவுகோல்களைக் கொண்டு வகைப்படுத்திய நிலை


பாடல் சேகரிக்கும் பணியில் பலர் ஈடுபடத் தொடங்கியதால் பல்வேறு வகைப்பட்ட பாடல்கள் கிடைத்தன. இவை அனைத்தையும் உதிரியாகப் பெயர் சுட்டுவது இயலாததொன்றாகும். எனவே, பாடல்களை உதிரியாகப் பெயர் சுட்டும் நிலைமாறி, தொடர்புடைய பாடல் தொகுதிகளைக் குறிப்பிட்ட தலைப்பின் கீழ் வகைப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. இந்தத் தேவையை உணர்ந்து இதனைத் தொடங்கி வைத்த பெருமை கி.வா. ஜகந்நாதனைச் சாரும். இவரைத் தொடர்ந்து அன்னகாமு, ஆறு. அழகப்பன், மா. கோதண்டராமன், மா. வரதராஜன், சு. சண்முகசுந்தரம் போன்றோர் இம்முயற்சியில் ஈடுபட்டனர்.


கி.வா. ஜகந்நாதன் பாடல் பாடப்படும் சூழல், பாடலால் பயன் பெறுவோர், பாடல் பொருண்மை, பாடல் வடிவம் - கதை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பாடல்களை வகைப்படுத்தினார். பல்வேறு அளவுகோல்களைக் கொண்ட இந்த வகைப்பாடு பொருத்தமற்றதாக உள்ளது என்பதை உணர முடிகின்றது. அதைப் போலவே அன்னகாமு, ஆறு. அழகப்பன், மா. கோதண்டராமன், மா. வரதராஜன் ஆகியோரது வகைப்பாடுகளும் குறைவுடையவையாகவே உள்ளன. சு. சண்முகசுந்தரம் பாடல்கள் பாடப்படும் சூழல், பாடுவோர் ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு வகையாக வகைப்படுத்துகின்றார். பல அளவுகோல்களை வைத்து வகைப்படுத்திய வகைப்பாடுகளுள் இதுவே சிறப்பானதாகக் காணப்படுகின்றது. எனினும் சில வகைப் பாடல்களை இதில் அடக்க இயலவில்லை.


ஒரே அளவுகோலைக் கொண்டு வகைப்படுத்திய நிலை


முதன் முதலில் பொருண்மை என்ற ஒரே அளவுகோலைக் கொண்டு பாடல்களை வகைப்படுத்தியவர் நா. வானமாமலை.

1. தெய்வங்கள்
2. மழையும் பஞ்சமும்
3. தாலாட்டு
4. விளையாட்டு
5. காதல்
6. திருமணம்
7. குடும்பம்
8. சமூகம்
9. உழவும் தொழிலும்
10. ஒப்பாரி

என்று அவர் வகைப்படுத்துகின்றார். இவ்வகைப்பாடு நாட்டுப்புறவியல் ஆய்வாளர்கள் பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுப் பின்பற்றப்பட்டும் வருகின்றது.


ஒரு சூழலில் பாடப்படும் ஒரு பாடல் பல்வேறு பாடல் துணுக்குகளின் சேர்க்கையாகலாம், அவ்வகைப் பாடல்களில் பல்வேறு பொருண்மை அமைந்திருக்கும். பொருண்மை அடிப்படையில் வகைப்படுத்த வேண்டுமானால் ஒரு பாடலைச் சிறு சிறு துண்டுகளாக மாற்ற வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு மாற்றுவது பாடல் பாடுவோரின் திறமை, நினைவாற்றல், உத்திமுறை முதலியனவற்றை அறிந்து கொள்ளப் பயன்படாது. மேலும் காதல் பொருண்மை அமைந்த பாடலைத் தொழில் செய்யும் போது பாடினால் அது தொழிற்பாடலா காதற்பாடலா என்ற ஐயம் ஏற்படும். எனவே பொருண்மையை அடிப்படையாகக் கொண்ட வகைப்பாடு நுண்மையானது அல்ல என்று முடிவு செய்யலாம்.

சா. வளவன் மனிதப் பருவங்கள் என்ற ஒரே அளவுகோலை அடிப்படையாகக் கொண்டு பாடல்களை மழலை, இளமை, முதுமை என்ற மூன்று பிரிவுகளில் அடக்க முயல்கிறார். ஆனால் அவர் இப்பிரிவுகளுக்கான வயது வரையறை எதுவும் செய்யவில்லை. இவர் தாலாட்டு, விளையாட்டுப் பாடல் முதலியனவற்றை மழலையிலும், காதல், தொழில், மணம் தொடர்பான பாடல்களை இளமையிலும், பக்தி, ஒப்பாரி, விழா, பொழுது போக்கு தொடர்பான பாடல்களை முதுமையிலும் அடக்குகின்றார். இந்த வகைப்பாடு பாடுவோரை அடிப்படையாகக் கொண்டது என்று கொண்டால் தாலாட்டினை இளமையிலும் முதுமையிலும் சேர்க்க வேண்டும். அது போல பக்தி, ஒப்பாரி, விழா, பொழுதுபோக்கு முதலியனவற்றை இளமையிலும் முதுமையிலும் அடக்கலாம். இந்த வகைப்பாடு பாடலின் பொருண்மையை அடிப்படையாகக் கொண்டது எனக் கொண்டால், இளமையில் பக்தி, ஒப்பாரி, பொழுதுபோக்கு முதலிய பொருண்மையுடைய பாடல்களைப் பாடமாட்டார்கள் என்றோ முதுமையில் காதல், மணம் போன்ற பொருண்மை அமைந்த பாடல்களைப் பாடமாட்டார்கள் என்றோ கூறமுடியாது. எனவே மனிதப் பருவங்களை அடிப்படையாகக் கொண்ட வகைப்பாடும் பொருத்தமற்றதாகவே தெரிகின்றது.


புதிய வகைப்பாடு


இதுவரை கண்டவற்றால் தமிழக நாட்டுப்புறப் பாடல்களுக்கு ஒரு புதிய வகைப்பாடு தேவை என்பதை உணர்ந்து கொள்ள முடிகின்றது. நாட்டுப்புறப் பாடல்களை அவை வழங்கும் ‘சமுதாயச் சூழல்’ அல்லது ‘வாழ்க்கைச் சூழல்’ என்ற ஒரே அளவுகோலை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்துவதே சிறப்பானதாகவும் பொருத்தமானதாகவும் தெரிகின்றது. (இதனை முதலில் அறிமுகப்படுத்தியவர் ஆறு. இராமநாதன்) சூழலை அடிப்படையாகக் கொண்டு தமிழக நாட்டுப்புறப் பாடல்களைத் தாலாட்டு, குழந்தை வளர்ச்சி நிலைப் பாடல்கள், விளையாட்டுப் பாடல்கள், தொழிற் பாடல்கள், வழிபாட்டுப் பாடல்கள், கொண்டாட்டப் பாடல்கள், இரத்தல் பாடல்கள், இழப்புப் பாடல்கள் என்று எட்டுப் பிரிவுகளாக வகைப்படுத்திக் கொள்ளலாம்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 14, 2010 10:05 pm

நாட்டுப்புறப் பாடல்கள் - வகைகள்


மேற்காட்டிய எட்டுவகை நாட்டுப்புறப் பாடல்களையும் இனித் தனித் தனியாகப் பார்க்கலாம். அவற்றுக்குரிய சூழலை அறிந்து கொள்ளலாம்.


தாலாட்டுப் பாடல்கள்


குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்தும் அல்லது தூங்கச் செய்யும் சூழலில் பொதுவாகத் தாயினால் தாலாட்டுப் பாடல் பாடப்படுகின்றது. "தால்" என்ற சொல்லுக்கு நாக்கு என்று பொருள். நாவினை ஆட்டிப் பாடுவதால் தாலாட்டு என்று பெயர் பெற்றது. தாலாட்டு பேச்சு வழக்கில் ரோராட்டு, ஆராட்டு, ராராட்டு, ஓராட்டு, தாராட்டு என்றெல்லாம் வழங்கப்படுகின்றது. இவை நாவினை ஆட்டிப் பாடும்போது எழும் ஒலியால் பெற்ற பெயர்கள். பாடலமைப்பாலும், பொருண்மையாலும், பாடப்படும் சூழலாலும் தாலாட்டினைத் தனி வகையாகக் கருதலாம். இதனைக் குழந்தையின் தாய், பாட்டி, அத்தை, சகோதரி, செவிலி முதலியோர் பாடுவர். ஆண்கள் தாலாட்டுப் பாடுவதில்லை. விதிவிலக்காகச் சில நேரங்களில் பாடுவதுண்டு.


தாலாட்டுப் பாடல்களின் பொருளாக அமைவனவற்றைத் தொகுத்துப் பின் வருவனவற்றைத் தருகின்றார் பா.ரா. சுப்பிரமணியன்.


1. குழந்தை 2. அதற்கு வேண்டிய சாதனங்கள் 3. உறவினர்கள்


இப்பொருள்களின் விரிவாக அவர் கூறுவன :


1. குழந்தையை மையப் பொருளாகக் கொண்ட பாடல்களின் விவரங்கள்:
அ. குழந்தையின் அழகு, அருமந்தத்தன்மை
(அருமருந்தன்ன தன்மை), எதிர்காலம் இவற்றைப் பாராட்டல்.
ஆ. குழந்தையைப் பெறத் தாய் செய்த நோன்பு.


2. சாதனங்களை மையமாகக் கொண்ட பாடல்களின் விவரங்கள்:
அ. சாதனங்களின் அழகு, வேலைப்பாடு ஆகியவற்றைப் பாராட்டல்.
ஆ. அந்தச் சாதனங்களைச் செய்தவர்களுக்கும் பரிசாக அளித்தவர்களுக்கும் நன்றி கூறல்.


3. உறவினர்களை மையமாகக் கொண்ட பாடல்களின் விவரங்கள்:
உறவினர்களின் செயல் வீரத்தை, ஈகைத் திறனை, சொல் வளத்தைப் பாராட்டல்.


இப்பொருள்களும் அவற்றின் உட்கூறுகளும் தாலாட்டுப் பாடல்களுக்குரிய அடிப்படையான கருத்துகளாகின்றன.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 14, 2010 10:07 pm

நாட்டுப்புறப் பாடல்களுள் தாலாட்டுப் பாடல் வடிவம் அனைத்துச் சாதி மக்களிடமும் காணப்படுகின்றது. இன்றைய நிலையில் தாலாட்டுப் பாடுவது அருகி வருகின்றது. எதிர்காலத்தில் இப்பழக்கம் மறைந்து விடவும் வாய்ப்புள்ளது. பின்வரும் பாடல் குழந்தையை மையமாகக் கொண்ட தாலாட்டுப் பாடல் ஒன்றின் ஒரு பகுதி ஆகும். குழந்தையின் அருமையை, அது தனக்கு எத்தகைய இனிமையானது என்பதைத் தாய் மகிழ்ந்து பாடுகிறாள்.


ஆராரோ ஆரிராரோ - என் கண்ணே
ஆரிராரோ ஆராரோ
என் கண்ணே நவமணியே - என் அப்பா நீ
கல்கண்டு சர்க்கரையோ
என் தேனோ தினைமாவோ - என் கண்ணே நீ
தெகுட்டாத தேங்கனியோ
என் வெள்ளி நிலவோ நீ - என் தம்பிய
வெளிச்சமுள்ள பால்நிலவோ
என் காய்க்கப்பட்ட தோப்புலியும் - என் தம்பிய நீ
தனியப்பட்ட என் மாங்கனியோ.



[தெகுட்டாத - திகட்டாத; தோப்புலியும் - தோப்பிலேயும்]
[ஆறு. இராமநாதன்; 2001, தொகுதி - 1; பக் - 112, 113]


குழந்தைக்குரிய கருவிகள் அவற்றைக் கொடுத்தோர் பற்றிய விவரங்கள் இடம்பெறும் தாலாட்டு :


பால் குடிக்கக் கிண்ணி
பழந்திங்கச் சேணாடு
நெய் குடிக்கக் கிண்ணி
முகம் பார்க்கக் கண்ணாடி
கொண்டைக்குக் குப்பி
கொண்டு வந்தான் தாய்மாமன்


(நா. வானமாமலை, 1964, ப. 82)


குழந்தையைத் தாலாட்டும் போது அதன் உறவினர்கள் - குறிப்பாகத் தாய் மாமன் பெருமையைச் சொல்லித் தாலாட்டும் பாடல்கள் பல உண்டு.

செக்கச் சிவப்பரோ - உங்க மாமா
சீமைக்கோர் அதிபதியோ
அழகு சிவப்பரோட - ஐயா நீ
அருமை மருமகனோ ? ....
முத்தளக்க நாழி
முதலளக்கப் பொன்னாழி
வச்சளக்கச் சொல்லி
வரிசையிட்டார் தாய்மாமன்


(நா. வானமாமலை, 1964, பக். 90-91)


குழந்தை வளர்ச்சி நிலைப் பாடல்கள்


குழந்தை வளர்ச்சி நிலையின் ஒவ்வொரு கட்டத்திலும் பாடல்கள் மாறுபடுகின்றன. குழந்தை தவழும் போதும், உண்ணும் போதும், சாய்ந்தாடும் போதும், கை வீசும் போதும், கை தட்டும் போதும் பெற்றோரும் உற்றாரும் மகிழ்ந்து பாடி அச்செயல்களை மேலும் செய்யுமாறு குழந்தைகளைத் தூண்டுவர். மேலும் பெற்றோர் அம்புலி காட்டும் போதும், நாப்பயிற்சி அளிக்கும் போதும், சிரிப்பூட்டும் போதும் பாடல்களைப் பாடுவதும் பாடுவிப்பதும் உண்டு. பின்வருவன குழந்தைக்கு நாப்பயிற்சி அளிக்கப் பாடப்படும் பாடல்கள் ஆகும்.


1. "இது யாரு தச்ச சட்டை?
எங்க தாத்தா தச்ச சட்டை."
2. "கடலிலே ஒரு உரல் உருளுது பெரளுது
தத்தளிக்குது தாளம் போடுது."
3. ஓடுற நரியிலே ஒரு நரி சிறுநரி
சிறு நரி முதுகிலே ஒரு பிடி நரைமயிர் (ஓடுற...)


விளையாட்டுப் பாடல்கள்


குழந்தைகள் ஓடியாடி விளையாடும் சிறுவர்களாக மாறத் தொடங்கும் போது பெரியோர்களாலும் சற்று வளர்ச்சியடைந்த சிறுவர்களாலும் அவர்களுக்குப் பல்வேறு விளையாட்டுகள் கற்றுத் தரப்படுகின்றன. அந்த விளையாட்டுகள் பலவற்றுள் பாடல்கள் இன்றியமையாத பங்கு வகிக்கின்றன. இவ்வாறு விளையாடும் சூழல்களில் பாடப்படும் பாடல்களை விளையாட்டுப் பாடல்கள் என்ற பிரிவில் அடக்கலாம். இந்த விளையாட்டுக்களை உடற்பயிற்சி விளையாட்டு [Physical Play], வாய்மொழி விளையாட்டு [Verbal Play] என இரண்டாக வகைப்படுத்தலாம்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 14, 2010 10:08 pm

உடற்பயிற்சி விளையாட்டு


உடலுக்குப் பயிற்சி கொடுக்கும் விளையாட்டுகளை உடற்பயிற்சி விளையாட்டுகள் எனலாம். உடல் வலிவு பெற இத்தகைய விளையாட்டுகள் உதவுகின்றன. சடுகுடு, திம்பி, கண்ணாமூச்சி, வெயிலா நிழலா, ஏழாங்காய், கோலி முதலிய விளையாட்டுகள் இப்பிரிவில் சேரும். மேலும் வாழ்வில் நடைபெறும் வீடு கட்டல், திருமணம், இறப்புச் சடங்கு முதலியவற்றைத் தாங்கள் கண்டவாறே நடித்து விளையாடுவதைக் குழந்தைகளிடம் காண முடிகின்றது. இத்தகைய விளையாட்டுகளைப் போலச்செய்யும் விளையாட்டுகள் [Imitation Plays] என்று அழைக்கலாம். இவை பெரும்பாலும் உடற்பயிற்சி விளையாட்டுகளாகவே காணப்படுகின்றன.


காளை காளை வருகுதுபார்
கருப்புக் காளை வருகுதுபார்
சூரியனுக்கு வேண்டிவிட்ட
துள்ளுக்காளை வருகுதுபார்



[துள்ளுக்காளை - துடிப்பான அடக்க முடியாத காளை]
[ஆறு. இராமநாதன்; 2001, தொகுதி - 1, பக் - 126]


மேற்கண்ட பாடல் ‘சடுகுடு’ விளையாட்டின் போது பாடப்படும் பாடல். பாடிச் செல்பவர் எதிரணியின் எல்லைக்குள் நுழையும்போது அந்த அணியினரைச் சீண்டுவது போலவும் சவால் விடுவது போலவும் இதைப் பாடுகிறார். இந்தப் பாடலைப் பாடும் போது பாடலின் இறுதிச் சொல் (வருகுதுபார்) திரும்பத் திரும்பப் பாடப்படும். இந்த அமைப்பு அனைத்துச் சடுகுடுப் பாடல்களிலும் இருக்கும்.


கண்ணாமூச்சி விளையாட்டில் குழந்தைகள் ஒருவர் கண்களை கட்டி விட்டு மற்றவர்கள் ஓடி ஒளிந்து கண்டுபிடித்து விளையாடும் போது பாடும் பாடல் ஒன்று.


"கண்ணாமூச்சி டேடே
காட்டுமூச்சி டேடே
உனக்கொரு பழம் எனக்கொரு பழம்
கொண்டுவா"




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 14, 2010 10:09 pm

வாய்மொழி விளையாட்டு


ஓரிடத்தில் இருந்துகொண்டே வாய்மொழியாக விளையாடும் விளையாட்டுக்களை வாய்மொழி விளையாட்டுக்கள் எனலாம். ஒருவரையொருவர் கேலி செய்து பாடும் கேலி விளையாட்டு, ஒருவருக்கொருவர் திறமைகளைக் காட்டிக் கொள்ளும் வினா விடை விளையாட்டு முதலியன இப்பிரிவில் சேரும். புதிர் விளையாட்டும் இப்பிரிவில் சேருமாயினும் புதிர்களை நாட்டுப்புற இலக்கியங்களின் ஒரு தனி வகையாகக் கொள்ளுவதால் அவற்றை இங்குச் சேர்க்கவில்லை.


அதோபார் காக்கா
கடையில விக்குது சீக்கா
பொண்ணுவரா ஜோக்கா
ஏஞ்சிபோடா மூக்கா



[சீக்கா - சிகைக்காய்; ஏஞ்சி - எழுந்து]
[ஆறு. இராமநாதன்; 2001, தொகுதி - 1, பக் - 135]


இந்தப் பாடல் கேலி செய்து பாடும் பாடல் ஆகும். ஒவ்வொரடியிலும் இறுதி எழுத்து ஒன்றி வரப்் பாடப்பட்டுள்ளது. இப்பாடலில் ஓசைத் தொடர்பு அன்றிப் பொருள் தொடர்ச்சி ஏதுமில்லை.


கொழுக்கட்ட கொழுக்கட்ட ஏன் வேவல?
மழபெஞ்சுது நான் வேவல.
மழையே மழையே ஏன் பேஞ்ச?
புல்லு வளர நான் பேஞ்சேன்.
புல்லே புல்லே ஏன் வளந்த?
மாடு திண்ண நான் வளந்தேன்.
மாடே மாடே ஏன் திண்ண?
மாட்டுக்காரன் அவுத்துஉட்டான் நான் திண்ணேன்.
மாட்டுக்காரா மாட்டுக்காரா ஏன் அவுத்து விட்டே?
புள்ள அழுவுது நான் அவுத்துவிட்டேன்
புள்ள புள்ள ஏன் அழுவுற?
எறும்பு கடிச்சி நான் அழுவுறன்.
எறும்பே எறும்பே ஏன் கடிச்சே?
என் புத்துக்குள்ள கையஉட்டா சும்மா இருப்பேனா?



[ஆறு. இராமநாதன்; 2001, தொகுதி-1, பக்-140, 141]

இந்தப் பாடல் வினா - விடைப் பாடல் ஆகும். சிறுவர் சிறுமியர் விரும்பிப் பாடும் பாடல் வகைகளுள் இதுவும் ஒன்று. வினாக்கள் விடைகளிலிருந்து பிறப்பதைப் பாருங்கள். விடைகளில் சுவைக்கத் தக்க ஒரு விளையாட்டுத் தன்மை இருப்பதையும் இறுதிவிடை, வினாவுவோர் விடை சொல்வோர் இருவரும் சேர்ந்து சிரித்து மகிழத்தக்க முத்தாய்ப்பாக இருப்பதையும் கவனியுங்கள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 14, 2010 10:12 pm

தொழிற் பாடல்கள்


வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபட வேண்டியுள்ளது. செய்யும் தொழில்கள் வேறுபட்டாலும் கூட அவற்றின் நோக்கம் ஒன்றே. தொழிலில் ஈடுபட்டிருக்கும் சூழலில் தொழிலின் கடுமை தெரியாமல் இருக்கும் பொருட்டும் தொழிலுக்குத் துணைபுரிய வேண்டியும் பாடல்கள் பாடப்படுவதுண்டு. இவ்வகைப் பாடல்களைத் தொழிற் பாடல்கள் எனலாம்.


தொழிற் பாடல்களின் உள்ளடக்கங்களைப் பார்க்கும் போது தொழில்களை வேளாண்மைத் தொழில்கள் என்றும் வேளாண்மையல்லாத பிற தொழில்கள் என்றும் இரண்டாகப் பிரித்துக் கொள்ளலாம்.


வேளாண்மைத் தொழில்கள்



வேளாண்மை செய்யும் சூழல்களில் பாடப்படும் பாடல்கள் அந்தந்தத் தொழில் பிரிவைக் குறிக்கும் பெயர்களாலேயே சுட்டப்படுகின்றன. சான்றாக, ஏற்றமிறைக்கும் சூழலில் ஏற்றமிறைப்போர் பாடும் பாடல்களை ஏற்றப் பாடல்கள் என்று அழைப்பதைக் காணலாம். இவ்வாறே ஏர்ப்பாடல், நடவுப் பாடல், களை வெட்டும் பாடல், அறுவடைப் பாடல் என்று பிற சூழல்களில் பாடப்படும் பாடல்கள் பெயர் சுட்டி அழைக்கப்படுகின்றன.


வேளாண்மைத் தொழில் பாடலுக்குச் சான்றாகப் பின்வரும் ஏர்ப்பாடலைக் கூறலாம்.


காளேஏஏ நல்ல சந்திரரே சூரியரே என்தோழி காளையரே
எங்கள் சாமி பகவானே
காளேஏஏ அங்க காளே கரப்புக்காளே என்தோழி காளையரே
அங்க கண்ணாட்டி மயிலக்காளே
காளேஏஏ அங்க சூடுபோட்ட வெள்ளக்காளே என்தோழி காளையரே
அங்க சுத்துதங்க மத்தியானம்
காளேஏஏ அங்க கூடைமேல கூடடுக்கி என்தோழி காளையரே
அங்க கோயிலுக்குப் போறபெண்ணே
காளேஏஏ அங்க கூடைமேலே சிந்தையா என்தோழி காளையரே
அங்க குணமெல்லாம் மாறுதங்க.



[கூடடுக்கி - கூடை அடுக்கி]
[ஆறு. இராமநாதன்; 2001, தொகுதி-1, பக்-149]


சந்திர சூரியரை வணங்கித் தொடங்கப்படும் உழவுத் தொழிலைக் குறிக்கும் இப்பாடல் முதலில் காளைகளை நலம் பாராட்டுகிறது. பின்னர்க் கோயிலுக்குப் போகிற பெண்ணைப் பற்றிச் சுட்டுகிறது.


களையெடுக்கிறவர்கள் பாட்டு. அவர்கள் களையை மட்டுமா கவனிக்கிறார்கள்? பாடுகிறவன் கவனம் எப்படிப் போகிறது, பாருங்கள்:


கண்ணாடி வளையல் போட்டுக்
களையெடுக்க வந்த புள்ள
கண்ணாடி மின்னலில
களையெடுப்புப் பிந்துதடி.



(நா. வானமாமலை, 1964, பக். 402)



களையெடுப்பு எனும் புறப்பொருளில் காதல் என்னும் அகப்பொருளும் கலந்து விடுகிறது. பல பாடல்களில் எளிய மக்களின் இயல்பான காதலுணர்வு தொழிலோடு சேர்ந்து இணைந்து வருவதைப் பார்க்க முடியும்.


அத்தை மகன் கிணற்றில் கமலை கட்டித் தண்ணீர் பாய்ச்சுகிறான். மாமன் மகள் பாடுகிறாள். அவள் ஆசையில் அந்த நீர் சர்க்கரையாகிறது.


செடியோரம் கெணறு வெட்டி
செவலைக் காளை ரெண்டு கட்டி
அத்தைமகன் ஓட்டும் தண்ணி
அத்தனையும் சக்கரையே


(நா. வானமாமலை, 1964, ப. 406)



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 14, 2010 10:13 pm

வேளாண்மையல்லாத பிற தொழில்கள்


வேளாண்மை அல்லாத பிற தொழில்கள் செய்யும் போது பாடப்படும் பாடல்களையும் அந்தத் தொழில் பெயர்களாலேயே சுட்டலாம். நெல் குற்றும் பாடல், சுண்ணாம்பு இடிக்கும் பாடல், பாரஞ்சுமக்கும் பாடல், வண்டியோட்டும் பாடல், மீன் பிடிப்புப் பாடல் முதலியன இவ்வகையுள் அடங்கும்.


இவ்வகைக்குச் சான்றாகப் பின்வரும் மாடு மேய்ப்புப் பாடலைக் கூறலாம்.

டே என்னாரே டேயோ டேயோ - அம்மா
டே என்னாரே டேயோ டேயோ
ஓட்டுங்கடா மாட்ட நல்ல - அங்க
உளுத்தங் கொல்ல ஓரம்போகும்
சாயுங்கடா மாட்டநல்ல - தம்பி
சாமங்கொல்ல ஓரம்போகும்
என் அண்ணன்மாரே தம்பிமாரே - அங்க
எடுக்க வாரும் எந்தன் பில்ல
அங்க பொழுதுபோச்சே நேரமாச்சே - அங்க
ஓட்டுங்கடா மாட்டநல்ல - அங்க
உளுத்தங் கொல்ல ஓரம்போகும் - அங்க
சாயுங்கடா மாட்டநல்லா அங்க
சாமங்கொல்ல ஓரம் போகும்



[வரிகள் 1,2 - மாடு ஓட்டும் ஒலிக் குறிப்பு; எந்தன் பில்ல - எந்தன்புல்லை
(அறுத்துக் கட்டி வைத்திருக்கும் புல்லை)]
[ஆறு. இராமநாதன்; 2001, தொகுதி-2, பக் - 57]


தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள், குடியானவர்கள் என்று அழைக்கப்பட்ட சாதியினரிடம் மாடு மேய்க்கும் பணியில் அமர்வர். ஒரு வீட்டை அல்லது சில வீடுகளைச் சேர்ந்த மாடுகளை ஓட்டிச் சென்று மாடு மேய்ப்பர். இந்தப் பாடல் அது போன்ற சூழல்களில் பொழுது போக்குவதற்காகப் பாடப்பட்ட பாடல்களுள் ஒன்று.


மீனவர்கள் படகில் துடுப்புத் தள்ளுகிறார்கள், வானம் கிடுகிடுக்கிறது; இடி முழங்குகிறது.


மானம் நல்ல ஏலேலோ கிடுகிடுங்க ஐலலோ
கிடுகிடுங்க ஐலலோ
மத்தளமே ஏலேலோ ஓசையிட ஐலலோ
ஓசையிட ஐலலோ



(சு. சண்முகசுந்தரம், 1975 ப. 198)


என்று பாடுகிறார்கள்.


சாலை அமைப்போர் மண்ணை வெட்டிப் போடும் போது,


ஒரு தட்டு ஏலேலோ மண்ணெடுத்து ஐலசா
நான் போட்ட ஏலேலோ ரயிலுரோட்டு ஐலசா.



(சு. சண்முகசுந்தரம், 1985, ப. 197)


என்று பாடுகிறார்கள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக