புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாக்கடைகள் பரவக்கூடாது... ஆனால், பூக்கடைகள் பரவவேண்டும்! Poll_c10சாக்கடைகள் பரவக்கூடாது... ஆனால், பூக்கடைகள் பரவவேண்டும்! Poll_m10சாக்கடைகள் பரவக்கூடாது... ஆனால், பூக்கடைகள் பரவவேண்டும்! Poll_c10 
48 Posts - 45%
heezulia
சாக்கடைகள் பரவக்கூடாது... ஆனால், பூக்கடைகள் பரவவேண்டும்! Poll_c10சாக்கடைகள் பரவக்கூடாது... ஆனால், பூக்கடைகள் பரவவேண்டும்! Poll_m10சாக்கடைகள் பரவக்கூடாது... ஆனால், பூக்கடைகள் பரவவேண்டும்! Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
சாக்கடைகள் பரவக்கூடாது... ஆனால், பூக்கடைகள் பரவவேண்டும்! Poll_c10சாக்கடைகள் பரவக்கூடாது... ஆனால், பூக்கடைகள் பரவவேண்டும்! Poll_m10சாக்கடைகள் பரவக்கூடாது... ஆனால், பூக்கடைகள் பரவவேண்டும்! Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
சாக்கடைகள் பரவக்கூடாது... ஆனால், பூக்கடைகள் பரவவேண்டும்! Poll_c10சாக்கடைகள் பரவக்கூடாது... ஆனால், பூக்கடைகள் பரவவேண்டும்! Poll_m10சாக்கடைகள் பரவக்கூடாது... ஆனால், பூக்கடைகள் பரவவேண்டும்! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
சாக்கடைகள் பரவக்கூடாது... ஆனால், பூக்கடைகள் பரவவேண்டும்! Poll_c10சாக்கடைகள் பரவக்கூடாது... ஆனால், பூக்கடைகள் பரவவேண்டும்! Poll_m10சாக்கடைகள் பரவக்கூடாது... ஆனால், பூக்கடைகள் பரவவேண்டும்! Poll_c10 
3 Posts - 3%
jairam
சாக்கடைகள் பரவக்கூடாது... ஆனால், பூக்கடைகள் பரவவேண்டும்! Poll_c10சாக்கடைகள் பரவக்கூடாது... ஆனால், பூக்கடைகள் பரவவேண்டும்! Poll_m10சாக்கடைகள் பரவக்கூடாது... ஆனால், பூக்கடைகள் பரவவேண்டும்! Poll_c10 
2 Posts - 2%
சிவா
சாக்கடைகள் பரவக்கூடாது... ஆனால், பூக்கடைகள் பரவவேண்டும்! Poll_c10சாக்கடைகள் பரவக்கூடாது... ஆனால், பூக்கடைகள் பரவவேண்டும்! Poll_m10சாக்கடைகள் பரவக்கூடாது... ஆனால், பூக்கடைகள் பரவவேண்டும்! Poll_c10 
1 Post - 1%
Manimegala
சாக்கடைகள் பரவக்கூடாது... ஆனால், பூக்கடைகள் பரவவேண்டும்! Poll_c10சாக்கடைகள் பரவக்கூடாது... ஆனால், பூக்கடைகள் பரவவேண்டும்! Poll_m10சாக்கடைகள் பரவக்கூடாது... ஆனால், பூக்கடைகள் பரவவேண்டும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சாக்கடைகள் பரவக்கூடாது... ஆனால், பூக்கடைகள் பரவவேண்டும்! Poll_c10சாக்கடைகள் பரவக்கூடாது... ஆனால், பூக்கடைகள் பரவவேண்டும்! Poll_m10சாக்கடைகள் பரவக்கூடாது... ஆனால், பூக்கடைகள் பரவவேண்டும்! Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
சாக்கடைகள் பரவக்கூடாது... ஆனால், பூக்கடைகள் பரவவேண்டும்! Poll_c10சாக்கடைகள் பரவக்கூடாது... ஆனால், பூக்கடைகள் பரவவேண்டும்! Poll_m10சாக்கடைகள் பரவக்கூடாது... ஆனால், பூக்கடைகள் பரவவேண்டும்! Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
சாக்கடைகள் பரவக்கூடாது... ஆனால், பூக்கடைகள் பரவவேண்டும்! Poll_c10சாக்கடைகள் பரவக்கூடாது... ஆனால், பூக்கடைகள் பரவவேண்டும்! Poll_m10சாக்கடைகள் பரவக்கூடாது... ஆனால், பூக்கடைகள் பரவவேண்டும்! Poll_c10 
14 Posts - 4%
prajai
சாக்கடைகள் பரவக்கூடாது... ஆனால், பூக்கடைகள் பரவவேண்டும்! Poll_c10சாக்கடைகள் பரவக்கூடாது... ஆனால், பூக்கடைகள் பரவவேண்டும்! Poll_m10சாக்கடைகள் பரவக்கூடாது... ஆனால், பூக்கடைகள் பரவவேண்டும்! Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
சாக்கடைகள் பரவக்கூடாது... ஆனால், பூக்கடைகள் பரவவேண்டும்! Poll_c10சாக்கடைகள் பரவக்கூடாது... ஆனால், பூக்கடைகள் பரவவேண்டும்! Poll_m10சாக்கடைகள் பரவக்கூடாது... ஆனால், பூக்கடைகள் பரவவேண்டும்! Poll_c10 
6 Posts - 2%
Jenila
சாக்கடைகள் பரவக்கூடாது... ஆனால், பூக்கடைகள் பரவவேண்டும்! Poll_c10சாக்கடைகள் பரவக்கூடாது... ஆனால், பூக்கடைகள் பரவவேண்டும்! Poll_m10சாக்கடைகள் பரவக்கூடாது... ஆனால், பூக்கடைகள் பரவவேண்டும்! Poll_c10 
4 Posts - 1%
jairam
சாக்கடைகள் பரவக்கூடாது... ஆனால், பூக்கடைகள் பரவவேண்டும்! Poll_c10சாக்கடைகள் பரவக்கூடாது... ஆனால், பூக்கடைகள் பரவவேண்டும்! Poll_m10சாக்கடைகள் பரவக்கூடாது... ஆனால், பூக்கடைகள் பரவவேண்டும்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
சாக்கடைகள் பரவக்கூடாது... ஆனால், பூக்கடைகள் பரவவேண்டும்! Poll_c10சாக்கடைகள் பரவக்கூடாது... ஆனால், பூக்கடைகள் பரவவேண்டும்! Poll_m10சாக்கடைகள் பரவக்கூடாது... ஆனால், பூக்கடைகள் பரவவேண்டும்! Poll_c10 
3 Posts - 1%
Rutu
சாக்கடைகள் பரவக்கூடாது... ஆனால், பூக்கடைகள் பரவவேண்டும்! Poll_c10சாக்கடைகள் பரவக்கூடாது... ஆனால், பூக்கடைகள் பரவவேண்டும்! Poll_m10சாக்கடைகள் பரவக்கூடாது... ஆனால், பூக்கடைகள் பரவவேண்டும்! Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
சாக்கடைகள் பரவக்கூடாது... ஆனால், பூக்கடைகள் பரவவேண்டும்! Poll_c10சாக்கடைகள் பரவக்கூடாது... ஆனால், பூக்கடைகள் பரவவேண்டும்! Poll_m10சாக்கடைகள் பரவக்கூடாது... ஆனால், பூக்கடைகள் பரவவேண்டும்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாக்கடைகள் பரவக்கூடாது... ஆனால், பூக்கடைகள் பரவவேண்டும்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 15, 2010 2:19 am

காகவிகள், ஞானிகள், புலவர்கள் போன்றவர்களின் சொல், செயல், இவற்றைப் புரிந்துகொள்வது கொஞ்சம் கடினம்தான். தமிழில் சங்க இலக்கியத்தில் ஓர் அரசனை வாழ்த்தும்போது, ‘‘உன் வெண்கொற்றக் குடை மடங்கட்டும்’’ என்றார் ஒரு புலவர். ‘இது அமங்கலமான வாழ்த்தாயிற்றே!’ என்று பலர் திகைத்தவுடன் விளக்கம் சொன்னார்.

‘‘எப்போதும் எங்கு தன் ஆட்சி நடக்கிறதோ, அங்கெல்லாம் அரசன் தன் வெண் கொற்றக்குடையை விரித்துக் கொண்டுதான் போகவேண்டும். அதுதான் புகழ். ஆனால், அவன் இறைவன் திருக்கோயிலுக்குள் நுழையும்போது மட்டும் அரசரின் வெண்குடை மடக்கப்படும். அரசன் அடிக்கடி இறைவனை வணங்கும் பேறு பெற்றவன் ஆகட்டும் என்பதே வாழ்த்தின் உண்மைப் பொருள்!’’ என்றார். எல்லோரும் ‘"ஆஹா... ஆஹா..."’ என்றார்கள்.

இதுபோலவே இன்னொரு நிகழ்ச்சி!

ஒரு சைவ மடத்தில் ஆட்சியில் இருந்த சந்நிதானம் இறைவனடி சேர்ந்தார். அடுத்து அவரால் நியமிக்கப் பட்ட இளைய சந்நிதானம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். அவர் கொலு என்கிற தர்பாரில் அமர்ந்ததும் ஆதீனப் புலவர்கள் எல்லாம் புதிதாகப் பொறுப்பேற்ற மடாதிபதியைப் புகழ்ந்து தள்ளினார்கள். அவரும் புன்முறுவலோடு புகழாரங்களை ஏற்றுப் பொன்னாரங் களைப் பரிசாக வீசினார்.

மிக மூத்த ஆதீனப் புலவர் கடைசியாகப் பேசும் போது, ‘‘எல்லோரும் இந்தச் சுவாமிகளை வெகுவாகப் புகழந்தார்கள். பழைய சந்நிதானத்தைவிட இவர் அதிகம் படித்தவர், திறமைசாலி என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், அவருக்கு இவர் ஈடாக மாட்டார். எவ்வளவு சொன்னாலும் பழைய சந்நிதானம் மாதிரி இவரால் ஒரு காரியம் மட்டும் செய்ய முடியாது!’’ என்று சொல்லி விட்டுச் சபையோரை மௌனமாகப் பார்த்தார். சபையில் அதிர்ச்சியான அமைதி. சந்நிதானம்கூடச் சங்கடப்பட்டு விட்டார்.

மூத்த ஆதீனப் புலவர் தொடர்ந்து, ‘‘இந்த சுவாமிகள் என்ன முயன்றாலும் நமது பழைய சுவாமிகள் செய்த ஒரு காரியத்தைச் செய்யவே முடியாது. அது என்ன தெரியுமா? இந்த மடத்தின் அருளாட்சிக்குத் தமக்குப் பிறகு தக்கவர் யார் என்று ஆராய்ந்து தேடி, தம்மை விட மிகத் திறமைசாலி யான இந்தப் புதிய சுவாமிகளைப் பழைய சுவாமிகள் நியமித்தார்கள் அல்லவா?

இப்படிச் செய்ய இந்தச் சுவாமிகளால் முடியுமோ? முடியாது... ஏனென்றால், நம் புதிய ஆதீனத்தைவிட கெட்டிக்காரரான ஒரு இளையவர் இவருக்கு எக்காலத்திலும் கிடைக்க வாய்ப்பே இல்லையே!’’ என்றதும் சபை கரவொலி யில் அதிர்ந்தது. புதிய மடாதிபதியின் முகத்தில் புன்னகை மின்னியது.

இவைகூட சாமர்த்தியம் என்று வைத்துக் கொண்டால், இவற்றைவிடவும் நுட்பமான ஒரு நிகழ்வு! குருநானக் வாழ்வில் நடந்தது.

சீக்கியர்களின் மதகுரு குருநானக். அவர் தமது பிரியமான சீடர் குழாத்துடன் கிராமம் கிராமமாகச் சென்று நல்லொழுக்கம், இறைஉணர்வு, சகோதர நேயம் இவற்றை மக்கள் மத்தியில் ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.

பாடல், பஜனை என்று அவரது வருகை ஆனந்தமாக இருக்கும். கிராம மக்களும் அவரைக் கடவுளாகவே உணர்ந்து வரவேற்பார்கள், வணங்குவார்கள். அவருக்கும் அவருடன் வருகிற பக்தர்களுக்கும் விருந்து கொடுத்துக் கௌரவம் செய்வார்கள்.

இத்தகைய யாத்திரையில் ஒருமுறை ஒரு கிராமத்துக்குப் போயிருந்தார் குருநானக். அவரது பாடல், சொற்பொழிவு, அறிவுரை எதையுமே அந்தக் கிராம மக்கள் பொருட்படுத்தவில்லை.

அவரோடு வழிபாட்டில் கலந்து, நல்லுரைகள் கேட்காவிடினும் பரவாயில்லை... அவருக்குக் குடிக்கக்கூட யாரும் தண்ணீர் தரவில்லை. பசியாறும்படி ரொட்டி தரவேண்டும் என்கிற பண்புகூட எவருக்குமே அந்த ஊரில் இல்லை.

மாறாக, அவரது பஜனைகளுக்கு இடையூறாகச் சத்தம் போடுவது, கூட்டத்தில் நாய் | கழுதைகளை உள்ளே விரட்டுவது என்று தொல்லை தந்தார்கள்.

பொறுமையுடன் அன்றைய பொழுது அங்கு தங்கித் தமது இயல்பான வழிபாட்டுக் கடமைகளைக் களைப்புடன் செய்தார் குருநானக். இரவு குளிரில் அவர் ஒதுங்கக்கூட யாரும் இடம் தராததால், குளிரில் மிகவும் துன்புற்றார் குருநானக். ஆனால், காலை எழுந்து ஊரைவிட்டுப் புறப்படுமுன், அந்தக் கிராம மக்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்.

தம்முடன் வந்த சீடர்களைப் பார்த்து, ‘‘இந்தக் கிராம மக்கள் எப்போதும் இந்தக் கிராமத்திலேயே வாழ்க்கை வசதிகளோடு வாழவேண்டும். வறட்சி, துன்பம் ஏதும் வந்து, இடம்பெயர்ந்து எங்கும் போய், இவர்கள் துன்பப்படாதபடி இறைவா அருள்புரிய வேண்டும்’’ என்று வேண்டச் சொன்னார். அவரது வார்த்தையை மீறமுடியாததால், வேண்டாவெறுப்பாகச் சீடர்கள் பிரார்த்தனை செய்தனர்.

ஆனால், அடுத்த கிராமத்துக்குப் போனபோது கதை வேறாக இருந்தது. வரவேற்பே நல்லவிதமாக இருந்தது. அந்த மக்கள் குருநானக்கை அன்பில் நனைய வைத்தனர்.

புறப்படும் தருணத்தில், ‘‘இந்தக் கிராம மக்கள் இந்தக் கிராமத்திலேயே அடைந்திடாதபடி, உலகெங்கும் சிதறிச் செல்ல இறைவன் அருள்பாலிக்க வேண்டும்!’’ என்று குருநானக் பிரார்த்தனை செய்தார். சீடர்களுக்கு ஏதும் புரியவில்லை.

‘இரக்கமற்ற கிராமத்து மக்கள் வெளியே சிதறாதபடி இருக்க வளம்தர வேண்டினார் குரு. நல்லவர்கள் ஊர் ஊராகச் சிதற வேண்டுகிறார். இது சரியில்லையே...’ என்று தயங்கித் தயங்கி அவரிடமே நியாயம் கேட்டனர்.

‘‘அந்தக் கிராமத்து மக்கள் தீமையே வடிவமாக இருக்கிறர்கள். அவர்கள் ஒரே இடத்தில் இருப்பது தானே நல்லது! ஏதோ ஒரு காரணத்தால் அவர்கள் பல ஊர்கள் செல்ல நேர்ந்தால், பல ஊர்மக்களைப் பாழாக்கிவிடுவார்கள்.

இவர்களோ மிக நல்லவர்கள். இவர்கள் ஒரே ஊரில் இருந்தால் எப்படி? இவர்கள் போகிற ஊர்களில் எல்லாம் பண்பும் பக்தியும் வளரும் அல்லவா? அதனால்தான் அவர்களை ஒரே ஊரில் இருக்கவும் இவர்களைப் பலப்பல ஊர்களில் இருக்கவும் ஆண்டவனை வேண்டினேன்!’’ என்றார்.

சாக்கடைகள் பரவக்கூடாது... ஆனால், பூக்கடைகள் பரவவேண்டும். அதுதானே நல்லது!



சாக்கடைகள் பரவக்கூடாது... ஆனால், பூக்கடைகள் பரவவேண்டும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக