புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Poll_c10.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Poll_m10.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Poll_c10 
20 Posts - 65%
heezulia
.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Poll_c10.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Poll_m10.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Poll_c10.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Poll_m10.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Poll_c10 
62 Posts - 63%
heezulia
.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Poll_c10.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Poll_m10.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Poll_c10.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Poll_m10.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Poll_c10.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Poll_m10.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை...


   
   

Page 1 of 2 1, 2  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Sep 27, 2010 10:42 pm



கவிப்பேரரசு வைரமுத்து
முதல் முதலாய் அம்மாவுக்காக.....
-----------------------------------------------------

ஆயிரந்தான் கவிசொன்னேன்
அழகழகாப் பொய் சொன்னேன்
பெத்தவளே ஒம்பெரு(மை)ம
ஒத்தவரி சொல்லலையே!

காத்தெல்லாம் மகன்பாட்டு
காயிதத்தில் அவன் எழுத்து
ஊரெல்லாம் மகன் பேச்சு
ஒங்கீர்த்தி எழுதலையே!

எழுதவோ படிக்கவோ
ஏலாத தாய்பத்தி
எழுதிஎன்ன லாபமின்னு
எழுதாமாப் போனேனோ?

பொன்னையாத் தேவன் பெத்த
பொன்னே! குலமகளே!
என்னைப் புறந்தள்ள
இடுப்புல்வலி பொறுத்தவளே!

வைரமுத்து பிறப்பான்னு
வயித்தில்நீ சுமந்ததில்ல
வயித்தில்நீ சுமந்த ஒண்ணு
வைரமுத்து ஆயிருச்சு

கண்ணுகாது மூக்கோட
கறுப்பா ஒருபிண்டம்
இடப்பக்கம் கெடக்கையில
என்னென்ன நெனச்சிருப்ப?

கத்தி எடுப்பவனோ?
களவாடப் பிறந்தவனோ?
தரணிஆள வந்திருக்கும்
தாசில்தார் இவந்தானோ?

இந்த வெவரங்க
ஏதொண்ணும் அறியாம
நெஞ்சூட்டி வளத்தஒன்ன
நெனச்சா அழுகவரும்

கதகதன்னு களி(க்) கிண்டி
களிக்குள்ள குழிவெட்டி
கருப்பட்டி நல்லெண்ண
கலந்து தருவாயே

தொண்டையில் அதுஎறங்கும்
சொகமான எளஞ்சூடு
மண்டையில இன்னும்
மசமன்னு நிக்கிதம்மா

கொத்தமல்லி வறுத்துவச்சுக்
குறுமொளகா ரெண்டுவச்சு
சீரகமும் சிறுமொளகும்
சேத்துவச்சு நீர்தெளிச்சு

கும்மி அரச்சு நீ
கொழகொழன்னு வழிக்கையிலே
அம்மி மணக்கும்
அடுத்ததெரு மணமணக்கும்

தித்திக்கச் சமச்சாலும்
திட்டிக்கிட்டே சமச்சாலும்
கத்திரிக்கா நெய்வடியும்
கருவாடு தேனொழுகும்

கோழிக் கொழம்புமேல
குட்டிக்குட்டியா மெதக்கும்
தேங்காச் சில்லுக்கு
தேகமெல்லாம் எச்சிஊறும்

வறுமையில நாமபட்ட
வலிதாங்க மாட்டாம(ப்)
பேனா எடுத்தேன்
பிரபஞ்சம் பிச்செறிஞ்சேன்!

பாசமுள்ள வேளையில
காசுபணம் கூடலையே!
காசுவந்த வேலையிலே
பாசம்வந்து சேரலையே!

கல்யாணம் நான் செஞ்சு
கதியத்து நிக்கையிலே
பெத்தஅப்பன் சென்னைவந்து
சொத்தெழுதிப் போனபின்னே

அஞ்சாறு வருசம்உன்
ஆசமொகம் பாக்காமப்
பிள்ளைமனம் பித்தாச்சே
பெத்தமனம் கல்லாச்சே

படிப்புப் படிச்சுக்கிட்டே
பணம் அனுப்பி வச்சமகன்
கைவிட மாட்டான்னு
கடைசியில நம்பலையே!

பாசம் கண்ணீரு
பழையகதை எல்லாமே
வெறிச்சோடி போன
வேதாந்த மாயிருச்சே!

வைகையில ஊர்முழுக
வல்லூறும் சேர்ந்தழுக
கைப்பிடியாக் கூட்டிவந்து
கரைசேத்து விட்டவளே!

எனக்கொண்ணு ஆனதுன்னா
ஒனக்குவேற பிள்ளையுண்டு
ஒனக்கேதும் ஆனதுன்னா
எனக்கு வேற தாயிருக்கா?



.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... A.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... A.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... T.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... H.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... I.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... R.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... A.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Sep 27, 2010 10:45 pm

பலமுறை பார்த்து கேட்டு ரசித்ததெனினும் இங்கே வழங்கியமைக்கு நன்றி ஆதிரா...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Sep 27, 2010 10:50 pm



இறக்க முடியாத சிலுவைகள்...!

சொன்னவள் நான் தான்... உங்களுக்கும்சேர்த்து

நான் தான் சுவாசிக்கிறேன்...

என்று சொன்னவள் நான் தான்...

உங்களை தவிர என் கண்களுக்கு

எதையும்பார்க்கத்தெரியவில்லை...

என்று சொன்னவள் நான் தான்...

உங்கள் வாழ்க்கை என்னும் கோப்பையில்

என் உயிர் பிழிந்து ஊற்றி நிரப்புவேன்

என்று சொன்னவள் நான் தான்...

நம் கல்யாணத்தில் கடல் முத்துக்களையும்

வானம் நட்சத்திரங்களையும் அட்சதை போடும்

என்று சொன்னவள் நான் தான்...

நாம் பிரிந்தால் மழை மேல் நோக்கி பெய்யும்

கடல்மேல் ஒட்டகம் போகும் காற்று மரிக்கும்

என்று சொன்னவள் நான் தான்...

இதோ, அடிக்கோடிட்ட வார்த்தைகளால்

இதை சொல்வதும் நான் தான்...

என்னை மன்னித்து விடுங்கள்

என்னை மறந்து விடுங்கள்...


நான் காதல் கொண்டது நிஜம்

கனவு வளர்த்தது நிஜம்

என் இரத்தத்தில் இரண்டு அணுக்கள்

சந்தித்துக் கொண்டால்

உங்கள் பெயரை உச்சரிப்பது மட்டுமே நிஜம்...

என்னை மன்னித்து விடுங்கள்

என்னை மறந்து விடுங்கள்...

காதலரை தெரிந்த எனக்கு

காதலை தெரியவில்லை...

இந்தியக் காதல் என்பது

காதலர்களோடு மட்டும் சம்மந்தப்பட்டது இல்லை...

இந்தி்யா காதலின் பூமிதான்

காதலர் பூமி அல்ல...

காதலுக்கு சிறகு மட்டுமே தெரியும்

கல்யாணத்திற்கு தான் கால்களும் தெரியும்...

எனக்கு சிறகு தந்த காதலா!

என் கால்களின் லாடத்தை யார் அறிவார்...

என் தாயை விட சாய்வு நாற்காலியை

அதிகம் நேசிக்கும் என் தந்தை...

சீதனம் கொணர்ந்த பழைய பாய்போல்

கிழிந்து போன என் தாய்...

தான் பூப்பெய்திய செய்தி

புரியாத என் தங்கை...

கிழிந்த பாயில் படுத்தபடி கிளியோபாட்ராவை

நினைத்து ஏங்கும் என் அண்ணன்...

கருப்பு வெள்ளை தொலைக்கட்சியில்

கலர் கனவு காணும் என் தம்பி...

அத்தனை பேருக்கும் மாதாமாதம்

பிராணவாயு வழங்கும் ஒரேஒரு நான்...

கால்களில் லாடங்களோடு எப்படி

உங்களோடு ஓடி வருவேன்...

என்னை மன்னித்து விடுங்கள்

என்னை மறந்து விடுங்கள்...

ஐரோப்பாவில் கல்யாண

தோல்விகள் அதிகம்...

இந்தியாவில் காதல்

தோல்விகள் அதிகம்...

இந்தியா காதலின் பூமிதான்

காதலர் பூமி அல்ல...

போகிறேன்...

உங்களை மறக்கமுடியாதவளை

நீங்கள் மறப்பீர்கள்

என்ற நம்பிக்கையோடு போகிறேன்...

என்னை மன்னித்து விடுங்கள்

என்னை மறந்து விடுங்கள்...

கவி பேரரசு வைரமுத்து...



.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... A.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... A.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... T.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... H.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... I.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... R.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... A.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Sep 27, 2010 10:55 pm





.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... A.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... A.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... T.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... H.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... I.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... R.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... A.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Sep 27, 2010 10:56 pm

இறக்கமுடியாத சிலுவைகள்..! பலமுறை கேட்டு ரசித்து கண்ணீர் விட்ட கவிதை...!

அருமை அருமை... தொடருங்கள் ஆதிரா...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Sep 27, 2010 11:08 pm

அழகான பதிவுக்கு அன்பு நன்றிகள் அக்கா



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Sep 27, 2010 11:14 pm



வைரமுத்து கவிதைகள்



.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... A.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... A.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... T.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... H.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... I.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... R.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... A.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Sep 27, 2010 11:38 pm

மேற்கண்ட வைரமுத்து கவிதைகள் வலைமனையில் தோழிமார்கதை கவிதை மேல் க்ளிக்கினால் அந்த கவிதை இனிய பாடலாய் ஒலிக்கும் விதம் அருமை ஆதிரா...!

வழங்கியமைக்க்கு மிக்க நன்றி..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Sep 27, 2010 11:45 pm





.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... A.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... A.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... T.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... H.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... I.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... R.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... A.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Sep 27, 2010 11:48 pm

கலை wrote:மேற்கண்ட வைரமுத்து கவிதைகள் வலைமனையில் தோழிமார்கதை கவிதை மேல் க்ளிக்கினால் அந்த கவிதை இனிய பாடலாய் ஒலிக்கும் விதம் அருமை ஆதிரா...!

வழங்கியமைக்க்கு மிக்க நன்றி..!

எனக்கு இப்படியெல்லாம் செய்யத் தெரியாதே. பின்னாலேயே வந்து கவிதைகளின் வரி வடிவத்தைப் பதிந்தமைக்கும் இனிய பாடலாய ஒலிக்கும் விதம் செய்தமைக்கும் மிக்க நன்றி கலை..



.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... A.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... A.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... T.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... H.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... I.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... R.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... A.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Empty
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக