புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகிலேயே மிகப் பெரிய ஊழல். மத்திய அரசுக்கு ரூ 1.76 லட்சம் கோடி இழப்பு
Page 1 of 1 •
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு விவகாரம்: மாஜி தி.மு.க மந்திரி ராசாவின் உலகிலேயே மிகப் பெரிய ஊழல்.
இந்தியாவில் இதுவரை எத்தனையோ விதமான ஊழல்கள் நடந்திருக்கின்றன. பீகாரில் கால்நடை தீவன ஊழல் நடந்தது. இந்த ஊழலில் சிக்கியவர் சாட்சாத் லல்லுபிரசாத் யாதவ்தான். இவர் அம்மாநில முதல்வராக இருந்தவர்.
முதல்வராக இவர் பதவி வகித்த காலத்தில்தான் ரூ 900 கோடி அளவிற்கு கால்நடை தீவன ஊழல் நடந்ததாக செய்திகள் வெளியானதும் நாட்டு மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். ரூ 900 கோடி ஊழலா?என்று மக்கள் மலைத்துப் போனார்கள். இது தொடர்பான வழக்கு இப்போது நடக்கிறதா என்பது கூட நமக்குத் தெரியவில்லை. அதன் பிறகும் இந்திய நாட்டில் ஏராளமான ஊழல்கள் நடைபெற்றன. முத்திரைத் தாள் மோசடி என்று ஒரு மோசடி பற்றி செய்திகள் வெளியானது. இதில் சம்பந்தப்பட்ட தெல்கி என்பவர் கோடிக்கணக்கில் மோசடி செய்த விவகாரம் நாட்டு மக்களுக்கு தெரியவரவே மக்கள் மேலும் அதிர்ச்சியடைந்தனர். அதன் பிறகு ஹர்சத் மேத்தாவின் பங்குச் சந்தை ஊழல் போன்ற ஊழல்களும் வெளிச்சத்துக்கு வந்தன. சமீபத்தில் கூட காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் நடந்த ஊழல்கள், மகராஷ்டிரா மாநிலத்தில் கார்கில் போர் வீரர்களுக்காக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டமான ஆதர்ஷ் வீட்டு வசதி திட்டத்தில் நடந்த முறைகேடுகள், இப்படி இந்தியாவில் ஊழல்களுக்கு பஞ்சமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஊழல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த ஊழல்களை எல்லாம் தூக்கிச் சாப்பிட்ட ஊழல்தான் தி.மு.க மந்திரியாக இருந்த ராசாவின் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழல். இதில் சம்பந்தப்பட்ட தொகை கொஞ்ச நஞ்சமல்ல. ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 379 கோடி ரூபாய், இந்த முறைகேட்டால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக தணிக்கை அதிகாரியே சமீபத்தில் தனது இறுதி அறிக்கையில் குற்றம் சாட்டியிருக்கிறார்.
2 ம் தலைமுறைக்கான ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு விவகாரத்தில் இப்படி முறைகேடு நடந்ததாக ஆரம்பத்தில் எதிர்க்கட்சிகள் சொன்ன போது அதை மத்தியில் ஆளும் அரசும் ஒப்புக் கொள்ளவில்லை. காங்கிரசின் கூட்டணி கட்சியான தி.மு.கவும் ஒப்புக் கொள்ளவில்லை. கட்சியே ஒப்புக் கொள்ளாத போது அதில் சம்பந்தப்பட்ட ராசா ஒப்புக் கொள்வாரா என்ன? கடைசி வரை தான் குற்றவாளி அல்ல என்றே அவர் கூறி வந்தார். பிறகு இந்த விவகாரம் சுப்ரீம் கோர்ட்டுக்கு போன பிறகுதான் இந்த ஊழல் சூடு பிடிக்க ஆரம்பித்தது. மத்திய புலனாய்வுத் துறைக்கு குட்டு வைத்த சுப்ரீம் கோர்ட், இது பற்றி விரைவாக விசாரிக்குமாறும் உத்தரவிட்டது. சம்பந்தப்பட்டவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் ஏற்கனவே இடைக்கால அறிக்கை ஒன்றை தாக்கல் செய்திருந்த மத்திய கணக்கு தணிக்கை குழு தனது இறுதி அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது.
2 ஜி. ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசாவே தனிப்பட்ட பொறுப்பு வகிக்கிறார் என்று அந்த இறுதி அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் அளித்த ஆலோசனையையும் மத்திய சட்டத் துறை அமைச்சகம் மற்றும் மத்திய நிதி அமைச்சகம் வழங்கிய ஆலோசனைகளையும் தொலைத் தொடர்பு கமிஷனின் பரிந்துரைகளையும் அலட்சியப்படுத்தி விட்டு சில குறிப்பிட்ட தனியார் தொலைதொடர்பு கம்பெனிகளுக்கு குறைந்த கட்டணத்தில் (அடிமாட்டு விலைக்கு) ஆ.ராசா ஒதுக்கீடு செய்திருக்கிறார் என்றும் இந்த இழப்பீட்டுக்கு தனிப்பட்ட முறையில் ராசாவே பொறுப்பு என்றும் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி தனது இறுதி அறிக்கையில் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். இந்த ஒதுக்கீட்டில் ராசா தனிப்பட்ட முறையில் செயல்பட்டிருக்கிறார் என்பதை உறுதி செய்யும் கோப்புகளையும் தனது இறுதி அறிக்கையில் அவர் இணைத்திருந்தார்.
இந்த இழப்பீட்டு விவகார விஷயத்தில் மத்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராயையும் அவர் விட்டு வைக்கவில்லை. அந்த ஆணையத்தையும் தணிக்கை அதிகாரி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். தனது பரிந்துரைகள் அலட்சியப்படுத்தப்பட்டோ அல்லது தவறாக பயன்படுத்தப்பட்டோ வருகிறது என்பது தெரிந்தும் கூட டிராய் தனது கைகளை கட்டிக்கொண்டு வெறுமனே வேடிக்கை பார்த்திருக்கிறது என்றும் அந்த இறுதி அறிக்கையில் தணிக்கை அதிகாரி கூறியிருந்தார்.
மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் இந்த இறுதி அறிக்கை பிரதமர் அலுவலகத்திலும், ஜனாதிபதியிடமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற மாபெரும் இழப்பீட்டை செய்த அமைச்சர் ராசா தொடர்ந்து மத்திய அரசில் அங்கம் வகித்திருப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது அதிருப்தியை தெரிவித்திருந்தது. ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு விவகாரத்தில் மொத்தம் வழங்கப்பட்ட 122 புதிய லைசென்சுகளில் 85 லைசென்சுகள் 12 கம்பெனிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. இப்படி லைசென்ஸ் பெற்ற கம்பெனிகளில் பல கம்பெனிகள், தொலை தொடர்பு துறையின் வரையறுக்கப்பட்ட தகுதிகளைக்கூட பெறவில்லை. ஆனால் அவற்றுக்கும் 2 ஜி லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது என்றும், அந்த இறுதி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் 2 ஜி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட பலவீனமான நடைமுறைகளுக்கும் கணக்கு தணிக்கை அதிகாரி கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தார்.
முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையை ராசா எப்படி நடைமுறைக்கு கொண்டு வந்தார் என்றும் தணிக்கை அதிகாரி கேள்வி எழுப்பினார்.
எவ்வளவு ஸ்பெக்ட்ரம் அலை வரிசை கையிருப்பில் உள்ளது. அதற்கு தேவை எவ்வளவு உள்ளது என்பதை கண்டறியாமல் இந்த 2ஜி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அதிகாரி சுட்டிக்காட்டினார். 2 ஜி ஏலம் தொடர்பாக கடந்த 2007 நவம்பர் மாதம் மந்திரி ராசாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் இந்த ஒதுக்கீடுகளை ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படையாக நடத்த வேண்டும் என்றும் நுழைவுக்கட்டணத்தை மாற்றி அமைக்கும்படியும் பிரதமர் கேட்டுக்கொண்டிருந்தார். அதற்கு ராசா பதில் கடிதம் ஒன்றை பிரதமருக்கு அனுப்பியுள்ளார். அதில் 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை போதுமான அளவுக்கு இருக்கிறது என்றும் அதனால் புதிதாக வருபவர்களுக்கும் ஒதுக்கீடு செய்யலாம் என்றும் ராசா பதில் கடிதத்தில் கூறியிருந்தார்.
இந்த ஒதுக்கீடுகள் எல்லாமே சரியான நடைமுறைகளை பின்பற்றாமல் தன்னிச்சையாக செய்யப்பட்டுள்ளன என்றும் இதற்கெல்லாம் ராசாவே காரணம் என்றும் கணக்கு தணிக்கை அதிகாரி தனது அறிக்கையில் கூறியிருந்தார். இந்த அறிக்கை வெளியான பிறகு ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் ஞீதாகரமாக வெடித்தது. ராசாவை நீக்கக் கோரி ஜனாதிபதிக்கு தந்தி அனுப்புமாறு இந்திய மக்களை அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டார். அதன் படி ஜனாதிபதிக்கு இந்திய மக்கள் தந்திகளை லட்சக்கணக்கில் அனுப்பினர். பா.ஜ.க, இடதுசாரிகள் போன்ற கட்சிகளும் இந்த பிரச்சினையை பாராளுமன்றத்தில் எழுப்பி சபையையே ஸ்தம்பிக்க வைத்தன. ராசாவை நீக்காவிட்டால் பாராளுமன்றத்தை நடத்த விட மாட்டோம் என்று எதிர்க்கட்சிகள் எச்சரிக்கவே, ஆளும் கட்சியான காங்கிரஸ் அரண்டு போனது. அவசர அவசரமாக காங்கிரசின் உயர் மட்டத் தலைவர்கள் டெல்லியில் கூடி ஆலோசிக்க, இக்கூட்டத்தின் முடிவு தி.மு.க தலைவரிடம் தெரிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்த விஷயத்தில் தயக்கம் காட்டிய முதல்வர் கருணாநிதி இறுதியில் வேறு வழியின்றி ராசா பதவி விலகுவதற்கு ஒப்புக் கொண்டாராம். அப்போது கூட ராசா குற்றவாளி இல்லை என்றே அவர் கூறியிருக்கிறார். எது எப்படியோ, தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த ராசா, ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தின் எதிரொலியாக தற்போது பதவி விலகி உள்ளார். இது அ.தி.மு.க, பா.ஜ.க போன்ற எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த மகத்தான வெற்றியாகும். அவர்கள் இதை இனிப்பு வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடி வருகிறார்கள். உலகிலேயே மிகப் பெரும் ஊழலை செய்து கின்னஸ் சாதனை படைத்த ராசா, பதவி விலகினால் போதாது. அவரை மத்திய அரசு ஊழல் தடுப்பு சட்டத்தில் கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் இப்போது புதிய கோரிக்கையை வைத்துள்ளனர். அவர்களின் இந்த கோரிக்கையும் வெற்றி பெற வேண்டும். ஊழலில் சிக்கியவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
இந்தியாவில் இதுவரை எத்தனையோ விதமான ஊழல்கள் நடந்திருக்கின்றன. பீகாரில் கால்நடை தீவன ஊழல் நடந்தது. இந்த ஊழலில் சிக்கியவர் சாட்சாத் லல்லுபிரசாத் யாதவ்தான். இவர் அம்மாநில முதல்வராக இருந்தவர்.
முதல்வராக இவர் பதவி வகித்த காலத்தில்தான் ரூ 900 கோடி அளவிற்கு கால்நடை தீவன ஊழல் நடந்ததாக செய்திகள் வெளியானதும் நாட்டு மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். ரூ 900 கோடி ஊழலா?என்று மக்கள் மலைத்துப் போனார்கள். இது தொடர்பான வழக்கு இப்போது நடக்கிறதா என்பது கூட நமக்குத் தெரியவில்லை. அதன் பிறகும் இந்திய நாட்டில் ஏராளமான ஊழல்கள் நடைபெற்றன. முத்திரைத் தாள் மோசடி என்று ஒரு மோசடி பற்றி செய்திகள் வெளியானது. இதில் சம்பந்தப்பட்ட தெல்கி என்பவர் கோடிக்கணக்கில் மோசடி செய்த விவகாரம் நாட்டு மக்களுக்கு தெரியவரவே மக்கள் மேலும் அதிர்ச்சியடைந்தனர். அதன் பிறகு ஹர்சத் மேத்தாவின் பங்குச் சந்தை ஊழல் போன்ற ஊழல்களும் வெளிச்சத்துக்கு வந்தன. சமீபத்தில் கூட காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் நடந்த ஊழல்கள், மகராஷ்டிரா மாநிலத்தில் கார்கில் போர் வீரர்களுக்காக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டமான ஆதர்ஷ் வீட்டு வசதி திட்டத்தில் நடந்த முறைகேடுகள், இப்படி இந்தியாவில் ஊழல்களுக்கு பஞ்சமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஊழல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த ஊழல்களை எல்லாம் தூக்கிச் சாப்பிட்ட ஊழல்தான் தி.மு.க மந்திரியாக இருந்த ராசாவின் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழல். இதில் சம்பந்தப்பட்ட தொகை கொஞ்ச நஞ்சமல்ல. ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 379 கோடி ரூபாய், இந்த முறைகேட்டால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக தணிக்கை அதிகாரியே சமீபத்தில் தனது இறுதி அறிக்கையில் குற்றம் சாட்டியிருக்கிறார்.
2 ம் தலைமுறைக்கான ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு விவகாரத்தில் இப்படி முறைகேடு நடந்ததாக ஆரம்பத்தில் எதிர்க்கட்சிகள் சொன்ன போது அதை மத்தியில் ஆளும் அரசும் ஒப்புக் கொள்ளவில்லை. காங்கிரசின் கூட்டணி கட்சியான தி.மு.கவும் ஒப்புக் கொள்ளவில்லை. கட்சியே ஒப்புக் கொள்ளாத போது அதில் சம்பந்தப்பட்ட ராசா ஒப்புக் கொள்வாரா என்ன? கடைசி வரை தான் குற்றவாளி அல்ல என்றே அவர் கூறி வந்தார். பிறகு இந்த விவகாரம் சுப்ரீம் கோர்ட்டுக்கு போன பிறகுதான் இந்த ஊழல் சூடு பிடிக்க ஆரம்பித்தது. மத்திய புலனாய்வுத் துறைக்கு குட்டு வைத்த சுப்ரீம் கோர்ட், இது பற்றி விரைவாக விசாரிக்குமாறும் உத்தரவிட்டது. சம்பந்தப்பட்டவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் ஏற்கனவே இடைக்கால அறிக்கை ஒன்றை தாக்கல் செய்திருந்த மத்திய கணக்கு தணிக்கை குழு தனது இறுதி அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது.
2 ஜி. ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசாவே தனிப்பட்ட பொறுப்பு வகிக்கிறார் என்று அந்த இறுதி அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் அளித்த ஆலோசனையையும் மத்திய சட்டத் துறை அமைச்சகம் மற்றும் மத்திய நிதி அமைச்சகம் வழங்கிய ஆலோசனைகளையும் தொலைத் தொடர்பு கமிஷனின் பரிந்துரைகளையும் அலட்சியப்படுத்தி விட்டு சில குறிப்பிட்ட தனியார் தொலைதொடர்பு கம்பெனிகளுக்கு குறைந்த கட்டணத்தில் (அடிமாட்டு விலைக்கு) ஆ.ராசா ஒதுக்கீடு செய்திருக்கிறார் என்றும் இந்த இழப்பீட்டுக்கு தனிப்பட்ட முறையில் ராசாவே பொறுப்பு என்றும் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி தனது இறுதி அறிக்கையில் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். இந்த ஒதுக்கீட்டில் ராசா தனிப்பட்ட முறையில் செயல்பட்டிருக்கிறார் என்பதை உறுதி செய்யும் கோப்புகளையும் தனது இறுதி அறிக்கையில் அவர் இணைத்திருந்தார்.
இந்த இழப்பீட்டு விவகார விஷயத்தில் மத்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராயையும் அவர் விட்டு வைக்கவில்லை. அந்த ஆணையத்தையும் தணிக்கை அதிகாரி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். தனது பரிந்துரைகள் அலட்சியப்படுத்தப்பட்டோ அல்லது தவறாக பயன்படுத்தப்பட்டோ வருகிறது என்பது தெரிந்தும் கூட டிராய் தனது கைகளை கட்டிக்கொண்டு வெறுமனே வேடிக்கை பார்த்திருக்கிறது என்றும் அந்த இறுதி அறிக்கையில் தணிக்கை அதிகாரி கூறியிருந்தார்.
மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் இந்த இறுதி அறிக்கை பிரதமர் அலுவலகத்திலும், ஜனாதிபதியிடமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற மாபெரும் இழப்பீட்டை செய்த அமைச்சர் ராசா தொடர்ந்து மத்திய அரசில் அங்கம் வகித்திருப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது அதிருப்தியை தெரிவித்திருந்தது. ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு விவகாரத்தில் மொத்தம் வழங்கப்பட்ட 122 புதிய லைசென்சுகளில் 85 லைசென்சுகள் 12 கம்பெனிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. இப்படி லைசென்ஸ் பெற்ற கம்பெனிகளில் பல கம்பெனிகள், தொலை தொடர்பு துறையின் வரையறுக்கப்பட்ட தகுதிகளைக்கூட பெறவில்லை. ஆனால் அவற்றுக்கும் 2 ஜி லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது என்றும், அந்த இறுதி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் 2 ஜி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட பலவீனமான நடைமுறைகளுக்கும் கணக்கு தணிக்கை அதிகாரி கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தார்.
முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையை ராசா எப்படி நடைமுறைக்கு கொண்டு வந்தார் என்றும் தணிக்கை அதிகாரி கேள்வி எழுப்பினார்.
எவ்வளவு ஸ்பெக்ட்ரம் அலை வரிசை கையிருப்பில் உள்ளது. அதற்கு தேவை எவ்வளவு உள்ளது என்பதை கண்டறியாமல் இந்த 2ஜி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அதிகாரி சுட்டிக்காட்டினார். 2 ஜி ஏலம் தொடர்பாக கடந்த 2007 நவம்பர் மாதம் மந்திரி ராசாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் இந்த ஒதுக்கீடுகளை ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படையாக நடத்த வேண்டும் என்றும் நுழைவுக்கட்டணத்தை மாற்றி அமைக்கும்படியும் பிரதமர் கேட்டுக்கொண்டிருந்தார். அதற்கு ராசா பதில் கடிதம் ஒன்றை பிரதமருக்கு அனுப்பியுள்ளார். அதில் 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை போதுமான அளவுக்கு இருக்கிறது என்றும் அதனால் புதிதாக வருபவர்களுக்கும் ஒதுக்கீடு செய்யலாம் என்றும் ராசா பதில் கடிதத்தில் கூறியிருந்தார்.
இந்த ஒதுக்கீடுகள் எல்லாமே சரியான நடைமுறைகளை பின்பற்றாமல் தன்னிச்சையாக செய்யப்பட்டுள்ளன என்றும் இதற்கெல்லாம் ராசாவே காரணம் என்றும் கணக்கு தணிக்கை அதிகாரி தனது அறிக்கையில் கூறியிருந்தார். இந்த அறிக்கை வெளியான பிறகு ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் ஞீதாகரமாக வெடித்தது. ராசாவை நீக்கக் கோரி ஜனாதிபதிக்கு தந்தி அனுப்புமாறு இந்திய மக்களை அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டார். அதன் படி ஜனாதிபதிக்கு இந்திய மக்கள் தந்திகளை லட்சக்கணக்கில் அனுப்பினர். பா.ஜ.க, இடதுசாரிகள் போன்ற கட்சிகளும் இந்த பிரச்சினையை பாராளுமன்றத்தில் எழுப்பி சபையையே ஸ்தம்பிக்க வைத்தன. ராசாவை நீக்காவிட்டால் பாராளுமன்றத்தை நடத்த விட மாட்டோம் என்று எதிர்க்கட்சிகள் எச்சரிக்கவே, ஆளும் கட்சியான காங்கிரஸ் அரண்டு போனது. அவசர அவசரமாக காங்கிரசின் உயர் மட்டத் தலைவர்கள் டெல்லியில் கூடி ஆலோசிக்க, இக்கூட்டத்தின் முடிவு தி.மு.க தலைவரிடம் தெரிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்த விஷயத்தில் தயக்கம் காட்டிய முதல்வர் கருணாநிதி இறுதியில் வேறு வழியின்றி ராசா பதவி விலகுவதற்கு ஒப்புக் கொண்டாராம். அப்போது கூட ராசா குற்றவாளி இல்லை என்றே அவர் கூறியிருக்கிறார். எது எப்படியோ, தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த ராசா, ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தின் எதிரொலியாக தற்போது பதவி விலகி உள்ளார். இது அ.தி.மு.க, பா.ஜ.க போன்ற எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த மகத்தான வெற்றியாகும். அவர்கள் இதை இனிப்பு வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடி வருகிறார்கள். உலகிலேயே மிகப் பெரும் ஊழலை செய்து கின்னஸ் சாதனை படைத்த ராசா, பதவி விலகினால் போதாது. அவரை மத்திய அரசு ஊழல் தடுப்பு சட்டத்தில் கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் இப்போது புதிய கோரிக்கையை வைத்துள்ளனர். அவர்களின் இந்த கோரிக்கையும் வெற்றி பெற வேண்டும். ஊழலில் சிக்கியவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- thirujothiபண்பாளர்
- பதிவுகள் : 63
இணைந்தது : 22/07/2010
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா....வாழ்க முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி.... ஊழழின் மொத்த வுரு
Similar topics
» இந்திய கடல் பகுதிகளில் தோரியம் கடத்தப்பட்டதில், அரசுக்கு 60 லட்சம் கோடி இழப்பு
» ஸ்பெக்ட்ரம் ஊழல்... உண்மை என்ன..? இந்த பதிவை அவசியம் அனைவரும் படியுங்கள்..!
» மத்திய அரசுக்கு ரூ.1½ லட்சம் கோடி பாக்கி: தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மறுஆய்வு மனு தள்ளுபடி; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
» உலகிலேயே மிகப் பெரிய பூ!
» தமிழ் சினிமாவால் அரசுக்கு ரூ.300 கோடி இழப்பு!
» ஸ்பெக்ட்ரம் ஊழல்... உண்மை என்ன..? இந்த பதிவை அவசியம் அனைவரும் படியுங்கள்..!
» மத்திய அரசுக்கு ரூ.1½ லட்சம் கோடி பாக்கி: தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மறுஆய்வு மனு தள்ளுபடி; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
» உலகிலேயே மிகப் பெரிய பூ!
» தமிழ் சினிமாவால் அரசுக்கு ரூ.300 கோடி இழப்பு!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|