புதிய பதிவுகள்
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வெற்றிலை Poll_c10வெற்றிலை Poll_m10வெற்றிலை Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
வெற்றிலை Poll_c10வெற்றிலை Poll_m10வெற்றிலை Poll_c10 
59 Posts - 41%
mohamed nizamudeen
வெற்றிலை Poll_c10வெற்றிலை Poll_m10வெற்றிலை Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
வெற்றிலை Poll_c10வெற்றிலை Poll_m10வெற்றிலை Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
வெற்றிலை Poll_c10வெற்றிலை Poll_m10வெற்றிலை Poll_c10 
1 Post - 1%
Kavithas
வெற்றிலை Poll_c10வெற்றிலை Poll_m10வெற்றிலை Poll_c10 
1 Post - 1%
bala_t
வெற்றிலை Poll_c10வெற்றிலை Poll_m10வெற்றிலை Poll_c10 
1 Post - 1%
prajai
வெற்றிலை Poll_c10வெற்றிலை Poll_m10வெற்றிலை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெற்றிலை Poll_c10வெற்றிலை Poll_m10வெற்றிலை Poll_c10 
290 Posts - 42%
heezulia
வெற்றிலை Poll_c10வெற்றிலை Poll_m10வெற்றிலை Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
வெற்றிலை Poll_c10வெற்றிலை Poll_m10வெற்றிலை Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
வெற்றிலை Poll_c10வெற்றிலை Poll_m10வெற்றிலை Poll_c10 
26 Posts - 4%
sugumaran
வெற்றிலை Poll_c10வெற்றிலை Poll_m10வெற்றிலை Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வெற்றிலை Poll_c10வெற்றிலை Poll_m10வெற்றிலை Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
வெற்றிலை Poll_c10வெற்றிலை Poll_m10வெற்றிலை Poll_c10 
6 Posts - 1%
prajai
வெற்றிலை Poll_c10வெற்றிலை Poll_m10வெற்றிலை Poll_c10 
5 Posts - 1%
Kavithas
வெற்றிலை Poll_c10வெற்றிலை Poll_m10வெற்றிலை Poll_c10 
4 Posts - 1%
manikavi
வெற்றிலை Poll_c10வெற்றிலை Poll_m10வெற்றிலை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெற்றிலை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 26, 2012 9:09 am



இந்திய மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று, வெற்றிலை. அது நல்ல தருணங்களின் சின்னம். திருமணம், வழிபாடு முதலியவற்றில் முக்கிய இடம் பெறுவது வெற்றிலை. சுபகாரியங்களில் வெற்றிலை `தாம்பூலம்' என்ற சிறப்புப் பெயர் பெறுகிறது.

மருத்துவ குணம் வாய்ந்த வெற்றிலை, வரலாற்றுக் காலத்திலேயே புகழ்பெற்றுத் திகழ்ந்திருக்கிறது. 1500 ஆண்டுகளுக்கு முன்பே வெற்றிலை போடும் பழக்கம் இருந்து வந்திருப்பதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. பண்டைக் காலத்துப் பெண்கள் தமது அழகுப் பொருட்களில் வெற்றிலைக்கு முக்கியமான இடத்தைக் கொடுத்தனர்.

அரசர்களும் வெற்றிலையைப் போற்றிப் பயன்படுத்தினர். உதாரணமாக, மொகலாய மன்னர்கள் இதற்கு ஏற்றம் தந்தனர். மொகலாய அரச பரம்பரையைச் சேர்ந்தவர்களுக்கு மொகலாய மன்னர்கள் வெற்றிலை போடுவதற்காகத் தனியாக மானியமே அளித்துவந்தனர்.

அழகான வெற்றிலைப் பேழையில் வெற்றிலையுடன் பாக்கு, சுண்ணாம்பு மட்டுமின்றி கிராம்பும், வேறு வாசனைப் பொருட்களும் சேர்ந்திருக்கும். அவ்வளவு சிறப்பு வாய்ந்த தாம்பூலம், தங்கம் அல்லது வெள்ளியால் செய்யப்பட்ட இலைகளில் பொதியப்பட்டிருக்கும். அந்த மரியாதை, மொகலாய அரச பரம்பரையைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் கிடைக்கும்.

மொகலாய மன்னர்கள் வெற்றிலைப் பழக்கத்துக்காக பெரும் பணத்தைச் செலவு செய்தனர். ஷாஜகான் மன்னர் தனது மகளின் தாம்பூலச் செலவுக்காக சூரத் மாநிலத்தின் வருவாய் முழுவதையும் ஒதுக்கி வைத்தாராம்.

ராஜதந்திர விஷயங்களிலும் வெற்றிலை இடம்பெற்றது. பெர்ஷியாவின் ஷா மன்னர், இந்தியாவை தனது ஆட்சிக்கு உட்படுத்த எண்ணம் கொண்டிருந்தார். அதை அறிந்த மொகலாய மன்னர் அவுரங்கசீப், ஷா மன்னரைத் திருப்தி செய்யும்பொருட்டு அவருக்கு உயர்ந்த ரக வெற்றிலையை அனுப்பி வைத்ததாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.

புதிய கண்டங்களையும், நிலப்பகுதிகளையும் கண்டுபிடித்து வந்த மார்க்கோபோலோ, ஷான் மார்ஷ் போன்ற சர்வதேசப் பயணிகள் இந்திய மக்களின் வெற்றிலை போடும் பழக்கத்தைப் பற்றி சுவையான கருத்துகளைத் தெரிவித்திருக்கின்றனர்.

பல கவிஞர்கள் வெற்றிலையின் புகழைப் பாடியிருக்கின்றனர். ஆகவே இறவாத இலக்கியங்களிலும் வெற்றிலை இடம்பெற்றிருப்பது அதன் சிறப்பைக் காட்டுகிறது. வெற்றிலை கொடி வகையைச் சேர்ந்தது. அது படர்வதற்கு ஆதரவு வேண்டும். எனவே தென்னை, கமுகு போன்றவற்றுடன் வெற்றிலையைப் பயிரிடுகிறார்கள். வெற்றிலைச் சாகுபடி ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த தொழிலாகும்.

வெப்பப் பிரதேசங்களில் வெற்றிலை அதிகம் பயிராகிறது. இதற்கு எப்போதும் நிழலும், தண்ணீரும் தேவைப்படுகின்றன. வறட்சிப் பகுதிகளைத் தவிர இந்தியாவில் ஏறக்குறைய எல்லா மாநிலங்களிலும் வெற்றிலை பயிராகிறது.



வெற்றிலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Mar 26, 2012 9:10 am

வெத்தல இல்லாத கல்யாணமா? வெற்றிலை செரிமானத்துக்கு மிகவும் நல்லது.. அருமையான தகவல்
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 01, 2023 6:49 pm

வெற்றிலை 7KtKtLY
தாம்பத்யக் குறைபாடு நீக்கும் வெற்றிலை



தாம்பூலம், நாகவல்லி, வேந்தன், திரையல் என பல பெயர்களில் அழைக்கப்படும் மூலிகை, வெற்றிலை. கம்மாறு வெற்றிலை, கற்பூர வெற்றிலை என சில வகைகள் உள்ளன. இது, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து அதிகம்கொண்டது.



• இதில் கரோட்டின், தயாமின், ரிபோஃபிளேவின், வைட்டமின் சி சத்துகள் நிறைந்துள்ளன. நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த சவிக்கால் (Chavicol) என்ற வேதிப் பொருளும் இருக்கிறது.

• இளம் வெற்றிலையை மட்டுமே மருந்தாகப் பயன்படுத்த வேண்டும். காம்பு, நரம்புகளை நீக்கிவிட்டுப் பயன்படுத்தினால், அதன் மருத்துவ குணங்கள் முழுமையாகக் கிடைக்கும்.

• வெற்றிலையுடன் மிளகு சேர்த்து மென்றால், அது நார்ச்சத்தாகி உடலிலுள்ள நச்சுகளை வெளியேற்றும்; உடலில் தேங்கியிருக்கும் கெட்ட நீரை அகற்றும்; மலச்சிக்கல் கோளாறு நீங்கும்.

• வெற்றிலையை மென்றால், உமிழ்நீர் நன்றாகச் சுரந்து பசி உண்டாகும். இரண்டு டீஸ்பூன் வெற்றிலைச் சாற்றுடன் அரை டீஸ்பூன் தேன் சேர்த்துச் சாப்பிட்டால், நரம்புகளுக்கு பலம் கிடைக்கும்; தொடர்ந்து சாப்பிட்டால், தாம்பத்யக் குறைபாடுகள் நீங்கும்.

• வெற்றிலையுடன் பாக்கு, சுண்ணாம்பு, ஜாதிக்காய், ஜாதிபத்திரி, கஸ்தூரி, ஏலக்காய், லவங்கம், பாதாம், முந்திரி, திராட்சை, குல்கந்து சேர்த்து இரவு உணவுக்குப் பிறகு சாப்பிட்டால் ரத்தம் ஊறும்.

• வெற்றிலைச் சாற்றுடன் தேவையான அளவு நீர், பால் சேர்த்துப் பருகினால் சிறுநீர் நன்றாகப் பிரியும்.

• கடுகு எண்ணெயில் வெற்றிலையைப் போட்டு சூடுபடுத்தி (பொறுக்கும் சூட்டில்) மார்பில் கட்டி வந்தால் மூச்சுத்திணறல், இருமல் கட்டுப்படும்.

• வெற்றிலைச் சாற்றுடன் தேன் சேர்த்துக் கொடுத்தால், குழந்தைகளின் சளி, இருமல் தீரும்.

• வெற்றிலையில் ஆமணக்கு எண்ணெயைத் தடவி, தீயில் வாட்டி, கட்டிகளின் மீது வைத்துக் கட்டினால், உடைந்து சீழ் வெளியேறும். இதை இரவில் செய்வது நல்லது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக