புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேள்விக்குறியாக்கப்படும் (?) பிஞ்சுகளின் எதிர்காலம் Poll_c10கேள்விக்குறியாக்கப்படும் (?) பிஞ்சுகளின் எதிர்காலம் Poll_m10கேள்விக்குறியாக்கப்படும் (?) பிஞ்சுகளின் எதிர்காலம் Poll_c10 
64 Posts - 50%
heezulia
கேள்விக்குறியாக்கப்படும் (?) பிஞ்சுகளின் எதிர்காலம் Poll_c10கேள்விக்குறியாக்கப்படும் (?) பிஞ்சுகளின் எதிர்காலம் Poll_m10கேள்விக்குறியாக்கப்படும் (?) பிஞ்சுகளின் எதிர்காலம் Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
கேள்விக்குறியாக்கப்படும் (?) பிஞ்சுகளின் எதிர்காலம் Poll_c10கேள்விக்குறியாக்கப்படும் (?) பிஞ்சுகளின் எதிர்காலம் Poll_m10கேள்விக்குறியாக்கப்படும் (?) பிஞ்சுகளின் எதிர்காலம் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கேள்விக்குறியாக்கப்படும் (?) பிஞ்சுகளின் எதிர்காலம் Poll_c10கேள்விக்குறியாக்கப்படும் (?) பிஞ்சுகளின் எதிர்காலம் Poll_m10கேள்விக்குறியாக்கப்படும் (?) பிஞ்சுகளின் எதிர்காலம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கேள்விக்குறியாக்கப்படும் (?) பிஞ்சுகளின் எதிர்காலம் Poll_c10கேள்விக்குறியாக்கப்படும் (?) பிஞ்சுகளின் எதிர்காலம் Poll_m10கேள்விக்குறியாக்கப்படும் (?) பிஞ்சுகளின் எதிர்காலம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கேள்விக்குறியாக்கப்படும் (?) பிஞ்சுகளின் எதிர்காலம் Poll_c10கேள்விக்குறியாக்கப்படும் (?) பிஞ்சுகளின் எதிர்காலம் Poll_m10கேள்விக்குறியாக்கப்படும் (?) பிஞ்சுகளின் எதிர்காலம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கேள்விக்குறியாக்கப்படும் (?) பிஞ்சுகளின் எதிர்காலம் Poll_c10கேள்விக்குறியாக்கப்படும் (?) பிஞ்சுகளின் எதிர்காலம் Poll_m10கேள்விக்குறியாக்கப்படும் (?) பிஞ்சுகளின் எதிர்காலம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேள்விக்குறியாக்கப்படும் (?) பிஞ்சுகளின் எதிர்காலம் Poll_c10கேள்விக்குறியாக்கப்படும் (?) பிஞ்சுகளின் எதிர்காலம் Poll_m10கேள்விக்குறியாக்கப்படும் (?) பிஞ்சுகளின் எதிர்காலம் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேள்விக்குறியாக்கப்படும் (?) பிஞ்சுகளின் எதிர்காலம்


   
   
avatar
hajasharif
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 06/12/2009

Posthajasharif Sat Dec 04, 2010 5:06 pm

அன்றாட நம்மூர் நிகழ்வுகளில் அண்மைக்காலமாக நம் சமுதாய மக்களிடம் சில அர்த்தமுள்ள, பல அர்த்தமற்ற காரணங்களால் பெருகி வரும் விவாகரத்துக்கள்(வார்த்தை சொல்லுதல்)எப்படி சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருந்த குடும்பங்களுக்கு பேரிடியாகவும், விவாகரத்துக்கு முன் இல்லற வாழ்வில் ஈன்றெடுத்த பாசக்குழந்தைகளின் எதிர்காலம் தன்னை ஈன்றெடுத்த தாய் அல்லது தந்தை யாரேனும் ஒருவரை நிரந்தரமாக எதற்கென்றே ஒன்றும் புரியாமல் பிரிவதால் கேள்விக்குறியாக்கப்பட்டு உண்மையான தாய், தந்தையரின் பாசத்திற்கும் நேசத்திற்கும் ஏங்கும் அவர்கள் வாழ்வில் சந்திக்கும் பல சொல்ல இயலா துன்பங்களையும், துயரங்களையும், சோதனைகளையும், வேதனைகளையும் விவரிக்கும் ஒரு சிறு கட்டுரை தான் இது.

ஒரு காலத்தில் பெரும் பிரச்சினைகள் வந்து பிரச்சினையான இரு குடும்பங்களுக்கும் பல நாட்கள் தெரு சங்கங்களாலோ அல்லது சமுதாயப்பெரியவர்களாலோ அவகாசம் கொடுக்கப்பட்ட(முடிந்தவரை இரு குடும்பத்தையும் பரஸ்பரம் பேசி சுமூக உறவு ஏற்பட, இல்லற வாழ்க்கை பிரச்சினையின்றி இனிதே தொடர வாய்ப்புகள் கொடுக்கப்பட்ட) பின்னரே இதற்கு மேலும்

ச‌ரிப்ப‌ட்டு வ‌ராது என‌ இருசார‌ரும் தீர்க்க‌மான‌ முடிவு எடுத்த‌ பின்ன‌ரே பிர‌ச்சினையான‌ த‌ம்ப‌திக‌ள் த‌லாக் மூல‌ம் பிரிக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர். காலப்போக்கில் அவ‌ர்க‌ளுக்கேற்ற‌ வாழ்க்கைத்துணையும் இறைவ‌ன் நாட்ட‌ப்ப‌டி அமைந்து போன‌து.

சில‌ர் இப்ப‌டிக்கூறி புல‌ம்புவ‌துண்டு "பொற‌ந்த‌ ஊடும் ச‌ரியில்லை; புகுந்த‌ ஊடும் ச‌ரியில்லை" த‌ன்னுட‌ன் வாழ‌வ‌ந்த‌வ‌னோ அல்ல‌து வ‌ந்த‌வ‌ளோ பிர‌ச்சினை இல்லை. அப்ப‌டி இருக்கும் ப‌ட்ச‌த்தில் விவாக‌ர‌த்து ஒரு ந‌ல்ல‌ தீர்வாகாது. பிற‌ந்த‌ வீடு அல்ல‌து புகுந்த‌ வீடு த‌ன‌க்கு ச‌ந்தோச‌த்தை த‌ர‌வில்லை என்ப‌த‌ற்காக‌ வாழ‌வ‌ந்த‌வ‌னையோ அல்ல‌து வாழ‌வ‌ந்த‌வ‌ளையோ வேண்டாமென்று ஒதுக்கித்த‌ள்ளுவ‌து நிச்ச‌ய‌ம் ஒரு முட்டாள்த‌ன‌மான‌ முடிவாக‌த்தான் இருக்கும்.

இது போன்ற‌ சூழ்நிலைகள் சிலர் வாழ்வில் உருவாகும்ப‌ட்ச‌த்தில் த‌னிவீடு (அது வாட‌கை வீடோ அல்ல‌து சொந்த‌ வீடோ) அமைத்து க‌ண‌வ‌ன், ம‌னைவி ம‌ற்றும் பாச‌க்குழ‌ந்தைக‌ளுடம் சந்தோசமாக‌ வாழ்ந்துவிட்டுப்போனால் யாருக்கும் ந‌ஷ்ட‌மும் இல்லை எவ்வித‌ க‌ஷ்ட‌மும் இல்லை.

ஒரு கால‌த்தில் ந‌ம்மூரில் திரும‌ண‌மாகி ஒரு சில‌ வ‌ருட‌ங்க‌ளிலேயே இறைவ‌ன் நாட்ட‌த்தில் க‌ண‌வனை மரணத்தால் இழ‌க்க‌ நேரிடும் பொழுது அவ‌னுட‌ன் வாழ்ந்த அந்த கால‌ங்க‌ளை எண்ணி உள்ளுக்குள் ச‌ந்தோச‌ம‌டைந்த‌வ‌ர்க‌ளாக நம் மார்க்கம் மறுமணத்தை அழகுற அனுமதித்திருந்தும் அதைக்கூட விரும்பாதவர்களாய் (இந்த இடத்தில் மார்க்க‌த்தை அவர்கள் அவ‌ம‌தித்ததாக‌ பொருள் கொள்ள‌க்கூடாது) பெற்ற பிள்ளைகளுடன் வாழ்ந்தால் போதும் என‌ த‌ன் வாழ்நாளைக் க‌ட‌த்திய‌ எத்த‌னையோ பெண்ம‌ணிக‌ள் இருந்தார்க‌ள் இன்றும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள் நம்மூரில்.

ஆனால் இன்றோ சிறு,சிறு பிர‌ச்சினைக‌ளுக்கெல்லாம் எவ்வித‌ கார‌ணமும்மின்றி மார்க்க‌த்தை தாண்டி ஏதோ ப‌ழைய‌ ச‌ட்டையை க‌ழ‌ற்றி விட்டு புதிய‌ ச‌ட்டையை மாற்றிக்கொள்வ‌து போல் முறையே ஊர் கூடி பெரும் விருந்து கொடுத்து ந‌ட‌த்தி முடித்த‌ திரும‌ண‌ங்க‌ள் கூட‌ விவாக‌ர‌த்தில் முடிந்து பிறகு ஆளுக்கொரு புதிய‌ துணையை தேடிக்கொள்வ‌தும் முன்னால் க‌ண‌வ‌ன்/ம‌னைவிக்கு பிற‌ந்த‌ குழ‌ந்தைக‌ளை பெற்ற‌ தாய், த‌ந்தையர் உயிருடன் இருந்தும் அவ‌ர்க‌ளை அநாதைக‌ளாக்குவ‌தும் அதிக‌ரித்து வ‌ருவ‌து வேத‌னையான‌ விச‌ய‌மேத்த‌விர‌ வேறொன்றும் இல்லை.

ஒரு வேதனையான விசயத்தை பாதிக்கப்பட்ட ஒருவர் சொல்ல நான் கேட்டிருக்கின்றேன். "நம்மூரில் தேவையற்ற விவாகரத்தால் உயிருடன் இருந்தும் தனனை ஈன்றெடுத்த தாய், தந்தையரை இழந்து தவிக்கும் பிள்ளைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அவர்களுக்கென்றே ஒரு தனி பள்ளிக்கூடம் (தாய், தந்தையர்களால் கை விடப்பட்ட மாணவர்கள்)ஆரம்பிக்க வேண்டும் போல் இருக்கிறது இன்றைய நம்ம ஊர் சூழ்நிலை" என்று மன வேதனையின் வெளிப்பாடாக கூறினார்.

தன்னை ஈன்றெடுத்த தாய் சூழ்நிலையால் மறுமணம் செய்து கொண்டு வேறொரு கணவனுடன் வாழ்ந்து வந்தாலும் தன்னைப்பெற்ற‌ தந்தையைப்போல் பாசத்துடன் அவன் கவனித்துக்கொண்டாலும் மார்க்கப்படி அவனை "வாப்பா" (தகப்பன்) என்று சொல்லக்கூடாது அல்லது தன் தந்தை மறுமணம் செய்து கொண்டு வேறொரு மனைவியுடன் வாழும் பொழுது அவள் எத்தனை பாசத்தைக்காட்டினால் அவளை "தாய்" என்று பிள்ளைகள் சொல்லக்கூடாது. பெற்றவர்களைத்தவிர தாய், தந்தையரின் அந்தஸ்த்தை யாரும் பெற்று விட முடியாது அல்லது கொடுக்கவும் கூடாது என ஒரு ஹதீஸில் நான் படித்திருக்கின்றேன். (மார்க்க விளக்கம் உள்ளவர்கள் தவறு இருப்பின் தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள். திருத்திக்கொள்ளப்படும்.)

மறுமணம் செய்து கொள்ளும் ஒருவன் மறுமணம் செய்து கொண்ட மனைவிக்கு முன்னால் கணவனால் பிறந்த குழந்தைகளை தான் பெற்ற பிள்ளையைப்போல் அக்கறையுடன் கவனிக்கமாட்டான். அல்லது மறுமணம் செய்து கொள்ளும் ஒருவள் தன் கணவனுக்கு முன்னால் மனைவியின் மூலம் பெற்ற பிள்ளைகளை அந்தளவுக்கு அக்கறையுடனும், பாசத்துடனும் கவனிக்கமாட்டாள். இறுதியில் ஏதாவது ஒரு வகையில் அப்பிஞ்சுகள் சொல்லாத்துயரை அடைந்து விடுகின்றன பாசத்திற்கு ஏங்கி நிற்கின்றன‌. காலப்போக்கில் தன் தாயையோ அல்லது தந்தையையோ இப்படி திட்டித்தீர்த்துவிடுவர் "உனக்கென்னெ வாப்பாவை வேண்டாமென்று சொல்லி வேறொருவருடன் வாழ்ந்து வருகிறாய். வாப்பாவுக்கென்ன உம்மாவை வேண்டாமென்று சொல்லி வேறொருத்தியுடன் ராஜா மாதிரி வாழ்ந்து வருகிறார் கடைசியில் பாதிக்கப்பட்டு அநாதைகள் போல் நடுத்தெருவில் நிற்பது நானும் என் தம்பி, தங்கைகளுமே" உங்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை மன உலைச்சல்களும் இல்லை. என்று ஏதாவது பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுக்கும் பொழுது இந்த வார்த்தைகள் வந்து விழும் நிச்சயம்.

வெளிநாட்டில் தன்னைப்பிரிந்து தனக்காகவும் குடும்பத்திற்காகவும் கணவன் உழைக்கிறானே என்று கொஞ்சமும் பொறுப்பில்லாமல் மனைவி ஊரைச்சுற்றி வருவதும் அதன் மூலம் பல தவறான பழக்கவழக்கங்களுக்கு ஆளாகிப்போவதும், ஆசாபாசங்களுக்கு அடிமையாகிப்போவதும், மனைவி, மக்கள் தான் அருகில் இல்லையே என எண்ணி எவ்வித குடும்ப‌ பொறுப்புமின்றி கணவன் பல தவறான பழக்க,வழக்கங்களுக்கு ஆளாகிப்போவதும் இறுதியில் அவனே/அவளே தன் வாழ்வில் பெரும் வேட்டு வைத்து கடைசியில் விவாகரத்தில் முடிந்து விடுகிறது. அவர்களின் இல்லற வாழ்க்கை முற்றுப்பெற்று விடலாம் ஆனால் அவர்கள் மூலம் பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியில் தான் முடியும்.

பிஞ்சுகள் மனதில் அன்பான உம்மாவிற்காகவும், ஆசையான வாப்பாவிற்காகவும் கட்டி வைத்திருக்கும் விலையால் மதிப்பிட முடியாத மாளிகையை ஏதோ ஒரு சிறு காரணத்திற்காக கணவன், மனைவி இருவரும் நிரந்தரமாக‌ பிரிந்து இல்லற வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து பிள்ளைகளின் மனக்கோட்டையை எளிதில் இடித்துத்தள்ளி விடாதீர்கள். இதற்காக‌ நீதி மன்றம் சென்றால் அங்கு பாபர் மசூதி தீர்ப்பு போல் பாரபட்சமுள்ள தீர்ப்பு தான் வருமே ஒழிய பரிசுத்தமான பாசம் அங்கு மலர்ந்து விடாது.

இல்லற வாழ்க்கை என்பது கழற்றி, மாட்டும் அல்லது காணாமல் போகும் செருப்பு போன்றத‌ல்ல. அன்பு, பண்பும், பாசமும், நேசமும், ஒற்றுமையும் பிண்னிப்பிணைந்த ஒரு சக்தி வாய்ந்த கயிறு போன்றதாகும். அதை எளிதில் அறுத்து அதை வைத்தே பிறந்த பிள்ளைகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க முயல்வது எவ்விதத்தில் நியாயமாகவும், தர்மமாகவும் இருக்க முடியும்?

விவாகரத்திற்குப்பின் பிள்ளைகளை கணவன் தான் வைத்துப்பராமரிப்பான் அல்லது மனைவி தான் வைத்து பராமரிப்பாள் என்ற பெரும் பிரச்சினை உருவாகி அது இரு அணிகளாக நின்று ஒரு மாபெறும் கயிறு இழுக்கும் போட்டி போல் நடக்கின்றது. இதில் கயிறு பலத்தால் அறுபடுகிறதோ, இல்லையோ? ஆனால் இல்லற வாழ்க்கையுடன் பிள்ளைகளின் எதிர்காலம் அறுபடுவது உறுதி.

பிள்ளைக‌ள் த‌ன் பெற்றோரிட‌ம் காட்டும் பாச‌த்தில் எவ்வித‌ போலியும் இல்லை வேசம் போட்ட நேசமும் இல்லை. நிச்ச‌ய‌ம் ப‌ரிசுத்த‌மான‌ அன்பு இருக்கும் நீங்க‌ள் அவ‌ர்க‌ளுக்காக‌ எல்லாப்பிர‌ச்சினைக‌ளையும் ஓர‌ங்க‌ட்டி விட்டு வாழும் கால‌ம் வ‌ரை.

பாதிக்க‌ப்ப‌ட்ட‌ பிஞ்சுக‌ள் பெரிய‌வ‌ர்க‌ளாகி இதுபோன்ற க‌ட்டுரைகள் இதை விட தெளிவாக‌ எழுத‌லாம். நாம் அன்றாட‌ வாழ்வில் தாய், த‌ந்தைய‌ரை பிரிந்து வாழ்வ‌தால் அவ‌ர்க‌ள் ப‌டும் க‌ஷ்ட‌, ந‌ஷ்ட‌ங்க‌ளை ஏதோ ந‌ம் அறிவுக்கு எட்டிய‌தை இங்கு உங்க‌ளின் மேலான‌ பார்வைக்காக‌வும், க‌ருத்திற்காக‌வும் வ‌ழ‌ங்குகின்றேன். தொட‌ருங்க‌ள் உங்க‌ளின் பின்னூட்ட‌ம் மூல‌ம் இன்ஷா அல்லாஹ்.... மானுடம் வசந்தம் பெற ஒரு நல்ல‌ மார்க்கமுண்டு அதுவே இஸ்லாம் எனும் இனிய மார்க்கம்.

http://adiraipress.blogspot.com/




வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக