புதிய பதிவுகள்
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மாதவிடாய் நாட்களும் முதலாளியப் பெண்ணியமும் Poll_c10மாதவிடாய் நாட்களும் முதலாளியப் பெண்ணியமும் Poll_m10மாதவிடாய் நாட்களும் முதலாளியப் பெண்ணியமும் Poll_c10 
54 Posts - 45%
ayyasamy ram
மாதவிடாய் நாட்களும் முதலாளியப் பெண்ணியமும் Poll_c10மாதவிடாய் நாட்களும் முதலாளியப் பெண்ணியமும் Poll_m10மாதவிடாய் நாட்களும் முதலாளியப் பெண்ணியமும் Poll_c10 
51 Posts - 42%
mohamed nizamudeen
மாதவிடாய் நாட்களும் முதலாளியப் பெண்ணியமும் Poll_c10மாதவிடாய் நாட்களும் முதலாளியப் பெண்ணியமும் Poll_m10மாதவிடாய் நாட்களும் முதலாளியப் பெண்ணியமும் Poll_c10 
5 Posts - 4%
prajai
மாதவிடாய் நாட்களும் முதலாளியப் பெண்ணியமும் Poll_c10மாதவிடாய் நாட்களும் முதலாளியப் பெண்ணியமும் Poll_m10மாதவிடாய் நாட்களும் முதலாளியப் பெண்ணியமும் Poll_c10 
4 Posts - 3%
Jenila
மாதவிடாய் நாட்களும் முதலாளியப் பெண்ணியமும் Poll_c10மாதவிடாய் நாட்களும் முதலாளியப் பெண்ணியமும் Poll_m10மாதவிடாய் நாட்களும் முதலாளியப் பெண்ணியமும் Poll_c10 
2 Posts - 2%
M. Priya
மாதவிடாய் நாட்களும் முதலாளியப் பெண்ணியமும் Poll_c10மாதவிடாய் நாட்களும் முதலாளியப் பெண்ணியமும் Poll_m10மாதவிடாய் நாட்களும் முதலாளியப் பெண்ணியமும் Poll_c10 
1 Post - 1%
kargan86
மாதவிடாய் நாட்களும் முதலாளியப் பெண்ணியமும் Poll_c10மாதவிடாய் நாட்களும் முதலாளியப் பெண்ணியமும் Poll_m10மாதவிடாய் நாட்களும் முதலாளியப் பெண்ணியமும் Poll_c10 
1 Post - 1%
jairam
மாதவிடாய் நாட்களும் முதலாளியப் பெண்ணியமும் Poll_c10மாதவிடாய் நாட்களும் முதலாளியப் பெண்ணியமும் Poll_m10மாதவிடாய் நாட்களும் முதலாளியப் பெண்ணியமும் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
மாதவிடாய் நாட்களும் முதலாளியப் பெண்ணியமும் Poll_c10மாதவிடாய் நாட்களும் முதலாளியப் பெண்ணியமும் Poll_m10மாதவிடாய் நாட்களும் முதலாளியப் பெண்ணியமும் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மாதவிடாய் நாட்களும் முதலாளியப் பெண்ணியமும் Poll_c10மாதவிடாய் நாட்களும் முதலாளியப் பெண்ணியமும் Poll_m10மாதவிடாய் நாட்களும் முதலாளியப் பெண்ணியமும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாதவிடாய் நாட்களும் முதலாளியப் பெண்ணியமும் Poll_c10மாதவிடாய் நாட்களும் முதலாளியப் பெண்ணியமும் Poll_m10மாதவிடாய் நாட்களும் முதலாளியப் பெண்ணியமும் Poll_c10 
97 Posts - 55%
ayyasamy ram
மாதவிடாய் நாட்களும் முதலாளியப் பெண்ணியமும் Poll_c10மாதவிடாய் நாட்களும் முதலாளியப் பெண்ணியமும் Poll_m10மாதவிடாய் நாட்களும் முதலாளியப் பெண்ணியமும் Poll_c10 
51 Posts - 29%
mohamed nizamudeen
மாதவிடாய் நாட்களும் முதலாளியப் பெண்ணியமும் Poll_c10மாதவிடாய் நாட்களும் முதலாளியப் பெண்ணியமும் Poll_m10மாதவிடாய் நாட்களும் முதலாளியப் பெண்ணியமும் Poll_c10 
9 Posts - 5%
prajai
மாதவிடாய் நாட்களும் முதலாளியப் பெண்ணியமும் Poll_c10மாதவிடாய் நாட்களும் முதலாளியப் பெண்ணியமும் Poll_m10மாதவிடாய் நாட்களும் முதலாளியப் பெண்ணியமும் Poll_c10 
6 Posts - 3%
Jenila
மாதவிடாய் நாட்களும் முதலாளியப் பெண்ணியமும் Poll_c10மாதவிடாய் நாட்களும் முதலாளியப் பெண்ணியமும் Poll_m10மாதவிடாய் நாட்களும் முதலாளியப் பெண்ணியமும் Poll_c10 
4 Posts - 2%
Rutu
மாதவிடாய் நாட்களும் முதலாளியப் பெண்ணியமும் Poll_c10மாதவிடாய் நாட்களும் முதலாளியப் பெண்ணியமும் Poll_m10மாதவிடாய் நாட்களும் முதலாளியப் பெண்ணியமும் Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
மாதவிடாய் நாட்களும் முதலாளியப் பெண்ணியமும் Poll_c10மாதவிடாய் நாட்களும் முதலாளியப் பெண்ணியமும் Poll_m10மாதவிடாய் நாட்களும் முதலாளியப் பெண்ணியமும் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
மாதவிடாய் நாட்களும் முதலாளியப் பெண்ணியமும் Poll_c10மாதவிடாய் நாட்களும் முதலாளியப் பெண்ணியமும் Poll_m10மாதவிடாய் நாட்களும் முதலாளியப் பெண்ணியமும் Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
மாதவிடாய் நாட்களும் முதலாளியப் பெண்ணியமும் Poll_c10மாதவிடாய் நாட்களும் முதலாளியப் பெண்ணியமும் Poll_m10மாதவிடாய் நாட்களும் முதலாளியப் பெண்ணியமும் Poll_c10 
1 Post - 1%
jairam
மாதவிடாய் நாட்களும் முதலாளியப் பெண்ணியமும் Poll_c10மாதவிடாய் நாட்களும் முதலாளியப் பெண்ணியமும் Poll_m10மாதவிடாய் நாட்களும் முதலாளியப் பெண்ணியமும் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாதவிடாய் நாட்களும் முதலாளியப் பெண்ணியமும்


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat Jan 22, 2011 3:39 pm

பெண்களின் மாதவிடாய் குறித்த என் அனுபவங்கள்தான் இக்கட்டுரையை எழுதத் தூண்டுகின்றன. பதினைந்து ஆண்டுகளுக்கு முன், என் அம்மா வயிற்று வலியால் துடிக்கும் போதெல்லாம் மப்டால் ஸ்பாஸ்(maftal spas) எனும் மாத்திரையை வாங்கி வருவேன். அதை விழுங்கினால் வலி நிற்கும். இப்போது நான் சந்திக்கும் பெண்களில் பெரும்பாலானோர் இதே போன்ற வலியினால் அவதிப்படுவதைக் காணமுடிகிறது. குறிப்பாக, நகர-மாநகரப் பெண்களின் மாதாந்திர நிகழ்வுகளில் ஒன்று மாதவிடாய் வலியால் அவதிப்படுவது என்றாகிவிட்டது.

மாதவிடாய் என்பது பெண்களின் உடல் இயக்கங்களில் ஒன்றுதானே தவிர, நோய் அல்ல. ஆனாலும், இன்று அது ஒரு மோசமான நோய் போலவே அணுகப்படுகிறது. மாதத்தில் மூன்று நாட்கள் மட்டுமே மாதவிடாய் உதிரப்போக்கு இருக்கும் என்ற நிலை இன்று இல்லை. மாதத்தில் 25 நாட்கள் உதிரப்போக்கு உள்ள பெண்கள் பெருகிக் கொண்டிருக்கின்றனர். இந்த உதிரப்போக்கை நிறுத்துவதற்கு மாத்திரைகள் விழுங்கும் வழக்கம் இன்று பொதுவாகிவிட்டது.

மனித குலம் தோன்றிய காலம் தொட்டே பெண்கள் சந்திக்கும் மிக மோசமான வாழ்க்கைச் சூழல் இதுவாகத்தான் இருக்கும். ஆனால், இதுதான் பெண்கள் உரிமை பெற்று வாழும் காலம் என்று கதைக் கட்டப்படுகிறது. பெண்கள் வேலைக்குப் போவது அதிலும் ‘ஆணுக்கு நிகராக’ வேலைக்குப் போவது பெருமையாகப் பேசப்படுகிறது. இவ்வாறு பெருமை பேசும் எந்தக் கோட்பாடுவாதியும் பெண்களின் உடலியல் சிக்கல்கள் அபாயகரமான கட்டத்தை எட்டிவிட்டதைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை.

உதிரப்போக்கு காலத்தில் பெண்களுக்கு முழுமையான ஓய்வு அளிக்கப்பட வேண்டும். இதுவே அறிவியல். ஆனால், முதலாலியம் இதை விரும்பாது. அதற்குத் தன் தொழிற்சாலைகளில், அலுவலகங்களில் பணிபுரிய அடிமைகள் வேண்டும். மாதத்தில் சில நாட்கள் பெண்களுக்கு விடுப்பு அளிப்பது உற்பத்தியைப் பாதிக்கும் என்றே முதலாளியம் கருதுகிறது. இதனால், உதிரப்போக்கு காலத்திலும் பெண்கள் பணிக்கு வர வேண்டும் என்ற தன் சுயநலத்தை, முற்போக்கு முகமூடி அணிந்து கொண்டு பரப்புரை செய்து வருகிறது.

இக்கருத்தை முதலாளியம் நேரடியாகக் கூறுவதில்லை. மிகவும் தந்திரமாக, பெண்ணுரிமையின் பேரிலும், நாப்கின் விளம்பரங்களின் வழியாகவும் கூறுகிறது. விளம்பரங்களில் வரும் பெண்கள் மாதவிடாய் காலத்திலும் துள்ளி குதித்துக் கொண்டு வேலை செய்கிறார்கள் அல்லது உற்சாகமாக ஊர் சுற்றுகிறார்கள். அதாவது, பெண்கள் ‘ஆணுக்கு நிகராக’ இருக்கிறார்கள். இவ்வாறு செய்வதற்கு அவர்கள் ஏதேனும் ஒரு நிறுவனத்தின் நாப்கின்கள் அணிந்தால் போதும்!

உண்மையில், நாப்கின்கள் என்ன செய்கின்றன? உதிரப்போக்கைக் குறைக்கின்றனவா அல்லது உதிரப்போக்கினால் ஏற்படும் உடல் சோற்வை போக்குகின்றனவா? அல்லது இலந்த உடல் ஆற்றலை ஈடு செய்கின்றனவா? ஒன்றும் இல்லை. மாறாக, மாதவிடாய்ச் சிக்கலை ஒரு நோயாக மாற்றுகின்றன. இதைப் புரிந்து கொள்ள, பெண்களின் பிறப்பு உறுப்பின் சில அறிவியல் அடிப்படைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். பிறப்புறுப்பின் புற இதழ்ப் பகுதியின் பணிகளில் ஒன்று, உட்பகுதிகளுக்குக் கிருமிகள் பரவாமல் பாதுகாப்பது. கண்களுக்கு இமை போல எனலாம். உதிரப்போக்கின் போது வெளியேறும் உதிரத்தில்,

1. கருப்பையின் உட்புறச் சவ்வுக் கழிவு
2. கருப்பை மண்டலக் குருதி நாளங்களின் காயங்களில் இருந்து கசியும் குருதி
3. கருவுறாமல் கலைந்த முட்டைகள்
ஆகியவை கலந்திருக்கும்.(அந்த மூன்று நாட்கள்/ முழுநிலவன்/ சீதை பதிப்பகம்)

இவை அனைத்துமே உடலில் இருந்து வெளியேற்றப்பட வேண்டிய கழிவுகள். இயற்கையின் ஆற்றலால் உடல் மாதம் ஒருமுறை இக்கழிவு அகற்றும் பணியைச் செய்கிறது. இந்தக் கழிவு உதிரத்தை துணியால் துடைத்து, உடலைத் தூய்மையாக வைத்துக் கொள்வதே சரியானச் செயல். இதைத்தான் நம் முன்னோர்கள் செய்தனர்.

நாப்கின்கள், இக்கழிவுகளைப் பிறப்புறுப்பிலேயே சில மணி நேரம் தங்க வைக்கின்றன. அதாவது, உதிரப்போக்கைத் துடைத்து அகற்றுவதற்குப் பதிலாக, பிறப்புறுப்பின் மேலேயே சேகரித்து வைக்கின்றன. இதன் விளைவாக, கழிவுகளில் உள்ள கிருமிகள் பெருகி, மீண்டும் பிறப்புறுப்பிற்குள் செல்லும் அபாயம் உள்ளது. புற இதழ் மீது நாப்கின் இறுக்கமாகப் பொருத்தப்படும்போது, புற இதழால் செயலாற்ற இயலாது.

ஆகவே, இன்றைய நாப்கின் முறை அறிவியலுக்கு எதிரானது. பெண்களின் பிறப்புறுப்பு மண்டலம், கரு மண்டலம் ஆகியவற்றோடு சிறுநீர் மண்டலமும் இத்தகைய தூய்மைக் கேட்டால் பாதிக்கப்படுகின்றன. மாதவிடாய்ச் சிக்கல் உள்ள பெண்களுக்குச் சிறுநீர்க் கிருமித் தொற்றும் ஏற்படுவதைக் கவனிக்க வேண்டும்.

மூத்த தலைமுறைப் பெண்கள் மாதவிடாயின் போது, வீட்டின் ஓரத்தில் உட்கார வைக்கப்பட்டனர். அவர்களைச் சுற்றி உலக்கை அல்லது வேறு ஏதேனும் தடுப்பு போடப்பட்டும் ‘மாதவிலக்கு’ என்றே அது அழைக்கப்பட்டது. அதாவது, அந்த நாட்களில் அவர்கள் விலக்கி வைக்கப்பட்டனர். அவர்களைத் தொட்டால் தீட்டு என்றும் கூறப்பட்டது. இது தவறு என்பதில் ஐயமில்லை. ஆயினும், இம்முறையில் இருந்த சில அறிவியல் கூறுகளை ஒதுக்கமுடியாது.

அடிப்படையில், அப்பெண்கள் எந்த வேலையும் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள். இதனால் அவர்களுக்குத் தேவையான ஓய்வு கிடைத்தது. மாதவிடாய் நாட்களில் அப்பெண்களுக்கென தனி உணவு முறையும் இருந்தது. இந்த உணவுகள் குருதி இழப்பினால் ஏற்படும் ஆற்றல் குறைபாட்டைச் சரி செய்பவை. இதனால், மூன்று நாட்கள் கழிந்த பின்னர், பெண்களால் வழமையான உற்சாகத்துக்குத் திரும்ப முடிந்தது. இன்றும் கணிசமான கிராமப்புறப் பெண்கள் இவ்வாறான வழக்கத்தைக் கடை பிடிக்கின்றனர்.

ஆனால், ‘தீட்டு’ என்ற ஒன்றை மட்டும் வைத்து, இந்த முறையே பிற்போக்குத்தனமானது என்ற முடிவை முதலாளியச் சிந்தனை முன் வைத்தது. அதன் விளைவு, இந்தச் சிந்தனையின் தாக்கத்தில் சிக்கிய பெண்களுக்கு,

1. மாதவிடாய் காலத்தில் ஓய்வு கிடைப்பதில்லை.

2. உதிரப்போக்கை ஈடு செய்யும் உணவு கிடைப்பதில்லை.

3. பிறப்புறுப்பைத் தூய்மையாகப் பராமரிக்கும் வாய்ப்பு மறுக்கப்படுகின்றது.

4. நாப்கின்களுக்காகச் செலவு செய்ய வேண்டியுள்ளது.

5. எல்லாவற்றிற்கும் மேலாக, கருப்பை, சிறுநீரக மண்டல நோய்களைச் சுமக்க வேண்டியுள்ளது.
ஆண் பெண் இருவருமே பணிக்குச் செல்ல வேண்டும் என்பது இன்றைய பொருளாதார இழிநிலையின் வெளிப்பாடுதான் என்ற புரிதல் வேண்டும். இருவரும் பணிக்குச் செல்லும் தேவை ஏற்பட்டாலும் மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு ஓய்வு கிடைக்கும்படியான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

ஆண்கள் செய்யும் எல்லாப் பணிகளையும் பெண்களால் செய்ய முடியும் என்று கூறுவது சமத்துவம் தான். ஆனால், ஆண்களின் உடலமைப்புக்கும் பெண்களின் உடலமைப்பிற்கும் உள்ள வேறுபாட்டை அங்கீகரிக்காமல் முழங்குவது ஆணாதிக்கம் தானே தவிர, பெண்ணுரிமைக் குரல் அல்ல.

மாதவிடாய் உதிரம் சங்க காலத்தில் செழிப்பின் குறியீடாகப் பார்க்கப்பட்டது. பெண்பருவம் அடைந்தால், அவள்குலம் பெருக்க தயார் ஆகிவிட்டாள் என்றுதான் புரிந்துக்கொள்ளப்பட்டது.

மனித இனத்தின் தொல்குடிக் காலத்தில், மாதவிடாய் நாட்களில் பெண்கள் உடலுரவைத் தவிர்க்க, தமது உதிரத்தை எடுத்து நெற்றியில் பூசிக் கொண்டனர். இது ஆண்களுக்கான மறுப்பு அறிவிப்பு. சங்கத் தமிழர்கள் இந்தப் பின்புலத்தில் குருதிச் சிவப்பைச் செழிப்பின் குறியீடாகக் கொண்டார்கள். நெற்றியில் சிவப்பு நிறம் பூசும் வழக்கம் இப்படித் தொடங்கி, குங்குமமாக மாறியுள்ளது.

கிராமங்களில் நடுத்தர வயது பெண்கள் சிலர் தம்மீது அம்மன் அல்லது வேறு பெண் தெய்வம் ஏறுவிட்டதாகக் கூறி, பெரிய வட்டமாக குங்குமம் வைப்பது வழக்கம். இதற்குப் பின்னால், அவர்களது மாதவிடாய் தொடர்பான சிக்கல் இருக்கும் வாய்ப்புகள் அதிகம். அதாவது, கணவரிடம் உடல் உறவுக்கு நான் தயாராக இல்லை என்று அறிவித்து சம்மதம் பெற இயலாத நிலையில் இவ்வாறான அம்மன் காரணம் கற்பிக்கப்படும். இவர்களில் பெரும்பாலானோர் மாதவிடாய் முடிந்த காலத்தை எட்டியிருப்பார்கள்.

இப்படியாக, மாதவிடாய் என்பது ஆண் பெண் உறவில் காலங்காலமாக ஒரு முரணை பேணி வரும் உடலியல் இயக்கம் ஆகும், இதைப் புரிந்து கொள்ளாமல், பொத்தாம் பொதுவாக ஆணும் பெண்ணும் சமம் என்று கூறுவது, பெண்களின் உடலியலை மேலும் சேதப்படுத்துவதில் கொண்டு சேர்க்கும்.

உடல் வலுவிலும், உள்ள உரத்திலும் பெண் ஆணுக்கு நிகரானவர்தான். ஆனால் பெண்ணுக்குள்ள தனித்த உடலியல் இயக்கங்களைப் புறந்தள்ளிவிட்டு பேசப்படும் ‘சமத்துவம்’ பெண் உழைப்பைச் சுரண்டுவதற்கான உத்தியே ஆகும்.
இந்திய சுகாதாரத் துறை, ‘நாப்கின்களை ஏழை இளம் பெண்களுக்கு வழங்குவதற்காக’ ஏறத்தாழ 3 கோடியே 20 இலட்சம் ரூபாயை மானியமாக சில பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்குவதாக அறிவித்தது. இந்தத் தொகை 600 மாவட்டங்களுக்கானது. இத்திட்டத்தை மேலும் விரிவு செய்யும் நோக்கம் இந்திய அரசுக்கு உள்ளது. ‘பல இளம் பெண்கள் மாதவிடாய் காலங்களில் பள்ளிக்குச் செல்வதில்லை. இதனால் அவர்கள் கல்வி பாதிக்கப்படுகிறது. இதைத் தடுக்கவே இத்திட்டம்’ என்கிறது அரசு. (பார்க்க:http://businessinda.com)

நாப்கின் பொருத்திக்கொண்டால், உடலியல் தொல்லைகள் தீர்ந்துவிடுமா? என்ற கேள்வியை முன்வைக்க வேண்டும். இது மக்கள் பணத்தைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வாரிவிடும் சதி.

பணிக்குச் செல்லும் பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் இளம் பெண்களுக்கும் ஓய்வு விடுப்பு அளிக்க வேண்டும். அந்நாட்களில் ஏற்படும் வகுப்பு இழப்புகளை ஈடு செய்ய தனி ஏற்பாடு செய்ய வேண்டும். குடும்பங்களில் மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு முழு ஓய்வு கிடைக்கும்படிச் செய்யவேண்டும். ஆண்கள், குடும்பப் பணிகளைப் பகிர்ந்து செய்யும் மனநிலையையும் திறனையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். நாப்கின் போன்ற அறிவியலுக்குப் புறம்பான பொருட்களை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். இவற்றுக்கு மாற்றாக, மரபு சார்ந்த பழக்கங்களை மீட்டெடுக்க வேண்டும்.

பெண்களின் உடல் கூறுகளுக்கு முரணில்லாத பணிகளை மட்டுமே அவர்களுக்கு ஒப்படைக்க வேண்டும். மாதவிடாய் உதிரப்போக்கு ‘தீட்டு’ என்ற மூடநம்பிக்கையை விட்டொழிக்க வேண்டும். அது கிருமிகளின் வெளியேற்றம். ஆகவே, அந்த உதிரம் நீக்கிய துணியை எரியூட்டிவிட வேண்டும்.

இவற்றைச் செய்யாமல், பெண்களைப் பாடாய்ப்படுத்தி எடுத்துவிட்டு, ‘இதுதான் ஆண் பெண் சமத்துவம்’ என்று மார் தட்டிக் கொள்வது பெண்களுக்கு இழைக்கும் அநீதி.

பெரும்பாணாற்றுப் படையில் வரும் காட்டி ஒன்று,
‘பெண்கள் எருது பூட்டிய வண்டிகளை ஓட்டிச் செல்கின்றார்கள். வண்டிகளிம் இருபுறங்களிலும் ஆண்கள் காவல் பூண்டு நடந்தார்கள். வண்டிகளின் அடிப்பகுதியில் கோழிகளைக் கொண்ட கூடுகள் தொங்கவிடப்பட்டிருந்தன’ என்கிறது.

முல்லைப்பாட்டு எனும் சங்க இலக்கிய நூலில் போர்க்கலத்தில் பெண்கள் பணியாற்றிய செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. பாசறைப் பெண்டிர் என்று அவர்கள் குறிக்கப்பட்டனர். பாணர், விறலியர், தேவரடியார் நடனங்கள் கடினமான உடலியக்கத்தைக் கொண்டவை. தமிழ்ப் பெண்கள் இப்படித்தான் உடல் நலத்துடன் வாழ்ந்தார்கள்.

தமிழ் மரபு என்பதே பிற்போக்குத்தனமானது என்ற அவதூறுகளின் விளைவால், இன்றைய தமிழ்ப் பெண்களின் கருப்பை மண்டலம் பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக் களமாக மாறிவிட்டது. முதலாளியமும் ஆனாதிக்கமும் ஒன்றுடன் ஒன்று இணைந்து வளரும் தன்மை உடையவை. ஆண்கள் தம் குடும்பப் பெண்களுக்கான உரிமைகலை வழங்க வேண்டும். அதற்கான முதல் பணி, மாதவிடாய் காலங்களில் பென்களை நிம்மதியாக ஓய்வெடுக்கவிடுவதுதான்!

இந்திய அரசு நாப்கின்களுக்காக 5 ஆண்டுகளில் செலவிடும் தொகை 90ஆயிரத்து 560கோடி ரூபாய்! இந்தப் பணத்தின் பெரும்பகுதி சில பன்னாட்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்படுகிறது! இந்த நாப்கின்களால் விளையும் கருப்பை, பிறப்புறுப்பு நோய்களுக்கு மருந்து தயாரிப்பவையும் பன்னாடு நிறுவனங்கள்தான்!

மாதவிடாய் நாட்களில் முழுமையான ஓய்வுடன், இக்கட்டுரையுடன் இணைக்கப்பட்டுள்ள மாதவிடாய் கால உணவுப் பட்டியலைப் பின்பற்றினால், பெண்களின் உடல் நலன் காக்கப்படும்.

நீங்கள் செலவிடும் தொகை, தமிழ்நாட்டு உழவர்களுக்குப் போய்ச் சேரும்!

மாதவிடாய் காலத்து மரபுசார் உணவுகள்
உளுந்தங்களி
உளுந்து மாவு நன்றாக அரைக்கப்பட்டது. பனை வெல்லம் 3 டம்ளர். நல்லெண்ணை 1 டம்ளர்.
கருப்பட்டி மூழ்கும் அளவு தண்ணீரில் கரைத்து, வடிகட்டி, ஒன்றரை டம்ளர் எடுத்து, அடுப்பில் வைத்து விரல் பொறுக்கும் சூடேற்றி, மாவை கொட்டிவிட வேண்டும். 10 நிமிடம் இதமான சூட்டில் வேகவிட வேண்டும். பின், மரக் கரண்டியின் காம்புப் பகுதியால் கிளர வேண்டும். 5 நிமிடம், கட்டி விழாமல் கிளறிய பிறகு, கையில் ஒட்டாத பதம் வரும். அப்போது, இறக்கி நல்லெண்ணெய் ஊற்றி உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு உருண்டையிலும் குழி பறித்து நல்லெண்ணெய் ஊற்றிச் சாப்பிடலாம்.

உளுந்து சோறு
புழுங்கள் அரிசி 1 டம்ளர், உளுந்து கால் டம்ளர், பூண்டு 10 பற்கள், சீர்கம் ரு தேக்கரண்டி, வெந்தயம் 1 சிட்டிகை, இஞ்சி சிறு துண்டு, பெருங்காயம் சிறுதுண்டு, உப்பு தேவையான அளவு, தேங்காய் துருவல் லு டம்ளர்.
அரிசி உளுந்து ஒன்றாகக் கலைந்து 3 பங்கு நீரில், சீரகம், வெந்தயம், காயம் இஞ்சி, உப்பு போட்டு சோறு வடிப்பது போல கொதிக்க வைத்து, பொங்கல் பதத்துக்கு முந்தைய பதத்தில் இறக்க வேண்டும்.

எள் துவையல்
கருப்பு எள் 100 கிராம், மிளகாய் வற்றல் 7, புளி நெல்லிக்காய் அளவு, உப்பு தேவையான அளவு. வானலியில் எண்ணெய் விடாமல் எள்ளை வறுத்து, மிளகாய் வற்றலை சிறிது எண்ணெய் ஊற்றி வதக்கி ஆற வைத்து அரைத்தால் எள் திவையல்
மேற்கண்ட உளுந்துச் சோற்றில் நல்லெண்ணை ஊற்றி, துவையலைப் பிசைந்து உண்ண வேண்டும்.

உளுந்து வடை, புட்டு
வழமையான முறையில் உளுந்து வடை, புட்டு செய்து மாலை நேரங்களில் உண்ணலாம்.

ம.செந்தமிழன்
தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்
திருவள்ளுவர் ஆண்டு 2041 மார்கழி (திசம்பர் 2010) இதழ்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக