புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்.. Poll_c10மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்.. Poll_m10மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்.. Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்.. Poll_c10மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்.. Poll_m10மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்.. Poll_c10 
66 Posts - 43%
mohamed nizamudeen
மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்.. Poll_c10மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்.. Poll_m10மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்.. Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்.. Poll_c10மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்.. Poll_m10மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்.. Poll_c10 
4 Posts - 3%
bala_t
மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்.. Poll_c10மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்.. Poll_m10மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்.. Poll_c10 
1 Post - 1%
prajai
மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்.. Poll_c10மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்.. Poll_m10மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்.. Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்.. Poll_c10மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்.. Poll_m10மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்.. Poll_c10 
1 Post - 1%
M. Priya
மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்.. Poll_c10மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்.. Poll_m10மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்.. Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்.. Poll_c10மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்.. Poll_m10மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்.. Poll_c10 
1 Post - 1%
Kavithas
மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்.. Poll_c10மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்.. Poll_m10மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்.. Poll_c10மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்.. Poll_m10மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்.. Poll_c10 
297 Posts - 42%
heezulia
மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்.. Poll_c10மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்.. Poll_m10மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்.. Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்.. Poll_c10மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்.. Poll_m10மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்.. Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்.. Poll_c10மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்.. Poll_m10மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்.. Poll_c10 
27 Posts - 4%
sugumaran
மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்.. Poll_c10மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்.. Poll_m10மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்.. Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்.. Poll_c10மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்.. Poll_m10மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்.. Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்.. Poll_c10மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்.. Poll_m10மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்.. Poll_c10 
6 Posts - 1%
prajai
மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்.. Poll_c10மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்.. Poll_m10மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்.. Poll_c10 
5 Posts - 1%
manikavi
மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்.. Poll_c10மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்.. Poll_m10மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்.. Poll_c10 
4 Posts - 1%
Kavithas
மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்.. Poll_c10மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்.. Poll_m10மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்.. Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்..


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Feb 03, 2011 8:45 pm

மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்.. P42
காலை வருகையைத் தள்ளி வைத்து, மதியம் 1 மணிக்கு வருவதாய்ச்
சொன்​னார் கழுகார். அடுத்து வருகையை மாலை 6 மணிக்குத் தள்ளி வைத்தார். அப்போதும் வராமல், இரவு 8 மணிக்கு ஒரு வழியாய் வந்து சேர்ந்தார்!

கழுகார் 'பங்சுவாலிட்டு பரமசிவம்’ என்பது நாம் அறிந்ததுதான். அவர் அரைமணி நேரம் லேட் ஆனாலே ஆயிரம் காரணம் இருக்கும்... அரை நாள் தாமதத்துக்கு காரணத்தைக் கேட்டோம்.

''என்னை மட்டும்தான் கேட்பீரா? கருணாநிதி​யையும் சோனியாவையும் கேட்க மாட்டீரா? மதியம் 12 மணிக்கு சோனியாவைப் பார்த்திருக்க வேண்டிய கருணாநிதி, மாலை 5 மணிக்கு என்று மாறி, இரவு 7.30 மணிக்குத்தான் சந்தித்திருக்கிறார். நம்பர் 10, ஜன்பத் வீட்டின் நம்பர் கேம்தான் இதற்குக் காரணமாம்!'' என்றபடி தொடங்கினார்.

''டெல்லியில் கருணாநிதி கால் வைத்த நேரம் சரியில்லை என்றே நினைக்கிறேன்! அவர் கை வைத்த விஷயங்கள் அனைத்துமே கந்தலாகத் தொங்கியதால், மனிதர் அதிகமாகவே அப்செட். உள்​நாட்டுப் பாதுகாப்பு குறித்த மாநாட்டில் கலந்து கொள்வதாகத்தான் கருணாநிதியின் டெல்லிப் பயணம் முதலில் திட்டமிடப்பட்டது. தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியை உறுதிப்படுத்திவிட்டு காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகளை விட்டுத்தருவது என்பது குறித்து பேசுவதற்காகவும் இந்தப் பயணத்தை கருணாநிதி பயன்படுத்திக் கொள்ள நினைத்தார். காங்கிரஸ் கட்சி 80 தொகுதிகள் எதிர்பார்ப்பதையும், கருணாநிதி 50-க்கு தயாராக இருப்பதையும் ஏற்கெனவே சொல்லியிருந்தேன். ஆனால், இந்தக் கணக்கை காங்கிரஸ் மேலிடம் ஏற்றுக் கொள்ளவில்லையாம். அதனால், சோனியாவிடம் நேரில் பேசி கணக்கை முடிக்கக் கருணாநிதி திட்டமிட்டார்.''

''இந்த விஷயம் குறித்து இவர்களுக்கு முன்பு யார் பேசினார்களாம்?''மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்.. P42a'கருணாநிதி சார்பில் டி.ஆர்.பாலுவும் சோனியா தரப்பில் அகமது படேலும் பேசினார்கள். நான் முன்னமே சொன்ன எண்ணிக்கையில்தான் இந்த விவாதங்கள் தொடர்ந்தன. தி.மு.க. தனது எண்ணிக்கையை 55 என்று கொஞ்சம் கூட்டியது. காங்கிரஸ், 75 ஆகக் குறைத்துக் கொண்டது. ஆனால் இருவரும் உடன்பாட்டுக்கு வரமுடியவில்லை. பிரணாப் முகர்ஜி சென்னை வந்தபோதும் சோனியாவின் எண்ணிக்கையைச் சொல்லிப் போனார். பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள், மற்றும் கூட்டணியில் உள்ள 9 கட்சிகளுக்கும் தொகுதிகளைப் பிரித்துக் கொடுத்தால் காங்கிரஸ் எதிர்பார்க்கும் எண்ணிக்கையைத் தர​முடியாது என்று தி.மு.க. தரப்பு தன்னுடைய வாதங்​களை அடுக்கிய பிறகும் காங்கிரஸ் மசிவதாகத் தெரியவில்லை. 'சமீபத்திய மத்திய மந்திரிசபை மாற்றத்தில் கூட, நாங்கள் பதவி கேட்கவில்லையே...’ என்று தி.மு.க. தரப்பு சொன்ன நல்லெண்ண நடவடிக்கையும் ஒர்க்அவுட் ஆகவில்லை. இந்த சமயத்தில்​தான் சோனியா சந்திப்புக்காக கருணாநிதி 30-ம் தேதி டெல்லி போனார். 31-ம் தேதி காலையில் பிரதமர் மன்மோகன் சிங்கை கருணாநிதி சந்தித்தார். இது நிர்வாக ரீதியான சந்திப்புத்தான். அதற்கு இரண்டு மணிநேரம் முன்னால், பிரதமரிடம் 2ஜி சம்பந்தமான விசாரணை அறிக்கையை நீதிபதி சிவராஜ் பாட்டீல் தாக்கல் செய்திருந்தார்...''

''அவருக்கு வேறு நாளே கிடைக்கவில்லையா? கருணா​நிதி சந்திக்கும் அன்றுதான் கொடுக்க வேண்டுமா?''மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்.. P43''தற்செயலாய் நடந்ததா... அல்லது வேண்டுமென்றே நடத்திக் காண்பிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு இன்னும் விடை தெரியவில்லை. சிவராஜ் பாட்டீல் தனது அறிக்கையில், 'தொலைத் தொடர்புத் துறை ஒதுக்கீட்டில் பல விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது. இதற்கு காரணமான அதிகாரிகள் பட்டியல் இதோ’ என்று பட்டவர்த்​தனமாக போட்டு உடைத்​திருக்கிறார். பிரதமரைச் சந்தித்துவிட்டு வெளியே வந்த பாட்டீல், 'சி.பி.ஐ. இது தொடர்பான கிரிமினல் குற்றங்களை விசாரித்து வருகிறது. நான் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் என்ன நடைமுறைகள் பின்பற்றப்பட்டன என்பது பற்றி மட்டுமே ஆய்வு செய்தேன்!’ என்றும் சொன்னார். இதன்படி பார்த்தால், விதிமுறை மீறல்கள் நடந்திருப்பதை மத்திய அரசாங்கம் அமைத்த விசார​ணைக் குழுவே ஏற்றுக் கொண்டு தீர்ப்பளித்திருப்பது தெளிவாகி உள்ளது. பிரதமரைச் சந்திக்கக் கிளம்பிய கருணாநிதியின் காதுக்கும் இது போய்ச் சேர்ந்தது. பிரதமர் இது தொடர்பாக சில கருத்துகளை கருணாநிதியிடம் சொன்னதாகவும் எனது டெல்லி சோர்ஸ் சொல்கிறார்!''

''ம்!''

''சோனியாவைச் சந்திக்கும்போது, அவரிடம் விலாவாரியாகப் பேசிக் கொள்ளலாம் என்று கருணாநிதி காத்திருந்த போதுதான் அடுத்த ஷாக். சி.பி.ஐ. அலுவலகத்தில் இருந்து ஆ.ராசாவுக்கு தாக்கீது வந்தது. 'உங்களிடம் சில விளக்கங்களை வாங்க வேண்டியுள்ளது. வாருங்கள்...’ என்று அழைத்தார்கள். ஆ.ராசாவை சி.பி.ஐ. ஒரு பக்கம் கிரில்லிங் பண்ணிக் கொண்டிருக்க... இன்னொரு பக்கம் தொகுதிகளின் எண்ணிக்கையை நிர்ணயிக்கும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நெருக்கடி கருணாநிதிக்கு. காங்கிரஸின் லாஜிக் அறிந்தவர்கள் இதை சோனியாவின் தந்திரம் என்கிறார்கள். சிவராஜ் பாட்டீல் அறிக்கை கொடுத்துவிட்டார், ஆ.ராசா சி.பி.ஐ. கஸ்டடியில் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்... இந்த நிலைமையில் தி.மு.க. தனக்கு அடங்கியே போகும் என்று சோனியா தரப்பு நினைத்திருக்கிறது. 'காந்தகார் விமானத்தைக் கடத்தி வைத்துக் கொண்டு நாங்கள் விரும்பும் ஆட்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தாலிபன் தீவிரவாதிகள் மிரட்டியது போல’த்தான் இருக்கிறது காங்கிரஸின் இந்த ஆபரேஷன். ஒரு புறம் ஆ.ராசாவின் மீது விசாரணை... மறுபுறம் கூட்டணி பேரம் என்று தொடர்ந்தன டெல்லிக் காட்சிகள்!'' என்று சொல்லி முடித்தவருக்கு சூடான மசாலா பால் கொடுத்தோம்.

''மதியம் 12 மணி அப்பாயின்ட்மென்ட்டை சோனியா கேன்சல் செய்ய என்ன காரணமாம்?''

''காய்ச்சல் என்கிறார்கள். கடந்த ஒரு வாரமாகவே உடல்நலக் குறைவுடன் இருந்தாராம் சோனியா. ஜனவரி 26-ம் தேதி குடியரசு தின விழாவில் பங்கேற்கவில்லை, அதற்கு மறுநாள் நடந்த என்.சி.சி. அணி வகுப்பைப் பார்வையிடவும் அவர் வரவில்லை. உடல் நிலை முழுமையாக தேற​வில்லை அதனால் இருவரும் சந்திக்க​வில்லை என்று சொன்னார்கள். 'அதை முன்னமே சொல்லி இருக்கலாமே’ என்று தி.மு.க. தரப்பு கொந்தளிக்க ஆரம்பித்தது. ஆனால் அகமது படேல், 'காங்கிரஸுக்கு தரப்போகிற ஸீட்டுகளின் எண்ணிக்கையைச் சொல்லாமல் மேடம் சந்திப்பதால் என்ன பிரயோஜனம்?’ என்று கேட்டதாகவும் சொல்கிறார்கள். எண்ணிக்கையை முடிவு செய்ய பிரணாப் முகர்ஜி, குலாம்நபி ஆசாத் ஆகிய இருவரையும் கருணாநிதி எதிர்பார்த்தார். ஆனால் இருவரையும் சோனியா அனுப்பி வைக்கவில்லை, அகமது படேலே தொடர்பில் வந்தார். தி.மு.க. தரப்பில் டி.ஆர்.பாலு தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தி.மு.க-வின் ஸ்ருதி ரொம்பவே இறங்கியிருந்தது.''மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்.. P44''அப்படியென்றால், பணயக் கைதி டெக்னிக் ஒர்க்கவுட் ஆகி விட்டதா...?''

''இருக்கலாம்! பா.ம.க. நம்முடைய கூட்டணியில் இல்லாவிட்டால் 66 தொகுதிகள் வரைக்கும் கொடுக்கலாம்... என்று தி.மு.க. தரப்பு ஒரு கணக்குப் போட்டுச் சொன்னது. 'இன்றைக்கு எண்ணிக்கையை முடிவு செய்யாவிட்டாலும் பரவாயில்லை. முதல்வரை சோனியா சந்தித்தால் மட்டும் போதும். அவரைச் சந்திக்காமல் தமிழ்நாட்டுக்குச் சென்றால், 'கூட்டணியில் குழப்பம் என்று செய்திகள் வரும்’ என்று தி.மு.க. தரப்பு தன்னுடைய வருத்தங்களை பதிவு செய்தது. 55-ல் இருந்து 60-க்கு ஸீட்டை முடிவு செய்துவிடலாம் என்ற முடிவோடு இருந்த கருணாநிதி, 'எத்தனை ஸீட் வேண்டுமானாலும் கொடுத்துவிடலாம்’ என்ற முடிவுக்கு வரும் அளவுக்கு டெல்லி டெம்பரேச்சர் எகிறிக் கொண்டே இருந்தது. '75 என்ற எண்ணிக்கை கருணாநிதி வாயில் இருந்து வரும் வரை... ஜன்பத் வீட்டுக் கதவு திறக்காது’ என்று டெல்லியில் இருந்து எனக்கும் எஸ்.எம்.எஸ். வந்தது!''

''க்ளைமாக்ஸுக்கு வாரும்...''

''மறுநாள் பிப்ரவரி 1-ம் தேதி காலையில் அமைச்சர்கள் மாநாடு இருக்கிறது. அதை முடித்துக் கொண்டு உடனே சென்னை திரும்பியாக வேண்டும், எனவே இரவு எத்தனை மணி ஆனாலும் சந்திப்பு நடந்தாகவேண்டும் என்று கருணாநிதி விரும்பினார். அதன்பிறகு அகமதுபடேலை தொடர்பு கொண்டு நெருக்கினார் பாலு. 'மரியாதை நிமித்தமான சந்திப்பாக சில நிமிடங்கள் பார்க்கலாம்’ என்று சோனியாவின் பாதுகாவலர் ஜார்ஜும் அனுமதிக்க... 8 மணிக்கு வாருங்கள் என்ற தகவல் 6 மணிக்கு தரப்பட்டதாம். டெல்லி குளிர் அதிகமாக இருக்க... 8 மணிக்கு முதல்வரால் வெளியில் வர முடியாது என்று 7 மணிக்கு மாற்றச் சொல்லியிருக்கிறார்கள். அதன்பிறகு வேண்டா வெறுப்பாக 7.30-க்கு அப்பாயின்ட்மென்ட் தரப்பட்டுள்ளது. 7.45 முதல் 8.15 வரை கருணாநிதி - சோனியா சந்திப்பு நடந்தது. சோனியாவுடன் ஆஸ்கர் பெர்னாண்டஸ், அகமது படேல் ஆகியோருடன் அமைச்சர் ஜி.கே.வாசனும் இருந்திருக்கிறார். பரஸ்பர அறிமுகம் செய்து கொண்ட பிறகு, திடீர் புயலாக உள்ளே நுழைந்திருக்கிறார் ராகுல். இதை கருணாநிதி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லையாம். 'யாருக்கு எத்தனை ஸீட் என்று முடிவெடுக்கும் அளவுக்கு இன்றைக்கு என்னுடைய உடல்நிலை இடம் கொடுக்கவில்லை. அதனால் அது பற்றி பின்னர் பேசி முடிவெடுப்போம்!’ என்று சோனியா சொன்னதாகவும் கருணாநிதி தன்னுடைய கூட்டணி நிலைமையை விளக்க ஆரம்பித்திருக்கிறார். உடனடியாக ராகுல், 'காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதியில் செல்வாக்கு இருக்கிறது என்ற பட்டியலை நாங்கள் கணக்கெடுத்து வைத்திருக்கிறோம். நீங்கள் ஒரு குழு போடுங்கள். நாங்கள் ஒரு குழு போடுகிறோம். அந்தக் குழு ஃபைனல் பண்ணட்டும்’ என்று ராகுல் சொன்னதாகவும், 'அந்த மாதிரி நடைமுறை இல்லையே! எத்தனை தொகுதிகள் என்று எண்ணிக்கை முடிவு செய்துவிட்டு எந்தெந்தத் தொகுதிகள் என்று பிரித்துக் கொள்வதுதானே இதுவரை இருந்த நடைமுறை’ என்று கருணாநிதி சொன்னாராம், ஆனால் அதைக் கேட்கும் நிலையில் யாரும் இல்லை. 'தி.மு.க._ காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது என்பதில் மாற்றம் இல்லை’ என்று சோனியா உறுதிப்படுத்தினாராம். ஆனால் பிப்ரவரி 10-ம் தேதிக்குப் பிறகுதான் எதையும் இறுதியாக முடிவு செய்ய முடியும் என்று சொன்னாராம் ராகுல். கருணாநிதிக்கு அடுத்து என்ன பேசுவது என்று தெரியாத நிலையில் சோனியாவிடம் தனியாகப் பேசவேண்டும் என்று கேட்டிருக்கிறார். சோனியாவும் கருணாநிதியும் மட்டும் தனிமையில் இரண்டு நிமிடங்கள் பேசியிருக்கிறார்கள். அப்போது சோனியா சொன்ன சில வார்த்தைகள் கருணாநிதி மனதை அதிகம் பாதித்ததாம். ஒரு நபரின் பெயரைக் குறிப்பிட்டு சில விமர்சனங்களை சோனியா சொன்னதாகச் சொல்கிறார்கள். ஏழரை மணி சந்திப்புக்கு டைம் தராவிட்டால் இரவு ஃபிளைட்டை பிடித்து சென்னைக்கு வந்துவிடவும் கருணாநிதி திட்டமிட்டிருந்ததாகச் சொல்கிறார்கள். மொத்தத்தில் டெல்லி விசிட் கருணாநிதியை வாட்டிவிட்டதாம்!''

''கருணாநிதி டெல்லி புறப்படும்போது காங்கிரஸுக்காக வைத்திருந்த எண்ணிக்கை டெல்லியில் இருந்து திரும்பும் போது கூடி விட்டதோ..?''

''ஆம்! டெல்லியில் அடுத்த சிக்கல் அனைவருக்கும் தெரிந்த டாக்டர் ராமதாஸ் மேட்டர். கூட்டணியில் பா.ம.க-வும் இருக்கிறது என்று கருணாநிதி சொன்னதை ராமதாஸ் ரசிக்கவில்லை. அந்த தரப்பில் போயஸ் கார்டனும் பேச்சுவார்த்தையில் இருக்கிறது. எண்ணிக்கையை சொன்னால்தான் கூட்டணி என்று ராமதாஸ் கொந்தளித்தாராம். 45 தொகுதி பட்டியல் கொடுத்திருக்கிறார். 'ராமதாஸுக்கு எத்தனை தொகுதியோ, அதில் பாதி எங்களுக்கு வேண்டும்’ என்று சிறுத்தை சீற ஆரம்பித்திருக்கிறது. பிப்ரவரி தொடக்கத்திலே கருணாநிதியின் பி.பி. எகிறத் தொடங்கியிருக்கிறது!'' என்றபடி பறந்து போனார் கழுகார்!

நன்றி ஜூவி


avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Thu Feb 03, 2011 8:50 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Feb 03, 2011 10:40 pm

அனைவருக்கும் வணக்கம்

கடமை கண்ணியம் கட்டுப் பாடு
காற்றில் பறக்குதடா
திடமாய் இருந்த மனமும் –இன்று
திணறித் தவிக்குதடா
பெற்ற பெருமை எல்லாம் -தில்லியில்
பனி போல் கரைந்ததடா
மற்றவர் முன்னே தலை கவிழ்ந்து – எனை
மண்டியிட வைத்ததடா.


தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Fri Feb 04, 2011 10:07 am

nandhtiha wrote:அனைவருக்கும் வணக்கம்

கடமை கண்ணியம் கட்டுப் பாடு
காற்றில் பறக்குதடா
திடமாய் இருந்த மனமும் –இன்று
திணறித் தவிக்குதடா
பெற்ற பெருமை எல்லாம் -தில்லியில்
பனி போல் கரைந்ததடா
மற்றவர் முன்னே தலை கவிழ்ந்து – எனை
மண்டியிட வைத்ததடா.




தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Feb 04, 2011 10:30 am

அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Feb 04, 2011 10:37 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக