புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_m10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10 
68 Posts - 53%
heezulia
இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_m10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_m10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_m10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_m10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_m10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10 
1 Post - 1%
Guna.D
இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_m10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10 
1 Post - 1%
Shivanya
இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_m10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_m10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_m10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_m10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_m10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10 
15 Posts - 3%
prajai
இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_m10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_m10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10 
9 Posts - 2%
jairam
இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_m10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_m10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10 
4 Posts - 1%
Jenila
இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_m10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10 
4 Posts - 1%
Rutu
இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_m10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 08, 2011 8:25 am

இஸ்ரோ அலைவரிசை ஒதுக்கீடு விவகாரம், ரூ.2 லட்சம் கோடி இழப்பு பற்றி விசாரணை நடத்த முடிவு காங்கிரஸ் அறிவிப்பு


இஸ்ரோ நிறுவனம் அலைவரிசை ஒதுக்கீடு வழங்கியதில் ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை துறை தெரிவித்து உள்ளது. இதுபற்றி விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு இருப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது.

புதுடெல்லி, பிப்.8- `2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், இப்போது புதிய ஊழல் விவகாரம் ஒன்று வெளியாகி இருக்கிறது.

ரூ.2 லட்சம் கோடி இழப்பு

தகவல் தொடர்புக்காக விண்வெளியில் `இஸ்ரோ' (இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்) அனுப்பும் செயற்கை கோள்கள் மூலமாக பெறப்படும் `எஸ் பாண்டு ஸ்பெக்ட்ரம்' அலைவரிசை ஏல முறையில் அல்லாமல், தேவாஸ் என்ற தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டது. இதனால், அரசுக்கு ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை துறை தெரிவித்துள்ளது.

பிரதமரின் நேரடி மேற்பார்வையில் செயல்படும் விண்வெளி கமிஷனின் கட்டுப்பாட்டில் உள்ள `இஸ்ரோ'விடம் இருந்து, இந்த ஒதுக்கீடு குறித்து பிரதமர் அலுவலகத்துக்கோ, விண்வெளி கமிஷனுக்கோ, மத்திய மந்திரி சபைக்கோ தகவல் அனுப்பவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டது.

மத்திய அரசுக்கு புதிய தலைவலி

ஏற்கனவே ஸ்பெக்டரம் விவகாரத்தில் சிக்கி தவிக்கும் மத்திய அரசுக்கு இந்த பிரச்சினை புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. எதிர்க்கட்சிகள் ரூ.2 லட்சம் கோடி இழப்பு பிரச்சினையை கையில் எடுத்து அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி இருக்கின்றன.

இஸ்ரோ அலைவரிசை ஒதுக்கீடு செய்ததில் மோசடி நடந்து இருப்பதால் இது தொடர்பாக தனியார் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், மேலும் இதுகுறித்து விரிவாக விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்றும் பாரதீய ஜனதா செய்தி தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் நேற்று டெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார். மேலும் விண்வெளி துறை பிரதமரின் நேரடி மேற்பார்வையில் வருவதால், இதுகுறித்து அவர் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டார்.

இடதுசாரிகள் கோரிக்கை

இந்த புதிய முறைகேடு குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு இடதுசாரி கட்சிகளும் வலியுறுத்தி உள்ளன.

மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி, "தனியார் நிறுவனம் பலனடைவதற்காக ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை `இஸ்ரோ' ஒதுக்கி இருப்பது மிகவும் புதிய விவகாரமாக உள்ளது. பிரதமர் மன்மோகன்சிங்கின் நேரடி மேற்பார்வையில் உள்ள விண்வெளி துறையின் கீழ் `இஸ்ரோ' செயல்படுகிறது. எனவே, அவர் விளக்கம் அளிக்க வேண்டும்'' என்றார்.

இந்திய கம்ïனிஸ்டு தேசிய செயலாளர் டி.ராஜா கூறுகையில், "புதிதாக கிளம்பியுள்ள இந்த முறைகேடு மிகவும் தீவிரமானது. ஏனெனில், விண்வெளி மற்றும் நாட்டின் பாதுகாப்பு விஷயங்களை `இஸ்ரோ' கையாளுகிறது. இந்த விவகாரம் குறித்து 4 இடதுசாரி கட்சிகளுடனும் ஆலோசித்து முடிவு செய்யப்படும்'' என்றார்.

விசாரணை நடத்த முடிவு

இதைத்தொடர்ந்து, இஸ்ரோ அலைவரிசை ஒதுக்கீடு விவகாரம் குறித்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு இருப்பதாக ஆளும் காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது.

இந்த ஊழல் புகார் பற்றி கருத்து தெரிவித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷகில் அகமது; "அரசு கஜானாவுக்கு இழப்பை ஏற்படுத்தும் இதுபோன்ற விவகாரங்கள் குறித்து பாராளுமன்ற பொதுக்கணக்கு குழு விசாரணை நடத்துவது வழக்கம்'' என்றார்.

"ஏதாவது விவகாரத்தில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டால் அதுபற்றி பொதுக்கணக்கு குழு விசாரணை நடத்தும் நடைமுறை உள்ளது. எனவே இந்த பிரச்சினையும் தானாகவே பொதுக்கணக்கு குழுவின் விசாரணைக்கு செல்லும்'' என்று அவர் தெரிவித்தார்.

தினதந்தி



இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Postmurugesan Tue Feb 08, 2011 9:21 am

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி முறைகேடு
விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், அதையும் தூக்கிச்சாப்பிட்டுவிடக்கூடிய மற்றொரு
அலைக்கற்றை முறைகேட்டை துருவி ஆராயத் தொடங்கிவிட்டது தலைமை கணக்குத் தணிக்கைத் துறை.

இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தனது வணிகப் பிரிவான ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன்
லிமிடெட், தனியார் நிறுவனமான தேவாஸ் மல்டிமீடியா என்ற நிறுவனத்துடன் 2005-ம் ஆண்டு
செய்துகொண்டுள்ள அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான ஒப்பந்தம்தான் இப்போது புதிதாக
ஆராயப்படும் முறைகேடு. இதன் மூலம் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு 2ஜி அலைக்கற்றை
ஒதுக்கீட்டைவிட அதிகம். அதாவது, ரூ. 2 லட்சம் கோடி (ரூ.2,00,000,00,00,000).
இந்த ஒப்பந்தத்தின்படி, இஸ்ரோ தனது தொழில் பங்குதாரர் நிறுவனமாகிய தேவாஸ்
மல்டிமீடியா பயன்பெறுவதற்கென்றே இரண்டு செயற்கைக்கோள்களை - ஜிசாட் 6, ஜிசாட் 6ஏ -
விண்ணில் ஏவும். இதற்காக இஸ்ரோ ரூ.2,000 கோடி செலவிடும். இந்தக் கோள்களில் தேவாஸ்
தனக்காக 70 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஒதுக்கீட்டை எடுத்துக் கொள்ளும். 20
ஆண்டுகளுக்கு எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் பயன்படுத்தும்.
இந்த ஒப்பந்தத்தால் இஸ்ரோவுக்கு என்ன லாபம்? செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்காக
ரூ.174 கோடி தொகையை தேவாஸ் மல்டிமீடியா இஸ்ரோவுக்கு வழங்கும். செயற்கைக்கோள்
விண்ணில் ஏவப்பட்டு செயல்பாட்டுக்கு வந்த பின்னர் அலைக்கற்றை வாடகையாக ரூ.1,150
கோடியை இந்நிறுவனம் இஸ்ரோவுக்கு வழங்கும்.
2,500 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றைத் திறன்கொண்ட இந்த செயற்கைக்கோள்களில் 70
மெகாஹெர்ட்ஸ் அளவுக்குப் பயன்படுத்தும். (ஒரு வினாடிக்கு ஒரு தகவல் அல்லது டேட்டா
அனுப்புவதை ஒரு ஹெர்ட்ஸ் என்று சொன்னால், ஒரு மெகாஹெர்ட்ஸ் மூலம் ஒரு வினாடிக்கு 70
லட்சம் டேட்டாக்கள் அனுப்பும் திறன் ஆகும்). செயற்கைக்கோள் செயல்படத் தொடங்கியவுடன்
தனது தொழிலை தேவாஸ் மல்டிமீடியா தொடங்கிவிடும். இதற்காக அந்நிறுவனம் ரூ.2,300 கோடி
முதலீடு செய்யத் தயாராக உள்ளது. சரி, இதனால் இஸ்ரோவுக்கு என்ன லாபம்? லாபத்தில்
எத்தனை விழுக்காடு இஸ்ரோவுக்கு கிடைக்கும்? இது இந்த ஒப்பந்தத்தில் தெளிவாக இல்லை.
முன்னாள் அறிவியல் செயலரின் நிறுவனம்: 2004-ல் பெங்களூரில் தொடங்கப்பட்ட தேவாஸ்
மல்டிமீடியா நிறுவனத்தின் தலைவராக இருக்கும் எம்.ஜி. சந்திரசேகர், இஸ்ரோவின்
முன்னாள் அறிவியல் செயலர். இந்த நிறுவனத்தின் 17 விழுக்காடு பங்கினை, டாயிஷ்
டெலிகாம் என்ற அயல்நாட்டு நிறுவனம் 75 மில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கியுள்ளது.
கொலம்பியா கேபிடல், டெலிகாம் வென்சர்ஸ் ஆகிய நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன. இதில்
இந்திய ஜாம்பவான்கள் யார் இருக்கிறார்கள் என்பது மேலும் துருவி விசாரிக்கும்போது
தெரியவரலாம்.
தேவாஸ் மல்டிமீடியாவுக்கு இப்போது இணையதள சேவை அளிப்பு உரிமம் மட்டுமே இருக்கிறது.
அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதியுடன் 74 விழுக்காடு அன்னிய நேரடி
முதலீடு கொண்டுள்ள இந்நிறுவனம், செயற்கைக்கோள் மூலமாக புவிமிசை தனிநபர் கைப்பேசி
தகவல் தொடர்புக்கு இனிமேல்தான் உரிமம் பெறவுள்ளது. இந்த அலைக்கற்றை ஒதுக்கீட்டை வேறு
எந்த செயல்பாட்டுக்கெல்லாம் தேவாஸ் மல்டிமீடியா பயன்படுத்தும் என்பது குறித்து
ஒப்பந்தம் தெளிவாக இல்லை.
இதே அளவு ஒதுக்கீட்டில் முன்னர் தூர்தர்ஷன் தனது ஒளிபரப்பை இந்தியா முழுவதும்
சென்றடைய பயன்படுத்தியது. இந்த அலைக்கற்றையில் மொபைல் போன் மற்றும் இன்டர்நெட்
இணைப்புக்கான பிராட்பேண்டு சேவை அளிக்க முடியும். இதனால் எஸ்-பாண்ட் அலைக்கற்றை,
4ஜி (நான்காம் தலைமுறைக்கான தொழில்நுட்பம்) எனச் சொல்லப்படுகிறது.
அண்மையில், பாரத் சஞ்சார் நிகாம் லிட், மகாநகர் டெலிபோன் லிட் நிறுவனத்துக்கு 20
மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது. அப்போது அந்த அரசு நிறுவனங்கள்
தலா ரூ.12,847 கோடி பணம் செலுத்தின. ஆனால் தனியார் நிறுவனமான தேவாஸ் மல்டி மீடியா
வெறும் ரூ.1000 கோடியில் இந்த உரிமத்தைப் பெறுகிறது என்பது அதிர்ச்சித் தகவலாகும்.
இந்த 4ஜி தொழில்நுட்பத்துக்கான அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் பெற உலக அளவில் பல
நிறுவனங்கள் போட்டி போடுகின்றன.
""இதெல்லாம் தொழில்போட்டியால் எங்களுக்கு எதிராகக் கிளப்பப்படும் விவகாரம்.
திட்டமிட்டபடி செயல்படுவோம்'' என்று சொல்கிறார் தேவாஸ் மல்டிமீடியா தலைவர்
சந்திரசேகர்.
நடுவண் அரசின் விண்வெளி பிரிவின் கட்டுப்பாட்டில் இஸ்ரோ உள்ளது. விண்வெளி பிரிவு
பிரதமர் மன்மோகன் சிங்கின் நேரடிப் பொறுப்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் எழுப்பியுள்ள கேள்விகள்

ஏலம் நடத்தாமலேயே எஸ்-பாண்டு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டுள்ளது ஏன்?
நிறுவனத்துக்குரிய (இஸ்ரோ) பாதுகாப்பு கட்டுப்பாடு முறைகள் கடைப்பிடிக்கப்படவில்லையே
ஏன்?
பிரதமர் அலுவலகம், அமைச்சரவை, விண்வெளி குழுமம் ஆகிய யாருக்குமே இந்த ஒப்பந்தம்
பற்றிய விரிவான விவரங்கள் முறைப்படி தெரிவிக்கப்படவில்லை. குறைத்து மதிப்பீடு
செய்வதால் இஸ்ரோவுக்கு ஏற்படும் செலவுகள் உள்பட எதையும் தெரிவிக்கவில்லையே ஏன்?
ஒப்பந்தம் செய்துகொண்டவர் நலனுக்காக இரண்டு செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு மக்கள் பணம்
செலவிடப்படுகிறதே ஏன்?
தேவாஸ் மல்டிமீடியாவின் நிபந்தனைகள், இதற்கு முன்னர் இஸ்ரோ செய்துகொண்ட வர்த்தக
ஒப்பந்தங்களிலிருந்து விலகிச் சென்றுள்ளனவே, ஏன்?


விசாரணை நடத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை


இஸ்ரோ வழியாக நடந்திருப்பதாகக் கூறப்படும் புதிய ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு
மோசடி தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாஜக உள்ளிட்ட
எதிர்க்கட்சிகள் திங்கள்கிழமை கோரிக்கை விடுத்தன.


விண்வெளித் துறை பதில் அளிக்கும் - இஸ்ரோ

பெங்களூர்: அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஒப்பந்தம் மூலம் ரூ.2 லட்சம் கோடி இழப்பீடு
ஏற்பட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து விண்வெளித் துறை உரிய பதிலை
அளிக்கும் என்று இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் வணிகப் பிரிவான ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்,
தனியார் நிறுவனமான தேவாஸ் மல்டிமீடியா என்ற நிறுவனத்துடன் 2005-ல் செய்து கொண்ட
அலைக்கற்றை தொடர்பான ஒப்பந்தம் மூலம் நாட்டுக்கு ரூ. 2 லட்சம் கோடி இழப்பீடு
ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்த விவகாரம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில்,
இதுகுறித்து இஸ்ரோ விளக்கம் அளித்துள்ளது.
அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஒப்பந்தம் தொடர்பாக தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி
எழுப்பியுள்ள கேள்விகளுக்கு விண்வெளித் துறை பதில் அளிக்கும் என்று கூறியுள்ளது.
ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட், தேவாஸ் மல்டிமீடியாவுடன் செய்து கொண்ட
ஒப்பந்தத்தை விண்வெளித் துறை ஏற்கெனவே மறு ஆய்வு செய்து வருகிறது. இந்த விவகாரத்தில்
மக்களின் நலனைக் காக்கத் தேவைப்படும் நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கும் என்றும்
இஸ்ரோ தெரிவித்துள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக