புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
by mohamed nizamudeen Today at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தள்ளிப்போகுமா தேர்தல்?
Page 1 of 1 •
தள்ளிப்போகுமா தேர்தல்?
கொடுக்கத் துடிக்கும் கட்சிகள்.. தடுக்க நினைக்கும் ஆணையம்!
''எப்போதும்போல இந்தப் பாம்பு சும்மா சீறிட்டு, ஸீன் காட்டிட்டுப்
போயிரும்னு இருந்தோம். ஆனா, இப்ப நடக்குறதைப் பார்த்தா... ஆளைக் கொத்தாம விடாது போலிருக்கே!'' - தேர்தல் ஆணையத்தின் அதிரடி காரணமாக, 'இருப்பை’ எடுக்க முடியாமல், கதிகலங்கிக் கிடக்கும் அரசியல்வாதிகள் இப்படித்தான் புலம்புகிறார்கள்!
திருமங்கலம் இடைத் தேர்தலின்போது ஒவ்வொரு 100 ஓட்டுகளுக்கும் மூன்று பொறுப்பாளர்களை நியமித்து அவர்களுக்கான 'தேவைகளை’க் கவனித்து, அவர்களை வாக்களிக்கவைக்கும் பொறுப்பு அந்த மூவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த கெமிஸ்ட்ரி ஒர்க்-அவுட் ஆனதால், நாடாளுமன்றத் தேர்தலிலும் சில தொகுதிகளில் அதே ஃபார்முலாவைக் கையாண்டார்கள். இந்தத் தேர்தலில் மாநிலத்தின் பெருவாரியான தொகுதிகளில் இந்த சிஸ்டம் அமலாகி இருக்கிறது, ஆனாலும், திட்டமிட்டபடி பட்டுவாடாவைத் தொடங்க முடியாமல் பரிதவிக்கிறார்கள் வேட்பாளர்கள். காரணம், தேர்தல் கமிஷனின் கெடுபிடிகள்.
இந்தத் தேர்தல் தங்களுக்கு வாழ்வா... சாவா பிரச்னை என்பதால், என்ன வந்தாலும் சரி, எப்படியும் ஏப்ரல் 7-ம் தேதியில் இருந்து 11-ம் தேதிக்குள் பட்டுவாடாக்களை முடிக்க வேண்டும் என்று உத்தரவுகள் பறக்கின்றன. இதனால், அடுத்து வரும் நாட்களில் இன்னும் பதற்றமான சூழ்நிலைகளையும் பகீர் புகார்களையும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது தேர்தல் ஆணையம்.
''தேர்தல் ஆணையம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஏன் இவ்வளவு கெடுபிடிகளைக் காட்டுகிறது?'' என்று தென் மாவட்டத்தில் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட 'சர்வேலன்ஸ் டீம்’ (விதிமீறல்கள் கண்காணிப்பு குழு) அதிகாரி ஒருவரிடம் கேட்டோம். ''வீட்டுக்கு 2,000, ஓட்டுக்கு 1,000, ரேஷன் கார்டுக்கு 5,000, என ஏரியாவுக்கு ஏற்ப பணம் கொடுத்து வாக்காளர்களை வளைக்கத் திட்டம் போடுகிறார்கள். இது தெரிந்துதான் வாகன சோதனைகளைத் தீவிரப்படுத்தினோம். இதனால் சுதாரித்துக்கொண்டவர்கள், நாங்கள் எதிர்பார்க்காத வழிகளில் வண்டி வண்டியாகப் பணத்தைக் கொண்டுவந்து ஆங்காங்கே ஸ்டோர் பண்ணிவிட்டார்கள். ரயில் பார்சல்கள் மற்றும் டேங்கர் லாரிகள் மூலமாக பணம் டிரான்ஸ்ஃபர் ஆகியிருக்கலாம் என்று நாங்கள் சந்தேகப்படுகிறோம்.
தொகுதிகளுக்குக் கொண்டுசெல்லப்பட்ட பணம் எதுவும் அரசியல்வாதிகள் பொறுப்பில் இல்லை. அவர்களுக்கு நெருக்கமான மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள், ஷாப்பிங் மால்களில் பிரித்துப் பிரித்துப் பதுக்கிவைக்கப்பட்டு இருப்பதாகத் தகவல்கள். இன்னொன்றைச் சொன்னால்... அதிர்ச்சியடைவீர்கள். தென் மாவட்டத்தின் முக்கிய நகரத்தில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் போலீஸ் அதிகாரிகள் சிலரது கஸ்டடியில்தான் பெரும் தொகை இருக்கிறது. முக்கியமான சில இடங்களுக்கு அவர்களே பணத்தைக் கொண்டுசெல்லவும் உதவி செய்து இருக்கிறார்கள். மாவட்டத் தேர்தல் அதிகாரிகளான தென் மாவட்ட கலெக்டர்கள் சிலர், தங்களுடைய காரிலேயே பணத்தைக் கொண்டுபோய் வேட்பாளர்களிடம் கொடுத்து, அதிகாலை 6 மணிக்குள் பட்டுவாடாக்களை முடிக்கச் சொல்லி ஐடியாவும் கொடுத்து இருக்கிறார்கள். பெண் அமைச்சர் ஒருவர் போட்டியிடும் தொகுதிக்கு கடந்த வாரம் 2 கோடி போயிருக்கிறது. அந்தப் பணத்தை போலீஸ் வண்டியில் கொண்டு போன நாலு போலீஸ்காரங்களுக்கு தலா 20 ஆயிரம் கொடுத்து இருக்கிறார்கள். ஆம்புலன்ஸ்களில் பணம் போனதும் உண்மை. அதைத் தடுக்கத்தான், 108 ஆம்புலன்ஸ் எங்கு சென்றாலும் எங்களுக்கும் தகவல் கொடுக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் இப்போது உத்தரவு போட்டுவிட்டது.
இப்படி வண்டி வண்டியாகக் கொண்டுபோய் பதுக்கிவைத்திருக்கும் பணத்தை, இப்போது அவர்களால் சுதந்திரமாக வெளியில் எடுக்க முடியவில்லை. அந்த அளவுக்குத் தேர்தல் ஆணையம் கழுத்தை நெரிப்பதால், 'தாங்கள் நினைத்ததை சாதித்துவிட மாட்டோமா?’ என்று தவிக்கிறார்கள். அதனால்தான், தேர்தல் ஆணையத்துக்கு எதிராகக் காரசார விமர்சனங்கள் கிளம்புகின்றன. இது தொடர்பான வழக்கில், எந்தெந்த வழிகளில் எப்படி எல்லாம் பணம் போகிறது, எந்தெந்த அதிகாரிகள் இதற்கெல்லாம் உடந்தையாக இருக்கிறார்கள் என்பதுபோன்ற விவரங்களைப் பட்டியல் இட்டிருக்கிறது தேர்தல் ஆணையம். அந்த பதில் மனுவில் தென் மாவட்டங்களில் நடந்த அத்துமீறல்கள் குறித்துத்தான் நிறையத் தகவல்கள் இருக்கின்றன. இவற்றை எல்லாம் பார்த்த பிறகுதான் ஆணையத்தின் நடவடிக்கைகளில் தலையிட முடியாது என்று சொல்லி, வழக்கைத் தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்!'' என்றார் அந்த அதிகாரி.
என்னதான் கிடுக்கிப்பிடி போட்டாலும், அரசியல்வாதிகள் எதையும் சமாளிக்கத் தயாராக இருக்கிறார்கள். சென்னை ஏரியாவில் காலை நாளிதழ்களுடன் சேர்த்து ரூபாய் நோட்டுகளை பின் அடித்து நள்ளிரவில் வீட்டு வாசல்களில் போடும் திட்டத்தையும் பால் பாக்கெட்டுடன் சேர்த்துப் பணத்தையும் சப்ளை செய்யும் திட்டமும் உண்டாம். மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட நகரங்களில் மொத்தம் மொத்தமாக ஓட்டு உள்ள குடும்பங்களில் குடும்பத் தலைவரின் பேங்க் அக்கவுன்ட் நம்பர்களையும், மற்ற இடங்களில் வாக்காளர்களின் முகவரியோடு சேர்த்து மொபைல் போன் எண்களையும் முன்கூட்டியே வாங்கி வைத்திருக்கிறார்கள். பணம் கொடுக்க ஆரம்பித்ததும் அக்கவுன்ட் நம்பரில் தானாகப் பணம் விழும். மொபைல் நம்பர் கொடுத்தவர்களுக்கு, குறிப்பிட்ட தொகைக்கு திடீர் ரீ-சார்ஜ்கள் வரலாம். அல்லது போனில் அழைத்து ''இன்ன இடத்தில் இன்னாரைப் பாருங்கள்; உங்களுக்கான கவர் கிடைக்கும்!'' என்று இன்ப அதிர்ச்சி தரப்படலாம்.கட்சிக்காரர்கள் சிலரை சஃபாரி உடையில் அதிகாரிகள்போல் அனுப்பி பட்டுவாடா செய்யும் ஐடியாவும் இருக்கிறதாம். இன்னும் சில இடங்களில் அயர்ன் வண்டிக்காரர்களிடம் கவர்களைக் கொடுத்துக் கவனிக்கும் திட்டமும் இருக்கிறது. புறநகர்ப் பகுதிகளில் குடிமகன்களைத் திருப்திப்படுத்த, கலர் டோக்கன்களை விநியோகிக்கவும் திட்டமாம். இந்த டோக்கன்களை குறிப்பிட்ட ஒயின் ஷாப்களில் கொடுத்தால் இலவசமாக சரக்கு கிடைக்குமாம்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக மகளிர் சுய உதவி குழுப் பெண்களைத்தான் பணப் பட்டுவாடாவுக்கு மிக அதிக அளவில் பயன்படுத்த இருக்கிறார்கள். குழுத் தலைவிகளிடம் அந்தந்தத் தெருக்களுக்கான கவர்களைக் கொடுத்து, அவர்கள் மூலமாக குழுப் பெண்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டு, அனைத்து வாக்காளர்களுக்கும் கவர்களைக் கொண்டுசேர்க்க நினைக்கிறார்கள். இது தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கும் போயிருப்பதால், மகளிர் குழுக்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றன. இன்னும் சில இடங்களில் குடியிருப்போர் நல சங்கத்திடம் மொத்தம் மொத்தமாகப் பணம் கொடுத்து இருக்கிறார்கள். ஆனால், தேர்தல் கமிஷனின் எச்சரிக்கையை அடுத்து, அவர்களில் சிலர் வாங்கிய பணத்தை திருப்பி ஒப்படைக்கும் முடிவில் இருப்பதால்... அங்கேயும் ஆப்பு!
அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டால்... அந்தந்தப் பகுதிகளில் குட்டிக் குட்டிக் கலவரங்களை ஏற்படுத்தி போலீஸின் கவனத்தைத் திசை திருப்பிவிட்டு பட்டுவாடாக்களை முடிக்க முயற்சிக்கலாம் என்று சொல்லும் நேர்மையான போலீஸ் அதிகாரிகள் சிலர், ''ஏப்ரல் 11-ம் தேதி போலீஸாருக்குத் தேர்தல் பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும். அதற்காக, அன்றைய தினம் சுமார் ஐந்து மணி நேரமாவது அனைத்து போலீஸாரும் அந்தந்தத் தலைமையகங்களில் கூடவேண்டி இருக்கும். அந்த நேரத்தில் கவர்களைக் கொண்டுபோய் சேர்க்கப்போவதாவும் செய்தி இருக்கிறது!'' என்கிறார்கள்.
பணப் பட்டுவாடா விவகாரங்களைத் தடுப்பதற்கு அனைத்து வழிகளிலும் நடவடிக்கை எடுத்து வரும் மாநிலத் தேர்தல் ஆணையம், கலவரத்தை ஏற்படுத்தி பணம் கொடுக்கும் சதி வேலைகள் நடந்தால், தேர்தலையே ஒத்திவைக்கச் சொல்லி சிபாரிசு செய்யவும் தயாராக இருப்பதாகத் தகவல்!
- குள.சண்முகசுந்தரம்
நன்றி ஜூனியர் விகடன்
கொடுக்கத் துடிக்கும் கட்சிகள்.. தடுக்க நினைக்கும் ஆணையம்!
''எப்போதும்போல இந்தப் பாம்பு சும்மா சீறிட்டு, ஸீன் காட்டிட்டுப்
போயிரும்னு இருந்தோம். ஆனா, இப்ப நடக்குறதைப் பார்த்தா... ஆளைக் கொத்தாம விடாது போலிருக்கே!'' - தேர்தல் ஆணையத்தின் அதிரடி காரணமாக, 'இருப்பை’ எடுக்க முடியாமல், கதிகலங்கிக் கிடக்கும் அரசியல்வாதிகள் இப்படித்தான் புலம்புகிறார்கள்!
திருமங்கலம் இடைத் தேர்தலின்போது ஒவ்வொரு 100 ஓட்டுகளுக்கும் மூன்று பொறுப்பாளர்களை நியமித்து அவர்களுக்கான 'தேவைகளை’க் கவனித்து, அவர்களை வாக்களிக்கவைக்கும் பொறுப்பு அந்த மூவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த கெமிஸ்ட்ரி ஒர்க்-அவுட் ஆனதால், நாடாளுமன்றத் தேர்தலிலும் சில தொகுதிகளில் அதே ஃபார்முலாவைக் கையாண்டார்கள். இந்தத் தேர்தலில் மாநிலத்தின் பெருவாரியான தொகுதிகளில் இந்த சிஸ்டம் அமலாகி இருக்கிறது, ஆனாலும், திட்டமிட்டபடி பட்டுவாடாவைத் தொடங்க முடியாமல் பரிதவிக்கிறார்கள் வேட்பாளர்கள். காரணம், தேர்தல் கமிஷனின் கெடுபிடிகள்.
இந்தத் தேர்தல் தங்களுக்கு வாழ்வா... சாவா பிரச்னை என்பதால், என்ன வந்தாலும் சரி, எப்படியும் ஏப்ரல் 7-ம் தேதியில் இருந்து 11-ம் தேதிக்குள் பட்டுவாடாக்களை முடிக்க வேண்டும் என்று உத்தரவுகள் பறக்கின்றன. இதனால், அடுத்து வரும் நாட்களில் இன்னும் பதற்றமான சூழ்நிலைகளையும் பகீர் புகார்களையும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது தேர்தல் ஆணையம்.
''தேர்தல் ஆணையம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஏன் இவ்வளவு கெடுபிடிகளைக் காட்டுகிறது?'' என்று தென் மாவட்டத்தில் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட 'சர்வேலன்ஸ் டீம்’ (விதிமீறல்கள் கண்காணிப்பு குழு) அதிகாரி ஒருவரிடம் கேட்டோம். ''வீட்டுக்கு 2,000, ஓட்டுக்கு 1,000, ரேஷன் கார்டுக்கு 5,000, என ஏரியாவுக்கு ஏற்ப பணம் கொடுத்து வாக்காளர்களை வளைக்கத் திட்டம் போடுகிறார்கள். இது தெரிந்துதான் வாகன சோதனைகளைத் தீவிரப்படுத்தினோம். இதனால் சுதாரித்துக்கொண்டவர்கள், நாங்கள் எதிர்பார்க்காத வழிகளில் வண்டி வண்டியாகப் பணத்தைக் கொண்டுவந்து ஆங்காங்கே ஸ்டோர் பண்ணிவிட்டார்கள். ரயில் பார்சல்கள் மற்றும் டேங்கர் லாரிகள் மூலமாக பணம் டிரான்ஸ்ஃபர் ஆகியிருக்கலாம் என்று நாங்கள் சந்தேகப்படுகிறோம்.
தொகுதிகளுக்குக் கொண்டுசெல்லப்பட்ட பணம் எதுவும் அரசியல்வாதிகள் பொறுப்பில் இல்லை. அவர்களுக்கு நெருக்கமான மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள், ஷாப்பிங் மால்களில் பிரித்துப் பிரித்துப் பதுக்கிவைக்கப்பட்டு இருப்பதாகத் தகவல்கள். இன்னொன்றைச் சொன்னால்... அதிர்ச்சியடைவீர்கள். தென் மாவட்டத்தின் முக்கிய நகரத்தில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் போலீஸ் அதிகாரிகள் சிலரது கஸ்டடியில்தான் பெரும் தொகை இருக்கிறது. முக்கியமான சில இடங்களுக்கு அவர்களே பணத்தைக் கொண்டுசெல்லவும் உதவி செய்து இருக்கிறார்கள். மாவட்டத் தேர்தல் அதிகாரிகளான தென் மாவட்ட கலெக்டர்கள் சிலர், தங்களுடைய காரிலேயே பணத்தைக் கொண்டுபோய் வேட்பாளர்களிடம் கொடுத்து, அதிகாலை 6 மணிக்குள் பட்டுவாடாக்களை முடிக்கச் சொல்லி ஐடியாவும் கொடுத்து இருக்கிறார்கள். பெண் அமைச்சர் ஒருவர் போட்டியிடும் தொகுதிக்கு கடந்த வாரம் 2 கோடி போயிருக்கிறது. அந்தப் பணத்தை போலீஸ் வண்டியில் கொண்டு போன நாலு போலீஸ்காரங்களுக்கு தலா 20 ஆயிரம் கொடுத்து இருக்கிறார்கள். ஆம்புலன்ஸ்களில் பணம் போனதும் உண்மை. அதைத் தடுக்கத்தான், 108 ஆம்புலன்ஸ் எங்கு சென்றாலும் எங்களுக்கும் தகவல் கொடுக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் இப்போது உத்தரவு போட்டுவிட்டது.
இப்படி வண்டி வண்டியாகக் கொண்டுபோய் பதுக்கிவைத்திருக்கும் பணத்தை, இப்போது அவர்களால் சுதந்திரமாக வெளியில் எடுக்க முடியவில்லை. அந்த அளவுக்குத் தேர்தல் ஆணையம் கழுத்தை நெரிப்பதால், 'தாங்கள் நினைத்ததை சாதித்துவிட மாட்டோமா?’ என்று தவிக்கிறார்கள். அதனால்தான், தேர்தல் ஆணையத்துக்கு எதிராகக் காரசார விமர்சனங்கள் கிளம்புகின்றன. இது தொடர்பான வழக்கில், எந்தெந்த வழிகளில் எப்படி எல்லாம் பணம் போகிறது, எந்தெந்த அதிகாரிகள் இதற்கெல்லாம் உடந்தையாக இருக்கிறார்கள் என்பதுபோன்ற விவரங்களைப் பட்டியல் இட்டிருக்கிறது தேர்தல் ஆணையம். அந்த பதில் மனுவில் தென் மாவட்டங்களில் நடந்த அத்துமீறல்கள் குறித்துத்தான் நிறையத் தகவல்கள் இருக்கின்றன. இவற்றை எல்லாம் பார்த்த பிறகுதான் ஆணையத்தின் நடவடிக்கைகளில் தலையிட முடியாது என்று சொல்லி, வழக்கைத் தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்!'' என்றார் அந்த அதிகாரி.
என்னதான் கிடுக்கிப்பிடி போட்டாலும், அரசியல்வாதிகள் எதையும் சமாளிக்கத் தயாராக இருக்கிறார்கள். சென்னை ஏரியாவில் காலை நாளிதழ்களுடன் சேர்த்து ரூபாய் நோட்டுகளை பின் அடித்து நள்ளிரவில் வீட்டு வாசல்களில் போடும் திட்டத்தையும் பால் பாக்கெட்டுடன் சேர்த்துப் பணத்தையும் சப்ளை செய்யும் திட்டமும் உண்டாம். மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட நகரங்களில் மொத்தம் மொத்தமாக ஓட்டு உள்ள குடும்பங்களில் குடும்பத் தலைவரின் பேங்க் அக்கவுன்ட் நம்பர்களையும், மற்ற இடங்களில் வாக்காளர்களின் முகவரியோடு சேர்த்து மொபைல் போன் எண்களையும் முன்கூட்டியே வாங்கி வைத்திருக்கிறார்கள். பணம் கொடுக்க ஆரம்பித்ததும் அக்கவுன்ட் நம்பரில் தானாகப் பணம் விழும். மொபைல் நம்பர் கொடுத்தவர்களுக்கு, குறிப்பிட்ட தொகைக்கு திடீர் ரீ-சார்ஜ்கள் வரலாம். அல்லது போனில் அழைத்து ''இன்ன இடத்தில் இன்னாரைப் பாருங்கள்; உங்களுக்கான கவர் கிடைக்கும்!'' என்று இன்ப அதிர்ச்சி தரப்படலாம்.கட்சிக்காரர்கள் சிலரை சஃபாரி உடையில் அதிகாரிகள்போல் அனுப்பி பட்டுவாடா செய்யும் ஐடியாவும் இருக்கிறதாம். இன்னும் சில இடங்களில் அயர்ன் வண்டிக்காரர்களிடம் கவர்களைக் கொடுத்துக் கவனிக்கும் திட்டமும் இருக்கிறது. புறநகர்ப் பகுதிகளில் குடிமகன்களைத் திருப்திப்படுத்த, கலர் டோக்கன்களை விநியோகிக்கவும் திட்டமாம். இந்த டோக்கன்களை குறிப்பிட்ட ஒயின் ஷாப்களில் கொடுத்தால் இலவசமாக சரக்கு கிடைக்குமாம்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக மகளிர் சுய உதவி குழுப் பெண்களைத்தான் பணப் பட்டுவாடாவுக்கு மிக அதிக அளவில் பயன்படுத்த இருக்கிறார்கள். குழுத் தலைவிகளிடம் அந்தந்தத் தெருக்களுக்கான கவர்களைக் கொடுத்து, அவர்கள் மூலமாக குழுப் பெண்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டு, அனைத்து வாக்காளர்களுக்கும் கவர்களைக் கொண்டுசேர்க்க நினைக்கிறார்கள். இது தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கும் போயிருப்பதால், மகளிர் குழுக்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றன. இன்னும் சில இடங்களில் குடியிருப்போர் நல சங்கத்திடம் மொத்தம் மொத்தமாகப் பணம் கொடுத்து இருக்கிறார்கள். ஆனால், தேர்தல் கமிஷனின் எச்சரிக்கையை அடுத்து, அவர்களில் சிலர் வாங்கிய பணத்தை திருப்பி ஒப்படைக்கும் முடிவில் இருப்பதால்... அங்கேயும் ஆப்பு!
அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டால்... அந்தந்தப் பகுதிகளில் குட்டிக் குட்டிக் கலவரங்களை ஏற்படுத்தி போலீஸின் கவனத்தைத் திசை திருப்பிவிட்டு பட்டுவாடாக்களை முடிக்க முயற்சிக்கலாம் என்று சொல்லும் நேர்மையான போலீஸ் அதிகாரிகள் சிலர், ''ஏப்ரல் 11-ம் தேதி போலீஸாருக்குத் தேர்தல் பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும். அதற்காக, அன்றைய தினம் சுமார் ஐந்து மணி நேரமாவது அனைத்து போலீஸாரும் அந்தந்தத் தலைமையகங்களில் கூடவேண்டி இருக்கும். அந்த நேரத்தில் கவர்களைக் கொண்டுபோய் சேர்க்கப்போவதாவும் செய்தி இருக்கிறது!'' என்கிறார்கள்.
பணப் பட்டுவாடா விவகாரங்களைத் தடுப்பதற்கு அனைத்து வழிகளிலும் நடவடிக்கை எடுத்து வரும் மாநிலத் தேர்தல் ஆணையம், கலவரத்தை ஏற்படுத்தி பணம் கொடுக்கும் சதி வேலைகள் நடந்தால், தேர்தலையே ஒத்திவைக்கச் சொல்லி சிபாரிசு செய்யவும் தயாராக இருப்பதாகத் தகவல்!
- குள.சண்முகசுந்தரம்
நன்றி ஜூனியர் விகடன்
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Similar topics
» தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் இதுவரை ரூ.57 கோடி பறிமுதல்: தேர்தல் ஆணையம் தகவல்
» தேர்தல் கமிஷன் நடவடிக்கை சிறப்பு : மாஜி தேர்தல் அதிகாரி அதிரடி பேட்டி
» உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதில் சிக்கல்: தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் பதில் மனு
» வேலூர் மக்களவைத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
» நவம்பரில் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் - தேர்தல் அட்டவணையை வெளியிட்டது தேர்தல் ஆணையம்
» தேர்தல் கமிஷன் நடவடிக்கை சிறப்பு : மாஜி தேர்தல் அதிகாரி அதிரடி பேட்டி
» உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதில் சிக்கல்: தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் பதில் மனு
» வேலூர் மக்களவைத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
» நவம்பரில் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் - தேர்தல் அட்டவணையை வெளியிட்டது தேர்தல் ஆணையம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|